பெண்களில் வெளிச்சமானவள்! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -

* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி; VNG
பெண்களாகப் பிறந்த யாவருக்கும் - ஏதோ ஒரு விதத்தில் சாதனை என்ன என்று கூறி - சாதித்த பெண்களுக்கும் இக் கவிதை காணிக்கை.
அழகான உடை பெண்ணின்
ஆளுமையை மாற்றும் என்பார்
அழகான நடத்தைதான் பெண்ணே உன்
வாழ்க்கையையே மாற்றும்!
பெண்ணே!
புரிதல் இல்லாத இடத்தில் - நீ
பரிந்து பேசினாலும் - இல்லை
பாசத்தில் பேசினாலும் - அது
பலவந்தமாகத்தான் தோன்றும்
இசை மொழியான தமிழ் மொழியால்
இனிதே அழகாக்கி பண்படுத்திவிடு அதனை!
பெண்ணே!
கோபம் வந்தாலும் உன்
நிதானத்தை இழக்காதே!
கோபத்தின் பின்னால் உன் நியாயத்தைவிட
பெரிதாக நீ எறிந்த
வாத்தைதான் பேசப்படும்
கடைசித் துளியும் உதிர்ந்த பிறகும்
பொறுப்புடன் சித்திரமாக்கிவிடும்
உன் சிந்தனையை பேனாக்குச்சியால்
பொறித்துவிடு!
பெண்ணே உனக்குள்
வட்டமிட்டுக்கொண்;டிருக்கும்
வலிகள் தான் ஏளராளம்
சத்தம் போட்டுச் சொல்ல முடியாமல்
மனசுக்குள்ளே குமையும்
பேசாப் பொருளை என்னிடம் பேசு
துணிந்து பேசு
உன் பாதை
சரியானதாகவும் இருக்கலாம்.









மனிதனின் மெய்யில் தோன்றும் சில உணர்வுகளை அவரவர்களின் செயல்பாடுகள் மூலமாகவும் குறிப்புகள் மூலம் அறியலாம்.பேச்சுமொழித் தோற்றத்திற்கு முன்பே மனிதன் தன் உள்ளத்து உணர்ச்சிகளை உடலைசைவுகளால் வெளிப்படுத்தினான். உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடாக உடலின் மேல் தோன்றும் புறக்குறிகள் மெய்ப்பாடுகள் என அழைக்கப்பெறுகின்றன. மெய்யின் படுதல் மெய்ப்பாடு, அதாவது, உணர்ச்சி மெய்யில்(புற உடலில்) வெளிப்படுதல் மெய்ப்பாடு எனப்படும். உண்மைத் தோற்றம் உண்மை நிகழ்ச்சி, உண்மை நிலை என்றெல்லாம் பொருள் விளக்கம் பெறுகிறது. மெய்ப்பாடுகள் என்பவை மிகவும் நுண்மையானவை.அத்தகைய மெய்பப்பாடுகளை குறுந்தொகையில் மூலம் காணலாம்.


காஷ்மீர் பயணத்தைத் தொடங்கும் முன், நாங்கள் மிகப் பல முறை யோசித்தோம். பயண முகவரிடம் எங்களுடைய சந்தேகங்களை வெளிப்படுத்தினோம். அவர் கூறிய பதில் நமக்குக் கொஞ்சம் நிம்மதியைத் தந்தது:
தாரை என்ற சொல்லுக்குக் ’கண்ணின் மணி’ என்று பொருள் தருகிறது திவாகரம்.தாரை, கிட்கிந்தை நாட்டின் வானரகுல அரசன் வாலியின் மனைவி.சுக்ரீவனுக்குத் துணையாக இராமன் வந்துள்ளதையும், உன் உயிரை எடுப்பதற்காகவே அவன் வந்துள்ளான் என்று நம்மீது அன்புடையவர்கள் கூறினர் என்று சொன்னாள். இளையபெருமாள் கோபத்துடன் வருவதைக்கண்டு, தவறு செய்த வானரர்களைக் கடிந்து பேசிவிட்டு, தானே நேராக இலட்சுமணனிடன் சென்று இதமாகப்பேசி, அவன் கோபத்தைத் தணித்து, சுக்ரீவன் மீது பிழை இல்லை என்று புரியவைத்து, ஒரு ராசமாதாவாக நடந்துகொண்டாள். தாரையின் அழகு, புத்திசாலித்தனம்,அமைதி,தவறு செய்தவரிடத்து கண்டிக்கும் மனநிலை, வானர குலத்தைக்காக்க அவள் செய்யும் முயற்சி, வாலி இறந்ததால் கைம்மைத் தோற்றம் என்று பன்முகத்தன்மை கொண்ட தாரை குறித்துக் கம்பராமாயணம் கூறியுள்ள கருத்துக்களை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

- இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' ஒரு மைல் கல். மதம் என்னும் கருத்தியலை அங்கதச் சுவையுடன் சாடும் வேறெந்த நாவலும் இலங்கையில் மேடையேறியதாக நான் அறியவில்லை. அப்படி இருந்தால் , அறிந்தவர்கள் அதனை இங்கு பகிர்ந்துகொள்ளலாம்.



சுண்ணாம்புத்திண்ணையில் கால்கள் சுகமாய் நேராய்க்கிடக்கின்றன.காலங்களைக்கடந்துவந்த அனுபவங்கள் ஆச்சியின் பாதங்களில் தெரிகின்றன.அந்தப்பாதங்களில் விடைபெறுகின்ற வெயில் கொஞ்சிவிட்டுப்போகுது. உடலில் கொழுப்பென ஒன்றையும் காணமுடியாமல் பாலைவனப்பாறைகளாய் உடல் சதிராடுது. ஆச்சிக்கு எந்த ஆசைகளும் கிடையாது.









பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









