மாறுகின்ற உலகமும் அமெரிக்காவும்! (5) - ஜோதிகுமார் -

முடிவுரை
உலகம் ஒரு புதிய சகாப்தத்துள் காலடி எடுத்து வைத்துள்ளது. தொழிநுட்பம், மூலதனம், உற்பத்தி, விநியோகம், மூலப் பொருட்களின் இருப்பு - இவற்றில் எதை எடுத்தாலும் - இவை மனித வாழ்வுக்கு அல்லது உலகின் அசைவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படைகளாகின்றன. இற்றை நாள்வரை, இவை தொடர்பாய் ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்கா அல்லது மேற்கு நாடுகளின் செல்வாக்கு இன்றுவரை இவை தொடர்பில் இருந்து வந்தாலும், இன்று இது குறைந்த மட்டத்திலேயே செயல்படுவதாகத் தெரிகின்றது. அதாவது, ஒப்பீட்டளவில் ஆதிக்கம் இங்கே குறைந்துள்ளதாகவே காணக்கிட்டுகின்றது.
சீனத்தின் எழுச்சியும், ரஷ்யாவின் இருப்பும், இந்தியா, பிறேசில், தென்னாபிரிக்கா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகளின் புதிய வடிவம் - உலகின் முகத்தை இன்று மாற்றி இருப்பதாகக் கருதப்படுகின்றது.
F-35 அல்லது F-16 விமானங்கள் இன்று வீழ்ந்து நொறுங்குவது சகஜமாகியது – அவை மத்திய கிழக்கின் ஈரானிய போர்முனையாக இருக்கலாம் அல்லது உக்ரைனிய போர்முனையாக இருக்கலாம் அல்லது இந்தியா-பாக் போர்முனையாகக் கூட இருக்கலாம் - ஒரு காலத்தில், இவ்விமானங்கள், கண்ணுக்குத் தென்படாத தொழிநுட்ப வளர்ச்சியின் சாதனைகள் என போற்றிப் புகழப்பட்டிருந்தன. அதாவது, நேற்றுவரை கண்ணுக்குத் தெரியாதவையாக இருந்த இவ்விமானங்கள் இன்று சுட்டு வீழ்த்தப்படுவது சகஜமாயிற்று.
உக்ரைனின் போர் நிலவரம் அல்லது மத்திய கிழக்கின் ஈரானிய போர் நிலவரம் இன்று உலகத்தைப் புதிய செய்திகளுடன் அணுகுவதாக் காணப்படுகின்றது. எதிர்பாராத திருப்பங்கள், எதிர்பாராத விளைவுகள் அங்கே காணக்கிட்டுகின்றன. இஸ்ரேலிய வீடுகள், இஸரேலின் நகர்களிலேயே வைத்து தாக்கப்படுவதும் அல்லது அவர்களது போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படுவதும் இதுவரையிலும் உலகம் கேள்வியுறாத ஒன்றாக இருந்துள்ளது. ஆனால், இந்நடைமுறை இன்று வித்தியாசப்பட்டுள்ளது. அந்தளவில், சீன -ரஷ்ய --இந்தியத் தொழிநுட்ப ங்கள், விண்வெளி தொடக்கம் நவீன ட்ரோன்கள் வரை வளர்ந்து நீள்வதாய் உள்ளன.




‘காலம் நுஃமான் சிறப்பிதழ்’ வெளியீட்டு நிகழ்வில் (February 23.02.2025: Scarborough Villege Center; Canada) அவ்வை நிகழ்த்திய வெளியீட்டுரையின் காணொளியை அண்மையில் முகநூலில் கண்ணுற்றேன். உணர்வை உந்தச்செய்த உயிர்ப்பான உரை. நுஃமான் , மஹாகவி உறவின் ஆத்மார்த்தம் பற்றி அவ்வை உயிரோட்டமாய் உரையாடியிருந்தார். தந்தை மஹாகவி, மாமா நுஃமான் ஆகிய ஆளுமைகளது ஆப்த நேசம் பற்றிய அவ்வையின் உரையாடல் விரிபடுத்தப்பட்டு எழுதப்படுதல் நல்லது. அவ்வை அப்படி எழுதினால் அது ஒரு முக்கிய ஈழத்து இலக்கிய ஆவணமாக அமையலாம் என்ற உணர்வை அப்பேச்சு எனக்குள் உருவாக்கிற்று. அவ்வையின் வெளியீட்டுரை குறிப்பிட்டது போல, ‘எப்போதுமே சிறந்த படைப்புகளை தாங்கி வரும் காலம் இம்முறை நுஃமான் சிறப்பிதழாக வந்துள்ளது. இவ்விதழை முதலில் இருந்து கடைசிவரை ஒரே மூச்சாக வாசித்து முடித்தபோது அப்படியொரு பரவசமான நிலை’. இவ்விதழின் (ஜனவரி 2025) உயிர்ப்பான உள்ளடக்கம் எனக்குள்ளும் அப்படியொரு பரவசத்தை உருவாக்கிற்று. புன்முறுவல் பூத்த நுஃமான் அவர்களின் ‘அமுத’ புகைப்படம் அட்டையில் ‘நுண்மாண் நுழைபுல நுஃமானாக மினுக்கமுறுகிறது.
வாழ்க்கை ஓடிய ஓட்டத்தில் வெகு தூரம் போய்விட்டேன். ஏதோ தொலைத்தது போன்ற உணர்வு. திரும்பிப் பார்த்தேன் தொலைத்தது வேறு எதுவும் இல்லை. என்னைத்தான். அப்போதுதான் புரிந்தது எனக்;காக வாழ்க்கையை நான் வாழவே இல்லை என்று. அத்தகைய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து சிறுகதை, நாவல், கட்டுரை, பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம், புனைவு சாராத பத்தி எழுத்துக்கள், திறனாய்வு போன்ற துறைகளில் தன் ஆளுமைகளைச் செலுத்தி வருபவர்தான் முருகபூபதி அவர்கள்;. ஒவ்வொரு கலைஞர்கள். எழுத்தாளர்களின் பிரிவின்போதும் அதனைப் பதிவாக்குவதிலும் அவர் காட்டும் அக்கறை அவரது பரிவுணர்வை வெளிப்படுத்தும் ஒரு செயலாகும். இலக்கியம் முதன்மையாகக் கற்றுத் தரும் பாடம் என்னவென்றால்; பரிவு காட்டுவதுதான். அதனை இவரின் செயலிலும், எழுத்துக்கள் மூலம் புரிந்து கொண்டேன். 
(அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளன் எனும் அடையாளத்தின் முகவரியாளராக மிளிர்பவர் லெ.முருகபூபதி அவர்கள். அவரின் அகவை நாள் ஜூலை 13ம் நாளில், இச் சிறப்புக் கட்டுரை பிரசுரமாகிறது. எழுத்தாளர் முருகபூபதி அவர்களுக்குப் பதிவுகளும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.)


ஜப்பானில் இறங்கிய ஆரம்ப நாட்களில் பார்த்தபோது புரிந்து கொள்ளாது சந்தேகத்துடன் , எனக்குள் அடிக்கடி கேள்வி எழுப்பியபடி இருந்த ஒரு விடயம் பல யப்பானிய உணவுகளிலிருந்த பச்சை நிறம் : பச்சை கேக் உணவுக் கடைகளில் கண்ணாடிகள் ஊடாக பார்க்க முடிந்தது , பச்சை ஐஸ்கிரீமை தெருவில் மாணவர்கள் உண்டார்கள்,பச்சை சொக்கிலேட் வித்தியாசமாகக் கண்ணாடிப் பெட்டியிலிருந்து என்னைப் பார்த்துச் சிரித்தது, பலர் குடிக்கும் சோடாவும் பச்சை வர்ணமாக இருந்தது. யப்பானில் நான் கோக்கோ கோலாவைக் காண முடியவில்லை. யப்பானியர்கள் பச்சைத் தேயிலை குடிப்பது எனக்கு ஏற்கனவே தெரிந்தாலும், அவர்கள் உணவுப் பொருட்களில் பச்சைத் தேயிலை எனும் மச்சா தேயிலை சேர்த்துக் கொள்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ள சில நாட்கள் எடுத்தது.

ஒரு மனிதரைப்பற்றி நினைப்பது சுகமானது. ஆனால் அந்த மனிதரைப்பற்றி எழுதுவது சுகமானதல்ல. சுலபமானதும் அல்ல. என்று பல வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸிலிருந்து வெளியான பாரிஸ் ஈழநாடு இதழில் நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடரில் சோவியத் தமிழ் அறிஞர் கலாநிதி வித்தாலி ஃபுர்ணிக்கா பற்றிய பதிவின் தொடக்கத்தில் எழுதியிருந்தேன்.


இலங்கையில் நடைபெறும் தமிழ் பண்பாட்டு – – அனைத்துலக மாநாட்டின் இரண்டாவது அமர்வு நுவரெலியாவில் வெகுவிமர்கையாக நடந்தேறியது. 



எல்லோரையும் ஆகர்ஷிக்கக்கூடிய இலக்கிய வடிவம் கவிதை, தமிழில் அதற்கு நீண்ட வரலாறு உண்டு. கவிதையாகவன்றி அர்த்த புஷ்டியுள்ள சமூக, தனிமனித பிரக்ஞையுள்ள ஒன்றாகவே கவிதை ஆரம்பத்தில் இருந்து வந்தாலும் காலதேச வர்த்த மானத்திற்கேற்ப அது தன்னைப் படிமலர்ச்சி செய்து கொள்கிறது. அறமாய், தத்துவமாய், பிரசார மொழியாய் கற்பனை யதீதமாய், உணர்வுகளின் குழம்பாய், வித்துவச் செருக்காய் எனப் பல்ரூப சுந்தரமாய் காட்சியளிக்கின்றது.




தமிழில் முத்திரை பதித்த மூத்த தமிழறிஞர். பள்ளி சென்று கல்வி கற்காமலே கற்றவரை வியப்பிலாழ்த்தியவர். முந்தைய தலைமுறையினருக்கு செந்தமிழ்ப் பற்றினை ஊட்டியவர். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்கள் திருச்சியைச் சார்ந்தவர். இவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்ப் போராளி ஆவார். தமிழுக்கு இவர்ஆற்றிய பணிகள் அளப்பரியன. 23 தமிழ் நூல்களை தமிழிலக்கிய உலகுக்கு வழங்கியுள்ளார்.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பர். எல்லா ஊர்களிலும் கோயில்கள் அமைந்திருக்கும். ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு பெற்றிருப்பதை நாம் கண்டிருக்கின்றோம். அந்த வகையில் குன்றெல்லாம் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானின் அருள்வழங்கும் திருத்தலங்களுள் ஒன்று செங்கம் அடுத்த வில்வராணி எனும் கிராமத்தில் அமைந்துள்ள லிங்க சொருப சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இத்திருக்கோயிலுக்கு வருபவர்களின் 27 நட்சத்திரக்காரர்களின் அனைத்து தோஷங்களையும் விலக்கி எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்ந்திட சுப்பிமணியர் அருளாசி வழங்குகின்றார். இத்தலத்தை நட்சத்திரதலம் என்றும் நட்சத்திரக்குன்று என்றும் அழைக்கின்றனர்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









