மங்கலம் பொங்கிடப் பொங்கலே வா
மனமெலாம் மகிழ்ந்திடப் பொங்கலே வா
சொந்தங்கள் இணைந்திடப் பொங்கலே வா
சுமையெலாம் இறங்கிடப் பொங்கலே வா !

வறுமைகள் வரண்டிடப் பொங்கலே வா
வளர்ச்சிகள் மிகுந்திடப் பொங்கலே வா
தொழிலெலாம் சிறந்திடப் பொங்கலே வா
துணிவது நிறைந்திடப் பொங்கலே வா !

பட்டதுன்பம் போயகலப் பொங்கலே வா
பார்பிடித்த நோயகலப் பொங்கலே வா
மட்டற்ற மகிழ்ச்சிதரப் பொங்கலே வா
மாண்பற்ற செயலகலப் பொங்கலே வா  !

மருத்துவம் விரிந்திடப் பொங்கலே வா
மாண்டிடக் கொரனா பொங்கலே வா
மாநிலம் விடிவுறப் பொங்கலே வா
வாழ்வினில் ஒளிவரப் பொங்கலே வா !

வயலுழுவார் வாழ்வுயரப் பொங்கலே வா
வறுமையெனும் சொல்லகலப் பொங்கலே வா
மதுநினைப்பு மனமகலப் பொங்கலே வா
வாலறிவன் மனநிறையப் பொங்கலே வா !

ஆன்மீகம் செறிந்திடப் பொங்கலே வா
அறமது பரவிடப் பொங்கலே வா
ஆணவம் அடங்கிடப் பொங்கலே வா
அன்பெங்கும் மலர்ந்திடப் பொங்கலே வா !

ஊழல்கள் ஒழிந்திடப் பொங்கலே வா
உத்தமர் வெளிவரப் பொங்கலே வா
ஏழைகள் சிரித்திடப் பொங்கலே வா
இன்பமே பொங்கிடப் பொங்கலே வா !

கற்றவர் சிறந்திடப் பொங்கலே வா
கயவர்கள் மறைந்திடப் பொங்கலே வா
நற்றமிழ் செழித்திடப்  பொங்கலே வா
நன்மைகள் விளைந்திடப் பொங்கலே வா  !

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R