(பயணக் கட்டுரைகள்) என் கொடைகானல் மனிதர்கள்! (4): ஜாம கோடாங்கி - ஜோதிகுமார் -
- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -
ஜாம கோடாங்கி
எங்க தாத்தாவுட்டு அப்பா பேரு ஊத்தங்கொட்டான் புள்ள. எங்க தாத்தா பேரு நாராயணன் புள்ள. எங்க அப்பா ஆரோக்கியசாமி. அவர, ரம்பகார ஆறுமுகம்ன்னுதான் எல்லாருக்கும் தெரியும். நான் சேவியர். கல்லொடைக்கிற சேவியர்னா யாருக்கும் தெரியும்”
“எங்க அண்ணா வீட்டுக்கு வராட்டி எங்க அம்மா வருத்தப்படும். எங்க தம்பி வீட்டுக்கு வராட்டியும் அப்படித்தான். அதே யோசனையோட அம்மா அடுப்படியிலேயே ஒக்காந்திருப்பாங்க. நான் வீட்டுக்கு வராட்டி கவலையே வராது எங்க அம்மாவுக்கு…”
“அவென் சிங்ககுட்டி… எப்படியானலும் எந்த ஜாமமானாலும் வந்து கதவெ தட்டுவான். என் சம்சாரத்துக்கு கூட என் அம்மா சொல்றது அதேதான். போய் படு புள்ள. அவென் ஒரு ஜாம கோடாங்கி. நடு சாமத்துல வந்து கதவ தட்டுவான்னு…”
இந்த ஜாம கோடாங்கியையும் எக்குத்தப்பாய்த்தான் கொடைக்கானல் குளக்கரையில் சந்தித்தேன்.
குளம் மாறிவிட்டிருந்ததா என்பது சரியாக பிடிபடவில்லை. ஆனால் நகரை ஒட்டிய பகுதியில் முன்பு போலில்லாமல், சற்றே கலங்கலாய் காணப்பட்டது. ஆனால் நடந்து செல்ல செல்ல – குளத்தின் களங்கல் தெளியத்தொடங்கி, நீல வானத்தின், கீழ், ஓரங்களில் நீல அல்லிகளுடன் வழமைபோல் தனது அழகை பாதுகாத்து நின்றது. இருந்தும் கரையை ஒட்டிய பிரதேசம் முன்போலன்றி, புல்லும் புதருமாய் நிறைந்திருந்தது. ஒரு வேளை அடுத்த முறை திருத்தி இருப்பார்கள்.
குளக்கரையின் மருங்கே, பாதையை ஒட்டி போடப்பட்டிருந்த அதே ஒடுங்கிய காங்கிரிட் திட்டின் மீது தன் நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தவன், தொழிலுக்கு நேரமாகிவிட்டதை அறிந்து அவசர அவசரமாக எழுந்து, பின்னால் ஒட்டியிருந்த தூசி துரும்புகளை தன் வல கரத்தால் தட்டி விட்டுக்கொண்டு, தன் நண்பனுடன் வேகமாக நடக்க தொடங்கினான், குளக்கரையின் நடைபாதையில்.

கீரிமலைக் கடற்கரை சுனாமி வந்து போனது போல அமைதியாக இருந்தது. அலைகளின் ஆர்ப்பரிப்பைத்தவிர, அங்கே மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கவில்லை. எங்கிருந்தோ பறந்து வந்த மீன் கொத்திப் பறவை ஒன்று சட்டென்று தண்ணீரில் மூழ்கி எதையோ கொத்திச் சென்றது. சுதந்திரமாய்ச் சிறகடித்து வானத்தில் பறக்கும் கடற்கொக்குகளைக் கூட இன்று காணக் கிடைக்கவில்லை. அஸ்தி கரைப்பதற்காக கீரிமலைக் கடலில் தலை மூழ்கி எழுந்தபோது இதுவரை அடக்கிவைத்த எனது துயரம் தன்னிச்சையாகப் பீறிட்டு வெடித்தது. கிரிகைகள் செய்யும்போது துயரத்தை வெளிக்காட்டக் கூடாது என்பதால் கிரிகைகள் செய்த சமயாச்சாரியின் முன்னால் இதுவரை அடக்கி வைத்த துயரம் தண்ணீரில் ஒவ்வொரு முறையும் தலைமூழ்கி எழுந்தபோது என்னையறியாமலே வெடித்துச் சிதறியது. ஆற்றாமையின் வெளிப்பாடாய் இருக்கலாம், ஏனோ வடதிசையைப் பார்த்து ஓவென்று அழவேண்டும் போலவும் இருந்தது. என் கண்ணீரைப் பாக்குநீரணை தனதாக்கிக் கொண்டபோது, ஆர்ப்பரித்த ஓயாத அலைகளின் ஆரவாரத்தில் என் அழுகைச் சத்தமும் அதற்குள் அடங்கிப் போயிற்று.
வெளியே காற்று அனலாக வீசிக்கொண்டிருந்தது

மறு யுகம் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள 'வாழ்வின் பின் நோக்கிய பயணமிது' நூலை வாசித்தேன். இந்நூல் எனக்குக் கிடைப்பதற்கு வழி செய்த நண்பரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளருமான எல்லாளனுக்கு நன்றி. சிவகாமி, யாழினி என்னும் இரண்டு முன்னாட் பெண் போராளிகளின் போராட்ட அனுபவங்களைக் கூறும் நூல். சிவகாமியின் போராட்ட அனுபவங்கள் படர்க்கையில் விபரிக்கப்பட்டுள்ளன. இவரது அனுபவங்களே 48 பக்கங்களைக் கொண்ட இச்சிறு நூலின் பிரதான பகுதியாக அமைகின்றது.

“சாமி….. முகூர்த்த டைம் முடியிறத்துக்கு இன்னும் அரைமணி நேரத்துக்கு மேல இருக்கு…. நாமெல்லாம் மனசுவெச்சா இந்தக் கேப்புக்குள்ள கலியாணத்தையும் முடிச்சிடலாம் இல்லியா….”


நான் இந்த சிறுகதை மீண்டும் கிடைக்குமென்று எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் நூலகம் தளத்தின் உதவியால் மீண்டும் இச்சிறுகதையினைப் பெற முடிந்தது. அதற்காக நூலகத்துக்கு நன்றி.


பாரதியார் எழுதிய முதல் கவிதையும் , முதல் சிறுகதையும் என்ன... ? என்பது பற்றியும் இலக்கிய உலகில் ஆராயப்படுகிறது. வழக்கமாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் வ.வே.சு. ஐயர் ( வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் ) எழுதிய குளத்தங்கரை அரசமரம் தான் முதலில் தமிழில் வெளிவந்த சிறுகதை என்று நிறுவுகின்றனர். இவர் 1881 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 02 ஆம் திகதி திருச்சி வரகனேரியில் பிறந்தார். இந்திய சுதந்திரப்போராட்டத்தின்போது தமிழ் நாட்டில் இவரது பங்களிப்பு மிக மிக முக்கியமானது. லண்டன் சென்று சட்டமும் படித்து பரீஸ்டரானவர். சுதந்திரம் சும்மா கிடைக்காது, ஆயுதத்தினாலும் பெறமுடியும் என நம்பிய தீவிரவாதி. பாரதியின் வாழ்க்கைச் சரிதத்தில் இவரும் முக்கிய தருணங்களில் இடம்பெறுகிறார். பாரதி மறைவதற்கு முதல் நாள் 1921 ஆம் ஆண்டு 11 ஆம் திகதி, சென்னையில் வ.வே.சு. ஐயர் கைதாகி சிறைசெல்லுகிறார். பாரதி கடும் சுகவீனமுற்றிருப்பது அறிந்து, அவரைச்சென்று பார்க்க விரும்பும் ஐயர், பொலிஸாரிடம் அனுமதி கேட்கிறார். இவரை சிறைக்கு அழைத்துச்செல்லும் பொலிஸாருக்கு இரக்க குணம் இருந்திருக்கவேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









