ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - "மணிமேகலை கூறும் தொல்தமிழர் அணுவியம்"
Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும்இ இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து, இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த படைப்பாளிகளைக் கௌரவித்து ஊக்குவிக்கும் பொருட்டுக் கடந்த பல வருடங்களாக 'இரா. உதயணன் இலக்கிய விருதுகளை" வழங்கிவருகின்றனர். கொரோனாப் பரவல் காரணமாக 2020, 2021இ 2022 ஆண்டுகளுக்குரிய விருது வழங்கல் அறிவிக்கப்படாமலிருந்தது. தற்போது அந்த ஆண்டுகளுக்குரிய விருதுகள் யாவும் அறிவிக்கப்பட்டுள்ளன. 2020 -ம் ஆண்டுக்குரிய 'வாழ்நாள் சாதனையாளர் விருது"க்கு மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வருகை தரும் பிரபல எழுத்தாளரும் பல இலக்கிய விருதுகளைப் பெற்றிருப்பவருமான திரு. பெருமாள் முருகன் அவர்களுடனான இலக்கிய சந்திப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி ( 10-03-2024 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 3-00 மணிக்கு மெல்பனில் Vermont South Learning Centre மண்டபத்தில் ( 1, Karobran Drive, Vermont South, Vic 3133 ) நடைபெறும்.
எழுத்தாளர் பெருமாள் முருகன், அகராதியியல், பதிப்பியல் ஆகிய துறைகளிலும் மானுடவியல் ஆய்வுகள், வட்டார வழக்கு ஆராய்ச்சி, நாட்டார் இலக்கிய ஆய்வு முதலானவற்றிலும் பங்காற்றியுள்ளார்.
பெருமாள் முருகனின் ஒன்பது நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நிழல்முற்றம் நாவல் போலிஷ் மொழியிலும் மாதொருபாகன் நாவல் ஜெர்மன் மொழியிலும் செக் மொழியிலும் வெளியாகியுள்ளன. மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் மாதொருபாகன் நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 17 ஆண்டுகளாக அச்சு, இணைய இதழாகத் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்த தாய்வீடு இதழ், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒலி இதழாகவும் வெளிவந்துகொண்டிருக்கிறது.
தாய்வீடு மாத இதழானது சமகாலத்தில் உலகளாவிய அளவில் நடக்கும் சமூக அரசியல் நிகழ்வுகளையும் வரலாறு, பண்பாடு, வாழ்வியல், இலக்கியம், ஆவணப்படுத்தல் சார்ந்த பல்வேறு விடயங்களையும் தமிழ்ச் சமூகத்தின் உரையாடற் பரப்புக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கின்றது.
வாகசர்களதும் அறிவுஜீவிகளதும் விமர்சனங்களையும் கருத்துகளையும் உள்வாங்கிப் பயணிக்க வேண்டியது பொறுப்புள்ள ஊடகம் ஒன்றின் கடமை என்பதை நன்றாகப் புரிந்துகொண்டுள்ள தாய்வீடு, அந்த நோக்குடன் 'தாய்வீடு இதழ் உரையாடலும் விமர்சனமும் – 2024' எனும் சந்திப்பை எதிர்வரும் 25.02.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு, இல.128, டேவிட் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 'கலைத்தூது அழகியல் கல்லூரி' அரங்கில் நடத்தவுள்ளது.

டாக்டர் விக்கினேஸ்வராவின் ஈராண்டு நினைவாக “கலாநிதி த.கலாமணி அணிந்துரைகள்" எனும் நூல் தற்போது ஈழத்தில் வெளிவருகிறது.
சுன்னாகம் புகழ் டாக்டர் ப. விக்கினேஸ்வரா மண்பயனுறச் சேவை நல்கிய மக்கள் மருத்துவர் ஆவார். இடர்காலத்தில் அவர் நல்கிய மருத்துவப் பணிகளை யாழ்ப்பாணம் மண்ணும், மக்களும் என்றும் நினைவில் கொள்வர்.
சுன்னாகத்தில் நாற்பது ஆண்டுகள் மருத்துவ பணியாற்றிய வைத்தியர் ப. விக்கினேஸ்வரா அவர்கள் அமரராகி (22/2/22) இரு வருடமாகிறது. ஆனால் அவரிடம் சிகிச்சைபெற்ற மக்கள் இன்றும் அவரது திறமைகளையும், சேவைகளையும் புகழ்ந்து நினைவு கூருகின்றனர்.
- *தெளிவாகப் பார்க்க படத்தின் மீது ஒருதடவை அழுத்தவும் -

எழுத்தாளர் மு.தயாளனை முதன்மை ஆசிரியராகவும், மைக்கல் கொலின், செல்வி த.சரண்யா, திருமதி சாரு தயாளன் ஆகியோரை உதவி ஆசிரியர்களாகவும் கொண்டு , 'வாசித்து வாசித்து வாழ்வை வளமாக்குவோம்' என்னும் தாரக மந்திரத்துடன் வெளியாகும் மாதசஞ்சிகை 'சிறுகதை மஞ்சரி'. இதன் பெப்ருவரி 2024 இதழ் வெளியாகியுள்ளது.

கனடாவில் இந்த வருடத் தமிழ் மரபுக் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன. சென்ற ஞாயிற்றுக்கிழமை 28-1-2024 அன்று ‘கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின்’ பொங்கல் விழாவும் மரபுத்திங்களும் மிகவும் சிறப்பாக ஒன்ராறியோ, எத்தோபிக்கோவில் கொண்டாடப்பட்டது. மங்கள விளக்கேற்றிக் கனடா தேசிய கீதம் தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு மொழிகள் கலந்து பாடப்பெற்றது. தொடர்ந்து தமிழ்வாழ்த்தும் அகவணக்கமும் இடம் பெற்றன.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சமூகத்தினருக்கு வணக்கம்,
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் வருடாந்த இராப்போசன ஒன்றுகூடலில் வழங்கப்படும் விருதுகளுக்கும் சிறப்பு விருந்தினருக்குமான பரிந்துரைகளை நாம் கோருகின்றோம். இவ்வருடம் பின்வரும் பிரிவுகளுக்காக விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.
· தொழில் முனைவருக்கான விருது (Award for Enterpreneurship)
· விளையாட்டுத் துறையில் சிறப்புச் சாதனை புரிந்தவர்களுக்கான விருது (Award for Outstanding Achievement in Sports)
· கல்வித்துறையில் சிறப்புச் சாதனை புரிந்தவர்களுக்கான விருது (Award for Outstanding Academic Achievement)
· சமூகச் செயற்பாட்டாளருக்கான விருது (Award for Social Activism)
இவ்விருதுகளுக்காகவும் சிறப்பு விருந்தினருக்காகவும் பரிந்துரைக்கப்படுபவர்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராகவோ அல்லது தற்போதையை / முன்னாள் ஊழியராகவோ இருப்பதுடன் சமூக அக்கறை கொண்டவராகவும் பரிந்துரைக்கப்படும் துறையில் நீண்டகால பங்களித்திருப்பவராகவும் சமூக மதிப்புடையவராகவும் இருப்பதுடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவினால் இதற்குமுன்னர் விருதளிக்கப்படாதவராகவும் இருப்பது அவசியமாகும்.
Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268
கனடா , ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் இணையவழி கலந்துரையாடல்: “ அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியம் “
உரை நிகழ்த்துபவர் : எழுத்தாளர் லெ. முருகபூபதி
கனடா - ரொறன்ரோ நேரம் : 16-02-2024 வெள்ளிக்கிழமை இரவு 8-00 மணி – 10-00 மணி
இலண்டன் நேரம் : 17-02-2024 சனிக்கிழமை அதிகாலை 1-00 மணி – 3-00 மணி
இலங்கை , இந்தியா நேரம் : 17-02-2024 சனிக்கிழமை காலை 6-30 மணி – 8-30 மணி
அவுஸ்திரேலியா நேரம் : சனிக்கிழமை 17-02 – 2024 நண்பகல் 12-00 மணி – 2-00 மணி
Join Zoom Meeting
Meeting ID: 847 7725 7162
Passcode: 554268
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345
அவுஸ்திரேலியாவில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் இயங்கிவருகிறது. கடந்த ஆண்டுகளில் இலங்கையில் வெளியான தமிழ் நூல்களுக்காக நடந்த தெரிவில், பரிசுபெற்ற எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மீண்டும் இந்த பரிசளிப்புத் திட்டம் இம்முறையும் இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டு அமைந்துள்ளது.
1. கடந்த 2023 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய நான்கு துறைகளில் வெளியான தமிழ் நூல்களே இந்தத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.
Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268
தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கலாசூரி இ.சிவகுருநாதனின் இருபதாம் ஆண்டு நினைவு நூலான “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” வெளியீட்டு விழா எதிர்வரும் 20.01.2024 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் நடைபெறவுள்ளது.
கன்பராவில் உள்ள தமிழ் மூத்த பிரஜைகள் சங்க மண்டபத்தில் (Tamil Senior Citizen Hall,11 Bromby Street, Isaacs ACT 2607) சட்டத்தரணி,இலக்கிய ஆர்வலர், எழுத்தாளருமான திரு. க. திருவருள் வள்ளல் தலைமையில் நடைபெறவுள்ளது.
Join Zoom Meeting | Meeting ID: 842 3057 8587 | Passcode: 525751
Join Zoom Meeting | Meeting ID: 826 0364 5021 | Passcode: 383598
அன்புடையீர் வணக்கம். அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள். எமது சங்கத்தின் பூமராங் மின்னிதழின் வெளியீடு, இம்மாதம் 14 ஆம் திகதி ( 14-01-2024 ) ஞாயிற்றுக்கிழமை மெல்பன் நேரம் இரவு 7-00 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக மெய்நிகரில் இடம்பெறும். சங்கத்தின் உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்களை இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்கிலாந்தில் இருந்து வருகை தந்திருந்த பாவலர் பாலரவியின் கவிதைத் தொகுப்புக்கள் 24-12-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் உள்ள 110, ‘அயன்சைட் கிறிசென்ட்’ மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ‘தெளிந்தபின் தெளிந்தவை,’ ‘எண்ணங்களின் வண்ணங்கள்,’ ‘வாழ்வாங்கு வாழ்ந்தோர்க்கும் வாழ்வோர்க்கும் வாழ்த்துக்கள்,’ ‘தேசமேயாகிய சுடர்கள்,’ ஆகிய நான்கு கவிதைத் தொகுப்புக்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வுக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் கவிஞர் அகணி சுரேஸ் அவர்கள் தலைமைதாங்கினார். வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தனது உரையில் கவிஞர் பாலரவியின் தங்கை சசிகலா தனது மாணவி என்றும், புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ் வளர்க்கும் இவர்களைப் போன்றவர்களின் தன்னலமற்ற சேவை பாராட்டப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான லெ.முருகபூபதி அவர்களுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், 2022 ஆம் ஆண்டிற்கான இயல் விருதையும், பிரான்ஸ் வென்மேரி அறக்கட்டளை, இலக்கியச் சாதனையாளர் விருதையும் வழங்கிக் கௌரவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர் முருகபூபதி அவர்களைப் பாராட்டும் விழா, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் ஏற்பாட்டில் மெல்பனில் 2024 ஜனவரி மாதம் 7 ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4-00 மணிக்கு நடைபெறவுள்ளது. 112 High St, Berwick VIC - 3806, Australia என்ற முகவரியில் அமைந்துள்ள, மூத்த பிரசைகள் மண்டபத்தில் இடம் பெறவுள்ள இந்த விழாவில், முருகபூபதியின் இலக்கியச் சாதனைகள், சமூகநலச் செயற்பாடுகள் என்பவற்றைப்பற்றி, அறிஞர்களும், இலக்கியவாதிகளும், சமூகச் செயற்பாட்டாளர்களும் உரையாற்றவுள்ளனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் மெய்நிகரில் நடைபெற்றது. இலங்கையில் முன்னர் நீடித்திருந்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த ஏழைத் தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வரும் மாணவர் கல்வி நிதியம், அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாகும்.

சென்ற சனிக்கிழமை 16 ஆம் திகதி ஸ்காபரோவில் உள்ள ஸ்காபரே சிவிக் சென்றர் மண்டபத்தில் பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட ‘கனடா வரலாற்றில் தமிழர் படகுகள்’ என்ற நூல் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பெற்றது. இந்த நூலில் புகைப்படங்களுடன் தமிழ் மொழியிலும், ஆங்கிலத்திலும் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
மங்களவிளக்கேற்றல், கனடியதேசிய பண், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றைத் தொடர்ந்து ச. சாந்தினியின் வரவேற்புரை இடம் பெற்றது. அடுத்து தேவா சபாபதியின் வரவேற்புரையும், தொடர்ந்து கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் அகணி சுரேஸின் தலைமையுரையும் இடம் பெற்றன. அவர் தனது உரையில் இந்த நூலை வெளிக்கொண்டு வந்தவர்களையும், நிதி உதவி செய்தவர்களையும் பாராட்டி, கனடியத் தமிழர்பற்றி அடுத்த தலைமுறையினர் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஆவணம் இது என்பதையும் குறிப்பிட்டார்.
வெளியீட்டுரை நிகழ்த்திய செல்வி ருக்ஸா சிவானந்தம் மற்றும் ஆய்வுரை நிகழ்த்திய திரு. பொன்னையா விவேகானந்தன் ஆகியோர் நூலின் உள்ளடக்கத்தில் உள்ள கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டு உரையாற்றினார்கள். செல்வி ருக்ஸா சிவானந்தம் விழாவில் பங்குபற்றிய புதிய தலைமுறையினருக்காக ஆங்கிலத்திலும் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். பொன்னையா விவேகானந்தன் ஒரு குறும்படக் கதைபோலப் படகில் நடந்த சில சம்பவங்களைத் தமிழில் எடுத்துச் சொன்னார்.
* விளம்பரத்தைத் தெளிவாகப் பார்ப்பதற்கு அதற்குமேல் ஒரு தடவை அழுத்துங்கள்.
இடம்: 'சங்கரப்பிள்ளை மண்டபம்',
கொழும்பு தமிழ்ச் சங்கம்,
வெள்ளவத்தை, இலங்கை
காலம்: டிசம்பர் 24, 2023 மாலை 5 மணி

சென்ற ஞாயிற்றுக்கிழமை 03-12-2023 அன்று மாலை நான்கு மணியளவில் அகில் சாம்பசிவம் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்ட இலக்கியவெளி இதழ் குழுவினர் வெளியிட்ட ‘மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ்’ வெளியீட்டு விழா ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக் கலாமன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிந்தனைப்பூக்கள் பத்மநாதன், எழுத்தாளர் குரு அரவிந்தன், கவிஞர் மீரா கனி விமலநாதன், தமிழக எழுத்தாளர் முனைவர் கரு முத்தய்யா, எழுத்தாளர் திரு. த. சிவபாலு ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைத்ததைத் தொடர்ந்து திரு.த. சிவபாலு அவர்களின் வரவேற்புரை இடம் பெற்றது.
இந்த நிகழ்வுக்குப் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். தலைவர் உரையைத் தொடர்ந்து பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன் அடிகளாரின் சிறப்புரை இடம் பெற்றது. கலாநிதி பால. சிவகடாட்சம், கலாநிதி செல்வநாயகி ஸ்ரீதாஸ், கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா எழுத்தாளர் இணையத் தலைவர் கவிஞர் அகணி சுரேஸ், சட்டத்தரணி திரு. சண், ஆர். என். லோகேந்திரலிங்கம், திரு. க. சண்முகலிங்கம், பாஸ்டர் எஸ். ஜெயானந்தசோதி, முனைவர் கரு முத்தய்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.