கவிஞர் மு.புஸ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்' கவிதைத்தொகுப்பு பற்றிய 'பதிவுகள்' விவாதமொன்று!

கவிஞர் மு.புஸ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்' கவிதைத்தொகுப்பு பற்றிய வெளியீட்டு நிகழ்வு கனடாவில் நடந்தது. அதனையொட்டிப் 'பதிவுகள்' இதழில் வெளியான மு.புஸ்பராஜனின் எதிர்வினையும், அதற்கான எழுத்தாளர் தேவகாந்தனின் எதிர்வினையும் ஒருங்குறியில் 'பதிவுகளில் அன்று' பகுதியில் ஆவணப்படுத்தும் பொருட்டு மீள் பிரசுரமாகின்றன. - பதிவுகள்.காம் -
பதிவுகள்.காம் ஆகஸ்ட் 2005 இதழ் 68
எழுத்தாளர் மு.புஸ்பராஜனின் எதிர்வினை: இலண்டன்! அவலை நினைத்து.. - மு.புஷ்பராஜன் -
கனடாவில் 05-06-2005ல் ஸ்காபறோ சிவிக் சென்ரரில் (Scarborough Civic Center ) எனது 'மீண்டும் வரும் நாட்கள்' கவிதைத் தொகுதியின் வெளியீட்டு நிகழ்வும் விமர்சன உரைகளும் ரதன் தலைமையில் நடைபெற்றன. அங்கு நான் சமூகமளிக்காத நிலையில் கவிதைத் தொகுப்பின்மீதும் என்மீதும் முன்வைக்கப்படீட விமர்சனங்களுக்கு பதிலாக இதனைப் பயன்படுத்திக் கொள்கிறேன். சம்பிரதாயமான தலைவரின் ஆரம்ப உரை எதுவுமின்றி கூட்டம் ஆரம்பமாகியது. அதிகாரங்களையும் மரபுகளையும் மீறுதல் இலக்கியத்தில் இனைந்த அம்சமாதலால் அதன் வெளிப்பாடாக முதலில் இதனைக் கருதினேன். ஒவ்வொருவர் உரைக்குப் பின்னும் தலைவர் உதிரி உதிரியாகத் தனது கருத்துக்களை முன்வைத்தார். அதில் என்மீது வைக்கப்பட்டவைகள் இவை:
- நான் கனடா வந்தபொழுது ஒரு தடவைகூட தங்களைச் சந்திக்கவில்லை. செல்வத்திடம் கேட்டபொழுது அவர் விடுதலைப் புலி ஆதரவாளர் என்றார். அது இப் புத்தகத்தில் அடிநாதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. -
'அலை' வெளிவந்த காலத்தில் தீண்டாமை பற்றிய போராட்டம் மிகத் தீவிரமடைந்திருந்தது. ஆது பற்றி வந்த கட்டுரைகளைவிட மார்க்சிய எதிர்ப்புக் கட்டுரைகளே அலையில் கூடுதலாகக் காணப்பட்டன. இதில் எனது கவிதை சார்ந்து ஒரே ஒரு கருத்துத்தான். அது நான் புலி ஆதரவாளன் என்பது எனது கவிதையில் அடிநாதமாக ஒலிக்கிறது என்பதே.




நேர்காணல்-வி. ரி. இளங்கோவன்-கோமகன்




கனடா ஸ்காபரோ நகரில், 'மக்கள் எழுத்தாளர்' கே. டானியலின் 'சாநிழல்' குறுநாவல் வெளியீட்டு நிகழ்வு கடந்த சனிக்கிழமை மாலை (30 - 09 - 2023) மிகச் சிறப்பாக நடைபெற்றது. மூத்த தோழர் சூ. மார்க்கு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கே. பி. லிங்கம், செகா சிவா, தர்சன் சிவகுருநாதன் ஆகியோர் டானியல் பணிகள் குறித்தும் சாநிழல் நாவலின் சிறப்புக் குறித்தும் உரையாற்றினர்.
அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பதே கம்பராமாயணப் பாவிகம் என்றாலும், அதையும் கடந்து வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல கருத்துக்களையும் கம்பராமாயணத்தால் அறிந்து கொள்ளமுடிகிறது. கம்பராமாயணம் முழுமையும் பார்க்கும்பொழுது நல்வாழ்க்கை வாழத் தேவையான நற்பண்புகளையும், வாழ்வியல் நெறிகளையும் எடுத்தியம்புகிறது. கம்பர் தம் இராமாயணத்தில் நேரடியாகவோ,, கதை மாந்தர்கள் மூலமாகவோ வாழ்வியல் நெறிகளைக் கூறிச் சென்றுள்ளார். உலகில் இன்பமும், துன்பமும் இயற்கை என்பதைச் சான்றோர்கள் நன்கு அறிவர். கம்பராமாயணத்தில் சில வாழ்வியல் சிந்தனைகள் குறித்து ஆராய்வோம்.
சென்ற சனிக்கிழமை 23-9-2023 அன்று கனடா, ரொறன்ரோவில் உள்ள தொல்காப்பிய மன்றத்தினர் நடத்திய 8வது தொல்காப்பிய ஆண்டுவிழா – 2023 தமிழிசைக் கலாமன்றத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஆடைகளின் ஏற்றுமதி எப்படித் திருப்பூரை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறது என்பதை யதார்த்தமாக பதிவு செய்திருந்தீர்கள். அரசியல், மக்களின் இயல்பு வாழ்க்கை, பொருளாதாரம் வேகமாக வளரும் ஊரில் அந்த ஊரின் கடைநிலை மனிதர்கள் இடம் மாறவேண்டிய கட்டாயம், மாட்டுக்கறிக்கென இருக்கும் கூட்டம் என்று பலவற்றையும் தொட்டிருக்கிறது இந்த நாவல். பள்ளிகளில் சமசீர் கல்விக்கான புத்தகங்கள் இல்லை என்பதுகூட விடப்படவில்லை. எனக்கு எப்படி இத்தனை விஷயங்களை ஒரே புத்தகத்தில் கோர்த்தீர்கள் என்பது அதிசயமாக இருந்தது.
அண்மைகாலத்து இலங்கையில், பல்வேறு சம்பவங்கள், அடுத்தடுத்து இடம் பெற்று, இலங்கை அரசியல் சூழலை அல்லது அச்சூழலை வசப்படுத்த முயலும் சிந்தனைகளை, அடியோடு சிதறடிக்கும் தொடர் கோர்வையாக, அரங்கேறத் தொடங்கியுள்ளன.
திருப்பூர் வாசகர் சிந்தனை பேரவையின் ஏற்பாட்டில் 1/10/23 அன்று மொழிபெயர்ப்பு தினம் திருப்பூரில் கொண்டாடப்பட்டது .அதை ஒட்டி சுப்ரபாதி மணியனின் 'நைரா' நாவல் மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது. மற்றும் தூரிகை சின்னராஜ் அவர்கள் மொழி பெயர்ப்பு நூல்கள் தரும் புதிய வாசல்கள் பற்றி விரிவாக பேசினார்.
ஐம்பது தசாப்தங்களுக்கும் மேல் எழுத்துலகில் தடம்பதித்துள்ள எழுத்தாளர் முருகபூபதியின் முப்பதாவது நூல் "சினிமா: பார்த்ததும் கேட்டதும்". ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ள 128 பக்கங்கள் கொண்டிருக்கும் இந்த நூல், இலங்கை, இந்திய மற்றும் உலக சினிமாக்களை விமர்சிப்பதுடன் மட்டுமல்லாமல், சினிமா உலகில் எம்மை மகிழ்வித்த, மகிழ்வித்துக் கொண்டிருக்கும் கலைஞர்களையும் அவர்களில் சிலருக்கும் தனக்கும் நிகழ்ந்த சந்திப்புகளையும் உரையாடல்களையும் சுவாரசியமாக முருகபூபதி விபரிக்கிறார்.



'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதாகள்' எனும் நூலை முன்வைத்து தான்யா எழுதிய குறிப்பு தொடர்பாக சில முரணனான கருத்துக்களை தெளிவுபடுத்தும் விதமாகவும் தான்யா அவர்கள் சில விடயங்களை தெளிவாக்கிவிட்டு வெகுஜன ஊடகங்களுக்கு எழுதியனுப்பும் ஆக்கங்கள் தொடர்பாக கவனமெடுக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டிக் இக்குறிப்பை வரைகின்றேன். தான்யாவின் முரண்பாடான பிழையான கருத்துக்களில் முதலாவதாக அமைவது 'பெண்' சஞ்சிகை என்பது தனிப்பட்ட ஒரு நபரான சித்ரலேகா மெளனகுருவினது என்பது. அத்தகைய எடுகோளின் அடிப்படையில் தான் சில மேற்கோள் காட்டுதலுக்காக தான் 'பெண்' போன்ற பதங்களை பிரயோகித்து எழுதப்பட்டுள்ளது தான்யாவின் குறிப்பு. இது தவறானது.
பதிவுகள், மார்கழி 2005 இதழ் 72 
விஜியின் மனம் மட்டுமன்றி வீடும் விசாலமானதாகவே இருந்தது. காலையில் சுப்ரபாதம் கேட்டுக்கொண்டு ருசிமிக்க மசாலா தேநீர் பருகுவதும்,பின்னர் விஜி பரிமாறும் விதம்விதமான சாப்பாட்டை வயிறாராச் சாப்பிடுவதும், அதன்பின்னர் ஊர் சுற்றிவிட்டு வெளியில் சாப்பிடுவதுமாகப் பொழுது ரம்மியமாகப் போனது.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









