சந்திரா இரவீந்திரனின் 'மாமி சொன்ன கதைகள்'! - வ.ந.கிரிதரன் -

எனக்குத் தெரிந்து மாமியாருடனனான தமது அனுபவங்கள் எழுத்தில் வடித்தவர்கள் இருவர். ஒருவர் நடிகை பானுமதி ராமகிருஷ்ணா. அடுத்தவர் இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளர் சந்திரா இரவீந்திரன். தற்போது புலம்பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் அவர் இலங்கையில் இருந்த காலத்திலேயே சந்திரா தியாகராஜா என்னும் பெயரில் எழுதிக்கொண்டிருந்தவர். நீண்ட காலமாக அவர் சந்திரா இரவீந்திரனின் மூத்த அக்காவாக இருக்க வேண்டுமென்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் பின்னர் புகலிடத்தில்தான் இருவருமே ஒருவர் என்பதை அறிந்து கொண்டேன்.
பானுமதி ராமகிருஷ்ணா மிகச்சிறந்த நடிகை, பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர், நர்த்தகி மட்டுமல்லர் தெலுங்கில் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும் கூட. இவர் தனது மாமியாருடனான அனுபவங்களை நகைச்சுவைப் புனைகதைகளாக்கித் தெலுங்கில் எழுதிய கதைகள் 'பானுமதி கதலு' என்னும் பெயரில் தொகுப்பாக வெளியாகி மிகுந்த வரவேற்பைப்பெற்றது. அத்துடன் ஆந்திர மாநிலத்தின் சாகித்திய விருதினையும் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவை தமிழில் ராணிமுத்து வெளியீடாக எனது பால்ய பருவத்தில் 'மாமியார் கதைகள்' என்னும் பெயரில் ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியானது. கதைகள் 'மாமியாரும் ஆவக்காய் ஊறுகாயும்' போன்ற தலைப்புகளில் இருந்தன. வாசித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தது இன்றும் பசுமையாக நினைவிலுள்ளது. பின்னர் வானதி பதிப்பகத்தின் வெளியீடாக இரு தொகுதிகள் வெளிவந்தன. 'மாமியார் கதைகள்', 'மாமியாரும் புதையலும்' என்னும் தலைப்புகளில் வெளியாகின.





“கள்ளா! ஏய்… கள்ளா!
உள்ளார்ந்த கலை, இலக்கிய, ஊடக ஆற்றல் மிக்கவர்கள் தமது தாயகம்விட்டு உலகில் வேறு தேசங்களில் வாழ நேர்ந்தாலும், தமது ஆற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டேயிருப்பார்கள் என்பதற்கு மற்றுமோர் உதாரணமாகத்திகழ்பவர் ஆனந்தராணி பாலேந்திரா. இவரை 1970 களில் செல்வி ஆனந்தராணி இராஜரட்ணம் என்ற பெயருடன் முதல் முதலில் சந்தித்தது இலங்கை வானொலி கலையகத்தில்தான்.

சார்லிக்கு இன்று என் மீது கோபம். அவன் தட்டில் வைத்த எதையும் இன்று சாப்பிடவில்லை. தினமும் நான் கொடுக்கும் அந்த உலர்ந்த கொடிமுந்திரியைக்கூட தொடவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அதுதான் அவன் 'பேஃவரிட்'.....அதைக்கூட..... காலையில் இருந்து "உர்ர்ர்.....உர்ர்ர்" என்று ஏதோ விசித்திர சத்தம் வேறு எழுப்பிக்கொண்டேயிருந்தான். 





ஒருமுறை நாரதர், 'கடவுள்' கிருஷ்ணரைப் பார்த்து, "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணர், "நான் உடன் இல்லாமல், வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தாராம். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றாராம்.


முன்பனி பின்பனி மாறிய பின்னே


நீங்கள் அதிசயமானவர்கள்



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









