‘இனமானப் பேராசிரியர்’ அமரர் க. அன்பழகன் அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலிகள்’

கெளரவ. தலைவர் மு. க. ஸ்டாலின் MLA
திராவிட முன்னேற்றக் கழகம்
அண்ணா அறிவாலயம்’
சென்னை, தமிழ்நாடு
திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவராக திகழ்ந்தவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக விளங்கியவருமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் மறைவைக் கேட்டு ஆறாத்துயர் அடைந்தோம்.
தமிழினம், திராவிடம், கழகம் என அனைத்துத் தளங்களிலும் தனது அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகள் காரணமாக செல்வாக்குச் செலுத்தி பெற்றவரும், சிறந்த சொல்லாண்மையும், எழுத்தாண்மையும் ஒருங்கே அமையப் பெற்றவருமான பேராசிரியர் அவர்களின் மறைவு தாங்கள் தலைமை தாங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்லாது தமிழகத்தை நேசிக்கும் ஈழத் தமிழர்களுக்கும்கூட இழப்பாகும். தங்கள் தந்தை தலைவர் கலைஞருடன் எழுபத்தைந்து ஆண்டு காலம் தோழமையுடன் செயற்பட்டு, தமிழ் வரலாறு கூறும் தலைவர் கலைஞரின் அனைத்துச் செயற்பாடுகளிலும் உறுதுணையாய் விளங்கியதோடு ஈழத்தமிழர் விடயத்திலும் தலைவர் கலைஞர் அவர்கள் முன்னெடுத்த சாத்தியமான அனைத்து விடயங்களிலும் துணை நின்று செயற்பட்டதை ஈழத் தமிழர்களாகிய நாம் என்றும் மறந்து விட முடியாது.

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சிப் பீடத்தில் படிக்கும் முதலாம் வருட மாணவியைப் 'பகிடிவதை' என்ற பெயரில் பாலியல் வகையிற் கொடுமை செய்து அந்தப் பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் பல்கலைக்கழகத்துள் வரக்கூடாது என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடைவிதித்திருப்பதாக இன்று வெளியான இலங்கைப் பத்திரிகையிற் படித்தேன். இந்த முடிவு கடந்த சில தினங்களாகச் சமூக வலைத்தளங்களில் 'பகிடிவதைக்'கெதிராகப் பதிவிடப்பட்ட பல ஆத்திரமான கண்டனங்களின் பிரதிபலிபு என்று நினைக்கிறேன்.


இன்று (ஜனவரி 27) யூத நாடான இஸ்ரேலிய தலைநகரமான ஜெருசலம் நகரில் நடக்கும் 'ஹிட்லரின் யூத இனஅழிப்பு' ஞாபகார்த்தநாள் தினத்தில் பிரித்தானிய பட்டத்து இளவரசர் சார்ள்ஸ் உட்பட பல உலகத் தலைவர்கள் கூடியிருக்கிறார்கள். இன்றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன் 27.1.1945ம் ஆண்டு சோவியத் யூனியப் படையினர் போலந்து நாட்டிலுள்ள ஆஷ்விட்ஷ் என்ற இடத்தில் ஜேர்மனியரால் நடத்தப்பட்ட கொலைக்கூடத்தையடைந்து அங்கிருந்த யூதக் கைதிகளைக் காப்பாற்றிய நாளை நினைவு கூரும் முகமாக இந்த ஒன்று கூடல் நடக்கிறது.
பிரித்தானிய அரசகுடும்பத்தினர் இன்று வெளியிட்ட அறிக்கை,பிரித்தானியா மகாராணியின் மூத்த மகனின் இரண்டாவது மகனான இளவரசர் ஹரியும் அவரின் மனைவியான மேகனும் இன்றிலிருந்து பிரித்தானிய அரசகுடும்பத்துக் கடமைகளிலிருந்து வெளியேறிச் சாதாரண பிரஜைகளாக வாழ்க்கையை நடத்துவதை மகாராணியார் அங்கிகரிப்பதாக வெளியிடப்பட்டிருக்கிறது. 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









