வளமிகு வன்னியின் வனப்புறு பண்டைய கிராமம் குமுளமுனை - த.சிவபாலு -

குமுளமுனை என்பது முல்லைத்தீவு நகரில் இருந்து பத்து மைல்கள் தொலைவில் உள்ள ஒரு வளம் நிறைந்த கிராமமாகும். முல்லைத்தீவுக்கு தென் மேற்குத்தி;சையில் அமைந்துள்ளது. தண்ணீரூற்றிலிருந்து ஆறு மைல்கள் தெற்காகவும் அளம்பில் என்னும் கிராமத்திலிருந்து இரண்டரை மைல் மேற்காகவும் இக்கிராமம் அமைந்துள்ளது. வடக்கே கணுக்கேணிக் குளம் அல்லது முறிப்பு எனப்படும் குளத்தையும் அதன் வயற்பரப்பினையும் எல்லையாகவும், கிழக்கே அளம்பில் கிராமத்தையும் தென் கிழக்கே செம்மலைக் கிராமத்தையும் நாயாறு கடல்நீர் ஏரியையும் மேற்கே தண்ணிமுறிப்புக் குளக்கட்டினையும், குருந்து மலை என்னும் பண்டைய வரலாற்று நகரத்தையும் வடமேற்கே பூதன் வயல் என்னும் குளக் குடியிருப்பையும் எல்லைகளாகக் கொண்ட கிராமமாகும்.
ஷகுமுள்; என்னும் ஒரு வகை மரங்கள் இங்கு காணப்படுகின்றன. இவ்மரத்தின் இலைகளை அரைத்து பசுக்கன்றுகளுக்கும் எருமைக்கன்றுகளுக்கும் மருந்தாகப் பயன்படுத்துவர். கீரைப்பூச்சி என்னும் நோய் வந்தால் இந்த இலையை உண்ணவைப்பதன் மூலம் அந்த பூச்சிகள் அழந்து கன்றுகள் நோயிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. இம்மரத்தின் முக்கியத்துவம் கருதி இவ்வூரின் பெயர் காரணப் பெயராக அமைந்திருத்தல் வேண்டும் என்பது இவ்வூரவர்கள் கூறும் கருத்தாகும்.
இக்கிராமத்தில் கரிக்கட்டுமூலை வன்னிமத்தின் கீழ் பரிபாலனம் செய்யப்பட்ட முக்கியமான இடமாகக் காணப்படுகின்றது. பாண்டிய, சோழ, சேர நாடுகளைச் சேர்ந்த வன்னியர்கள் தென்னகத்திலிருந்து படையெடுத்து வந்தவேளை படைகளை நடாத்தி வந்தவர்கள். இவர்கள் முல்லைத்தீவு, வவுனியா, அநுராதபுரம், பொலநறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் குடியேறி அப்பிரதேசங்களைத் தமது ஆதிக்கத்துக்குள் வைத்திருந்தனர். இவர்கள் இருந்ததற்கான பல சான்றுகள் பல கிராமங்களில் காணக்கிடக்கின்றன. வன்னியை ஆண்ட வன்னி மன்னர்களின் வரலாறு இதுவரை நன்கு அறியப்படாததாகக் காணப்படுகின்றது. இன்று இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளான தென்னவன்மரவடி, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேண், நித்தகைக்குளம், ஆமையன்குளம், சூரியன் ஆற்றுவெளி, அமெரிவயல் போன்ற பிரதேசங்கள் பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வசித்த பகுதியாகும். இப்பிரதேசங்களில் இன்று தமிழர்கள் திட்டமிட்டு அப்புறப்படுத்தப்பட்டதோடு பெரும்பான்மை இனத்தினரின் குடியேற்றத்திட்டங்களாக மாற்றப்பட்டுவருவதும் கண்கூடு.


1964 இல் எம்.டி.வாசுதேவன் நாயரால் எழுதப்பெற்ற இந்த மலையாள நாவல் அப்போது ஒரு இலட்சம் பிரதிகள் விற்பனையைக் கண்டது. தமிழில் பல மொழிபெயர்ப்புகளைக் கண்டபோதிலும், கடைசியாக 2017 இல் காலச்சுவடு பதிப்பாக ரீனா ஷாலினி அவர்களால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. ரீனா ஷாலினி மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர்.

தமிழ்ச் சமூகத்தில் அறம் சார்ந்த கருத்துக்கள் நெடுங்காலமாகவே இருந்து வரும் ஒன்று. பண்பட்ட வாழ்வியலைத் தொடங்கிய காலந்தொட்டு அறத்திற்கும் அறம் சார்ந்த வாழ்வியல் முறைக்கும் தமிழ்ச்சமூகம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளன . அத்தகைய முன்னெடுப்புகளின் தொடர்ச்சியைத் திருக்குறளில் நாம் காண்கிறோம். குறிப்பாக, அறத்தின் மையமாக இருக்கும் இல்லறம், அந்த இல்லறத்தின் செயல்பாடு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும்? இல்லறத்தினுடைய மேன்மைகள் எவை? இல்லறத்தின் தேவை என்ன? என்பன போன்ற சிந்தனைகள் இன்றைய காலத்திற்கும் பொருந்தும் விதமாக அன்றே திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைக் குறித்த ஒரு பார்வையை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது
வழமைபோல இந்த வருடமும் பனி கொட்டத் தொடங்கிவிட்டது. தரை எல்லாம் பனி வயலாகக் காட்சி தருகின்றது. மரங்கள் எல்லாம் இலை உதிர்த்து வெண்பனியால் போர்வை போர்த்திருக்கின்றன. புலம்பெயர்ந்த பின் இப்படியான காட்சிகளை ஒவ்வொரு வருடமும் பார்த்ததால்தான், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாழும் நிலச்சூழலையை வைத்து ‘ஆறாம் நிலத்திணை’ பனியும் பனி சூழ்ந்த பகுதியும் என்ற ஆய்வுக் கட்டுரையை நான் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டுக்காக எழுதினேன். சங்க இலக்கியத்தில் வரும் ஐந்து நிலத்திணைகளுடன் ஆறாம் நிலத்திணையாக சான்றோர் இதை ஏற்றுக் கொண்டார்கள்.

குளிர்காலம்போய் வெயில் வந்தவுடனே ஒரு சந்தோஷம். எனக்குள்ளே இரண்டு மடங்கு உஷார். அவனை நினைக்கும் போதெல்லாம் அவனைக் காணவேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் மனதிற்குள் நெருக்கு நெருக்கு என்றிருக்கும். இருட்டுறதுக்கு முன்னர் போனால்தான் முழுமையான ஒரு சந்திப்பை உருவாக்க முடியும். அவனை ஒருதரமேனும் ஏற இறங்க ஆசைதீர பார்க்க முடியும். அவனை நினைக்க உற்சாகமாக இருந்தது. தினமும் மாலையில் காலாற நடந்து செல்லும் அதேபாதையில் தடம் பதிக்கின்றேன். என்னைத் தினமும் சந்திக்கும் அந்த உயிர் கோடையின் ஆரம்பத்தில் மீண்டும் உயிர் பெற்றிருந்தது. என் வாழ்வில் எத்தனை உறவுகள் வந்தன . இவன் மட்டும் எப்படி என் உறவோடு கலந்தான்? எனக்கும் இவனுக்குமுள்ள உறவுதானென்ன? எந்த உறவில் இவன் உறவைச்சேர்ப்பது? தொப்புள்கொடி உறவிலா? இரத்த உறவிலா? அம்மா வழிச் சொந்தத்திலா? இல்லை அப்பாவழி பந்தத்திலா? 'யார்இவன்? இத்தனை சொந்தங்களையும் மீறிய அர்த்தமுள்ள, ஆதரவான, ஆச்சரியமான, உணர்வுபூர்வமான சொந்தமானவன்.
என்னுடைய முதலாவது மின்னஞ்சல் கணக்கை ஆரம்பித்த நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அப்போது, எனக்கு ஐந்து வயது, கூகிளுக்கு ஏழு வயது, என்னுடைய மூத்த அக்கா பல்கலைக்கழகத்துக்காக வீட்டைவிட்டு வெளியேறத் தயாராகிக் கொண்டிருந்தா. அதற்கு முதல் வருடம்தான் இந்தப் புதிய மின்னஞ்சல் சேவையை கூகிள் அறிமுகப்படுத்தியிருந்தது. எனக்குப் பிடித்த அக்காவுடன் நான் தொடர்பில் இருப்பதற்கு மின்னஞ்சலொன்றை உருவாக்குவது நல்லதென நாங்கள் நினைத்தோம். இது, என்னுடைய நண்பர்களில் பலர் அவர்களுடைய சொந்த மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்குவதற்குப் பல வருடங்களுக்கு முன்னையதானது, இணைய உலகுக்கான என்னுடைய நுழைவு 2005ஆம் ஆண்டு இலையுதிர்காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது.

நல்லன நடக்க வேண்டும்
அந்த புடாபெஸ்ட் ஹொட்டேல் அறையில் நடு நிசியில் படுக்கையிலிருந்து எழுந்தபோது பசியில் வயிறு குடைந்தது. அவசரமாக எழுந்து குளித்துவிட்டு நாங்கள் வெளியே வந்தபோது மூடிய உணவுக் கடைகள் எங்களை வரவேற்றன. கடந்த ஆறு மாதங்களாக மெல்போனில், இஸ்ரேல் பாலஸ்தீன் போரினால் நான் புறக்கணித்திருந்த மெக்டொனாலாட் மட்டுமே இரவில் எங்களுக்கு அமுதசுரபியாகியது. நடு இரவு கடந்துவிட்டது என்பதை தொலைபேசி காட்டியபோதும் மின்சார வெளிச்சத்தில் அந்த நகர்ப்பகுதி அமோகமாக குளித்ததால் இரவு பகலாகத் தெரிந்தது. எங்கள் மேலோட்டமான பார்வைக்கு ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட் பாதுகாப்பான நகராகவும் தெரிந்தது.
உலகத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழும் மக்கள் அனைவரும் ஏற்றும் அதனைப் பின்பற்றக் கூடிய வகையில் வாழ்வியல் கருத்துக்களைக் கூறும் நூலாகத் திருக்குறளைப் படைத்துள்ளார் வள்ளுவர். 'உலகப் பொதுமறை' எனப் போற்றற்குரிய திருக்குறளில் கூறாத கருத்துக்கள் ஒன்றுமில்லை என்று போற்றத்தகும் சிறப்பால். 'எல்லாப் பொருளும் இதன்பால் உள' என்றனர். இத்தகு சிறப்புகள் பலவும் உடைய திருக்குறளில் “இல்லறம்” என்பது குறித்துக் கூறப்பட்டுள்ள வாழ்வியல் கருத்துக்களைத் தொகுத்துரைப்பது இதன் நோக்கமாகும்.




புதிதாக பிறந்த ஒரு தினம். கிராமத்தின் ஒவ்வொரு மூலையிலும் பரபரப்பு. எல்லோரும் அலைமோதுகின்றனர். அன்றைய வாக்குப்பதிவு நாள் என்பதால் மக்கள் நெரிசலாக வாக்களிக்க வருகிறார்கள். கிராமத்தின் வீதிகளெங்கும் வாக்களிப்பு சின்னங்கள் மட்டுமே கண்களுக்குப்படுகின்றன. காகம், மைனா, புறா.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









