ஊடகவியலாளர் பெருமாள்..இன்று வெளியான 'காலைக்கதிர்' பத்திரிகைச் செய்தி என் கவனத்தை ஈர்த்தது. .கூடவே துயரினையும் தந்தது. பழம்பெரும் பத்திரிகையாளர் 'பெருமாள்' அவர்கள் தனது எண்பத்தியாறாவது வயதில் மறைந்த செய்தியே அது. 'காலைக்கதிர்' செய்தியின்படி அவர் ஈழநாடு செய்தி ஆசிரியராகவும், பின்னாளில் உதயன் பத்திரிகையின் ஆசிரியபீடத்திலும் பணியாற்றியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தன் உடலை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கையளிக்க வேண்டுமென்ற அவரது விருப்பத்துக்கேற்ப் அவரது உடல் கையளிக்கப்பட்டதாகவும்  மேற்படி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூத்த பத்திரிகையாளர் பெருமாள் அவர்களின் மறைவு என் நினைவுகளை அசை போட வைத்து விட்டது. என் இலக்கிய வாழ்க்கையில் அவரை நான் ஒருபோதுமே மறக்க மாட்டேன். என் எழுத்துலகத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் என்னை ஊக்குவித்த பத்திரிகையாளர்களில் அவர் முதலிடத்திலிருப்பவர். இவ்வளவுக்கும் இன்றுவரை அவரை நான் ஒரு தடவை கூடச் சந்தித்ததில்லை. அவர் எப்படியிருப்பார் என்பது கூடத் தெரிந்திருக்கவில்லை. இருந்தும் எப்பொழுதும் என் நெஞ்சில் அவருக்கு எப்போதுமோரிடமிருக்கும்.

அக்காலகட்டத்தில்தான் நான் சிறுகதைகள் எழுதத்தொடங்கியிருந்தேன். சிரித்திரன் சஞ்சிகையில் என் முதலாவது சிறுகதை வெளியாகியிருந்தது. அப்பொழுது நான் யாழ் இந்துக்கல்லூரியில் கல்விப்பொதுத் தராத உயர்தர வகுப்பில் , விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். அதன்பின் நான் எழுதிய சிறுகதை 'அஞ்சலை என்னை மன்னித்து விடு'. அது வீட்டு வேலைக்காரியாகப்பணிபுரியும் ஏழைச்சிறுமியிருத்தியைப்பற்றிய சிறுகதை. அதுவே ஈழநாடு பத்திரிகையில் வெளியான எனது முதற்சிறுகதை. அப்பொழுது ஈழநாடு வாரமலர் ஆசிரியராகக் கடமையாற்றிக்கொண்டிருந்தவர் பெருமாள் அவர்கள். அதன்பின் எனது சிறுகதைகளான 'இப்படியும் ஒரு பெண்' , 'மணல் வீடுகள்', 'பல்லி சொன்ன பாடம்' ஆகியவை ஈழநாடு வாரமலரில் வெளியாகின. இவற்றைத்தொடர்ந்து 'நியதி' என்னும் உருவகக் கதை, நல்லூர் ராஜதானி நகர அமைப்பு பற்றிய கட்டுரைகள் இரண்டு, புத்தாண்டுக் கவிதையொன்று, யாழ்நகரிலுள்ள பழமையின் சின்னங்களைப்பேணப்படுதலின் அவசியம் பற்றிய கட்டுரை ஆகியவை ஈழநாடு வாரமலரில் வெளியாகியன. அவற்றை வெளியிட்டு என்னை ஊக்குவித்தவர் பெருமாள் அவர்கள். ஆரம்பத்தில் என் பால்யப் பருவத்தில் என் ஆக்கங்களுக்குக் களம் அமைத்துத்தந்தது ஈழநாடு பத்திரிகையின் மாணவர் மலர். பின்னர் என் பதின்ம வயதுகளில் என் எழுத்துலகத்தின் அடுத்த கட்டத்தில் களமமைத்துத் தந்த முக்கியமான பத்திரிகை ஈழநாடு. அக்காலகட்டத்தில் அதற்கு உறுதுணையாகவிருந்தவர் பெருமாள் அவர்கள்.

நான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த சமயம் ஈழநாடு அப்பத்திரிகையின் வாரமலரில் எழுதிக்கொண்டிருந்த இளம் எழுத்தாளர்களைப்பற்றிய காவலூர் ஜெகநாதனின் கட்டுரைகளை வெளியிட்டுக்கொண்டிருந்தது. என்னையும் பற்றி எழுதும்படி காவலூர் ஜெகநாதனை அது வேண்டியிருந்தது. காவலூர் ஜெகநாதனும் தொடர்புகொண்டிருந்தார். தபால் மூலம் கேள்விகளை அனுப்பியிருந்தார். அத்துடன் என் புகைப்படத்தை புளக் செய்து அனுப்பும்படியும் கோரியிருந்தார். நானும் படிப்புச் சூழல் காரணமாக என் புகைப்படத்தை அனுப்பவில்லை. அந்நேர்காணலும் வெளிவராமலேயே போனது. அவ்விதம் என்னை நேர்காணல் செய்யும்படி கோரியதும் பெருமாளாகத்தானிருக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். ஏனெறால் அவர்தான் அப்போதும் ஈழநாட்டில் வாரமலர் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது நான் அராலி வடக்கில் வசித்து வந்தேன். அம்மா (நவரத்தினம் டீச்சர்) அராலி இந்துக் கல்லூரியில் ஆசிரியையாகக் கற்பித்துக்கொண்டிருந்த கால்கட்டம். அராலி வடக்கிலிருந்து ஒரு பெண்மணி நாங்கள் பாடசாலை செல்வதற்காக யாழ்ப்பாணம் செல்லும் பஸ்ஸில் பயணிப்பார். அவரை எல்லோரும் ஈழநாடு அக்கா அன்று கூறுவார்கள். அவர் ஈழநாடு பத்திரிகையில் பணிபுரிவதால் அவர் அவ்விதம் அழைக்கப்பட்டார். அவரையே பின்னர் பெருமள் அவர்கள் திருமணம் செய்ததாகவும் அறிந்தேன்.

'ஈழநாடு' அக்காவுக்கும் 'டீச்சரின்' மகனான நானே ஈழநாடு பத்திரிகையில் எழுதுபவன் என்பது என் அம்மா மூலம் தெரிந்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். ஏனென்றால் அவர் ஓரிரு தடவைகள் என் சகோதரிகளிடம் பெருமாள் அவர்கள் என்னைப்பற்றிக்கதைத்தது பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். சகோதரிகள் கூறியிருக்கின்றார்கள்.

பத்திரிகையாளர் பெருமாளின் மறைவு பற்றிய செய்தி அவரைப்பற்றிய நினைவலைகளை எழுப்பி விட்டது. பெருமாள் அவர்களின் பிறந்த வீடு மலையகம். புகுந்த வீடு யாழ்ப்பாணம். மலையகத்திலிருந்து வந்து யாழ்ப்பாணத்துப் பத்திரிகை உலகில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் பெருமாள் அவர்கள். அவரது இலக்கியப்பங்களிப்புகளில் முக்கியமானது அவர் ஈழநாடு வாரமலர் ஆசிரியராகவிருந்து வளர்த்து விட்ட எழுத்தாளர்கள்தாம். இன்றும் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் பலரை அவர் அவர்கள்தம் படைப்புகளை ஈழநாடு வாரமலரில் வெளியிட்டு ஆதரித்தார். அவ்வகையில் அவரால் ஊக்குவிக்கப்பட்டு உருவானவர்களில் நானுமொருவன் என்பதை எப்பொழுதுமே நான் நன்றியுடன் நினைவில் வைத்திருப்பேன். இலங்கைத் தமிழ் இலக்கிய உலகில் அவர் பங்களிப்பு முக்கியமானது; எப்பொழுதும் நினைவுகூரப்படும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்