(பயணக் கட்டுரைகள்) என் கொடைகானல் மனிதர்கள்! (3): சவுக்கு மரங்கள் - ஜோதிகுமார் -
- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -
சவுக்கு மரங்கள்
கொடைக்கானல் நகரின் பள்ளத்தாக்குகளில் இருந்து, மேலெழும் குன்றுகள் வழியாக, மேலேறி, இப்போது பார்வைக்கு மிக சிறியதாய் தோற்றம் தரும், கையளவிலான ஏரியும் பார்வையை விட்டகல, பூம்பாறை பாதை சடுதியாக கீழிறங்க தொடங்கும். பாதையின் இரு மருங்கிலும் அடர்ந்திருக்கும் சவுக்கு மரங்கள் பஸ் ஏதோ ஒரு சோலைக்குள் செல்வது போன்ற பரவச நிலையை உண்டு பண்ணும்.
சவுக்கு மரங்களோ, சூரிய ஒளியை மண்ணில் விழாதவாறு காப்பதற்கு திடசங்கற்பம் பூண்டவை போன்று, தமது கிளைகளாலும் வாதுகளாலும் ஒன்றையொன்று நெருக்கமாக பிண்ணி பிணைந்து விழும் சூரிய கதிர்களை தடுத்து, அம் முயற்சியின் வெற்றி களிப்பில், தலையை மெல்ல மெல்ல ஆட்டி, வீசும் காற்றில் புன்னகைப்பன – தத்தமது வெளிர் நிற மஞ்சள் மலர்களோடு.
சூரிய ஒளி படாததாலோ என்னவோ, அடர்ந்திருக்கும் அந்த குட்டை குட்டை மரங்களின் கீழ் காணப்படும் தரையும், அந்நிழலுக்கே ஏற்ற ஓர் கரிய நிறத்தில், கீழே கிடக்கும் சவுக்குகளின் உதிர்ந்த ஒடுங்கிய சவுக்கு இலைகளுடன், கரிய மெத்தை கிடப்பது போன்ற உணர்வினை பார்ப்பவர்க்கு தோற்றுவிக்கும்.
காலை நீட்டி “அப்பாடா” என்று இந்த கரிய கரிய மொரமொரப்பான மெத்தைகளில் படுத்து, வீசும், இந்த அருமையான சில்லிட்ட காற்றை உள்ளிழுத்து கிடந்தால் எவ்வளவு சுகமாயிருக்கும் என்பது போன்ற யோசனைகள் எல்லாம் மேலெழ, பஸ்ஸோ விரைந்து விரைந்து அந்த ஒடுங்கிய பாதையில், சவுக்கு மரங்களின் கிளைகள் சில சமயங்களில் பஸ் ஜன்னல்களை பலமாக தேய்த்து உரசி பெரும் சப்தம் எழுப்ப – படி படியாய் கீழ் இறங்கி சென்றுக்கொண்டிருக்கும், வளைந்து வளைந்து.
ஒரு வளைவில், ஒடித்து திரும்பும் போது, மலையடிவாரம் சார்ந்த ஓர் குன்றின் சரிவில் கிட்டத்தட்ட ஓர் வெட்டவெளி பொட்டலில் என்று கூட சொல்லலாம், அமைந்து கிடந்தது பூம்பாறை என்னும் அந்த மிக சிறிய நகரம். பெட்டி விடுகள். சிறிய சிறிய பெட்டி கடைகள். ஒரு கோயில், அதில் அலறும் ஒரு ஒலிப்பெருக்கி – போக, பஸ் நிறுத்தம் அப்படி இப்படி என்று ஏதும் இங்கு இருப்பதாக இல்லை. தேனீரோ சாப்பாடோ இந்த சிறிய பெட்டி கடைகளே தஞ்சம்.

மறு யுகம் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள 'வாழ்வின் பின் நோக்கிய பயணமிது' நூலை வாசித்தேன். இந்நூல் எனக்குக் கிடைப்பதற்கு வழி செய்த நண்பரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளருமான எல்லாளனுக்கு நன்றி. சிவகாமி, யாழினி என்னும் இரண்டு முன்னாட் பெண் போராளிகளின் போராட்ட அனுபவங்களைக் கூறும் நூல். சிவகாமியின் போராட்ட அனுபவங்கள் படர்க்கையில் விபரிக்கப்பட்டுள்ளன. இவரது அனுபவங்களே 48 பக்கங்களைக் கொண்ட இச்சிறு நூலின் பிரதான பகுதியாக அமைகின்றது.

ராணுவம் அடுத்த முன்னகர்வுக்கு வழக்கமாக எடுக்கும் ஓய்வை அந்தமுறை எடுக்கவில்லைப்போல் தெரிந்தது. எரி குண்டுகளும், ஷெல்களும் விழுந்து சிதறின. அங்கே நிறையப் போராளிகளும் கூடியிருந்தனர். ஒரு யுத்தத்திற்கான முன்னாயத்தங்கள் தெரிந்தன. அது அவ்வாறுதான் இருக்கும். புலிகள் இயக்கத்து தலைமையின் மையம் அது. போராளிகளின் பிரசன்னம் பாதுகாப்புக்கான அம்சமாக ஒரு காலத்தில் இருந்ததுதான். அப்போது இல்லை. அதன் அர்த்தம் போராளிகள் நிறைய இருக்கிறவரையில் புதுக்குடியிருப்பு இனி பாதுகாப்பில்லை என்பதுதான். முருகமூர்த்தி உஷாரானான். “பையை எடு, ஜோதி” என்றான்.
“சாமி….. முகூர்த்த டைம் முடியிறத்துக்கு இன்னும் அரைமணி நேரத்துக்கு மேல இருக்கு…. நாமெல்லாம் மனசுவெச்சா இந்தக் கேப்புக்குள்ள கலியாணத்தையும் முடிச்சிடலாம் இல்லியா….”


நான் இந்த சிறுகதை மீண்டும் கிடைக்குமென்று எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் நூலகம் தளத்தின் உதவியால் மீண்டும் இச்சிறுகதையினைப் பெற முடிந்தது. அதற்காக நூலகத்துக்கு நன்றி.



பாரதியார் எழுதிய முதல் கவிதையும் , முதல் சிறுகதையும் என்ன... ? என்பது பற்றியும் இலக்கிய உலகில் ஆராயப்படுகிறது. வழக்கமாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் வ.வே.சு. ஐயர் ( வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் ) எழுதிய குளத்தங்கரை அரசமரம் தான் முதலில் தமிழில் வெளிவந்த சிறுகதை என்று நிறுவுகின்றனர். இவர் 1881 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 02 ஆம் திகதி திருச்சி வரகனேரியில் பிறந்தார். இந்திய சுதந்திரப்போராட்டத்தின்போது தமிழ் நாட்டில் இவரது பங்களிப்பு மிக மிக முக்கியமானது. லண்டன் சென்று சட்டமும் படித்து பரீஸ்டரானவர். சுதந்திரம் சும்மா கிடைக்காது, ஆயுதத்தினாலும் பெறமுடியும் என நம்பிய தீவிரவாதி. பாரதியின் வாழ்க்கைச் சரிதத்தில் இவரும் முக்கிய தருணங்களில் இடம்பெறுகிறார். பாரதி மறைவதற்கு முதல் நாள் 1921 ஆம் ஆண்டு 11 ஆம் திகதி, சென்னையில் வ.வே.சு. ஐயர் கைதாகி சிறைசெல்லுகிறார். பாரதி கடும் சுகவீனமுற்றிருப்பது அறிந்து, அவரைச்சென்று பார்க்க விரும்பும் ஐயர், பொலிஸாரிடம் அனுமதி கேட்கிறார். இவரை சிறைக்கு அழைத்துச்செல்லும் பொலிஸாருக்கு இரக்க குணம் இருந்திருக்கவேண்டும்.
‘உலகிலே அதி உயரமான மலையின் உச்சியில் இப்போது நீங்கள் நிற்கிறீர்கள்’ என்று சொல்லி எனக்கு அதிர்ச்சி தந்தாள் வரவேற்பில் நின்ற, தலைமுடியில் ஒற்றைப்பூ செருகிய இளம் பெண்மணி. ஹவாயில் உள்ள மௌனாகியா மலையின் உச்சியில் நாங்கள் அப்போது நின்றிருந்தோம். இமயமலை ஆசியாவில்தான் இருக்கிறது என்ற எனது நம்பிக்கையை ஒரு கணம் கேள்விக்குறியாக்கினாள். நேபாளத்திற்கும், தீபெத்திற்கும் இடையே உள்ள இமயமலையின் எவரெஸ்ட் சிகரம்தான் உலகிலே அதிக உயரமான சிகரம் என்பதும், அதன் உயரம் 29,028 அடி என்பதும் மாணவப்பருவத்தில் இருந்தே என் மனதில் பதிந்திருந்தது. அதன்பின் இன்றுவரை இமயமலை 4 அங்குலம் வளர்ந்திருந்ததும் தெரியும். வரவேற்பில் நின்ற பெண்மணிக்கு அனுபவம் போதவில்லை, எவெரெஸ்ட் பற்றி இவர் அறிந்திருக்கவில்லை என்ற நினைவோடு, அவரைப் பார்த்தேன். எனது பார்வையைப் புரிந்து கொண்ட அவரோ அருகே இருந்த பதாதையை நோக்கிச் சுட்டுவிரலை நீட்டினார். மௌனாகியா மலையின் படத்தையும் அதைப்பற்றிய குறிப்பையும் வாசித்த போது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் ஒருகணம் தடுமாறிப் போனேன்.

எனக்கு நடிகரும் பாடகருமான மு.க.முத்து மீது எப்போதுமே ஒருவித அனுதாபமுண்டு. கலைஞர் எம்ஜிஆரின் அரசியல் மற்றும் திரையுலகச் செல்வாக்கைப்பற்றித் தப்புக் கணக்கு போட்டார். அரசியலில் அவர் போட்ட தப்புக்கணக்கு எம்ஜிஆரைக் கட்சியிலிருந்து விலக்கியது. விளைவு? எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரையில் கலைஞரால் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை. அதுபோல் எம்ஜிஆரைக் கட்சியிலிருந்து விலக்க முன்னர் எம்ஜிஆரின் திரையுலக வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரத் தன் புதல்வனான மு.க.முத்துவைக் கதாநாயகனாக வைத்து எம்ஜிஆரைப்போல் நடிக்க வைத்தார். அது அவர் போட்ட எம்ஜிஆர் பற்றிய முதலாவது தப்புக் கணக்கு. விளைவு? நடிப்புத் திறமை, பாடும் திறமை மிக்க மு.க.முத்துவின் கலையுலக வாழ்க்கை உதித்த வேகத்திலேயே அஸ்தமித்துப்போனது. எம்ஜிஆருக்கு எதிராக மு.க.முத்துவை நடிக்க வைத்ததற்குப் பதிலாக நடிக்க வைத்திருந்தால் மு.க.முத்துவின் கலையுலக வாழ்க்கை பிரகாசித்திருக்கும் என்பதே என் கணிப்பு. 




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









