பயணத்தொடர்: நதியில் நகரும் பயணம் (2) - நடேசன் -

- இரண்டாவது உலகப்போரில், மரணமடைந்த 6,845 சோவியத் போர் வீரர்களுக்கான , பிரட்ரிஸ்லாவா நகரின் சிலாவின் என்ற இடத்திலுள்ள நினைவுச் சின்னம. -
புடாபெஸ்டில் எங்களது படகில் ஏறியதும் வரவேற்பு விருந்துடன், கப்பலில் வேலை செய்பவர்களுடன் எமக்கு அறிமுகம் நடந்தது. இந்த உல்லாசப்படகு போகும்போது அதாவது டானியுப்பையும் ரைன் நதியையும் இணைக்கும் நதி மெயின் நதி (main River) என்பார். இது பல இடங்களில் மிகவும் அகலமற்ற கால்வாய்கள் இருப்பதால் படகின் அகலம் ஒரு குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும். சில இடங்களில் டொக் எனப்படும் பகுதிகளைக் கடக்க அரை மணி நேரம் செல்லும். நதி நீரை அடைத்து நீர்மட்டத்தை உயர்த்துவார்கள். ஜேர்மன்- பவேரியா பிரதேசத்திலே இந்த ஆறு உள்ளது . பல காலமாகக் கப்பல் போக்குவரத்து இந்த வழியாக நடப்பதால் இந்த நீர்ப்பாதை கவனமாக பராமரிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நதிகள் மிகவும் சுத்தமானவை. மிகவும் கடுமையான சட்டங்கள் இங்கு உள்ளது. நதிகளில் படகுகள் தரித்து நிற்கும்போது பயணிகளது கழிவுகள் தரித்து நிற்கும் இடங்களில் அகற்றப்படும். அதற்கான கொந்தராத்து நிறுவனங்களால் அதேபோல் உணவுகளும் புதிதாகக் கொண்டு வரப்படுவதை பார்க்கக் கூடியதாக இருந்தது
நாங்கள் சென்ற நதிப் படகில் மூன்று தட்டுகள் உள்ளன. அங்கு வேலை செய்பவர்களை விட 200 பயணிகள் இருந்தார்கள். இவர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளன.
அவுஸ்திரேலியாவின் படகுக் குழுமம் என்றபோதும் படகின் கெப்டன் உக்ரேனை சேர்ந்தவர். உணவுக்குப் பொறுப்பாக இருந்தவர் ரஸ்சிய நாட்டையும், பயணிகள் நலத்திற்குப் பொறுப்பாக இருந்த விக்ரோரியா என்ற இளம் பெண் பெலரூஸ் நாட்டையும் சேர்ந்தவள். படகின் பொறுப்பிலிருந்தவர் ஒரு போர்த்துக்கல் நாட்டவர். சமையல், பரிமாறல் , சுத்தப்படுத்தல் போன்ற வேலைகளில் கிழக்கு ஐரோப்பா, பிலிபைன்ஸ் நாட்டினர் வேலை செய்தார்கள். கப்பலில் வேலை செய்தவர்களைப் பார்த்தபோது ஒற்றுமையான ஒரு ஐக்கிய நாடுகள் சபைபோல் தெரிந்தார்கள். பயணிகளில் பெரும்பான்மையானோர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள். மிகுதியானவர்கள் கனடா, அமெரிக்கா, பிரித்தானியாவிலிருந்து வந்தவர்கள். இங்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் எங்களைப்போல் அறுபதைத் தாண்டியவர்கள், அத்துடன் பலருக்கு இதுவே முதல் பயணமாக இருந்தது.


பல வருடங்களாக வாங்கி வைத்திருந்த நாவலொன்று என் ஏனைய அளவில் பெருத்த பெரு நாவல்களுக்கிடையில் மறைந்து போய்க் கிடந்தது. இன்று என் கண்ணில் பட்டது. நாவல் உமா மகேஸ்வரியின் 'யாரும் யாருடனும் இல்லை' . தமிழினி பதிப்பக வெளியீடு. 
ஊருக்கு ஊர் வட்டார வழக்கொன்று இருந்தது. வட்டார வழக்கிலும் சந்தங்கள் வந்து விழுந்தன.உமிய உமிய வாய்க்குள் கரையும் வெல்லமாய் அதுவும் தித்தித்தது. தமிழுக்கு அமுதென்று இப்படித்தான் பெயர் வந்திருக்கக்கூடுமோ? அதனால்தான், எம்மவர் தை + பொங்கல்= தைப் பொங்கல் என்றே சொல்லிச்சொல்லி தாய்த்தமிழையும் சுவைத்துக்கொண்டனர்.
படைப்பிலக்கியம், நாடகம், ஊடகம், இதழியல் பதிப்புத்துறை, அரசியல், தொழிற்சங்கம் சமூகச்செயற்பாடு என தனது பொதுவாழ்வில் அகலக்கால் பதித்து, இயங்கிக்கொண்டிருந்த எமது நீண்ட கால நண்பர் அந்தனிஜீவா அவர்களுக்கு காலம் விடுதலை வழங்கியிருக்கிறது.






துஞ்சுதல் என்ற சொல்வழக்கு ஒன்று எம்மிடத்தில் புழக்கத்தில் இருக்கின்றது. இது அதிகம் உப உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் புழக்கத்தில் உண்டு. அதுவும் மழைக் காலத்தில் அதிகம் பாவிப்பர் இந்த சொல்லாடலை. கன மழை பெய்து பயிர் உள்ள தரையில்(தோட்டத்தில்) ஒரு நாளிற்கு மேலாக நீர் தேங்கினால் தரையில் உள்ள பயிரின் வேர்கள் அழுகி பயிர் செத்துவிடும். இது அதிகம் வெங்காயம் மிளகாய் இன்ன பிற உப உணவுச் செய்கையில் அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்தும். முழுப் பயிரும் நாசமாகிவிடும். ஆனால் யாழ்ப்பாணத்து மண் அதிலும் சிறப்பாகச் சிவப்பு மண் சில இடங்களில் உள்ள இருவாட்டி மண்ணில் இருக்கும் பயிர்கள் இவ்வாறு கன மழையினால் அதிகம் துஞ்சுதல் என்றதாக பயிர்கள் செத்துப் போவது இல்லை. காரணம் பயிரின் வேர் பகுதி 24 மணி நேரம் என்றாக நீரால் சூழப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் இங்கு இல்லாததே காரணம். இதனால்தான் இந்த வகை மண்ணில் விவசாயம் செய்பவர்கள் அதிகம் கன மழை போன்றவற்றினால் பயிர்கள் நாசமாகி பொருளாதார இழப்புகளை சந்திப்பதில்லை. பொருளாதார நலிவிற்குள் உள்ளாகுவதில்லை.
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனையும் ‘மானுடம்’ என்ற பொதுப்பண்பில் அடக்கலாம். இருப்பினும் மனிதனின் ஒவ்வொரு செயல்பாடுகளான உண்ணுதல், நடத்தல், பார்த்தல், சிரித்தல், சிந்தித்தல், கற்றல், கவனித்தல் போன்றவற்றை ஆய்ந்து கவனித்தால் ஒவ்வொருவரிடமும் பல்வேறு நடத்தை முறைகளும் இயல்புகளும் வேறுபட்டு காணப்படுகின்றன என்பதை உணர முடியும். மனிதன் ஒருவர் மற்றவரிடமும், ஒவ்வொரு சூழலிலும் நடந்து கொள்ளும் விதம் அல்லது முறை ‘நடத்தை’எனப்படும். மனிதப் பண்புகள் அம்மனிதரின் நடத்தை முறைகளை ஆராயும் துறையே உளவியலாகும். அவ்வகையில் சங்க இலக்கிய நூலான கலித்தொகையில் தானே தனது மனநிலையை வெளிப்படுத்துதல், மற்றவர்களின் மூலம் தன் மனநிலையை வெளிப்படுத்துதல் என்ற இருவகையில் தலைவியின் உளவியலை ஆராய முடியும். பிற பெண் மாந்தர்களான தோழி, செவிலி ஆகியோரின் கூற்று பாடல்கள் வழி தலைவியின் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் உளவியல் அடிப்படையில் எடுத்தியம்புவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.
உலகில் வாழும் உயிரினங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்துவது ஆறாம் அறிவாகிய பகுத்தறிவுதான். அந்தப் பகுத்தறிவைப் பிரயோகிப்பதற்கு எமக்குச் சாத்தியமான வழியாக அமைந்ததுதான் கல்வி. அறிவுசார்ந்தோர் சமூக முன்னேற்றத்திற்காகச் சேர்த்துவைத்த தேட்டம்தான் அது. கல்வியின் மூலமே ஒரு மனிதன் உலகை அறிந்து கொள்கிறான். உலகத்து மாந்தர்களையும் வாழவேண்டிய வழிவகைகளையும் அறிகிறான். கல்வியும் பகுத்தறிவுச் சிந்தனையும் இல்லையென்றால் இத்தனை வேகமாக மனிதன் முன்னேறியிருக்க முடியாது. கல்வி மிகப்பெரிய ஒரு பாய்ச்சலை மனித சமூகத்தில் நிகழ்த்தியிருக்கிறது.



1964 இல் எம்.டி.வாசுதேவன் நாயரால் எழுதப்பெற்ற இந்த மலையாள நாவல் அப்போது ஒரு இலட்சம் பிரதிகள் விற்பனையைக் கண்டது. தமிழில் பல மொழிபெயர்ப்புகளைக் கண்டபோதிலும், கடைசியாக 2017 இல் காலச்சுவடு பதிப்பாக ரீனா ஷாலினி அவர்களால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. ரீனா ஷாலினி மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர்.

தமிழ்ச் சமூகத்தில் அறம் சார்ந்த கருத்துக்கள் நெடுங்காலமாகவே இருந்து வரும் ஒன்று. பண்பட்ட வாழ்வியலைத் தொடங்கிய காலந்தொட்டு அறத்திற்கும் அறம் சார்ந்த வாழ்வியல் முறைக்கும் தமிழ்ச்சமூகம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளன . அத்தகைய முன்னெடுப்புகளின் தொடர்ச்சியைத் திருக்குறளில் நாம் காண்கிறோம். குறிப்பாக, அறத்தின் மையமாக இருக்கும் இல்லறம், அந்த இல்லறத்தின் செயல்பாடு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும்? இல்லறத்தினுடைய மேன்மைகள் எவை? இல்லறத்தின் தேவை என்ன? என்பன போன்ற சிந்தனைகள் இன்றைய காலத்திற்கும் பொருந்தும் விதமாக அன்றே திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைக் குறித்த ஒரு பார்வையை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது
வழமைபோல இந்த வருடமும் பனி கொட்டத் தொடங்கிவிட்டது. தரை எல்லாம் பனி வயலாகக் காட்சி தருகின்றது. மரங்கள் எல்லாம் இலை உதிர்த்து வெண்பனியால் போர்வை போர்த்திருக்கின்றன. புலம்பெயர்ந்த பின் இப்படியான காட்சிகளை ஒவ்வொரு வருடமும் பார்த்ததால்தான், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாழும் நிலச்சூழலையை வைத்து ‘ஆறாம் நிலத்திணை’ பனியும் பனி சூழ்ந்த பகுதியும் என்ற ஆய்வுக் கட்டுரையை நான் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டுக்காக எழுதினேன். சங்க இலக்கியத்தில் வரும் ஐந்து நிலத்திணைகளுடன் ஆறாம் நிலத்திணையாக சான்றோர் இதை ஏற்றுக் கொண்டார்கள்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









