தனித்துப் போராடும் முன்னாட் பெண் போராளி எழில்வேந்தன் கோணேஸ்வரி!
கடந்த சில நாட்களாக முகநூலில் , இணையத்தில் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த துன்பம் பற்றிய செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தப் பெண்ணின் பெயர் எழில்வேந்தன் கோணேஸ்வரி . முன்னாள் விடுதலைப்புலிப் போராளி. இவரது சகோதரர்களும் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடி மரணித்தவர்கள்., இவரது கணவரும் முன்னாள் புலிகள் இயக்கத்துப் போராளி. அவர் இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்களிலொருவர். புலிகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலத்தில் இவரது சகோதரர் ஒருவர் அழகரட்ணம் என்பவருக்கு ரூபா 28 இலட்சம் பணம் கொடுத்து வாங்கிய காணியில் இவர் வாழ்ந்து வருகின்றார். ஆனால் அக்காணி அக்காலத்தில் முறையாக அரச காணிப்பதிவேட்டில் பதியப்படவில்லை. இவ்விதமான சூழலில் வாழ்ந்துவரும் இவர் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். செஞ்சோலையில் வாழ்ந்து வந்தவர். வாழ்க்கையே போராட்டமாக அமைந்து விட்டது இவருக்கு.
தற்போது இவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை என்ன? இவர் வீடு அழிக்கப்பட்டு , தாக்கப்பட்டு மருத்துவ மனையிலிருக்கின்றார். காரணம்? இவர் குடியிருக்கும் காணி சட்டரீதியாக இவருடையது அல்ல. ஆனால் இக்காணிக்கு இவரது சகோதரர் அன்று ரூபா 28 இலட்சம் கொடுத்ததாக இவர் குறிப்பிட்டிருக்கின்றார். இலங்கைநெற் இணையத்தளச் செய்தின்படி இவருக்கு ஏற்பட்ட நிலைமைக்குக் காரணம்:
இவர் சில வருடங்களுக்கு முன்னர் உதவி கேட்டு சிறீதரன் பா.உறுப்பினரிடம் சென்றிருக்கின்றார். அவர் வேழமாலிகிதன் என்பவரை இவரது இருப்பிடம் சென்று இவரது நிலையை அறிந்து வரச் சொல்லியிருக்கின்றார். அவ்விதம் சென்று இவரது நிலையை அறிந்து கொண்ட வேழமாலிகிதன் தான் சிறீதரனிடம் இவரது நிலையை எடுத்தியம்புவதாகக் கூறியுள்ளார். ஆனால் அன்றிரவே பத்து மணியளவில் இவரை அழைத்து தங்கச்சி உணவுக்கு என்ன செய்தீர்கள்? தான் கொத்துரொட்டி வாங்கி வருவதாகக் கூறுகின்றார். இவரது கூற்றுப்படி (இலங்கைநெற் தளத்தில் வெளியான செய்தியின்படி) இவர் அவ்விதம் வேழமாலிகிதன் இரவில் அழைத்துக் கொத்துரொட்டி கொண்டு வருவதாகக் கூறியதையிட்டுச் சந்தேகம் அடைகின்றார். வேழமாலிகிதன் தவறான எண்ணத்தில்தான் அச்சமயம் அழைத்ததாக இவர் எண்ணுகின்றார். அதன் விளைவாக அயலவரிடம் அது பற்றிக் கூறி பாதுகாப்புக் கேட்கின்றார். இதனால் தன் பெயருக்குக் களங்கமேற்படுத்திய இவரின் மேல் ஆத்திரம் கொண்ட வேழமாலிகிதன் அன்றிலிருந்து இன்றுவரை இவருக்குத் தொல்லைகள் கொடுக்கின்றார். காணியின் முன்னாள் உறுப்பினர் அழகரட்ணத்துடன் தொடர்புகொண்டு இக்காணி இப்போது ஒரு கோடி வரையில் செல்லுமென்று கூறிச் சட்டத்தின் துணையுடன் இவரைக் கலைக்கின்றார். இருந்த வீட்டையும் சிதைத்து விடுகின்றார்.

ஜூலை 13 இலங்கைத்தமிழ் மக்கள் அரசியலில் ஒரு காலத்தில் கோலோச்சிய தலைவர்களிலொருவரான , முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் நினைவு தினம். அவருடன் கூடவே முன்னாள் யாழ் பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரனின் நினைவு தினமும் கூட. மே மாதம் போல் யூலை மாதமும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் பல மாற்றங்களை , அழிவுகளை ஏற்படுத்திய மாதம். அமிர்தலிங்கம் அவர்களைப்பொறுத்தவரையில் என்னால் அவரை ஒரு போதுமே மறந்துவிட முடியாது.
இவர் இலங்கைத்தமிழர் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்ட அமைப்புகளின் தலைவர்களில் வித்தியாசமானவர். இவர் ஆயுதப்போராட்டத்தில் குதிப்பதற்கு முன்னர் இவருக்கு வயது முப்பதைத்தாண்டி விட்டிருந்தது. தமிழர் விடுதலைக்கூட்டணியின் இளைஞர் அணியில் நீண்ட காலம் இயங்கியிருக்கின்றார்.அதன் காரணமாகத் தமிழ் அரசியல்வாதிகளுடன் நன்கு பழகியிருந்தார். அரசியல் பற்றிய புரிதல் நிறைய இவருக்கிருந்தது. பொதுவாக அடக்குமுறைகளுக்கு எதிராக உணர்ச்சி வசப்பட்டு இளம் வயதில் ஆயுதம் தூக்கியவர் என்பதற்கு மாறாக, நடுத்தர வயதினை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில், நல்லதொரு உத்தியோகம் உள்ள நிலையில் அதனை உதறிவிட்டுப் போராட்டத்துடன் தன்னைப் பிணைத்துக்கொண்டவர். இவரது வயது, அறிவு இவைதாம் இவரை ஆரம்பத்தில் போராட்ட அமைப்பின் தலைவராக்கியது.
"நீண்ட தர்க்கங்கள், பிணக்குகள் மற்றும் உயர் நீதிமன்ற வழக்குகளின் பின்னர் இலங்கையின் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.. அதே வேளை, எண்ணற்ற பொய்யான வாக்குறுதிகளாலும் தவறான ஊடகப் பிரச்சார மேலீட்டாலும் குழம்பிப்போயுள்ள பலர், தமது அரசியல் எதிர்காலத்தை வேறு யாரேனும் தீர்மானிக்கட்டும் என்று பேசாமல் விட்டுவிடுகின்றனர். இவ்வாறு சோர்ந்துபோய் அக்கறையின்றி இருப்போரிடமிருந்தே இத்தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் உண்மையில் இவர்களால்தான் இச்சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். “
அண்மையில் முனைவர் செல்லத்துரை சுதர்சனுக்கு அளித்த நேர்காணலில் முன்னாள் யாழ் மாநகரசபையின் முதல்வராகவிருந்த செல்லன் கந்தையன் அவர்கள் குறிப்பிட்ட ஒருவிடயம் என் கவனத்தை ஈர்த்தது.
அண்மையில் முனைவர் செல்லத்துரை சுதர்சன் அவர்கள் யாழ் மாநகரசபையின் முன்னாள் மேயரான செல்லன் கந்தையா அவர்களுடன் நடாத்திய நேர்காணலிது. இது பற்றி முகநூலில் காரசாரமாக விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் சூழலில் வெளிவந்திருப்பதால் இதற்கொரு முக்கியத்துவமுண்டு. இந்த நேர்காணல் பல விடயங்களை வெளிக்காட்டியுள்ளது. அவை:
இன்று அமெரிக்காவெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் போர்க் குரல் இது.
எதிரி மிகப் பெரியவன்.. பலம் வாய்ந்தவன்.. உலகின் பெரு ராணுவங்களில் ஒன்று.. அரசாங்கமே இராணுவ ஆட்சி.. உலகெங்கும் நண்பர்கள்.. அமெரிக்காவுடன் இராணுவ உதவி ஒப்பந்தம்.. இயற்கை வளங்களுக்காய் மேற்குலகம் நெருக்கமாய்...

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









