பதிவுகள் முகப்பு

பயணத்தொடர்: யப்பானில் சில நாட்கள் (9): - 9)ஷின்டோ ஆலயம்( Fushimi Inari Shrine) கொயாட்டா! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
21 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கொயாட்டா நகரமே அதிக காலம் யப்பானிய அரசின் தலைநகராக இருந்தது. இதில் (Heian period (794–1185) இக்காலத்தில் மன்னருக்கு பலமற்று போகப் பிரபுக்கள் உருவாகினார்கள். அவர்கள் அரசுக்கு வரி செலுத்தாதவர்கள். கிட்டத்தட்ட ஆங்கிலேயப் பிரபுக்கள் போன்றவர்கள் . இக்காலத்தில் அதிக போர் நடக்கவில்லை என்பதால் மேலும் சீனாவின் அரசு பலமற்று போனதால் அக்காலத்தில் அமைதி நிலவியது: இலக்கியம் வளர்ந்தது என்கிறார்கள். இக்காலத்தில் யப்பானில் கவிதை மற்றும் இலக்கிய நூல்கள் பல உருவாகின.அதில் பெண்கள் முதன்மையானவர்கள். உலகம் இலக்கியங்கள் என்ற வரிசையில் ஒரு முக்கியமான நூல் ஜென்ஜின் கதை 11ம் நூற்றாண்டில் பெண் ஒருவரால் எழுதப்பட்டது (The Tale of Genji) . சிலர் இதை யப்பானின் முதல் நாவல் என்பார்கள். ஆங்கில மொழி பெயர்ப்பு 1000 பக்கங்கள் வரும். இதில் கதாநாயகனாக வருவது மன்னரின் வைப்பாட்டியான பெண்ணுக்குப் பிறந்தவன், காதல், காம விடயங்களுடன் அரசராக முயற்சிக்கும் விடயங்கள் கொண்டது என அறிந்தேன். அத்துடன் பௌத்த மதத்தைக் கடைப்பிடிக்க அரசவையில் நடக்கும் வரம்பு மீறிய செயல்கள் விவரிக்கப்படும். இது தற்கால நாவல் போன்றது அல்ல. இதை எழுதிய பெண், பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் . அத்துடன் மன்னராக வருபவரைத் திருமணம் செய்யக் காத்திருந்தவர் என மேலும் அறிந்தேன்.

யப்பானில் மத்திய காலத்துத் தலைநகராக இருந்தது கொயாட்டா நகரின் தெற்கே உள்ள ஷின்டோ ஆலயம்( Fushimi Inari Shrine) பெரிதானதும் பிரபலமானதுமாகும். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொர்க்கத்துக்கு பாதைகள் ரோறி வாசல்கள்(Torii gate) வரிசையாக உள்ளன. யப்பானது உல்லாசப் பயணத்திற்கான விளம்பரப் படங்களில் வருவது இந்த கதவுகள், வரிசையாக செம்மஞ்சள் நிறத்தில் மரங்கள் அமைந்திருக்கும். இது சின்டோ மதத்தின் மட்டுமல்ல, யப்பானின் அடையாளமுமாகும். இதனூடாக போவது ஒரு விதத்தில் சொர்க்கத்திற்கு செல்வதான படிமமானது. உங்கள் பாவங்களிலிருந்து பரிசுத்தமாக்கி காமி என்ற தேவனிடம் அழைத்துச் செல்கின்ற வழியாகும்.

மேலும் படிக்க ...

இரு கவிதைகள் - சி.ரஞ்சிதா , இலங்கை -

விவரங்கள்
- சி.ரஞ்சிதா , இலங்கை -
கவிதை
21 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI

1.  மலரும் பூக்களல்ல காதல்! 

பன்னிரண்டு ஆண்டுகளுக்கொரு முறை
பூத்திடும் குறிஞ்சிப் பூக்களல்ல
நம் உறவு…!

பூத்த நொடிகளிலே உதிர்ந்து
விழும் சகுரா மலர்களல்ல
நம் காதல்…!

காலையில் மட்டும் கண்சிமிட்டும்
வெண் தாமரைப் பூக்களல்ல
நம் அன்பு…!

இரவில் இமைகள் இசைக்கும்
மல்லிகை மலர்களின் மணமல்ல
நம் நேசம்…!

வாசம் நுகர வாடிப்
போகும் அனிச்சம் மலர்களல்ல
நம் சரசம்…!

இடம் பார்த்துப் படர்ந்து
கொள்ளும் மணிச்சிகைப் பூக்களல்ல
நம் புரிதல்…!

அரும்பி அறுவடைகளை அழிக்கும்
பெரிய உந்தூழ் பூக்களல்ல
நம் பாசம்…!

பூக்களைக் காதலுக்கு ஒப்பிடுவதேன்…?
ஒப்பிடும் தரம் அல்லவே ஆழமான
உண்மை நெஞ்சங்களின் கேண்மை!

மேலும் படிக்க ...

ஸ்கார்பரோவில் எழுத்தாளர் இளங்கோவின் 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்' நூல் வெளியீடு! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
21 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* நன்றி - புகைப்பட உதவி - 'தடயத்தார்' கிருபா கந்தையா.

'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்' - இளங்கோவின்  (டிசெ. தமிழன்) புதிய சிறுகதைத்தொகுதி , நேற்று Scarborough Village Receation Centre இல் நடைபெற்றது. கலை, இலக்கிய, சமூக, அரசியற் பிரமுகர்கள் பலர் வந்திருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பம் போர்ச்சூழலில் , மனித உரிமை மீறல்களில் பலியாகிய அனைவர்தம் நினைவாக ,  மெளன அனுஷ்டிப்புடன் ஆரம்பமாகியது.  'தேசியம்' இலங்காதாஸ் பத்மநாதனின் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் நிரோஜினி றொபேர்ட்  இளங்கோவின் சிறுகதையொன்றின் சில பகுதிகளை வாசித்தார்.  வித்தியாசமான, ஆனால் ஆரோக்கியமான முயற்சி. தொடர்ந்து எழுத்தாளரும், நாடகவியலாளருமான பா.அ.ஜயகரன், முனைவர் மைதிலி தயாநிதி, நம் கலை, இலக்கிய உலகில் நன்கறியப்பட்டவரும், வானொலி, தொலைக்காட்சி ஊடகவியலாளரும், நாடகவியலாளருமான பி.விக்னேஸ்வரன் இயக்கத்தில் மேடையேறிய, இப்சனின் 'பொம்மை வீடு' நாடகத்தில் சிறப்பாக நடித்துப் பலரின் கவனத்தையும் பெற்றவருமான  அரசி விக்னேஸ்வரன், 'காலம்' செல்வம் ஆகியோர் நூல் பற்றிய தம் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.  

மேலும் படிக்க ...

பயணத்தொடர்: யப்பானில் சில நாட்கள் (8): - யப்பானிய நிஞ்ஜாசா, முராய் வீரர்கள்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
18 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நாங்கள் சென்ற அடுத்த சிறிய நகரம் ஒன்றில்(Town of Iga) அங்கு நிஞ்ஜா வீடும், நிஞ்ஜா உடைகளும், போர்க் கருவிகளும் வைக்கப்பட்ட அருங்காட்சியகம் உள்ளது . அத்துடன் ஆணும் பெண்ணும் ஒரு மணி நேரம் நிஞ்ஜா ஆயுதங்களையும் போர் புரிவதையும் எங்களுக்குக் காட்டினார்கள். பெரும்பாலான விடயங்கள் சீனாவிலிருந்து வந்து கும்ஃபு போர்க்கலையைச் சார்ந்தது இருந்த போதிலும் அதிரடியான தாக்குதல் , தாக்கிவிட்டு மறைவது , கரந்துறைதல் என்பன முக்கிய அம்சங்களாகும் . யப்பானிய நிலவுடைமை சமூகத்திலிருந்த போட்டிகளால் அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக இந்த மாதிரியான இராணுவ பயிற்சிகள் உள்ளவர்களின் தேவைகள் அங்கிருந்தது. ஆனால் , அவை எல்லாம் மீஜி மன்னரின் சீர்த்திருத்தத்தின் பின்பு மறைந்துவிட்டன . இவைகள் தற்போது பழைமை பேணுவோர்களால் உல்லாச பிரயாணிகளுக்காக காட்சிப்படுத்துகிறார்கள் .

எமது வழிகாட்டி ரிச்சாட்டின் கூற்றுப்படி யப்பானில் பச்சை குத்தியவர்கள் வேலைகளிலிருந்து ஒதுக்கப்படுகிறார்கள் யப்பானில் பாதாள உலகம் எனப்படும் பணத்திற்காகக் கடத்தல், கொலை செய்பவர்கள் இல்லை. என்றபோது யக்குசா என்ன பாதாளலோகக் குழுவிற்கு (Yakuza) என்ன நடந்தது என்று நான் கேட்டபோது இப்பொழுது வெளிநாடுகளில் இயங்கலாம், உள்நாட்டில் அவர்கள் மிகவும் குறைவு என்றார் – அவர்கள் இருந்தாலும், அவர்கள் ஆரம்ப தொழில்கள் இப்போது குறைவு. சூதாடுதல் , அதிக வட்டிக்குப் பணம் கொடுத்தல் என்பவை சாத்தியமில்லை . இப்பொழுது ஓரளவு சூதாடுதல்( Poker and sports) யப்பானில் உள்ளது. மிக குறைந்த வட்டிக்கு அல்லது வட்டி இல்லாது யப்பானில் கடன் பெறமுடியும். இப்படியானவற்றால் யக்குசாவில் அங்கத்தினர் குறைந்துள்ளார்கள் என்றார்.

மேலும் படிக்க ...

மாறுகின்ற உலகமும் அமெரிக்காவும்! (5) - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
17 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



முடிவுரை

உலகம் ஒரு புதிய சகாப்தத்துள் காலடி எடுத்து வைத்துள்ளது. தொழிநுட்பம், மூலதனம், உற்பத்தி, விநியோகம், மூலப் பொருட்களின் இருப்பு - இவற்றில் எதை எடுத்தாலும் - இவை மனித வாழ்வுக்கு அல்லது உலகின் அசைவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படைகளாகின்றன. இற்றை நாள்வரை, இவை தொடர்பாய் ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்கா அல்லது மேற்கு நாடுகளின் செல்வாக்கு இன்றுவரை இவை தொடர்பில் இருந்து வந்தாலும், இன்று இது குறைந்த மட்டத்திலேயே செயல்படுவதாகத் தெரிகின்றது. அதாவது, ஒப்பீட்டளவில் ஆதிக்கம் இங்கே குறைந்துள்ளதாகவே காணக்கிட்டுகின்றது.

சீனத்தின் எழுச்சியும், ரஷ்யாவின் இருப்பும், இந்தியா, பிறேசில், தென்னாபிரிக்கா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகளின் புதிய வடிவம் - உலகின் முகத்தை இன்று மாற்றி இருப்பதாகக் கருதப்படுகின்றது.

F-35 அல்லது F-16 விமானங்கள் இன்று வீழ்ந்து நொறுங்குவது சகஜமாகியது – அவை மத்திய கிழக்கின் ஈரானிய போர்முனையாக இருக்கலாம் அல்லது உக்ரைனிய போர்முனையாக இருக்கலாம் அல்லது இந்தியா-பாக் போர்முனையாகக் கூட இருக்கலாம் - ஒரு காலத்தில், இவ்விமானங்கள், கண்ணுக்குத் தென்படாத தொழிநுட்ப வளர்ச்சியின் சாதனைகள் என போற்றிப் புகழப்பட்டிருந்தன. அதாவது, நேற்றுவரை கண்ணுக்குத் தெரியாதவையாக இருந்த இவ்விமானங்கள் இன்று சுட்டு வீழ்த்தப்படுவது சகஜமாயிற்று.

உக்ரைனின் போர் நிலவரம் அல்லது மத்திய கிழக்கின் ஈரானிய போர் நிலவரம் இன்று உலகத்தைப் புதிய செய்திகளுடன் அணுகுவதாக் காணப்படுகின்றது. எதிர்பாராத திருப்பங்கள், எதிர்பாராத விளைவுகள் அங்கே காணக்கிட்டுகின்றன. இஸ்ரேலிய வீடுகள், இஸரேலின் நகர்களிலேயே வைத்து தாக்கப்படுவதும் அல்லது அவர்களது போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படுவதும் இதுவரையிலும் உலகம் கேள்வியுறாத ஒன்றாக இருந்துள்ளது. ஆனால், இந்நடைமுறை இன்று வித்தியாசப்பட்டுள்ளது. அந்தளவில், சீன -ரஷ்ய --இந்தியத்  தொழிநுட்ப ங்கள், விண்வெளி தொடக்கம் நவீன ட்ரோன்கள் வரை வளர்ந்து நீள்வதாய் உள்ளன.

மேலும் படிக்க ...

கனடா பீல் பிரதேச குடும்ப மன்றத்தின் 16 வது ஆண்டு விழா! - சுலோச்சனா அருண் -

விவரங்கள்
- சுலோச்சனா அருண் -
நிகழ்வுகள்
17 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சொப்கா என்று அழைக்கப்படும் கனடாவில் கடந்த 16 வருடங்களாக இயங்கும் பீல் பிரதேச குடும்ப மன்றத்தின் ஆண்டு விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை மிசசாகா காவ்த்ரா வீதியில் உள்ள ஜான் போல் போலாந்து கலாச்சார மையத்தின் பார்வையாளர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. முக்கிய சில பிரமுகர்களால் மங்கள விளக்கு ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து கனடிய தேசியப்பண் ஆகியன இசைக்கப்பெற்றன. அகவணக்கத்தைத் தொடர்ந்து வரவேற்பு நடனமும் வரவேற்பு உரையும் இடம் பெற்றன.

மேலும் படிக்க ...

கூகி வா தியாங்கோ - வாழ்வும் மரணமும்! - வாசன் -

விவரங்கள்
- வாசன் -
இலக்கியம்
13 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கூகி வா தியாங்கோ மறைந்து விட்டார் . கென்யா எழுத்தாளரும் கல்வியலாளருமாகிய அவரது மரணம் இன்றைய தமிழ் சமூகத்தில் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாது எமக்குள் எந்தவித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. எம்மைப் பொறுத்தவரை எமக்குள் இருக்கும் குழாயடிச் சண்டைகளைத் தீர்த்துக் கொள்ளவே எமக்குப் போதிய நேரமோ அவகாசமோ இல்லாதபோது இது போன்ற ஆளுமைகளின் இருப்பும் மறைவும் எமக்கு ஒரு பொருட்டாகவே தென்படுவதில்லை. இவரது வாழ்வு குறித்தோ அல்லது படைப்புக்கள் குறித்தோ எந்தவித நிகழ்வுகளையோ ஆய்வுகளையோ மேற்கொள்ளாமல் ஒரு சில சஞ்சிகைகளில் ஆங்காங்கே பதிவிடப்படும் வெறும் அஞ்சலிக் குறிப்பிடனேயே இவரது மரணத்தையும் கடக்க நினைக்கின்றது எமது சமூகம். இத்தனைக்கும் இதுவரை இவரது ஆறேழு நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றது. அதனையும் விட அன்றைய காலகட்டங்களில் இவர் எமது பல்வேறு சிறுபத்திரிகைகளைளின் அட்டைப்படமாக அலங்கரிக்கப் பட்டிருந்தார் என்பதும் இவரது எழுத்துக்களை எமது முன்னோடிகள் ஆய்வு ரீதியாக மதிப்பீடும் விமர்சனமும் செய்திருந்தனர் என்பதும் எமக்குள் மிகுந்த ஆச்சரியத்தினை ஏற்படுத்தி நிற்கின்றது. அன்று உலகளாவிய ரீதியில் தனது கவன வட்டத்தினை விஸ்தரித்து மிகவும் காத்திரமாக இயங்கி வந்த எமது சமூகம் ஒரு சில தசாப்த காலத்திற்குள் இப்படி தடாலடியாக கீழிறங்கிப் போயுள்ளது உண்மையிலேயே வேதனையை ஏற்படுதி நிற்கின்றது.

மேலும் படிக்க ...

காலம் நுஃமான் சிறப்பிதழ் “நுண்மாண் நுழைபுல நுஃமான்” - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
ஆய்வு
13 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

‘காலம் நுஃமான் சிறப்பிதழ்’ வெளியீட்டு நிகழ்வில் (February 23.02.2025: Scarborough Villege Center; Canada) அவ்வை நிகழ்த்திய வெளியீட்டுரையின் காணொளியை அண்மையில் முகநூலில் கண்ணுற்றேன். உணர்வை உந்தச்செய்த உயிர்ப்பான உரை. நுஃமான் , மஹாகவி உறவின் ஆத்மார்த்தம் பற்றி அவ்வை உயிரோட்டமாய் உரையாடியிருந்தார். தந்தை மஹாகவி, மாமா நுஃமான் ஆகிய ஆளுமைகளது ஆப்த நேசம் பற்றிய அவ்வையின் உரையாடல் விரிபடுத்தப்பட்டு எழுதப்படுதல் நல்லது. அவ்வை அப்படி எழுதினால் அது ஒரு முக்கிய ஈழத்து இலக்கிய ஆவணமாக அமையலாம் என்ற உணர்வை அப்பேச்சு எனக்குள் உருவாக்கிற்று. அவ்வையின் வெளியீட்டுரை குறிப்பிட்டது போல, ‘எப்போதுமே சிறந்த படைப்புகளை தாங்கி வரும் காலம் இம்முறை நுஃமான் சிறப்பிதழாக வந்துள்ளது. இவ்விதழை முதலில் இருந்து கடைசிவரை ஒரே மூச்சாக வாசித்து முடித்தபோது அப்படியொரு பரவசமான நிலை’. இவ்விதழின் (ஜனவரி 2025) உயிர்ப்பான உள்ளடக்கம் எனக்குள்ளும் அப்படியொரு பரவசத்தை உருவாக்கிற்று. புன்முறுவல் பூத்த நுஃமான் அவர்களின் ‘அமுத’ புகைப்படம் அட்டையில் ‘நுண்மாண் நுழைபுல நுஃமானாக மினுக்கமுறுகிறது.

காலம் இதழ்களை என்னால் தொடர்ச்சியாக படிக்கமுடியவில்லை. ஆனாலும் படித்த இதழ்கள் மனசுக்குள் பதியமாயிற்று. மூத்த எழுத்தாளர் கே.கணேஷ் அவர்களின் புத்தகங்களால் குவிந்த தலாத்துஓயா இல்லத்தில்தான் முதன்முதலாக காலம் சஞ்சிகையை கண்டேன். என்னுடன் அதிநேசத்தோடு இருந்த கே.கணேஷ் அவர்கள் நான் மிகுந்த ஆர்வத்துடன் காலம் இதழ்களை படிப்பதைப்பார்த்து ஒருசில காலம் இதழ்களை எனக்கு அன்பளிப்பாக தந்தார்; (பல பெறுமதியான நூல்களை அவரது கையொப்பத்துடன் எனக்கு தந்திருந்தார்). கொழும்பு போகும்போது புத்தக கடைகளில் காலம் இதழை கண்டால் வாங்கிக்கொள்வேன். என் வாசிப்புப் புலத்துக்கு காலம் சஞ்சிகையும் வெளிச்சமிட்டிருக்கிறது.

மேலும் படிக்க ...

முருகபூபதி அவர்களின்; பிறந்த தினம் பதின்மூன்று யூலை! வாழ்த்துகிறேன்! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -

விவரங்கள்
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -
நவஜோதி ஜோகரட்னம்
12 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

     

வாழ்க்கை ஓடிய ஓட்டத்தில் வெகு தூரம் போய்விட்டேன். ஏதோ தொலைத்தது போன்ற உணர்வு. திரும்பிப் பார்த்தேன் தொலைத்தது வேறு எதுவும் இல்லை. என்னைத்தான். அப்போதுதான் புரிந்தது எனக்;காக வாழ்க்கையை நான் வாழவே இல்லை என்று. அத்தகைய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து சிறுகதை, நாவல், கட்டுரை, பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம், புனைவு சாராத பத்தி எழுத்துக்கள், திறனாய்வு போன்ற துறைகளில் தன் ஆளுமைகளைச் செலுத்தி வருபவர்தான் முருகபூபதி அவர்கள்;. ஒவ்வொரு கலைஞர்கள். எழுத்தாளர்களின் பிரிவின்போதும் அதனைப் பதிவாக்குவதிலும் அவர் காட்டும் அக்கறை அவரது பரிவுணர்வை வெளிப்படுத்தும் ஒரு செயலாகும். இலக்கியம் முதன்மையாகக் கற்றுத் தரும் பாடம் என்னவென்றால்; பரிவு காட்டுவதுதான். அதனை இவரின் செயலிலும், எழுத்துக்கள் மூலம் புரிந்து கொண்டேன்.          

     பழகுவதற்கு இனிமையானவர் முருகபூபதி அவர்கள். எனது அன்புத்தந்தை எஸ் அகஸ்தியரோடு மிக நெருக்கமான உறவு கொண்டிருந்தவர்;. இலங்கையிலிருந்த காலப்பகுதியில் 1983களில இருவரும் சந்தித்துள்ளனர். பின்னர் எனது தந்தை அகஸ்தியர் பிரான்சிற்கும் முருகபூபதி அவர்கள் அவுஸ்ரேலியாவிற்கும் புலம் பெயர்ந்தனர். ஆனால் தொடர்ச்சியாக இருவரும் கடிதத் தொடர்புகளில்  இருந்திருக்கிறார்கள். அகஸ்தியருடன் இவர் மேற்கொண்ட நேர்காணலை இவரது ‘சந்திப்பு’ என்று நூலில் பதிவு செய்தமையை நன்றியுடன் நினவுகூர விரும்புகின்றேன்.

     அத்தகைய அவரது உறவின் தொடர்ச்சி இன்றுவரை எமது குடும்பத்துடன் தொடர்ந்து கொண்டிருப்பது மகிழ்வான விடயம்.  முக்கியமாக அகஸ்தியரின் ‘சுவடுகள்’  விவரண நவீனம் என்ற நாவல் 2023ஆம் ஆண்டில் வெளியிட்டவேளை, பல சிரமங்கள் மத்தியில் அவர் அந்நாவலை வெளிக்கொண்டு வருவதற்காகச் செய்த உதவியோ அளப்பரியது. என் இதயத்தில் அவை ஆழமாகப் பதிந்துள்ளது. மனிதர்கள் ஒருவர் ஒருவருக்குக்காட்டும் அக்கறையும் அன்பும் மேலானது. என்றும் அதனை நன்றியுடன் நான் நினைவிருத்துவதுண்டு. லண்டன் வரும் வேளைகளில் நான் அவரைச் சந்திப்பதில் மிக ஆர்வத்துடன் இருந்திருக்கின்றேன். தொலை நகல் வழியாக அவருடன் தொடர்புகள் தொடர்வது மகிழ்வுதருகின்ற விடயம். எனது தாயார் நவமணியின் சுகம் குறித்தும், எனது சகோதரி நவஜெகனி குறித்தும் தொடர்பு கொள்ளும் வேளைகளில் எல்லாம் அவர் விசாரிக்கத் தவறுவதேயில்லை. அத்தகைய ஒரு மனிதத்தை நேசிக்கின்ற ஒருவராவார்.        

மேலும் படிக்க ...

லெட்சுமணன் முருகபூபதி : ஒரு பன்முக ஆளுமை! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -

விவரங்கள்
- கிறிஸ்டி நல்லரெத்தினம் -
இலக்கியம்
12 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

(அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளன் எனும் அடையாளத்தின் முகவரியாளராக மிளிர்பவர் லெ.முருகபூபதி அவர்கள். அவரின் அகவை நாள் ஜூலை 13ம் நாளில், இச் சிறப்புக் கட்டுரை பிரசுரமாகிறது.  எழுத்தாளர் முருகபூபதி அவர்களுக்குப் பதிவுகளும் பிறந்தநாள் வாழ்த்துகளைத்  தெரிவித்துக்கொள்கிறது.)


1951ம் ஆண்டு ஜுலை 13ம் திகதி..... நிசப்தமான அந்த வெள்ளி இரவில் நுரை தள்ளி கரைநனைக்கும் அலையோசையைத் தவிர எங்கும் அமைதி. நீர்கொழும்பு மகப்பேறு வைத்தியசாலையில் 'வீல், வீல்' எனும் ஒரு குழந்தையின் அலறல் அந்த இரவின் அமைதியை கலைத்தது!

ஒரு அன்புத் தாய் குழந்தையை வாரியணைத்து உச்சி முகர்ந்து தந்தை லெட்சுமணனின் கரங்களில் பாலகனை ஒப்புவித்தாள். குடும்பத்தின் முதல் மகன் என்ற பெருமிதம் அவர் கண்களில் ஒரு புது ஒளியை தோற்றுவித்தது. தந்தை குனிந்து மழலையின் காதருகில் ஒரு மந்திரம் போல் "முருக....பூபதி " என நீட்டி விளித்து அவனை மெதுவாய் தாயின் அரவணைப்பிற்கு சொந்தமாக்கினார்.

அன்று அம்மழலையுடன் ஒட்டிக் கொண்ட 'முதல்' எனும் வார்த்தை அவன் வாழ்வில் நிரந்தரமாகவே அழியாச் சுடராய் அன்று ஏற்றிவைக்கப்பட்டது.

இலங்கையில் வடமேல் மகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு நகரில் 1954ஆம் ஆண்டு இந்து தமிழ்ப்பிள்ளைகளுக்காக தொடங்கப்பட்ட ஆரம்பப்பாடசாலை விவேகானந்தா வித்தியாலயத்தில் முதல் மாணவனாக 1954 ஆம் ஆண்டு விஜயதசமி தினமன்று ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்வித்து தன் கல்விப் பயணத்தை ஆரம்பித்தார் முருகபூபதி, இவரின் மாணவ பதிவு இலக்கம் : 1.

மேலும் படிக்க ...

மறக்க முடியாத எழுத்துலக ஆளுமைகளில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர்  இந்திரா பார்த்தசாரதிக்குப் பிறந்த நாள் ஜூலை 10.  என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத எழுத்தாளுமைகளில் ஒருவர் இ.பா. தனது மனைவி இந்திராவின் பெயரையும் பாவித்து, இந்திரா பார்த்தசாரதி என்னும் பெயரில் எழுதுபவர். எழுத்தாளர் ரங்கராஜன் தன்  மனைவி சுஜாதா என்னும் பெயரில் தமிழ்  இலக்கிய உலகில் தடம் பதித்தது நினைவுக்கு வருகின்றது.  

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எனக்கு  முதலில் அறிமுகமானபோது நான் ஒருவித வெறியுடன் வாசிப்பில் மூழ்கிக்கிடந்த பால்ய  பருவத்தினன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் அப்போது எனக்கு வயது பதினொன்றுதான். பத்து வயதிலேயே கல்கியில், விகடனில், குமுதத்தில், கலைமகளில், தினமணிக்கதிரி தொடர்களாக வெளியான தொடர்கதைகளை, சிறுகதைகளை , தீவிரமாக, வாசிக்கத்தொடங்கி விட்டிருந்தேன்.வெகுசனச் சஞ்சிகைகளில் எழுதி என் கவனத்தை ஈர்த்த, தீவிர இலக்கிய எழுத்தாளுமையாளர்களாக ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி . கு,அழகிரிசாமி போன்றோர் இருந்தனர். இவர்களது எழுத்துகள்  பொதுவான வெகுசன எழுத்தாளர்களின் எழுத்துகளிலிருந்து வேறுபட்டவை. ஆனால் அது இவர்கள் மீதான என் ஈர்ப்புக்குத் தடையாக இருந்ததில்லை. என் வயதுக்கு மீறிய விடயங்களைப்பற்றியெல்லாம் இவர்கள்தம் படைப்புகள் இருந்தாலும், அனைவரையும் சென்றடையும் வகையில் , ஒரு வித எல்லை மீறாத எழுத்து நடையில்  இவர்கள் எழுதினார்கள்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் இளங்கோவின் (டி.செ.தமிழன்) சிறுகதைத்தொகுப்பு வெளியீடு - 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்'

விவரங்கள்
- தகவல்: இளங்கோ -
நிகழ்வுகள்
11 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பயணத்தொடர்: யப்பானில் சில நாட்கள் (7) - யப்பானிய தேயிலை - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
11 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜப்பானில் இறங்கிய ஆரம்ப நாட்களில் பார்த்தபோது புரிந்து கொள்ளாது சந்தேகத்துடன் , எனக்குள் அடிக்கடி கேள்வி எழுப்பியபடி இருந்த ஒரு விடயம் பல யப்பானிய உணவுகளிலிருந்த பச்சை நிறம் : பச்சை கேக் உணவுக் கடைகளில் கண்ணாடிகள் ஊடாக பார்க்க முடிந்தது , பச்சை ஐஸ்கிரீமை தெருவில் மாணவர்கள் உண்டார்கள்,பச்சை சொக்கிலேட் வித்தியாசமாகக் கண்ணாடிப் பெட்டியிலிருந்து என்னைப் பார்த்துச் சிரித்தது, பலர் குடிக்கும் சோடாவும் பச்சை வர்ணமாக இருந்தது. யப்பானில் நான் கோக்கோ கோலாவைக் காண முடியவில்லை. யப்பானியர்கள் பச்சைத் தேயிலை குடிப்பது எனக்கு ஏற்கனவே தெரிந்தாலும், அவர்கள் உணவுப் பொருட்களில் பச்சைத் தேயிலை எனும் மச்சா தேயிலை சேர்த்துக் கொள்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ள சில நாட்கள் எடுத்தது.

டோக்கியோவிலிருந்து, நாகோயா என்ற பெரிய நகரத்திற்கு பஸ்ஸில் போகும் பாதை, வளைவுகள் மலைகள் நிறைந்தது. ஒரு பக்கம் பச்சை சிவப்பு என வர்ணம் கலந்த மலைச்சிகரங்களின் நிரந்தர அணிவகுப்பு மறுபக்கம் தூரத்தில் அமைதியான நீல வர்ணத்தில் பசுபிக் சமுத்திரம் என்பது அழகான காட்சி , அதுவும் இலையுதிர்காலம் கண்ணுக்குக் கல்யாண விருந்தாக இருந்தாலும், என் மனதில் வெளியே தெரியும் அழகிற்கு மாறாக உள்ளே இருப்பது நமக்குத் தெரியாது. கோபத்தில் கொதிக்கும் நிலமும், பொங்கி அதிரும் கடலும் நினைவுக்கு வந்தது. யப்பான் மூன்று கண்டங்களின் நிலத் தட்டுகள் சந்திக்கும் இடத்தில் இருப்பதால் நிலநடுக்கம், எரிமலை, சுனாமி என்ற இயற்கை அழிவுகள் நமது தவிர்க்க முடியாத உறவினர்கள்போல் வந்து தங்கிப் போவன.

மேலும் படிக்க ...

கொழும்பு நகரில் அமரர் பாலசுப்பிரமணியம் நினைவுச் சிறுகதை[ப்போட்டிப் பரிசளிப்பு நிகழ்வு!

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் சி.மெளனகுரு -
நிகழ்வுகள்
11 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பேராசிரியர் கா. சிவத்தம்பி (1932 - 2011) நினைவுகள்! ஜூலை 06 - 14 ஆவது நினைவு தினம்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
11 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு மனிதரைப்பற்றி நினைப்பது சுகமானது. ஆனால் அந்த மனிதரைப்பற்றி எழுதுவது சுகமானதல்ல. சுலபமானதும் அல்ல. என்று பல வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸிலிருந்து வெளியான பாரிஸ் ஈழநாடு இதழில் நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடரில் சோவியத் தமிழ் அறிஞர் கலாநிதி வித்தாலி ஃபுர்ணிக்கா பற்றிய பதிவின் தொடக்கத்தில் எழுதியிருந்தேன்.

நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடர் பின்னர் அதே பெயரில் சிட்னியிலிருக்கும் எழுத்தாளர் மாத்தளை சோமுவின் தமிழ்க்குரல் பதிப்பகத்தினால் (1995 இல்) வெளியானது.

மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களை இத்தொடரில் எழுதும் பொழுது குறிப்பிட்ட மேற்கண்ட வாசகம்தான் நினைவுக்கு வருகிறது.

1976 முதல் அவர் மறையும் வரையிலிருந்த இலக்கிய நட்புணர்வுதான் இந்தப்பத்தியின் ரிஷிமூலம்.

பேராசிரியர் சிவத்தம்பியை முதல் முதலில் கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் 1972 இல் நடந்த பூரணி காலாண்டிதழ் வெளியீட்டு நிகழ்வில்தான் சந்தித்தேன். அந்த நிகழ்விற்கு அவர்தான் தலைமைதாங்கினார். அப்பொழுது அவர் தமது குடும்பத்தினருடன் பொரளை கொட்டா ரோட்டில் முன்னாள் நிதியமைச்சர் என். எம். பெரேராவின் வீட்டுக்கு அருகில் வசித்துவந்தார்.

மேலும் படிக்க ...

ரவி அல்லது (பட்டுக்கோட்டை) கவிதைகள்!

விவரங்கள்
- ரவி அல்லது (பட்டுக்கோட்டை) -
கவிதை
09 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



1. நிகர் செய்திடாத நியாயங்கள்.

வாய்விட்டழும் இவ்வேளையில்
வடித்த கண்ணீருக்கு
மதிப்பற்று கழிந்த நாட்கள் அவை.

நீங்கள் விரிந்து
நாங்கள் சுருங்கிய நரகமது.

சமன் செய்திடாத அசுரத்தன வீக்கத்தின்
புரையோடிய அவலம்.

விட்டு
வெறுண்டோடிய புலம்பெயர்தலின் ரண ஓலம்
இதயம் எட்டவில்லை ஒருபோதும்.

கூடிய நெருக்கடி கூத்தில்
மீளாய்வு செய்திடாத ஓட்டத்தில்
இதயம் தொலைத்த
இயந்திரங்களின்
சிதிலத்தில்
மகிழவில்லைதான்
சேர்மானமாகி இருப்பதால்.


காடும் மலையும்
காணக் கிடைக்காத ஏரியும்.
ஓடியாடிய நதிகளும்
அதில்
ஒட்டுறவாக இருந்த உயிர்களையும்
கொன்றழித்த
கொடூரத்திற்கு முன்
இவ்வழுகையும்
அவலமும்
குறைவுதான்
தனக்கு
மட்டுமென
இவ்வுலகை
நினைக்கும் வரை.

மேலும் படிக்க ...

டால்ஸ்டாயின் முகங்கள்: கார்க்கி – பகுதி 9 - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
09 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனது கவிதை வரிகளை அவரிடம் வாசித்து காட்டினேன்:

‘காளான்கள் இருக்கவில்லை

துவாரங்கள் மட்டுமே…

ஈரமுடன்,

காளான் மனம் வீசுவதாய்…’

‘நல்லது. மிக மிக நல்லது. நல்ல அவதானிப்பு’

திடீரென ஒரு குழிமுயல் எம்மை வெறித்து பார்த்து கொண்டிருப்பதைக் கண்டோம்.

பெரிதும் கிளர்ச்சியடைந்த அவரது கன்னங்கள் சிவப்பாய் மாறின. வாய்விட்டு கத்தினார். பின் என்னைத் திரும்பிப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தார். இச்சிரிப்பானது புத்தி பூர்வமானதாகவும் மிகுந்த மனித நேயம் கலந்திருப்பதாகவும் எனக்குப் பட்டது. என் உள்ளம் அவரைக் கட்டியணைத்தது.

இன்னும் ஒரு சமயம்: வானில் ஓர் பருந்து வட்டமிட்டது. திடீரென அது அசைவின்றி நின்றது. அதனது இறக்கைகள் மெதுவாக அசைந்தன அல்லது அசையாதிருந்தன - இப்போது பாய்வதா அல்லது பொறுத்திருப்பதா என்று நின்று, நிதானிப்பது போல. டால்ஸ்டாய் அவரது கரங்களைக் கண்ணுக்கு மேல் வைத்து உற்றுபார்த்து விட்டு கூறினார்: ‘திருட்டு நாய்… கோழிகளா உன் இலக்கு… வண்டிக்காரனைக் கூப்பிடுவோம்… அவன் பார்த்துக் கொள்வான்’

வண்டிக்காரனைக் கூப்பிட்ட சத்தத்தில் பருந்து பயந்து அவ்விடத்தை விட்டு அகன்றது.

மேலும் படிக்க ...

இலங்கையில் நடைபெறும் தமிழ் பண்பாட்டு – – அனைத்துலக மாநாட்டின் இரண்டாவது அமர்வு! - இக்பால் அலி -

விவரங்கள்
- இக்பால் அலி -
நிகழ்வுகள்
09 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இலங்கையில் நடைபெறும் தமிழ் பண்பாட்டு –  – அனைத்துலக மாநாட்டின் இரண்டாவது அமர்வு   நுவரெலியாவில்   வெகுவிமர்கையாக நடந்தேறியது.     

தாஞ்சாவூர் அனைத்துலக பண்பாட்டு ஆய்வு மையம், தமிழ் நாடு திருநெறிய தமிழ் சைவ சமயப் பாதுகாப்பு பேரவை, இலண்டன் தமிழ் கல்வியகம், பிரான்சு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் மற்றும் யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை ஆகியன இணைந்து நடத்தும் தமிழ் பண்பாட்டு – அனைத்துலக மாநாட்டின் முதலாவது அமர்வு   யாழ்ப்பாணம் பல்லைக்கழகத்தில்  30-06-2025  தேதி இம்பெற்றது. இரண்டாவது நுவரெலியாவில் உள்ள மாவட்ட செயலகத்தின் கேட்போர்  02-07-2025 தேதி   இடம்பெற்றது. 

மூன்றாவது அமர்வு  கொழும்பில் 06-07-2025 தேதியும் வரையும்    இடம்பெறவுள்ளதாக என்று தமிழ்நாடு திருநெறிய தமிழ் சைவ சமய பாதுகாப்பு பேரவையின் தலைவர் க. சசிக்குமார் தெரிவித்தார்.
 
இம்மாநாட்டில்  தென்னாபிரிக்கா, பிரான்சு, பிரிட்டன், சுவிட்சலாந்து நோர்வே, ஜெர்மனி, கனடா, மொரீசீயஸ், ரீ யூனியன், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து  பேராளர்கள், சான்றோர்கள் பெரும் மக்கள் பங்கேற்றார்கள். 

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டியில் பரிசு பெற்ற நூல்களின் வாசிப்பனுபவப் பகிர்வு!

விவரங்கள்
- தகவல்: கிறிஸ்டி நல்லரெத்தினம் -
நிகழ்வுகள்
08 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மெய்நிகர் அரங்கு – 13  ஜூலை 2025 – ஞாயிறு | Meeting ID: 881 2810 4953 | Passcode: 299798

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இலங்கை  எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டியில் பரிசு பெற்ற நூல்களின் வாசிப்பனுபவப் பகிர்வு!

மேலும் படிக்க ...

பண்ணைத்துறையின் பெயருக்கான காரணம் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
ஆய்வு
08 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யாழ்ப்பாண இராச்சியத்தின் காலத்தில் முக்கிய துறைமுகங்களாக விளங்கியவை கொழும்புத்துறை , பண்ணைத்துறை ஆகிய துறைமுகங்கள். பண்ணைத்துறை என்பதற்கான பெயருக்கான காரணம் எதுவாக இருக்கும்? அண்மையில் வெளியான கட்டடக்கலைஞர் மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு' நூல் பற்றிய விமர்சனத்தில் கலாநிதி சிவ தியாகராஜா அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

 ".... யாழ்ப்பாணக் கோட்டை இருக்கும் பண்ணை என்ற இடப்பெயர் அவ்விடத்தில் முற்காலத்திலிருந்த ஓர் உலகப்பண்ணையின் ( World Market ) பெயரின் எச்சமாகவே தோன்றுகின்றது."  

பண்ணை என்பது விவசாயம், பல்வகை மிருக வளர்ப்பு (கோழிப்பண்ணை, பாற் பண்ணை என)  ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளைக்  குறிக்கப்பயன்படும் சொல். ஆங்கிலத்தில் Farm என்பார்கள். கலாநிதி சிவ தியாகராஜா கூறுவது போல் இவ்விதமான ஒரு பகுதி துறைமுகங்களுக்கு அருகில் இருப்பதில்லை. துறைமுகங்களுக்கு அருகில் பெரும் வர்த்தகச் சந்தைகள் இருப்பதுதான் வழமை.  

இங்கு தனது நூலுக்கான விமர்சனத்தில் உலகப்பண்ணை என்று குறிப்பிடுகின்றார்? World Market என்று குறிப்பிடுகின்றார். அதாவது உலகச்சந்தை இருந்தது என்னும் அர்த்தத்தில் பயன்படுத்துகின்றார். பண்ணையைச் சந்தை என்னும் அர்த்தத்தில் பாவிக்கின்றார். 

மேலும் படிக்க ...

கனடாவில் பெண்களுக்கான வதனம் இதழ் வெளியீடு! - சுலோச்சனா அருண் -

விவரங்கள்
- சுலோச்சனா அருண் -
நிகழ்வுகள்
07 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


சென்ற சனிக்கிழமை 28-6-2025 ரொறன்ரோ அல்பியன் வீதியில் உள்ள திஸ்டில் நகர சமூக மையத்தின் பார்வையாளர் மண்டபத்தில் கனடாவில் இருந்து வெளிவரும் பெண்களுக்கும் இளையோருக்குமான வதனம் இதழ் - 6 வெளியிட்டு வைக்கப் பெற்றது. அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து பெரியோர்களால் மங்கள விளக்கேற்றி வைக்கப்பெற்றது. சிறுமிகளான பைரவி அருள்மாறன், லதிசா தயாளன் ஆகியோர் கனடிய தேசியகீதம், தமிழ்தாய்பண் பாடினார்கள். வரவேற்புரையை திருமதி கலைமகள் புஸ்பநாதன் நிகழ்த்தினார்.

மேலும் படிக்க ...

ஈழக்கவியின் பார்வையில் பிரமிள் கவிதைகள்! - கலாநிதி தி. செல்வமனோகரன் -

விவரங்கள்
- கலாநிதி தி. செல்வமனோகரன் -
நூல் அறிமுகம்
07 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எல்லோரையும் ஆகர்ஷிக்கக்கூடிய இலக்கிய வடிவம் கவிதை, தமிழில் அதற்கு நீண்ட வரலாறு உண்டு. கவிதையாகவன்றி அர்த்த புஷ்டியுள்ள சமூக, தனிமனித பிரக்ஞையுள்ள ஒன்றாகவே கவிதை ஆரம்பத்தில் இருந்து வந்தாலும் காலதேச வர்த்த மானத்திற்கேற்ப அது தன்னைப் படிமலர்ச்சி செய்து கொள்கிறது. அறமாய், தத்துவமாய், பிரசார மொழியாய் கற்பனை யதீதமாய், உணர்வுகளின் குழம்பாய், வித்துவச் செருக்காய் எனப் பல்ரூப சுந்தரமாய் காட்சியளிக்கின்றது.

தமிழ்க் கவிதையை அழகுபடுத்தியதில் ஈழத்தவர்களுக்கும் கணிசமான பங்கு உண்டு. திருகோணமலையில் பிறந்து தமிழகத்தை வாழ்விடமாகக் கொண்டு கவிஞனாகவே வாழ்ந்து மறைந்து போன ஒருவரே பிரமிள் என்கின்ற தர்மு சிவராம். அவர் தனக்கு வைத்துக் கொண்ட பெயர்களோ அநேகம் மரபில் காலூன்றி புதிய முன்னகர்வுகளையும் புதுக்கவிதையாக்கத்தில் புதிய பாய்ச்சலையும் தந்தவர் பிரமிள். படிமங்களை அதிகம் பிரக்ஞை பூர்வமாகக் கையாண்ட சிலர் கருத்தியலையும் படிமங்களாக்கியவர். தனக்கேயான நவீன கவிதா மொழியையும் கவிதா வடிவத்தையும் உருவாக்கி சிறப்பாகப் பயன்படுத்தியவராவார். அவருடைய கவிதைகள் பெரும் பாலும் அகப்பிரக்ஞையின் வழி உருவான அதிதீவிரமான தூண்டுதலுக்கு ஏற்ப துலங்கலாக சொற்கள் வழி பயணித்து தன்னை யாவுமாக (சாங்கிய தரிசனத்தின் பிரக்கிருதி போல) விரித்துக் கொள்கின்றது. ஒளிச் சிதறல்களாய் எங்கும் பரவித் தன்னைக் கட்டவிழ்த்து கட்டவிழ்த்து விரிவும் ஆழமும் தேடிப் பயணிக்கிறது. அந்தப் பயணம் தான் பிரமிளின் அடையாளம் என்றாகிவிட்டது. தன் வாசகர்களாலும் ஏன் எதிர்ப் பாசறையாளர்களாலும் "கவிஞன்" என அங்கீகரிக்கப் பட்ட பிரமிளின் கவிதைகளை ஈழக்கவி நுண்ணிய உசாவல் செய்கிறார்.

மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் மெல்பேர்ண் மணி (திருமதி கனகமணி அம்பலவாணபிள்ளை) மறைந்தார் ! அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலச்சங்கத்தில் இணைந்திருந்தவர் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
06 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியா – மெல்பனில் எம்மத்தியில் வாழ்ந்த முன்னாள் ஆசிரியரும், மூத்த எழுத்தாளருமான திருமதி கனகமணி அம்பலவாண பிள்ளை ( மெல்பேர்ண் மணி ) அவர்கள் மறைந்துவிட்டார், என்ற துயரமான செய்தி அறிந்தவுடன், அன்னாரின் புதல்வி இசை ஆசிரியை திருமதி ரமா சிவராஜா அவர்களை தெடர்புகொண்டு அனுதாபமும், ஆறுதலும் தெரிவித்துவிட்டே, இந்த அஞ்சலிக்குறிப்பினை கனத்த மனதுடன் எழுதுகின்றேன்.

நான் உடல் நலம் குன்றியிருக்கும் சமகாலத்தில், தமது மகள், மருமகனுடன் என்னைப்பார்க்க வந்து ஆறுதல் சொன்னவர், இந்த இலக்கிய சகோதரி. அவர் பற்றி, இடம்பெற்ற ஒரு விரிவான ஆக்கம், கடந்த மார்ச் மாதம் நான் வெளியிட்ட யாதுமாகி ( இரண்டாம் பாகம் ) நூலிலும் வெளியாகியிருக்கிறது. முன்னர் ஊடகங்களில் அந்த ஆக்கம் வெளியானபோதும் அவர் அதனை வாசித்திருக்கிறார். மீண்டும் அந்தப்பதிவை எமது வாசகர்களுக்கு , ஒரு சில மாற்றங்களுடன் , வழங்குகின்றேன்.

தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்தை 2001 ஆம் ஆண்டு ஆரம்பித்தபோதே, நூல்கள் தொடர்பான வாசிப்பு அனுபவப் பகிர்வு நிகழ்ச்சியையும் அதில் இணைத்துக்கொண்டோம். கடந்த பல வருட காலமாக இந்நிகழ்வு நடந்துவருகிறது.

எழுத்தாளர்கள் எவ்வளவுதான் எழுதினாலும் அவற்றை படிப்பதற்கு வாசகர்கள் இல்லையேல், எழுத்தாளர்கள் காணாமல் போய்விடுவார்கள். கலைஞர்களுக்கு ரசிகர்கள் எவ்வளவு முக்கியமோ, அவ்வாறே எழுத்தாளர்களுக்கும் வாசகர்கள் மிக மிக முக்கியம்.

மேலும் படிக்க ...

ஈழநாடு எஸ்.கே.காசிலிங்கம் அவர்களின் அமுத விழா மலர் வெளியீடு!

விவரங்கள்
- தகவல் - வி.ரி.இளங்கோவன் -
நிகழ்வுகள்
05 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நிகழ்வு - சண்முகதாசன் நினைவுப் பேருரையும் நூல் வெளியீடும்!

விவரங்கள்
- தகவல் - வி.ரி.இளங்கோவன் -
நிகழ்வுகள்
05 ஜூலை 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மற்ற கட்டுரைகள் ...

  1. டால்ஸ்டாயின் முகங்கள்: கார்க்கி – பகுதி 8 - ஜோதிகுமார் -
  2. திருக்குறள் ஆய்வில் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களின் பங்களிப்பு! - முனைவர் சு.சோமசுந்தரி, ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை -
  3. செங்கம்‌ சுப்பிரமணியர்‌ திருக்கோயில்‌ ! - முனைவர் பீ. பெரியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317, தமிழ்நாடு, இந்தியா, -
  4. பயணத்தொடர் - யப்பானில் சில நாட்கள் (6 ) காமகுரா அமிதா புத்தர்! - நடேசன் -
  5. அதிஷ்டக்காரரா? - ஶ்ரீரஞ்சனி -
  6. டால்ஸ்டாயின் முகங்கள்: கார்க்கி – பகுதி 7 - ஜோதிகுமார் -
  7. கம்பராமாயணத்தில் ஆயிரம் என்ற எண்ணுப்பெயரின் சிறப்புகள்! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
  8. மீண்டும் பாப்பா பாரதி - மாவை நித்தியானந்தன் -
  9. புகலிட அன்னையே! நீ வாழ்க! - வ.ந.கிரிதரன் -
  10. 'தமிழ்க் கவியுலகில் தனிக்கொடி ஏற்றினார்!' - - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
  11. இந்து லிங்கேஸ் பக்கம்!
  12. பயணத்தொடர்: யப்பானில் சில நாட்கள் (5) - இரவில் டோக்கியோ - நடேசன் -
  13. டால்ஸ்டாயின் முகங்கள்: கார்க்கி – பகுதி 6 - ஜோதிகுமார் -
  14. வாசிப்பும், யோசிப்பும் : எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரனின் 'மூன்று மழைக்கால இரவுகள்' சிறுகதை! - வ.ந.கிரிதரன் -
பக்கம் 12 / 119
  • முதல்
  • முந்தைய
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • அடுத்த
  • கடைசி