- அண்மையில் ஓவியர் கெளசிகனுடன் மின்னஞ்சல் மூலம் நடைபெற்ற நேர்காணலிது. - பதிவுகள் -


ஓவியர் கெளசிகன் தன்னைப்பற்றி........

1963ம் ஆண்டு நவம்பர் மாதம் 18 திகதி பதுளையில் பிறந்தேன். கொழும்பு கொட்டாஞ்சேனையில்  U.C. மெதடிஸ்ட் கல்லூரியில் G.C.E. O/L வரை கல்விகற்றேன். 1980 களில் சிந்தாமணி பத்திரிகையில் பகுதிநேர ஓவியராக கடமையாற்றினேன். அதன்பின்னர், 1990 களில் தினகரனில் பத்திரிகையில் பகுதிநேர ஓவியராக கடமையாற்றினேன். 1994 முதல் தொழில்முறை ஓவிய ஆசிரியராகவும், 1998 முதல் ஒரு  தொழில்முறை கணினி வரைகலைஞராகுவும், இணையத்தள பக்க வடிவமைப்பாளராகவும் கடமையாற்றி வருகிறேன். 2003 இலிருந்து தொடர்ச்சியாக 11 ஓவியக்கண்காட்சிகளை எனது மாணவர்களை இணைத்துக் கொண்டு நடாத்தியுள்ளேன். 2018 இல் முதன் முதலாக இந்தியாவில் கொல்கத்தாவிலுள்ள சாந்திநிகேதனில் எனது கண்காட்சி ஒன்று அரங்கேறியது. இலங்கையிலிருந்து சாந்திநிகேதன் சென்று ஓவிய கண்காட்சி ஒன்றை நடாத்திய முதல் இலங்கையர் என்பதில் பெருமிதம். சென்ற மாதம் தமிழ் இலங்கையின் பாரம்பரிய மற்றும் நவீன கலைகளின் கலைஞர்களுக்கான 2019 மாநில விருது வழங்கும் விழாவில் தேசிய ஒருங்கிணைப்பு, உத்தியோகபூர்வ மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத மற்றும் கலாச்சார  விவகாரங்கள் திணைக்களம் ஆகியவற்றால் "கலைச்சுடர்" என்ற பட்டத்தை கௌரவ அமைச்சர் மனோ கணேசன் அவர்களினால் எனக்கு வழங்கப்பட்டது.

கேள்வி: உங்களுக்கு ஓவியத்துறை மீதான ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது? ஏன்?

ஓவியர் கெளசிகன்: வணக்கம். எனது ஒன்பதாம் பத்தாம் வயது என நினைக்கிறன். செய்தித்தாள் மற்றும் புத்தகங்களில் வரும் சில படங்களை trace பண்ணித்தான் எனது ஓவியக்கலையை வளர்த்துக்கொண்டேன். அதோடு trace பண்ணி
முடித்தவுடன், மூல படத்தின்  இருக்கும் விவரங்கள் பார்த்து பார்த்து வரைய பழகினேன். ஓவியத்தில் ஏன் ஆர்வம் வந்தது என்று குறிப்பிட்டு சொல்லமுடியவில்லை காரணம், சிறுவயதிலேயே வரைய ஆரம்பித்துவிட்டதினால் என்றே நினைக்கிறேன்.

கேள்வி: உங்களது ஓவிய ஆர்வத்துக்கு ஆரம்பத்தில் ஓவியர்கள் எவரினதும் ஓவியங்கள் காரணமாக இருந்துள்ளதா?

ஓவியர் கெளசிகன்: எனது நினைவிக்கு தெரிந்தவரை அப்படி இல்லை. எந்த ஒரு ஓவியரையும் பின்பற்றவில்லை. எனக்கு சுயமாகவே ஓவியம் வரையும் திறமை இருந்ததாகவே நான் நினைக்கிறேன். ஆனால், நடிகர் திலகம் அவர்களின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வரும்போது அவற்றைத்தான் அதிகமாக நான் சிறுவனாக இருக்கும்போது வரைந்து பழகியிருக்கின்றேன். இந்த பயிற்சிதான் என்னை ஒரு முழுமையான உருவப்பட  ஓவியனாக ஆக்கியது என்பதை மறுக்கமுடியாது.

கேள்வி: உங்களது ஓவிய ஆர்வத்துக்கு ஆரம்பத்தில் ஓவியர்கள் எவரினதும் ஓவியங்கள் காரணமாக இருந்துள்ளதா?

ஓவியர் கெளசிகன்: எனது பத்து பன்னிரண்டு வயதுகளில் ஒரு ஓவியரைப் பார்த்து நான் ஈர்க்கப்பட்டேன் என்று நினைத்துப்பார்க்க முடியாது. காரணம் 1970, 80 களில் இணையம், கணணி என்றெல்லாம் ஒன்றுமே அன்றைய காலகட்டத்தில்
இருக்கவில்லை. ஆகவே,எனக்கு என்ன வந்ததோ, என்ன தோன்றியதோ அவற்றை தான் நான் வரைந்து வந்தேன்.

கேள்வி: உங்களுக்குப் பிடித்த ஓவியர்கள் பற்றி, அவர்களது உங்களுக்குப் பிடித்த படைப்புகள் பற்றிக் கூறுங்கள்.

ஓவியர் கெளசிகன்: எப்பொழுதுமே, ராஜா ரவிவர்மா, வின்சென்ட் வான் கோக், பிக்காசோ அவர்களது ஓவியங்கள் மிகவும் பிடிக்கும். அதோடு, சில வட இந்திய ஓவியர்களின் பாணிகள் மிகவும் பிடிக்கும்.

கேள்வி: சஞ்சிகைகள், பத்திரிகைகளில் உங்கள் ஓவியங்கள் வெளியாகியுள்ளனவா? அவை பற்றியும் அறியத்தாருங்கள்.

ஓவியர் கெளசிகன்: ஆமாம், 1980 களில், தினபதி  சிந்தாமணி பத்திரிகைகளுக்கு சிறுகதைகளுக்கான ஓவியங்கள், அரசியல் கேலிச்சித்திரங்கள், சிறுவர்களுக்கான கதை சித்திரங்கள் என பலவகையான ஆக்கங்கள் செய்துள்ளேன். அதன் பின்னர், நீண்ட
காலம் தினகரன் பத்திரிகைக்கும் மேற்குறிப்பிட்ட ஓவியங்களை வரைந்துள்ளேன். அவற்றைத்தவிர, ஒவ்வொரு வருடமும் நான் எனது மாணவர்களுடன் இணைந்து ஓவியக்கண்காட்சிகளை நடத்தி வருகிறேன். 2018ல் இந்தியாவின் கொல்கத்தாவில்
உள்ள வங்கக்கவிஞர் ரபீந்திரநாத் தாகூர் அவர்களின் பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள சாந்திநிகேதனில் எனது ஓவியக்கண்காட்சி ஒன்று மாணவர் ஒருவருடன் இணைந்து இரு தினங்களுக்கு நடைபெற்றது. சாந்திநிகேதன் சென்று கண்காட்சி நடாத்திய முதல் இலங்கை ஓவியர்கள் என்ற பெருமையை இக்கண்காட்ச்சில் நாம் பெற்றோம்.

கேள்வி: புனைகதைகளை இரசிப்பவர்கள் அவற்றின் மொழி, பொருள், பாத்திரப்படைப்பு போன்ற விடயங்கள் மூலம் அவற்றை அறிந்துகொள்வர்கள். பலருக்கு ஓவியங்களை உண்மையில் எவ்விதம் இரசிப்பது என்பது தெரிவதில்லை. கண்ணுக்கு
அழகாகவிருந்தால் மட்டும் சிறந்ததாக எண்ணி விடுகின்றார்கள். அவர்களுக்கு ஓவியங்களை எவ்விதம் இரசிக்கலாம் , முக்கியமான ஓவிய அம்சங்கள் எவை, அவற்றை எவ்விதம் ஓவியமொன்றிலிருந்து இரசிக்கலாம் அல்லது எடை போடலாமென்பது பற்றிய விளக்கத்தினை உங்கள் மொழியில் அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாகக் கூற முடியுமா?

ஓவியர் கெளசிகன்: ஓவியங்களை ரசிப்பதென்பது அவரவர் ரசிப்புத்தன்மையை பொறுத்தது. மரபு ரீதியாக வரையபட்ட ஓவியங்களை பொதுவாக எல்லோருமே விரும்புவார்கள். அவர்களில் காட்சிகள், உருவ ஓவியம், விலங்கியல் வாழ்க்கை என
பலவகை ஓவியங்களை விரும்புவார்கள். ஆனால், நவீன ஓவியங்களை ரசிப்பதற்கு ஒருவகை விசேஷமான தகுதி வேண்டும். ஓவியர் தனது படைப்பினூடாக என்ன சொல்கிறாரோ அதை புரிந்துகொள்ள சிலரால் மட்டுமே முடியும். சிலசமயங்களில் ஓர்
ஓவியரின் தனிப்பட்ட சொந்தக்கருத்திற்கு எதிராகக்கூட பார்வையாளரின் கருத்து இருக்கக்கூடும். கண்ணுக்கு அழகாகவிருந்தால் மட்டுமே ஓர் ஓவியம் சிறந்ததாகிவிட முடியாது. ஓவியம் பற்றி தெரிந்தவர்கள் அவற்றிலுள்ள கோடுகள்,
வண்ணத்தெளிப்புக்கள், நிழல் மற்றும் ஒளி போன்றவற்றை வெகுவாக ரசிப்பார்கள். எனவேதான், ஓவியங்களை ரசிப்பதில் ஒருவருக்கொருவர் மாறுபடுவர்.

கேள்வி: ஓவியத்தின் வரலாறு என்றால் அது பல்வகையான கோட்பாடுகளை, இசங்களைக் கடந்து வந்துள்ளது. உங்களது ஓவியப்பாணி பொதுவாக எவ்வகையானது? கியுபிசம் போன்ற நவீன ஓவியப் பாணியிலும் நீங்கள் ஓவியங்கள் வரைவதுண்டா?

ஓவியர் கெளசிகன்: எனது ஓவியங்கள் பொதுவாகவே யதார்த்தமானதாகவும், மரபுசார்ந்ததாகவும் அதேசமயம் நவீன உத்திகளையும் கொண்டிருக்கும். கடந்த ஆகஸ்ட் மாதம் நான் மாணவர்களுடன் இணைந்து நடாத்திய எனது பதினோராவது ஓவிய கண்காட்சியில் 3D முப்பரிமாண ஓவியங்களை முதன்முறையாக அறிமுகப்படுத்தியிருந்தேன். இவ் வகையான ஓவியங்களை இதற்குமுன் இலங்கையில் பார்த்ததில்லை என்று பலபேருடைய பாராட்டுக்களையும் அவை பெற்றன. தற்போது கணனியில் வரையப்படும் டிஜிட்டல் ஓவியங்கள் மிக பிரபலமாகி வருகின்றன.  அந்தவகையில், நான் பல டிஜிட்டல் ஓவியங்கள் பலவற்றை எனது கடந்த சில கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தேன்.

கேள்வி: ஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரையென்ன?

ஓவியர் கெளசிகன்: நாம் கற்றது கை மண்ணலவே என்பதை எப்போதுமே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பயிற்சிகளை எப்போதுமே கைவிடாமலும், புதிய உத்திகளை கையாண்டும், கற்றுக்கொண்டும் இருக்கவேண்டும். கண்காட்சிகள்
பலவற்றிற்கு சென்று புதிய உத்திகளை கற்றுக்கொள்ளலாம். எல்லாவற்றையும் கவனிப்பதும் ஒரு நல்ல பயிற்சியாகும்.

கேள்வி: ஓவிய ஆற்றலை எவ்விதம் வருமானத்துக்குரிய தொழிலாக ஒருவர் உபயோகிக்கலாமென்று எண்ணுகின்றீர்கள்?

ஓவியர் கெளசிகன்: இது பெரும்பாலும் கொஞ்சம் கஷ்டமான விடயம் தான். ஏனென்றால், ஒரு பெயர் பெற்ற ஓவியராக நீங்கள் இருப்பீர்களானால், எப்படியும் உங்களது பெயருக்காகவே உங்கள் ஓவியங்கள் விலைபோகும். உங்கள் ஓவியங்களை சமூக வலைத்தளங்களில் மற்றும் உங்கள் சொந்த வலைத்தளங்களில் மற்றவர்களுடன் பகிரும் பட்சத்தில் தொழில்ரீதியாக அவை விலைபோக வாய்ப்புகள் உள்ளன.

கேள்வி: நீங்கள் இணையத்தில் வலைப்பதிவு , இணையத்தளம் வைத்துள்ளீர்களா? அவ்விதம் வைத்திருந்தால் அவை பற்றி அறியத்தாருங்கள்.

ஓவியர் கெளசிகன்: ஆமாம், இதுதான் எனது வலைத்தளம் www.graffixxsolution.com   இன்னும் முழுமையாக வில்லை. எனது ஓவியங்கள் உள்ளடக்கிய வலைத்தள பக்கங்களை இன்னும் வடிவமைத்துக்கொண்டிருக்கிறேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here