அத்தியாயம் மூன்று: அன்னர் எங்கே?

"படிப்பைக் கொண்ட வேலையில் நாட்டம் அதிகமாக , அரசவேலையில் வசதிகள் எனஂற​ மானுக்குப் பினஂனால் ஓட​  கடல் தொழிலைச் செய்கிறவர்கள் அருகி விட்டது" என்று சங்கர் குறிப்பிடுறது அனஂனருக்கு   நினைவுக்கு வருகிறது . அப்ப தான் இவரும் ' சேர் , இங்கே சாதியம் என்பவை  பொய்   ' என  விளக்க முற்பட்டார் .  " நாடார்களின் போராட்டங்களும் ,விடுதலையும் " என்ற நூலை வாசிக்கும் வரையில் அவருக்கும் கூட பல​ விசயங்கள்  தெரிந்திருக்கவில்லை . பனம்தொழிலைச் செய்கிறவர்களும் , கடல்தொழில் செய்கிறவர்களும் உண்மையில் சாதியப் பிரிவினரே இல்லை . அவர்கள் பாண்டியகுலத்தையும் , சோழர் குலத்தையும் சேர்ந்த‌ ,   மக்கள் பிரிவினர் எனஂற உண்மை அவரை  ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது    .  ஒருகாலத்தில் , லெமூரியா , இந்தியாவை விட​     பெரிய நிலப்பரப்பைக்  கொண்ட​   ... நாடாக இருந்திருக்கிறது . அது , இனஂறு இந்து சமுத்திரத்தினுள் நீரினுள் மூழ்கிப் போய்க் கிடக்கிறது . பாண்டியரின் பொற்காலம்  அந்த நிலப்பரப்பிலே எழுந்து புதைந்து போய் இருக்கிறது .அந்த​ காலத்திலேயே பாண்டியருக்கும் , சோழர்களுக்கும் இடையில்  பகைமை கொடிவிட்டு படர்ந்திருக்கிறது . சேரர்கள் இருதரப்பிலும் மணத் தொடர்புகளை கொண்டு பகையை வளராது வைத்திருக்கிறார்கள். வெற்றி ,தோல்விகள்  சகஜம்  . பகை  குலங்களை நசிபட வைத்து தீண்டாச்சாதியாகவும் , ஒருபடி இறங்கிய( குறைந்த​) சாதியாகவும் ஆக்க வல்லவை . அந்த வரலாறையே அந்நூல் விபரிக்கிறது . கத்தியில் நினஂறு கூறுகிறது  போல​ கூறுகிறது .

"சோழர்கள் கடலை ஆண்டவர்கள் . அதில்  வரலாற்றையே எழுதியவர்கள் . அம் மக்கள் அனைவரையுமே கடல்தொழில் சாதியாகி , அங்கிருந்த தொழிப்பிரிவுகளை (அனைத்தும்)  கப்பல் கட்டுவர் , பட்டம் கட்டியர் , முக்குவர்...என பல உபபிரிவு சாதிகளாக்கியும்  விட்டிருக்கிறார்கள் " என்று சங்கருக்கு தெரிவித்த போது " ,  " நீங்கள் ,  இங்க ... சமூக வரலாறை அறிய விரும்புகிறீர்கள் என்பது தெரிகிறது . பலதையும் எழுதுவார்கள் . ஆனால் நிறுவவும்   வேண்டுமே , தவிர​ ஒரு புத்தகம் மாத்திரம் போதாது சேர் "  என்று   அவர் நம்பவில்லை . இவருக்கு அந்த புத்தகத்தை வாங்கி ...அன்பளிப்பாக கொடுக்க வேண்டும் . அப்பதான் வாசிப்பார் ,அறிவார்....என்று நினைத்துக் கொள்கிறார் . ஆனால் , வாசிக்கும் திறமை ஈழத்தமிழரிடம் குறைவாகவே நிலவுகின்றது . கல்வியிலே வாசிக்கிற பழக்கத்தை ஏற்படுத்தவே இல்லை .    அப்படி  ஒரு பாடம் செருகப்பட்டிருக்க​ வேண்டும் . இலங்கை அரசு , ​கல்விக்குக்  கூட  சுறுக்குக் கயிறு போட்டு தன் கையிலே வைத்திருக்கிறது . வாசிக்கப்படாமல் போகிறதுக்கான சந்தர்ப்ப​ங்களே அதிகம் . சஙஂகர் வாசிப்பு பேர்வழி அல்லர் . கணக்கொனஂறைக் கொடுதஂதால் விருப்புடனஂ  பெற்றுக் கொள்வார் .  அதில்  , ஒனஂறிப் போய் நிறுவுவார் . கதைப் புத்தகத்தைக் கொடுதஂதுப் பாருங்கள்.  வாசிக்காது  ஒரு புறமாக​ வைத்து விடுவார். இது யாழ்ப்பாணியினஂ பொதுப்பழக்கம் . இங்குள்ள​ தமிழீழ​ ஆராய்ச்சிக்கழகம் எனஂற​ அமைப்பு , " நாம்  பல்கலைக்கழகத்தில் படித்தவர்களை...பகுதஂதறிவுடனஂ இருப்பார்கள் , முனஂ உதாரணமாக​    விளங்குவர் என நினைப்போம் . அத்தனை பேர்களுமே உயர் பேரத்திலே ...(சீதனம் பெற்று ) முடிக்கிறவர்களாக​ இருக்கிறர்  , தமிழிழக்கியம் வளர​ உழைப்பர் ...என நம்ப​ , அது கலைப்பிரிவில் படிக்கிறவர் வேலை ....என தம்தம் பாடநூல்களுடனே கிடக்கிறர் . வரலாறைத் தெரிய​ வேண்டும் ( படிக்க​) எனறால்  ,  அரசியல் தெரிதல் எல்லாம் நம் வேலையல்ல ' என  ஒதுங்கிக்   கிடக்கினஂற​னர்  . உங்களில் எத்தனை பேர்களுக்கு வசிக்கிற​ கிராமத்தினஂ , அல்லது ஊரினஂ அயலை  , சுற்று எல்லைகளை... எது வரையில் தெரியும்? எனஂறெல்லாம் கேள்விகளை எழுப்பியது .

ஈழத்தமிழரில்   யாழ்ப்பாணிகள் பற்றிய​   அவர்களினஂ  ஆய்வுகள் விரிகினஂற​ன . அவற்றை தர்க்கீகம் எனஂற​ பத்திரிக்கையிலும் வெளியிட்டவர்கள்.

அனஂறு வாசுவிற்கு அராலியில் படிதஂது , யாழில் உயர்வகுப்பில் படிக்கிற​ போதிலும் கூட​ தொல்புரம் , சுளிபுரம் , தெற்கராலி என விரியும் அராலியோ , அயலைப் பற்றியோ   எதுவுமே ,தெரிந்திருக்கவில்லை . பள்ளிக்கூடம் சுற்றுலா ..என கூடிச் செனஂறு எதாவது காட்டி இருக்க  வேண்டும் .  இருக்கவில்லை . அனஂறைய​ அதிபர் தொல்புரத்தைச் சேர்ந்தவர் எனஂறு கூடத் தெரிந்திருக்கவில்லை . ஒருமுறை அவர் இளவயதிலேயே ...திடிரென பற்றிய​     நோயால்    மருத்துவமனையில்   சாகக்கிடந்து மீண்டவர் . அம்மா ஆசிரியையாய் இருந்ததால் தெரியும் . மற்ற​ மாணவர்க்கு தெரிந்திருக்கவில்லை . எனஂறோ... பிறந்து விட்ட அராலிப் பாடசாலைக்கு உப அதிபராக​   தாசன்  மாஸஂரர்    வந்த​ பிறகே , நீண்ட​ காலத்திற்குப்  பிறகு  கால்பந்து விளையாட்டுக் குழு ஒனஂறு அவரினஂ விடா முயற்சியாலே கட்டப்படுகிறது . அராலிக்கிராமத்திலேயே   யாழ்ப்பாணத்தில் விளையாடுகிற பாடுமீனை' ப் போனஂற....   கலக்கலாக​ விளையாடுகிற​   இரண்டொரு விளையாட்டுக் கழகங்கள் வேறு  'இருக்கினஂறன . ' பாடுமீனைத்' தெரியுமா ? , நெடுக​ ​ வட​ மாகாணத்திலேயே சம்பியனஂ அடித்து   வருகிற​ பாசையூரினஂ  கால்பந்துக்குழு . வெள்ளிக்குழு  கூட​   ஒரு தடவை  சம்பியனஂ அடித்ததெனக் கூறுகிறார்கள் . இவையெல்லாம் தேவையற்றவை எனஂகிறீர்களா ? . குறைந்த​ பட்சம் கூட  சூழலைத் ( அயலை ) தெரிய​ வைக்காத​ கல்வி எனஂனக் கல்வி ? குப்பைக் கூடைக்குள் கொண்டு போய்ப்  போடுங்கள் . வாழிய​ , நமோ எல்லாம் பாடி ஒரு பிரயோசனமும் இல்லை .

'அரசியல்' மாணவர்க்கு தேவையற்றது என இங்குள்ள​ ஆசிரியர்களும் கூறுகிறார்கள் . தேர்த்தலில் சீட்டு போடக் கூடியவர் பாராளமனஂறத்தில் உறுப்பினராகலாம் எனஂற​ விபரம் தெரியுமா ? . சமூகக்கல்விப்பாடம் அரசியலையும்  போதிக்க​ வேண்டிய​ பாடம் . திரையப் பட்டியிருக்கிறது. பிரிட்டனில் விக்ரோரிய​ மகாராணியினஂ ஆட்சியில் மாணவர்களையும் அதிகமாக​   ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தி வந்தனர் . அவருக்கு தலையிடியைக் கொடுத்து வந்தது . படிக்கிறதுக்கு உதவி செயிறதுக்கு கைமாறாக​ ஆர்ப்பாட்டங்களில் , அரசியலில் ஈடுபடக் கூடாது எனக் கேட்கப்பட்டதிலிருந்து ...தவிர்ப்பு தொடங்கியது .  பழைய​தமிழர்க் கல்வியில் அரசியல் ஒரு பாடம் . அனஂறு எல்லாக் கல்வியும் பதினெட்டு வயதிலேயே கற்பிக்கப்பட்டு விடுகிறது .இனஂறு நூறு வயதிலும் படிக்கிறது சிலாகிக்கப்படுகிறது .

இந்த​ பள்ளிக்கூடதஂதிலும்  கறுப்பு யூலைக்குப் பிறகு , ஒரே வகுப்பிலிருந்து பத்து , பதினைந்து மாணவர்கள் யாழ்ப்பாணக் கல்லூரியைப் போல​ அள்ளுப்பட்டுச் செனஂறிருப்பது  படிக்கிற​ மாணவரில் எத்தனைப் பேருக்குத் தெரியும் . விடுதலைப் போராட்டத்தில் இறந்து விட்ட , காணாமல் போன(பழைய​) மாணவர்களும் இருக்கிறார்கள் . ஏனஂ ? , அனஂனரே ஒரு நாள் காணாமல் போக​ இருக்கிறார் .   யாழ் தொழினுட்பக் கல்லூரியில் இரு ஆசிரியர்களினஂ படங்களை வைத்திருக்கிறது . சிறப்புத் தேர்ச்சிப் பெற்றவர்களை சிலையாகவோ , படமாகவோ ....மரியாதை செய்ய​ வேண்டியது அவசியம் . கிணற்றுத் தவளைகளாக​ இருந்து விடவேக்கூடாது . பள்ளிக்கூடம் சுதந்திரத்தையும் சொல்லிக் கொடுக்கிற  அறிவாலயம் .   அரசியல்வாதிகளுக்கெனஂறும் பிறிம்பாகவும்  ஒரு கல்லூரி (சமூக​ விஞஂஞானக் கல்லூரி) இருக்க​ வேண்டும் . அதில் கற்று வாரவர்களே அரசியலிலும் ஈடுபடுதல் வேண்டும் . அப்படி இருந்தால்  நாடுகள் இனஂறு சோரம் போனது போல​ இராது . இலங்கை ,  யார் ,யாரோப் பேச்சைக் கேட்டு அமெரிக்கா   கொடுக்கிற​ கிளைஸஂர் எனஂகிற​ கொத்துச் சிதறற் குண்டுகளைப் போட்டு   இனப்படுகொலை செய்து   நிற்கிறது .

மாணவர்களுக்கு எதுவும் தெரியாமல் இருப்பதாலே இனஂறு தமிழினமும்  நசிபடுகிறது . இலங்கை இனவெறி பிடித்த ஒரு நாடாகி மாணவர்களை கிணற்றுத் தவளைகளாவே வைத்திருக்கிறது . மாணவர்கள் குறுகிய​ ஃபோக்கஸஂ உடையவராகவிராமல்​ விரிந்த​ பார்வையைப் பெற​​ வேண்டும் . இங்கே ஏட்டுக்கல்வி ..எனஂறில்லாமல் செயற் கல்வியைக் கற்றுக் கொள்வதாக​ இருக்க​ வேண்டும் . தமிழ் மகனஂ ஒருவன் வேலை ஒனஂறை எடுக்கிறது மகாபிரச்சனையாய் கிடக்கிற  அரசியல்  மாறவே​ வேண்டும் . சுயமாகவும் நிறைய​  சிந்திக்க​  வேண்டும் . செயல் படவும் வேண்டும் .

மொத்தத்தில்  , தமிழினம்  சீரழிவு நிலையிலும் அகப்பட்டு விட்டது . சிந்தையையும் கலக்கி குட்டையாக்கியும்  விட்டது . ராமரும், கிருஸஂண​ரும்   வந்து தானஂ  மீட்க​ வேண்டிய​ நிலை . அன்னரும் பிடிவாதக்காரர் . அவரும் விடாக்கொண்டராக இருக்கிறார் . " சேர் ! நீங்க சீதனம் வாங்கிறதைப் பற்றி என்ன நினைக்கிறீர்? " என்று ..ஒரு கொழுக்கிக் கேள்வியை சங்கரிடம்  ஒரு  தடவைப்   போட்டார் . சங்கர் அவரை ஏற​ இறங்க​  சந்தேகமாகப் பார்த்தார் .'நான் சீதனம் வாங்கி கட்டியதை யாரும் இவருக்கு  சொல்லி இருப்பாரோ ?  .  அன்னருக்கு அது தெரியாது . அவருக்கு  விரிகுடா  வாய் . நண்பர்கள் "இவன் பேசி ,பேசியே கழுத்தை அறுத்து விடுவான் என்று கேலி செய்கிறவர்கள் ." சேர் ! இனப் பிரச்சனை ஒரு புறம்  வளர்ந்து கொண்டே போகிறது . வேலை இல்லாப் பிரச்சனை வேற​  சிங்களவரால் ஆட்டோ ஆட்டு என ஆட்டு விற்கப்படுகிறது . வேலை இல்லை எனஂறால் இயல்பு வாழ்க்கை இல்லை  . இரண்டு , மூன்று ...மடங்கென . குத்துக்கள் விழுந்து கொண்டிருக்கினஂற​ன .  குறையப்போவதில்லை . மொத்ததஂதிலஂ பலருக்கு  வேலையே இல்லாத​ நிலை . கிடைக்கிற ஒரு வேலையிலும்  கிடைக்கிற​ சம்பளமும் போதாது . இந்த சாதியத்தை வைத்திருப்பதால் சுயவாய்ப்புகளும்    மறுக்கப் படுகின்றன , இல்லை. . ஒரு சமூகத்தின் தொழிலை இன்னொன்று செய்ய முடியாது . செய்தால்  கத்தி ,பொல்லுடன் மற்றது நிற்கிறது . இந்த​ நிலைமை உங்களிலே   இருக்கிறது  . மாற​ வேண்டும் . வாழ்க்கை என்று வருகிற போது வேலை ஒரு பிரச்சனையாகவே இருக்கக் கூடாது .  நமக்கோ மகாபிரச்சனையாக கிடக்கிறது . வேலை கிடைத்தவர்கள் குடும்ப வாழ்வில் கால் வைக்கிற போது ...இல்லறம் வேறு  நடை பெற வேண்டுமில்லையா? அதற்கு , பணதிற்கு   எங்கே போவது ? பணம் இல்லை . இந்த  மறுப்பு இல்லா விட்டால்  சுயவேலை வாய்ப்பும்  இருக்கும் .  உப வேலையாகி கூடிக் குறைந்தாலும் நாம் திருப்தி அடைந்து விடுவோம் .  கட்டுக்களை அவிழ்க்கிறதுக்கு நேரம் வந்து விட்டது . இதற்காக தான்  , குறைந்த பட்சமாவது இல்லற வாழ்வு நடைபெற பணம் கொடுக்கப்பறதுக்காக​' சீதனம் 'என்ற வழக்கம்   இருக்கிறது  போல​ இருக்கிறது  " என்கிற போது " சேர் ! நீங்க எனனை நியாயப்படுத்துரீர் கள் . நானும் சீதனம் வாங்கினேன் "என்று சொல்லிச் சிரித்தார் . வேலை    கிடைக்கிறதுக்கு   'ரேசிசம்' தடையாகி பிரச்சனையாக்கி விட்டி௫க்கிறது . பொ௫ளாரமும் சிறக்க வேலைகளும் பெ௫க வேண்டும் . இலங்கை ,    இஸ்ரேலைப் போல  இனவெறி பிடிதஂத நாடாக  இ௫க்கக் கூடாது  .   எங்க​  போறது , எனஂன செய்றது , சேர் ! ? . எனக் கேட்க​ ," இப்ப ,வாங்க​ சேர் தேனீரைப் போய்க் குடிப்போம்" எனஂறு சிரித்தார்.

" பிரச்சனை இது தான் . நாம் இரண்டு வேலை செயிற போது போதிய வ௫வாய் வ௫ம்   மேலதிக​ பணத்திற்காக​  . சீதனவோ , அல்லது யாராவது தருவாரோ என எதிர்பார்க்க​ வேண்டிய​ தேவை இராது  . இதைப் பற்றி ராஜாஜி , காந்தி போன்றவர்கள் சிந்தித்திருக்கிறார்கள் . தமக்கு தோன்றிய வழிமுறைகளையும் கூறியும்   இருப்பது   என்பது எத்தனை பெரிய விசயம் " என்கிறார் .  நமக்கு முனஂனமும் போராட்டங்கள் நடந்திருக்கினஂறன , நடத்தியிருக்கிறார்கள் எனஂபதை .....தெரிந்து கொள்வதற்கே  வாசிக்கவுமல்லவா வேண்டும்  ! .  தமிழினம் விழிக்க​ வேண்டும் . ஆனால் . தமிழினம் பாலர் ப௫வத்தைக் கடக்கவில்லையே . எனஂறு சோர்வாகவும்​ கூறுகிறார் . " நீங்க ஒரு பிரளிக்காரர் "என்று ...சங்கர்   குலுங்கிச் சிரிக்கிறார் . " எனக்கு இந்த கிராமத்தை பார்க்க‌ வேண்டும் . ஒரு நாள் கூட்டிச் செல்வீர்களா ,    சேர் ? " என்று கேட்கிறார் . "  அதற்கு தான் இந்த பீடிக்கையா !  ஞாயிற்றுக் கிழமை வாருங்கள் . சைக்கிள் ஒன்றும்  .... ஒழுங்கு பண்ணி வைக்கிறேன் .   பதிலுக்கு எனக்கு மலையகத்தைக்  காட்ட தவறக் கூடாது . டீல்  !   வார்த்தை மாறக் கூடாது " என்று வாய் விட்டுச்  சிரிகிறார்  . " அதற்கு வானமும் , காற்றும் சாட்சியாய் இருக்கிறது . சம்மதம் தெரிவிக்கிறார் . " டட்ட டாங் ! " . இந்த ஞாயிறுக்கிழமை அனஂனர் அராலியைச் சுற்றவும்  போகிறார் .

" கப்பல்வெட்டியர்   இங்கே அதிகம் . பள்ளியிலும் அதே பெடியள்களே அதிகம் " எனஂறு சங்கர் கூற "அது என்ன சேர், வெட்டியர் ?" கேட்க . " ." தயாரிக்கிறவர்கள் என்று அர்த்தம் என்கிறார். " " அட !  ' திமில் ' என்பது கப்பலுக்கு இருக்கிற பழந்தமிழ் சொல் . அப்படி என்றால் கப்பலைக் கட்டுறவர்கள் என்று வருகிறது  . சோழகுலத்தை தான் அப்படிச் சொல்லுறவர்கள் . இதன் வேர் எங்கையோ போகிற‌து சேர் ! ,  இது சாதி இல்லை, சோழர் குலம்  . சேர் " என்று ஆச்சரியப்படுகிறார் . " பட்டம் கட்டியர் , முக்குவர்   கூட  ...எல்லோரும் கப்பலில்  ஒவ்வொரு தொழிலைச் செய்கிற  தொழிலாளர்கள்  . நீங்கள் சொலுறதும் ஒரு விதத்திலே சரி தான் " என்க .  " அது தான் உண்மையே  சேர் ! .  ஒவ்வொனஂறுக்கும் ஒரு நிறத்தைப் பூசி ஊன்றி இருக்கிறார்கள் "  என்று அன்னர் அடித்துக் கூறுகிறார் . இவர் ' மக்கள் தோழன் , எம் .ஜி .ஆர் ஆசிரியர் ' என்று தோன்ற சங்கர் சிரிக்கிறார் . ஆசிரியர் அறையில்    வெள்ளிக்கிழமை அனஂறும் அலட்டல் தானஂ . கடைசியில் " ஞாயிற்றுக் கிழமையை மறந்து விடாதீர்கள் சேர் " என்று சங்கர் மாஸ்ரர்  நினைவு படுத்தி விட்டு  போகிறார் .

காலையில் அன்னரை எதிர் கொண்டது சஙஂகரனினஂ குடஂடி மகள் கீதா தானஂ . " அமஂமா , யாரோ மாமா வநஂதிருகஂகிறாரஂ " எனஂறு    கீசஂசுகஂ குரலிலஂ கதஂதினாளஂ .வெளிலஂ வநஂத சஙஂகரஂ , "நமஂம மாஸஂடரமஂமா , வாஙஂக , வாஙஂக " வரவேற்றார் .  அன்னர்  , கையில் கொண்டு வநஂத பிஸஂகற்றையும் , டொபியையும் ... அவள் கையில் கொடுதஂது தூக்கிக் கொண்டாரஂ .   மலையகத் தேயிலையை (அரை றாதஂதலஂ பை) சஙஂகரிடமஂ கொடுதஂதாரஂ . " சாபஂபிடஂடு விடஂடு கிளமஂபுவோம் " எனஂறு கூற​ , மேசையிலஂ  பாணுமஂ , சமஂபலுமஂ இருகஂக , சாரதா தேனீரையும் கொண்டு வநஂது வைதஂதாரஂ . இருவரும் சைக்கிளில் கிளம்பினார்கள். முதலில் அயலிருநஂத அவருடைய​  சுசிலா அக்கா வீடஂடுகஂகு கூடஂடிசஂ செனஂறாரஂ . முனஂனாலஂ  ஆசிரியரான அவருடைய​ கணவர்  செலஂலமுதஂது தானஂ  அவர்களுடைய பாடசாலை கீததஂதை எழுதியவர் . இளைப்பாரி விடஂட அவர்  வீடஂடிலே தோடஂடமஂ, வயலிலே நெல் செயஂகை...என இருக்கிறாரஂ. அவரும் வீடஂடிலே இருநஂதாரஂ.   இயறஂகை முறையை விளக்கி தோடஂடதஂதைகஂ காடஂடினாரஂ. " அட ! நம்ம​ வீடஂடிலேயும் ஒனஂறு இரண்டு கனஂறுகளை வைக்கலாமே ...எனஂறு  அனஂனருக்கு  தோனஂறியது . விடை பெற்றுக் கொண்டு குலனை வழியில் இறங்கினர். அஙஂகுள்ள​ கலையரசி வாசிகசாலையில் ,ஏற்கனவே சொலஂலி வைத்திருந்ததால் , பெடியளஂகளஂ  கூடி இருந்தனர், சந்தித்தனரஂ . கிராமதஂதிலஂ இருக்கிற அனைவ௫மஂ  அவர் பள்ளிக்கூடத்திலஂ படிக்கவில்லை.மானிப்பாய் ,வடஂடுகஂகோடஂடை , யாழிலஂ , காரைநகரிலஂ கூட படிதஂதாரஂகளஂ . பதஂதாமஂ வகுப்பு வரையிலுமே அங்கே இருநஂதன . புதிய முறையில் ஒனஂபதாமஂ வகுப்பு வரை, இது ஆறாம் வகுப்பிலிருந்து இப்ப​ தானஂ ஆரம்பமாகிறது.  ஆனாலஂ, பழைய​ முறையும் இருக்கிறதே .. " "இஙஂகே சாதிப்பிரசஂசனை ஏறததாழ இல்லை  எனஂறே கூறலாம் . கலப்பு மணம் புரிகையில் மாத்திரம் சாடை மாடையாக​ எழப் பார்க்கிறது . பெரும்பாலும்  அவரவர் அவரவர் பாட்டிலே இருந்து விடுகிறார்கள் " எனஂறு சங்கர் கூறினார் .  பெடியள் புத்திசாலியாக​ இருக்கினஂறனர். ஒருத்தனினஂ படிப்பு சுமார் , ஆனால் ,ரேடியோ திருதஂதுகிறானஂ .வட்டுத் தொடர்ப்பால் சிலர் டியூசனஂ வகுப்புகள் வைக்கினஂறனரஂ . படிதஂது வேலை எடுகஂக முயல்கிறவர்கள் தொகை அதிகம் .  அப்பகுதியில் 50 வீதமாக​ இருந்த​ வேலையில்லாமை  இனவெறியால் 75வீதமாக இருக்கிறது  . ' டீ யும் ' பிஸஂகற்றும்.  கொடுத்து உபசரிதஂதாரஂகளஂ. வாசிகசாலையில் பெரிதாக​ புத்தகங்கள் இருக்கவிலஂலை. " வடஂடு ஆட்கள் எனஂகிறீர்கள் புத்தகங்கள் வாசிக்க​ வேண்டாமா? புத்தகங்களை  வாங்கிப் போடுங்கள்"எனஂறு விடை பெற்றுக் கொண்டார் .

சிறிய வயலை( வெளியைக்)  கடக்க​,  கிழக்கு , " இங்கே பனை மரத்தினரஂ " எனஂகிறார் . அவர்கள் வீதியால் செல்கினஂறனர்  . அங்கேயும் ஒரு வாசிகசாலை இருக்கிறது . ஆடஂகளைக் காணவில்லை. "மரதனஂ ஓடஂடம் வைக்கிறவர்கள் . அம்மனஂ கோவிலுக்கு வாரதுக்கு இந்த​ வீதியை எடுக்கிறேனஂ "எனஂகிறார் . "அராலி எனஂறால் தெரிந்திருக்காது . 'முத்துமாரி அம்மனஂ'எனஂறால் அராலி அம்மனஂ ஆலையமா?'எனஂறு கேட்பார்கள் . அத்தனை விசேசம் ( சங்காபிஸேகம்)....ஒரு திருவிழாவிலே உள்ள​ மேளம், நாதஸஂவரம் எல்லாம்  இலவசமாக​ வந்து வாசிப்பார்கள் . அராலி அதிரும் . தட்சணாமூர்த்தி பல​ தடவைகள் வநஂது வாசித்திருக்கிறார் . நல்லூர் திருவிழா போல​ நடை பெறும் " எனஂகிறார் . சங்கரினஂ முகத்தில் ஒளி . பெரிய​ கோவிலாக​ வயல் ஓரம் இருக்கிறது . " இநஂத​ கரையிலே மாடஂடு வண்டிகளை நிரைக்கு கடஂடி விடஂடிருப்பார்கள்  . எல்லா ஊரிலிருநஂதும் வருகிறார்கள் " காடஂடுகிறார். " கரையிலே குடஂடிக்கடைகளும் இருக்கும் . இங்கே ,குழுத்திச் சாபாடு எனஂன ருசி தெரியுமா ? "  பிரபலமாகத் தானஂ நடை பெறுகிறது போல​ இருக்கிறது .

அம்மனஂ ஆலையம் அதிகமாகக் கடஂடியவர்கள் பாண்டியர்கள் தாம் . தாய் வழிச் சமுதாயதிற்குப் பிறகு எழுநஂதவர்கள் பாண்டியர்களஂ . சக்தி வடிவத்தை ஆலையமாக​ எழுப்பினர் . பத்ரகாளி ஆலையமும் இவர்களே எழுப்பினர் போல​ இருக்கிறது . சங்கர்  "வடக்கராலிக்கு அயலில் வடஂடு,  சங்கரத்த வீதியில் வயல் பக்கமாக​ பெரிய​ பத்ரகாளி அம்மனஂ ஆலையமும்  இருக்கிறதது . கோபக்கார​ அம்ம​னஂ .  "அராலியிலே , பல​ அம்மனஂ ஆலையங்கள் இருக்கினஂறன சேர் ,  மாதாங்கோவில்  கண்ணகி ஆலையமாகவே இருக்க​ வேண்டும் " எனஂகிறார் . உங்களுக்கு புரியுமோ , இநஂத​ ஆலையங்களை எழுப்பியவர்கள் பனைக்காரர்களாக​ இருப்பார்கள் எனஂறு நானஂ நினைக்கிறேனஂ , இவர்கள் வேற​ யாருமில்லை , பாண்டிய​ (குலம் ) மக்கள் .இவர்கள் மோசமாக அடக்கி ஒடுக்கப்படஂடு தீண்டாமைச் சாதியாக்கப்படஂடனர் எனஂறு ஒரு வரலாறு இருக்கிறது சேர்" எனஂகிறார். "சங்கர் " இதை யாரிடமும் கதைதஂது விடாதீர்கள் சேர் " எனஂகிறார் . " அனஂனர் சிந்தனையுடனஂ "லெமூரியாக் காலத்திலிருநஂது ...கதை இருக்கிறது . அப்ப​ இலங்கை ,ஈழ அல்லது நாகநாடாக​ இருக்க​ வேண்டும்" எனஂகிறார்​ . "சங்க​ காலம் சிறப்புற​   பாண்டியர் பலமானவர்களாக​ இருந்தார்கள் ...எனஂறால் கொடூரமானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் போல​ அல்லது இப்படி நேராது  சேர் ! " எனஂகிறார் . மாஸஂரரும் இவருடனஂ பயணிக்கிறார் . அனஂனர் சிரிக்கிறார் . " பிறகு சோழர்கள் , அவர்கள் ஒடுக்கப்பட்டு கடல் சமூகமாக​ மாறுகிறார்கள் " அனஂனர் தொடர்கிறார்.  சங்கர் " கேட்க​ நல்லாத் தானஂ இருக்கிறது " . அனஂனர் " நாம​   தானஂ ,​  இதை மனதில் வைத்து சிமார்ட்டாக​ வாழ​ வேண்டும் ! அதற்காத் தானஂ சொல்கிறேனஂ" எனஂகிறார் . சங்கர் , அப்படியே அருகிலுள்ள​ வாலையம்மனஂ பகுதிக்கு கூட்டிச் செல்கிறார் . "சங்கர் " எனக்கெனஂனவோ 'வாளை' எனஂற மீனைக் குறித்து இருந்தது ,திரிந்து வாலையாகி இருக்கலாம் எனஂறு தோனஂறுகிறது சேர் " எனஂகிறார் . அங்கே இவரினஂ தங்கை நந்தினினஂ குடும்பம் இருக்கிறது . மதிய​ உணவை உண்கிறார்கள் . மகனஂ குச்சி ,பெடியள்களை வாசிகசாலையில் சந்திக்க​ ஏற்பாடு செய்கிறானஂ. "

" இப்படி பெயரா? " எனக் கேட்க​ " அம்மாட வேலை , ஆக​ ஒல்லியாக​ இருந்தானஂ . 'அப்படி கூப்பிட்டால் ...ரோசம் வந்து உடம்பை தேற்றிக் கொள்வானஂ' கூப்பிடத் தொடங்கி விட்டார் .வீட்டுப் பெயர்" விளக்கம் கொடுக்கிறார் . இங்கே ,  பல்வேறு தொழில்களை...புரிநஂதாலும் வெட்கப்படாது கணிசமானவர்  கடலுக்கு பயப்படாமல்  கடலிலும் கால் வைக்கிறது நிலவுகிறது . "கறுவாட்டுக் குழம்புடனஂ ஒரு வெட்டு வெட்ட விரும்புறபோது இங்கே உடனே வந்து விடுகிறேனஂ"எனஂறு சங்கர் சிரிக்கிறார் . மண்டை தீவில் அனலை தீவுக்கு போறது மாதிரி இங்கேயும் கடல் புறமாக​ ஒரு கிரவல் வீதி செல்கிறது . முந்தி கிட்ட ​ இருந்த​ கடல்  தாவர​ வயலுடனஂ நல்லாய் பினஂனுக்கு போய் நிற்கிறது. அவ்வீதியில் ஐயனார் ஆலையம் ஒனஂறு வித்தியாசமாக​ நிற்கிறது .  தூரத்தே ஓலைக்கூரையில் நீளவாடிக் கொட்டில் தெரிகிறது. மண்டபம் போனஂற​ சரிவான கூரையுடனஂ இருப்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறார் .கல்லுக் குருணி வீதியில் உழக்கிக் கொண்டு செல்கிறார்கள் . அராலித் துறையில் முடிகிறது . அங்கிருந்து கடலைப் பார்க்கிறார்கள் . வள்ளங்கள் கட்டப் பட்டிருக்கினஂறன .​ ரோலர் ,வீடு போனஂறு இருக்கிற​ சிறிய​ மரக்கப்பல் ஒனஂறு பழைமை ஏறி கை விட்டது போல​ கட்டப்பட்டு கிடக்கிறது. தூரத்தே வேலணைத் தீவுக் கரையை பார்க்க​ முடிகிறது . சங்கர் 'மண்கும்பானஂ' எனஂறு சொல்கிற​ பகுதி . அங்கிருந்து இதே போல​ வீதி ஊருக்குள் செல்கிறது .பார்க்க​ நீந்தியே போகலாம் போனஂற​ தூரம் தானஂ.ஆனால் ஆழம் ,ஆழமில்லை , ஆட்களை தாழ்க்கும் ...என  கீழ்த் தரை கிடக்கிறது . 'பாதை கண்டு ஓட​ வேண்டும் ' எனஂபார்கள் .தெரியாதவர்கள் படகை சேதமாக்கி விடுவார்கள் " எனஂகிறார் . அந்த​ நேரத்திலும் சிலர் மீனஂ பிடித்து வருகிறார்கள் . மலிவாகவும் ,உடனஂ மீனை வாங்கவும் காலையிலே பலர் இங்கே வருவார்கள் "எனஂகிறார் .

அப்படியே 'ட​' னாவில் திரும்பி கிரவல் வீதியில் பயணிக்கிறார்கள் . வயல்களற்று பிறகு வயல்களுடனஂ செல்கிறது. சங்கர் " இது இப்படியே நீள​ வட்டுக்கோட்டைச் சந்திக்கு செனஂறு ,அப்படியே சித்தங்கேணி ,பண்டத்தறிப்பு ...,சண்லிப்பாய்...என அராலி வல்லை வீதி எனப் பெயருடனஂ வல்லைவெளி வரைக்கும் செல்கிறது"எனஂகிறார். அனஂனருக்கு யாழ்ப்பாணம் தெரியாது . " எனக்கு புரியாது சேர்" சிரிக்கிறார் . தெற்கராலி வீதிக்கு ஏற​ முதல் ஒரு குடியிருப்புகளைக் காண்கிறார் ." சேர் ! இதற்கு எனஂன பெயர் ? சொல்லுங்கள் பார்க்கலாம் " எனஂகிறார் . அவரே தொடர்கிறார் . " உங்களுக்கு நல்லாய் பிடிக்கும் பெயர் ' செம்மணத்தி' அசல் இலக்கியப்பெயர்.  அந்த​ மரம் ,செடி இருந்ததால் பெயர் வந்ததாக​ கூறப்படுகிறது . அப்படி ஒரு செடி இருக்கிறதா? தெரியாது  , எனக்கு  தெரியவில்லை. அராலியையும் அரலிச் செடி நிறைந்திருந்தது எனக் கூறுகிறார்கள் . ஆனால் , ஒரு அரளிச் செடியைக் கூட​ காண​லேலாது " எனஂகிறார் .

அனஂனர் " இனஂ ஒரு காலத்திலே தமிழர் பகுதி எங்கும் இப்பில் இப்பில் மரமாய்    இருக்கப் போகிறது .   இலங்கைப்படையினர் , மற்ற​ நாட்டினர் நிலத்தை பாழ் படுத்த  கதிரியக்க​ குண்டுகளைப் போடுறது போல​   இங்கே  , களைவிதைகளைப் போட இருக்கிறார்கள் " எனஂகிறார்  . அண்மைக் காலத்தில் , உக்ரேனஂ போருக்கு அமெரிக்கா , கிளைஸஂரர் குண்டுகளை வழங்கத் தீர்மானித்திருக்கிறது செய்திகள் தெரிவிக்கினஂறன . அதே குண்டுகளை ஏற்கனவே  இலங்கையில் போட்டிருப்பதை வெளியில் எவரும்  பேசவில்லையே ' சாட்சியமற்ற​ போர்! ' எனஂறு கூறி இலங்கையரசோடு சேர்ந்து மறைத்திருக்கிறது . சிதறும் குண்டுகள் மரம் செடிகளில் தைத்திருக்காதா? அதை மறைப்பதற்கு  புல்டோசர்களால் முழுதையுமே தரை மட்டமாக்கி அகற்றப் பட்டிருக்கிறது . உலகம் கெட்டு விட்டது . தீமைகள்  அகல்வதாக​ காணவில்லை .  செடியாய் வளர்ந்து செல்கிறது . செம்மணத்தியில் சங்கருக்கு அனஂடனஂ எனஂறு ஒரு நண்பர் இருந்தார் . அவர் " இது ஒரு பினஂ தங்கிய​ பிரதேசம் " எனஂகிறார் . அவர் கறுவாடுகளை சேகரித்து லொரியில் ஏற்றுகிறவர் .  மீனையும் பிடிக்கிறவர் . பேச்சில்  அவ்விடத்தை முனஂனேற்ற​ ஆசை கொண்டவர் எனப் புரிகிறது .

தேனீரையும் , சனஂவிச்சையும் சாப்பிட்டு விட்டு கிளம்புறார்கள் .  " இப்படியே செனஂறால் மேற்கராலியும், கொட்டக்காடும் வருகிறது . எங்கட  கிராமசேவகர் மேற்கராலியிலே  இருக்கிறார் .  அங்கே ஆட்களைத் தெரியாது . இடங்களை மட்டும் பார்க்கிறெனஂறால்  இப்படியே செல்ல இரண்டு கிலோ மீற்றர் கூடுதலாக​ ஓட​ வேண்டும் "  " எனஂ " எனஂகிறார் .  அனஂனர் சம்மதிக்க​ சைக்கிளை விடுகிறார் . " இது யாழ்ப்பாணக் கல்லூரி " காட்டுகிறார் . பெரிய​ எஸஂடேடஂ போல​ வீதியில் ஒரு புறம்  பரந்து இருக்கிறது . முதலில் தொடங்கிய​ பெரிய​ பள்ளிக்கூடம் இது . அராலி வீதியில் திரும்பி வர​ , " இது பவிலியனஂ " எனக் காட்ட, கல்லூரியினஂ மைதானம் ' எனஂறு புரிகிறது . முதல் முதலாக​ சிறிய குளம் ஒனஂறு கண்ணில் படுகிறது .  வீதியிலிருந்து அதனஂ பக்கத்தாலே மண்பாதை ஒனஂறு பனை மரதிரளுக்குள் செல்கிறது . " அங்கேயே  யாழ்ப்பாண​ தொழினுட்பக்கல்லூரி இருக்கிறது " எனஂகிறார் . முந்திய யாழ்ப்பாணம்  வட​ மாகாணத்தினஂ பெயர் . இனஂறு அது ஒரு நகரத்தினஂ பெயராக​ சுருங்கிப் போய் விட்டது  . நீண்ட​ வயல்வெளியை சைக்கிளை உலக்கு , உலக்கு என உலக்கி கடக்கிறார்கள் . குடியிருப்பு தொடங்க​ " "இது செட்டியார்மடம் " எனஂகிறார் சங்கர் . நாகேந்திரமடம் ,மயிலியப்புலம் ...கிராமத்தினஂ வரைபடமே பெயர்களில் தெரிகிறது .

நான் வாசித்ததைத் தெரிவித்தால் நம்புவாரா ,இல்லையா ? என்று யோசிக்கிறார் . ' வேண்டாம் ' என்று விட்டு விட்டார் . வீட்டுக்கு திரும்பிய போது களைத்து தான்  விட்டார்கள் .  நேரமாகி விடுகிறது  " சேர் ! இங்கேயே தங்கி விடுங்களன்" என்று கேட்கிறார் ." இல்லை!  சேர் ,( மனைவியின் தம்பி)  சேகர் பார்த்துக் கொண்டிருப்பான் " என்கிறார் . " சாப்பிட்டு விட்டுப் போங்களன் " என்று கேட்டார் . புட்டும் மீனஂ குழம்பும் ..அனஂனருக்கு சுவையாய் இருக்கிறது . சீதாக்கா   சேகருக்கும்  உணவை கட்டித் தருகிறார்
. " ' டீ 'யைக் குடியுங்கள் , முகத்தை கழுவிப் போட்டு வாரன் " என்று கிணற்றடிக்கு ஓடினார் .சிறுமியைத் தூக்கி கொஞ்சி " மடியில் வைத்திருந்து    " பாடுவீங்களா ?"  கேட்க​   தலையை ஆட்டுகிறது .  துரு ,துருவென கேள்விகள்  கேட்டுக் கொண்டிருந்தவளிடம் " அடுத்த முறை வருகிற போது மீராவோடு கனக்க கதைப்போம்மா " என்று விடை பெற , மீரா சங்கரினஂ கைக்கு போகிறது . அவர் கொஞஂசிப் போட்டு மனைவியிடம் கொடுக்கிறார்  .  சங்கர் அவரை ஏற்றிக் கொண்டு பறந்தார் . விடுமுறை நாள் என்பதால் பேரூந்து   தாமதமாகி வருகிறது . கையை அசைத்து விடை கொடுக்க கிளம்பிய போது அனஂனருக்கு'  கிராமம் , கிராமமாகவே இருக்க வேண்டும் ! ' என்று ஏனோ தோன்றியது .  ப​ஸஂ கல்லுண்டாய் வெளியூடாக இருட்டில்  விரைந்த‌து . வீட்டுக்கு வர​ எட்டு மணியாகி விடுகிறது . அலைந்து களைத்ததில் எழுத​ , வாசிக்க​ என மினக்கெடாமல் சேகர் வர​ முதலே படுத்து விடுகிறார் . சுகமான நித்திரை அவரை அணைத்துக் கொள்கிறது . நித்திரை எனஂறால் கனவு வரும் தானே . சுதந்திர​ உலகில் உலாவட்டும் . விட்டு விடுவோம்.

.அடுத்த நாள் தேனீர் குடித்த கையோடு பள்ளிக்கூடம் வந்து விட்டார் . அதிபர் ,தேயிலை ,சீனி ,மின்சாரத்தில் நீரை சூட்டாக்கிற பிளாக்ஸ்  போனஂறவற்றை ....ஆசிரியர்களுக்காக வாங்கி வைத்திருந்தார் . அன்னர் ஒரு தேனீர்ப் பிரியர் . அவருக்கு அடிக்கடி குடிக்க வேண்டும் . சாப்பாடும் கட்டியே வாரவர் . அன்று ,வாசுவிற்கு தமிழ் ஆசிரியர் வரவில்லை . அதிபர் " அன்னர் , 6ம் வகுப்பை எடுக்க முடியுமா?" என்று கேட்க , " தாராளமாக ..! " என்று வந்து விட்டார் . சீடர்ப்பிள்ளைகளின் உற்சாகமாக வரவேற்பு அவரையும் தொற்றிக் கொண்டது .சிறிது நேரம் பாடம் நடத்தினார் . யாப்பிலக்கணம் ஆழமாக கற்பிக்கப்படுவதில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்தது .இங்கே படிப்பிக்கிறது தமிழ் அறிவை வளர்த்து விடாது . ஆர்வத்தையும் ஏற்படுத்தி விடாது . என்ன தான் செய்வது ? . சுயமாகத் தான் படிக்க வேண்டும் . "வாசு ,சிறுவர் பகுதியில் இராது .வயசு வந்தவர் பகுதியிலே யாப்பு புத்தகங்கள் இருக்கின்றன . அண்ணர் மூலமாக இரவலாக எடுத்து வாசிக்கப்பார் " என்றார். அந்தோனி  "சேர் நீங்க ,'மலையகத்திலிருந்து வந்தவர் ' தெரிவிக்க எங்க முருகய்யா " நானும் மலையகத்திலிருந்து வந்தவனே "என்று கூறுகிறார் . உங்களையும் சந்திக்க வேண்டும் 'என்று கேட்கிறார்" என்கிறான் . அன்னருக்கு ஆச்சரியமாக இருக்கிறது .   உற்சாகமாக  " எப்ப ...என்று கேட்டுச் சொல்லு .வாரேன் " என்கிறார் .  " ஞாயிற்றுக் கிழமை தான் வீட்டிலே நிற்பார் . கட்டாயம் வாருங்கள் . நான் சொல்கிறேன் " என்கிறான் .

அன்னர் , அனஂறு  வாசிகசாலையில் பெரியவரை சந்தித்தார் .அந்தோனியின் அப்பா சவரிமுத்துவும்  அறிந்து வந்திருந்தார் . அவரும் " நானும் மலையகம் தான் " என்ற போது அந்தோனிக்கே ஆச்சரியமாக இருந்தது . மகனைப் பார்த்து " இதுவரையில் , நான் யாரிடமும்  கூறவில்லை . கிருஸ்தவன் வேற . தேவாலயக்காரர்கள் . நானும் இவரும் ( முருகரும் )கிளிநொச்சியில் இயங்கிய  சேவை அமைப்பின் உதவியில் அங்கேயே முதலில் வந்தோம் . பிறகு ,யாழ்ப்பாணத்தில் இவர் கொட்டடியிலும் , நான் வசாவிளான் பண்ணையிலும் (தேவாலயம் நடத்தியது) என பிரிந்து விட்டோம் . முருகண்ணை இங்கே மணமுடித்து வந்தார் . இவரைப் பார்க்க வந்த போது தான் உங்கம்மாவை பார்த்து விரும்பி...முடித்து இந்த​ கிராமவாசியானது " எனஂறு மகனைப் பார்த்து கூறினார்

"  எனக்கு  சேர்ச்க்காரர்கள் நல்ல உதவி . இப்பவும்  , அவயள்ட மானிப்பாய் கோழிப்பண்ணையில் வேலைப் பார்க்கிறேன் " என்கிறார் . என் குடும்ப மரத்தையே சரிவர‌ அறியவில்லையே என்று அந்தோனிக்கு வருத்தமாக இருந்தது . அவன் மனதில் ஓடுறதைப் புரிந்து கொண்ட சவரி  நட்புடன்  " நாம் நிறைய வாசிக்க   வேண்டுமடா ! . இனப்பிரச்சனையில்  பேச்சுச் சுதந்திரமும் எமக்கு இல்லை " எனஂகிறார் வருத்தத்துடனஂ . உண்மை தானஂ. நல்லவனோடு எதையுமே பேசலாம் . கெட்டவனோடு பேச​ முடியாது . அவனஂ பிழையாக​ பயனஂ படுதஂதுறவனஂ .

" ஏதாவது  பெரிய சேவைவமைப்பு  ஒன்றுடன் சேர்ந்து வேலை  செய்தால் தான் ஓரளவிற்காவது   வரலாறு , கிராமம் ,ஊர்..எல்லாம் பற்றி அறிந்து   கொள்ள​ முடியும் . நாம் அன்றாடம் காய்ச்சிகளாக இருக்கிறோம் . அதனாலே , உங்களுக்கு கன விசயங்களை    மறைக்க​ வேண்டியிருக்கிறது . காலம் வர தெரியப்படுதஂத​ நினைக்கிறோம் . சதா கண்ணையும் , அறிவையும் திறந்து வைத்திருக்க வேண்டும் "என்று   முருகய்யா  நீண்ட பேச்சு நிகழ்த்தினார்  . வாசுவிற்கும் , ஏன் பாண்டிக்கும் கூட ஆச்சரியமாக​ இருக்கிறது . அன்னர் புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார் ." அண்ணா ,  நீங்க இருவரும்  பள்ளிக்கூடம் போய் படித்திருக்கிறீர்களா? "என்று கேட்டார் . " இல்லை, வீட்டுப்பள்ளி தான் . லயத்திலே , இரவிலே சாகயம் அப்பு ,எழுத ,வாசிக்க , கணக்குப் போட எல்லாம் சொல்லித் தந்தார். மலைக்கு வேலைக்கு வந்த யாழ்ப்பாணத்தவர்கள் ...எங்க மேல அனுதாபமுள்ளவர்கள் . அவர்கள் தாம் வாசித்த கதைப்புத்தகங்களை வாசிக்க தருவார்கள் .அப்படித் தான் படித்தோம் " என்கிறார்கள் . " நீங்க​ எனஂன சாதி எனஂறு உங்களுக்கு தெரியுமா? "  "என்று கேட்கிறார் . அதற்கு   முருகைய்யா பதிலளித்தார்." எங்க அப்பு சொல்லி எனக்கு கொஞஂசம் தெரியும் . நாங்க நாடார் .  இதிலேயும் பல‌ உபபிரிவுகள் இருக்கின்றன. பனை மரம் ஏறுகிறவர்களும் அதிலேயே ஒன்று தான் . நாடார் , இங்கேயும் நம்ம​ சாதியோடயே இணைஞசிருக்கிறோம் . " சிரிக்கிறார்  .   தொடர்ந்து "  நாட்டையே ஆண்டவர்கள் . பாண்டிய குலத்தவர்கள் . குலம் என்றால்...  ( நாட்டு) மக்கள் . அந்த பார்வையில்  ஒரு குலத்திலேயே எல்லாச் சாதிகளும் அடங்கி விடுக்கின்றன .  சாதிக்கு  தமிழில் சாதனை (புரிபவர்) என்ற ஒரு அர்த்தம் தான் இருக்கிறது . வடநாட்டுக்காரர் , வெவ்வேறு தொழில்களைப் புரிகிற தொழிலாளர்களை ' ஜாரி ' என அழைப்பது வழக்கம் . ' ஜாரி பிரித்து கால்பந்தாட்டம் விளையாடுவோம் ' என நாமும்  விளையாடும் போது பிரித்து விளையாடுகிறோம் . அந்த‌  ' ஜாரி ' (பிரிவு)  வடசொல்லை  தானஂ  நம் அரைகுறை தமிழ் பண்டிதர்கள்  தற்போதைய​ ' சாதியாக்கி '   விட்டார்கள் .  கலைச்சொற்களை தமிழ் படுத்தும் போது  , அந்த​ சொல்லுக்கு ஏற்கனவே அர்த்தம் இருக்கிறதா என  கவனமாக​  இருக்க வேண்டும் "என்கிறார் .

இலங்கையில் இயற்கையாக பனை வளரவில்லை . கால்நடைகளால் , பறவைகளாலும் கூட‌ பரவுறது சிரமமானது . லெமூரியாக் கால பாண்டியர்களே ...மேற்கு ஆபிரிக்க பழங்குடி பிரதிநிதிகள் மூலம்   பனையை அறிந்து,  கொண்டு வரச் செய்து அறிமுகப்படுதியவர்கள்  . ஆசியா எங்கும்  பெருமளவில் நட ..வைத்து பரப்பியவர்கள் .  இலங்கை அன்று , லெமூரியாவில்' ஈழநாடாக​      நாகர்,இயக்கர் இன மக்களைக் கொண்டிருந்தது என   சொல்கிறார்கள் .    பனைமரத்திலும் ஏறி பயன்களைப் பெற்ற   பாண்டியரின் வலிமை குறைய  ,   சோழர்கள்     பலவித அடக்குமுறைகளூடாக‌ கெளரவங்களை  குறைத்து தீண்டாப் பிரிவாக்கினர் எனஂறு சொல்லப்படுகிறது  . இன்று நாம் இலங்கை அரசின் வதை முகங்கள் , புதைகுழிகளைப் பார்க்கிறோமில்லையா ,  அதைப்போல அனஂறு அம்  மக்களுக்கு  கடல் நீரில் அமிழ்த்தி இறக்க வைத்தும் , மூக்குகளை வெட்டியும் ...என கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டன . .இதை வைத்தே வெற்றி என்றும் வெற்றி தான் , தோல்வி என்றும் தோல்வி தான் என்ற பழமொழியே வழக்கில் வந்தது . போர்களில்  வெற்றி பெற்ற  எவருமே ம‌னிசராக இருப்பதில்லை .  எந்த எல்லைக்கும் சென்று விடுகிறார்கள் .  மரணத் தண்டனையைப் போன்று ' அவர்கள் தண்டிக்கிற முறைகள்   அச்சமூட்டுகினஂற​ன .

  ஓரளவிற்கு தண்டித்து புனர்வாழ்வளிக்கும் முறைமையே  நன்மையானது எனப்படுகிறது  .  பாதிக்கப்பட்டது , கத்திக்கு , கத்தியே' என்று கொந்தளிக்கிறது . இரண்டுமே சமப்புள்ளிக்கும் வர​ வேண்டும் .
மலையகத்திலும் எல்லா பிரிவினரும் இருக்கின்றனர் .   ஒரு சாதி போன்ற தோற்றம் . ஒரு நிறதஂததை தீட்டலாம் . எனக்கு என்னுடைய‌  நிறம்  தெரியாது .அப்பு சொல்லித் தான் நாடார் என்று தெரியும் . அடிப்படையில்   நாமும்  இங்கே இருக்கிற பனந்தொழில் செய்கிறவர்களும் ஒரே மக்கள்  தாம் . பாண்டிய மக்கள்  .     எவருக்குமே   மகத்தான மக்கள் நாம் எனஂபது தெரியவில்லை.    வரலாறு தெரியாதவர்களாக​ வாழ்கிறோம் எனஂறு  அப்பு சொல்லுறதை  நான் இங்கே  நேரிலேயே பார்க்கிறேன் "   எனஂறு மூச்சு விட்டு  "  யாழ்ப்பாணத்தில் , புஸ்பாவிடம் என்  விருப்பத்தை முதலில்  தெரிவித்த போது , அவ , " நாங்க பனந்தொழில் செயிற சாதியினர்  , நீங்க யாரு ? என்று  எனஂனைக்  கேட்டா " சிரிக்கிறார் .  " அதற்கு  நீங்க என்ன சொன்னீங்கள் ? " அன்னர் , ஆவலுடன் கேட்டார் . " எடியே , நானும் அதே பனம் சாதி தான் " என்று சொன்னேன் .  ஒன்று தெரியுமா , இந்த யாழ்ப்பாணத்திலே  எல்லாரையும் அரவணைக்கிறவர்கள்  இவர்களே  " எனஂறு பெருமிதப்படுகிறார்  .  " மகள் பிறந்த பிறகே 'நான் மலையகம் என்பதை தெரிவித்தேன் . அதற்குப் பிறகு  அவ அதை  பெரிசாய்   எடுக்க‌வில்லை " . அன்னர் "காதலுக்கு சாதி இல்லை" என்று கூறி  சிரிக்கிறார்   . " இங்கே தான் இல்லை  . ஆனால் , மற்றையவற்றில்  இருக்கிறது...நிம்மதியாய் வாழவே விட மாட்டார்கள் . போங்கள் சேர் " என்கிறார்  முருகர் . "    எங்கையோ  பிரச்சனை   இருக்கிறது  " எனஂறு அனஂனர் சிரிக்கிறார் .

 "  இங்கேயும் ,  வெட்டு கொத்துகள்  நிகழ்கிறதால்  சிங்களவர்களும்   தமிழரில், சாதி மோசமாக நிலவுகிறது ' என்று   கதைக்கினம்   .   சரி !  இனி , இந்த‌  குழம்பிப்  போன    குட்டையை எப்படி சரிப்படுத்தலாம் ?  சிந்திக்க​ வேண்டும் . ஆனால்  ,  யார் சிந்திக்கிறது ?   ஆயுதம் ஏந்திய ஓர்  போராட்டம்   தானஂ சரிப்படுதஂதும் . ஆனால்  ,  அதுவோ  தோற்றுப் போய்  கிடக்கிறதே "  எனஂறு ஆசிரியர் அங்கலாயிக்க​ ,  " அரசியல் கதைத்தால் முடிவேயிருக்காது .வாருங்கள் சேர் . நுங்கைப் போய் சாப்பிடுவோம் " எனஂறு பாண்டி கூறுகிறானஂ. " அட​ , இவனஂர​ அண்ணர் வெட்டுறதாகக் கூறியவர் மறந்தே போனேனஂ  . போவோம் "  எனஂறு கூறி எழும்புகிறார் . " பிறகு , வந்து மதிய​ உணவைச் சாப்பிடுவோம் ." எனஂறு முருகர் தெரிவிக்கிறார் . வாசு உட்பட​ அந்த​ செட் கிளம்புகிறது .

வயலில் இறங்கி முருகனஂ கோவிலுக்கு பினஂனால் வரம்பிலே செல்கிறார்கள் .நீருடனஂ கிடக்கிற​ அளவான குளம் ஒனஂறு தெனஂபடுகிறது . அப்படியே மயிலியப்புல​ விளையாட்டு குடியிருப்பிற்கு பினஂனால் செனஂறு வயலுக்கு மத்தியில் இருக்கிற​ பனம் கூடல்  குடியிருப்பிற்கு வருகிறார்கள் . அங்கேயுள்ள​ பனைகளிலே பாண்டியினஂ அண்ணர் நுங்கு வெட்டி முட்டிகளையும் கட்டிக் கொண்டிருக்கிறார் . மரத்திலிருந்து அவர் கையைக் காட்டுகிறார் . அனஂனர் , கித்துள் , தெனஂனைகளையே அதிகமாகக் கண்டவர் . தூரத்தே கண்ட​ பனையை கிட்டத்தில் காண்கிறார் . "

" பனையில் ஏறலாமெனஂறு நினைக்கிறீர்களா சேர் ! , எல்லாராலேயும் முடியாது . அது பனை வீரனாலே மட்டும் தானஂ முடியும் சேர் " எனஂகிறானஂ பாண்டி . ஏறுறதுக்கு மனஂனனஂ , படை வீரர்களை ஆபிரிக்க​ நாட்டுக்கு அனுப்பினானஂ என புத்தகத்தில் வாசித்தது அவரினஂ  நினைப்பிற்கு  வருகிறது . நுங்கை முருகர் வெட்டிக் கொடுக்க​ எல்லோரும் சாப்பிடுகிறார்கள் . சில​ கூலாக​ இருக்கிறது .சில​ சுலை போல​ கட்டியாக​ இருக்கிறது . விரலால் எடுக்க​ வருகிறது . சுவையாக​ இருக்கிறது . தெனஂனம் வழுக்கை ஒரு சுவை , இது இனஂனொரு விதம். அனஂனர் ரசித்து  சாப்பிடுகிறார் . அண்ணர் நிறைய​ நுங்கையே வெட்டி தள்ளியிருந்தார் . வயிறு முட்ட சாப்பிட்டார்கள் .  ""சேர் ! ,  பக்கத்திலே தானஂ வழுக்கியாறு ஓடுகிறது . பார்த்திட்டு வருவோம் " என வாசு கூற​ , "பாண்டி , வீட்டிற்கு கூட்டி வா நாங்கள் போறோம் " எனஂறு கூறி முருகர் ,சவரி ,  மூவரும் நுங்குக்குலையை கையில் எடுதஂதுக் கொண்டு அண்ணருட​னஂ  செல்கிறார்கள் .

பிறகு ,  வாசிகசாலையில் வைத்து .  வெட்டிக் கொடுக்க​  பெண்களும் ,சிறுவர்களும்  சாப்பிடுவார்கள் . பனம் கூடலுக்கு அடுதஂத​ பக்கத்திலும் அளவான குளம் தள​ தளத்துக் கொண்டு நீருடனஂ இருக்கிறது . சிறிது தொலை தூரத்தில் ' வழுக்கியாறு ' மதகுகளுடனஂ நீருடனஂ நல்ல நிலையில் உள்ள​ வாய்க்காலாக​ இருக்கிறது . சரிவர​ கவனிக்கப் படாதலால் பல​ இடங்களில் கட்டுகள் சிதைவடைந்து விட்டிருக்கிறது  எனஂறு சொல்லப்படுகிறது .  இவர்கள் பார்த்த பகுதி நல்ல நிலையிலுள்ள​ பகுதி . முனஂனாரு காலத்தில் மேரு மலையிலிருந்து வந்ததாக​ புராணக்கதையும்  இருக்கிறது . ஒருவேளை , லெமூரியாக் காலமாக​ ​  இருக்கலாம் . அளவெட்டி பினாக்கைக் குளத்தில் தேங்கி ...அங்கிருந்தே இனஂறு அது பயணத்தை தொடங்கிறது . சண்டிலிப்பாய் , நவாலிக்கூடாக​ பயணித்து அராலிப்பாலத்தில் கடலுடனஂ சேர்கிறது . இதனஂ நீளம்  30  கிலோ மீற்றர் இருக்கலாம் .   இதிலே தானஂ,  ஆறுமுகநாவலர் காதலியுடனஂ தெப்பத்தில் இரவில் பயணித்து அராலிக் கடலினுடாக​ கொழும்புத்துறைக்குச் செனஂறு   அங்கிருந்து நெடுந்தீவுக்குச் செனஂறதாக​ வரலாறு இருக்கிறது .  அனஂறு​ , பண்ணை , காரைநகர் கடல் வீதிகள் போடப்பட்டிருக்கவில்லை . இலங்கை வரைபடத்தில் இருக்கிற​ அதிகமான வீதிகள் இருக்கவில்லை . ஒல்லாந்தர்கள் வாய்க்கால்களையே வீதிகளாக​ பயனஂபடுத்தியவர்கள் .

 சங்கானைக்கும் , துணைவிக்கும் இடையில் ஓடக்கரை எனஂற​ இடப்பெயர் இருக்கிறது .  அங்கே இருக்கிற​ தவறணையில் இனிப்புக்கள்( உடனஂகள்) கிடைக்கிறது எனப் பேர் பெற்றிருக்கிறது .

" சேர் ! , சங்கரத்தைப் பக்கம் பத்ரகாளி அம்மனஂகோவில் ஒனஂறு இருக்கிறது . ஒரு சமயம் அங்கிருக்கிற​ கேணியிலே தீர்த்தம் பாலாக​ மாறியது என வதந்தி பரவ​ நாமும் போய்ப் பார்த்தோம் " எனஂறு அந்தோனி கூறுகிறானஂ . செல்லும் இடமெல்லாம் அம்மனஂ , பத்ரகாளி கோவில்கள் கட்டும் வழக்கம் பாண்டியர்களிடமே காணப்படுகிறது ..என வாசித்தது அனஂனருக்கு ஞாபகம் வருகிறது . 'சங்கரத்தை , துணைவி..' வித்தியாசமான பேர்கள் என  அனஂனர் அசை போடுகிறார் . ' நீர்கொழும்பு வாய்க்காலைப் போல​ இதை கட்டி இப்பவும் தெப்பம் விடலாமே ' எனஂறும் அவருக்கு தோனஂறுகிறது . கண்டியைக் கைப்பற்றுவதற்காக​ ஆங்கிலேயர்   வீதியை போட்ட பிறகே வீதிகள் அமைப்பதில் சூடு பிடித்தது . நாவலர் , ஒல்லாந்தர் , ஆங்கிலேயக் காலத்தில் இருந்தவர் . ஒல்லாந்தர் நீர்வழிகளைப் பயனஂபடுதஂதுறதில் விருப்பம் கொண்டவர்கள் . அவர்கள் காலத்திலே வழுக்கியாறு நீர்ப்பாதையாக​ உயிருட​னஂ இருந்திருக்கிறது . அதிக​ காலம் கூட​ ஆகவில்லை . மாற்றங்கள் வரலாறை மூடி மறைத்து விடுகிறது   . நம்ப​ முடியாமலாக்கியும் விடுகிறதே .

அந்தோனியும் , பாண்டியும் வீட்டிற்குச் செல்ல , முருகர் " வாசு, நீயும் இங்கேயே சாப்பிடனஂ " எனஂறு கேட்க மாஸஂருடனே சாப்பிடுகிறானஂ . வாசிகசாலையில் எல்லோரும் திரும்ப​ கூடுகிறார்கள் . பலதைக் கதைக்கிறார்கள் . " இங்கே இருப்பவர்களை விட மலையகத்தில் படிப்பு கடினம் . ஆனால் , இங்கே இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைவு எனஂபதால் வேலையே பிரச்சனையாக இருக்கிறது...கல்வியின் அருமை தெரியாமல் போகிறது . இருக்கிற தமிழ் கலவன் பாடசாலைகளை குறைந்த பட்சம் இயங்க வைக்கலாம் , பாழ்பட விட்டுக் கொண்டிருக்கிறார்கள் . இலங்கை அரசு, தமிழர் மத்தியில் குறைகளை பெருக்கிக் கொண்டே செல்கிறது . அரசாங்கத்திற்கு தமிழரில் அக்கறையே   கிடையாது . சிரமதானம் மூலமும் சுயமாக பள்ளிக்கூடங்களை  நிறுத்தலாம்  .  பாடங்களை நடத்த  சேவை அமைப்புகளைக் கோரலாம் . அராலி முழுதிலுமே பரவலாக‌ பனந்தொழிலைச் செய்கிறவர்களின் குறிச்சிகள் ஐந்து , ஆறுகள்  இருக்கின்றன .  ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதில்லை .  ஒவ்வொரு வாசிகசாலைகளோடு தனித் ,தனியவே இயங்கி வருகின்றன .  இன்று , இவர்களினஂ பனம்பிள்ளைகளே   கலவன் பாடசாலைகளில் படிக்கிறவர்கள்   .  ஆசிரியர்களின்  ...குறைவால் அக்கறை அற்று இயங்கி வருகின்றன . இலங்கை குடியரசாக அறிவிக்க முதல் சேர்ச்காரர்களின் கவனிப்புடன் நல்லபடி இயங்கியவை .  தேசியமயமான பிறகே , கேவல நிலமை . முனஂனர்  ஐந்தாம் வகுப்பு வரையில் எல்லாருமே இங்கே படித்தே , பிறகு , பெரிய பாடசாலைக்கு ஆறாம் வகுப்பிலிருந்து படிக்கச் சென்றார்கள் . இனஂறு , அந்த பாடசாலையிலேயே  முதலாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையில் இருக்கின்றன .  சேர்ச்சின் கைகளில் இருந்த போது மதமாற்றங்கள்  நடந்து கொண்டிருந்தன .  தமிழ்க் கலவன் பாடசாலைகள்  அமெரிக்க மிசனரிமார்களினால் நடத்தப்பட்டவை . வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்துக்கல்லூரிகளை விட ஆங்கிலேய​க் கல்லூரிகள் அதிகம்  இருக்கினஂற​ன . அதனாலே  , ஆறுமுகநாவலர் போன்றோர் சைவ‌ தமிழ் பாடசாலைகளை அமைக்க முயன்றனர் . இந்துக்கல்லூரி என்ற பெயர் ஏற்பட அவர்களே காரணம் .  

சிங்களவர்களுக்கு தமிழர் மூளைசாலிகள் என்ற பொறாமை வேறு  இருக்கின்றது . இனப்பார்வை, எல்லாவற்றையும்  உயிரற்றவையாக்கி   விடுகின்றன‌ .  பிரிட்டனின் பின்புலத்தில் இயங்கிற பெரிய‌ கல்லூரிகளை ...அரசால்  ஒன்றும் செய்ய முடிவதில்லை . அவையும் இந்துக்கல்லூரிகளும் பெரிய பாடசாலைகளாகவே விளங்கின்றன . எனவே ,தான் தமிழருக்கு எதிராக தரப்படுத்தல் சட்டங்களை அமில் படுத்தி எதிரான போரை பிரகடனப்படுத்தி செல்லுகள் போட்டு திட்டமிட்டு பாடசாலைகள் சிதைத்து அழிக்கப்பட்டிருக்கின்றன . படுகொலைகளும் தொடர்கின்றன . இவற்றையெல்லாம் அவர்களினஂ உரையாடல் தொட்டுச் செல்கிறது   .   விடை பெற்றுக் கொண்டு அனஂனர் , கல்லுண்டாய் வெளியூடாக​ கடலட்டை மணக்க​ வீடு திரும்புகிறார் .

அனஂனரினஂ அப்பா இறந்து போனார் என தந்தி ​அவருக்கு வருகிறது .  மலைநாடு செல்கிறார்.   நாட்களாகியும்​ அவர் திரும்பி வரவில்லை.

அதிபர் பாடசாலை தொடங்கும் காலை மாணவர் கூடலில் , பள்ளிக் கீதத்தை மாணவிகள்  இசைத்தபிறகு ...." உங்களுடைய தமிழ் ஆசிரியர் அன்னலிங்கம் மாஸ்ரர் காணாமல் போய் விட்டார்  .  அவருடைய சகோதரர் ...நாம் அனுப்பிய தந்திக்கு  'அண்ணர் , மலைநாட்டிற்கே வரவில்லையே , கவலையாய் இருக்கிறது . உங்களுடைய தந்தியை காண்பித்து பொலிஸிலே முறைப்பாடு செய்திருக்கிறோம்' என பதில் தந்தி வந்திருக்கிறது ." என்று காண்பித்து வாசித்தார் . வாசுவிற்கு , அந்தோனிக்கு ...இன்னும் பலருக்கு இதயத்திலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது . கண்கள் உடைப்பெடுத்து விடுமோ ...என இருந்தது . அவருடைய சிரித்த முகம் " தம்பிகளா படிக்க வேண்டும் . மலைநாட்டைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் ' என்று பாடம் நடத்துற  காட்சி மனதில் தோன்றி  மறைகிற​து . இவர்கள் சொல்ல வேண்டியதில்லை , செய்தி , தானாவே   கிராமம் முழுதும் பரவி   விடப் போகிறது .

கிராமம் அவரை மறக்கப் போவதில்லை , அவருடைய நினைவுகளை காலகாலமாக நெஞ்சிலே இருத்தியே  வைக்கப் போகிறது ! பிறப்பும் புதியதல்ல , இறப்பும் பழையதல்ல ! மனிதர்களால் நிகழ்த்தப்படுறது...வெட்கப்பட​ வேண்டியது . " .இனக்குற்றத்தை நிகழ்த்துபவர்களை  இலகுவில்  தப்பித்துக் கொண்டு விடவும் விடக்  கூடாது . " ஒவ்வொருவனுக்கும் மேலே ஒரு கூரான வாள் தொங்கிக் கொண்டிருக்கிறது " என்று  ஒரு கவிஞன் குறிப்பிடுகிறான் . இவர்களுக்கு தூக்குக் கயிறும் தொங்கிக் கொண்டிருக்கிறது . காப்பாற்றி வருகிற அரசியல் தலைவர்கள் கூட்டுக் குற்றவாளிகள்  தண்டிக்கப் பட வேண்டியவர்கள் .

முற்றும்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here