சமீபத்தில் நடேசன் அவர்களின் அந்தரங்கம் சிறுகதை தொகுப்பு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடேசன் அவர்களை எனக்கு எப்படி தெரியும் என்று எண்ணி பார்க்கிறேன். படித்ததில் பிடித்தது என்ற ஓர் நிகழ்ச்சி, அதில் கவிஞர் சல்மா அவர்கள் வாழும் சுவடுகள் என்ற புத்தகத்தை அறிமுகம் செய்து அதை எழுதியவர் Melbourne இல் வசிப்பதாக சொன்னார். பிறகு முருகபூபதி அய்யா மூலமாக அறிமுகம் கிடைத்து நடேசன் அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஓரிரு முறை பேசியுள்ளேன். ‘நைல் நதிக்கரையோரம்’ என்ற அவரது புத்தகத்தை வாசித்துள்ளேன். அந்தரங்கம் வாசித்த பிறகு அவருடைய அனைத்து எழுத்துகளையும் வாசிக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன். இந்த புத்தகத்தை பற்றிய என் வாசிப்பனுபவம் அனைத்தும் முழுக்க அவரின் படைப்பின் மூலமாக நான் அடைந்ததே தவிர அவரை தெரியும் என்பதால் எழுதும் புகழுரை அல்ல.
அசாதாரணங்களின் கதை என்று கருணாகரன் அவர்கள் முன்னுரை வழங்கி உள்ளார். அதை வாசித்து உள் செல்வது நன்று. இலங்கை எழுத்தாளர்கள் தமிழகத்தில் அதிகம் பாவிக்க படாத சொற்களுக்கு அடி குறிப்பிடலாம் என்ற கருத்துக்கு, இலங்கை எழுத்தாளர்களை தொடர்ந்து வாசிப்பதனால் எனக்கு அடி குறிப்பு தேவைபடவில்லை. வாசகனாக சிறு உழைப்பும் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்த புத்தகத்தில் என்னை பாதித்த ஒரு எழுத்தாளர் touch என உணர்ந்த ஆறு இடங்களை பகிர்கிறேன்.
தீர்ப்பெழுதும் ஊர்: ‘ஒரு தாய் உறங்குகிறாள்’ என்ற கதை. திருமணமாகியும் தனியாக வாழும் ஒரு பெண். அவளை அந்த ஊர் பல விதங்களில் பேசுகிறது. அவளை ‘பொதுக்கிணறு’ என்று கூறுகிறது. அவள் இறந்த பின்பு தேவாலயத்தில் அவள் உடல் கிடத்தி வைத்திருக்கும் பொழுதில், இந்த கதை சொல்லியான ஆணுக்கு, 'இவள் இந்த ஊரிலேயே உருண்டு திரண்ட கால்களும், நடந்தால் பாதத்தின் சிறுவிரல் தரையில் படாது’ என்ற நினைவு எழுகிறது. இதில் என்ன எழுத்தாளரின் நுட்பம் என கேள்வி எழலாம். ஆனால் என் பார்வையில் ஊரே தவறாக பேசும் ஒரு பெண்ணை அவள் வாழ்த்த காலத்தில் ஒரு ஆண் எப்படி எல்லாம் கண்டிருக்கிறான், அவள் இறந்த பின்னும் அவனுக்கு அவள் பற்றிய எது முதல் நினைவாக எஞ்சுகிறது என்பதை தொட்ட நுட்பமான இடமாக காண்கிறேன்.
சொகுசுக்காரில் வந்திறங்கியவள் நக்கலாய்ப் பார்த்தாள்.
வித்தியா புன்னகைத்தபடி வரவேற்றாள்.
'எவ்வளவு?' ஆங்கிலத்திலேயே கேட்டாள்.
வித்தியாவும் சொன்னாள்.'120 பவுண்ட்'
விலை அதிகம் என்றாள்.
'இல்லை..நீங்கள் 200க்குள்ள வேணும் எண்டனீங்கள். அதுதான்...'
வித்தியாவை மேலும் கீழும் பார்த்துவிட்டு சொன்னாள்.
'இது 10 ரூபாயும் பெறாது'
வித்தியாவிற்கு கொஞ்சமாக ஏறியது.காட்டிக்கொள்ளாமல்' செய் கூலி இல்லாமல், பொருளுக்கு மட்டுமே சொன்னனான்'.
'பகிடி விடாதையும்...யாவாரிகள் உப்பிடித்தான் கதைப்பினம்..கொள்ளை லாபம் வைக்காமல் இருக்கமாட்டினம்'
கோபத்தை அடக்கிக்கொண்டு' என்ன சொல்ல வாறியள்?' கேட்டாள் வித்தியா.
'எப்படியோ வாங்கின சாமான்கள் முழுக்க பாவிச்சிருக்கமாட்டியள். மிச்சத்தை இன்னொன்று செய்தும் வித்துப்போடுவியள்.. பிறகேன் அறா விலை சொல்லுறியள்'. வந்தவள்தான் கேட்டாள்.
எனக்கு நீ எழுதிக்கொடுத்த
நம்மைப் பற்றிய நாட்குறிப்பை
நேற்றுதான் எடுத்து வாசித்தேன்.
உனது எழுத்துகள் அழகாக இருந்தன.
உனது எண்ணங்கள் மிக அழகாக இருந்தன.
என்னைப்பற்றிய உனதுக்கவிதை
எனதான கர்வத்தினை விசாரிக்கும்படியும் இருந்தது.
எப்போதும் அதைப் படித்துப் படித்து
பூரித்துப்போக நான் உற்சாகம் கொள்வேன்
ஒவ்வொருமுறையும்.
அரசமரத்தின் காற்றுத் தாக்கிய இலையாக
மனம் ஓய்வில்லாமல் ஏங்கிக் கொண்டிருக்கிறது
ஒரு பறவையின் வருகைக்காக!
வந்து பழகிய உனது குரலும்
வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனமும்
ஏமாற்றத்தின் உச்சம் இன்று
வாழை மரத்தின் இலைகளைத் துழாவி
தூரத்து மின் கம்பிகள் பழக்கப்பட்டு விட்டன கண்களுக்கு
உன்னைத் தேடி!
முல்லைத்திணையைப் பாடுவதிலும் புனைவதிலும் வல்லமை பெற்றவர் பேயனார். முல்லை நிலம் காடும் காடுசார்ந்த பகுதிகளையுமுடையது. காடு சார்ந்தது முல்லை நிலமாதலால், இங்குப் பல்வகை மரம், செடி, கொடி ஆகிய தாவரங்கள் பசுமையோடும், செழிப்போடும் காணப்படும். இம்முல்லை நிலத்தின் வருணனைகளைப் படிக்கும்பொழுது, நிலத்தின் செழுமையும், வளமிக்க மலர்கள் மலர்ந்திருத்தலும் காட்சியளிக்கும். ஐங்குறுநூற்றில் இடம்பெற்றுள்ள இம்முல்லை நிலமானது மலர்களால் சூழப்பட்ட புறவாகக் காட்சிப்புனைவுகளுடன் அமைந்துள்ளது. பல்வேறு சொல்லாட்சிகளில் முல்லை நிலம் சார்ந்த வருணனைக்காட்சிகள் குறைந்த அளவே காணப்படுகின்றன. குறைவான அளவில் முல்லைபற்றிய காட்சிகள் இடம்பெற்றாலும், வருணனைகள் உரிப்பொருள் விளக்கத்திற்கு துணைநிற்கின்றன. எனவே, ஐங்குறுநூற்றில் இடம்பெற்றுள்ள முல்லை நிலம் பற்றிய வருணனைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
முல்லை நிலம்
முல்லை நிலமானது, 1.புறவு, 2.கானம், 3.கான், 4.மென்புலம், 5.முறம்புகண், 6.வறந்த ஞாலம், 7.செந்நிலம், 8.வன்புலம், 9.புன்புலம், 10.இருநிலம் என்னும் பத்துச் சொல்லாட்சிகளில் பொருட்கூறுகளோடு பேயனரால் வருணிக்கப்பெற்றுள்ளன என்பதை ஆய்விற்குச் சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து அறியமுடிகின்றது.
முல்லை நிலமாகிய ‘புறவு’ என்பது ‘புறவு’ என்னும் பெயரில் ஐங்.முல்.404:3-4; 405:2-4; 406:3-4; 411:1-2; 412:1-3; 413:1-4; 414:1-4; 415:1-4; 416:1-5; 417:1-3; 418:1-2; 419:1-4; 420:1-3; 421:1-2; 424:1; 462:5; 485:4; 494:1-2; 495:1-2 ஆகிய பத்தொன்பது (19) பாடல்களில் ‘நறும்பூந்தண்’புறவு, ‘பூஅணி கொண்டன்றால்’ புறவு, ‘நறுந்தண்’புறவு, ‘மணம்கமழ்’புறவு, ‘கவினிப்’புறவு, ‘கார்கலந்தன்றால்’புறவு, ‘அழிதுளி தலைஇய’ புறவு, ‘நன்னலம் எய்தினை’ புறவு, ‘நறும்பூம்’ புறவு, ‘முகைஅவிழ்’புறவு, ‘மலர்அணிப்’புறவு, ‘தண்கமழ்’புறவு என்னும் அடைகளுடன் வருணனைக்காட்சியாக இடம்பெற்றுள்ளது.
இயங்குதலே உயிரிகளின் அடிப்படை. மானுடசமூகத்தின் தொடர் இயக்கமே இன்று அதை பண்பட்ட சமூகமாக வளர்த்தெடுத்துள்ளது எனலாம். ஒரு சமூகத்தின் இயங்குநிலை பல்வேறு மரபுகளையும், பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகளையும் உட்செறித்தது. அந்த இயங்குநிலைக்குத் தக்கச் சான்றாக சடங்குகள் விளங்கி வருகின்றன. ஒரு சமூகத்தின் மரபார்ந்த சடங்கின்வழி அதன் நெடிய இயக்கத்தினை அறிந்துக் கொள்ளவியலும். மேலும், சமூக இயக்கத்தின் நிலைச்சான்றாகவும் சடங்குகளைக் கொள்ளலாம். அவ்வகையில் நீலகிரியில் வாழும் பூர்வகுடி மக்களான படகர்களின் மரபார்ந்த சடங்குகளுள் ஒன்றான “உப்பு ஹட்டோது” (ஹட்டோது – ஊற்றுதல்) எனும் உப்புச் சடங்கினை இயக்கவியல் நோக்கில் ஆராய்வதை மையநோக்கமாகக் கொண்டு இவ் ஆய்வுக்கட்டுரை அமைகின்றது.
இயக்கவியலைப் புரிந்துக்கொள்ள முனையும்போது, “இயக்கவியல் என்பது விசியங்களை ஆராய்ந்து அறியாமலேயே விளக்குவதும், புரிந்துக்கொள்வதுமாக ஏற்பட்ட சாதனமல்ல. ஒரு விசயத்தின் ஒரு பொருளின் ஆதியென்ன?, அந்தமென்ன. அது எங்கிருந்து வந்தது, எங்கே போய்க் கொண்டிருப்பது என்று பரிசோதிப்பதற்கு வாய்த்திருக்கும் சாதனம். சிறந்த ஆராச்சிக்கு வாய்த்திருக்கும் சாதனம்” எனும் ஜார்ஜ் பொலிட்சரின் கூற்றை ஆழ்வதும், அணுகுவதும் அடிப்படையானதாகும்.
பொலிட்சரின் கூற்றினையொட்டி படகர்களின் மரபார்ந்த உப்புச்சடங்கினை அதன் ஆதி, அந்தம் அதாவது சடங்கியல் மற்றும் நோக்கநிலையின் ஆதி அந்தங்கள், அது எங்கிருந்து வந்தது?, அதாவது அதன் தோற்றநிலையின் காரண காரியம், அது எங்கே போய்க்கொண்டிருக்கின்றது? அதாவது அதன் பயன் ஆகிய கூறுகளின் அடிப்படையில் நோக்கும்போது அவ்வினத்தின் தொன்மையினையும், நீலகிரியில் அவர்களின் நெடுங்காலத்தைய இயக்கத்தையும் அறிந்துக் கொள்ளவியலும்.
மகாகவிஞர் அவர் என்று கூறுவர்.
சொற்களைத் தேர்ந்துடுத்து
சோகங்களை வடித்தெடுப்பதில்
அவர் வல்லவர்.
அவரது கவிதை வரிகளில்
அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள்
அவரது ஆழ்மனத்து உணர்வுகள்
அல்ல.
அவரது ஆழ்மனத்தை மூடிநிற்கும்
அவரது வெளிமனத்தின் செருக்குகள் அவை.
சிந்தித்துப் பொருத்தமான சொற்களை
அவர் தேர்ந்தெடுப்பது
அவற்றின் வாசகரைக் கவர மட்டுமே.
ஈழத்தில் மருத்துவத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் கலை இலக்கியத்துறைகளில் ஈடுபடுவது குறைவு. தமிழ் இலக்கியத்துறையில் அவ்வாறு ஈடுபட்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தவகையில் ஒருவர் மிகச் சிறப்பானவராக விளங்கினார். பாராட்டுகள் பெற்றார். புகழ்பெற்ற மருத்துவப் பேராசிரியராக விளங்கியதோடு, புகழ்பெற்ற, சிறந்த இலக்கியவாதியாக, நாடக, சினிமா நடிகராகத் திகழ்ந்தவர் டாக்டர் நந்தி என எல்லோராலும் அறியப்பட்ட செ. சிவஞானசுந்தரம் அவர்களாவார்.
யாழ்ப்பாணம் - இணுவிலில் 1928 -ம் ஆண்டு பிறந்த நந்தி யாழ்ப்பாணத்தில் ஆரம்பக்கல்வியைக் கற்றபின் கொழும்பு சென்ற் யோசப் கல்லூரி, றோயல் கல்லூரி ஆகியவற்றில் உயர்கல்வியைக் கற்றார். பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுபெற்றுக் கொழும்பு மருத்துவக் கல்லூரியில் கற்று 'எம். பி. பி. எஸ்.' பட்டம் (1955) பெற்றார். சிறிய தந்தையார் பேராசிரியர் வி. செல்வநாயகம், இலட்சுமண ஐயர் உட்பட சிலரிடம் முறைப்படி தமிழ் அறிவையும் வளர்த்துக்கொண்டார். குருநாகல், ஹிரிப்பிட்டியா, கொழும்பு, நாவலப்பிட்டி, யாழ்ப்பாணம் ஆதியாம் இடங்களில் வைத்திய அதிகாரியாகப் பணியாற்றினார். 1965 ஆண்டு முதல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூக வைத்தியத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1968 - 1971 காலத்தில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் 'டி. பி. எச்.' பட்டமும் 'பி. எச். டி.' பட்டமும் பெற்றுக்கொண்டார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து விரிவுரையாளராக, இணைப்பேராசிரியராக, பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1979 -ல் இணைந்து சமூக வைத்தியப் பிரிவுப் பேராசிரியராகத், துறைத் தலைவராக, மருத்துவத்துறைப் பீடாதிபதியாக 1993 -ம் ஆண்டுவரை பணியாற்றினார். இந்தோனேசியா, தாய்லாந்து, பங்களாதேசம், சிங்கப்பூர், இந்தியா, யோர்தான், பிரித்தானியா ஆதியாம் நாடுகளில் மருத்துவக் கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார். இலங்கையிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிச் சமர்ப்பித்துள்ளார். மருத்துவக் கல்லூரியில் கற்கும் காலத்தில் இலங்கை வானொலி நாடகங்களில் விருப்பத்துடன் நடித்துள்ளார். 'குரங்குகள்' என்ற நாடகத்தை எழுதி (1975)வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் காவலூர் இராசதுரை கதை வசனத்தில், பிரபல இயக்குனர் தர்மசேன பத்திராஜ◌ா இயக்கத்தில் உருவான 'பொன்மணி' திரைப்படத்தில் டாக்டர் நந்தி, தந்தை வேடமேற்று நடித்ததை அருகிருந்து யான் பார்த்திருக்கிறேன்.
நான் கல்வி கற்றது இளவாலைக் கொன்வன்ற். ஆசிரியராகப் பணியாற்றியது தலவாக்கெல்ல சென்ற் பற்றிக்ஸ் கல்லூரி. பண்டாரவளை பிந்துனுவௌ ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் எனது ஒரு வருட பயிற்சியை முடித்த பின்னர் மிகுதிக் காலப் பயிற்சியை நான் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் மேற்கொண்டிருந்தேன். நாட்டு நிலை கொந்தளிப்பான நிலை. 1980களின் முற்பட்ட காலப்பகுதி அது. அவ்வேளை திரு.முல்லைமணி அவர்கள் எனது விரிவுரையாளராக இருந்தார்; என்பது பெருமை தருகின்ற விடயம். அவ்வேளையில் கவிஞர் இ.முருகையன், வேல் ஆனந்தன், வீரமணி ஐயர். புவனேஸ்வரி ராமகிருஷ்ணா, துரைராஜா, அடைக்கலமுத்து, சுவர்ணா நவரட்னம் போன்ற பலர் விரிவுரையாளர்களாகக் கடமையாற்றியவர்கள். அவர்களின் மாணவியாக இருந்தேன் என்பதும் பசுமையான நினைவுகளாகி வருகின்றன. அவ்வேளை திருமதி ஆனந்த குமாரசுவாமி அவர்கள்தான் அதிபராக இருந்தார்.
முல்லை மணி சேரிடம் நான் தமிழ் பயிலும் வாய்ப்பு ஏற்பட்டதை பெருமையாகக் கருதுகின்றேன். அவ்வேளை ரசிகமணி கனக செந்திநாதனின் ‘விதியின் கை’ நாவல் மற்றும், இலங்கையர்கோனின் ‘வெள்ளிப்பாதசரம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு இரண்டு நூல்களும் (எமது 'சிலபஸ்') ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டி இருந்தது. நான் எழுதிய ஆய்வுகளைப் பார்த்ததின் பின்னர் கூடுதலாக சம்பாஷனைகளும் ஏற்பட்டன. நான் மேற்கொண்டிருந்த இரு நூல்களின் ஆய்வுகளும் தினகரன் வார இதழ் பத்திகையில் வெளியாகியிருந்தன. அதற்கு ஊக்கமளித்தவர்கள் முல்லை மணி சேர், நிட்சயமாக எனது இனிய தந்தை அகஸ்தியர் என்பதையும் இவ்விடத்தில் நினைவுகொள்ள விரும்புகிறேன்.
வரலாற்றுச்சின்னம்: பாலத்தடி பஸ் தரிப்பு!
யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகர் நோக்கிச் செல்லும் பாதை ஓட்டுமடத்தில் திரும்பி, காக்கைதீவு மீன் சந்தை, கல்லுண்டாய் வைரவர் கோயில், வழுக்கியாற்றுப்பாலம் தாண்டியதும் இரண்டாகப் பிரிகிறது. மேற்காகப்பிரியும் பாதை தெற்கு அராலிக்கூடாகச்சென்று மீண்டும் , வடக்கு அராலிக்கூடாகச் செல்லும் பாதையை வட்டுக்கோட்டைச் சந்தியில் சந்தித்து , கிழக்காகச் செல்லும். வடக்காகக் செல்லும் பாதை காரை நகரை நோக்கிச் செல்லும்.
இது எந்த நாட்டில் நடந்தது என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எங்களுக்குப் புகலிடம் தந்து எங்களை அரவணைத்த கனடா நாட்டில்தான் நடந்திருக்கின்றது. புதைகுழிகள் என்றதும் எங்களுக்கு முதலில் ஞாபகம் வருவது தாயகத்தில் செம்மணிப் புதைகுழிதான். செம்மணியைத் தொடர்ந்து தாயகத்தில் ஏராளமான புதைகுழிகள் வரலாற்றில் பதியப்படாமல் மறைக்கப்பட்டுவிட்டன. யுத்த சூழலில் இன்னும் அனேகமான புதைகுழிகள் அடையாளம் காட்டப்படாமலே இருக்கின்றன. இரண்டு தலைமுறை போனால் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்ற நினைப்பில் எல்லாமே மூடிமறைக்கப் பட்டிருக்கின்றன. காலம்கடந்தாலும், மறைக்கப்பட்ட யுத்தகாலப் புதைகுழிகள் ஒருநாள் தோண்டப்படும் போது பல உண்மைகள் தெரிய வரலாம். ஆனால் இதற்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதற்குக் குற்றம் புரிந்தவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தினம் தினம் எதிர்கொள்ளும் வலியும், வேதனையும் யாருக்கும் சொல்லிப் புரியப்போவதில்லை. சொந்த மண்ணைப் பறிகொடுத்த, எங்களுக்கு ஏற்பட்ட அதே வலியைத்தான் இங்கே உள்ள முதற்குடி மக்களும் எதிர் கொள்கிறார்கள். ஆனால் இங்கு ஜனநாயக கோட்பாடுகள் பின்பற்றப்படுவதால், உண்மையை ஓரளவாவது கண்டறிய முடிகின்றது. 2008 ஆம் ஆண்டு கனடா பிரதமர் இப்படி நடந்தற்காக முதற்குடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டார். தற்போதய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கத்தோலிக்க திருச்சபை இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கனடிய மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் இழப்பு இழப்புத்தானே!
இந்தியத்திரையுலகின் உச்ச நட்சத்திரங்களிலொருவர் நடிகர் திலிப்குமார். இவரது இயற்பெயர் முகமத் யூசுப் கான். 1922இல் இந்தியாவின் ஒருபகுதியாக விளங்கிய பாகிஸ்தானின் பெசாவரில் பிறந்தவர். தனது தொண்ணூற்றியெட்டாவது வயதில் அவர் இன்று காலமானதை இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவரது திரையுலகப் பங்களிப்புக்காக தாதாசாகேப் பால்கே விருது, இந்திய மத்திய அரசின் பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளைப் பெற்ற இவர் அதிக தடவைகள் பிலிம் ஃபெயர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் நிருவாக இயக்குநர் சொக்கநாதன் யோகநாதன் இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் கொவிட் தொற்றினால் மறைந்தார் என்ற செய்தி எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
நீண்டகாலமாக சமூகப்பணியாற்றி வந்திருக்கும் திரு. யோகநாதன் ( வயது 73 ) அவர்களின் திடீர் மறைவினால் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் பணியாளர்களுக்கும் மற்றும் யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு மாவட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் யோகநாதன் அவர்கள் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கிளிநொச்சி, வவுனியா முதலான மாவட்டங்களில் வதியும் போரினால் பாதிப்புற்ற ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவும் வெளிநாடுகளிலிருந்து இயங்கும் தன்னார்வத் தொண்டர் அமைப்புகளின் தொடர்பாளராகவும் அர்ப்பணிப்புடன் இயங்கியவர்.
அன்னாரின் திடீர் மறைவு ஈடுசெய்யமுடியாத இழப்பு என்று அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் தனது அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளது.
இயக்குநர் சத்யஜித் ரே நூறாண்டு நினைவுக் கட்டுரை!
"ஆக்ஷன்"
இந்த கம்பீரக் குரலுடன் 1951ல் ஆரம்பமானது 'இந்திய திரையுலக மேதை' என அழைக்கப்படும் சத்யஜித் ரேயின் திரையுலக பயணம். அவரது கன்னிப் படைப்பு பூபதி பூஷன் பாந்தோ பாத்யாவின் வங்க குழந்தை இலக்கிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட "பதேர் பாஞ்சாலி " திரைப்படம். கிராமத்தில் பிறந்து வளர்ந்து முதிரும் அப்பு என்ற சிறுவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் உள்ள உறவை சித்தரிக்கும் கதையின் முதல் பாகம் இது. ஐயாயிரம் அடியுடன் படம் நிதி தட்டுப்பாட்டால் பாம்பாய் பெட்டிக்குள் படுத்துக் கொண்டது. அதை எழுப்புமுன் ரேயின் பூர்வீகத்தை சிறிது பார்ப்போமா?
ரேயின் தந்தை வழி தாத்தா ஒரு எழுத்தாளர், இசையமைப்பாளர் மற்றும் அச்சக உரிமையாளரும் கூட. 'சந்தோஷ்' எனும் சிறுவர் இலக்கிய இதழ் வேறு நடத்தி வந்தார். அவர் மகன் சுகுமார் ராய் அனேக சிறுவர் இலக்கியங்கள் படைத்த எழுத்தாளர், விரிவுரையாளர். இந்த கனவுத் தொழில் சாலையில் மே 02, 1921 பிறந்த ரே பல்கலைகளையும் இயற்கையாகவே தன்னகத்தே கொண்டிருந்தார். பல்கலை என்று சொன்னேனா? எண்ணிக் கொள்ளுங்கள்..... எழுத்து, இசை ஈர்ப்பு, ஓவியம், வரைபட வடிவமைப்பு, பதிப்பகத்துறை, விமர்சனம்.....போதுமா? இந்த துறைகளில் அவருக்கிருந்த நாட்டமும் திறமையும் அவரை திரைப்படத்துறைக்கு இயல்பாகவே இழுத்து வந்ததில் ஆச்சரியமில்லை!
காலைச் சூரியன் பொட்டெனச்சுடுகிற இலையிடுக்கில் மாமரத்து நிழலில் பெண்கள் பண்பாயோடு குந்திவிட்டனர். மௌலானாவின் மன்சிலுக்கு வருகிற பெண்களுக்கு தாயத்தும் ஓதிய தண்ணீர் பிடிக்க கலனும் விற்கவென மன்சிலை ஒட்டிய செய்யதுவின் கடைச் சாம்புராணி, மன்சிலின் பெரிய கிணற்றடிக்கு பின்னால் செத்துக்கிடந்த பூனை நெடியிடம் தோற்றுப் போயிருந்தது. லெவ்வை கிணற்றுக்கு கிழக்கால் பாத்தி பிடித்து மரவள்ளிக்கிழங்கை செவ்வென நட்டியிருந்த வரிசை இடையில் பூனையை புதைக்க குழி வெட்டிக்கொண்டிருந்தார். லெவ்வை தான் மன்சிலின் பேஷ் இமாம். தொழுவிப்பது, ஓதுவிப்பது, மையத்து வீடு, கத்தம்பாத்திஹா கோழி அறுக்க தக்பீர் சொல்லுவதென மாதம் ஐயாயிரம் தேத்திக் கொண்டிருந்தார். மௌலானா வரும் மாதங்களில் சதகா மட்டும் பத்து பதினையாயிரம் தேறும். பார்க்க தடித்த தேகம். பெனியன் இறக்கிய பச்சைவாரில் மண்ணடி நண்டு மார்க் சாரன் பிடிபட்டிருக்கும். தங்க முலாம் கைக்கடிகாரமும் அதை மூடும் கைரோமங்களுமென திடும் என்று இருப்பார். நெற்றியில் தொழுகை வடுவும் முகத்தில் தோய்ந்த கறார் பாவமுமாக மஜ்லிஸை துவக்கினாலே எல்லோரும் கமுக்கமாக பாத்திஹா ஓதத் தொடங்கிவிடுவர்.
காலையில் எட்டு மணிக்கெல்லாம் மௌலானா மருந்து கொடுக்க வருவார். பாய் விரித்த மன்சிலின் வெளிப்பள்ளியில் வெள்ளை விரித்த தலையணைப் பஞ்சில் முஸல்லாவைக் கிடத்தி பானா வடிவில் விரிப்பு போடப்பட்டிருக்கும். ஒரே மாதிரியான பச்சை முசல்லாவுக்கு நடுவில் கொஞ்சம் உயரமான தலையணைக்கு மேல் சிவப்பு காஷ்மீர் முசல்லாவிலேதான் மௌலானா உட்காருவார். தீர்க்க முடியாத நோய்களை, மனநிலை பிறழ்ந்த பெண்களை, விசம் கொட்டுண்டு வீங்கிய பிள்ளைகளை, சைத்தான் பிடித்த குமருகளை தவிர அவசரத்திற்கு வேறு யாரும் மௌலானா வை தரிசிக்க முடியாது. வரிசையில் நான்கு நான்காக பெண்களும் இரண்டு இரண்டாக ஆண்களும் இருக்கவேண்டும். ஊரின் பெரிய பள்ளிகளின் மரைக்காயர்களோ பட்டினசபை மெம்பர்களோ யாராகினும் வரிசையிலே நிற்கவேண்டும்.
பொறையாரில் பிறந்து
வறுமையில் நெடிந்து
வலிகளைச் சுமந்து
உழைப்பை நம்பி உறுதியுடன்
பொதுகை (புதுவை) வந்தார்…
பல போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்க்கை
உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை.
அடைக்கலம் தந்தார் மாமனிதர்
அன்போடு அடிமையாய் உழைத்தார்
அவர் நலன் கருதி.
இலங்கைப் போர்ச்சூழலில் தமிழர் பகுதியிலிருந்த அறிவுச் செல்வங்கள் அழிந்ததை அறிந்திருக்கின்றோம். யாழ் பொது நூலகம் ஜூன் 1, 1981 இரவு எரிக்கப்பட்டதை அறிந்திருக்கின்றோம். அன்றிரவே ஈழநாடு பத்திரிகை நிறுவனமும் எரிக்கப்பட்டு, ஊழியர்கள் படுகாயமடைந்ததையும் அறிந்திருக்கின்றோம். ஈழநாடு பத்திரிகை மீண்டும் இந்திய அமைதிப்படையினரின் காலத்தில் எரிக்கப்பட்டுள்ளதையும் அறிந்திருக்கின்றோம்.
ஆனால், இன்னுமொரு தமிழர் அறிவுச் செல்வமும் அழிக்கப்பட்ட விடயத்தை இந்தக் காணொளி மூலம்தான் அறிந்துகொண்டேன். இது பற்றி அதிகமாகப் பத்திரிகைகளில் நான் வாசிக்காததால் அறிய முடியாமால் போயிற்று.
இவ்வழிவு இந்திய அமைதி காக்கும் படையினரால் ஏற்படுத்தப்பட்ட அழிவு. நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானதும், இலங்கைத் தமிழ் கலை, இலக்கிய வரலாற்றில் முக்கியமானதொரு கலை, இலக்கிய மற்றும் நகைச்சுவைச் சஞ்சிகையான 'சிரித்திரன்' சஞ்சிகைதான் இவ்விதம் அழிக்கப்பட்டது. இவ்விதம் இக்காணொளியில் தற்போது இலண்டனில் வாழும் ,'சிரித்திரன்' ஆசிரியர் அமரர் சிவஞானசுந்தரத்தின் மகள், திருமதி வாணி சுந்தர் நினைவுகூர்கின்றார்.
இந்திய அமைதி காக்கும் படையினர் சிரித்திரன் ஆசிரியரின் கே.கே.எஸ் வீதியிலிருந்த சிரித்திரன் அச்சுக்கூட உபகரணங்களை, அலுவலகத்தை, சிரித்திரன் இதழ்களின் அதுவரை காலம் வெளிவந்த முழுமையான சேகரிப்பினை, ஆசிரியரின் நூலகத்தினை எல்லாம் எரித்து அழித்ததாகவும், அதன் பின் அவர்களது இல்லத்தைத் தமது முகாமாக்கியிருந்ததாகவும் அவர் சம்பவங்களை விபரிக்கையில் நினைவு கூர்கின்றார்.
- அவ்வப்போது பதிவுகள் இணைய இதழில் முகநூலில் பதிவு செய்யப்படும் சிறப்பான பதிவுகள் மீள்பிரசுரம் செய்யப்படும். இது அவ்வகையான பதிவுகளிலொன்று. எழுத்தாளரும், புகைப்படக்கலைஞரும், கடலியற் துறையில் ஆழ்ந்த அறிவும் மிக்க தயமந்தி சைமன் அவர்களைத் தமிழ்க் கலை, இலக்கிய உலகு நன்கு அறியும். அவர் முகநூலில் அண்மைக்காலமாகப் பதிவு செய்து வரும் கடலட்டை பற்றிய பதிவுகளில் இப்பதிவும் ஒன்று. - பதிவுகள்.காம் -
"......... ஏனெண்டால், இந்தத் தொழில் எங்களுடயவர்களுக்குத் தெரியாத ஒரு தொழில்...." -அங்கஜன் இராமநாதன் , பா.உ. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி.-
சீனர்களை வரவேற்க நீங்கள் எந்தக் காரணங்களைச் சொல்லிக் கொண்டாலும் ஏதோ..... போனால் போகட்டுமென மனதை ஆற்றுப் படுத்தலாம். இப்படியொரு காரணத்தை அங்கஜன் சொல்வதென்பது மிகமிகக் கேலித்தனமாக இருக்கிறது. "கைக்கெட்டிய கூலிக்காக கடப்பெட்டிய விடுப்பை விதைப்பதுபோல்" குத்துமதிப்பில் கருத்துச் சொல்லப்படாது. இது ஒரு சரியான தலைமைத்துவப் பண்புமல்ல. எல்லாத் தரப்பாரின் கரிசனையும் இப்போ கொஞ்சக் காலமாக இலங்கைக் கடல்மீதும், கடல் வளங்கள் மீதும், கடற்சூழல் மீதும் மையங் கொண்டிருக்கின்றது. இந்தப் பெரும் பேறுபெற்ற காலமானது இலங்கை வரலாற்றின் பக்கங்களில் பிளாட்டினத்தில் பொறித்து பவுத்திரப்படுத்தி வைக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதேவேளை மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இப்படியான பொறுப்பு மிக்கவர்கள் ஊடகங்களுக்கு முன்னால் தோன்றிப் பிரசங்கிப்பதற்குமுன் உங்கள் பேசுபொருள் தொடர்பாக ஆய்ந்தறிந்து, சரியான தெளிவோடு பேச வேண்டும். நீங்கள் ஒரு இனக்குழுவின் தலைவர்கள். பல லட்சம் மக்களின் தலைச்சன் பிரதிநிதிகள். மிகப்பெரும் பொறுப்புமிக்க பணியைத் தாங்கியிருக்கிறீர்கள். ஒவ்வொரு வார்த்தைகளையும் பொறுப்போடும், கவனத்தோடும் பேசவேண்டும். காவோலையின்மேல் பெய்வதுபோல் சகட்டுமேனிக்க்கு வாயில் வந்ததையெல்லாம் குத்துமதிப்பில் பேச முடியாது. அறிவுசார் உலகமும், பகுத்தறியும் அடுத்த தலைமுறையும் உங்களை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றது.
இலங்கையில் கடலட்டைத் தொழில்
இரண்டாம் உலகமகா யுத்தம் முடிந்த காலத்திலேயே கடலட்டை எமக்கு அறிமுகமாயிற்று. நாச்சிக்குடா மம்முக் காக்கா என்று கரையோரச் சமூகங்களால் கொண்டாடப்படும் முக்கம்மது காக்கா. (இவர் "லத்தீப் மாஸ்ரர்" என்று 70களில் மிகவும் அறியப் பட்ட ஒரு முஸ்லிம் ஆசிரியரின் தந்தை என்று நினைக்கிறேன்) மற்றும் நாச்சிக்குடா ஹச்சுக்காக்கா, கறுத்த மரக்காயர், சூசை போன்றோர்களது முயற்சிகளால் கடலட்டைத் தொழில் எமது கரையோர மீனவச் சமூகங்களிடையே மிகப்பெரும் வருமானம் ஈட்டும் தொழிலாக நடைமுறையில் இருந்தது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் ஆட்சியை ஏற்ற காலப் பகுதியில் இந்தக் கடலட்டைத் தொழில் கூட்டுறவுச்சங்கங்கள் மூலமாக தொழிலாளர்களுக்கான சிறு கடன்களை வழங்கியும், கடலட்டைத் தொழிலுக்கான உபகரணங்களை மானிய விலையில் கொள்வனவு செய்ய ஆவன செய்தும் ஊக்குவித்தது. இந்தக் காலகட்டத்தில் கடலட்டைத் தொழில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. (இவர்களே பின்னைய காலங்களில் இதற்கு எதிராக செயற்பட்டு பின்னடையச் செய்தார்கள் என்பது இன்னொரு கதை).
அவர் கூறினார் 'இன்று நானொரு முயல் பிடித்தேன்'.
'அதிலென்ன ஆச்சரிய'மென்றேன்'
'ஆச்சரியமுண்டு' என்றார். எனக்கோ ஆச்சரியம்.
"நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்' என்றார்.
'சில பிரசவங்களில் அப்படி நடப்பதுண்டு' என்றேன்.
'இல்லை இது நல்ல பிரசவமே' என்றார்.
'இருங்கள் காட்டுகின்றேன்' என்றார்.
கூட்டினுள்ளிருந்த முயலைக்
கைகளிலேந்தி வந்தார்.
நான்கு கால்களுடன் முயல்
நல்லநிலையில் இருந்தது.
'முயலுக்கு நான்கு கால்கள்' என்றேன்.
'நன்றாகப் பாருங்கள். முயலுக்குக் கால்கள்
நான்கு இல்லை. மூன்றுதான்' என்றார்.
'அலை'சஞ்சிகையில் வெளிவந்த நீண்ட ஆசிரியத் தலைங்கம் இதுதான். அதற்குக் காரணமும் இருக்கின்றது. மே 31, 1981 தொடங்கிய வன்செயல்களின் காரணமாக ஜூன்1, 1981 இரவு யாழ் பொது நூலகம், ஈழநாடு பத்திரிகை ஆகியவை எரிக்கப்பட்டன. அவை ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு இவ்வாசிரியத் தலையங்கம். யாழ் பொது நூலக எரிப்பு பற்றிய தொகுப்புகளில் தவறாமல் உள்ளடக்க வேண்டிய கட்டுரை இந்த ஆசிரியத் தலையங்கம். ஆவணச் சிறப்புள்ள ஆசிரியத் தலையங்கம்.
நூலகர் என்.செல்வராஜா நிச்சயம் வாசிக்க வேண்டிய ஆசிரியத் தலையங்கமிது. இதுவரை காலமும் ஜூன் 1 இரவு நூலகம் எரிக்கப்பட்டதைத் தனது கட்டுரைகளில் வலியுறுத்தி வந்த அவர் அண்மையில் மீள்பதிப்பாக தேசம் பதிப்பகம் வெளியிட்ட "Rising from the AshesTragic Episode of the Jaffna Library(A Reference Guide for Researchers By Thesam Publications (2021)" நூலுக்கு எழுதிய அறிமுகக் குறிப்பில் "During the District Development Council Election period between end of May and early June 1981 there was mass unrest and tension in the North. An unofficial curfew was in place and violence erupted. As a result to this day, there is still confusion over the exact date of when the Jaffna Public Library was burnt down. 3rd January 2021" என்று சந்தேகமடைந்திருக்கின்றார். அதாவது நடைபெற்ற வன்செயல்கள் காரணமாக நூலகம் எரிக்கப்பட்ட தினத்தை அறிவதில் குழப்பமுண்டாம்.
பொதுமக்களுக்கு வேண்டுமானால் சந்தேகமிருக்கலாம். ஆனால் மாநகரசபையில் ஜூன் 1 பணி புரிந்துகொண்டிருந்த காவலாளி விமலேஸ்வரனுக்குச் சந்தேகம் வந்திருக்காதல்லவா. அப்போது மாநகர ஆணையாளராகப் பணிபுரிந்த மாநகர ஆணையாளர் க.சிவஞானம் அவர்களுக்கு அவ்விதமான சந்தேகம் வந்திருந்தால் தீயணப்புப்படை வாகனங்களை ஜூன் 1 இரவு தகவலைத் தொலைபேசியில் அறிந்ததும் அனுப்பியிருப்பாரா? (ஆதாரங்கள்: 1981 ஜூன் மாத ஈழநாடுப் பிரதிகள்)