முகநூற் குறிப்பு: செங்குத்துக் காடு - Vertical Forestம் - பா.ரவீந்திரன் -
- பாலமோகன், சுவிஸ் ரவி, பா.ரவி ஆகிய பெயர்களில் எழுதும் எழுத்தாளர் பா.ரவீந்திரனின் முகநூற் குறிப்பிது. - பதிவுகள்.காம் -
கட்டடக்கலை ஒரு அற்புதமான கலை. பின்நவீனத்துவம் தோன்றிய களமும் அதுதான். இப்போ கட்டடக் கலையில் புதிய சகாப்தமொன்றை Vertical Forest (செங்குத்துக் காடு) நிறுவியிருக்கிறது. செங்குத்து காடு என்றால் என்ன. அதன் கருத்தாக்கம் (concept) என்ன.
மாடிக் குடியிருப்புகளில் மனிதஜீவியை மட்டும் மையப்படுத்தும் வாழ்முறையைத் தவிர்த்து (அதாவது மனித மையநீக்கம் செய்து), சாத்தியப்பாடான அளவு இயற்கையுடனான கூட்டு உறவை மையப்படுத்துவதே இதன் கருத்தாக்கம் ஆகிறது. அதாவது மனிதர்கள், மரம் செடி கொடிகள் மற்றும் பறவைகள் போன்ற உயிரினங்களுடனான கூட்டு உறவை மையப்படுத்துகிற கருத்தாக்கம் கொண்ட கட்டடத் தொகுதியை நகர வாழ்வியலுக்குள் நிர்மாணிப்பதாகும். இதை மரங்களின் இருப்பிடத்தில் மனிதர்கள் வாழ்வதான கருத்தாக்கமாகவும் சிலர் குறிப்பிடுவர். அதாவது செங்குத்துக் காட்டில் மனிதர்கள் வாழ்வதான ஒரு பரிணாமத்தை இக் கருத்தாக்கம் தருகிறது.