சமீபத்தில் நடேசன் அவர்களின் அந்தரங்கம் சிறுகதை தொகுப்பு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடேசன் அவர்களை எனக்கு எப்படி தெரியும் என்று எண்ணி பார்க்கிறேன். படித்ததில் பிடித்தது என்ற ஓர் நிகழ்ச்சி, அதில் கவிஞர் சல்மா அவர்கள் வாழும் சுவடுகள் என்ற புத்தகத்தை அறிமுகம் செய்து அதை எழுதியவர் Melbourne இல் வசிப்பதாக சொன்னார். பிறகு முருகபூபதி அய்யா மூலமாக அறிமுகம் கிடைத்து நடேசன் அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஓரிரு முறை பேசியுள்ளேன். ‘நைல் நதிக்கரையோரம்’ என்ற அவரது புத்தகத்தை வாசித்துள்ளேன். அந்தரங்கம் வாசித்த பிறகு அவருடைய அனைத்து எழுத்துகளையும் வாசிக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன். இந்த புத்தகத்தை பற்றிய என் வாசிப்பனுபவம் அனைத்தும் முழுக்க அவரின் படைப்பின் மூலமாக நான் அடைந்ததே தவிர அவரை தெரியும் என்பதால் எழுதும் புகழுரை அல்ல.

அசாதாரணங்களின் கதை என்று கருணாகரன் அவர்கள் முன்னுரை வழங்கி உள்ளார். அதை வாசித்து உள் செல்வது நன்று. இலங்கை எழுத்தாளர்கள் தமிழகத்தில் அதிகம் பாவிக்க படாத சொற்களுக்கு அடி குறிப்பிடலாம் என்ற கருத்துக்கு, இலங்கை எழுத்தாளர்களை தொடர்ந்து வாசிப்பதனால் எனக்கு அடி குறிப்பு தேவைபடவில்லை. வாசகனாக சிறு உழைப்பும் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்த புத்தகத்தில் என்னை பாதித்த ஒரு எழுத்தாளர் touch என உணர்ந்த ஆறு இடங்களை பகிர்கிறேன்.

    தீர்ப்பெழுதும் ஊர்: ‘ஒரு தாய் உறங்குகிறாள்’ என்ற கதை. திருமணமாகியும் தனியாக வாழும் ஒரு பெண். அவளை அந்த ஊர் பல விதங்களில் பேசுகிறது. அவளை ‘பொதுக்கிணறு’ என்று கூறுகிறது. அவள் இறந்த பின்பு தேவாலயத்தில் அவள் உடல் கிடத்தி வைத்திருக்கும் பொழுதில், இந்த கதை சொல்லியான ஆணுக்கு, 'இவள் இந்த ஊரிலேயே உருண்டு திரண்ட கால்களும், நடந்தால் பாதத்தின் சிறுவிரல் தரையில் படாது’ என்ற நினைவு எழுகிறது. இதில் என்ன எழுத்தாளரின் நுட்பம் என கேள்வி எழலாம். ஆனால் என் பார்வையில் ஊரே தவறாக பேசும் ஒரு பெண்ணை அவள் வாழ்த்த காலத்தில் ஒரு ஆண் எப்படி எல்லாம் கண்டிருக்கிறான், அவள் இறந்த பின்னும் அவனுக்கு அவள் பற்றிய எது முதல் நினைவாக எஞ்சுகிறது என்பதை தொட்ட நுட்பமான இடமாக காண்கிறேன்.

இதே கதையில், இறந்த பெண்ணை இங்கு புதைக்க கூடாது என போர்க்கொடி தூக்குபவளும் ஒரு பெண் தான் ஆண் அல்ல. இதை அந்த பெண் வெளிப்படுத்தும் இடமும் நுட்பம். அவள் தன் சேலையை இருமுறை சரி செய்து கொண்டு பிறகு இறந்த பெண்ணை இங்கு புதைக்க வேண்டாம் என சொல்லிய இடத்தில், மற்றவர் மேல் குற்றம் சுமத்தும் முன் தான் புனிதமானவள் என நிறுவும் மனித மனதின் செயல்பாட்டை எழுதிய இடம் நுட்பம்.

‘The Brothers Karamazov’ நாவலில் ' Elder Zossimov' என்ற பாதிரியார் அவர் வாழ்ந்த ஊருக்கு நல்லது செய்து வாழ்வார். ஆனால் அவர் இறந்த பின்பு அவர் உடலில் இருந்து சிறு துர்நாற்றம் வரவும் அவர் கறை படிந்தவர் என அவர் வாழ்த்த ஊர் பேசும். எல்லாருக்கும் நல்லது செய்து வாழ்ந்த மனிதருக்கே அந்த நிலை என்றால், ஊர் தவறாக பேசிய ஒரு பெண்ணை அவள் வாழ்ந்த பொழுது மட்டுமல்ல அவள் இறந்த பிறகும் ஊர் தீர்ப்பு எழுதத்தான் செய்யும்.

    காமம் சார்ந்த கதைகள்: இந்த சிறுகதை தொகுப்பை இரண்டு பிரிவுகளாக வகுக்கலாம். ஒரு பாதி கதைகள் போரும், போரினால் அழிந்த வாழ்வும், போர் முடிந்த பின்னும் போர் துரத்தி எழுதும் வாழ்வை பற்றியது. மறுபாதி கதைகள் மனிதனின் காமம் சார்ந்தது. காமம் சார்ந்த கதைகள் என்றால் ‘Georges Bataille’ யின் ‘story of the eye’ போன்ற ‘Erotic fiction’ கதைகள் அல்ல. அதுபோன்ற மொழியை தமிழ் சிறுகதைகளில் எழுத முடியுமா என்று தெரியவில்லை, அப்படியே எழுதினாலும் அவை தீவிர இலக்கியத்தில் சேர்த்து கொள்ளப்படுமா என்று தெரியவில்லை. ஆனால் நடேசன் அவர்களின் இந்த தொகுப்பில் உள்ள காமம் சார்ந்த கதைகள் , மனித காமத்தின் உளவியலையும், சமூகம் மற்றும் குடும்பம் என்ற அமைப்பிற்குள் வாழும் மனிதன் காமத்தை சரியாக கையாள வேண்டிய அவசியத்தையும், அப்படி கையாளவில்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பல இடங்களில் நுட்பமாக எழுதியுள்ளார்.

இந்த தொகுப்பில் உள்ள காமம் சார்ந்த கதைகள் ஆண்/பெண் மற்றும் பெண்/பெண் உறவுகளாக பயணிக்கிறது. ஆனால் ஒரு வாசகனுக்கு, இந்த கதைகளின் வெளியே பெண் உடல் மீது இந்த சமூகம் செலுத்தும் ஆதிக்கத்தை நினைவு படுத்திக்கொன்டே சென்றது. இங்கு சமூகம் என நான் குறிப்பிடுவது ஆண் மட்டுமல்ல, இதில் பெண் , புனிதம் என பல காலமாகவே நமக்குள் புகுத்தப்பட்ருக்கும் கற்பிதங்கள், பொருளாதார ஏற்ற தாழ்வுகளும் அடங்கும்.

உதாரணமாக, கல்லூரி படிக்கும் பெண் அவளின் அன்றாட மற்றும் படிப்பு செலவிற்காக வாரத்தில் ஒரு நாள் விபச்சாரம் செய்கிறாள். ‘Bangkok’ நகரில் பாலியல் தொழில் செய்யும் பெண் அங்கு தன் வாழ்நாள் முழுதும் செய்யும் தொழிலை ஆஸ்திரேலியாவில் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் செய்தால் பணம் சம்பாதித்து விடலாம் என எண்ண, அவளது இந்த நிலையை பயன்படுத்தி அவளை சுரண்டும் ஒரு ஆண். தன் மனைவியை பார்த்துக்கொள்ள வரும் ஒரு பெண்ணிடம் உறவு கொள்ளும் ஆண், அது தெரிந்தும் ஏற்றுக்கொண்டு அதற்கு தன் உடல்நிலை தான் காரணம் என பொறுத்துக்கொள்ளும் பெண். அந்த ஆண் நிலையில் அந்த பெண் இருந்தால் அதை உலகம் ஏற்றுக்கொள்ளுமா? அல்லது அவளது கணவன் ஏற்றுக்கொள்வானா? இப்படி பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் இந்த சமூகத்தை , சமூகத்தின் விதிமுறைகளை, அரசின் கொள்கைகளை வகுப்பவர்களின் கண்களில் விழாமல் போகும் மனிதர்களை, குடும்பம் என்னும் நிறுவனத்தின் அழுத்தங்களை எல்லாம் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

இது போல் கதை ஒரு வழியில் பயணிக்க, வாசகனுக்கு சிந்திக்க இடம் அளித்து எழுதுவது நுட்பம். ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் குடிகார தந்தைக்கு பிறந்த சோபியா என்ற பெண் குடும்ப வறுமை காரணமாக விபச்சாரம் செய்ய, நாள் முழுதும் நின்று வீடு திரும்பும்போது கால் வலியுடன் உறங்க செல்வாள். அப்போது அவளது தாய் காலை அழுத்தி விட முயல, நான் செய்யும் பாவத்திற்கு தண்டனை கால் வலி என சோபியா சொல்ல, உன் பாவத்தில் எனக்கும் பங்குண்டு, அதனால் அனுமதி என தாய் சொல்வாள். இந்த கதைகளில் வரும் பெண்களை வாசிக்கும் பொழுது, அவர்கள் நிலைமைக்கு மறைமுகமாக நமக்கும் சிறு பங்கு உண்டு என்றே தோன்றுகிறது. காலை அழுத்தும் வாய்ப்பு கிடைத்தாலும் அழுத்தலாம். தவறில்லை.

    பதற வைத்த கதை: பதுங்குகுழி என்ற கதை. என்னை மிகவும் பாதித்த கதை.போரின் களத்தில் தந்தையே மகளை புணரும் சம்பவம் கொண்ட கதை. இதை எல்லாம் எழுத தேவை உள்ளதா என கேள்வி எழலாம். 2500 வருடங்களுக்கு முன்னே 'Oedipus Rex’ இல் எழுதப்பட்டதுதான். அதில் கூட தாய் என தெரியாமல் மகன் தாயை மணந்து கொள்கிறான். இங்கே தெரிந்தே தந்தை மகளை புணருவது நெஞ்சை பதைக்க வைத்த இடம்.

சிங்கள ராணுவ தாக்குதலில் தந்தையையும் மகனையும் பறிகொடுத்த பின்பு, "உன் சண்டை இயக்கத்துடன் என்றால் ஏற்றுக்கொள்ள முடிகிறது ஆனால் இந்த குழந்தையுடன் நீ ஏன் சண்டையிடுகிறாய்? இந்த குழந்தைக்கு தமிழ் கூட இன்னும் தெரியாது. தமிழை விடு இன்னும் இந்த குழந்தைக்கு அழ கூட தெரியாது என கோவப்படும் தாய், அதே சிங்கள ராணுவ வீரன் உயிருக்கு போராடும் வேளையில் தன் பாலை அவனுக்கு நீராக கொடுத்து காப்பாற்றும் இடம் நெஞ்சை தொட்டது.

கடைசியில் அந்த ராணுவ வீரன் நீ திருமணம் செய்து கொண்டால் உன்னை பின்தொடர்வதை விட்டு விடுவேன் என கூறுவது வேறு எங்கும் இதுவரை நான் வாசித்திராதது. நாளை இறந்து விடுவாய் என்றால் இன்று நீ மிருகமாக மாறலாமா? என்ற கேள்வி கொண்ட கதை. இந்த கதையில் இன்னும் பல இடங்கள் வாசிப்பவரை அலைக்கழிக்கும். இந்த புத்தகத்திலேயே என்னை மிகவும் பாதித்த கதை.

    இதிகாசங்கள் மற்றும் தொன்மங்கள்: பல கதைகளில் ராமாயணம், மகாபாரதம், விவிலியம் போன்ற மதம் மற்றும் இதிகாசம் சம்பந்தபட்ட கோணங்களை மிக பொருத்தமாக பயன்படுத்தியுள்ளார். இதிகாசங்கள் மேல் ஆர்வம் இருந்தால், கதையில் கூறப்பட்டுள்ள கோணத்தை தாண்டியும் நீங்கள் சிந்திக்க கூடும். உதாரணத்திற்கு ஆஸ்தி எரித்து ஆத்மா சாந்தி செய்வது முதலில் சகுனி போன்ற கெட்ட ஆத்மாக்களுக்கே செய்ய வேண்டும் என்ற புள்ளியை ஒரு கதையில் இணைத்த விதம் அருமை.

    துறை சார்ந்த தகவல் மற்றும் பார்வை: ஒரு மிருக வைத்தியர் என்பதை உணர்த்தும் இடங்கள் பல கதைகளில் மின்னின. பிரேத பரிசோதனை செய்த நாயை அவிழ்க்காமல் புதைப்பது. ‘Shark Fin’ சூப் குடிக்கும்பொழுது, கதையின் பாத்திரம் இது வளர்க்கப்பட்டதா அல்லது பிடிக்கப்பட்டதா என கேட்கும் இடம். சில நாடுகளில் சுறா மீன்கள் பிடிக்கப்பட்டு அதன் ‘Fin' மட்டும் வெட்டி எடுக்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்படுகிறது. ஒரு சாதாரண மனிதனாக இந்த செய்தியை கடந்து விடலாம் ஆனால் ஒரு மிருக வைத்தியராக இருப்பதால் இந்த செய்தியை ஒரு புனைவு கதையில் பொருத்தியிருக்கிறார்.

    ரசிக்கும்படியான இடங்கள்: கனமாக செல்லும் கதைகளின் ஊடே மெல்லிய ரசிக்கும்படியான இடங்களும் இல்லாமல் இல்லை.

    மழைக்கு சரியும் கூரையை குட்டி போட்ட ஆடு உட்காருவது போல் எனும் இடம்

    மழை இல்லாத நிலத்தில் சிறிது மழை பெய்தவுடன் கல்யாண வீட்டில் பன்னீர் தெளிப்பது போல எனும் இடம்

    நீண்ட நாட்கள் கழித்து பார்க்கும் பெண்ணை அந்த காலத்து ஐஸ்வர்யா குஷ்பூவாக மாறியிருந்தாள் எனும் இடம்.

    பத்து மாத கோடை இரண்டு மாதங்களுக்கு விராட தேசத்தில் ஒழிந்த பாண்டவர்களாக எனும் இடம்.

    சித்திரை மாதத்து வெயில் உடலில் ஜிகினா பொடியாக என்ற இடம்.

    மறதி என்பது துர்வாச முனிவர் சாபத்தால் மட்டும் வருமா ? வயதானாலும் வரும் என்ற இடம்.

    ஒரே புள்ளி பல கோணங்களில் சொல்லப்பட்ட இடமான கோவில் மணியோசை ஊரில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வை கொடுப்பதாக எழுதிய இடம்.

    கதைகளில் கண்களுக்கு தெரியாத கதாபாத்திரமாக வரும் ஆவிகள்

    ஆஸ்திரேலியாவில் வீடுகள் ஏலத்திற்கு வரும் முறை.

    திருமணம் ஆகியும் பிரம்மச்சாரியாக வாழும் ஆணின் மனநிலை. இப்படி குறையாமல் 100 ரசிக்கும் படியான இடங்கள் புத்தகம் முழுதும் உள்ளன.

நான் சமீபத்தில் வாசித்த சிறந்த புத்தகத்தில் ஒன்று. நடேசன் அவர்களின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை கொடுத்த புத்தகம். ஒரு புத்தகத்தை பற்றி வாசகன் சொற்களால் முழுவதுமாக சொல்லிவிட முடியாது. இந்த புத்தகம் இவை இவை போல் உள்ளது என உவமை காட்ட முடியாது. புத்தகத்தின் முழு சுவையை வாசித்தால் மட்டுமே உணர முடியும். “நெல் ஒக்கும் புல்” என்றாலும், நேர் உரைத்து ஆகவற்றோ!.

'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர்: நடேசன், இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here