பதிவுகளின் வாசகர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! உங்கள் இல்லங்களில் இன்பப்பூக்கள் பூத்திடட்டும்! உங்கள் எண்ணங்கள் யாவும் எண்ணியவாறே நிறைவேறிடட்டும்!  ஆரோக்கியமான எண்ணங்களுடன், உடல் நலத்துடன் உங்கள் வாழ்க்கை தொடரட்டும்! சிறக்கட்டும்!

பிறப்பாய்! சிறப்பாய்!  புதிய ஆண்டே!

கோவிட் இருள் ஒழிந்து எங்கும்
குதூகலம் பிறந்திட, சிறந்திட, ஒளிர்ந்திட
இன்ப மலர்கள் மலர்ந்திட, மணம்தனைப் பரப்பிட
ஆண்டு புதிது அவனியில் தோன்றிட
வாழ்க வாழ்க என்றே வாழ்த்துவோம்.
வாழ்க வாழ்க என்றே வாழ்த்துவோம்.
இருளே ! ஒளிந்து செல்வாய் தரணியில்.
ஒளியே வருகை தருவாய் அவனியில்.
இங்கு எத்தனை எத்தனை உயிர்கள்
இழந்தோம்! இடரில், துயரில் ஆழ்ந்தோம்.
வறுமை வயிற்றை வாட்டிட வதக்கிட
வாடியோர் எத்தனை எத்தனை மனிதர்!
உழைப்பவர் வாழ்வில் இன்பம் பிறந்திட
பிறப்பாய் புதிய ஆண்டே சிறப்பாய்.
தீயவர் செயல்கள் தீய்ந்திட , ஓய்ந்திட
நல்லவர் செயலால் நானிலம் செழித்திட
மகிழ்ச்சி நிறைந்து மானிலம் சிறந்திட
பிறப்பாய் புதிய ஆண்டே பிறப்பாய்!
சிறப்பாய்! சிறப்பு ஆண்டே! சிறப்பாய்!
அனைவரும் அன்பினில் ஆழ்ந்திட, மூழ்கிட
நினைவினில் நல்ல எண்ணம் பெருகிட
பிறப்பாய் புதிய ஆண்டே பிறப்பாய்!
சிறப்பாய்! சிறப்பு ஆண்டே! சிறப்பாய்!


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R