[அ.ந.க. வின் இக் கட்டுரை 'தமிழோசை' கார்த்திகை 1966 இதழில் வெளி வந்தது. இதன் மறு பகுதி எம்மிடம் இல்லை. யாரிடமாவதிருந்தால் அனுப்பி வைத்தால் தகுந்த சன்மானம் தரப்படும். அ.ந.க. வின் சிறுகதைகள் , கட்டுரைகள், கவிதைகள் ஏனைய ஆக்கங்களை வைத்திருப்பவர்கள் அனுப்பி வைத்தால் தகுந்த சன்மானம் வழங்கப் படும். இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரியில் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.]

- அறிஞர் அ.ந.கந்தசாமி -முத்தமிழின் முடிவான தமிழ் நாடகத் தமிழ் என்று நாம் பல படப் பேசிக் கொண்டாலும்நாடகத் தமிழ் என்று ஒன்று உண்மையிலேயே கிடையாது என்பதே எனது தாழ்மையான கருத்து. இவ்வாறு தமிழில் நாடகத் தமிழில் நாடகம் இல்லாதிருப்பதைச் சுட்டிக் காட்டியதும் கூட்டில் நிறுத்தப்பட்ட வழக்கின் எதிரிபோல் நொண்டிசாக்குகள் கூற ஆரம்பித்து விடுகின்றனர் தாமே தமிழின் காவலர்கள் என்று தம்மைப் பற்றித் தவறாகக் கணக்கிட்டு வைத்திருக்கும் ஒருசிலர். பூம்புகாரும் கபாடபுரமும் கடல் கோளுக்காளானதைச் சுட்டிக்காட்டி 'எத்த்னை எத்தனை நாடகங்களைக் கத்துங் கடல் விழுங்கிக்கொண்டதோ?' என்று கூறி நிறுத்தி விடுகின்றார்கள் இவர்கள். இவர்கள் கூறுவதை முழுவதும் உண்மையெனக் கொண்டாலும்கூட கடல் கோள் நிகழ்ந்து இப்பொழுது எத்தனை ஆண்டுகள் கழிந்து விட்டன? கடல் கோளுக்கும் இன்றைக்குமிடையில் கழிந்த ஆயிரக்கணக்கான வருடங்களுள் பல மொழிகள் புதிதாக இலக்கணம் வகுத்து புத்திலக்கியங்களும் கண்டு முன்னேறி விட்டன.ஆங்கில இலக்கியத்தை எடுத்துப் பார்த்தால் கடந்த ஜந்து நூறு வருடங்களுள் தானே அவ்விலக்கியம் உலகின் தலையாய இலக்கியங்களுள் ஒன்றாக மலர்ந்திருக்கின்றது. நாடகத் துறையில் உலக மகா மேதை ஷேக்ஸ்பியர் வாழ்ந்து மறைந்து நானூறு வருடங்களேயாகின்றன.இந்நிலையில் எப்போதோ நிகழ்ந்த சிலவற்றைக் கூறி நம்மை நாமே ஏமாற்றுதல் கையாலாகாத்தனம்.  உண்மையென்னவென்றால் தமிழ் மொழியினர் பல்லாயிர வருடங்களாகவே திறனும் ஊக்கமுமற்ற ஒரு சமுதாயாமாக மாறி விட்டனர். தமிழர்களாகிய நாம் இன்றைய சாதனையற்ற வாழ்வின் குறைபாட்டை மறக்கவும் மறைக்கவும் பழம் பெருமை பேசிப் போலி இறுமாப்படைய ஆரம்பித்து விட்டோம். இது இன்று நேற்று ஆரம்பித்த நோயல்ல. பல நூற்றுக்கணக்கான வருடங்களாகவே தமிழர்கள் இதைச் செய்து வந்திருக்கின்றார்கள்.

தனிமனிதர்களைப் பொறுத்தவரையில் வாழ்ந்து கெட்டவர்கள், முன்  செல்வராயிருந்து பின்னே கீழ் நிலையுற்றவர்கள், தாம் முன்னர் வாழ்ந்த வாழ்வைப் பற்றி எண்ணுவதும் அது பற்றி அகமகிழ்வோடு பேசுவதும்  சர்வசாதாரணமான ஒரு நிகழ்ச்சி. இதில் அவர்களுக்கு ஒரு திருப்தி. இவ்வாறு தாம் முன்னர் வாழ்ந்த வாழ்வைப் பற்றிப் பேசுகையில் அதை  அவர்கள் சிறிது மிகைப்படுத்திக் கூறுவதும் வழக்கம். உதாரணமாக கிராமத்தில் நூறு ஏக்கர் காணி வைத்திருந்தவன் முழு கிராமமுமே தனக்குத்தான் சொந்தமாயிருந்தது என்று சிறிதும் பொறுப்பற்றுக் கூறி விடுவான். கேட்பவர்களும் "அவன் வாழ்ந்து கெட்டவனல்லவா" என்று அனுதாப உணர்ச்சியால் மறுத்துப் பேச மாட்டார்கள். 

ஆகவே புழுகுப் புராணத்தை அவன் மேலும் விரிவாகச் சாங்கோபாங்கமாக அவிழ்த்து விடுவான். இன்றைய தமிழ் மக்களின் பழம்பெருமைப் பேச்சும் இத்தகையது தான். இத்தகைய போக்கு ஒருவித போதையை மனதில் உண்டாக்குகிறது செயலைத் தடுக்கும் அவ்வித போதையால்தான் தமிழினம் இலக்கிய கலைத்  துறைகள் உட்பட எல்லா துறைகளிலும் இன்று பின் தங்கிய நிலயில் இருக்கிறது. இப்போது தெளிந்து நாம் முன்னேற வேண்டுமானால் பொய்களைப் புட்டுக்காட்டி உண்மையை உணர்த்தவல்ல கலை விமர்சகர்கள் நமக்குத் தேவை. நமது அரசியல் இலக்கிய கலை வரலாற்றை அவற்றின் பளபளப்பை நீக்கி நம் முன்னர் நிறுத்தும் துணிவு கொண்ட உண்மை வரல்லாற்று வல்லுனர்களும் , எழுத்தாளர்களும் தேவை. வெறுமனே நிறைகளை மட்டும் பேசி நிம்மதியடையும் மனோபாவத்தை நீக்கி, குறைகளைக் கூறி அவற்றை நீக்க நமக்கு அறைகூவல் விடுக்கும் ஆசிரியர்கள் தேவை. உலக இலக்கிய கலை வளர்ச்சியோடு நமது வளர்ச்சியை ஒப்பிட்டு அவற்றுக்கு இருக்கும் உண்மைத் தாரதம்மியத்தை எடுத்துக் காட்டி இடித்துரைக்கும் எழுத்தும் பேச்சுமே இன்றைய தேவை. இவை இல்லாவிட்டால் நமது போதை தெளியாது. முன்னேற்றம் சித்திக்காது.

ஆகவே எவ்வளவு கசப்பாயிருந்தாலும் நாடகத் தமிழ் என்பது வெறும் ஏட்டுச் சுரக்காய் தான். உண்மையில் அப்படி ஒன்றில்லை என்பதை நாம் 'முழுங்கி'க்கொள்வது நல்லது. அதை நாம் அவ்விதம் முழுங்கிக்கொள்வது எதிர்காலத்திலாவது அத்தகைய ஒரு தமிழைத் தோற்றுவிக்க நமக்கு ஊக்கத்தைத்தரும். அத்திசையில் நாம் காலடி எடுத்து வைப்பதற்கும் அது ஏதுவாய் இருக்கும்.

தமிழில் நாடக இலக்கியம் என்பது இல்லாவிட்டாலும் உலக இலக்கியத்தில் நாடகம் மிகவும் பழமைவாய்ந்தது. சுமார் இரண்டாயிரத்து முந்நூறு நாநூறு வருடங்களுக்கு முன்னரே கிரேக்க நாட்டிலே அது மிகவும் சிறந்தோங்கியிருக்கிறது. அஸ்கிலஸ் (Aeschylus) சொபோக்கிளிஸ் (Sophocles) அரிஸ்றோ பெனஸ் (Aristophanes) யூரிப்பிடேஸ் (Euripides)  என்ற புராதன கிரேக்க புலவர்கள் எழுதிய நாடகங்கள் இன்றும் உலக அரங்கங்களில் ஆடப்பட்டு வருகின்றன. ஏன் இந்தியாவை எடுத்துக் கொண்டால் கூட சுமார் ஆயிரம் ஆண்டுகளின் முன்னர் வாழ்ந்ததாகக்  கருதப்படும் கவிரத்ன காளிதாசன் சாகுந்தலம், மாளவிகா அக்னிமித்ரம் விக்ரம ஊர்வசியம் ஆகிய நாடகங்களை வடமொழியில் எழுதியுள்ளான். இந்நாடகங்களும் இன்னும் வழக்கொழியாது உலக நாடக அரங்குகளில் ஆடப்பட்டு வருகின்றன.

தமிழைப் பொறுத்தவரையில் 'நாடகத்தமிழ்' என்ற பதப்பிரயோகமிருப்பதைப் 
பார்த்தால் ஒருகாலத்தில் தமிழிலும் நாடக இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டுமென்று துணிவதற்கு இடமில்லாமலில்லை. ஆனால் அதை வைத்துக்கொண்டே வெறுமனே முத்தமிழ் என்று மார்தட்டிப் பேசுவதில் அர்த்தமில்லை. இன்று இருப்பது இரண்டு தமிழ்தான். இயலும் இசையுமே அவை. நாடகத் தமிழ் இனிமேல் தான் தோன்றவேண்டும்.

வயதால் எடுத்துப் பார்க்கும் போது கிரேக்க இலக்கியமே உலக நாடகத்தின் தாய் எனக்கொள்ளலாம். காளிதாசனுக்கும் அதுவே வழிகாட்டியாயிருக்க வேண்டும். கிறிஸ்துவுக்கு முன் 326 ஆம் ஆண்டளவில் கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் இந்தியாவுக்கு வந்ததாகச் சரித்திரம் சாற்றுகிறது.அவன் காலம் நாடகக் கலை மன்னர்களான் சொபோக்கிளிஸ் ,அரிஸ்றோ பெனஸ், யூரிப்பிடேஸ் காலத்துக்குப் பிந்தியதே என்பதைக் கவனிக்கும் போது அவனுடன் வந்த ராணுவ வீரர்கள் தமது நாடகக்கலையையும் இந்தியாவிற்குக் கொண்டு வந்தனர் என்று அனுமானிப்பதில் தவறில்லை. இந் நாடகங்களை முன்மாதிரியாகக் கொண்டே பின்னர் வந்த காளிதாசன் போன்றோர் தமது நாடகங்களை எழுதியிருக்க வேண்டும்.ஆனால் இவ்விஷயத்தை ஒரு சில இந்திய  வரலாற்றாளர்கள் தமது தேசிய உணர்வு காரணமாக ஒப்புக்கொள்வதில்லை.

ஆனால் ஜரோப்பாவைப் பொறுத்தவரையில் இந்தப் பிரச்சினை கிடையாது. முழு ஜரோப்பாவும் ஏகோபித்து கிரேக்க நாடகமே ஜரோப்பிய நாடகக்  கலையின் தாய் என்பதைப் பரிபூரணமாக ஒப்புக்கொண்டுள்ளது. இன்றைய  உலக நாடக இலக்கியம் ஜரோப்பாவின் வழி வந்ததே. நமது அயல் நாடான  இந்தியாவிலுள்ள பலமொழிகளிலும் இன்று ஏற்பட்டு வரும்  நாடகமறுமலர்ச்சிக்கு ஷேக்ஸ்பியர் போன்ற ஆங்கில நாடகாசிரியர்களே  வழிகாட்டிகளாக விளங்குகின்றனர். அமெரிக்க நாடக இலக்கியத்தின்  நிலையும் அதுவே. ஆகவே கிரேக்க நாடகம் தான் இன்று உலக  நாடகமாகப் பரிணமித்திருக்கின்றது. ஆகவே உலக நாடகத்தின் தோற்றுவாய் கிரேக்கா நாடு என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

தமிழைப் பொறுத்தவரையில் சமீப காலமாக நாடகங்கள் ஆடப்படுவது  வழக்கமாகி விட்டபோதிலும் முறையான நாடகம் எதுவும் தமிழில் எழுதப்பட்டு விட்டது என்று சொல்வதற்கில்லை. பம்மல் சம்பந்த முதலியார் மக்களுக்குப் பிடிக்கத்தக்க சில வெற்றி நாடகங்களை எழுதினார் என்பது உண்மை என்ற போதிலும் அவை நாடகத்துக்குரிய இறுக்கமான அமைப்பையோ பாத்திர சிருஷ்டி போன்ற முறையான இலக்கிய அம்சங்களையோ பெற்றவையாக இல்லை. ராவ்பகதூர் சுந்தரம் பிள்ளை எழுதிய 'மனோன்மணியம்' ஒன்றுதான் முறையான தமிழ் நாடகம். இதில் நாடகத்தன்மை கொண்ட கதையமைப்பும், பாத்திர அமைப்பும், உயிரோட்டமுள்ள உரையாடலும் இருக்கின்றன என்றாலும் முற்றிலும் கவிதையாக அமைந்திருப்பதால் இது போதியளவு வெற்றி பெறவில்லை. ஆனால் மேடையில் கவிதை நாடகத்துக்கும் இடமுண்டு. மேலை நாடுகளில் இன்றும் கவிதை நாடகங்கள் அரங்கேறவே செய்கின்றன.'மனோன்மணியமும்' அரங்கேற்றத்தக்க உயரிய கவிதை நாடகமென்பதே எனது அபிப்பிராயம். நாடகாசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களேஇந்நாடகம் மேடைகேற்றதன்று வாசிப்பதற்கே ஏற்றது என்று கூறியிருக்கிறாராம். ஆனால் மனோன்மணியத்தை வாசித்த எவரும் அதை ஒப்புக்கொள்ள முடியாது. எவ்விதம் ஷேக்ஸ்பியர் நாடகமும் , டி.எஸ்.எலியட்டின் நாடகமும் கவிதை நாடகங்களாயினும் மேடைக்கேற்ற நாடகங்களாக  விளங்குகின்றனவோ அவ்வாறே 'மனோன்மணியமு'ம் மேடைக்கேற்ற நாடகந்தான் என்பதில் ஜயமில்லை. 'மனோன்மணியத்தின்' இலக்கிய அந்தஸ்த்துக்கு வேண்டுமானால் ஒரே ஒரு குறையை மட்டும் தான் நாம் கூறக் கூடும். ஆங்கிலக்கதை ஒன்றைத்தழுவி எழுதப்பட்ட நாடகமாக அது விளங்குகிறது என்பதே அது. ஆனால் அதைகூட நாடகத்துறையுள் ஒரு குற்றமாகக் கொள்வதற்கில்லை. ஏனெனில் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களும் காளிதாசனின் சாகுந்தலமும் கூட இவ்வாறு அமையப்பெற்றனதானே. சாகுந்தலம் காளிதாசனால் மகாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்ட கதைதானே?

என்னைப் பொறுத்தவரையில் 'மனோன்மணியத்'துக்குக் கொடுக்கப்பட வேண்டிய அந்தஸ்து தமிழ் மக்களால் அதற்குக் கொடுக்கப்படவில்லை என்பதே எனது அபிப்பிராயம். 'மனோன்மணியத்தை'க் கவிதை நாடகமாக அரங்கேற்றினால் அதைப்பார்க்க ஆணும் பெண்ணும் கடல்போல் அள்ளுப்பட்டு வரமாட்டார்கள்  என்பது ஒருவேளை உண்மையாயிருக்கலாம். ஒரு நாடகத்தின் வெற்றியை நாம் அதைக்கொண்டு அளவிடுதல் கூடாது. இன்று நாடகக்கலை சினிமா போல் பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்குக் கலையாக மதிக்கப்படுவதில்லை. சித்திரம், சிற்பம் போல் அது குறிப்பிட்ட ஒரு சாராரின் கலைதான்.சித்திரக் காட்சிக்கோ, சிற்பக்காட்சிக்கோ முழு சமுதாயமும் அள்ளுண்டு வரவில்லை என்று நாம் கவலைப்படுவதில்லையே. அது போலவே, நாடகக் காட்சிக்கும் நாம் எல்லோரும் வரவேண்டுமென்று எதிர்பார்க்கக்கூடாது. 'மனோன்மணி'யத்தைக் கவிதை நாடகமாக அரங்கேற்றினால் நிச்சயமாக நாடகப்பிரியர்களும் அதற்கு வரவே செய்வார்கள். அவ்விதம் வருபவர்கள்பார்த்து மகிழ்ந்து மெச்சுதற்குரிய முறையில் அரங்கேற்றுதற்குரிய அம்சங்கள் யாவும் அதில் பொருந்தியிருக்கின்றன என்பதே 'மனோன்மணிய'த்தை மிகச்சிறந்த நாடகம் என்று சொல்வதற்கு என்னைத் தூண்டுகிறது.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் அங்கு டி.கே.எஸ் சகோதரர்கள், நவாப்ராஜமாணிக்கம் போன்றோர் ஒளவையார், ஜயப்பன் போன்ற நாடகங்களை நடத்திப் பெரும் பணம் சம்பாதித்து வருகின்றனர். சினிமாப் பாணியில் அமைந்த இந்நாடகங்களில் ஓரளவு நல்ல நடிப்பும் இருக்கிறது. இருந்த போதிலும் உண்மையான நாடக இலக்கணத்தின் படி பார்த்தால் இவற்றை நாம் நாடகங்கள் என்று ஏற்பதற்கில்லை. இவை ருசிகரமான  மேடைக்காட்சிகள் அவ்வளவுதான். கிரேக்க நாடகங்களை ஆராய்ந்து நாடகத் தன்மைகள் இவை என்று வகுத்துக் கூறிய அரிஸ்றோற்றில் (Aristotle) நாடகத்துக்கு இரண்டு பகுதிகள் அவசியம் என்று குறிப்பிடுகின்றார். அவையாவன சிக்கலை ஏற்படுத்தும் முற்பகுதி, சிக்கல் தீரும் பிற்பகுதி என்பன. காளிதாசனின் சாகுந்தலத்தை எடுத்துக்  கொண்டால் அதில் இவ்விரு பகுதிகளும் நன்கு அமைந்திருப்பதைக் காணலாம். சகுந்தலைக்குத் துஷ்யந்தனால் தரப்பட்ட கணையாழி காணமல் போவதால் ஏற்படும் சிக்கல் அதன் முதற்பகுதி. செம்படவர் அதைக்கண்டு  எடுத்துத் துஷ்யந்தன் கையில் தர அதனால் அவனது மறதி நோய் தீருதல்  சிக்கல் தீரும் பிற்பகுதி. ஒளவையார் நாடகத்தில் இவ்வித நாடக அமைப்பு  கிடையாது. அது வெறும் வாழ்க்கை வரலாறு. சில சம்பவங்களின் தொகுப்பு. ஜயப்பன் நாடகமும் இத்தகையது தான். டி.கே.எஸ். சகோதரர்களும் நவாப்  ராஜமாணிக்கமும் வெறும் நிகழ்ச்சிக் கோவைகளை நல்ல நடிப்பு , சிறந்த  உரையாடல் என்பவற்றின் மூலமும், ஒளி, ஒலி , இசை அமைப்பாலும் இதர மேடை மேடை உத்திகளாலும் நல்ல மேடைக்காட்சியாக மாற்றி இருப்பதைவிட வேறெதையும் சாதித்துவிடவில்லை. இவை உண்மையில்  நாடகங்களே அல்ல. எவ்வளவு ருசிகரமாக எழுதப்பட்டாலும் எப்படி ஒரு பிரயாண நூலோ வாழ்க்கை வரலாற்று நூலோ இலக்கியக் கணிப்பில் ஒரு  நாவல் அல்லது நவீனமாக முடியாதோ அவ்வாறே எவ்வளவு சிறப்பான மேடைக்காட்சியாக அமைந்த போதிலும் வெறும் சம்பவக் கோவைகள்  நாடகங்களாகி விட முடியாது. அவற்றை நாடகம் என்று அழைத்தல்  அவ்வார்த்தையைத் துர்ப்பிரயோகம் செய்வதாகும்.

தமிழ் நாடகத்தின் பொதுவான நிலையே இவ்வாறு இருக்கும் போது சமூக நாடகங்கள் எழுதுவதையே ஒரு தனிப்பிரச்சினையாக்கி அதைப் பற்றி எழுதுவது அர்த்தமற்ற படாடோபப் பேச்சாகாதா என்ற ஜயம் என் மனதில் எழத்தான் செய்கிறது. ஆனால் இதற்கு நல்ல மறுமொழியும் நாம் கூற முடியும். தமிழில் நாடகம் இல்லையென்பது உண்மையானால் அவசரப்பணியை மேற்கொள்ளும் போது அது பற்றிய சகல பிரச்சினைளையும் விடுவித்துக் கொள்ளுதல் மிக அவசியமான ஒன்று தான். அந்த வகையில் பார்க்கும் போது சமூக நாடகங்கள் எழுதுவதிலுள்ள பிரச்சினைகள், சரித்திர நாடகங்கள் எழுதுவதிலுள்ள பிரச்சினைகள் என்ற  ரீதியில் இவற்றை தனித்தனியே ஆராயவேண்டும். அடுத்த இதழில் அப்பிரச்சினைகள் ஆராயப்படும்.

நன்றி: 'தமிழோசை' கார்த்திகை 1966, பதிவுகள்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here