பதிவுகள் முகப்பு

நிட்டின் கோக்லே, கவிஞர் ஜெயபாலன் பேட்டி, கலாநிதி அகிலன் கதிர்காமரின் கூற்று, மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றி... ( 18 - 24) - ஜோதிகுமார் -

விவரங்கள்
) - ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
19 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

                        - இலங்கையில் சீனக் கப்பல் -

 

18

சென்ற முறை, அத்தியாயம் 17இல், குறிப்பிட்டிருந்த ஆட்சியாளரின் இருசக்கரங்களின் செயற்பாடுகள் குறித்த அம்சங்கள் தொடர்பிலான அக்கறைகள், தமிழ் அரசியலின் ஒரு பிரிவினருக்கு, முக்கியமாக, புலம்பெயர் அரசியலின் ஒரு சார்பினருக்கு, தேவைப்படும் விடயங்கள்தாமா என்ற சந்தேகங்கள் இன்று எழுவதும் தவிர்க்க முடியாததாகின்றது.  காரணம், அண்மையில் ‘தமிழ்வின்னில்’ திலீபன் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில் ‘ஆதங்கங்கள்’ குறித்து பின்வருமாறு பிரகடனம் செய்யப்பட்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது:

“அந்த அவலத்தின் சாட்சியாக இன்னும் ஒரு சிலர் உலக பந்தின் எங்காவது ஒரு மூலையில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை எதிர்ப்பார்த்து வாழக்கூடும்… …”

இருக்கலாம். ஆனால், இது, உண்மையில், மிக அடிப்படையான, பலம் வாய்ந்த தர்க்கங்களில், ஒன்றாக கருத இடமுண்டு.  அதாவது, தாம் எதிர்ப்பார்த்து நிற்கும், சர்வதேச நீதியும் நியாயங்களும், கிட்டாது, காலம் காலமாக, ‘சர்வதேச நீதிமன்றில் இலங்கையை ஏற்றித்தான் தீருவோம்’ என்ற வாதமும் பொய்ப்பட்டு, ஏமாற்றப்பட்டு, இனி இந்த பழம் புளிக்கத்தான் போகின்றது என்று முடிவு செய்து கொண்ட வேளை, உலக பந்தின் எங்காவது ஒரு மூலையில் தனது ‘ஆதங்கங்களுடன்’ நின்றுக்கொண்டு, ஒதுங்கிக் கொள்வது சிறப்பானது–என்ற வாதம் இங்கு கட்டியெழுப்பப்படுகின்றது.  ஆனால், இப்படியாக, உலக பந்தின் எங்காவது ஒரு மூலையில், அன்னார் ஆதங்கங்களுடன், வாழத்தான் வாழலாம் என்ற அன்னாரின் இந்த ‘ஆதங்கங்களுக்கு’ இங்குள்ளவர்கள்தாம் ஈற்றில் விலை கொடுத்தாக வேண்டி இருக்கும் என்பதே ‘பூனைக்கு மணி கட்டுவது யார்’ என்பது போன்ற ஓர் கேள்விக்கு எம்மை இட்டு செல்வதாயுள்ளது.

மேலும் படிக்க ...

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (5): ஆனை பார்த்த அந்தகர்கள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
17 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் ஐந்து - ஆனை பார்த்த அந்தகர்கள்!

மனோரஞ்சிதம் அவ்வப்போது தமிழ்க் கலை, இலக்கியம் பற்றியும் கருத்துகளை உதிர்ப்பதுண்டு. அவளது கருத்துகள் எப்பொழுதுமே சிந்தனையைத் தூண்டுபவையாக, ஆழமான தர்க்கத்தை வேண்டுபவையாக இருப்பது கண்டு நான் பெரிதும் ஆச்சரியப்படுவதுண்டு. இவ்விதமாக அவளைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கையில் அவள் ஆழ்ந்த சிந்தனை நிலையினைக் கண்டு "என்ன பலமான சிந்தனை?" என்று கேட்டாள். கேட்டுவிட்டு என் பதிலை எதிர்பார்த்து என்னையே பார்த்து நின்றாள்.

"வேறொன்றுமில்லை கண்ணம்மா, எல்லாம் நம் காலத்து இலக்கியவாதிகளைப்பற்றித்தான். ஆளுக்காள் குழுக்களாகப் பிரிந்து நின்று தாமே சரியென்று வாதிட்டுக்குகொண்டிருக்கும் இவர்களைப் பார்த்தால் சிரிப்பு வராமல் வேறென்ன வரும். நீயே சொல் கண்ணம்மா."

"இலக்கியமோர் யானை" என்றாள் பதிலுக்கு மனோரஞ்சிதம்.

"யானையா?"

'ஓம். யானைதான்" என்று தீர்மானமாகச் சொன்னாள் மனோரஞ்சிதம் மீண்டும். அவளது அந்த உறுதி அவள் தன் தீர்மானத்தில் மிகவும் தெளிவாகவிருக்கின்றாள் என்பதை நன்கு புலப்படுத்தியது.

"ஒரு விதத்தில் நீ சொல்வதும் சரிதான் கண்ணம்மா.  இலக்கியத்தில்தான் எத்தனை எத்தனை போக்குகள்."

"கண்ணா, போக்குகள் பல இருப்பது தவறானதொன்றல்ல.அவையெல்லாம் வளர்ச்சியின் அறிகுறிகளே.  பிரச்சினை என்னவென்றால்...."

"என்ன பிரச்சினை கண்ணம்மா?"

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றோம்: பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் வாழ்வும் பணிகளும் ! இலங்கை மலையக மக்களின் குரலாக ஒலித்தவரின் சேவைகளைப் பேசும் நூல் !! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
17 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சமூகத்திற்காக பேசுவதும், சமூகத்தை பேச வைப்பதுமே பத்திரிகையாளர்களினதும் படைப்பாளிகளினதும் பிரதான கடமை. அந்தவகையில் இலங்கையில் வீரகேசரி நாளிதழில் நீண்டகாலமும் பின்னர் தமிழ்நாட்டில் தினமணி நாளிதழில் பல வருடங்களும் பணியாற்றியவரான எஸ். எம்.   கார்மேகம் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் தொகுத்து ஆவணப்படுத்தியிருக்கும் இந்த நூலை வெளிக்கொணர்ந்துள்ள ஊடகம், பொது வாழ்க்கை  சார்ந்து அயராமல் இயங்கிவரும் எச். எச். விக்கிரமசிங்க பாராட்டுக்குரியவர்.

இந்த நூல் மூன்று பகுதிகளாக அமைந்திருக்கிறது.  கார்மேகம் அவர்களை நன்கறிந்த பலரது நினைவுப்பகிர்வு முதல் பகுதியாகவும், அஞ்சலிக்குறிப்புகள் சார்ந்த பகிர்வு  இரண்டாவது பகுதியாகவும்,  ஒளிப்படங்களின் தொகுப்பாக மூன்றாவது பகுதியும் இடம்பெற்றிருக்கின்றமையால்,  இந்நூல்  கார்மேகம் அவர்களின் வாழ்க்கைக்குறிப்புகள் என்பதற்கும் அப்பால் சென்று, இலங்கையின் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்கள் குறித்தும், இலங்கைப் பொருளாதாரத்தில் கூடுதல் அந்நியசெலாவணியை ஈட்டித்தந்த மலையக இந்திய வம்சாவளி மக்களின் முன்னேற்றத்தில் கார்மேகம் அவர்களின் வகிபாகம் எத்தகையது?  என்பது பற்றியும் விரிவாக விளக்கியிருக்கிறது.

இந்நூலுக்கு தமிழ்நாடு கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அணிந்துரையும், முன்னுரையை பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதியும், வெளியீட்டுரையை நூலின் தொகுப்பாளர் எச். எச். விக்கிரமசிங்கவும் எழுதியுள்ளனர். முதல் பகுதியில் இங்கிலாந்தில் வதியும் விரிவுரையாளர் மு. நித்தியானந்தன் முதல் அவுஸ்திரேலியாவில் வதியும் கார்மேகம் அவர்களின் செல்வப்புதல்வி கலை, இலக்கிய ஆர்வலர் திருமதி கனகா கணேஷ் வரையில் மொத்தம் 45 பேர் எழுதியிருக்கின்றனர்.

மேலும் படிக்க ...

சிறுகதை: அனாதை மரங்கள் - கிறிஸ்டி நல்லரெத்தினம் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் -
சிறுகதை
17 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அம்மாவை என்றும் நான் புரிந்து கொண்டதில்லை. எங்களுக்குள் ஏதும் பிணக்கோ பிளவோ என தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள். எங்கள் வீட்டில் அவள்தான் எல்லாம். இதைக் கேளுங்கள்...... அக்காவை பெண் பார்க்க எங்கள் வீட்டிற்கு அத்தானின் குடும்பம் வந்திருந்த சமயம் அது. "சத்தியன்..... சத்தியன்" என அம்மா என்னை அழைக்கிறாள். நான் தலைவாரி புது சட்டை அணிந்து அவர்கள் முன் வந்து ' டிப் டாப்' ஆக நிற்கிறேன். அம்மா என் தோளைப் பற்றி "இவன்தான் மகன் சத்தியன். ஹி இஸ் எ டாக்டர்" என்கிறாள். எல்லோர் கண்களும் என்னில் ஆணி அடிக்கின்றன. ஆம், அவர்கள் நம்பவில்லை. பத்தாவது படிக்கும் அரும்பு மீசை கூட முளைக்காத நானா 'டாக்டர்'? 'இவனை டாக்டராக ஆக்க வேண்டியதே என் கனவுணு' சொல்லியிருக்கலாமில்லையோ?

அப்பாவிற்கு இந்த நாடக வாழ்க்கையில் நாட்டமில்லை. ஆறடி உயரம்... கிளி மூக்கு... துறு துறு என எதையோ தேடும் கண்கள்.. அநாதரவாய், புறக்கணிக்கப்பட்ட, சீவாத தலைமுடி ... இதுவே அப்பா. அவர் எங்கள் வீட்டில் ஒரு பார்வையாளனே... ஒரு உருவம்! அதிகம் பேச மாட்டார். வானிலை அறிவிப்பாளனின் வார்த்தைச் சிக்கனம் அவருக்கு. பேச்சில் எப்போதும் ஒரு உண்மைத்தனம்.

மேலும் படிக்க ...

ஜீவநதியின் சிற்றிதழ்கள் சிறப்பிதழ் 175: இலக்கு, கலைச்செல்வி பற்றிய கட்டுரைகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
17 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'கலைச்செல்வி' சஞ்சிகையும் அதன் இலக்கியப் பங்களிப்பும்!

கலைச்செல்வி சஞ்சிகையின் ஆரம்பமும், நோக்கங்களும் பற்றி.....

இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த முக்கியமான சஞ்சிகைகளிலொன்று 'கலைச்செல்வி'. இச் சஞ்சிகை எழுத்தாளர் சிற்பி (சிவசரவணபவன்) அவர்களை ஆசிரியராகக்கொண்டு ஆடி 1958இலிருந்து வெளியானது.

'புதிய சொல' சஞ்சிகையின் , ஜனவரி-மார்ச் 2016 வெளியான, முதலாவது இதழில் எழுத்தாளர் அருண்மொழிவர்மன் எழுதிய 'கலைச்செல்வி' பற்றிய கட்டுரையில் முதலாவது கலைச்செல்வி இதழ் ஆகஸ்ட் 1958 வெளியானதாகக் குறிப்பிட்டிருந்தாலும், அதன் முதலாவது இதழ் ஆடி 1958 வெளியானது என்பதை 'நூலகம்' தளத்திலுள்ள ஆடி 1958 இதழிலிருந்து அறிய முடிகின்றது. 1966 வரை வெளியான சஞ்சிகை. அக்காலகட்டத்தில் அதன் 70 இதழ்கள் வெளிவந்துள்ளதாக எழுத்தாளர் அருண்மொழிவர்மன் கலைச்செல்வி பற்றிய 'புதிய சொல்' இதழில் வெளியான கட்டுரையில் 'ஈழத்தின் மிகமுக்கியமான இதழ்களில் ஒன்றாக கலைச்செல்வி 1958 முதல் 1966 வரையாக 8 ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட 70 இதழ்கள் வரை வெளியானது' என்று குறிப்பிட்டிருப்பார். ஆனால் ஜூன் 2008 ஞானம் இதழில் வெளியான சிற்பியின் 'கலைச்செல்விக்காலம்' கட்டுரையின் இறுதியில் கலைச்செல்வி 71 இதழ்கள் வெளியானதாகக் கட்டுரையாளர் சிற்பி கூறுவார்: "அவர் கையளித்த பிரதிகளுடன் என்னிடமிருந்த பிரதிகளையும் சேர்த்து, ஆண்டு - மாத வாரியாக ஒழுங்கு படுத்தினேன். அந்த எட்டு ஆண்டுகளில் 71 பிரதிகள் மட்டுமே வெளியாகியிருந்தன; அவற்றுள் இரண்டு பிரதிகள் தொலைந்தே விட்டன. " (ஞானம் ஜூன் 2009 பக்கம் 129)

மேலும் படிக்க ...

பிரமிப்பினைத் தரும் ஆவணச் சுரங்கம் ஜீவநதியின் சிற்றிதழ்கள் சிறப்பிதழ்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
16 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜீவநதி சஞ்சிகையின் 175ஆவது இதழ் 'ஈழத்து இலக்கியச் சிற்றிதழ்கள் சிறப்பிதழ்' ஆக வெளியாகியுள்ளது. பிரமிப்பைத் தந்த இதழ். இவ்விதழ் ஆய்வாளர்களுக்கு ஓர் ஆவணச்சுரங்கம். இவ்விதழ் சிற்றிதழ்களின் பெயர்களைக் குறிப்பிடும் பட்டியலொன்றல்ல. மாறாகச் சிற்றிதழ்கள் பற்றிய ஆய்வாளர்களுக்குப் பெரிதும் உதவக்கூடிய ஆவணச்சிறப்பு மிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு. இதனை எவ்விதம் சாத்தியமாக்கினார் ஜீவநதி சஞ்சிகையின் வெளியீட்டாளரும் ஆசிரியருமான பரணீதரன் என்பது வியப்பைத் தருமொன்று. இவ்விதச் சிறப்பிதழொன்றினை அவ்வளவு இலகுவாக உருவாக்கி விட முடியாது. கட்டுரையாளர்களிடமிருந்து சிற்றிதழ்கள் பற்றிய ஆவணக்கட்டுரைகளை தொடர்புகொண்டு எடுக்க வேண்டும். சிரமமான காரியத்தை வெற்றிகரமாக முடித்திருக்கின்றார். இதற்காகப் பரணீதரனுக்கு வாழ்த்துகள்.

மேலும் படிக்க ...

நிட்டின் கோக்லே, கவிஞர் ஜெயபாலன் பேட்டி, கலாநிதி அகிலன் கதிர்காமரின் கூற்று, மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றி... (13 -17) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
14 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

13

பேட்டியின் போது திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள் திருகோணமலை துறைமுக புனரமைப்பு திட்டத்தை முதன்முதலில், தானே 2003இல், பிரதமர் வாஜ்பாயுடன் கதைத்ததாகவும் பின்னர் சம்ப10ர் அனல்மின்திட்டம் குறித்தும் தாங்களே, முதன்முதலில் பிரேரித்ததாகவும், ஆனால் இந்தியா, எப்போதும் ஒப்பந்தத்துக்குள்ளாகவே(1987) விடயங்களை பார்க்க முற்படுகின்றது என்றும், தாங்களோ அதற்கும் வெளியே, வழிகளை தேடுவதாகவும் குறிப்பிட்டது ஏனையவற்றை போன்றே முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.

அதாவது, இக்கட்டுரையின் முற்பகுதியில் (12ம் பகுதி) குறிப்பிட்டவாறே, ‘விடயங்களை’ –முக்கியமாக ‘வட-கிழக்கு நலன்களை’ - இந்தியா முன் கவிழ்த்து விட்டு அல்லது இந்தியா முன் நகர்த்தி வைத்து விட்டு, வட-கிழக்கு மக்களும், இந்தியாவும் ஒருவரோடு ஒருவர் அடிபடுதலை ஊக்குவிக்கும் ஓர் அணுகுமுறை, இந்திய ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல், உண்மையில், நடைமுறையில், காணக்கிட்டுகின்றதா என்பது ஓர்கேள்வியாகின்றது.  இருந்தும், திரு.யதீந்திரா அவர்கள் மிக அண்மையில் கூறியுள்ளது, மேற்படி அணுகுமுறைகளை கருத்தில் கொண்டதால் எழுந்த ஒன்றா என்பதும் சரியாக தெரியவில்லை:


“இந்தியாவை விடுதலை புலிகள் அணுகிய முறைமை தவறென்பதையே வரலாறு நிரூபித்துவிட்டது. இந்தியாவை தவிர்த்து, புறந்தள்ளி, தங்களின் இலக்கை அடைய முடியுமென்றே பிரபாகரன் நம்பினார். ஒன்றை நம்புவது தவறல்ல. ஆனால் அது தோல்வியுற்ற பின்னர் அந்த நம்பிக்கையை நியாயப்படுத்த முற்படுவதும், அதனை சரியென்று நம்பி செயற்பட எத்தனிப்பதும்தான் தவறானது” (தினக்குரல்:02.10.2022).

இத்தகைய ஓர் பின்னணியிலேயே மேற்படி நிட்டின் கோக்லேயின் பேட்டியின்போது திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ‘இந்தோ-பசுபிக்’ கடற்பிரதேசம் குறித்து அதிக அக்கறை காட்ட முற்பட்டதும் என்றுமில்லாத முக்கியத்துவத்தை எட்டி பிடிக்கின்றது எனலாம்.

மேலும் படிக்க ...

அஞ்சலி - எழுத்தாளர் பொன் குலேந்திரன் மறைவு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
14 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் பொன் குலேந்திரன் அவர்களின் மறைவுச் செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். துயருற்றேன். உண்மையில் இவரை நான் நேரில் சந்தித்ததில்லை, ஆனால் தொலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல் மூலமும்  அண்மைக்காலம் வரையிலும் என்னுடன் தொடர்பிலிருந்தார். கடைசியாக இவரது குவியம் அமைப்பும் (குவியம் என்னும்  பெயரில் மின்னிதழ் நடத்தி வந்தவர்) தமிழகத்திலுள்ள கொலுசு அமைப்பும் நடத்திய " 2022 ஆம் ஆண்டிற்கான குவியம் - கொலுசு சிறுகதைப்போட்டி'க்காக என்னுடன் தொடர்பு கொண்டிருந்தார். அதற்காக என் சிறு பங்களிப்பையும் அவருக்கு அனுப்பியிருந்தேன்.

சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் என இலக்கியத்தில்  பன்முகத்திறமை மிக்கவர். ஆங்கிலத்திலும் எழுதுவதில் வல்லவர். இவரது ஆங்கில நாவல்களும் மின்னூல்களாக வெளியாகியுள்ளன. சிறுவர் இலக்கியத்துக்கும் தன் பங்களிப்பை நல்கியவர். அவரது அறிவியற் சிறுகதைகளை நான் இரசித்து வாசிப்பதுண்டு. அவர் தனது அறிவியற் கதைகள் சிலவற்றைத் தொகுத்து தமிழகத்தின் ஓவியா பதிப்பகமாக வெளியிட்டபோது என்னிடம் அதற்காக அணிந்துரையொன்றினையும் கேட்டுத் தொடர்பு கொண்டிருந்தார். மகிழ்ச்சியுடன் எழுதிக் கொடுத்தேன். ஓவியா  பதிப்பக வெளியிட்ட 'முகங்கள்' சிறுகதைத்தொகுப்புக்கும் விமர்சனக் குறிப்பொன்றினை எழுதியிருந்தேன்.

இவர் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணப் புனித பரியோவான் கல்லூரியில் கற்றவர்.  கொழும்பு பல்கலைக்கழகத்தில் பெளதிகத்துறையில் சிறப்பு இளமானிப் பட்டம் பெற்றவர். தொலைதொடர்புத் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். சந்தைப்படுத்தலிலும் பட்டம் பெற்றவர்.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவல் பற்றிய ஆய்வுக் கட்டுரையொன்று!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
13 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ராஜா பதிப்பகத்தினரால் வெளியிடப்படும் பன்னாட்டுப் பன்முகத் தமிழ் ஆய்விதழான 'நவீனத்தமிழாய்வு' (Modern Thamiz Research)) இதழின் மார்ச் 2021 பதிப்பில் எனது, வ.ந.கிரிதரனது,  'குடிவரவாளன்' நாவல் பற்றிய விரிவான ஆய்வுக் கட்டுரையொன்று வெளியாகியுள்ளது. இதனை முகநூல் நண்பரும், பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளருமான சரவணகுமார் அவர்கள் அறியத்தந்திருந்தார். அவருக்கு நன்றி.

எனது 'குடிவரவாளன்' நாவலைப்பற்றி 'அமெரிக்க நாட்டில் அகதியர்கள்: வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் புதினத்தை முன் வைத்து....' என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையினை எழுதியிருப்பவர் க.ஆனந்தராஜன் , முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உராய்வு மையம், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு இந்தியா.

மேலும் படிக்க ...

தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (4) - மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ? - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
12 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் நான்கு: மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ?

'கண்ணம்மா' என்றேன். மனோரஞ்சிதம் பெருங்காதலுடன் திரும்பிப் பார்த்தாள். கண்ணம்மா என்று நான் அழைப்பதைப் பெரிதும் விரும்புபவள். அச்சமயங்களிலெல்லாம் பதிலுக்குக் 'கண்ணா' என்று என்னை அன்பூற மென்மையாக அழைப்பாள். அந்த அன்பு குழைந்த அவளது அழைப்பைக் கேட்பதற்காகவே அவளை நான் கண்ணம்மா என்று விளிப்பதுண்டு. என்னைப்பொறுத்தவரையில் இவ்விருப்பின் அற்புதமாக அவளை நான் காண்பதுண்டு. அவளற்ற இருப்பை கற்பனை செய்வதே எனக்கு மிகவும் சிரமமானது.

'என்ன கண்ணா மெளனமாகிவிட்டாய்?" என்றாள் அவள்.

'எல்லாம் நம் இருப்பு பற்றிய சிந்தனைதான் கண்ணம்மா"

'இருப்பு பற்றி.. வழக்கம்போல் தத்துவவிசாரம்தானா கண்ணா'

'கண்ணம்மா உனக்குத்தானே எனக்கு பாரதி பாடல்கள் பிடிக்குமென்று தெரியும். எனக்குப் பிடித்த அவரது பாட்டைக் கூறு பார்க்கலாம்."

'கண்ணை மூடிக்கொண்டு கூறுவேன் கண்ணா. 'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே பாடல்தானே'

'சரியாகவே கூறினாய் கண்ணம்மா. நீ என் மனத்தை நன்றாகவே  புரிந்து வைத்திருக்கிறாயடி.'

'இந்தக்கவிதை எனக்கும் பிடித்தது கண்ணா. அதற்குக் காரணமே இருப்பு பற்றிய கவிஞரின் கேள்விகளே."

'நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?  ஒரு விதத்தில் தர்க்கரீதியாகப் பார்க்கப்போனால் இதுகூடச் சரிதானென்று வாதிடலாம். இல்லையா கண்ணம்மா?'

"எப்படி கண்ணா? எமக்கு வெளியே விரிந்து கிடக்கின்றது நாம் காணும் இப்பிரபஞ்சம். இவ்வுலகம். இப்புற உலகு மாயை என்று எப்படிக் கூறுவது கண்ணா?'

மேலும் படிக்க ...

இலக்கியப்பூக்கள் 264 - முல்லை அமுதன் -

விவரங்கள்
- முல்லை அமுதன் -
நிகழ்வுகள்
12 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வணக்கம், இவ்வாரம் வெள்ளிக்கிழமை (14/10/2022) லண்டன் நேரம் இரவு 8.15 இற்கு (இரவு பிரதான 8.00 மணிச் செய்திக்குப் பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில்(www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் 264 ஒலிபரப்பாகும்.

நிகழ்வில்,

      கவிஞர்.பா.நூருல்லாஹ்(மதுரை) (சிறுகதை:வேண்டாத காரணம்..),
      கவிஞர்.கவிஜி (கவிதை:இறைவேளை..),
      கவிஞர்.பாத்திமா முஜாமளா முபாரக்,
      கவிஞர்.ராகினி முருகேசன்(கவிதை:பிரசவிக்கும் வலி..),
      எழுத்தாளர்.முபீன் சாதிகா (குறுங்கதை:மயில் பெண்),
      எழுத்தாளர்.திருமலை.சுந்தா(குறுங்கதை: பொறுமையும் சினமும்..),
      கவிஞர்.வே.சுகந்தி(தமிழகம்)(கவிதை:தென்றலே தூது போ)
      கவிஞர்.விக்ரமாதித்தன் (எப்படியும் இருந்துகொண்டே இரு.. நன்றி:ஸ்ரீ என் ஸ்ரீவத்ஸா'),
      எழுத்தாளர். இரா.சம்பந்தன்(கனடா) (கட்டுரை:ஓளவை காட்டும் பெண்கள்),

ஆகியோரின் படைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பாகும் நிகழ்வாகும்.  உங்கள் படைப்புக்களையும் உங்கள் குரலில் (எம் பி 3 ஒலிவடிவில்)ஒலிப்பதிவுசெய்து அனுப்புங்கள்.உங்கல் நண்பர்களின் படைப்புக்களையும் அறிமுகம் செய்துவையுங்கள்.

மேலும் படிக்க ...

இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு - வெலிகம ரிம்ஸா முஹம்மத் -

விவரங்கள்
- வெலிகம ரிம்ஸா முஹம்மத் -
நிகழ்வுகள்
12 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மக்கொன ஸுல்பிகா எம். ஸாலிஹ் ஸினான் எழுதிய சிந்திக்க மறந்த உள்ளங்கள் மற்றும்  எழுத்தாளர் திக்குவல்லை ஸஃப்வான் அவர்களது வாப்பாவுக்கு ஒரு சால்வை நூல் ஆகிய இரண்டு சிறுகதை நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 2022.10.16 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு பேருவலை, மருதானையிலுள்ள அல் பாஸியதுல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் அப்துல் அஃலாவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், இரத்தினக்கல் வியாபாரிகளான அல்ஹாஜ் எம்.ரீ.எம். ஹாரிஸ் மற்றும் அல்ஹாஜ் அஸ்ஹர் ஸவாஹிர் ஆகியோர்கள் நூல்களின் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொள்வார்கள்.

மேலும் படிக்க ...

பொன்னியின் செல்வன் பார்த்தேன்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நேற்று இரவு 7.30 காட்சியாகப் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தைக் குடும்பத்தினருடன் சென்று TIFF திரையரங்கில் பார்த்தேன். சென்றவாரம் 'டிக்கற்' எடுத்திருந்தேன். மூன்றாவது வரிசையில்தான் இடம் கிடைத்திருந்தது. இன்று காட்சி 'ஹவுஸ் ஃபுல்'. எல்லோருக்கும் நன்கு பிடித்திருந்தது. மகள்மார் இருவரும் PS 2 பார்ப்பதற்கு இப்பொழுதே ஆர்வமாகவிருக்கின்றார்கள்.  படம் பார்க்க முன் வந்தியத்தேவன் வேடத்திற்கு கார்த்தி எவ்விதம் பொருந்துவார் என்பதில் சந்தேகமிருந்தது. படம் பார்த்த பின்னர் என் முடிவை மாற்றிக்கொள்ளும் வகையில் கார்த்தியை வந்தியத்தேவனாக மாற்றுவதில் இயக்குநர் மணிரத்தினம் வெற்றியடைந்திருக்கின்றார் என்றே கூறுவேன்.

மேலும் படிக்க ...

'பண்பாட்டுப் பெட்டகம்' நூல் வெளியீட்டு விழா!

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா -
நிகழ்வுகள்
11 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சிறுகதை: மாட்டுப் பிரச்சனை - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
சிறுகதை
10 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சலீம்மைத் தேடி சிற்ரரஞ்சன்,பாபு,இன்னும் இருவர் வந்திருந்தார்கள்."தோழர் இவர்கள் மாட்டுப் பிரச்சனையைக் கொண்டு வாரார்கள்  . " எங்களை வந்து தீர்க்கட்டாம் " என்ற ரஞ்சஜனைப் பார்த்து "பிரச்சனையைக் கூறு" என்றவன், யோசித்து விட்டு."கேட்டடியிலே நின்று கதைக்க வேண்டாம், உள்ளே  வாருங்கள் " கூட்டிச் சென்றான்.  வாடகையில்  'ராஜ' களையுடன் இருக்கிற அந்த பெரிய பழைய வீடு   வந்தாரை வாழ வைக்கும் .  வெளியிலுள்ள பூச்சுக்கள் கழன்று பெரிதாக விழுந்திருக்கவில்லை . உள்ளுக்க தான் அங்காங்கே விழுந்து கொஞ்சம் அலங்கோலமாக இருக்கிறது .  அந்த காலத்தில், முருகைக்கற்களை  வைத்து  சுண்ணாம்புக் காறையால் கட்டிய தடித்த சுவர்களை உடையது . செல்லடிக்கெல்லாம் லேசிலே விழுந்து விடாது பயப்படாமல் நிற்க வல்லது . வக்கீலுக்குச் சொந்தமாக பழைய சங்கக் கடை இருந்த   இதே போன்ற  வீட்டை  திருத்தி  புது வீடாக்கி இருக்கிறார் . "  பாரம் குறைந்த (முருகைக்) கல் வீடு ,உறுதிப் படைத்தது ! " .அவருக்கு தெரிந்திருக்கிறது . எங்களைப்  போல வெங்காயம் என்றால் அதை தகர்த்து விட்டு புதியதாய்க் கட்டியிருப்போம் . இந்தியனாமி  ,பாலத்தடியிலே இருந்த கிறிஸ்தவ சுடலையிருந்து அடித்த செல்லிலே பாதுகாப்பற்றதாக 'கொல கொல'த்திருக்கும் . ஆனால் நாம் ஓடியது அந்த வீட்டுக்குத் தான் . நாம் ( அம்மா , தங்கச்சி , அவர்கள் எல்லோரும் ) சுவரை ஒட்டியே இருந்தோம் .  அந்த வீடு இன்றும் இருக்கிறது . ஆனால் நாம் இருந்தது ...இப்ப இல்லை . உள்ளுக்க ஒரு அழுகை இருக்கிறது .

          எங்க வீட்டின் கதை ஆச்சரியமானது . சொந்தக்காரர் ஒரு இன்ஜினியர் . தனது கனவு இல்லமாக கட்ட வெளிக்கிட்டாராம் . டையினிங் ரூமை வாசிகசாலை பெரிய மேசை வைக்கக் கூடிய மாதிரி நீட்டி  மண்டபமாக்கி விட்டிருந்தார் . நிஜமாகவே மண்டபத்துண்டு தான் .  மூன்று பக்கமும் ஜன்னல்களுடன் பின் வாசல்  கதவு . அப்படியே இறங்கி தோட்டத்திற்குள் ( வளவுக்குள் ) பிரவேசிக்கலாம் . வரிசைக்கு நல்ல இடைவெளியுடன் வைக்கப்பட்ட தென்னை மரங்கள் . பூவரச மரங்களுடன் கூடிய (கம்பி) வேலி வீடு வீதியோடு ஒட்டிய தோடு இருக்கிற நீளத்திற்கு  சற்று தூரம் வரையில் உயர்ந்த மதில் சுவர் .அடுத்து சிறிய நீளத்திற்கு செவவரத்தை மரங்கள் .செடி மரம் போல வளர்ந்த்து பூக்களாக பூத்து தள்ளும் . காலையிலே ஐயர் வீட்டினர் வீதியிலே இருந்தே பூவை பறித்து விட்டுச் செல்வர் . பின்வளவு மூலையில் பெரிய புளியம் மரம் ,அடுத்து வீட்டுப் பக்கமும் கிளையை பரப்பு பகிர்ந்து கொண்டு கம்பீரமாக நிற்கிறது  . பின்வளவின் மத்தியிலே இரண்டு கழிவறைகளுடன் நிற்கும் கூண்டு . இடதுபுறமாக சிமேந்துப்பலகை மூடிய கிடங்கு . அதில் பொறியியல் இன்னமும் தேவைப்படுவதாக நினைக்கிறான். அவர்கள் நினைக்கிற வட்டம் ....நடைபெறுவதில்லை எனப்படுகிறது . உக்கப்படுவதை ஊக்குவிக்க ஏதாவது இரசாயனம் சேர்க்கப்பட வேண்டுமோ ?

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இலக்கியத் திறனாய்வாளர் அமரர் கே. எஸ். சிவகுமாரன் வாழ்வை கொண்டாடுதல் - தகவல்: முருகபூபதி -

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
10 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையில் அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளரும், ஊடகவியலாளரும் இலக்கியத் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றி உரையாடும் வகையில்,  அன்னாரை கொண்டாடும் நிகழ்ச்சியினை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்மாதம் 15 ஆம் திகதி ( 15-10-2022 ) சனிக்கிழமை மெய்நிகரில் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு கலை, இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும்  அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்  அன்புடன் அழைக்கின்றது.

மேலும் படிக்க ...

நிட்டின் கோக்லே, கவிஞர் ஜெயபாலன் பேட்டி, கலாநிதி அகிலன் கதிர்காமரின் கூற்று, மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றி... (6 - 12) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
07 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

6

தம்மை பதவியில் இருந்து நீக்கியதில் அமெரிக்கா நேரடியாக சம்பந்தப்பட்டு இருந்தது என்று இம்ரான் கான் பகிரங்கமாக தெரிவித்த குற்றச்சாட்டில் உண்மை இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம்.  ஆனால், அவரது அமைச்சர்களில் ஒருவர் (Mifta Ismail) ஏற்கனவே இம்ரான்கான், பெப்ரவரியில் அறிவித்திருந்த மக்களுக்கான உதவி பொதியை உடனடியாக வாபஸ் பெற்றுவிட்டு IMFஇன் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு அது பிரயோகிக்கும் ஓர் பொறிமுறையை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஓர் கோரிக்கையின் பின்னணியிலேயே இம்ரானின் பதவிபறிப்பு நிகழ்ந்தேறியதாக  அவர் குற்றம் சாட்டியிருந்தார் (22.04.2022). பாகிஸ்தானின் இம்ரான் கானுக்கு முந்தைய அரசு, 25 கோடி டொலரை, துண்டு விழும் தொகையாக அறிவித்திருந்தது. அது பின்னர், 1.3 ட்ரில்லியன் பாகிஸ்தான்-ரூபாயாக வளர்ச்சி கண்டிருந்தது என்பது அறிந்த ஒன்றே. IMFஇன் கோரிக்கைகளில் ஒன்று, 21 ரூபாயாக இருந்த பெற்றோலின் விலையை, பாகிஸ்தான், உடனடியாக 134 ரூபாவாக மாற்றியமைக்க வேண்டும் என்பதனையும் உள்ளடக்கும்.

எண்ணெய் தொடர்பில், இலங்கை போன்றே பாகிஸ்தானும் சலுகைகளை தன் மக்களுக்கு அளித்து வந்த காலம், அந்த காலம். கூடவே, பாகிஸ்தானின் கடன் முறி உள்ளடங்கலான, வெளிக்கடன் 130,192 மில்லியன் டொலர்களாகும். (அதாவது 130.2 பில்லியன்களாகும்) - இதில் 30 கோடி டொலர்  சீனக்கடன் 30மூ  எனவும் கூறப்படுகின்றது.

அதாவது, 2006 இல், வெறும் 37.2 பில்லியன் டொலராக இருந்த பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன், இன்று மேற்படி 130.2 பில்லியன் டொலராக பரிணமித்துள்ளது என்பதும், இதில் IMFஇன் திட்டமிடுதல் எந்தளவுக்கு பங்கு வகிக்கின்றது என்பதும் எழக்கூடிய கேள்விகளில் ஒன்றாகும். ஏனெனில் இதுவரையில், பாகிஸ்தான், IMFஇடம் 22 முறையில் கடன் வாங்கிய சரித்திரத்தை கொண்டுள்ளது, என்பதுவே இங்கே முக்கியமானதாகின்றது.  சுருக்கமாக கூறினால், இம்ரான்கானின் பதவி பறிப்பு என்ற ஓர் நிகழ்வின் பின்னணியில், பாகிஸ்தான் என்ற ஓர் நாட்டை வீழ்த்தும் பொருளாதார பொறி, அந்நாட்டின் அரசியலையும் தீர்மானிக்கும் வலுவான காரணியாகின்றதா என்ற கேள்வி, சந்தேகத்துக்கிடமில்லாத வகையில் முன்னோக்கி நகர்வதாயுள்ளது.

மேலும் படிக்க ...

'நடந்தாய் வாழி களனி கங்கை' ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு!

விவரங்கள்
- தகவல் - முருகபூபதி -
நிகழ்வுகள்
07 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

இயக்குநர் மணிரத்தினம் தவறவிட்ட அரிய வாய்ப்புகள் இரண்டு - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
06 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. 'அலைகடலும் தூங்கையிலே அகக்கடல்தான் பொங்குவதேன்'

பொன்னியின் செல்வனில் வரும் இப்பாடல் இலட்சக்கணக்கான பொன்னியின் செல்வன் வாசகர்களைக் கவர்ந்த பாடல். ஆனால் இதனை இயக்குநர் மணிரத்தினம் 'பொன்னியின் செல்வன் 1'இல் பாவிக்கத்தவறி விட்டார். இன்னும் நான் இத்திரைப்படத்தைப் பார்க்கவில்லை. பார்த்த என் தங்கையொருத்தியின் கூற்றுப்படி படத்தில் இப்பாடலில்லை. மிகவும் அரியதொரு சந்தர்ப்பத்தை இவ்விடயத்தில் தவற விட்டதாகவே நான் கருதுகின்றேன். எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் புனைவதிலும் வல்லவர்கள். அது மட்டுமல்ல இருவருமே தம் நாவல்களில் வரும் பாத்திரங்களுக்கேற்பக் கவிதைகள் எழுதி, தம் நாவல்களில் இணைப்பதில் வல்லவர்கள். கல்கி தன் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் ஓடக்காரப்பெண் பூங்குழலியின் உணர்வுகளை மையமாக வைத்துக் கவிதையொன்று எழுதியிருப்பார். அந்தக் கவிதை ஒரு முறை வாசித்தாலும் வாசிப்பவர் நெஞ்சினை விட்டு அகலாத தன்மை மிக்கது.

'அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்?' என்னும் அவரது கவிதையானது ஓடக்காரப்பெண் பூங்குழலியின் சோகம் ததும்பிய நிலையினைத்தெரிவிப்பது. பொன்னியின் செல்வன் நாவலில் வரும் அந்தக்கட்டத்தினையும், அந்தக்கவிதை வரிகளையும் என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. ஒரு படைப்பானது இது போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிச்சிறந்து விளங்குகின்றது.

மேலும் படிக்க ...

நிட்டின் கோக்லே, கவிஞர் ஜெயபாலன் பேட்டி, கலாநிதி அகிலன் கதிர்காமரின் கூற்று, மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றி...(1 -5) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
06 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

அண்மையில் வெளிவந்த நிட்டின் கோக்லேயின் பேட்டி மிகுந்த பரபரப்பை, சர்வதேச மட்டத்தில் எழுப்புவதாக அமைந்திருந்தது. பல்வேறு, மிக அர்த்தமுள்ள கேள்விகளை எழுப்பிய இப்பேட்டியானது, அண்மையில் வெளிவந்திருந்த இன்னுமொரு பேட்டியான, கவிஞர் ஜெயபாலன் அவர்களின் பேட்டிக்கு நேரெதிராக அமைந்திருந்தது, அதன் முக்கியத்துவத்தை குறித்து காட்டுவதாக அமைந்து போனது.  ‘ஒன்று சேர்ந்து, கப்பலை கரையேற்றுவோம்’ அல்லது ‘ஒன்று சேர்ந்து கப்பலை காப்பாற்றுவோம்’ என்பதே கவிஞர் ஜெயபாலன் பேட்டியின் தொனிபொருளாக இருந்த போதிலும், கோக்லேயின் பேட்டியானது கப்பல் செல்ல உத்தேசித்திருக்கும் ‘திசையை’ இலை மறை காய் மறையாக காட்டி நின்றதே அதன் அடிப்படை சிறப்பு எனலாம். அதாவது ஒருபுறம் அவா – கவிஞனின் கனவு – கவிஞனின் லட்சியம். மறுபுறம், நடைமுறை யதார்த்தம்.


2

இரண்டு பேட்டிகளும், சொல்லி வைத்தாற்போல் ஜெனீவா கொண்டாட்டத்தின் இடைநடுவே வெளிவந்த போதிலும், இரண்டுமே அது குறித்து எந்த ஒரு அக்கறையும் காட்டி நில்லாது இருந்தமை பேட்டிகளின் இன்னுமொரு சிறப்பம்சம் என கருதலாம். வருடந்தோரும் வந்து போகும் சரஸ்வதி பூஜையை போல, இதுவும் கடந்த பல வருடங்களாய் வந்து போவதால் ஏற்பட்ட சலிப்பின் காரணமாகவும் இவ் அசட்டை தோன்றியிருக்க வாய்ப்புண்டு.  எனினும் ஜெனீவா முன்னெடுப்புக்கான நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டு, அரங்கேற்றி கொண்டிருந்த போது ‘தினக்குரலில்’ அடுத்தடுத்து வந்த இரு செய்திகள் ஓரளவில் திகைப்பை தருவனவாக இருந்தன. ஒன்று ‘26 வருடங்களாய்  போராடிய இன்னொரு தாய் (விக்னேஸ்வரன் வாகீஸ்வரி) நீதி கிடைக்காது மரணமானார்’  என்பதும் ‘மனித உரிமை பேரவை தலைவரை பீரிஸ் சந்தித்தார்’ என கூறி பீரிஸ் அவர்கள், மனித உரிமை பேரவை தலைவருடன் கைகுலுக்கி கொண்டிருக்கும் காட்சி படத்துடன் வெளிவந்தது (17.06.2022).  இது, விடயங்களின் சாராம்சத்தை கூறுவதாய் அமைந்து போனது.

மேலும் படிக்க ...

தொடர்கதை - நவீன விக்கிரமாதித்தன் (3) - மனவெளி நண்பர்கள் - சதுரன் & வட்டநிலா தம்பதியினர்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நாவல்
05 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயம் மூன்று - மனவெளி நண்பர்கள் -  சதுரன் & வட்டநிலா தம்பதியினர்!

தட்டையர்கள் என்  மனவெளி நண்பர்களில் முக்கியமானவர்கள். உண்மையில் இவர்கள் எம் படைப்புகள். அவர்களுடன் நான் அவ்வப்போது உரையாடுவதுண்டு. மனவெளி உரையாடல்கள்தாம். தட்டையர்கள் உலகுக்கு விஜயம் செய்வதென்றால் எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. பரிமாண வித்தியாசங்கள் எங்களுக்கிடையில் ஏற்படுத்திய வித்தியாசங்கள் எங்களுக்கு மிகவும் சாதகமாகவிருக்கின்றன. அதனால் தட்டையர்கள் உலகு எப்பொழுதும் எனக்கு உவப்பானதாகவே இருக்கின்றது. தட்டையர்கள் உலகில் நான் எப்போதுமே உவகையுறுவதற்கு முக்கிய காரணங்களிலொன்று என்னவென்று நினைக்கின்றீர்கள்? மானுடப் படைப்பிலுள்ள பலவீனங்களிலொன்றுதான். ஏனெனில் அங்கு நான் அவர்களைவிட எல்லாவகையிலும் உயர்ந்தவன். என்னை மீறி அங்கு எவையுமேயில்லை. இது போதாதா என் உவகைக்கு. அதனால்தான் என்னைச் சுற்றித் தட்டையர்கள் உலகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இரவு வானத்துச் சுடர்களைப்போல் அவை என்னைச்சுற்றிக் கண்களைச் சிமிட்டுகின்றன. தட்டையர்கள் உலகத்து உயிர்களுக்கும் எம்முலகத்து உயிர்களுக்குமிடையில் தோற்றத்தில்  வேறுபாடுகள் பெரிதாக இல்லை. அவர்கள் எம்மைபோல் கனமானவர்கள் அல்லர். தட்டையர்கள்.   முக்கிய வேறுபாடு  மிகப்பெரிய வேறுபாடென்பேன். அந்த ஒரு வேறுபாடு போதும் அனைத்தையுமே மாற்றி வைப்பதற்கு. ஆம்! பரிமாணங்களில் எம்மை மிஞ்சிட அவற்றால் முடியவே முடியாது. அவர்களால் ஒருபோதுமே அவர்களது பரிமாணச்சுவர்களை மீறவே முடியாது. இப்படித்தான் பரிமாணம் மிகு உலகத்து உயிர்களெல்லாம் எம்மைப்பற்றியும் எண்ணக்கூடுமென்று நான் அவ்வப்போது எண்ணுவதுண்டு. உண்மையில் பரிமாண மிகு நண்பனொருவனும் என் மனவெளி நண்பர்களிலொருவனே. அவனுடனும் நான் அவ்வபோது தனிமையில் நேரம் கிடைக்கும்போது உரையாடுவதுண்டு. அதுபற்றி பின்னர் சந்தர்ப்பம் கிடைக்கையில் கூறுவேன்.

மேலும் படிக்க ...

சிறுகதை :காலமும் கனியும் - விமல் பரம். -

விவரங்கள்
- விமல் பரம். -
சிறுகதை
05 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அப்பாவை இழந்து ஒரு வருடமாகி விட்டது. அதன் தாக்கம் இன்னும் எங்களை விட்டுப் போகவில்லை. அன்று நடந்த விபத்திலிருந்து அம்மா மீண்டு வந்ததே அதிசயம். அவளின் உடல்நிலை முழுமையாக குணமாகவில்லை பெரும்பொழுது படுக்கையிலேயே கழிகிறது.

“படிப்பை விட்டிடாதை ஒ எல் சோதினையை எடுத்து பாஸ் பண்ணுடா”

அப்பா போனதில் இருந்து இதையே சொல்லிக் கொண்டிருக்கிறாள். தம்பியைப் படிக்க அனுப்பினேன்.

“நானும் படிக்கப் போனால் குடும்பத்தை ஆரம்மா பாக்கிறது. படிக்கிறதுக்கு உதவி கிடைச்சாலும் நாளாந்த செலவுக்கு நான்தானே உழைக்கவேணும்”

“பதினெழு வயசு படிக்கிற வயசடா. நீயும் படிக்கவேணும் எண்டு அப்பா ஆசைப்பட்டாரே.. படிக்கிற வயசில எந்த வேலைக்குப் போவாய். அப்பா மாதிரி கூலி வேலைக்குத்தான் போகவேணும். வேண்டாமடா அப்பா ஏமாந்ததும் துன்பப்பட்டதும் போதும் நீ படிக்கப் போடா” அம்மா கெஞ்சினாள்.

வருமானம் இல்லாமல் எப்படிப் படிக்கமுடியும். அப்பாவின் இடத்திலிருந்து இனி இவர்களை நான்தானே பார்க்கவேணும் அப்பா இருந்திருந்தால் இந்த நிலைமை வருமா. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன் அன்று நடந்ததை இன்றும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

மேலும் படிக்க ...

ஓவியர் வினுவின் பொன்னியின் செல்வன் ஓவியங்கள் சில! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
இலக்கியம்
04 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. அண்ணலும் நோக்கினாள்! அவளும் நோக்கினாள்!

வந்தியத்தேவன், குந்தவைப்பிராட்டியார் & பெரிய பழுவேட்டரையர். ஓவியர் வினுவின் கைவண்ணம். வந்தியத்தேவன், குந்தவை இருவரும் ஒருவரை ஒருவர் உற்று நோக்குவதாக வரைந்திருக்கும் ஓவியர் வினுவின் ஓவியத்திலிருக்கும் உயிர்த்துடிப்பு அனைவரையும் கவருமொன்று. 'கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள்' என்னும் கம்பரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

'எண்ணரு நலத்தினாள் இணையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.' - கம்பர்

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
03 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

தொடரும் யாழ் நூலக எரிப்பு பற்றிய சர்ச்சை! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
சமூகம்
03 அக்டோபர் 2022
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் என்.செல்வராஜா -

'நூலகர் திருமதி ரூபவதி நடராஜா' என்னும் அக்டோபர் 2022 'தாய்வீடு' பத்திரிகையில் வெளியான தனது கட்டுரையில் எழுத்தாளர் என்.செல்வராஜா பின்வருமாறு கூறுகின்றார்:

'இந்நிலையில் யாழ்ப்பாண நூலகம் 1981 மே மாதம் 31ம் திகதி பின்னிரவில் அரச கூலிப்படையினரால்  தீ வைக்கப்பட்டது. 97 ஆயிரம் புத்தகங்களும்  தளபாடங்களும் ஒரு சில மணி நேரத்தில் எரிந்து தணியக் கூடியவையா என்ன? மே 31 பின்னிரவில் தொடங்கி, ஜூன் மாதம் 1ம் திகதியும் சுற்றாடலில் பிரகடனப்படுத்தப்படாத ஊரடங்கை துப்பாக்கி முனையில் பிறப்பித்து விட்டு, தீயணைப்புப் படையினரையும் நுழையவிடாது ஒட்டுமொத்த நூலகத்தையும் எரித்துச் சாம்பலாக்கிவிட்டே அந்தக் கயவர்கள் அங்கிருந்து விலகிச் சென்றார்கள்.'

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. தொடர் கதை - நவீன விக்கிரமாதித்தன் (2) மாநகரத்து மாமழையும், மனோரஞ்சிதமும்! - வ.ந.கிரிதரன் -
  2. பொன்னியின் செல்வன் : படித்தது அல்ல , பார்த்தது ! தலைமுறை தாண்டியும் பேசப்படும் வரலாற்றுப் புனைவு !! - முருகபூபதி -
  3. பண்ணையில் ஒரு மிருகம் - நூல் விமர்சனம் - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
  4. அறிவித்தல் : தேனருவி ரேடியோ - தகவல் - பிரபா சங்கவி -
  5. முருகபூபதியின் பாரதி தரிசனம் நூல் வெளியீடு. - தகவல் - முருகபூபதி -
  6. தொடர்நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (1) - வ.ந.கிரிதரன் -
  7. 'பொன்னியின் செல்வன்' நாவல் பற்றிய நினைவுக் குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -
  8. கவிதை: வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (7): நாற்பரிமாண ஓவியக் கூறுகள் நாம் கண்ணம்மா! - வ.ந.கிரிதரன் -
  9. வாசிப்பும், யோசிப்பும் 383 - எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் புதல்வர் ராமச்சந்திரன் மறைவு பற்றி எழுத்தாளர் அழகியசிங்கர்! - வ.ந.கிரிதரன் -
  10. சீமான் பத்திநாதனின் மூன்று நாவல்களை முன்வைத்தொரு பார்வை - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
  11. விக்ரமாதித்யன் கவிதைகள் - சித்திரவீதிக்காரன் -
  12. கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரனின் இறுதி அஞ்சலி! - வ.ந.கிரிதரன் -
  13. ஆய்வு: கவிஞர் மு. மேத்தா கவிதைகளில் பெண்களின் சிக்கல் - முனைவா் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, மஜ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூா் 635 802, திருப்பத்தூா் மாவட்டம் -
  14. நினைவுகளின் தடத்தில் - (25 & 26) - வெங்கட் சாமிநாதன் -
பக்கம் 64 / 104
  • முதல்
  • முந்தைய
  • 59
  • 60
  • 61
  • 62
  • 63
  • 64
  • 65
  • 66
  • 67
  • 68
  • அடுத்த
  • கடைசி