சக்கரங்கள் நிற்பதில்லை! மெல்பனில் நடந்த மல்லிகை ஜீவா நினைவரங்கு ! ஒரு பார்வை ! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -

வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழியே!
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!........
மகாகவி பாரதியின் தமிழ் வாழ்த்து திருமதி சரண்யா மனோசங்கரின் குரலில் தேன் மதுரமாய் அந்த மண்டபத்தை நிரப்புகிறது! இது மகாகவியின் நினைவு நூற்றாண்டு என்பதை நினைவுபடுத்துகிறது.
இம் மாதம் 19 ஆம் திகதி ஞாயிறு மாலை சரியாக நான்கு மணி. மெல்பனில் பேர்விக் மூத்த பிரஜைகள் மண்டபத்தில் அந்தக்குரல் ஒலிக்கிறது. மண்டபத்தில் திரண்டிருந்து மக்கள் எழுந்து நின்று சிரம் தாழ்த்தி அமைதியாக செவிமடுக்கின்றனர்.
நான் எனது கண்களை மெதுவாக நிமிர்த்திப் பார்க்கிறேன்.
மேடையின் வலது பக்கத்தில் முறுக்கிய மீசைக்கூடாக மந்திரப் புன்னகையுடன் என்னை நோக்குகிறது மகாகவி பாரதியின் நேர்கொண்ட அந்தப் பார்வை.


எமது கனடா கவிஞர் கழகமானது ஒவ்வொரு மாதத்தின் கடைசிக் கிழமையிலும் தமிழறிஞர்கள், படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களை அழைத்து மெய்நிகர் வழியாகச் சிறப்புரைகளையும், கலந்துரையாடல் களையும் நடத்தி வருகின்றது. அதன்படி, சென்ற செப்ரெம்பர் மாதம் இருபத்தைந்தாம் திகதி சனிக்கிழமை எமது கழகத்தின் இணைய வழிக் கலந்துரையாடல் காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பிரபல எழுத்தாளரும், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவருமான குரு அரவிந்தன் அவர்களின் ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்ற பயிற்சிப்பட்டறை இடம் பெற்றது. முதலில் கழகத்தின் தலைவர் திரு. கந்த ஸ்ரீ பஞ்சநாதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து பொருளாளர் திரு. குமரகுரு. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுத்தாளர் குரு அரவிந்தனை அறிமுகம் செய்து வைத்தார்.
- இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் எண்பதுகளில் மலையகத்திலிருந்து வெளியான 'தீர்த்தக்கரை' சஞ்சிகைக்கும் முக்கியமானதோர் இடமுண்டு. எல்.சாந்திகுமாரை ஆசிரியராகக் கொண்டு வெளியான காலாண்டு சஞ்சிகையான 'தீர்த்தக்கரை'சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் எஸ்.நோபட், எல்.ஜோதிகுமார் , எம்.தியாகராம் ஆகியோரிருந்தனர். எஸ்.நோபட் (சூசைப்பிள்ளை நோபட்) டொமினிக், ஜீவன், கேசவன், பிரான்ஸிஸ் சேவியர் மற்றும் கோவிந்தன் என்னும் புனைபெயர்களில் தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்டவர். தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்திலும் இணைந்து போராடிப்பின் அதிலிருந்து பிரிந்து 'தீப்பொறி' அமைப்பில் இயங்கியவர். 'புதியதோர் உலகம்' நூலாசிரியர். அண்மையில் ஜோதிகுமார் அவர்களிடம் 'தீர்த்தக்கரை' சஞ்சிகை பற்றியும் எழுதுங்களேன் என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் அனுப்பிய 'தீர்த்தக்கரை' சஞ்சிகை பற்றிய குறிப்பிது. - வ.ந.கி -


உள்ளார்ந்த கலை , இலக்கிய ஆற்றல்களை கொண்டிருப்பவர்கள், தமது தாயகம் விட்டு, வேறு எந்தத் தேசங்களுக்கு புலம்பெயர்ந்து செல்ல நேரிட்டாலும், தமது ஆற்றல்களை வெளிப்படுத்தியே வருவார்கள். அதற்கு எமது புகலிட தமிழ் கலை, இலக்கிய உலகில் சிறந்த உதாரணமாகத் திகழ்பவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் எழுத்தாளரும் நாடகக் கலைஞருமான யாழ். பாஸ்கர். இவர் இந்தத் துறைகளில் தடம் பதித்து, வளர்ந்து ஆஸ்திரேலியா நாட்டில் இதழ் ஆசிரியராகவும் மலர்ந்தவர். யாழ்ப்பாணம் கொட்டடியைச்சேர்ந்த இவர், தனது ஆரம்பக்கல்வியை கொட்டடி நமசிவாயா பாடசாலையிலும், நவாந்துறை றோமன் கத்தோலிக்க தமிழ்ப்பாடசாலையிலும் பயின்று, பின்னர் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியில் இணைந்தார்.



அண்மையில் நண்பர் எல்லாளன் தந்திருந்த நூல்களிலொன்று 'சமாதானத்திற்கான ஶ்ரீலங்கா சார்புக் கனேடியர்கள்' அமைப்பு வெளியிட்டிருந்த மலையகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரும், முன்னாட் விடுதலைப் போராளியுமான வரதன் கிருஷ்ணா எழுதிய 'வெந்து தணியாத பூமி' என்னும் சிறு நூல். இந் நூலை வாசித்தபோது ஒன்று புரிந்தது. இது தொட்டிருக்கும் விடயம் தற்போதுள்ள சூழலில் மிகவும் முக்கியமானதொன்று. இது ஆற்றியிருக்கும் பணியும் முக்கியமானது. காலத்தின் தேவை.

திருமணமாகி மதுரை வந்த நாள்முதல் அடிக்கடி இரவு ஒன்பதுமணிக்கு, எங்கள் பெட்ரூமிலிருந்து அம்மாவிடம், வீடியோ காலில்தான் பேசுவேன். அம்மா தனது பெட்ரூமிலயிருந்து பேசுவாங்க. சிலநாட்களில் சமையல்காரப் பையன் எடுத்துப் பேசுவான். தவிர, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அத்தானும் பேசத் தவறுவதில்லை.
2012 ஏப்ரல் 12ம் தேதி வியாழக் கிழமை காலை 10 மணியளவில் வவுனியா பூங்காப் பகுதி தடை முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட முப்பத்தொரு பெண்களில் சங்கவி ஒருத்தியாக இருந்தாள். அவர்களில் நான்கு பேர் குழந்தைகளோடு இருந்தார்கள்.





பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









