'அகதியின் பேர்ளின் வாசல்' நாவல் வெளியீடு, கனடா, Scarborough நகரில், 29 July 2023 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, தமிழ்ச்சேர்ச் மண்டபம், Immaculate Heart of Mary Church. 131 Birchmount Rd, Scarborough, ON MIN 3J7 என்னும் முகவரியில் நடைபெறும். -


அடொல்ஃப் ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பின்னர் பரந்துபட்ட ஜேர்மன் பிரதேசம், இரண்டு நாடுகளாயின!

1949 தொடக்கம் 1990 வரை சோவியத்தின் கண்காணிப்பின் கீழே, ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு என்ற பெயரில் கிழக்குஜேர்மனியும் அமெரிக்கா, பிரான்ஸ், பெரியபிரித்தானியா, ஆகிய நாடுகளின் ஆதிக்கத்தின் கீழே, மேற்குஜேர்மனி என அழைக்கப்பட்ட பிரதேசம் ஜேர்மன் சமஷ்டிக் குடியரசாகவும் பிளவுபட்டிருந்தன. இந்தக் காலகட்டத்தில், 1974 முதல் 1980 வரை, கிழக்கிலும் பின்னர் தொடர்ந்து 1986 இறுதிவரை மேற்கிலும் வாழ்ந்து, அங்குள்ள பல்கலைக் கழகங்களில் படித்திருக்கிறேன். பணிபுரிந்திருக்கிறேன். அந்தவகையில் எனது கல்வி அங்கு ஜேர்மன் மொழியில் அமைந்திருந்தது.

இக்காலகட்டத்தில், தொழிற்கல்விக்குப் புறம்பாக கிழக்குஜேர்மனியில் நான் கற்ற சோசலிச, கம்யூனிச படிப்பறிவும் மேற்குஜேர்மனியில் நான் பெற்ற முதலாளித்துவ பட்டறிவும், பிளவுபட்ட ஜேர்மனி பற்றிய பூரண விளக்கத்தை எனக்குத் தந்தது.

1977 ஆம் ஆண்டு ஐக்கியதேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழர்களை இலக்கு வைத்து, இலங்கையில் இனக்கலவரம் நடத்தப்பட்டது. 1958 இனக் கலவரத்துக்குப் பின்பு இலங்கையில் இடம்பெற்ற நாடளாவிய இனக்கலவரம் இதுவாகும். 1977 ஓகஸ்ட் பதினைந்தாம் திகதியிலிருந்து இரண்டு வார காலங்களுக்கு நீண்ட இக்கலவரத்தில் இலங்கையின் பலபாகங்களிலும் வாழ்ந்த தமிழர்கள், உயிரிழப்புக்கள் உள்ளிட்ட பல பாதிப்புக்களைச் சந்தித்தார்கள். இதனைத் தொடர்ந்தே இலங்கைத் தமிழர்கள் படிப்படியாகப் பூமிப் பந்தெங்கும் புலம்பெயரத் தொடங்கினார்கள்.

இதன் பின்னர் நடந்ததுதான் கறுப்பு ஜூலை அல்லது ஆடிக்கலவரம் எனப் பரவலாக அறியப்பட்ட 1983ம் ஆண்டு இனக்கலவரம். இதுவே தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய, பாரதூரமான இனக்கலவரமாகும். இதன் தொடர்ச்சியாக இலங்கைத் தமிழர்கள் பெருமளவில் மேற்கு ஐரோப்பாவை நோக்கி புலம்பெயரத் துவங்கினார்கள். இதற்கு வசதியாக அமைந்தது உலக அகதிகள் இறங்குதுறையாக அக்காலத்தில் செயற்பட்ட கிழக்குபேர்ளின் நகரம். இதுவே கிழக்குஜேர்மனியின் தலை நகரமாகவும் விளங்கியது.

சோவியத்தின் செல்வாக்கின் கீழிருந்த கிழக்குஜேர்மனியின் பொருளாதாரத்தில், மேற்குஜேர்மனி புகுந்து விளையாடி நெருக்கடி கொடுக்க, வந்திறங்கும் அகதிகள் மூலம் மேற்குர்ஜேமனிக்குத் தொல்லை கொடுத்தது கிழக்குஜேர்மனி. இதற்கு பிளவுபட்ட ஜேர்மனியின் பூகோள அமைப்பும், பேர்ளின் நகரம் குறித்த பொட்ஸ்டம் உடன்படிக்கை விதிகளும், வசதியையும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தன.

மேற்குபேர்ளின் நகரம் கிழக்குஜேர்மனிக்குள் இருந்தாலும், அது மேற்குஜேர்மனியின் ஆளுகைக்கு உட்பட்டதால், மேற்குபேர்ளினுக்குள் வந்து சேர்ந்துவிட்டால், மேற்குஜேர்மனியில் வசிப்பதற்கான அகதி அந்தஸ்துக் கோருதல் சாத்தியமாக அமைந்துவிடும். பின்னர் அங்கிருந்து வேறு பல மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், தரை எல்லையை கடந்து சென்றடைதல் அப்போது சாத்தியமாக இருந்தது. 1980ம் ஆண்டுகளில் நடைமுறையில் இருந்த ஐரோப்பிய நாடுகளின் குடிவரவு விதிகளில், தற்போது புகுத்தப்பட்டுள்ள கெடுபிடிகள் இருக்கவில்லை. எனவே அகதிகள் பிரான்ஸ், சுவிஸ், ஒல்லாந்து, டென்மார்க் நோர்வே என்றும், பின்னர் அங்கு தமது வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக்கொண்டு பிரித்தானியா, கனடா என ஆங்கிலம் பயிலும் நாடுகளுக்குப் பெயர்தல் சாத்தியமாயிற்று.

பிளவுபட்ட ஜேர்மனிகள் 1990ம் ஆண்டு இணையும் வரை பூமிப்பந்தெங்கும் தமிழன் புலம்பெயர்வதற்கு நுழைவாயிலாக அமைந்தது கிழக்குபேர்ளினும், அதனுடன் இணைந்த மேற்குபேர்ளினின் பூகோள அமைப்புமே என்பது இதுவரை பதிவு செய்யப்படாத உண்மையாக உள்ளது. மேற்கு பேர்ளின் Tegal என்னுமிடத்தில் துவங்கும் ஆறாம் இலக்க சுரங்க இரயில் பாதையொன்று, கிழக்கு பேர்ளின் நிலப்பரப்பின் கீழாகச் சென்று மேற்கு பேர்ளினிலுள்ள Alt-Mariendorf என்னுமிடத்தில் முடிவடைந்தது. (இப்பாதையில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன). இச்சுரங்க இரயில் பாதையில் கிழக்கு பேர்ளினுக்குள் வரும் ஒரு சில சுரங்க இரயில் நிலையங்களுள், Friedrich Strasse என்னுமொரு நிலையத்தை தவிர மற்றைய நிலையங்களை கிழக்கு ஜேர்மன் அரசு மூடிவிட்டது. Friedrich Strasse சுரங்க நிலையத்தூடாக வெளிநாட்டவரும், பிரயாணம் செய்ய அனுமதிக்கப்பட்ட மூத்த பிரஜைகள் என அழைக்கப்பட்ட அறுபத்தைந்து வயதை தாண்டிய கிழக்கு ஜேர்மன் முதியவர்களும் மாத்திரம், மேற்குபேர்ளினுக்குப் பிரயாணம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள்.

சோவியத் விமானங்கள் மூலம் பெருந்தொகையாக, கிழக்கு பேர்ளின் சோர்ணபெல்ட் விமான நிலையம் வந்திறங்கும் உலக அகதிகளுக்கு கிழக்குஜேர்மன் அரசு ஒரு நாள் விசா கொடுத்து Friedrich Strasse சுரங்க ரயில் நிலையத்துக்கு வழிகாட்டி மேற்குபேர்ளினுக்கு செல்ல அனுமதித்தது. போக வழி தெரியாது, கிழக்குஜேர்மனிக்குள் அலைந்து திரிந்த அகதிகளை விசா காலாவதியாகமுன் தேடிப்பிடித்து Friedrich Strasse சுரங்க நிலையத்திற்கு கொண்டு வந்து வழிகாட்டும் பொறுப்பினையும் கிழக்குஜேர்மன் பொலீசார் ஏற்றிருந்தார்கள். ஐந்து நிமிடங்களுக்கு ஒன்றாக, ஆறாம் இலக்கப் பாதையூடாகச் செல்லும் சுரங்க இரயில் ஊடாகவும், S-Bahn எனப்படும் தரைவழி இரயில் மூலமாகவும், மேற்குபேர்ளின் மக்களோடுமக்களாகச் செல்லும் அகதிகளை, மேற்குபேர்ளின் எல்லையில் தடுத்து நிறுத்த மேற்குபேர்ளின் அரசால் முடியவில்லை. அகதிகளின் வரவை கட்டுப்படுத்துவதாயின் இந்தச் சுரங்க இரயிலில் பிரயாணம் செய்யும் ஜேர்மனியர்கள் உட்பட எல்லாப் பிரயாணிகளையும் சோதனையிட வேண்டும். ஐந்து நிமிட இடைவெளியில் வரும் இரயில்களிலே முழுமையான தேடுதல் சாத்தியப்படவில்லை. பேர்ளின் நகர் பற்றி பொட்ஸ்டம் உடன்படிக்கையில் உள்ள ஓட்டைகள், அகதிகளின் இலகுவான புலப்பெயர்வுக்கு இவ்வாறு வழிவகுக்கும் என, கொள்கை வகுத்தோர் அன்று உணர்ந்திருக்க நியாயமில்லை.

சோவியத்யூனியனும் கிழக்குஜேர்மனியும் அகதிகள் விடயத்தில், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்ததை ஊன்றிக் கவனித்தவர்களுக்கு நன்கு விளங்கும். பெருந்தொகை அகதிகள் ரூஷ்ய Aeroflot விமானத்தில் பறந்ததின் மூலமும், ஒருநாள் கடவை விசாவுக்கு கிழக்குஜேர்மன் அரச நிர்வாகம் அமெரிக்க டொலரில் பணம் அறவிட்டதின் மூலமும் பெருந்தொகையான வருமானம் பெற்றார்கள். கிழக்குஜேர்மனிக்குள் இருக்கும் குப்பைத் தொட்டியாக மேற்குபேர்ளினைப் பாவித்து பல்லாயிரக்கணக்கான உலக அகதிகளை வகை தொகையின்றி மேற்குபேர்ளினுக்குள் தள்ளித் தொல்லை கொடுத்தார்கள். இதனால் எண்பதாம் ஆண்டுகளில் சுற்றி வர மதில்சுவரால் தனிமைப்படுத்தப்பட்ட மேற்குபேர்ளின் நகரம் அகதிகளால் நிரம்பி வழிந்தது. அகதிகளின் இத்தகைய படையெடுப்பு மேற்குஜேர்மன் அரசுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்தது.

உழைக்க வந்தவர்கள், முன்பின் தெரியாதவனை மணம் முடிக்க வந்த இளம் பெண்கள், கணவனுடன் சேரவந்த மனைவிகள், அவர்களின் பிள்ளைகள், வெளிநாட்டில் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்றே அறியாத இளைஞர்கள், இராணுவ முகாமில் விசாரணை இன்றித் தடுத்து வைக்கப்பட்டுப் பின் விடப்பட்டவர்கள், தேடப்பட்டவர்கள், போராளிகளாக இருந்தவர்கள் என நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்ட கோலத்தில் கிழக்குபேர்ளின் சோர்ணபெல்ட் விமான நிலையத்தில் வகைவகையாக வந்து இறங்கினார்கள். இவர்கள் எல்லோருக்குமான பொதுவான நோக்கம், அரசியல் தஞ்சம் கோரி விசா எடுப்பதே!

அகதிகளாக வந்தவர்களில் பலருக்கு இதுவே முதலாவது விமானப் பறப்பாக இருந்தது. மேற்குபேர்ளினின் மையப் பகுதியான சூலோகிச-கார்டன், கூபெஸ்டர்டம் என்பன அருகருகே இருக்கும் பிரதான வணிக இடங்கள். இங்குதான் மேற்குபேர்ளினிக்குள் நுழைந்த அகதிகள் ஒருகட்டத்தில் ஆயிரக் கணக்கில் வந்து குவிந்தார்கள். ஜேர்மன் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் பொட்ஸ்டம் உடன்படிக்கையை முன்னிறுத்தி சாதகமாகவும் பாதகமாகவும் செய்திகள், கட்டுரைகள் வெளியிட்டன. சில ஊடகங்கள் வெறுப்பை உமிழ்ந்தன. அகதிகள் வீதியோரம் அமர்ந்திருந்த காட்சி உலகமெங்கும் ஒளிபரப்பப்பட்டது. அகதிகள் மீது ஊடக வெளிச்சம் பட்டவுடன் மேற்குஜேர்மன் அரசும் மேற்குபேர்ளின் நிர்வாகமும் விழித்துக்கொண்டன. வெவ்வேறு இடங்களில் தனித்தனியான முகாம்களை அமைத்து இவர்களை அப்படியே அள்ளிக் கொண்டுபோய் விட்டார்கள்.

இலங்கையிலிருந்து வந்தவர்களுள் பெரும்பாலானோருக்கு தமிழைத் தவிர வேறு மொழிகள் தெரிந்திருக்கவில்லை. ஜேர்மனியில் ஜேர்மன்மொழி தவிர்ந்த எந்த மொழியும் செல்லாக்காசு. இத்தகைய நிலைமையைச் சமாளிக்கவும் அரசியல் தஞ்ச விசாரணைகளை மேற்கொள்ளவும் ஜேர்மன் அரச நிர்வாகத்துக்கு, தமிழும் ஜேர்மன் மொழியும் நன்கு தெரிந்த ஒருவர் தேவைப்பட்டார். மேற்குபேர்ளின் பல்கலைக்கழகம் ஒன்றில் டாக்டர் பட்டத்துக்கான படிப்பையும் ஆராய்ச்சியையும் ஜேர்மன் மொழியில் மேற்கொண்டிருந்த நான் பல்கலைக்கழக அனுமதியுடன் மொழிபெயர்ப்புப் பணிக்கு அமர்த்தப்பட்டேன். இந்தவகையில் எண்பதுகளில் புலம் பெயர்ந்தோரில் கணிசமானவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கும் இலாகாக்களிலும் சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றங்களிலும் அரச மொழிபெயர்ப்பாளராக நான் பணிபுரிந்திருக்கிறேன்.

கிழக்குபேர்ளின் இறங்குதுறையைப் பாவித்து மேற்குபேர்ளினூடாக பூமிப்பந்தெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலருக்கு பிளவுபட்ட ஜேர்மனியின் பூகோள அமைப்போ அல்லது தங்கள் நுழைவுக்கு வசதி செய்த பொட்ஸ்டம் உடன்படிக்கை பற்றியோ, இன்றுவரை தெரியாதிருக்கலாம். இந்த வரலாற்றுத் தகவல்கள் தமிழ்மொழியில் பதியப்படாதவை. இதனை மனங்கொண்டே இவ்வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டது. நாவலில் வரும் பல சம்பவங்களுக்கு நான் நேரடி சாட்சியாக இருந்துள்ளேன். நாவலில் சொல்லப்பட்ட வரலாற்றுத் தகவல்கள் அனைத்தும் புனைவு கலந்து கதைமாந்தர்கள் ஊடாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

'அகதியின் பேர்ளின் வாசல்' நாவல் வெளியீடு, கனடா, Scarborough நகரில், 29 July 2023 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, தமிழ்ச்சேர்ச் மண்டபம், Immaculate Heart of Mary Church. 131 Birchmount Rd, Scarborough, ON MIN 3J7 என்னும் முகவரியில் நடைபெறும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here