பதிவுகள் முகப்பு

என் எழுத்தார்வத்தை ஊக்குவித்தவர் ஊடகவியலாளர் எஸ்.கே.காசிலிங்கம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
25 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இன்று பாரிஸில் நடைபெற்ற மூத்த ஊடகவியலாளர் 'ஈழநாடு' எஸ்.கே. காசிலிங்கம் அவர்களின் அமுத விழாவினையொட்டி வெளியான மலருக்காக எழுதப்பட்ட கட்டுரை. -


என்னால் ஒருபோதுமே ஊடகவியலாளர் எஸ்.கே.காசிலிங்கத்தை மறக்க முடியாது. ஒரு வகையில் என் எழுத்துலக வாழ்க்கைக்குச் சுழி போட்டது ஈழநாடு மாணவர் மலர் என்றால், அதற்குக் காரணமானவர் அப்போது மாணவர் மலருக்குப் பொறுப்பாக் இருந்த 'காசி' அவர்கள்.  அண்மைக்காலம் வரையில் அவரைக் காசி என்னும் பெயரிலேயே அறிந்து வைத்திருந்தேன். எஸ்.கே.காசிலிங்கம்தான் அவர் என்பதை அறிந்திருக்கவில்லை.

ஈழநாடு மாணவர் மலர் காசி அவர்கள் எப்போதும் என் மனத்திலிருப்பார். காரணம் - நான் வாசிக்கத்தொடங்கிய காலத்தில் பத்திரிகை, சஞ்சிகைகளில் வரும் சிறுவர் பக்கங்களை விரும்பி வாசிப்பேன். கண்ணன், அமபுலிமாமா போன்ற சஞ்சிகைகள், பொன்மலர், பால்கன் காமிக்ஸ் சஞ்சிகைகள் இவையெல்லாம் அப்பருவத்தில் என் மனங்கவர்ந்த சஞ்சிகைகள்.  இவற்றுடன் கல்கி, ஆனந்தவிகடன், கலைமகள் போன்றவற்றின் தீபாவளி மலர்களின் சிறுவர் பக்கங்கள், கலகி சஞ்சிகையில் வாரா வாரம் வெளியான 'சிறுவர் விருந்து' பக்கங்கள், ராணி வாராந்தரியில் வெளியான் சிறுவர் பக்கங்கள், இவற்றுட்ன  ஈழநாடு பத்திரிகையின் வாரமலரில் வெளியாகும் 'மாணவர் மலர்' பக்கம் ஆகியவற்றை விரும்பி வாசிப்பேன்.   கல்கி சிறுவர் விருந்தில் வெளியாகும் வாண்டுமாமாவின் எழுத்துகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுபோல் ராணியின் சிறுவர் பக்கத்தில் வெளியான தொடர்கதையான 'பேசும் சிலை'  இன்னும் நினைவிலுள்ளது.

மேலும் படிக்க ...

அமுதவிழாவைக்காணும் மூத்த பத்திரிகையாளர் எஸ். கே. காசிலிங்கம் நினைவுகள்! பாரிஸில் அமுதவிழா! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
25 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இன்று பாரிஸில் மூத்த ஊடக்வியலாளர் 'ஈழநாடு' எஸ்.கே.காசிலிங்கம் அவர்களின் அமுதவிழா, ஊடகவியலாளர் எஸ். கே. ராஜென்  ஏற்பாட்டில்  நடைபெற்றது. அதற்கான காணொளி -   அதனையொட்டி வெளியான மலருக்காக எழுத்தாளர் முருகபூபதி எழுதிய கட்டுரையிது. -


ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பாரிஸிலிருந்து பாரிஸ் ஈழநாடு, தமிழன் ஆகிய இரண்டு வாரப் பத்திரிகைகள் வெளியாகிக்கொண்டிருந்தன.

இவற்றை நடத்தியவர்கள், முன்னர் இலங்கை வடபுலத்தில் வெளியான ஈழநாடு பத்திரிகையில் பணியாற்றியவர்கள். ஈழநாடுவில் தமது எழுத்தூழியத்தை மேற்கொண்டவர்கள் பலர். அவர்களில் சிலர் தற்போது உயிரோடு இல்லை.

எனது பூர்வீகம் மேற்கிலங்கையில் நீர்கொழும்பு. 1972 இற்குப்பின்னர், கெழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி பத்திரிகையின் நீர்கொழும்பு பிரதேச நிருபராகவும், அதேசமயம், படைப்பிலக்கியவாதியாகவும் நான் அறிமுகமானேன்.

அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து டொமினிக்ஜீவா வெளியிட்ட மல்லிகை மாத இதழில் எனது சிறுகதைகள் உள்ளிட்ட படைப்புகள் வெளிவந்தன. மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா, ஒவ்வொரு மாதமும் மல்லிகை வெளியானதும், அதன் பிரதிகளுடன் யாழ். ஈழநாடு பணிமனைக்குச்சென்று அங்கிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு விநியோகிப்பார்.

ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர், 1970 களில் எனது ஆக்கங்களை மல்லிகையில் படித்துவிட்டு, சக பத்திரிகையாளர்களிடம் என்னைப்பற்றி சிலாகித்துச்சொன்ன ஈழத்தின் மூத்த பத்திரிகையாளர் – மதிப்பிற்குரிய திரு. எஸ்.கே. காசிலிங்கம் அவர்களுக்கு அமுதவிழா நடைபெறுகிறது என்ற நற்செய்தியை லண்டனிலிருந்து எனக்குத் தந்தார், மற்றும் ஒரு நீண்டகால ஊடகவியலாளர் நண்பர் எஸ். கே. ராஜென்.

மேலும் படிக்க ...

கலாநிதி பெருமாள் சரவணக்குமார் அவர்களின் பதிப்பிலான கோ. நடேசய்யர் எழுதிய “இலங்கை இந்திய ஒப்பந்தம்” - இக்பால் அலி -

விவரங்கள்
- இக்பால் அலி -
நூல் அறிமுகம்
24 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இந்தியாவிலுள்ள தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருந்து அழைத்து வரப்பட்டு 200 ஆவது ஆண்டைக் கடந்து செல்லுகின்றது. அந்த வகையில் மலையக எழுச்சிக்காக பங்காற்றிய பல ஆளுமைகள் உள்ளன. அதில் கோ. நடேசய்யரின் பங்களிப்பு மகத்தானது. இத்தருணத்தில் கோ. நடேசய்யர் எழுதிய “இலங்கை இந்திய ஒப்பந்தம்” என்ற நூலை கலாநிதி பெருமாள் சரவணக்குமார் அவர்கள் மீளவும் பதிப்பித்து வெளியிடுவது இன்றைய இளைய தலைமுறையினர்களுக்கு மிகவும் அவசியமான தொன்றாகும்.

இரத்தத்தையும் வியர்வையையும் தேயிலைச் செடிகளுக்கு உரமாக்கி இந்நாட்டை வளமாக்கியவர்களின் வரலாறு தோற்றம் பெறுவதற்கு உந்து சக்தியாக அமைந்த கோ. நடேசய்யர் அவர்கள் எழுதிய இந்த “இந்திய இலங்கை ஒப்பந்தம்”; என்னும் நூல் மலையக மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் பேசுகின்றன.

இம்மக்கள் சமூக, பொருளாதார அரசியல் அரங்கில் கொடுங்கோன்மையுடன் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதற்கு இந்நூலே போதுமானதாகும்.

தேசபக்தன் கோ. நடேசய்யர் அவர்கள் “ இலங்கை இந்தியா ஒப்பந்தம்” என்கின்ற தலைப்பில் முதல் பதிப்பாக 1941 இல் வெளியிட்டார். இந்நூலின் இரண்டாம் பதிப்பாக கலாநிதி பெருமாள் சரவணக்குமார் அவர்களைப் பதிப்பாசிரிரியராகக் கொண்டு 2022 இல் மலை வாசகம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

1820 களின் ஆரம்பத்தில் கோப்பி பயிர்ச் செய்கைக்காக பிரித்தானியர்களால் கொண்ட வரப்பட்ட தோட்டத் தொழிலாளர்களே இன்றைய மலையக மக்களின் ஆரம்ப கர்த்தாக்களாகும். 1823 முதல் 1920 வரை இவர்கள் தோட்டங்களில் அடைபட்ட ஒரு தொழிலாளர் கூட்டமாகவே கருதப்பட்டனர். சுமார் ஒரு நூற்றாண்டு காலம் காலனித்துவ அடிமைகளாகவும், கங்காணித்துவ அதிகாரத்திற்குட்பட்டவர்களாகவும் வாழ்ந்த தோட்டத் தொழிலார்களை முதன் முதலில் தொழிற்சங்க அடிப்படையில் ஒன்று திரட்டி பல்வேறு களச் செயற்பாடுகளில் ஈடுபட்டதோடு போராட்டங்களையும் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் தொடக்கி வைத்தவர் கோ. நடேசய்யர் அவர்களே.

மேலும் படிக்க ...

கண்டித் தமிழ் மன்றம் வழங்கும் தேசபக்தன் கோ.நடேசையரின் இரு நூல் வெளியீடு!

விவரங்கள்
- தகவல்: இக்பால் அலி -
நிகழ்வுகள்
24 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

பகைநாட்டின் அழிவுகள்! - திருமதி வீ.வெள்ளைத்துரைச்சி, உதவிப்பேராசிரியர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, (தன்னாட்சி), சிவகாசி. -

விவரங்கள்
- திருமதி வீ.வெள்ளைத்துரைச்சி, உதவிப்பேராசிரியர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, (தன்னாட்சி), சிவகாசி. -
ஆய்வு
23 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் AI

முன்னுரை

முறை செய்து காப்பாற்றும் மன்னனை மக்கள் இறை என்று கருதியுள்ளனர். தன் மக்களுக்கு ஒரு துன்பம் வந்தவிடத்து, அதனைப் போக்க மன்னன் தன் உயிரையும் நீத்துள்ளான். அப்படி தன் நாட்டு மக்களைக் காக்க உயிரை நீக்கும் மன்னன், பகைமை காரணமாக பகை நாட்டில் உள்ள மக்களையும், அவர்கள் வாழும் நாட்டினையும் பல்வேறு விதமான அழிவுகளுக்கு உள்ளாக்கியுள்ளான். பகைமை காரணமாக மன்னன் பகைநாட்டிற்கு எத்தகைய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளான் என்பதனை ‘பகைநாட்டின் அழிவுகள்’ எனும் இவ்ஆய்வுக்கட்டுரையில் காண்போம்.

தோற்ற அரசனது ஆட்சிப் பகுதிகளைப் பாழ்படுத்துதல்

போரில் வெற்றி பெற்ற மன்னன் தோற்ற மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளைத் தன் நாட்டுடன் இணைத்திருக்கிறான். அது மட்டுமல்லாது வெற்றி பெற்ற மன்னர்கள் தோல்வி அடைந்த மன்னர்களின் நிலங்களைப் பல்வேறு வகைகளில் பாழ்படுத்தவும் செய்துள்ளனர். இதனை,

பகை நாட்டினைத் தன் ஆட்சிப் பகுதியுடன் இணைத்தல்
பாழ்படுத்துதல்
பகைநாட்டின் செல்வ வளத்தினைக் கவர்தல்
பகைவரின் விளை நிலங்களைக் கொள்ளையிடுதல்
நிலங்களைப் பாழாக்குதல்
பகைவர் நாட்டினை எரியூட்டல்
நீர்நிலைகளைப் பாழ்படுத்துதல்
மன்றத்தை அழித்தல்

என்ற அடிப்படையில் ஆராய இயலுகின்றது.

மேலும் படிக்க ...

திருக்குறள் கூறும் மறுபிறப்புச் சிந்தனைகள் - முனைவர் ப.விக்னேஸ்வரி, இணைப் பேராசிரியர் , தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை 641105 -

விவரங்கள்
- முனைவர் ப.விக்னேஸ்வரி, இணைப் பேராசிரியர் , தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை 641105 -
ஆய்வு
23 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

வள்ளுவர் ஈடும் எடுப்பும் அற்ற ஒரு சமுதாயச் சிற்பி. மக்கள் அனைவரும் ஒரே குலத்தவர் போன்று வாழவேண்டும் என்று விரும்பினார். அவர்கள் வாழ்ந்து சிறப்படைவதற்கு அறமே சிறந்த அடிப்படை என்று கண்டார். உலகம் பல சமுதாயங்களால் ஆனது என்றாலும் ஒவ்வொரு சமுதாயம் அச்சமுதாயத்தில் உள்ள எல்லாக் குடும்பங்களும் சமுதாயத்தின் நன்மைக்கு என அமைந்த அரசாங்கமும் அறத்தை அடிப்படையாகக் கொண்டு நடக்குமானால் உலகில் உள்ள எல்லா சமயங்களும் பிணக்கு இன்றி, பகையின்றி அன்போடும், நட்போடும் விளங்கும் எனவும் ஒரு குலம் போல் வாழும் எனவும் உணர்ந்தார். ஆகவே, ஒவ்வொரு நாடும் அதனைச் சார்ந்த குடும்பங்களும், சமுதாயமும், அரசாங்கமும் அறத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு குலத்தார் போல் வாழ்வதற்கு திட்டமிட்டார். அத்திட்டமே திருக்குறளாக விளங்குகிறது. மறுபிறப்புச் சிந்தனைகள்  குறித்த செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் வாழும் மக்கள் சிறந்ததாகக் கருதிப் போற்றும் மனித நடத்தையையும் வழக்கங்களுமே ஒழுக்கமாகும். இவ்வொழுக்கம் முதலில் சான்றோர்களை நிலைக்களமாகக் கொண்டு புலப்பட்டு நிற்கும். அச்சான்றோர்கள் சிலவற்றை இவை செய்ய தகாதானா,தகாதனை என்றும் விதிக்கவும் விலக்கவும் செய்வார். உலகத்தின் இயக்கத்தைக் கூர்ந்து நோக்கும் இடத்து ஓர் உண்மை புலனாகிறது. இவ்வுலகில் உள்ள அனைத்துமே ஏதோ ஒர் ஒழுங்குக்கு உட்பட்ட நிலையிலே இயங்கி வருகின்ற என்பதுதான் அது. அவ்ஒழுங்குக்கு உட்பட்ட நிலைதான் அறம் என்பது.

மேலும் படிக்க ...

அகநானூற்றில் சுற்றுச்சூழல் சிந்தனைகள் - மு. சாந்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் -624 302. -

விவரங்கள்
- மு. சாந்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் -624 302. -
ஆய்வு
22 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

பண்டைத் தமிழர்களின் வாழ்வில் காதலும் கொடையும் நீதியும் பின்னிப் பிணைந்திருந்தன. பண்டைத் தமிழ்ப்புலவர்களும் காதலையும் வீரத்தினையும் இயற்கையுடன் இணைந்தே காட்சிப்படுத்தியுள்ளனர். தமிழ் மக்கள் இயற்கையுடன் இயைந்த வாழ்வினை இயல்பாக ஏற்றுக்கொண்டனர். சுற்றுச்சூழல் பண்டையத் தமிழர்களால் பொலிவு பெற்றது. சங்ககால மக்கள் நிலங்களை ஐவகையாகப் பிரித்து அவற்றின் தன்மைக்கேற்ப விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடி, பொழுது முதலியவற்றைப் பாகுபடுத்தி அவற்றின் வழியே வாழத்தலைப்பட்டனர். இயற்கை நெறிக்காலத்தில் தோன்றிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான அகநானூற்றில் சுற்றுச்சூழல் சார்ந்த சிந்தனைகள் பரவலாகக் காணப்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசுபாடு நிறைந்த இன்றைய சூழலில் சுற்றுச்சூழல் பற்றிய ஆய்வானது மிகவும் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகின்றது. அகநானூற்றில் காணப்படும் சூழல் சார்ந்த சிந்தனைகளை ஆய்வதாகக் கட்டுரை அமைகின்றது.

அகநானூற்றில் சூழலியல்

இன்று மானுடம் எதிர்நோக்கும் முக்கியப் பிரச்சனைகளுள் ஒன்று சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகும். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு சிந்தனைகளுக்கு அடித்தளமாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. சங்க இலக்கியங்களுள் ஒன்றான அகநானூற்றில் சுற்றுச்சூழல் சார்ந்த சிந்தனைகள் பரவலாகக் காணப்படுகின்றன. அகநானூற்றில் குறிஞ்சி, பாலை நிலச்சூழலியல் பற்றியச் செய்திகளும், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை குறித்த செய்திகளும் ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க ...

உங்கள் இணையத்தளங்களையும் இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்துங்கள்! - வ.ந,கி -

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
22 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இணையத்தளங்கள் பல காலத்துக்குக் காலம் காணாமல் போவதைப் பார்க்கின்றோம். அவை காணாமல் போவதுடன் அவற்றிலுள்ள படைப்புகளும் காணாமல் போய்விடுகின்றன.  இணையத்தளங்களை நடத்துபவர்கள் அவற்றை ஆவணப்படுத்துவதற்கும் வசதியுண்டு. இணையக் காப்பகத்தில் (archive.org) இதற்கான வசதியுண்டு. நீங்கள் உங்கள் இணையத்தளத்தின் பிரிவுகளை, அல்லது பக்கங்களை, அலலது முழு இணையத்தளத்தையும் ஆவணப்படுத்தி வைக்கலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது?  இதில் அங்கத்தவர்களாகச் சேர்ந்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் உங்கள் நூல்களை, காணொளிகளை, சஞ்சிகைகளை, பத்திரிகைகளை, இணையத்தளங்களை எல்லாம் சேகரித்துக்கொள்ளலாம்.

இணைய்த்தளத்தைச் சேமித்து வைக்க, My web acrchives என்னும் பிரிவில் சேகரித்து வைக்கலாம். பதிவுகள் இணைய இதழை நான் இவ்விதம் ஆவணப்படுத்தி வருகின்றேன்.  உதாரணத்துக்குச் சில :

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் பாவிக அணி - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
ஆய்வு
22 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று பாவிக அணியாகும். கம்பர் தன் காப்பியமான கம்பராமாயணத்தில் பாவிக அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை தண்டியலங்காரத்தின் வழி ஆராய்வோம்.

பாவிக அணி

பாவிகம் என்று சொல்லப்படுவது பொருள் தொடர் நிலைச் செய்யுள் திறந்துக் கவியால் கருதி செய்யப்படுவதொரு பாங்கு ஆகும்..அது அத் தொடர்நிலைச் செய்யுள் முழுவதும் நோக்கிக் கொள்ளப்படுவதல்லது தனித்து ஒரு செய்யுளால் நோக்கிக் கொள்ளப் புலப்படாதது ஆகும்.

"பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப
. பொறையில் சிறந்த கவசம் இல்லை
வாய்மையிற் கடியதோர் வாளி இல்லை"
(தண்டியலங்காரம் 64)

பிறர் மனைவியை விழைந்தவர் கிளையொடும் கெடுவர் என்று கம்பராமாயணத்திலிருந்து அறியலாம்.

திருக்குறளில் பிறன் இல் விழையாமை

பிறன் இல் விழைவினால் வரும் தீமைகளைச் சொல்லி அப்படிப்பட்ட தீமைகளைச் செய்யாதே என்று வள்ளுவர் பிறனில் விழையாமை என்று தனி அதிகாரமே வகுத்துத் தந்துள்ளார். எவ்வளவு பெருமையுடையவனாக இருந்தாலும் சிறிதளவு கூட ஆராய்ந்து பார்க்காமல் பிறர் மனைவியை விரும்புதல், பிறர் மனைவியிடம் செல்லுதல் ஆகிய தீய செயல்களைச் செய்யும் ஒருவனது பெருமைகளால் எந்தவித பயனும் இல்லை. பிற எல்லா பெருமைகளும் பிறனில் விழைதல் எனும் ஒரு பிழையால் ஒன்றும் இல்லாமல் போய்விடுகின்றன.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 50 - "ராஜம் கிருஷ்ணனின் பன்முக ஆளுமை" - அகில் -

விவரங்கள்
- அகில் -
நிகழ்வுகள்
20 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வழி:  ZOOM Join Zoom Meeting:| Meeting ID: 389 072 9245 | Passcode: 12345

நாள்:         சனிக்கிழமை 31-05-2025       
நேரம்:     

இந்திய நேரம் -        மாலை 7.00      
இலங்கை நேரம் -   மாலை 7.00      
கனடா நேரம் -         காலை 9.30      
இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30

வழி:  ZOOM Join Zoom Meeting:| Meeting ID: 389 072 9245 | Passcode: 12345

மேலும் படிக்க ...

கிடைக்கப்பெற்றோம்: எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரனின் 'பாவை என்று சொல்லாதே என்னை' கவிதைத்தொகுப்பு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
நூல் அறிமுகம்
19 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரனின்   கவிதைத்தொகுப்பு "பாவை என்று சொல்லாதே என்னை" - மனஓசை வெளியீடு.  72 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு.  புகலிடத்  தமிழ் இலக்கியத்தில் நன்கறியப்பட்ட பெண் ஆளுமைகளில் ஒருவர் சந்திரவதனா செல்வகுமாரன்.  எழுத்தாளர் சந்திரா இரவீந்திரனின்  (செல்வி  சந்திரா தியாகராஜாவாக அறிமுகமானவர்) சகோதரி.  இவரது சகோதரர்கள் மூவர் இலங்கைத் தமிழ் மக்களின் ஆயுதரீதியிலான விடுதலைப் போராட்டத்தில், விடுதலைப்புலிகள்  இயக்கத்திலிணைந்துப் போராடி  மறைந்தவர்கள்.  தற்போது ஜேர்மனியில் வாழ்ந்து வரும் சந்திரவதனா செல்வகுமாரன் ஆத்தியடி, பருத்தித்துறையைச் சேர்ந்தவர்.

ஐபிசி தமிழ் வானொலி, எரிமலை (சஞ்சிகை), ஈழநாடு (பாரிஸ்)< பெண்கள் சந்திப்பு மலர், இணைய இதழ்களான வார்ப்பு, சூரியன், பதிவுகள்,  யாழ் இணையம், வளரி ஆகியவற்றில் வெளியான கவிதைகள் இத்தொகுப்பில் இடம்  பெற்றுள்ளன.

மேலும் படிக்க ...

அஞ்சலி: நாட்டியத்தாரகை 'குச்சுப்பிடி' ரங்கா விவேகானந்தன் ஆர்ஜண்டினாவில் மறைவு! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
கலை
17 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* புகைப்படம் - India Sublime Arts

நாட்டியத்தாரகை ரங்கா விவேகானந்தன் அவ்ர்களின் மறைவை முகநூல் தாங்கி வந்தது.  ஆழ்ந்த இரங்கல். எமக்கு பரதநாட்டியம் என்றால் நாட்டியப் பேரொளி பத்மினி நினைவுக்கு வருவார்.  வையந்திமாலா நினைவுக்கு வருவார். குமாரி கமலா நினைவுக்கு வருவார். பத்மா சுப்பிரமணியம் நினைவுக்கு வருவார். இவர்கள் எல்லாரும்  அறுபதுகளில், எழுபதுகளில் நாடறிந்த நாட்டியத் தாரகைகள்.  இவர்களைப்போல் சிலரே இலங்கையில் அறியப்பட்டிருருந்தார்கள். அவர்களில் முதலிடத்தில் இருப்பவர் 'குச்சுப்பிடி' ரங்கா விவேகானந்தன். இவர் புகழ்பெற்ற நீச்சல் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தனின் சகோதரி.  இவரது சகோதரி கோகிலா வரதீஸ்வரன் கனடாவில் வசித்து வருகின்றார். ரங்கா விவேகானந்தன் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர்

மேலும் படிக்க ...

கணேஷின் கவிச்சரம்!

விவரங்கள்
- கணேஷ் -
கவிதை
17 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காலம் கீறும் கோலம்

இங்கு எல்லாமே காலம் போடும்
கோலம் தான்.

உலகத்தை நீ இயக்குவதாய்
உணர்ந்தால் அது இளமை துள்ளும்
காலம்.
எல்லாத் திசைகளிலும் சுத்தி
வருவாய் .

உலகம் இயங்கிறது நீயும்
இயங்குவதாய் உணர்ந்தால் -அது
நடுநிலைக் காலம் ,
திசையை தேர்வு
செய்து போய் வருவாய் .

உலகம் உன்னை விட்டு
இயங்குவதாய்
உணார்ந்தால் முதுமை முடக்கும்
காலம்
அறைகளுக்கு
அடைப்பட்டுக் கிடப்பாய்
அவஸ்தைகளும்
ஆனந்தங்களையும்
அசை போட்டபடியே !

மேலும் படிக்க ...

ரவி அல்லது (பட்டுக்கோட்டை) கவிதைகள்:

விவரங்கள்
- ரவி அல்லது (பட்டுக்கோட்டை) -
கவிதை
17 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI

இடைவெளி தரிசனம்.

எனக்குள்
நிறைந்து கிடந்த
சொற்களை
அங்கொன்றும்
இங்கொன்றுமாக
அடுக்கினேன்.
குவிக்கப்பட்ட
கூலாங்கற்கலாகச்
சிலரை
முகம் திரும்ப வைத்தது.
பிறகொரு நாள்
பெய்த மழையில்
காணாமல்
போனதைக் கண்டெடுத்து
நிதானமாக
செதுக்கிச் செதுக்கிச்
செருகினேன்
சொற்களாலான
கூடாரத்தை.
யாவரும்
சூழ்ந்து
வியந்த வேலையில்
நான்
செதுக்கியதெல்லாம்
சொற்களின்
இடைவெளிக்காகத்தானென்று
எச்சொல்லை
வைத்து
சொல்வது
இப்பொழுது.

மேலும் படிக்க ...

மாறுகின்ற உலகமும் அமெரிக்காவும்! – பகுதி 3 - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
17 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

உலகமே நடு நடுங்கிய, அமெரிக்காவின், தேசிய செயலாளர், அந்தனி பிளிங்கன் (2021-2025), ரஷ்ய வெளிநாட்டமைச்சர் லெப்ரோவை, சந்திக்கக் கோரியபோது, லெப்ரோவ் அதனை மறுத்து விட்டார் என்ற செய்திகள் வெளிவந்திருந்தன. உலகத்தைத் திகில்கொள்ளச் செய்த விடயம் இது. கிட்டத்தட்ட முதல் தடவையாக, இவ்வித மறுப்பானது, இவ்விரு நாடுகளுக்குமிடையே எழுவதாய் இருந்தது. “காசா-உக்ரைன்” படுகொலைகளுக்குத் தலைமை பொறுப்பு வகித்தவர் அந்தனி பிளிங்கன் என நியுயோர்க் டைம்ஸ் கோடிட்டிருந்தது (18.01.2025).

பிரதம மந்திரிகளை, தான் நினைத்தாற்போல் தனது பிரமாண்ட விமானம்தாங்கிக் கப்பல்களுக்குள் தள்ளி, அவர்களை அப்படியே முக்கி எடுத்து, பயமுறுத்துவதையே வழக்கமாகக் கொண்டிருந்த அமெரிக்காவின் வரலாற்றில், இப்படி ஒரு அவமானமா என விமர்சகர்கள் போர்க்கொடி உயர்த்தி நின்றனர். ஆனால், லெப்ரோவும் இதனுடன் நிறுத்தினார் இல்லை: “அணுவாயுத பிரயோகிப்புக்கான, சிவப்புப் பொத்தானை அழுத்த வேண்டிய தருணத்தில் நாம் யாருடனும் கதைக்க வேண்டிய அவசியம் இல்லை” என அவர் கூறியது ஒருபுறம் முகத்தில் அறைந்தது போல் இருந்தாலும், மறுபுறம், உக்ரைன் போரின் அல்லது உலக முகத்தின் மாறுதல்களை இது எமக்கு எடுத்துரைப்பதாக இருந்தது. (21.09.2024).

2

இதேதினங்களில்தான், ரஷ்ய ராணுவமானது, உக்ரைனிய போர்முனையில் பெருமளவு வெற்றி பெற்று முன்னேறியும் இருந்தது. இந்நாளிலிருந்து, கிட்டத்தட்ட, நான்கு மாதங்களுக்குள்ளாகவே, (மூன்று வருட காலப் போரில்) 97,000 உக்ரைனிய போர் வீரர்களை, கர்க்ஸ் பகுதியில் வைத்து, கொன்றொழித்து இருக்கின்றோம் என புட்டினும் அறிவிக்க நேர்ந்தது. மறுபுறம், ரஷ்யாவுக்கு எதிராக, பொருளாதார தடையானது, மேற்படி தினங்களில் (Sanctions) முற்றாகச் செயலிழந்த நிலையும் தோன்ற தொடங்கியிருந்தது. அதாவது, ஒருபக்கம் பொருளாதார தடையின் எடுபடாமை. மறுபக்கம் போர்முனையில் உக்ரைனும் நேட்டோவும், அடைந்த படுதோல்வி.

மேலும் படிக்க ...

வாழ்த்துகிறோம்: எழுத்தாளரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளருமான ஜோதிகுமாரின் புதிய நூல் '23ம் வயதில் பாரதி'

விவரங்கள்
- பதிவுகள் -
நிகழ்வுகள்
14 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளருமான ஜோதிகுமாரின்  கட்டுரைகள் பதிவுகள் இணைய இதழில் வெளிவருவது தெரிந்ததே. அக்கட்டுரைகளைத்  தாங்கிய தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவ்வகையில் வெளிவரவுள்ள தொகுப்பு  '23ம் வயதில் பாரதி'.  ஆய்வுச்சிறப்புள்ள,  பாரதியாரை பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. மகிழ்ச்சி.  பதிவுகள் அவரை வாழ்த்துகிறது.- பதிவுகள் -

இலங்கைத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை பற்றிய சிந்தனைகளும், அதனை நிரூபிப்பதில் உள்ள சவால்களும் பற்றி.... - நந்திவர்மப்பல்லவன் -

விவரங்கள்
- நந்திவர்மப்பல்லவன் -
அரசியல்
14 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில் பிராம்டன் மேயர் பற்றிக் பிரவுண் முள்ளிவாய்க்கால்  நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்தபோது இலங்கைத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை  பற்றி சில வார்த்தைகளை உதிர்த்தார். யாராவது அதனை மறுத்தால் இலங்கைக்குச் செல்லலாம் என்னும் கருத்துப்பட அவ்வார்த்தைகளை உதிர்த்திருந்தார்.  முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பேரழிவு என்ப்து மிகப்பெரிய சோகம் துயரம். மானுட அழிவு. தமிழர்களில் பெரும்பான்மையினர் அதனை ஓர் இனப்படுகொலையாகவே கருதுகின்றார்கள். பற்றிக் பிறவுண் போன்ற் அரசியல்வாதிகள் தம் அரசியல்  நலன்களுக்காக அதனைப் பாவிக்கின்றார்கள்.  ஆனால் ஏன் சர்வதேச அரங்கில் இதனை ஓர் இனப்படுகொலையாக இதுவரையில் ஏற்கச்செய்ய முடியவில்லை என்றொரு கேள்வி எழுகிறது. ஏன்?  ஏன் ஐக்கிய நாடுகள் சபையில் முள்ளிவாய்க்கால் அழிவை ஓர் இனப்படுகொலையாக அங்கீகரிக்கச் செய்ய முடியாமல் இருக்கிறது?

மேலும் படிக்க ...

முக்கிய வரலாற்றுக் குறிப்பு: யாழ்ப்பாணம் வேறு! நல்லூர் வேறு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
14 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு என்னும் எனது நூலின் இரண்டாவது அத்தியாயம் 'நல்லூரும் யாழ்ப்பாணமும்!  இதில் நல்லூரும் ராஜதானியும்  ஒன்று என்பார்கள் கலாநிதி சி.க.சிற்றம்பலம், சுவாமி ஞானப்பிரகாசர்  என்பதைச் சுட்டிக்காட்டி, ஆனால் முதலியார் இராசநாயகம் , கலாநிதி க.செ.நடராசா ஆகியோர் அவை இரு வேறானவை என்பார்கள் என்பதையும் சுட்டிக்காட்டி, அவற்றில் தர்க்க நியாயங்களின் அடிப்படையில் முதலியார் இராசநாயகம் , கலாநிதி க.செ.நடராசா  ஆகியோரின் கருத்தான நல்லூரும், யாழ்ப்பாணமும் வேறானவை என்னும் என் கருத்தை முன் வைத்திருப்பேன்.

நான் மீண்டும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வினை  மீண்டும் கனடாவிலிருந்து எழுதிய காலகட்டடத்தில் என்னிடமும் இந்நூல் இருக்கவில்லை. ஏனயோர் எழுதிய குறிப்புகளின் அடிப்படையிலெயே என் தர்க்கத்தை முன் எடுத்திருந்தேன். அதன்படி முதலியார் செ.இராசநாயகம், கலாநிதி க.செ. நடராசா ஆகியோரின் கூற்றுக்களுக்கமையவும், அவர்களின் தர்க்கத்தின் அடிப்படையிலும்,கைலாயமாலையில் யாழ்ப்பாணம், நல்லூர் ஆகியவைத் தனித்தனியாகக் குறிப்பிடப்படுவதன் அடிப்படையிலும், நல்லூர் வேறு, யாழ்ப்பாணம் வேறு என்னும் முடிவுக்கு வந்திருந்தேன்.

மேலும் படிக்க ...

நூல் வெளியீடு! 'முயன்று பார்ப்போம் மொழிபெயர்ப்பை' (மொழிபெயர்ப்பாளர்கள் - லதா ராமகிருஷ்ணன் & S.R..தேவிகா) - தகவல்: அநாமிகா -

விவரங்கள்
- தகவல்: அநாமிகா -
நூல் அறிமுகம்
13 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்த இரு தொகுப்புகளும் – ஒவ்வொன்றும் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட 40 பத்திகள்/ செய்திகள், ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 40 பத்திகள்/ செய்திகளை (மூல பத்திகள் / செய்திகளையும்) உள்ளடக்கியவை. ஆங்கிலத்திலிருந்து தமிழில் என் தோழி யும் சக மொழிபெயர்ப்பாளருமான எஸ். ஆர். தேவிகாவும், தமிழிலிருந்து ஆங்கிலத்தில் நானும் மொழி பெயர்த்திருக்கிறோம். பத்திகள்/செய்திகளைசுவாரசியமானவையாக, பயனுள்ளவையாகத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த் திருக்கிறோம்.

மேலும் படிக்க ...

சிறுகதை : முருகா ! - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
சிறுகதை
13 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


*ஓவியம் - AI

 'மயிலியப்புலக்குளம் பற்றிய​ நினைப்பு ' மனதில் வட்ட​ அலைகளை ஏற்படுத்த​ ,​ ஏக்க​ மூச்சுக்கள்   புகையாய் எழ​ அந்த​ செந்தாமரைக்   கிராமம் ...சித்திரமாக​ விரிகிறது . அவ்விடத்து வெற்றிக்கழகம் , சட்ட​ கோப்புகளை வைத்துக் கொண்டு பல​ விசயங்களை சாதித்து வருகிறது  , கோவில் வளவுக்குள் கலை நிகழ்ச்சிக்கான   மேடை ஒன்றை  அமைப்பதற்கான​​ நிதி சேகரிப்புக்காக​​ உப​ அரசாங்க​ முறையிலான​ சிரமதானம்  நடைபெற்றது , அந்த​ குளத்தில் சிறிதளவு கனமண்ணை  வெட்டிய​ போது ,  செவ்வேலும்   வேல்முருகு , பரமானந்தம் ...​ அவன் என  வகுப்பு தோழர்கள் பலருடன்  கூடையில் மண்ணை ஒருத்தர்  ,மாறி ஒருத்தரிடம் கொடுத்து குளத்து அணையில் கொட்டியது நினைவுக்கு வந்தது .  அலுவலகர்கள் வந்து வெட்டியதை பார்வையிட்டு அதற்கான​ தேனீர்ச்செலவை  கொடுப்பர் , அவ்வலுவலகத்தில்  வேலை பார்க்கிற கிராமத்தைச் சேர்ந்த​ தவபாலண்ணரின்  புத்தியில்  உதித்த   புத்திசாலித்தனம் .  தேனீர் , வடை ...போன்றவற்றை ஊர்க்காரர்களே வீடுகளிலிருந்து கொண்டு வந்து வழங்கினர்   . கிடைக்கிற​ பணத்துடன் வெளிநாட்டிலிருக்கிறவர்களும்  அதற்கு  நிதியளிக்க​ சம்மதித்திருந்தார்கள் . கூட்டு முயற்சி இல்லாமல் இப்படியான​ திட்டங்கள்  வெற்றி பெற முடியாது  .  கிராமத்தின் தலையாய​ கால்பந்துக்குழுவும் அவர்களுடையது தான் .

வந்ததிலிருந்து , இவன்  ,  அடிக்கடி   இப்படியே கிராம​ நினைப்புகளில் கரைந்து போய் விடுகிறவன் . ஈழவரசுக்கு எங்கேயிருந்து தான் ' மதம் பிடித்தது போன்ற​ அந்த​ உன்மந்தம் பிடித்ததோ ? '..., தமிழரின் வாழ்வைச் சிதைத்து சீரழித்துக் கொண்டே  செல்கிறது . 'பக்கத்திலிருக்கிறவன் வாழ்ந்தால் தானும் வாழ்வான்' என்ற​ செவ்விந்தியரின் சிந்தனை எல்லாம் கிடையாது .' இனப்பகை' என்பது பஞ்சம் பசியில் வீழ்ந்தாலும் போகாத​ வியாதி , மாறுவதற்குப் பதில் பெருகிக் கொண்டே போகிற​  ஒன்றாக​ . காந்தியின் அகிம்ஷை , புத்தரின் ஞானம் , யேசுவின் நேசம் , இந்துக்களின் ஆன்மீகம் எதிலுமே நம்பிக்கைகளை துடைத்து விடுகிற​ அறுந்த​ இவர்களின் அரசியலில் அகப்பட்டுக் கொண்டு விட்டோம் . பாலஸ்தீனர்களை அழிக்கும் இஸ்ரேல் போல் ,  கிரீக் இளைஞர்களைப் பெருமளவில் கொன்ற​ கிரீக் அரசைப் போல​ , ஈழத்திலும் கொன்ற​ ...ஒரு மாற்றப்பட​ வேண்டிய​ அரசியலாகக்​ கிடக்கிறது .

மேலும் படிக்க ...

தனித்து வாழும் என் பாட்டி! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கவிதை
13 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


பாட்டியின் இல்லம் நீ!
இந்த இல்லத்திலிருந்துதான்
என் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.
அவள் எதற்காக அங்கிருந்து
வடை சுட்டுக்கொண்டிருக்கின்றாள்
என்று அம்மாவைக் கேட்டேன்.

அதற்கு அம்மா சொன்னாள்:
'அவள் முன்பெல்லாம் இங்கிருந்துதான்
வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.
காகங்களின் தொல்லை அதிகமாகி விட்டதால்
அங்கிருந்து சுடுகின்றாள். இப்போது
அவளுக்குக் காகங்களின் தொல்லை
இல்லையல்லவா கண்ணே!'

மேலும் படிக்க ...

அஞ்சலி: திருப்பூரின் மூத்த எழுத்தாளர் தி. குழந்தைவேலு மறைந்தார்! - சுப்ரபாரதிமணியன் -

விவரங்கள்
- சுப்ரபாரதிமணியன் -
சுப்ரபாரதிமணியன் பக்கம்
11 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

            - திருப்பூரின்  மூத்த எழுத்தாளர்  அமரர் தி. குழந்தைவேலு -

ஏப்ரில் 26 சனிக்கிழமையன்று மறைந்தார்  நாவலாசிரியர், திருப்பூரின்  மூத்த எழுத்தாளர் தி. குழந்தைவேலு அவர்கள், அவருக்கு வயது 89.  திருப்பூரில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். மின்சார தொழிலாளர்கள் சார்ந்த சிறந்த நாவல்களை உருவாக்கினார். புகழ்பெற்ற எழுத்தாளர் நீல பத்மநாபன் அவர்கள் எழுதிய ’மின் உலகம்” போல் பல பரிமாணங்கள் கொண்ட நாவல்கள் அவை. விளிம்புநிலைமக்களுடைய வாழ்க்கையை,  சிரமங்களை பல சிறுகதைகளாக எழுதினார்.  சமீபத்தில் பல ஆண்டுகளாக ஒரு மாதிரி கோமோவில் இருந்தார. சுயநினைவு இல்லாமல் இருந்தார். அவருடைய படைப்புகள் எல்லாம் திரும்பத் திரும்ப மறுபடியும் மறுபிரசுரம் செய்யப்பட வேண்டும் என்று வாசகர்கள்  விரும்பினார்கள்.

காவ்யா பதிப்பகத்தில்  இரண்டுநாவல்களை கொண்டுவர முயற்சித்து வெற்றி பெற்றார்.  அவருடைய படைப்புகள் எங்கும் பதிவு செய்யப்படாத  சாதாரண மக்களின் அவலங்கள்,  அதுவும் வால்பாறை பகுதிகளில் தற்காலிக மின் ஊழியராக இருந்து  மின்விநியோக கட்டமைப்பு சார்ந்த அவரை அனுபவங்களைச்  சிறப்பாக எழுதியிருக்கிறார்.  வால்பாறை பழங்குடி மக்களின் வாழ்க்கை சார்ந்து அவரின்  சித்திரங்கள் அற்புதமானவை. திருப்பூர்  கனவு இதழில்  சிறுகதைகள் எழுதினார். செம்மலர், தாமரை. உண்மை  போன்ற இதழ்களிலும் சிறுகதைகள் கட்டுரைகள் எழுதினார். பகுத்தறிவு சிந்தனையோடு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

கனடாவில் பெனடிக்ற் பாலன் படைப்புகள் நூல் வெளியீடு! தேடல் பதிப்பக வெளியீடு! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
11 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



இன்று  'டொராண்டோ'வில் எழுத்தாளர் பெனடிக்ற் பாலனின் சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல் & குட்டிக்கதைகள் அடங்கிய  'பெனடிக்ற் பாலன் படைப்புகள்'  என்னும் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.  தமிழர் வகைதுறை வள நிலையத்தின் தேடல் பதிப்பகமும், இலங்கையிலுள்ள  தேசிய கலை இலக்கியப்பேரவையும்  இணைந்து வெளியிட்ட நூல். 

தேடல் பதிப்பகம் ஏற்கனவே 'எலும்புக் கூடுகளின் ஊர்வலம்'  (கவிதைத்தொகுப்பு), ஒரு அகதியின் பாடல்' (கவிதைத்தொகுப்பு) ,  'எல்லாப் பக்கமும் வாசல்' (நாடகம்) & செ.கதிர்காமநாதன் படைப்புகள் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நூலின் அட்டை வடிவமைப்பினை பா.அ.ஜயகரன் செய்திருந்தார், அட்டை ஓவியத்தினை செளந்தர் வரைந்திருந்தார்.

மேலும் படிக்க ...

வேகமான எழுத்துக்கும் சிந்தனைக்கும் உரித்தான மூத்த பத்திரிகையாளர் காசிலிங்கம்..! - வி. ரி. இளங்கோவன் -

விவரங்கள்
- வி. ரி. இளங்கோவன் -
நிகழ்வுகள்
11 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[மூத்த பத்திரிகையாளர் காசிலிங்கம் பற்றிய எழத்தாளர் வி.ரி.இளங்கோவனின் கட்டுரை. பாரிஸில் மே 25, 2025 அன்று அமுத விழா காணவிருக்கும் காசிலிங்கம் அவர்கள் என் எழுத்துலக வாழ்க்கையிலும் முக்கியமானவர், ஈழநாடு மாணவர் மலர் மூலம் என் எழுத்துலக வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தவர் அவர். காசி என்னும் பெயரில் அப்போது ஈழநாடு பத்திரிகையின் வாரமலரில் வெளியாகும் மாணவர் மலருக்குப் பொறுப்பாகவிருந்தவர் அவர். என் முதல் ஆக்கத்தை வரவேற்று வாழ்த்தியவர். அதுவே , அந்த ஊக்கமே அவ்வயதில் என்னை மேலும் எழுத்ததூண்டியது. அவருக்கு அமுதவிழா. அனைவருடனும் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன். - வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள். -]


அச்சு இயந்திரம் கண்டுபிடிப்பு அறிவுலகத்தில் ஒரு பெரும் புரட்சியைச் செய்தது. கருத்துப் பரவலுக்கு நூல்கள் - பத்திரிகைகள் முதன்மைக் கருவிகளாயின. ஈழத்தி;ல் அமெரிக்க மிசனரிமார் முதன்முதலாக 1841 -ல் (07 - 01 - 1841) 'உதயதாரகை" (Morning Star) என்னும் பத்திரிகையை ஆரம்பித்தனர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இது வெளிவந்தது. இதன் ஆசிரியராகக் கரோல் விசுவநாதபிள்ளை விளங்கினார் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

1930 -ல் 'யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸின்" பகிஸ்கரிப்புக் கோரிக்கைக்கு வலுவூட்டும் அரசியல் கருத்துகளுடன் 'ஈழகேசரி" வெளிவந்ததாக கூறுவதுண்டு. ஈழத்தின் அரசியல், சமூக, பொருளாதார,  இலக்கிய வளர்ச்சியில் மிகக் கவனம் செலுத்திய ஈழகேசரி இருபத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. ஈழத்தில் நவீன தமிழ் இலக்கியத்தின் ஆரோக்கியமான ஆரம்பத்திற்குத் தளமாக ஈழகேசரி அமைந்து படைப்பாளிகளை இனங்காண வைத்தது என்றால் மிகையல்ல.

நாளேடுகளாக 1930 -ல் வீரகேசரியும் 1932 -ல் தினகரனும் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரத் தொடங்கின. வேறு சில நாளேடுகளும் வெளிவரத்தொடங்கி சிறிது காலத்திலேயே அவை நிறுத்தப்பட்டுவிட்டன.

மேலும் படிக்க ...

மாறுகின்ற உலகமும் அமெரிக்காவும்! – பகுதி 2 - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
10 மே 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - செயற்கைத் தொழில் நுட்பம்.

உக்ரைனின் தேர்வு:

தனது சொந்தத் தலையிடிகளால், பெரிதும் அவஸ்தைப்பட்டுப்போன அமெரிக்கா, தன் வெளிநாட்டுக் கொள்கையுடன் உள்நாட்டுக் கொள்கையையும் உடனடியாக மாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியது. முக்கியமாக, அது தான் எதிர்ப்பார்த்த போர்முடிவை உக்ரைனில் காணக்கிட்டாதது ஒரு காரணமாக இருக்கலாம்.

1963இல், தான் மூடிய தனது கொடூர சிறைகளில் ஒன்றான ALCARTANZNI யை, ட்ரம்ப் மீள திறந்து வைத்து உரையாற்றினார் (05.05.2025). ஆயிரம் காரணங்களை அவர் தேர்ந்து அடுக்கினாலும், அமெரிக்க எழுச்சிகளை கட்டுப்படுத்த மேற்படி திறப்பு விழா தேவையானதுதான் என நிபுணர்கள் கூறுவதாய் உள்ளது. அதாவது, “சுதந்திர அமெரிக்கா” என்ற கனவு எப்போதோ செத்துத்தொலைய, இன்று கை-கால் விலங்குகளுடன், இந்திய மாணவர்கள் 24 மணி நேரத்தில், விமானமேற்றி அனுப்பி வைப்பது அமெரிக்க தர்மமானது. ஆனால், 10 வருடங்களின் முன்னரேயே, உக்ரைனானது இவ்வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் விதி தீர்மானிக்கப்படுகின்றது (2014). (அதாவது, 2009இன் முள்ளிவாய்க்கால் தீர்மானிக்கப்பட்டது போல).

2019இல் வெளியிடப்பட்ட RAND COPERATION அறிக்கையின் பிரகாரம் உக்ரைனை மேலும் ராணுவ ரீதியில் பலப்படுத்துவதும் அதற்காக மேலும் ஆயுதங்களை அதற்கு அனுப்பி வைப்பதும் முக்கியமானது என்று கூறப்பட்டது (அதாவது 2019லேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்படுகின்றது). எனவேதான், நச்சுக் கிருமிகளை உலகம் முழுவதும் பரப்பிப் தள்ளும் பயோ லெப்களை (BIO LABS) உருவாக்கி, கோவிட் போன்ற ஆட்கொல்லி தொற்றுக்களை உருவாக்க தேவையான லெப்கள் உருவாக்கப்படுகின்றன. இதனை மேற்கானது, ஆதியோடு அந்தமாக மறுத்திருந்த போதிலும் கென்னடி (ஜுனியர்- 2024 ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவர்) இது உண்மை என்றும் BIO LABSகள் உக்ரைனில், அமெரிக்காவால் ஸ்தாபிக்கப்பட்டன என்பதில் உண்மையுண்டு எனவும் கூறினார்.

இது ஒருபுறம் இருக்க, உக்ரைனின் அரசியல் அமைப்பினை மாற்றுவதும், தனக்குத் தோதான ஓர் அரசை அங்கு நிறுவுவதும், பெருந்தேசியவாதமான நாசிசத்தை அங்கே வேரூன்றச் செய்வதும் அடிப்படைகளாகின்றன.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. கவிஞர் அம்பியின் பேத்தி அஷ்வினி அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்திற்கு தெரிவு ! - முருகபூபதி -
  2. எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள் பற்றிய ஓர் ஆய்வு - சிவகலை சிவப்பிரகாசம், வவுனியா.
  3. பயனுள்ள மருத்துவக் காணொளிகள் இரண்டு: இருதய மருத்துவ நிபுணர் எஸ். இராமசாமியுடனான (Dr. S Ramasamy) ஒரு நேர்காணல் மற்றும் Dr. Pradip Jamnadas, MD இன் காணொளி! - வ.ந.கிரிதரன் -
  4. வானம் சிவக்கப் பாடிய கவிஞன் புதுவை இரத்தினதுரை நினைவலைகள்! - வி. ரி. இளங்கோவன் -
  5. இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 49 - “நூல்களைப் பேசுவோம்”
  6. கவிதை: குருமண்காடு! - வ.ந.கிரிதரன் -
  7. மாறுகின்ற உலகமும் அமெரிக்காவும்! - ஜோதிகுமார் -
  8. சிந்தனைக்களம்- ‘இசையும் கற்பனையும்’
  9. ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - "இந்தியத் தத்துவ இயலில் திருக்குறளின் வகிபாகம்"
  10. வாசிப்புப் பகிர்வு: Homecoming ஊர் திரும்பல்! - தகவல் - ஶ்ரீரஞ்சனி -
  11. விருந்து : சமூக மதிப்பும் மாற்றமும்! - முனைவர் அ. கார்வண்ணன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, சென்னை. -
  12. பேராசிரியர் சி.மெளனகுருவின் கடிதம்.....
  13. பீஸ்மப் பிரதிக்ஞை ஓரங்க நாடகம்! - மு.இளையராஜா -
  14. பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
பக்கம் 3 / 107
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி