பதிவுகள் முகப்பு

சிந்தனைக் களம்: ‘செயற்கை நுண்ணறிவு நோக்கில் பண்ணிசை மரபு’

விவரங்கள்
- தகவல்: முனைவர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
28 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting |Meeting ID: 861 6957 8632 | Passcode: 687942

மேலும் படிக்க ...

பின்காலனியப் பார்வையில் அழகு சுப்பிரமணியம்! (பகுதி 2) - மேமன்கவி -

விவரங்கள்
- மேமன்கவி -
இலக்கியம்
27 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

6

இராஜ அரியரத்தினத்தின் அழகுவின் கதையை தமிழுக்கு கொண்டுவந்த (“சேதுப்பாட்டி”) முயற்சிக்குப் பிறகு, அழகுவின் ஆங்கிலக் கதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பிற்கான அடுத்த முக்கிய முயற்சியாக 1973ஆம் ஆண்டு மல்லிகை மார்ச் மாத இதழில் (அழகுவின் மறைவை ஒட்டி அஞ்சலி செலுத்தப்பட்ட இதழ்) அழகுவின் The Scholar என்ற ஆங்கிலக் கதை “பட்டதாரி மாணவன்” என்ற தலைப்பில் ராஜஸ்ரீகாந்தனால் மொழிபெயர்க்கப்பட்டது.

அக்காலகட்டத்தில் ராஜஸ்ரீகாந்தன் அவர்களின் கையில் கிடைத்த அழகுவின் நிறைவேறாத குறுநாவலான Mr. Moon மொழிபெயர்ப்பு 1975–1976 மல்லிகை இதழ்களில் வெளிவந்தது. ஆனால் Mr. Moon இன் ஆங்கிலப் பிரதியை நமக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை. இதுவரை அது ஆங்கிலத்திலோ தமிழிலோ நூலுருவம் பெறவில்லை.

1999ஆம் ஆண்டு ஜூன் மாதம், ராஜஸ்ரீகாந்தன் அழகுவின் 12 சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து நீதிபதியின் மகன் என்ற பெயரில் வெளியிட்டார். அதில் மொழிபெயர்ப்புத் துறை பற்றிய ராஜஸ்ரீகாந்தனின் விரிவான குறிப்பும், மேமன்கவியின் அட்டைக் குறிப்பும் இடம்பெற்றன. அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தும் வீரகேசரியில் பணிபுரிந்தும் வந்த சூரியகுமாரி அந்த மொழிபெயர்ப்பு நூலைப் பற்றி ஒரு விமர்சனத்தையும் எழுதியிருந்தார்.

அத்தொகுப்பில் இடம்பெற்ற அழகுவின் “கணிதவியலாளன்” (The Mathematician) என்ற தமிழ் மொழிபெயர்ப்புக் கதை பல இலக்கிய இதழ்களில் மறுபிரசுரமாகியுள்ளது.இக்கட்டுரை ஆசிரியரின் தயாரிப்பில், 1991ஆம் ஆண்டு தமிழக திருப்பூரில் இருந்து சுப்ரபாரதிமணியன் ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த கனவு 17வது இதழில், ராஜஸ்ரீகாந்தன் மொழிபெயர்த்த “கணிதவியலாளன்” முதன்மைக் கதையாக இடம் பெற்றது.இவ்வாறு, ஒரு தொகை அழகுவின் கதைகள் ராஜஸ்ரீகாந்தனின் மொழிபெயர்ப்பு முயற்சியால் நமக்குக் கிடைத்தன.

மேலும் படிக்க ...

கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) ! (பகுதி 2) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
27 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பகுதி இரண்டு: கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பு!

1. நல்லூர்க் காலம் -  நகர அமைப்பு மற்றும்  கட்டடக்கலை

நல்லூர் ராஜதானியாக விளங்கிய காலகட்டம் பற்றிக்  குறிப்பிடுகையில் ஒல்லாந்தர் காலத்து நிலப்படங்கள், போர்த்துக்கேயர் காலத்து வரலாற்று அறிஞர்கள், பாதிரிமார்களின் நூல்கள் , கள ஆய்வு போன்றவற்றிலிருந்து நல்லூர் ராஜதானியின் தெருக்கள், ஆலயங்கள் பற்றிய தன் கருத்தை முன் வைக்கின்றார். எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' (1996) நூல் பற்றியும் குறிப்பிடுகின்றார். 

"...முத்திரைச் சந்தை ஏறத்தாழ  இதன் மையத்தில் அமைந்துள்ளது.  எனினும், அக்கால நல்லூர்  ஒழுங்கான சதுர வடிவம் கொண்டது என்றோ,  அதன் சரியான மையத்திஒல் முத்திரைச் சந்தை  இருந்தது எனறோ  எடுத்துக்கொள்ள முடியாது.  ஒல்லாந்தர் கால நல்லூர்  ஒழுங்கற்ற வடிவம்  கொண்டதாக இருந்ததையே  அக்கால நிலப்படங்கள்  காட்டுகின்றன.  தற்காலத்தில் முத்திரைச்சந்தையிலிருந்து நான்குதிசைகளை நோக்கிச் செல்லும் வீதிகள் நல்லூர் தலைநகராக இருந்த காலத்திலேயே இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.  தெற்கு நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதி மட்டும் அக்காலத்தில் இருந்திருக்கலாம்." ('யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) , பக்கம் 69)

நகரம் ஒழுங்கான சதுர வடிவில் இருந்ததாகவோ , சந்தை நகரின் மையத்தில் இருந்ததாகவோ எடுத்துக்கொள்ள முடியாது என்ற  முடிவுக்கு அவர் வருவதற்கு முன்னர் , இவ்விடயத்தில் கட்டடக்கலை பற்றி, நகர அமைப்புப் பற்றிய வாஸ்துசாத்திர விதிகளையும் சிறிது கவனத்திலெடுத்திருக்கலாம். ஏனென்றால் நாம் இன்று வரை வாஸ்துசாஸ்த்திரம் பார்த்துத்தான் வீடுகளைக் கட்டுகின்றோம். இவ்விதிகளைத்தான் எம் முன்னோரும் நகரங்களை அமைக்கையில் பின் பற்றினார்கள். இவ்விதிகளின்படி தலைநகர்களை அமைக்கும்போது நகரின் மையத்தில் கிழக்கு - மேற்காக, வடக்கு - தெற்காக இரு பிரதான பாதைகள் இருக்க வேண்டும் எனவும், நகரம் சதுர வடிவில் (அவ்விதம் அமைக்க முடியாத சூழலில் செவ்வக வடிவில் ) அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் இவ்விதம் அமைக்கப்படும் தலைநகரைச்சுற்றி மதில் அமைக்கப்பட வேண்டும் எனவும், பிரதான பாதைகள் மதில்களின் வாசல்களை சந்திக்குமிடத்துக்கண்மையில் ஒவ்வொரு திக்கிலும் ஆலயங்கள் அமைக்கப்பட வேண்டுமெனவும் இவ்விதிகள் குறிப்பிடுகின்றன.  இவ்விதமான பண்டைய நகர அமைப்பு விதிகளை ஆராய்ந்து , தென்னிந்திய , வட இந்திய நகரங்கள் , ஆலயங்களையெல்லாம் ஆராய்ந்திருக்கும் Architecture of the World: India  என்னும் நூல் இவற்றை ஆராய்வதற்குரிய சிறந்த உசாத்துணை நூல்களில் ஒன்று. (Andreas Wolwahsen , Henri Stierlin (Editor)  இந்நிலையில் மயூரநாதன் இவ்விடயத்தில் முடிந்த முடிவுக்கு வராமல், வாஸ்துசாத்திர விதிகளின்படி அவ்விதம் இருந்திருக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால் அதற்காக உறுதியான ஆதாரங்கள் இல்லையென்று குறிப்பிட்டிருக்கலாம் என்று மேற்படி அவரது கருத்தை வாசித்தபோது தோன்றியது.

மேலும் படிக்க ...

கட்டடக்கலைஞர் மயூரநாதன் இ.மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) ! (பகுதி 1) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
26 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[ சென்ற ஞாயிறு 'டொரோண்டோ'ப் பெருநகரில் நடைபெற்ற கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் ''யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)1" நூல் பற்றி நான் ஆற்றிய உரையின் விரிவான. ஓரளவு முழுமையான கட்டுரையிது. நேரக்கட்டுப்பாடு காரணமாக அங்கு முழுமையாக என் உரையினை ஆற்ற் முடியாது போயிற்று. அதனை முழுமையாகத் தருவது முக்கியம் என்பதால் அது பதிவுகள் இணைய இதழில் முழுமையாக இடம் பெறுகின்றது.]

1.

வரலாற்று முக்கியத்துவம்

கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் அவரது 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)' என்னும் இந்த நூல் மூலம் சிறந்த வரலாற்று அறிஞர்களில் ஒருவராக முகிழ்த்திருக்கின்றார் என்றுதான் கூற வேண்டும்.  இலங்கைத்  தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முககிய குறைபாடுகளில் ஒன்று  வரலாற்றுத் தெளிவின்மை.  இலங்கையின் தொன்மக் குடிகளாக இருந்தும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை கோலோச்சிய யாழ்ப்பாண இராச்சியம் பற்றி, அதன் மன்னர்களைப்பற்றி, இருந்த இராஜதானிகள் பற்றி ஆதாரபூர்வமான,  வரலாற்றுச் சான்றுகளுடன் கூடிய வரலாறு  இல்லை என்றுதான் கூற வேண்டும்.  இலங்கைத் தமிழரின்  வரலாற்றைப் பற்றிக் கூறும் யாழ்ப்பாண வைபவமாலை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நூல். அது போல் கைலையாமாலை , வையாபாடல் போன்றவையும் அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை. இவையெல்லாமே கூறும் வரலாறு இவை எழுதப்பட்ட காலத்திற்கு முற்பட்டவை. எனவே பல கர்ணபரம்பரைக் கதைகள், கேள்வி ஞானத்தகவல்களை உள்ளடக்கியவை. இவற்றை வடி கட்டு , உண்மை பொய் அறிவதற்கு முதலியார் செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோர் முயற்சி செய்திருக்கின்றார்கள்.  அவற்றின் விளைவுகளே முதலியார் செ.இராசநாயகத்தின் யாழ்ப்பாணச் சரித்திரமும், சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனமும். மேலும் பலர் யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதியிருந்தாலும், இவை முக்கியமானவை.

மேலும் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுவதில் இலங்கைத் தமிழர்  காட்டும் அசிரத்தை. இவ்விடயத்தில் எம்மவருக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை என்று நூலாசிரியர் மயூரநாதன்  அண்மைய ஆதித்தொலைக்காட்சி நேர்காணலில் குறிப்பிட்டிருப்பது உண்மைதான். உதாரணத்துக்கு அவர் கங்கா சத்திரம் இடிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். கங்கா சத்திரம் இருந்ததால்தான் அப்பகுதி சத்திரத்துச் சந்தி என்று அழைக்கப்படுவதையும் சுட்டிக் காட்டியிருந்தார். இச்சமயத்தில் எனக்கு ஒரு நினைவு தோன்றுகின்றது. எண்பதுகளில் யாழ் ஈழநாடு பத்திரிகையில் யாழ் நகரில் பழமையின் சின்னங்கள் பேணப்படுவதன் அவசியம் என்றொரு கட்டுரை எழுதினேன்.  எழுதிய பின்னரே யாழ் மாநகரசபை கங்கா சத்திரத்தை இடித்தது. இவ்விதமிருக்கின்றது எம்மவரின் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுதல் பற்றிய புரிதல். இந்நிலை மாற வேண்டும். இதற்கு நிச்சயம் இந்நூல் உதவி புரியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

மேலும் படிக்க ...

பயணத்தொடர் : கரிபியன் கடற்பயணம் (1) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
26 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து ஆங்கிலேயருக்கு சொந்தமான (Princess Elizabeth) பயணக் கப்பலில் ஏறினோம். இது எங்களுக்கு கரிபியன் தீவுகளுக்கான ஒரு மாதக் கடற்  பயணம்.  அடிமனத்தில் முதல் பயணமாதலால்  எப்படி பயணம் இருக்கும்? 
போரடிக்குமா? 

புத்தகங்கள் மற்றும் கம்பியூட்டர் இருந்தால் எனது பொழுது போகும் ஆனால் சியாமளாவின நிலைவேறு.  கடல் குருஸ் என்பது இதுவரை வயதானவர்களுக்கு உள்ள பயணம் என்ற நினைவே மனதில் இருந்தது. பல நினைவுகளை சுமந்தபடி பொதிகளுடன் கப்பலில் ஏறினோம். ஆரம்பத்தில் கப்பலில் ஏறுவது, விமானத்தில் ஏறுவது போல் பாஸ்போர்ட், விசா மற்றும் பல சோதனைகள் இருந்தன. 

கப்பலில் எந்த குடிப்பானங்களும் கொண்டு செல்ல முடியாது என்று விதி இருப்பது நான் அறிந்ததே. ஆனாலும், சான் பிரான்சிஸ்கோ ஹோட்டலில் தங்கியபோது வருபவர்களுக்கு இரண்டு இலவசமாக குடிப்பானம் உள்ளது – அதை “வெல்கம் ரிங்” என்று சொல்லலாம். நான் அதைக் குடிக்கவில்லை, பிறகு மறந்தே போய்விட்டேன். 

இரண்டாவது நாள் அதை அங்குள்ள வரவேற்பில் உள்ள இளம் பெண்ணிடம் வெல்கம் ரிங்கை  நினைவுபடுத்திபோது, அவள் சிரித்துவிட்டு  ‘அது காலாவதியாகிவிட்டது’  என்று சொல்லிவிட்டு, பின்பு உள்ளே போய் ஒரு புதிய வைன் கொண்டு தனது அன்பளிப்பாக வழங்கினாள். இளம் பெண்கள் நம்மை சட்டை செய்யும் வயது கடந்த போதிலும், ‘என்ன செய்கிறாய்?’ என்று கேட்டேன். படிப்பதாக கூறினதும், அவளது கையில் பத்து அமெரிக்க டாலர்கள் வைத்தேன். அன்று இரவு ஒரு கிளாஸ் குடித்து, முக்கால் போத்தல் மீதி இருந்தது.

மேலும் படிக்க ...

ஆய்வு: பிராந்திய மொழியின் உக்கிர அழகியல்: சோலைக்கிளியின் ‘எட்டாவது நரகம்’ (1) - ஒரு அதிநவீன வாசிப்பு! - ஈழக்கவி (ஏ.எச்எம்.நவாஷ்) -

விவரங்கள்
- ஈழக்கவி (ஏ.எச்எம்.நவாஷ்) -
ஆய்வு
25 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அத்தியாயக் கட்டமைப்பு (Proposed Chapter Outline)

அறிமுகம்: எண்பதுகளின் ஈழத்துக்கவிதைச் சூழலும் சோலைக்கிளியின் வரவும்

    சமூக யதார்த்தவாதக் கவிதைகளுக்கு மத்தியில் சோலைக்கிளியின் 'உணர்வுநிலை/அனுபவநிலை' மொழியின் தனித்துவம்.

    'மன்னித்தல் சாத்தியமற்ற' எட்டாவது நரகமாக மாறும் பூகோளம் - தலைப்பின் தத்துவார்த்தப் பின்னணி (இஸ்லாமிய ஏழடுக்கு நரகக் குறியீட்டின் நீட்சி).

அத்தியாயம் 1: கருப்பையின் வன்முறையும் அதிர்ச்சிப் படிமங்களும் (Trauma and Dystopian Imagery)

    ஆய்வுக்குரிய கவிதைகள்: 'தொப்பி சப்பாத்துச் சிசு', 'வால் மனிதர்கள்', 'தொட்டில்'

    பகுப்பாய்வு: போர்க்காலச் சூழல் மனிதனின் எதிர்காலச் சந்ததியை எப்படி வன்முறை வடிவங்களாக மாற்றுகிறது? 'விரல் சூப்ப நேரமில்லாத', 'கருப்பையிலேயே கத்தியோடு பிறக்கும்' குழந்தைகள் பற்றிய சர்ரியலிசப் படிமங்கள் எவ்வாறு 'டிஸ்டோபியன்' (Dystopian) எதிர்காலத்தை தீர்க்கதரிசனமாக உரைக்கின்றன என்ற ஆய்வு.

அத்தியாயம 2: உடற்கூற்று அரசியலும் அண்டவியல் சிதைவும் (Anatomy of Violence & Cosmic Rupture)

    ஆய்வுக்குரிய கவிதைகள்: 'எனது தாய்ப்பால்', 'நவீன இலங்காபுரி', 'இறகு உதிர்ந்த கிராமம்'

    பகுப்பாய்வு: தாய்ப்பால் ஈயக்குழம்பாக மாறுதல், சூரியனின் மையப்புள்ளியில் வாய் வைத்தல் போன்ற உக்கிரமான படிமங்கள் வன்முறையின் தீவிரத்தை உடலரசியலாக (Body Politics) மாற்றும் விதம். போர் எவ்வாறு நிலவு, விண்மீன், தென்னைமரம், வற்றாளைக்கொடி (நிலக்கண்ணி) என இயற்கையையே அண்டவியல் ரீதியாகச் சிதைக்கிறது என்ற பகுப்பாய்வு.

மேலும் படிக்க ...

சிறுகதை: தப்புத்தாளங்கள்! - பவானி சற்குணசெல்வம் (நெதர்லாந்து) -

விவரங்கள்
- பவானி சற்குணசெல்வம் (நெதர்லாந்து) -
சிறுகதை
23 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



வானதி பிறந்தது வசதியான குடும்பத்தில். ஆனால் அவளின் வாழ்க்கையின் உண்மையான வடிவம் கனடாவின் பனிக்காற்றில் தான் செதுக்கப்பட்டது. ஒழுங்கும் ஒத்திகையும் கலந்து கிடந்த வளர்ப்பு, அதன் நடுவே, கடின உழைப்பை தன் நெஞ்சின் துடிப்பாக மாற்றிக் கொண்டு, அவள் வைத்தியராக உயர்ந்தாள்.

சிறுவர் வைத்திய நிபுணராக அவளின் நாட்கள், குழந்தைகளின் அழுகையும் சிரிப்பும் கலந்த ஓர் இனிய இசைபோல் பாய்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு குழந்தையின் கண்ணீரும் அவளுக்கு ஒரு பொறுப்பாகவும், ஒவ்வொரு சிரிப்பும் ஒரு வெற்றியாகவும் மாறின. மருத்துவமனையின் வெள்ளைச் சுவர்களுக்குள் அவள் உருவாக்கிய உலகம்—அன்பும் அர்ப்பணிப்பும் கலந்த ஒரு சிறிய பிரபஞ்சம்.

உலகின் பல நகரங்கள் அவளின் காலடிச்சுவடுகளை நினைவில் வைத்திருந்தன. மாநாடுகள், பயிற்சிகள், ஆராய்ச்சிகள் என அவளின் வாழ்க்கை நின்று விடாத ஒரு சக்கரம் போல இடையறாது சுழன்றது. அந்த சுழற்சியின் மையத்தில் இருந்தது அவளின் உறுதி; “நிற்காதே” என்று அவளையே அவள் தொடர்ந்து அழைக்கும் ஓர் உள் குரல்.

அவளின் பெற்றோர், மண்ணின் மணத்தை இழக்காதவர்கள். வெளிநாட்டின் வசதிகளுக்குள் வாழ்ந்தாலும், சொந்த கலாச்சாரத்தின் நெஞ்சுரத்தை தளர விடாதவர்கள். அந்த மரபின் கயிறு உறுதியாக கட்டப்பட்டிருந்தது—அதன் ஒரு முடிச்சில் தான் மாதவன் நுழைந்தான்.

மாதவன்—சொந்த நாட்டில் சட்டம் படித்து வழக்கறிஞராகப் பணியாற்றியவன். அவன் பார்வை அமைதியாக இருந்தது; ஆனால் அந்த அமைதியின் அடியில் ஓர் ஆழம் இருந்தது. மெதுவாக பேசும் அவன் சொற்கள், சிந்தித்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாக இருந்தன. அவன் உள்ளத்தின் ஆழத்தில் ஓடிக்கொண்டிருந்தது இசையின் ஒரு  நதி.

மேலும் படிக்க ...

பின்காலனியப் பார்வையில் அழகு சுப்பிரமணியம்! (பகுதி 1) - மேமன்கவி -

விவரங்கள்
) - மேமன்கவி -
இலக்கியம்
23 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

             - எழுத்தாளர் அழகு சுப்பிரமணியம் -

1

ஈழத்திலிருந்து ஆங்கிலத்தில் எழுதி உலகப்புகழ் பெற்ற இலங்கைத் தமிழர். இவர் இலங்கைக் காரைநகரில் 1915 பிப்ரவரி 15 பிறந்தவர். இவரது தந்தையார் இலங்கையில் நீதிபதியாகப் பணியாற்றியவர். இவரும் அவரது தந்தையாரும் இலக்கிய ஆர்வமிக்கவர்கள். அதனால் அவரது மகன் அழகு சுப்பிரமணியத்தை வெளிநாட்டில் சட்டத் துறையில் பயில வைத்தார். சட்டத்துறையில் பரிஸ்டர் பட்டம் பெற்ற இவர் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றினார். அவரது குடும்பத்தினரின் இலக்கியத்துறை ஆர்வத்தின் காரணமாக அழகு சுப்பிரமணியமும் ஆங்கில இலக்கியத்துறையில் ஈடுபட்டு உலகப் புகழ் பெற வழிவகுத்தது.

இலண்டனில் பயின்றுகொண்டிருந்த காலத்திலே அங்கு உலக கலை இலக்கிய ஆளுமைகளுடன் தொடர்புக் கொண்டிருந்தார். தாகூர், இந்தியாவின் முற்போக்கு எழுத்தாளர் முல்ராஜ் ஆனந்த் போன்ற உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களுடனும் அறிஞர்களுடனும் தொடர்பினைப் பேணியவர். அதன் காரணமாக இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இணைச் செயலாளராக அழகு இயங்கினார். இத்தகையவர்களின் தொடர்பின் காரணமாக முற்போக்கு இயக்கம், இடதுசாரி இயக்கம், காலனிய எதிர்ப்பு இயக்கம் போன்றவைகளில் ஈடுபட்டவர். “Indian Writing” என்ற காலாண்டுச் சஞ்சிகையின் இணையாசிரியராகவும் இயங்கினார்.

அழகுவின் கதைகள் உலக, இலண்டன் மற்றும் இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இடம்பிடித்துள்ளன. உதாரணமாக இந்தியச் சஞ்சிகைகளில் ஒன்றான The Illustrated Weekly of India போன்றச் சஞ்சிகைகளில் கதைகள் எழுதி இலக்கிய விமர்சகர்களிடையும் வாசகர்களிடையும் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

மேலும் படிக்க ...

படித்தோம் சொல்கின்றேம்: மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய – பத்திரிகைத்துறையில் என்கதை! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
23 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேர்வின்டீ. சில்வாவின் புதல்வன் கலாநிதி தயான் ஜெயதிலக்காவும் இலங்கையில் மிகவும் பிரபலமானவர். கடந்த அரசாங்கங்களின் காலத்தில் ரஷ்யா, மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராவும் பணியாற்றியவர். இவர் ஒரு காலகட்டத்தில் வட-கிழக்கு மாகாண சபையிலும் அமைச்சராக இருந்தார். அதற்கு முன்னர் இவரும் இலங்கையில் சிறிது காலம் தலைமறைவாக வாழ நேரிட்டது. அவ்வாறான தலைமறைவு வாழ்க்கையின்போது ஒரு பிரபல தமிழரின் கொழும்பு இல்லத்தில்தான் தங்கியிருந்தார். அந்தத் தமிழரும் மிகவும் பிரபலமானவர்தான். அவர் தோழர் என். சண்முகதாசன்.

இதுபோன்ற பல செய்திகளை வீரகேசரி – தினக்குரல் மற்றும் சமகாலம் முதலான ஏடுகளில் சிரேஷ்ட ஆசிரியராக பணியாற்றிய வீரகத்தி தனபாலசிங்கம் எழுதியிருக்கும் - பத்திரிகைத்துறையில் என் கதை - என்ற நூலிலிருந்து நாம் தெரிந்துகொள்கின்றோம்.

தனபாலசிங்கம், ஏற்கனவே, நோக்கு ( தினக்குரல் ஆசிரிய தலையங்கங்கள்) ஊருக்கு நல்லது சொல்வேன், தமிழ் தேசியவாத அரசியல், ஆகிய நூல்களையும் வரவாக்கியிருப்பவர். தோழர் சண்முகதாசனின் கட்டுரைகள், மற்றும் சண்முகதாசன் நூற்றாண்டு மனப்பதிவுகள் ஆகியற்றையும் வெளியிட்டிருக்கிறார்.

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை உக்கிரமடைந்து கலவரங்கள் தொடங்கிய காலப்பகுதியில் பத்திரிகைத்துறையில் பிரவேசித்தவர். வீரகேசரியில் தனது தொழில்சார்ந்த வாழ்க்கையை முதலில் ஒப்புநோக்காளராக ஆரம்பித்தவர். 1977 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தென்னிலங்கையில் இனக்கலவரம் நடந்தது. அப்போது, பிரதமராகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்தனா “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் “ என்று சூளுரைத்தார். இவ்வாறு நாட்டில் மிகுந்த நெருக்கடி தொடங்கியவேளையிவ் தனபாலசிங்கத்தின் கொழும்பு வாழ்க்கை ஆரம்பமாகிறது. நாமிருவரும் அவ்வேளையில் வீரகேசரியில் ஒப்புநோக்காளர்களாக இணைந்தோம். அன்று முதல் இற்றை வரையில் இவருடனான எனது நட்புறவு நீடிக்கிறது.

படிப்படியாக தன்னை இவர் எவ்வாறு வளர்த்துக்கொண்டார் என்பதையும், இந்நூலில் நனவிடை தோய்ந்து பதிவுசெய்திருக்கிறார். இந்நூலை இலங்கையின் மூத்த இடதுசாரித்தோழரும் பத்திரிகையாளருமான (அமரர் பாதிநேசன் வீ. சின்னத்தம்பி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். பேராசிரியர் எம். ஏ. நுஃமான் முகவுரையும், மூத்த பத்திரிகையாளர் டீ. பி. எஸ். ஜெயராஜ், பேராசிரியர் சந்திரிக்கா சுப்பிரமணியம், தெட்சணா மூர்த்தி மதுசூதனன் ஆகியோர் தங்கள் கருத்துரைகளையும் எழுதியுள்ளனர்.

மேலும் படிக்க ...

ஆட்சிச் சொல்லகராதியில் பயன்படுத்தப் பட்டிருக்கும் சங்கத் தமிழ் கலைச்சொற்கள்! -முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா, துணைத்தலைவர்/இயக்குநர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை -

விவரங்கள்
-முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா -
ஆய்வு
23 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* கட்டுரையாளர்: முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா, துணைத்தலைவர்/இயக்குநர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை 


முன்னுரை

தமிழை வளம் மிக்க மொழியாக உலகிற்கு உரைக்க அடித்தளம் இட்டவை சங்க இலக்கியங்களாகும். உலகமொழிகளில் நம் மொழியை இனங்காட்டுதற்கும் நம் பழந்தமிழரின் காதல், , வீரம், கொடை, ஈகை முதலான நற்பண்புகளை எடுத்தோதுவதற்கும் வழிகோலுவன சங்க இலக்கியங்கள். அத்தகு நெறியில் சங்க இலக்கியங்களில் உள்ள கலைச்சொற்களை இனம் கண்டால் வருகின்ற இளந்தலைமுறையினர் அதைப் பயன்படுத்துவதற்கும் நவீன தொழில்நுட்ப உலகிற்கான முன்னுதாரணமாகவும் அவை அமையும். அந்த வகையில் ஆட்சிச் சொல்லகராதியில் பயன்படுத்தப் பட்டிருக்கும் சங்கத் தமிழ் கலைச்சொற்கள் குறித்து அறிந்து கொள்வதும் ஆய்வு செய்வதும் இங்கு தேவையாகிறது.

ஆட்சிச் சொல்லகராதி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் வெளியிட்டுள்ள ஆட்சிச் சொல்லகராதி மூன்று தொகுதிகளை உள்ளடக்கியது. 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

சங்கத் தமிழ் கலைச்சொற்கள்

ஆட்சிச் சொல்லகராதி தொகுதி-1இல் ஆநிரை கவர்வோர் (பக்.1), கரந்துறைப்பாட்டு(பக்.20), காழகில் (பக்.51), வறியார்க்கீவோர், அறச்சாலை, ,இரவலர் இல்லம், (பக்.51), மலைப்போர்ப்படை, நறுமணப்புல்வகை, அடுமனை உணவச்சம் (பக்.53), மயங்குபொருள், இடைஞர்(பக்.54), வட்டரங்கு சார், பொங்கு உவகை(பக்.57), கடுந்துயர்(பக்.61), நாடு கவர்தல்(பக்.63), நறுநெய்யாட்டு, கரந்துறைதல் (பக்.64), முதுமொழி, மீயுயர்(பக்.71), வளை நரம்பிழை, நனி விருப்பன், கடுஞ்செலவு, களரி(பக்.79), வழக்குரைத்தல், கடுஞ்சொல்லாடல், பாழ்நிலம், அணங்கு(பக்.80), போர்க்கலக் கம்மியர், படைக்கலக் கொட்டில், உள்ளிட்ட ஏராளமான சொற்கள் சங்க கால மக்களின் பயன்பாட்டில் இருந்த வேர்ச்சொற்கள் பலவும் கலைச்சொற்களாக விளங்கியமை என்று தெளியலாம். ஏனெனில் சங்க இலக்கியங்களில் இத்தகு சொற்களை இனம் காணலாம்.

மேலும் படிக்க ...

ஆதி டிவி (Aathi TV): (நேர்காணல்) அன்றும் இன்றும் வரலாற்றுப் பேழை - யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
23 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை , மே 24, 2026 அன்று ஸ்கார்பரோ சிவிக் சென்டரில் (டொரோண்டோ, கனடா)  நடைபெறவுள்ள கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் ' யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)' நூல் வெளியீடு பற்றி , ஆதி தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்காணல் இது. இதில் நானும், நண்பர் எழுத்தாளர் கனடா மூர்த்தியும் நேரில் கலந்து கொண்டோம். மெய்நிகர் வழியாக நூலாசிரியர் இ.மயூரநாதன் கலந்து கொண்டார். 

தற்போது இந்நேர்காணல் ஆதி தொலைக்காட்சியின் யு டியூப் சானலில் பதிவேற்றப்பட்டுள்ளது. காணொளியைப் பாருங்கள். நூல் வெளியீட்டுக்கு வந்து ஆதரவு வழங்குங்கள்.  கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

காணொளிக்கான இணைப்பு - https://www.youtube.com/watch?v=JMogjIFOmZE

ஆதி டிவி  (Aathi TV):   (நேர்காணல்) அன்றும் இன்றும் வரலாற்றுப் பேழை - யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு!

தொகுப்பாளர்: ஜனந்தினி ஜெயனபவன்
சிறப்பு விருந்தினர்: இ. மயூரநாதன் | மு. நாராயண மூர்த்தி | வ.ந. கிரிதரன்
தொழில்நுட்பம்:  பிரதாப் ,  ஹரேன் | வழிநடத்தல்:  விஜிதா விமலன் | தயாரிப்பு : ஆதி டிவி (Aathi TV)

ஊடகவியலாளர் டேவிட் ஜெயராஜ் (டி.பி.எஸ்.ஜெயராஜ்) மறைவு பத்திரிகைத் துறைக்கு பெரிய இழப்பு! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
நிகழ்வுகள்
21 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ZOOM MEETING: https://us06web.zoom.us/j/82713649366#success


இலங்கைத் தமிழர் சமூகத்தைச் சேர்ந்த அனுபவமிக்க பத்திரிகையாளராக டேவிட் ஜெயராஜ் விளங்கினார். அவர் ஒரு சாதாரண செய்தியாளர் மட்டுமல்ல; கூர்மையான சமூகக் கவனிப்பாளராகவும் திகழ்ந்தார். அவரது எழுத்தின் அடையாளம் நேர்மையே. எந்த அலங்காரமோ மிகைப்போ இல்லாமல், உண்மையை உண்மையாகவே பதிவு செய்தார். அவருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவரது செய்தி வெளியீட்டின் நேர்மையை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது.

அவரது வாசகர்கள் தமிழர் சமூகத்தைத் தாண்டி பரவியிருந்தனர். எனது பல சிங்கள நண்பர்கள்கூட செய்தித்தாளை எடுத்தவுடன் முதலில் அவர் எழுதிய கட்டுரைகளையே வாசிப்பார்கள். இவ்வாறு சமூகத்தின் பல தரப்பினரிடமும் நம்பிக்கையைப் பெற்றிருப்பது ஒரு பத்திரிகையாளனுக்குக் கிடைக்கும் அரிதான சாதனையாகும்.

நான் இளமையிலிருந்தே அவரது எழுத்துக்களை வாசித்து வருகிறேன். ஐலன்ட் பத்திரிகையில் அவரது கட்டுரைகளை முதன்முதலாக வாசித்தபோது, அவை எனக்குள் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தின.

நான் ஆஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்தபின், அவர் கனடாவின் டொராண்டோவில் குடியேறினார். இருந்தபோதிலும், இலங்கைத் தமிழர் அரசியலைப் பற்றித் தொடர்ந்து எழுதி வந்தார். 1987 ஆம் ஆண்டு நான் ஆஸ்திரேலியாவில் உதயம் பத்திரிகையைத் தொடங்கியபோது, அவருடன் தொடர்ச்சியான தொடர்பில் இருந்தேன். அவரது பல கட்டுரைகளை தமிழில் வெளியிடும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.

மேலும் படிக்க ...

நினைவூட்டுகின்றோம்: கனடாவில் கட்டடக் கலைஞர் இ,மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948) நூல் வெளியீடு!

விவரங்கள்
- தகவல்: ஓராயம் -
நிகழ்வுகள்
20 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல் : முள்ளிவாய்க்கால்!

விவரங்கள்
வ.ந.கிரிதரன்
கவிதை
18 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வ.ந.கிரிதரனின் குரலில் இசைத்துப் பாடுவது SUNO 5.5
டிஜிட்டல் ஓவியம் - சாட்ஜிபிடி  வழி வநகி

பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=lY4GiyAL1rs

முள்ளிவாய்க்கால்  ஒரு நினைவுச்சின்னம்.
முள்ளிவாய்க்கால்  ஒரு நினைவுச்சின்னம்.

மானுடத்தின் கோர முகத்தை
மானுடத்தின் தீராச்சோகத்தினை
வெளிப்படுத்துமொரு 
நினைவுச் சின்னம்.

முள்ளிவாய்க்காலில் தர்மம் அன்று.
தலை காத்திருக்கவில்லை.
தலை குனிந்திருந்தது.

அதர்மத்தின் கோலோச்சுதலில்
எத்தனை மனிதர் இருப்பிழந்தார்?
எத்தனை மனிதர் உறவிழந்தார்?
எத்தனை மனிதர் கனவிழந்தார்?

மேலும் படிக்க ...

அக்கினிக் குஞ்சு சிறகு விரிக்கும்! -பங்கிரையான்-

விவரங்கள்
-பங்கிரையான்-
கவிதை
18 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



பாயும் நினைவுகளாய்
மறைந்து கிடக்கின்றன.

வலி சுமந்த சமூகம்,
விடியலைத் தேடி ஓடும் மனிதரில்
விழுந்த காயங்கள் ஆயிரம்—
ஒவ்வொரு அடியிலும்
மௌனத்தின் சிதறல்கள்.,
மனிதன் தேடும் விடியல்
தூரத்தில் மங்கலாய் தெரிகிறது.

மேலும் படிக்க ...

புதிய வண்ணத்துப்பூச்சி ! -துவாரகன் -

விவரங்கள்
-துவாரகன் -
கவிதை
18 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


அது புதிய வண்ணத்துப்பூச்சி 
அதன் வரவு மகிழ்ச்சியானது

தேன் குடிப்பதற்குப் பதிலாக 
எங்களோடு சேர்ந்து 
கஞ்சி குடிக்கவும் 
கூழ் குடிக்கவும் 
பண்டிகைகளில் பலகாரம் சாப்பிடவும் கூடுமென 
ஆரூடம் கணித்தனர்.

மிக அரிதான
செவ்வாச்சிவகை என்றும் கூறினர்.
அதன் வருகை கண்டு 
அம்மம்மா மிக மகிழ்ந்தார். 
சாமியறையில் நேரமெடுத்து 
வேண்டுதல்கள் செய்தார். 

மேலும் படிக்க ...

வானுக்கும் மண்ணுக்கும் இடையிலான சைகை (உலகளாவிய மெய்பொருள் கவிதை) - ஈழக்கவி (ஏ.எச்.எம்.நவாஷ்) -

விவரங்கள்
- ஈழக்கவி (ஏ.எச்.எம்.நவாஷ்) -
கவிதை
18 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 [ராஃபெல்லின் புகழ்பெற்ற ஓவியம் 'The School of Athens'. பிளேட்டோ விரலை மேலேயும், அரிஸ்டோட்டில் உள்ளங்கையைக் கீழேயும் காட்டியபடி இருக்கும் சித்திரம் அது. ராஃபெல்லின் அந்த உன்னதமான ஓவியம், வெறும் வண்ணங்களின் தொகுப்பல்ல; அது மனிதச் சிந்தனையின் இரு துருவங்களுக்கிடையிலான நித்திய உரையாடல். அந்த ஓவிய உரையாடல் கவிதையாக உயிர்ப்பாகியுள்ளது.]


I. முற்றுப்பெறாத நாகரிகங்களின் அருங்காட்சியகம்

பொருட்களைப் பாதுகாக்கும் காலம்
மலையேறிப் போகும்;
அருங்காட்சியகங்கள் இனி
மனிதப் பதற்றங்களைப் பாதுகாக்கும்.

காலநிலை கட்டுப்படுத்தப்பட்ட
கண்ணாடிக் கூண்டுக்குள்:
உடைந்த அகதி ஒருவனின் திசைகாட்டி,
குழந்தையின்
கீறல் விழுந்த கணினித் திரை,
எரிக்கப்பட்ட நூலகங்களின் சாம்பல்,
ஒரு தத்துவவாதியின்
பெயரிடப்படாத சந்தேகம்.

அதன் மையத்தில்:
அந்த இரண்டு சைகைகள்.
ஒன்று:
அரூப நெருப்பை நோக்கி எழும்பும் விரல்.
மற்றொன்று:
காயப்பட்ட பருப்பொருளை
நோக்கி இறங்கும் உள்ளங்கை.

பார்வையாளர்கள் மௌனமாக நிற்பார்கள்—
மனித இனத்தின்
புதைபடிவமான நரம்பு மண்டலத்தை
வெறித்துப் பார்ப்பது போல.

மேலும் படிக்க ...

பன்முக ஆளுமை மிக்க ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்கள் மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
18 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



பன்முக ஆளுமை மிக்க ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்கள் மறைந்த தகவலினை முகநூல்  வாயிலாக அறிந்தேன். துயருற்றேன். அவர் இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தவர், உறவினர், நண்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்குமென் ஆழ்ந்த இரங்கல்.

அவரை நான் அதிகம் சந்தித்ததில்லை. ஓரிரு தடவைகள் நேரில் சந்தித்துள்ளேன். ஆனால் அவர் என்னுடன் முகநூல் மெசஞ்சர் மூலம் தொடர்பிலிருந்தார். கடந்த 2019லிருந்து ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாள் அன்று மெசஞ்சர் மூலம்   வாழ்த்துச் செய்தியை அனுப்பிக்கொண்டிருந்தார். தான் எழுதும் ஆங்கிலக்கட்டுரைகள், அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளுக்கான இணைய இணைப்புகளை மெசஞ்சர்வாயிலாக அனுப்புவார். அவ்விதம் அவர் அனுப்பிய இறுதித்தகவல் மார்ச் 24 வந்திருந்தது. பாடகர் டி.எம்.எஸ். செளந்தரராஜன் பற்றிய பதிவு. ஒரு தடவை பிரிகேடியர் பால்ராஜ் பற்றிய அவரது கட்டுரைக்கு நான் எழுதியபோது அதற்கு அவரது வலைப்பதிவில் எதிர்வினை எழுதியதுடன் , மெசஞ்சர் மூலம் விரிவான பதிலையும் அனுப்பியிருந்தார்.

மேலும் படிக்க ...

சண்டிலிப்பாயின் கலைச்சங்கமம் - 2026! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
நிகழ்வுகள்
17 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடாவில் உள்ள சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் கலைச்சங்கமம் - 2026 ஆண்டு விழாவும் மற்றும் இரவு விருந்தும் சென்ற சனிக்கிழமை 2300, ரொறன்ரோ லோறன்ஸ் வீதியில் உள்ள ‘வயிட்சீல்ட் விருந்தினர் மண்டபத்தில்’ சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட வாசுகிதேவி மகாதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

முதலில் நடந்த மங்கள விளக்கேற்றல் நிகழ்வில் மன்றத் தலைவர் திரு. அஜய் மகேந்திரன், திருமதி மகேந்திரன், திருமதி தேவகி ராஜநாதன், பிரதம விருந்தினர் திருமதி வாசுகிதேவி மகாதேவன், டாக்டர் வரகுணன் மகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசியப்பண் ஆகியன இளம் பாடகி செல்வி. கிஸோரி ராஜ்குமாரினால் பாடப்பெற்றன. அடுத்து அமைதி வணக்கம் இடம் பெற்றது.

அடுத்து திருமதி லாசந்தி ராஜ்குமாரின் இராகாலயா பைன் ஆட்ஸ் மாணவிகளின் இசை நிகழ்ச்சி இடம் பெற்றது. வீணை, வயலின், புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளில் பாடல்கள் இசைக்கப்பெற்றன. இந்த இசை நிகழ்ச்சியில் சரண்யா ராகவன், தர்சனா சக்திதரன், ஹர்சினி ஸ்ரீஸ்கந்தகுமார், விதாரா குலசோதி, ஆரணி மோகனதாஸ், கிஸோரி ராஜ்குமார், ராஜ்பவன் ராஜ்குமார், திவ்ய நரேந்திரன் ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.

நிர்வாகக் குழுவின் சார்பாக, அமிர்தராஜா தேவதாசனின் வரவேற்புரையைத் தொடர்ந்து ஈசா பார்கவி செல்வகுமாரன், வித்தகி சபேசன் ஆகியோரது பரதநாட்டிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. தொடர்ந்து பிரிதம் சுரேசனின் பிரபல பாடல்களின் ட்ரம்பெட் இசைத் தொகுப்பு இடம் பெற்றது. அடுத்து லக்ஸன் கெங்காதரன், மாதங்கி திருஞானசம்பந்தன் ஆகியோரது இசை இடம் பெற்றது. தொடர்ந்து டாக்டர் வரகுணன் மகாதேவனின் ஸ்ராண்டப் மெடிசின் நிகழ்ச்சி இடம் பெற்றது.

மேலும் படிக்க ...

முனைவர் சு.சோமசுந்தரியின் ‘சில்லாட்டை’ சிறுகதை நூல் ஒரு பருந்துப்பார்வை! - முல்லைஅமுதன், இலண்டன்-

விவரங்கள்
- முல்லைஅமுதன், இலண்டன்-
நூல் அறிமுகம்
17 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழில் கவிதை, சிறுகதை, இலக்கியக்கட்டுரை, நூல்ஆய்வு என தன்னை இலக்கிய உலகில் அறியப்பட்ட எழுத்தாளர் சு.சோமசுந்தரி அவர்கள் காற்றுவெளி, தமிழ்நெஞ்சம், முத்தமிழ்நேசன், முத்தமிழ்க்கலசம், பதிவுகள் இணையம், ஞானம், வல்லினச்சிறகுகள், ஊடறு போன்ற பல இதழ்களின் மூலம் நமக்கு அறிமுகமானவரின் சிறுகதையைத் தனித்து நூலாக்குகின்ற அவரின் தெரிவு இன்றைய காலத்திற்கு அவசியமானதொன்று.

தெளிவான சிந்தனைகளைக் கொண்டவர். தனது அனுபவ வெளிப்பாடுகளை சிறப்புற சிறுகதைகளாக்கித் தருவதில் வல்லமையுள்ளவராகத் தெரிகிறார். அலுவலகத்தில் கடமையாற்றும் ஒரு பெண்ணின் அன்றாட சங்கடங்களை அத்துமீறல் கதையில் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் எனக்குப் பிடித்தது பாத்திரங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயராக இருப்பது. கார்குழலி உதாரணம். அதே போல ஒரு சராசரி அப்பாவின் மனநிலை, அவரின் இழப்பு, அவர் சார்ந்து குடும்பத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை பற்றிச் சொல்லிச் செல்கிறது அப்பா கதை. மனித மனங்கள் எவ்வளவு விசித்திரமானது.. ஒரு தாய்க்கு கொள்ளி போடாத மகன்..மருமகனையே கொள்ளிப் போடச்சொல்லும்உறவுகள்...யதார்த்தமானகதை. நமது வாழ்வுடன் ஒத்துப்போகும் அனுபவங்களின் தொகுப்பாகவும் இவரின் கதைகள் அமைந்துள்ளன. ஈரமற்ற மனித மனங்களைக் காணும்போது தனக்குள் துடிக்கவும், ஏக்கமுறவும் ஒருத்தி...தாகத்துக்கு தண்ணீர் தராமல் நின்ற மக்களின் நடுவே இறந்துபோன உயிரைப் பற்றிப் பேசும் கதையாய் ஈரம் கதை எழுதப்பட்டிருக்கிறது.

உடைந்து போன கலசங்கள் நல்ல கதை. வயது முதிர்ந்த கணவன் மனைவி இருவரது வாழ்வுநிலை பற்றிப் பேசும் கதை ஏகாந்தம்... உண்மைக்கதை போன்றுள்ளது. கதையை நகர்த்தும் பாணியும் மனதில்ஏதோ ஒன்றை உணர்த்திச் செல்கிறது. சொரியலாக ஆங்காங்கே பிரசுரமான கதைகளை வாசித்திருந்தாலும், தொகுப்பாக இணைத்து வாசிக்கையில் கதைகளின் சிறப்பு உணரப்படும் என்றே கருதுகிறேன். கட்டுரை, விமர்சனங்கள் என இவர் எழுதியிருந்தாலும் கதைகளில் காட்டும் ஆர்வம் நம்மையும் உடன் இருத்தி அழைத்துச்செல்லும் சூழலை உருவாக்கிவிடுகிறது. ஒவ்வொரு கதைகளிலும் எளிமையான உரைநடை, கதைசொல்லும்பாங்கு 'இது எனது கதை.. என்னை அல்லது எங்களைப் பற்றிய கதைகள் என ஒவ்வொரு கதைகளும் இருப்பதாக உள்ளுணர்வு சொல்கிறது. அவைதான் கதாசிரியருக்குக் கிடைத்த கிடைக்கப்போகும் வெற்றியுமாகும். தான் காணும் மாந்தர்களை உள்வாங்கி அசைபோட்டு, அசைபோட்டு பாத்திரங்களாக்கி கதைகள் எழுதும்போது அவைகள் அல்லது அக்கதாபாத்திரங்கள் நம்முள் ஒருவராக மாற்றி பாதிப்பையும் நமக்குத் தெரியாமல் ஏற்படுத்திவிடுகிறது. சமகால வாழ்வியலை அற்புதமாக படம்பிடித்துத் தந்திருக்கிறார்.

மேலும் படிக்க ...

நூலகம் தளத்தின் ஆரம்பக்கால வரலாறும் , அமரர் ஈழநாதனின் பங்களிப்பும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
16 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

-  அமரர் ஈழநாதன் -

எண்ணிம நூலகமான 'நூலகம்' தளம் மகத்தான வரலாற்றுப் பணியினை ஆற்றி வருகின்றது.  இன்று பெரியதொரு நிறுவனமாக வளர்ந்து நிற்கும் நூலகம் நிறுவனத்தின் வரலாற்றை நாம் அறிந்து கொள்ள இப்பதிவு துணை புரியும். பதிவுகள் இணைய இதழில் வெளியான இக்கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்து கொள்கின்றேன்.  இப்பதிவுகள் நூலகம் நிறுவனத்தின் உருவாக்கத்துக்குப் பங்களித்தவர்கள் பற்றிய தகவல்களைத் தருவதால் முக்கியமானது. நூலகத்தின் வரலாறு முறையாகப் பதிவு செய்யப்பட இப்பதிவு உதவியாகவிருக்கும்.  மேலும் அமரர் ஈழநாதனின் ஆரம்பக் காலத்துப் பங்களிப்புகளை மறந்து விட முடியாது. இப்பதிவுகள் அவரது பங்களிப்பையும் எடுத்துக்காட்டும்.

1. பதிவுகள் - மே 2006 இதழ் 77  -  நூலகக் குழுவிலோர் கருத்துப் பரிமாறலும், விளக்கமும்! - https://www.geotamil.com/pathivukal/noolagam_forum_discussion.html

2. பதிவுகள் - 15 ஜூலை 2020  - வரலாற்றுச் சுவடுகள்: 'நமது வரலாற்றை நாங்கள்தாம் ஆவணப்படுத்த வேண்டும்' - பதிவுகள் -வரலாற்றுச் சுவடுகள்: 'நமது வரலாற்றை நாங்கள்தாம் ஆவணப்படுத்த வேண்டும்' - பதிவுகள் -     - வ.ந.கிரிதரன் - 

தில்லைநாதன் கோபிநாத் எழுதிய 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்'அண்மையில் நண்பர் தில்லைநாதன் கோபிநாத் எழுதிய 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்னும் நூலை வாசித்தேன். மேற்படி நூலின் தலைப்பு அவ்விதமிருப்பதால்தான் இப்பதிவை எழுத வேண்டிய தேவையேற்பட்டது. சில காரணங்களால் தவிர்க்கப்பட்ட விடயங்களைச் சுட்டிக்காட்டி ஆவணப்படுத்த வேண்டிய தேவையுள்ளது என்பதால்தானிந்த பதிவு. 'பதிவுகள்' இணைய இதழ் நூலகத்தின் ஆரம்பகாலத்திலிருந்தே அது பற்றிய செய்திகளை வெளியிட்டு அதன் முயற்சிகளுக்கு ஆதரவு வெளியிட்டு வருகின்றது. உலகளாவியரீதியில் தன் வாசகர்கள் மத்தியில் அது பற்றிய செய்திகளை எடுத்துச்செல்ல உதவி வருகின்றது. தனிப்பட்டரீதியிலும் எனது  நூல்கள்,மின்னூல்கள் ,தனிப்பட்ட சேகரங்களை நூலகத்திட்டத்துக்கு வழங்கியுள்ளேன். என் நாவலான 'குடிவரவாளன்' நாவலையும் வழங்கியுள்ளேன். ஆனால் அவை தனிப்பட்ட ஒருவரின் பங்களிப்பு என்பதால் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதொன்றல்ல. இது போல் எழுத்தாளர்கள் பலர் , தனிப்பட்டவர்கள் பலர் தம்மிடமிருந்த நூல்களை நூலகத்திட்டத்துக்கு வழங்கியுள்ளார்கள். ஆனால் 'பதிவுகள்' என்னும் இணைய இதழ் நூலகத்திட்டம் பற்றிய தகவல்களைப்பிரசுரித்து உலகளாவியரீதியில் அது பற்றிய விபரங்களை எடுத்துச் சென்றிருப்பதால்  நூலில் அது பற்றிக் குறிப்பிட்டிருக்கலாமென்று தோன்றியது.

மேலும் படிக்க ...

ஒரு தகவலுக்காக: தொன்மை மிகு நல்லை மூதூர்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
15 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுநா இதழில் (ஆகஸ்ட் 9, 2025)  வெளியான கலாநிதி சிவா  தியாகராஜாவின் 'யாழ்ப்பாணப் பட்டினம்: பொங்கொலிநீர்ச் சிங்கைநகர் – பகுதி 1' என்னும் கட்டுரையில் நல்லூர் நகர் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

"யாழ்ப்பாண வைபவமாலையிலும், கைலாயமாலையிலும் ஆரியச்சக்கரவர்த்திகளின் தலைநகர் நல்லூர் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் முற்பட்ட தமிழ் நூல்களிலோ சாசனங்களிலோ நல்லூரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. ஆகவே யாழ்ப்பாண மன்னர்களுடைய முதலாவது தலைநகர் சிங்கைநகர் என்றும் பதினைந்தாம் நூற்றாண்டில் செண்பகப்பெருமாள் நடத்திய படையெடுப்பிற்குப் பின்னரே இரண்டாவது தலைநகரான நல்லூர் அமைக்கப்பட்டது என்றும் கொள்ளவேண்டும்." (ஞானப்பிரகாசர் 1928: பக் 106-107). இங்குள்ள 'யாழ்ப்பாண வைபவமாலையிலும், கைலாயமாலையிலும் ஆரியச்சக்கரவர்த்திகளின் தலைநகர் நல்லூர் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் முற்பட்ட தமிழ் நூல்களிலோ சாசனங்களிலோ நல்லூரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை.' என்னும் கூற்று கலாநிதி சிவா தியாகராஜாவின் கூற்று என்று கருதுகின்றேன். 

கலாநிதி சிவா தியாகராஜாவின் மேற்படி கூற்றிலிருந்து நல்லூர் பற்றி முற்பட்ட தமிழ் நூல்களிலோ சாசனங்களிலோ குறிப்புகள் எதுவும் இல்லை என்னும் கூற்று உண்மையா?  இதற்கான விடையைப் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் சிந்தனை இதழில் எழுதிய 'ஈழமும் இந்து மதமும் பொலனறுவைக் காலம் (1200 -1250)' என்னும் கட்டுரையில் காணலாம்.

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியாவில் பரிசுபெறும் இலங்கை நூல்கள்! - தகவல்: நடேசன் & கிறிஸ்டி நல்லரெத்தினம் -

விவரங்கள்
- தகவல்: நடேசன் & கிறிஸ்டி நல்லரெத்தினம் -
நிகழ்வுகள்
11 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும், அஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம்எழுத்தாளர்களுக்காக ஓர் எழுத்தாளர் விழாவையும் மற்றும், தமிழ் இலக்கியம், கலை தொடர்பான நிகழ்வுகளையும் கடந்த 25 வருடங்களாக நடத்திவருகிறது.

மேலும் படிக்க ...

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நிகழ்வுகள்
11 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நாள்  - மே 24, 2026  | இடம் -  Scarborough Civic Centre  - Council chambers, 150 Borough dRIVE, Toronto,ON M1P 4N7 | நேரம் - பிற்பகல்  2.00 மணி 


யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி, மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்  முன்னாள் மாணவரும் , கட்டடக்கலைஞரும் வரலாற்றறிஞருமான இ.மயூரநாதன் எழுதிய 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) ' என்னும் நூலிற்கான வெளியீட்டு நிகழ்வு  மே 24, 2026 அன்று பிற்பகல் 2 மணிக்கு , ஸ்கார்பரோ சிவிக் சென்டரில் நடைபெறவுள்ளது.  கல்விக்கூடங்களின் முன்னாள் மாணவர்கள்  அக்கல்லூரிகளின் சொத்துக்களே. அவர்கள் பெருமை மிகு சாதனைகள் அக்கல்விக்கூடங்களின் சாதனைகளே.  மயூரநாதனின் இந்த வரலாற்று நூலானது அவ்வகையில் முக்கியமானதொரு சாதனை.

தமிழர் வரலாற்று நூல்களில் இந்நூல் மிகவும் முக்கியத்துவம் மிக்கது. யாழ்ப்பாண நகரின் பெளதிகக் கட்டமைப்பு, கட்டடச்சூழல் போன்றவற்றின் அடிப்படையில் நகரின் நானூறு ஆண்டு வரலாற்றை அணுகுவது இந்நூலின் முக்கிய சிறப்பம்சம். இத்தகவலை உங்களுக்குத் தெரிந்தவர்களுடன், தெரிந்த அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.  

மேலும் படிக்க ...

தள்ளுவண்டிலைத் தவிர்த்தல்! - ஆங்கிலத்தில்: சிவகாமி விஜேந்திரா | தமிழில் - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஆங்கிலத்தில்: சிவகாமி விஜேந்திரா | தமிழில் - ஶ்ரீரஞ்சனி -
சமூகம்
10 மே 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முதன்முதலாக நான் கருத்தரித்திருந்தபோது, இலங்கையிலிருந்த சித்தியுடனும், அவவின் சில சினேகிதிகளுடனும் பருத்தித்துறையிலிருந்து, நுவரெலியாவுக்குச் சென்றிருந்த பயணமொன்று மீளவும் என் நினைவுக்கு வந்தது. அந்தப் பயணத்தின்போது, செங்குத்தான குன்றுகளில் ஏறவேண்டியிருந்தபோதுகூட, தனது ஒன்பது மாதக் குழந்தையைச் சித்தியின் சினேகிதி ஒருவர் மிக இயல்பாகவும், எவ்வித தயக்கமும் இல்லாமலும் தூக்கிக்கொண்டு வந்திருந்தார். அப்போது நான் எடுத்திருந்த நிழல்படங்களில், அந்தக் குழந்தை நீர்வீழ்ச்சியருகே, மலையோரக் காய்கறிக் கடையில், ஏரிக்கரையில் என எல்லாவிடங்களிலும், சிலநேரங்களில் விழித்தபடியும், சிலநேரங்களில் உறங்கியபடியும், ஆனால், எப்போதும் தூக்கி வைத்திருந்தபடிதான் இருக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இலங்கைக்கு என் கணவருடன் சென்றிருந்தபோது, ​​சமைக்கும்போதும், வீதிகளில் அல்லது கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோதும், தன் ஒரு வயதுப் பேத்தியைத் சித்தியும் அவ்வாறே தூக்கிவைத்துக் கொண்டிருந்ததும் என் நினைவுக்கு வந்தது. இலங்கையில் எடுக்கப்பட்டிருந்த என்னுடைய பழைய நிழல்படங்கள் உள்ளடங்கலான ஏனைய நிழல்படங்களை மீளப் பார்த்தபோதும், அவற்றிலிருக்கும் குழந்தைகளை யாரோ ஒருவர் தூக்கிவைத்திருப்பதையே நான் பார்த்தேன்.

எங்களுடைய மகன் பிறந்தபோது, எங்களின் கனேடிய நண்பர்களைப்போல தள்ளுவண்டியைப் பயன்படுத்தாமல், எல்லாவிடங்களுக்கும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு செல்லும் அதே தமிழ் மாதிரியையே நானும் என் கணவரும் பின்பற்றத் தொடங்கினோம். ஆனால், அவனை வெறுமனே கைகளில் காவுவதற்குப் பதிலாக, cloth baby carrier ஒன்றில் அவனை நாங்கள் சுமந்தோம். எங்கள் இருவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. அது சுலபமானதாவும், வசதியாகவும், இயல்பானதாகவும் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். சுமந்துசெல்லும் அல்லது இறுகப்பிணைந்திருக்கும் பாலூட்டிகளாகவே மனிதர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள். அதாவது, எல்லாநேரங்களிலும் எங்களின் உடலுக்கு அருகில் இருக்கவேண்டும் என்ற உள்ளார்ந்த தேவை எங்களின் குழந்தைகளுக்கு இருக்கிறது. எனவே, தொடர்ந்து தூக்கி வைத்திருப்பதைக் குழந்தைகள் விரும்புவது இயல்பானதே — அத்துடன், அவர்களைத் தூக்கிவைத்திருப்பதற்கு நாங்கள் விரும்புவதும் விளங்கிக்கொள்ளக்கூடியதே.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. திக்குவல்லை கமால் சிறுகதைகள்: கலங்காத வாழ்வின் மெய்யியல்! - ஈழக்கவி (ஏ.எச்.எம்.நவாஷ்) -
  2. படித்தோம் சொல்கின்றோம்: ஒரு விதையின் இருமலர்கள் – Two Blooms of One Seed! - முருகபூபதி -
  3. வ.ந.கிரிதரனின் பாடல் அவரது குரலில் - 'நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்'. இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5. AI
  4. எழுத்தாளர் கே. டானியலின் பஞ்சகோணங்கள் நாவல் - ஓர் அறிமுகக் குறிப்பு! - கலாநிதி சு. குணேஸ்வரன் -
  5. நாடகவியலாளர் க.பாலேந்திராவின் 'பிரத்தியேகக் காட்சி - ஏழு நாடகங்களும் பதிவுகளும்' நூல் பற்றிய இரசனைக் குறிப்பு! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
  6. அமெரிக்கா & ஈரான் வளைகுடாப் போர் நிலைமை பற்றிய ஓர் அலசல்! - எல். ஜோதிகுமார் -
  7. மே 1 - உழைப்பாளர் தினப்பாடல் : வ.ந.கிரிதரனின் பாடல் - 'உழைப்பாளர் தினமிது! உரிமைக்குரல் கொடுப்போம்.'
  8. காவிரிப்பூம்பட்டினம் போல் புகழ்பெற்ற துறைமுக நகரே யாழ்ப்பாணப்பட்டினம்! - வ.ந.கிரிதரன் -
  9. நெல்லை ஜெயந்தாவின் திணை மயக்கம் கவிதை உணர்த்தும் சமூகச்சிக்கல்கள்! - முனைவர்.கு.செல்வ ஈஸ்வரி -
  10. உளவியல் அணுகுமுறையில் எஸ்.ஜே. சிவசங்கரின் 'நிழல்'! - முனைவர் சி.தேவி -
  11. ஆய்வு: கம்பராமாயணத்தில் முதன் முதலில்..!!! - முனைவர் க.மங்கையர்க்கரசி -
  12. வ.ந.கிரிதரனின் குரலில் பாரதியாரின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!'
  13. சங்க இலக்கியம் கூறும் அறம்! - முனைவர் அ .கல்பனா -
  14. யுடா அக்னாரியின் மழை நிலாக் கதைகள்! - நோயல் நடேசன் -
பக்கம் 4 / 130
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி