சிறுகதை: ஜள்ளெ - முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -

1
“கள்ளா! ஏய்… கள்ளா!
இன்னும் என்னதா பன்னுற…
எவ்ளோ நேரந்தா காத்திருக்கிறதோ…
ஏய்… கள்ளா! கள்ளா!”
குனிக்கியின் ஓலம் அந்த அடர்காட்டின் காதுகளை அடைத்தது. சில்லிடும் பனிக்காற்று, பொழியும் நிலா, சீகூரிப் பூச்சிகளின் இரைச்சல், மென்மையாக அசையும் மரங்களின் இலைகள் அந்த உலகம் வருணனைக்கு அப்பாற்பட்டது.
ஆதியின் அத்தனைச் சுவடுகளும் அதற்குள் அடக்கம். அதன் அடக்கத்துள் குனிக்கியின் கணவன் கோடனும் ஒருவன்.
பெண்கள் அணுகவியலா அந்தத் ‘தொட்டசோலெ’ அடர்ந்த காப்புக்காடு. பூவுடல் கடந்த பல்லோர் உறையும் இடமென்பது நம்பிக்கை.
‘ஜக்கக்கம்பை’ ஊரில் தொடங்கி ‘சிரியூர்’ வரை நீளும் பேரூலகம் இது. உள்ளே நுழைந்ததும் ஆதியால் அணைத்துக் கொள்ளுமது. வெளியே வரும்வரை எவ்வளவு முயன்றாலும் அது விடாது. அந்த விடாத உலகம் குனிக்கியையும் விடாது பிடித்திருந்தது.
பாதைதெரியாது தடுமாறுவதைவிடவும், கற்பனைக்கெட்டாத பெருநிலமொன்றில் தொலைந்த ஒன்றினைத் தேடுவது அவ்வளவு கடினமானது. அது பெரும் காட்டு ஆடின் பெரும் ‘ஜள்ளெ’ ஆனாலும் சிறு கடுகினும் நுண்ணியது.
பல்லைக் கடித்துக்கொண்டே உறுமும் சப்தம். ஒருவகையில் சீழ்க்கைக் கலந்த மிரட்டும் சப்தமும்கூட. அது மனிதனா? அல்ல, அல்ல… மிருகமா?... அல்ல, அல்ல… இரண்டும் கலந்த கலவையா? ஆம்.. ஆம்.. அதேதான். மிருகமல்ல... ஒருவகை மனிதன்தான். ஆனால், மிருகம் மிகுந்த மனிதன். மனிதம் மிக மிக குறைந்த மிருகம்.
பல நூற்றாண்டுகளாக ஓங்கிவளர்ந்த ‘பைகெ’ மரத்தின் பொந்துதான் அதற்கான இடம். வழிதவறி அந்தக் காடோடிய எருமைகளைத் தன்பக்கம் இழுப்பதே, அதை கண்ணியாய் வைத்து நரபலிக் கொள்வதே அதன் சீழ்கை உறுமலின் நோக்கம்.


உள்ளார்ந்த கலை, இலக்கிய, ஊடக ஆற்றல் மிக்கவர்கள் தமது தாயகம்விட்டு உலகில் வேறு தேசங்களில் வாழ நேர்ந்தாலும், தமது ஆற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டேயிருப்பார்கள் என்பதற்கு மற்றுமோர் உதாரணமாகத்திகழ்பவர் ஆனந்தராணி பாலேந்திரா. இவரை 1970 களில் செல்வி ஆனந்தராணி இராஜரட்ணம் என்ற பெயருடன் முதல் முதலில் சந்தித்தது இலங்கை வானொலி கலையகத்தில்தான்.

சார்லிக்கு இன்று என் மீது கோபம். அவன் தட்டில் வைத்த எதையும் இன்று சாப்பிடவில்லை. தினமும் நான் கொடுக்கும் அந்த உலர்ந்த கொடிமுந்திரியைக்கூட தொடவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அதுதான் அவன் 'பேஃவரிட்'.....அதைக்கூட..... காலையில் இருந்து "உர்ர்ர்.....உர்ர்ர்" என்று ஏதோ விசித்திர சத்தம் வேறு எழுப்பிக்கொண்டேயிருந்தான். 





ஒருமுறை நாரதர், 'கடவுள்' கிருஷ்ணரைப் பார்த்து, "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணர், "நான் உடன் இல்லாமல், வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தாராம். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றாராம்.


முன்பனி பின்பனி மாறிய பின்னே


நீங்கள் அதிசயமானவர்கள்


இன்று, ஏப்ரில் 10, சர்வதேச சகோதரர் நாள் ஆகும். எங்களுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியைச் சகோதரர்கள்தான் பங்கிட்டுக் கொள்கிறார்கள். நண்பர்களையோ, வேறெந்த உறவுகளையோ அறிவதற்கு முன் பெற்றோருக்கு அடுத்ததாக நாங்கள் பழகும் உறவும் அதுதான். எங்களின் ஆரம்பகால வருடங்களின் பெரும்நேரத்தைக் குடும்பமாக அவர்களுடன்தான் செலவிடுகிறோம். அவர்களுடன் சேர்ந்து நாங்களும் வளர்கிறோம். அந்தவகையில் சகோதரங்களுடான உறவு ஆரோக்கியமானதாக அமையவேண்டியது அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றெனலாம்.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









