கவிதை:  எனக்குப் பேசத்தெரியும்

எனக்குப் பேசத்தெரியும்
காக்காய் பிடிப்பது போலவும்
சோப்பு போடுவது போலவும்
ஜால்ரா தட்டுவது போலவும்
பேசப் பழகிக் கொண்டேன்
எனக்குப் பேசத்தெரியும்

எனக்குப் பேசத்தெரியும்
என் நலன்
என் வீட்டு நலன்
என் நோட்டு நலன்
பற்றி மட்டுமே பேசப் பழகிக் கொண்டேன்
எனக்குப் பேசத்தெரியும்

எனக்குப் பேசத் தெரியும்
அவளோடு நெருக்கமாக அவன் யாராக இருக்கும்
அடுத்தநாள் தொடரில் அவன்நிலை எப்படி மாறும்
வட்டிக்கான பணம் வந்ததா இல்லையா?
ஆத்தாடி,... இன்னுமா உன் மாமியார் உயிரோடு இருக்கிறாள்?
எல்லோரைப்போல நானும் ஒருத்தியாய்ப் பேசப் பழகிக்கொண்டேன்
எனக்குப் பேசத்தெரியும்

எனக்குப் பேசத் தெரியும்
ஏன்டிம்மா ஓயாமல் இறுமி தொந்தரவு தர
சும்மா சும்மா காசு கேட்கிற உன் அப்பன் வீட்டுக்காசா
என்கிட்ட இருக்கு?
உன் பிள்ளைக்கு மூக்குசிந்த நான் என்ன வேலைக்காரியா?
கூடப்பிறந்ததுன்னு சொல்லிகிட்டு கௌவரப் பிச்சை கேட்க
வந்திடுறானுங்க கடன்காரனுங்க
இறுக்கிப் பிடிச்சு கட்டுசெட்டா பேசப் பழகிக் கொண்டேன்
எனக்குப் பேசத்தெரியும்

பிறகொருநாள் மனசாட்சியின் வருகை
கன்னம் வீங்கி இரண்டுபல் உதிர்ந்ததாகவும்
வளைந்த கருக்கரிவாள் கொண்டு
நாவை அறுத்துக் கொள்வது போலவும்
மயிரைச் சுழற்றி அடித்து வாயில் உதைப்பது போலவும்
ஒரு கண தோற்றத்தில் உடல் அதிர்ந்துகொண்டே இருந்தது

இப்போது,
எனக்குப் பேசத்தெரியும்
இருண்டு கருகியதாய் இருந்த
இன்னொரு பக்கத்தில் வெள்ளி முளைத்திருந்தது
எங்கோ அழும் குழந்தைக்கு என்மார் சுரந்தது.
இங்கும் அமர்வேன் எனக்குப் பாதுகாப்புதான்
சிட்டுக்குருவி ஒன்று கரங்களில் ஏறிக்கொண்டு
கீசுகீசு என்று என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறது
நானறிவேன்  இப்போதுதான் நான் பேசத் தெரிந்தவள்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R