அஞ்சலி: எழுத்தாளர் தேவா மறைவு! - பதிவுகள்.காம் -
எழுத்தாளர் தேவா சுவிஸ்ஸில் வசித்து வந்தவர். இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கைக்குச் சென்றவர். தமிழ் இலக்கியத்துக்கு இவரது மொழி பெயர்ப்புகள் வளம் சேர்த்தன. ‘குழந்தைப் போராளி’, ‘அனோனிமா’, ‘அம்பரய’ (உசுல. பி. விஜய சூரிய ஆங்கிலத்தில் எழுதிய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு; வடலி பதிப்பகம் வெளியிட்டிருந்தது) போன்றவை இவர் மொழிபெயர்ப்பில் வெளியான நூல்கள். எழுத்தாளர் தேவா மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது மறைவு பற்றி எழுத்தாளர் மன்னார் அமுதன் தனது முகநூற் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார்:
"மன்னார் மாவட்டத்தின் மூத்த இலக்கியச் செயற்பாட்டாளரும் இலக்கிய மொழிபெயர்ப்பாளருமான மன்னார் விடத்தல்தீவை பிறப்பிடமாகவும் தலைமன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட 'அனோனிமா' தேவா காலமானார். அம்பரய, என் பெயர் விக்டோரியா, அனொனிமா, குழந்தைப் போராளி முதலிய சிறந்த மொழி பெயர்ப்புகளைத் தந்த படைப்பாளி. நாளை , மார்ச் 26 2023, மதியம் 12.00 மணி முதல் 3.00 மணிவரை பூதவுடலை அவரின் தலைமன்னார் வீட்டில் பார்வையிடமுடியும். 3.00 மணிக்கு நல்லடக்கம் இடம்பெறும்."
எழுத்தாளர் தேவாவின் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம்.