முன்னாள் கனேடியப் பிரதமர் போல் மார்டின் தமிழர் மத்தியிலைப் பார்வையிடுகின்றார்.[அண்மையில் மறைந்த நண்பர் 'தமிழர் மத்தியில்' நந்தா முன்பொருமுறை (அக்டோபர் 2004, இதழ் 58ற்கு) 'பதிவுகள்' இணைய இதழுக்கு நேர்காணலொன்றை வழங்கியிருந்தார். அதனை ஒரு பதிவுக்காக மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள் -] நந்தா என நன்கு அறியப்பட்ட திரு.நந்தகுமார் இராஜேந்திரம் ஒரு மொறட்டுவைப் பல்கலைக் கழகக் கட்டடக் கலைப் பட்டதாரி. இலங்கையில் இருந்த காலத்தில் இலங்கை அரசப் பொறியியற் கூட்டுஸ்தாபனம் (State Engineering Corporation), மற்றும் பண்டிதரட்ன-ஆதித்தியா கட்டடக் கலைஞர்கள் நிறுவனம் ஆகியவற்றில் கட்டடக் கலைஞராகப் பணிபுரிந்தவர். அச்சமயம் நிலாவெளிக் கடற்கரை விடுதி (Beach Lodge), மாளிகாவத்தை சமூக நிலையம் (Community Centre) ஆகியவற்றை வடிவமைத்தவர். பின்னர் மத்திய கிழக்கில், பஹ்ரயினில் கட்டடக் கலைஞராகப் பணி புரிந்த காலத்தில் உயர்ந்த தொடர்மாடிக் குடியிருப்புக் கட்டடங்களையும், மசூதியொன்றினையும் வடிவமைத்தவர். அதன் பின்னர் கனடா புலம் பெயர்ந்த இவர் Page & Steele கட்டடக் கலைஞர்கள் நிறுவனத்தில்  வடிவமைப்பாளராகச் (Designer) சேர்ந்து, இன்று பங்காளியாக(Associate) வளர்ந்து பணிபுரிந்து வருகின்றார். இது வரையில் சுமார் இருபது தொடர்மாடிக் கட்டடங்களையும், அவற்றிலுள்ள 10,000யிரம் வரையிலான குடியிருப்புக்களையும் வடிவமைத்துள்ளார். தொடர்மாடிக் கட்டடங்களை வடிவமைப்பதில் இன்று இவர் ஒரு நிபுணராக (Specialist) விளங்குகின்றார்.

 அதே சமயம் கனடாத் தமிழர்கள் மத்தியில் நந்தகுமார் இன்னுமொரு விடயத்திலும் புகழ் பெற்று விளங்குகின்றார். 'தமிழர் மத்தியில்' என்னும் புகழ்பெற்ற வர்த்தகக் கையேட்டினை வருடாவருடம் வெளியிட்டு வரும் இவரின் மேற்படி வர்த்தகக் கையேடு புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்டதொரு கையேடு. இதன் பதினாறாவது பதிப்பு (2005ற்குரியது) விரைவில் வெளிவரவுள்ளது. உண்மையில் கனடாத் தமிழர்கள் மத்தியில் 'நந்தா பதிப்பக'மும் அதன் வெளியீடான 'தமிழர் மத்தியில்' வர்த்தகக் கையேடும் பிரிக்க முடியாத அம்சங்களெனலாம். கட்டடக் கலைஞரான திரு. நந்தகுமார் இராஜேந்திரன் அவர்களுடன் அண்மையில் 'தமிழர் மத்தியில்' வர்த்தகக் கையேடு, சுயதொழில் வாய்ப்பு எனப் பல்வேறு விடயங்கள் பற்றிக் கலந்துரையாடினோம். இவரது துணைவியார் வசந்தி நந்தகுமாரும் ஒரு கட்டடக் கலைஞரே. பயனுள்ள அக்கலந்துரையாடலைப் பதிவுகள் வாசகர்களுக்காக நாம் இங்கு தருகின்றோம். 

நாம்: வணக்கம் நந்தா அவர்களே! கட்டடக் கலைஞரான தாங்கள் 'தமிழர் மத்தியில் ' போன்றதொரு வர்த்தகக் கையேட்டினை ஆரம்பித்து சுயதொழிலதிபராக உருமாறியது தற்செயலாக நடந்ததொன்றா? அல்லது முன்பே இத்துறையில் அனுபவம் தங்களுக்குண்டா?

நந்தகுமார்: நான் கட்டடக்கலைஞராக இலங்கையில் பணி புரிந்த காலத்திலேயே அத்துறையில் சுயமாகவும் தொழில் புரிந்துள்ளேன். ஏற்கனவே எனக்கு சுயதொழில் அனுபவமுண்டு. கனடா வந்த புதிதில் தமிழ் மக்கள் ஸ்கார்பரோ, தொராண்டோ உள்நகர் எனப் பல்வேறு பகுதிகளிலும் சிதறிப் பரந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அச்சமயத்தில் தமிழ் வர்த்தகர்களுக்கும், பாவனையாளர்களான தமிழ் மக்களுக்குமிடையில் ஒருவித இலகுவான தொடர்பு இல்லாமலிருந்ததை அவதானித்தேன். இதன் விளைவாக இரு சாராருக்குமிடையில் ஒருவிதத் தொடர்பினை, இணைப்பினை ஏற்படுத்த வேண்டிய தேவை இருந்ததை உணர்ந்தேன். இதற்கு ஒரு தமிழ் வர்த்தகக் கையேட்டின் தேவை அவசியமென்பதை உணர்ந்தேன். அதன் விளைவாக உருவானதுதான் மேற்படி 'தமிழர் மத்தியில்' என்னும் வர்த்தகக் கையேடு. கனடாத் தமிழர்கள் மத்தியில் வெளிவந்த முதலாவது தமிழ் வர்த்தகக் கையேடென்ற பெருமையும் இதற்குண்டு.

நாம்: மேற்படி முயற்சிக்கு ஆரம்பத்தில் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாகத் தமிழ் வர்த்தகர்கள் மத்தியில் எத்தகைய வரவேற்பிருந்தது?

நந்தகுமார்: நாம் மேற்படி வர்த்தகக் கையேட்டினை ஆரம்பிக்க நினைத்ததும் தமிழ் வர்த்தகர்கள் பலருடன் தொடர்பு கொண்டு இம்முயற்சி பற்றிக் கலந்தாலோசித்தோம். அப்பொழுது இம்முயற்சிக்கு 50/50 ஆதரவு இருந்ததென்றே கூற வேண்டும். பொதுவாக ஒரு வர்த்தக முயற்சி ஆரம்பிக்கப்படும் போது இது போன்ற  நிலை ஏற்படுவது சகஜமே. ஆயினும் மனந்தளராது நாம் துணிந்து வர்த்தகர்களிடன் விளம்பரங்கள் சேகரித்துத் 'தமிழர் மத்தியில்' வர்த்தகக் கையேட்டினை வெளியிட்டோம்.  72 பக்கங்களுடன் சுமார் 3500 பிரதிகளை அச்சடித்து இலவசமாக விநியோகித்தோம். அவ்விதம் ஆரம்பிக்கப் பட்ட முயற்சி இன்று 1500 பக்கங்களில், சுமார் 15,000 பிரதிகள் வரையில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ளது திருப்தியினைத் தருகின்றது.

நாம்: இவ்விதமான வர்த்தகக் கையேடு வெளியிடுவதை தொண்டாகக் கருதுகின்றீர்களா? அல்லது வெறும் வெற்றிகரமானதொரு வியாபாரமாகக் கருதுகின்றீர்களா?

நந்தகுமார்: இதனை இருவிதமாகவும் கருதலாம். இது தமிழ் மக்களுக்கும், தமிழ் வர்த்கர்களுக்குமிடையில் இணைப்பினை ஏற்படுத்துவதற்கு மிகவும் உதவியாகஇருக்கின்றது. அந்த வகையில் அளப்பரிய சேவையினை ஆற்றி வருகின்றது. அதே சமயத்தில் நல்லதொரு சுயதொழிலாகவுமிருக்கின்றது. ஆரம்பத்தில் புதிதாகக் குடியேறிய தமிழ் மக்களிடையியே தமிழ் வர்த்தகர்களுக்கும், தமிழ் மக்களுக்குமிடையில் பாலமொன்றினை ஏற்படுத்தியதன் மூலம் தமிழ் வர்த்தகர்கள் தங்களது வியாபாரத்தினை வளர்த்தெடுக்க தமிழர் மத்தியில் நன்கு உதவியதென்றே கூற வேண்டும். அவர்கள் பலரது வாக்கு மூலத்தினை எமது புதிய பதிப்பில் நீங்கள் வாசிக்கலாம். இந்தவகையில் தமிழ் வர்த்தகர்கள், மற்றும் சுயதொழில் செய்ய விரும்பும் தமிழ் மக்கள் யாவருக்கும் தமது வர்த்தகத் துறையில் நல்லதொரு அடித்தளத்தினை அமைத்துக் கொடுத்த தமிழர் மத்தியில் , வருடா வருடம் அவர்களது ஆதவரவுடன் வளர்ந்து பெருகி அவர்களது வர்த்தகத் துறையினைத் தாங்குமொரு தூணாக விளங்கி வருகின்றது. அவர்களது ஆதரவு இருக்கும் வரையில் தொடர்ந்தும் 'தமிழர்மத்தியில்' தமிழர் மத்தியில் விளங்கி வரும்.

நாம்: அடுத்ததாக ஒரு கேள்வி. இது பொதுவாக அவ்வப்போது சுட்டிக் காட்டப்படும், கேட்கப்படுமொரு கேள்விதான். ஏனய பிற சமூகங்கள் சில, முக்கியமாக சீன, கொரிய, யூத சமூகங்கள் போன்றவற்றிலெல்லாம் பலர் தம் சமூகத்தினர் மத்தியில் மட்டுமல்ல , கனடிய சமூகத்தினர் மத்தியில் கூடத் தமது வர்த்தகத்தினை விஸ்தரித்துப் பெருந் தொழிலதிபர்களாக விளங்குகின்றார்கள். பல இந்தியர்கள், குறிப்பாகப் பஞ்சாபியர்கள், பல உணவகங்களை வெற்றிகரமாக நடாத்தி வருகின்றார்கள். ஆனால் எம்மவரைப் பொறுத்த வரையில் ஒரு சிலரைத் தவிர யாரும் இவ்விதம் தமது வர்த்தகத்தினை விஸ்தரிக்க முனைந்ததாகத் தெரியவில்லையே. இது பற்றிய உங்களது கருத்தென்ன? இதற்காகத் தாங்கள் ஏதாவது முயற்சிகள் எடுக்கின்றீர்களா?

நந்தகுமார்: நீங்கள் கூறுவது சரிதான். உண்மையில் வர்த்தகர்கள் பெருந் தொழிலதிபர்களாக வருவதன் மூலம் , கனடிய அரசியல் போன்ற விடயங்களில்  மிகுந்த செல்வாக்கினைப் பிரயோகிக்க முடியும். இதற்கு ஏன் பெரும்பாலானவர்கள் முயலவில்லையென்றால்...அதற்குரிய முக்கிய காரணங்களாக நான் பின்வருவனவற்றைக் கருதுகின்றேன். இத்துறை பற்றிய போதுமான வழிகாட்டலில்லை, மொழிப்பிரச்சினை, இங்குள்ள சட்டதிட்டங்களைப் பாவித்து , எவ்வளவு இலகுவாக வியாபாரத்தினைப் பெருக்கலாம் என்பது சம்பந்தமான போதுமான விளக்கமில்லை, நடாத்தும் வியாபாரத்துக்குரிய முறையான வர்த்தகத் திட்டம் (Business Plan) இல்லை. திட்டமில்லாவிட்டால் எவ்விதம் வர்த்தகத்தினை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது? ஒவ்வொருவரும் வியாபாரத்தினை நடாத்துவதற்குரிய நோக்கமொன்றும் இருக்க வேண்டும். வியாபாரம் என்பதுடன் அதனை விரும்பி முன்னெடுப்பதற்கு, அவர்களை மனப்பூர்வமாக ஈடுபடுத்துவதற்கு இந்த நோக்கம் (Mission)  மிகவும் அவசியம். அடுத்தது ஆரோக்கியமற்ற வியாபாரப் போட்டி (Unhealthy competition). கீரைக் கடைக்கும் எதிர்க் கடை வேண்டும் தான். ஆனால் அதற்காக எல்லோருமே எடுத்த எடுப்பில் மற்றவரை அப்படியே பின்பற்றிப்(Copy) போட்டிக்குத் தொழில் செய்தல் அவ்வளவு ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. உடனடியாக விலையினைக் குறைப்பது, தரமற்ற சேவை அல்லது பொருளினை வழங்குவது இத்தகைய ஆரோக்கியமற்ற போட்டி மனப்பான்மையின் விளைவே. இதனால்தான் நாம் உலகளாவிய ரீதியில் தமிழர்கள் பயன்பெறும் வகையில் தமிழா.காம் என்னுமொரு இணையத் தளத்தினை நடாத்தி வருகின்றோம்.  அதன் இணையத் தள முகவரி: http://www.thamila.com இதில் எமது விளம்பரதாரர்களின் விபரங்களை இலவசமாகவே ஆங்கிலத்தில் பிரசுரித்துள்ளோம். இது எம் வர்த்தகர்களின் விபரங்களை ஏனைய சமூகத்தினரும் அறிந்து கொள்ள வழிவகுக்கும். உலகம் பல பாகங்களிலிருந்தும் தமிழ் மக்கள் எமது இணையத் தளத்திலுள்ள விபரங்களைப் பார்வையிட்டு வருகின்றார்கள். 

நாம்: ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக விளங்குகின்றீர்கள். சுயமாகத் தொழில் செய்ய விரும்பும் அனைவருக்கும், உங்கள் அனுபவத்தினடிப்படையில் தாங்கள் கூறும் அறிவுரையென்ன?

நந்தகுமார்: முதலாவது ஒவ்வொருவரும் என்னென்ன வர்த்தகத்தில் தங்களது அனுபவம், அறிவு மற்றும் ஆர்வத்தினடிப்படையில் தாங்கள் ஈடுபட முடியுமென்பதை அறிந்து கொள்ள வேண்டியதவசியம். பலர் இவ்விதம் அறிந்து கொள்ளாமல் தங்களுக்குப் பொருந்தாத துறைகளில் ஈடுபட்டு கையைச் சுட்டுக் கொள்கின்றார்கள். அதனால் ஆரம்பத்திலேயே தமக்குச் சரியான வர்த்தகத் துறையினை இனங்காண்பது அவசியம் (identify the type of business). அடுத்தது ஆரம்பிக்கவுள்ள வர்த்தகம் பற்றிய வர்த்தகத் திட்டமிருக்க வேண்டும் (Business Plan). இது சம்பந்தமான பல நூல்களை இங்குள்ள நூலகங்களில் பெற முடியும். ஆனால் தமிழில் இத்தகைய நூல்கள் குறைவே. ஆனால் தமிழகத்திலிருந்து அண்மைக்காலமாக இத்தகைய பல நூல்கள் வெளிவருவதைக் கண்டுள்ளேன். அவற்றைப் பாவித்துப் பயன் பெற வேண்டும். அடுத்தது ஒரு குறிப்பிட்ட காலத்தில் எவ்விதம் வர்த்தகம் மூலம் வருவாயினைப் பெற முடியும் என்பதற்கான கணிப்பீடு , மதிப்பீடு (Forcast) செய்திருக்க வேண்டும். உண்மையில் இதுவும் வர்த்தகத் திட்டத்தினொரு பகுதிதான். அடுத்தது ஓரளவு உறுதியான நிதி வலிமை (Financial Strength) இருக்க வேண்டும். அது இல்லாமல் அரைகுறையாக ஒரு போதுமே வியாபாரத்தைத் தொடங்கக் கூடாது. ஆரம்பத்தில் எத்தனையோ தடைகள், தோல்விகளெல்லாம் வரும். அத்தகைய சமயங்களில் இது கை கொடுக்கும். பலர் அரைகுறையிலேயே ஆரம்பித்து வர்த்தகத்தைக் கைவிட்டு விட்டு ஓடுவதற்கு முக்கிய காரணம் போதிய நிதி நிலமை இல்லாதது தான். மேலும் வியாபாரத் திட்டம் பற்றிய அறிக்கை எப்பொழுதும் வங்கி போன்ற நிதி நிறுவனங்களிலிருந்து தொழிலினைப் பெருக்குவதற்குக் கடன் பெறும் போது மிகவும் உதவியாகவிருக்கும். அடுத்தது இன்னுமொரு முக்கியமான விடயம் கடமையுணர்ச்சி (Obligation). அதுவும் வர்த்தகத்தின் வெற்றிக்கு மிகவும் அவசியம்.

நாம்: நல்லது நந்தா அவர்களே! கனடாத் தமிழ் மக்களுக்குத் தாங்கள் பதிவுகள் வாயிலாகக் கூற விரும்புவதென்ன?

நந்தகுமார்: எந்தவித வேறுபாடுகளுமற்று அனைவரும் தமிழர் மத்தியில் போன்ற வர்த்தகக் கையேட்டினைப் பாவித்துப் பயன் பெற வேண்டும். விளம்பரங்கள் செய்ய முன் வரவேண்டும். ஏற்கனவே எமது வர்த்தகக் கையேடு மான்ரியால் மற்றும் வான்கூவர் போன்ற நகர்களிலுள்ள தமிழ் வர்த்தகர்களை உள்ளடக்கி வெளிவரத் தொடங்கி விட்டது. இன்னும் பல்வேறு நகரங்கள், மற்றும் நாடுகளிலுள்ள வர்த்தகர்கர்களையும் காலப்போக்கில் இணைக்கும் எண்ணம்  எமக்குண்டு. தமிழர் மத்தியில் உலகின் முதலாவது தமிழ் வர்த்தகக் கையேடு. வர்ண விளம்பரங்களையும் அதிக அளவில் தாங்கி வெளி வருகின்றது. மேலும்  100% 'டிஜிட்டல்' முறையில் அச்சிடப்படுகின்றது. வெட்டி ஒட்டும் வேலையெல்லாமில்லை. உலகின் முதற்தரமான அச்சகங்களிலொன்றான கியூபெக் நகரிலமைந்துள்ள கியுபெக்கர் (Quebecor) அச்சகம் மூலம் அச்சிடப்பட்டு வெளிவருகின்றது. சுமார் 300 பக்கங்களில் பொதுமக்கள் அனைவருக்கும் மிகுந்த பயனைத்தரும் விபரங்களைத் தாங்கி வெளிவருகின்றது. வர்த்தகத் துறையில் பல விருதுகளைப் பெற்றுள்ளது. அன்பான தமிழ் மக்களே! தொடர்ந்தும் இதுவரை எமக்களித்த ஆதரவினைத் தொடர்ந்து வழங்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம். தமிழர் மத்தியில் எப்பொழுதுமே தமிழர்கள் வர்த்தகத்தில் சிறந்தோங்கும் வகையில் பலமானதொரு தூணாக விளங்கி வரும். எம்முடன் தொடர்பு கொள்ள விரும்பினால் அதற்குரிய விபரங்கள் வருமாறு:

மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தொலைபேசி இலக்கம்: (416) 321-1354

நாம்: நல்லது நந்தா அவர்களே! பதிவுகள் வாசகர்களுக்குத் தாங்கள் கூற விரும்புவதென்ன/

நந்தகுமார்: கனடாவிலிருந்து வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழிலக்கிய ஆர்வலர்களால் விரும்பிப் படிக்கப் பட்டு வருகிறது. காத்திரமான விடயங்களை , இலக்கியம் , அறிவியலுட்படப் பல துறைகளில், தாங்கி வெளிவருகின்றது. பதிவுகள் மேன்மேலும் சிறந்து  விளங்க எமது வாழ்த்துக்கள்.

நாம்: இதுவரையில் பதிவுகள் வாசகர்களுடன் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டீர்கள். உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவர் மத்தியிலும் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தீர்கள். நன்றி!

பதிவுகளுக்காகப் பேட்டி கண்டவர்: நந்திவர்மன்

நன்றி: அக்டோபர் 2004 இதழ் 58


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here