ஜனவரி 19  எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் பிறந்தநாள். அவருக்கு எனது தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவரைப்பற்றி விகடனின் பேசலாம் யு டியூப் சானலில் எழுத்தாளர் ஜெயமோகனின் 'சங்கச் சித்திரங்கள் எப்படி எழுதினேன்?' என்னும் பெயரில் வெளியான நேர்காணற் காணொளி கண்டேன். அதில் ஜெயமோகன் அ.முத்துலிங்கம் பற்றிப் பின்வருமாறு கூறியிருந்தார்:

"தமிழ் உருவாக்கிய முக்கியமான பத்து எழுத்தாளர்களில் அவர் ஒருவர். இலங்கை உருவாக்கிய மகத்தான எழுத்தாளர்."

ஜெயமோகனின் விமர்சனப் பார்வையில் இவ்விதமான முக்கியமானதோர் இடத்தைப்பிடித்துள்ள எழுத்தாளர் அவர். ஆனால் ஜெயமோகனின் மேற்படி கூற்றில் எனக்குப் பெரிதும் உடன்பாடில்லை. 'தமிழ் உருவாக்கிய முக்கியமான எழுத்தாளர்களில் அவர் ஒருவர். இலங்கை உருவாக்கிய சிறந்த எழுத்தாளர்களில் அவர் ஒருவர்.' என்று ஜெயமோகன் கூறியிருந்தால் அதனை ஏற்றுக்கொள்வதில் எனக்குச் சிரமமில்லை.

ஜெயமோகன் அதிகமாக வாசிப்பவர். அதிகமாக எழுதுபவர். அவரது வாசிப்பும், எழுத்து வேகமும் பிரமிக்க வைப்பவை. அவர் இப்படிக் கூறியிருப்பதை அவ்வளவு இலேசாக ஒதுக்கிப் போய்விட முடியாது.  ஜெயமோகனின் தனிப்பட்ட கருத்தாக மட்டுமே என்னால் இதனை எடுத்துக்கொள்ள முடியும். அவரது சுய வாசிப்பு, சுய சிந்தனைக்கேற்ப அவர் வந்தடைந்த கருத்தாக மட்டுமே என்னால் கருத முடியும். அதற்கு மேல் ஜெயமோகனின் கூற்றை ஒட்டுமொத்தமாக இலக்கியப்பங்களிப்பில் அ.மு.வின் பங்களிப்பை வெளிப்படுத்தும் கூற்றாக என்னால் கருத முடியவில்லை.

மேலும் எழுத்தாளர் ஒருவரின் பங்களிப்பை நோக்குகையில் தனியே புனைகதை என்பதை மட்டும் அடிப்படையாக வைத்து நோக்கமுடியாது. அவரது புனைவு, அபுனைவு, மொழிபெயர்ப்பு, கவிதை எனப்பரந்து பட்ட பங்களிப்பின் அடிப்படையிலேயே நோக்க வேண்டும். இந்நிலையில் ஜெயமோகன் எழுத்தாளர் என்னும் சொற்பதத்துக்குப் பதிலாகச் சிறுகதையாசிரியர் என்ற பதத்தைப் பாவித்திருக்கலாம்.

என் வாசிப்பின் அடிப்படையில் என் நினைவுக்கு வரும் எழுத்தாளர்களில் சிலரைப் பட்டியலிட்டால் அப்பட்டிலில் நிச்சயமாக அ.முத்துலிங்கம் தவிர்ந்த பத்துக்கும் அதிகான பெயர்கள் நி9ச்சயமிருக்கும். இவ்விதம் தமிழ் இலக்கியம், விமர்சனம், மொழிபெயர்ப்பு என்று இலக்கியத்தின் ஒவ்வொரு பிரிவிலும் முக்கியமான பங்களிப்பு செய்த பலர் நினைவுக்கு வருவார்கள். அவர்களையெல்லாம் கடந்துதான் என்னால் அவர்களின் தொடர்ச்சியாக எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தைக் கருத முடியுமே தவிர முதல் பத்துக்குள் என்னால் கருதவே முடியாது. இந்நிலையில் ஜெயமோகன் அவர்கள் அ.மு முதல் பத்து சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்னும்போது அவர் அந்தப் பத்து எழுத்தாளர்களின் பெயர்களையும் பட்டியலிட வேண்டும். அவ்விதம் பட்டியலிட்டால் அப்பட்டியலில் இல்லாத ஏனையவர்களை விட அ.மு. எவ்வைகையில் முக்கியத்துவம் பெறுகின்றார் என்பதை விளக்க வேண்டும்.

இதுபோல் இலங்கையின் சிறந்த எழுத்தாளர்கள் என்னும்போதும் பத்துக்கும் அதிகமான பலர் நினைவுக்கு வருவார்கள். அவர்கள் எல்லோரும் மண் வாசனை மிக்க எழுத்துகளின் சொந்தக்காரர்கள். அ.முத்துலிங்கத்தின் புகழ்பெற்ற அவரது ஓய்வுக்குப் பின்னான எழுத்துகள் தமிழக வாசகர்களை மனத்திலிருந்தி எழுதப்பட்டவை. இலங்கை எழுத்தாளர்களின் எழுத்துகளில் காணப்படும் மண்வாசனையை அவ்வெழுத்துகளில் காண முடியாது. பரந்துப்பட்ட தமிழக வாசகர்களுக்காக அவர் கையாண்ட நடை காரணமாக அவ்வெழுத்துகளில் மண் வாசனையைக் காண முடியாது. இந்நிலையில் அ.மு மகத்தான இலங்கைத் தமிழ் எழுத்தாளர் என்னும் ஜெயமோகனின் கூற்று ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

ஜெயமோகனின் மேற்படி கூற்றுகள் அவரது விமர்சனச் சிறப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.


முகநூலில் இப்பதிவுக்கு வந்த எதிர்வினைகள்:

T N Anpearasu JP
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Bee Palan
85 வயதை தொடும் முத்து மாமா கொக்குவில் தந்த சொத்துகளில் ஒருவர். எனது பெரிய தாய்மாமாவின் கல்லூரி பல்கலைகழ தோழர். நீண்ட காலமாக கொழும்பு தமிழ் சங்கம் மட்டுமல்ல நல்லை ஆதீனத்தில் ஆன்மீக சொற்பொழிவுகளை சிறுவனாக கேட்டவர்களில் நானும் ஒருவன். வாழ்க வளமுடன்

Suniljoghee Gopal
வணங்கி மகிழ்கிறோம் ஐயா....

P A Jayakaran Arullingam
அவரை உலகில் தலையாய சிறுகதையாளராய் சேர்த்துக் கொள்வோம்.

Gnane Buwan Gnanendran
ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Suntharalingam Sathasivam
happy, birthday to you

Ganesalingam Selvanayagam
வாழ்த்துக்கள் Congratulations'

S. Krishna Veni
வணங்குகிறேன் வாழ்த்துகளோடு

SK Rajen
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்?

Dharani Akil
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Bala Yazhkovan
Happy birthday

அகரன் பூமிநேசன்
ஒருவர் தன் வாசிப்பு வெளியில் கிடைத்த எழுத்தாளரைப்பற்றி சொல்லும்போது இப்படிச்சொல்வது இயல்பானது. அக்கூற்றில் இருந்து அ. மு எழுத்தின் வலிமையையே புரிந்துகொள்ளவேண்டுமே தவிர மற்ற எழுத்தாளர்களை அவர் குறைத்து மதிப்பிட்டதாக என் புரிதல் இல்லை. ஆனால் தாங்கள் அவரை ஒரு சிறுகதை எழுத்தாளராக குறைந்த வட்டத்தில் பார்த்ததே கவலை அளிக்கிறது. அ. மு பற்றிய என் வாசிப்பில் சிறுகதையையும் தாண்டிய அவரின் கட்டுரை இலக்கியம் அலாதியானது. தமிழுக்கு அது அருமையான வடிவம். அதைத்தாண்டி தமிழ் எல்லை தாண்டிய அவரின் பேட்டிகளை இதுவரை யாராவது செய்ததாக தெரியவில்லை. உதாரணமாக நோபல் பரிசுபெற்ற ஆங்கில எழுத்தாளரை பேட்டி கண்டு தமிழில் எழுதியது. நீங்களே கூறியதுபோல் படிப்பும், படைப்பும் நிறைந்த திரு ஜெயமோகன் கூறியதில் எந்த தவறிப்பதாக தெரியவில்லை.
சரி, நம் மூத்த எழுத்தாளர் தன் ஓய்வுகாலத்தை தமிழ் எழுத்துக்காக செலவிடுகிறார். அவர் மகிழ்வோடு வாழட்டும். சிறக்க அவர் நாட்கள்.

R Rahavan
நியாயமான கருத்து. முக்கிய பத்து எழுத்தாளர்களுள் ஒருவர் என்பது அதிமிகைக்கூற்று. ஜெயமோகனின் இந்த கருத்து அவரையே குறைத்து மதிப்பிட வைக்கும்.

Shankar Nallathamby
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

Safnas Hasim
அ.மு எந்த இடத்தில் வேறுபடுகிறார் என்று எனது வாசிப்பினடிப்படையில் சொல்ல முடியும். ஒரு எழுத்தாளனாக ஒரு அரசியல் அல்லது ஒரு கொள்கையொன்றின் பிரச்சாரகராக அவர் கதைகளை எழுதியதில்லை. அதையும் தாண்டிய ஒட்டுமொத்தமான பார்வை அவருக்கு இருக்கிறது. ஒரு புனைவை அதன் இயற்கையோடு அதன் பூகோளத்தன்மையோடு சொல்வதென்பது அ.முவுக்கு வாய்த்திருக்கிறது. அதனாலேயே masters ஐ விடவும் அமுவை ஷோபாவை தமிழகத்தில் அதிகம் வாசித்திருக்கிறார்கள் என்று ஜெமோ சொல்லியிருந்தார். அ.முவிடமிருக்கும் பரிபூரணத்துவமென்பது தான் இங்கு விசயம். வாழ்த்துக்கள் அவருக்கு ?

Parathan Navaratnam
Safnas Hasim ஒழுங்கா எல்லாம் வாசிக்கவில்லை போலிருக்கு.?

Safnas Hasim
Parathan Navaratnam கதைகளில் வெளிப்படுவது வேறு. பிரச்சாரத்தொனி என்பது வேறு. அமுவிற்கு அந்த முழுமை இருக்கிறதென்பது எனது கருத்து. வம்ச விருத்தி (12), வடக்கு வீதி(12), திகடசக்கரம் ( 8) , இன்னும் பல கதைகள் வாசித்திருக்கிறேன்.

Saroja Moorthy
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Sreeno Sri

அ.மு. நான் (Founding Secretary) K.T. சண்முகராசாவுடனும் (Inaugural President) பிறருடனும் 1993 June 19 இல், அங்குரார்ப்பணம் செய்து Torinto இல் ஆரம்பித்த-
"கனடா தமிழ் எழுத்தாளர் இணைய" காலத்தில் Pakistan இலிருந்து தனது "திகட சக்கரம்" சிறுகதைத்தொகுப்பின் 10 பிரதிகளை அனுப்பி promote பண்ணுமாறு தனிப்பட்ட கடிதம் எழுதியிருந்தார்.
ஒரு பிரதியை நான் வைத்துக்கொண்டு, மீதி ஒன்பதையும் அக்கறையுள்ளோர்க்கு கொடுத்தேன். * அப்போ, அ. முத்துலிங்கம் அறியப்படாதவர். இதற்கு முன் "அக்கா" என்ற சிறுகதைத்தொகுதி ஒன்றை மட்டுமே வெளியிட்டிருந்தார் என, நினைக்கிறேன்.

ஜெயமோகன் முதன்முறையாக இந்தியாவுக்கு வெளியே பிரயாணப்பட்ட நாடு,-கனடா. அப்பயணத்தை தன் செலவில் பாலித்தவர், அ.மு. Montréal இல் மைக்கல் (ஜெயரரூபன்) வீட்டில் தங்கியிருந்தார்.
அவரை நானும் மைக்கலும்,-Montréal- Museum of Fine Arts (அப்போ, Crafts of Aluminium என்ற exposition உம் அங்கு நடந்தது) Olympic Park, Botanical Garden, Bio-Dome என்று, கொண்டு திரிந்தோம்.முழுச்செலவையும் பார்த்தது நானே.

இவரை, AMIR- Lebanese Restaurant இற்கு அழைத்துச்சென்றபோது, "அட...இப்படியெல்லாம் சாப்பாடு இருக்கிறதா? நான் இட்லியும் சாம்பாருமல்லவா சாப்பாடு? என்று நினைத்திருந்தேன்," என்று குறிப்பிட்டார்.
தவிரவும், ஆச்சர்யகரமாக, Montréal இல் தெருவில் பிச்சையெடுக்கும் pan-handlersஐப்பார்த்து, ஆச்சரியப்பட்டு, "பணக்கார நாடுகளில் பிச்சைக்காரர்கள் இல்லை, என்றல்லவா நினைத்தேன்," என்றார்.
பின்னர், நானும் மைக்கலும் இவரை Toronto அழைத்துப்போனோம். நான் செய்த உதவிக்காக, 2001 இல் சென்னையில் வெளியிடப்பட்ட என் சிறுகதைத்தொகுப்பான- "சிறீசுவின் சில சிறுகதைகள்" வெளியீட்டுவிழாவில் சிறப்பு பேச்சாளராக, நாகர் கோவிலிலிருந்து bus இல் சென்னை வந்து பங்குபற்றியிருந்தார். அ.மு. வை ஜெமோ புளுகக்காரணம் 111% நன்றிக்கடன்.....!!!!! முத்துலிங்கம் தனது பணவசதி மூலமும், அது சார் செல்வாக்கு மூலமுமே தன் புகழை பின்னடிக்கு ஏற்றியவர்; தன் எழுத்து வன்மையால் அல்ல...!! தமிழ் எழுத்தாளர், பிரதானமாய் தமிழக எழுத்தாளரிடம் கேவல போலிமை ஒன்றுண்டு. காசுசார் நன்றிக்காக, கஞ்சல்களையே "ஆனையடா, குதிரையெடா," என்று பொய்ப்பம்மாத்துடன் புளுகுவர். ஜோயமோகனென்ன விதிவிலக்கா.....?????!!!! ● ஜெமோ நவீன தமிழின் 10 முக்கிய எழுத்தாளரில் ஒருவர் என்பேன். அ.முத்துலிங்கம்.....???!! Haaa...Haaaa...HAA.... Haaaaaaa......!!!!!!!!!!!!!!! Don't get me started....!

Parathan Navaratnam
Sreeno Sri Sreesu அப்படி போடு அரிவாளை ?

ஏ. பகலவன்
பெரியவர் அ. முத்துலிங்கம் அவர்களின் எழுத்து நடை என்பது அபாரமானது. அதற்கு அவரது விரிந்த அனுபவமும் இடை விடா இலக்கித் தேடல்களுமே காரண்மாக இருக்கலாம்.
கதை நடுவே அவரின் நகைச்சுவைகள் அருமை.

Sivanreaselvan Arumugam
Many happy returns of the day

Rahulan Nadarajah
ஜெயமோகனின் முதல் பத்து தெரிவும் உங்களது முதல பத்து தெரிவும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லையே!!!!

Giritharan Navaratnam
Rahulan Nadarajah அதனால்தான் " அவர் இப்படிக் கூறியிருப்பதை அவ்வளவு இலேசாக ஒதுக்கிப் போய்விட முடியாது. ஜெயமோகனின் தனிப்பட்ட கருத்தாக மட்டுமே என்னால் இதனை எடுத்துக்கொள்ள முடியும். அவரது சுய வாசிப்பு, சுய சிந்தனைக்கேற்ப அவர் வந்தடைந்த கருத்தாக மட்டுமே என்னால் கருத முடியும். அதற்கு மேல் ஜெயமோகனின் கூற்றை ஒட்டுமொத்தமாக இலக்கியப்பங்களிப்பில் அ.மு.வின் பங்களிப்பை வெளிப்படுத்தும் கூற்றாக என்னால் கருத முடியவில்லை." என்று கூறியிருக்கின்றேன்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here