மெல்பனில் மல்லிகை ஜீவா நினைவரங்கில் முருகபூபதியின் மூன்று நூல்களின் வெளியீடு !அக்கினிக்குஞ்சு இணைய இதழ் ஆசிரியர் யாழ். பாஸ்கருக்கு மல்லிகை ஜீவா நினைவு விருது! - முருகபூபதி -
இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான டொமினிக்ஜீவா அவர்களினால் இலக்கிய உலகிற்கு 1970 களில் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான முருகபூபதியின் 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியாகும் கதைத் தொகுப்பின் கதை ( சிறுகதை ) நடந்தாய் வாழி களனி கங்கை ( கட்டுரை ) பாட்டி சொன்ன கதைகள் ( சிறுவர் இலக்கியம் ) நூல்களின் வெளியீட்டு அரங்கு இம்மாதம் 19 ஆம் திதி ( 19-12-2021 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 4-00 மணிக்கு அவுஸ்திரேலியா மெல்பனில் Berwick senior citizens hall (112 High Street, Berwick VIC 3806) மண்டபத்தில் நடைபெறும். மெல்பன் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தி சிவக்குமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு, திருமதி மேகானந்தா சிவராசாவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும். திருமதி சரண்யா மனோசங்கர் தமிழ்வாழ்த்து பாடுவார்.