கோவை இலக்கியச் சந்திப்பு - 32ம் நிகழ்வு அழைப்பிதழ்.



1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி இலங்கையின் சிங்கள பேரினவாத அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் ஜூலை மாதம் 23ம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணியளவில் பிரித்தானிய பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ வதிவிடமான 10 Downing Street முன்பாக ஆரம்பமாகி இரவு 7 மணி வரை மிக எழுச்சியோடு நடை பெற்றது. இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் இளவரசர் சாள்ஸ் ஆகியோர் புறக்கணிக்க வேண்டுமென்றும், தமிழர் தாயக பகுதிகளில் நடைபெறும் திட்டமிட்ட இனவழிப்பு, இராணுவமயப்படுத்தல், பௌத்தமயப்படுத்தல் மற்றும் காணி அபகரிப்பு போன்றவற்றை நிறுத்த அழுத்தம் கொடுக்கக் கோரியுமான பதாதைகளை ஏந்திய வண்ணம் இவ் ஆர்பாட்டத்தில் பல நூற்றுக் கணக்கான பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் பங்கேற்றனர்.

1983ம் ஆண்டு இலங்கையின் சிங்கள பேரினாவாத அரசினால் தமிழ்மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ் வள ஆலோசனை மையத்தின் றொம்மன் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் மாற்று சினிமா கலைஞர்களை கவுரவப்படுத்த வழங்கி வரும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரிலான விருது இந்த ஆண்டு இயக்குனர் லீனா மணிமேகலைக்கு வழங்கப்படுகிறது. ஆவணப்பட / குறும்படங்களின் வாயிலாக தொடர்ந்து சமூக பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததும், தனி ஒரு படைப்பாளியாக தொடர்ந்து இந்த Main Sream கட்டமைப்பை எதிர்த்து போராடி வருவதும், தொடர்ச்சியாக தன்னுடைய இலக்கு நோக்கி பயணிப்பதும் அவருக்கு இந்த விருது வழங்க காரணமாயிருக்கிறது. லெனின் விருது 10,000 ரூபாய் ரொக்கம், கேடயம், சான்றிதழ்களை உள்ளடக்கியது. இது தவிர, லெனின் விருது பெறுபவரின் படங்களில் சில, தமிழ்நாடு முழுவதும் தமிழ் ஸ்டுடியோவால் திரையிடப்படும். இந்த ஆண்டு லீனாவின் படங்கள் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படவிருக்கிறது. பின்னர் சென்னையில் லீனா இயக்கிய முக்கியமான படங்கள் திரையிடப்பட்டு அதுப் பற்றிய விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் லீனாவும் பங்கேற்பார்.
சர்வதேச மட்டத்தில்மாதா மாதம் தவறாது நடத்தி வரும் போட்டி இது இம் மாதம் (ஜூலை )மாதம் நடாத்தப்படுகின்ற கவிதைப் போட்டிக்கு கவிதை ஆர்வம் உள்ளோர்களிடம் இருந்து கவிதைகளை எதிர்பார்க்கின்றோம் தரமான ஒரு கவிதை தெரிவு செய்யப் பட்டு அதற்க்கு (கவிஅருவி )சான்றிதழும் ஒரு சிறப்புக் கவிதை தெரிவு செய்யப் பட்டுஅதற்கு (கவித்தீபம் )சான்றிதழும் வழங்கி வருகின்றோம் இன்னும் வெற்றி பெற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுவருகின்றது. ஏற்கனவே நாம் நடத்திய கவிதைப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மலிக்காபாரூக் ,கவியன்பன் கலாம் , முத்துப் பாலகன் ,ஆயிசா பாரூக் சைலஜா ராகவன் ஆகியோர்களும் இலங்கையை சேர்ந்த ராஜ கவி ராகில் கலைமகன் பைரூஸ் கலா நெஞ்சன் சாஜஹான் போன்றோ வெற்றி பெற்று சான்றிதழ்களும் பெற்று உள்ளார்கள் போட்டிக்கு வரும் 03 கவிதைகள் தெரிவு செய்யப் பட்டு ஆண்டின் இறுதி மாதத்தில் தடாகம் அமைப்பினால் கவிதை நூலும் வெளியிட ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளது எனவே கவிதைகளில் ஆர்வம் உள்ளவர்கள் 30/07/2013 செவ்வாய்கிழமைக்கு முன்னர் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம் சாதி மதம் சார்பான கவிதைகளை அனுப்ப வேண்டாம் கவிதைகள் எதுவானாலும் சரியே ( தலைப்பு இல்லை )விரும்பிய தலைப்பில் எழுதி அனுப்பலாம் உங்களது கவிதைகள் வந்து சேர வேண்டிய ஜிமெயில் முகவரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தயவு செய்து போட்டிக்காக கவிதைகள் அனுப்பவர்கள் யாராக இருந்தாலும் தமது அறிமுகம் முகவரி புகைப்படம் தொடர்பு இலக்கம் ஆகியவற்றை கண்டிப்பாக அனுப்பி வைக்கமாறு அன்போடு வேண்டுகின்றோம் நன்றி
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , அமைப்பாளர் , தடாகம் கலை இலக்கியகல்வி கலாசார சமூக அபிருத்தி சர்வதேச அமைப்பு ./ இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நண்பர்களே பேசாமொழி 8வது இதழ் வெளியாகியுள்ளது. பேசாமொழி முழுக்க் முழுக்க இணையத்தில் இலவசமாக படிக்க கிடைக்கிறது. தமிழில் நல்ல சினிமாவுக்கான மாத இணைய இதழ் பேசாமொழி. இந்த இதழில், மணிவண்ணன் பற்றி மருதுவின் நினைவுகள், யமுனா ராஜேந்திரனின் விஸ்வரூப விமர்சன விமர்சனங்கள், ராஜேஷின் ஷாட் பை ஷாட் மொழியாக்கம், செழியனின் பேசும்படம் குறித்த தினேஷின் திறனாய்வு, ஜெயச்சந்திர ஹஸ்மியின் ராமையாவின் குடிசை ஆவணப்படம் பற்றிய கட்டுரை, ஆவணப்பட இயக்குனர் அமுதனின் நேர்காணல், நல்ல சினிமா எது என்பது குறித்த தியடோர் பாஸ்கரனின் உரை, பந்தய புரவிகள் படம் குறித்த வருணன் விமர்சனம், ரிஷானின் சிங்களப் படம் குறித்த கட்டுரை, பிச்சைக்காரனின் கன்னடப் பட விமர்சனம், தமிழ் ஸ்டுடியோவின் 55 வது குறும்பட வட்டத்தில் நிகழ்ந்தவை என முழுக்கு முழுக்க நல்ல சினிமாவுக்கான அடித்தளமாகவே இருக்கிறது. அவசியம் படியுங்கள்: http://pesaamoli.com/index_content_8.html - அன்புடன் , தமிழ் ஸ்டுடியோ.காம் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அன்புடையீர். வணக்கம். மாதா மாதம் மின்னிதழாக வெளிவரும் காற்றுவெளி இதழுக்கு கவிதை, சிறுகதை,கட்டுரை, விமர்சனம் போன்ற படைப்புக்களை அனுப்புங்கள். கட்டுரை இலக்கியம், ஆன்மீகம், கணினியியல், நூலக்ம் சார்ந்ததாய் இருக்கலாம். அரசியல் கட்டுரைகள் தவிர்க்கப்படும்.தமிழ் சிறுசஞ்சிகைகள் பற்றிய உங்கள் பார்வையை கட்டுரையாக எழுதலாம். நண்பர்களுக்கும் காற்றுவெளியை அறிமுகம் செய்துவையுங்கள்.
21 - ஞாயிறு - யூலை - 2013.
14.30 மணி தொடக்கம் 20.00 மணி வரை.
SALLE POLONCEAU ,
25, RUE POLONCEAU, 75018 PARIS.
மெற்ரோ : LA CHAPELLE
மண்டபத்திற்கு வரும் பாதை: : place de la chapelle >> rue de jessaint >> 25 RUE POLONCEAU
சமூக அக்கறைகொண்ட அனைவரையும் தோழமையோடு அழைக்கின்றோம்.
சர்வதேச சமூகப் பாதுகாப்பு அமைப்பு – பிரான்ஸ்.
A. அசை-சமூக அசைவிற்கான எழுத்தியக்கம்- பிரான்ஸ்
06 19 45 02 76 / 06 51 26 70 75 / 06 23 60 72 65
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
உரையாடலுக்கான முன் அவதானிப்பு குறிப்புக்கள்.
முதல் அமர்வு: இனப்படுகொலை : ஒரு வரலாற்றுப் பார்வை -உரையும் கலந்துரையாடலும்-
வரலாற்று ரீதியில் இனப்படுகொலை எனும் கருத்தாக்கம் எவ்வாறு என்று தோன்றியது? மார்க்சியர்களும், மார்க்சியர்கள் அல்லாதவர்களும் இதனை எவ்வாறு அணுகினர்? யூதர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் பிரச்சினையை உலகம் எவ்வாறு அணுகுகிறது? இனவிடுதலை பெற்ற நாடுகள் எவை? அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? இனம், தேசிய அரசு, மற்றமை குறித்த ஒரு வரலாற்று ரீதியிலான ஆய்வுரையின் பின்பான கலந்துரையாடலாக இந்நிகழ்வு இருக்கும்.

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் ஆண்டுதோறும் ஈழத்திலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம், தமிழியல் விருது வழங்கி வருகின்றது. இந்த வகையில், 2012 ஆம் ஆண்டுக்கான விருதுபெறுபவர்களின் பெயர் விபரங்களை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (யூலை 5 இல்) சோனி அரங்கில் ஆயனரும் சிவகாமியும் முதலாம் மகேந்திர பல்லவரும் அவர் மகன் முதலாம் நரேந்திர பல்லவரும் புலிகேசியும் நாகநந்தியும் அப்பரும் உயிரோடு எழுந்து வந்து காட்சி தந்தார்கள். அவையோர் மெய்மறந்து வைத்த கண் வாங்காமல் கடைசிவரை அவர்களைக் கண்டு களித்தார்கள். ஆறாம் ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிமாநகரைத் தலைநகராகக் கொண்டு கொடி கட்டிப் பறந்த பல்லவர்களது வரலாறு கண்முன் விரிந்தன. மாமல்லபுரம் பல்லவர்கள் சிற்பக்கலைக்கு கட்டியங்கூறி நிற்கிறது. இது 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பெற்றது. முதலாம் நரேந்திரவர்மனின் இன்னொரு பெயர் மாமல்லன். அவனால் எழுப்பப்பட்ட கலைக்கோயில் அவனது பெயரைத் தாங்கி நிற்கிறது. பெரும் பாறைகளைக் குடைந்து கற்றளி என்று அழைக்கப்படும் கோயில்களை கட்டியவர்களும் பல்லவரே. இங்குள்ள பஞ்சபாண்டவ இரதங்களை அவனுடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லன் கட்டியதாகவும், வேறு பல கட்டுமானங்களை அவனுடைய பேரன் பரமேசுவரவர்மனும் அவனுடைய மகன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் இராஜசிம்மனும் கட்டியதாகவும் பல அறிஞர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக கணேச இரதம், கடற்கரைக் கோயில்கள் ஆகியவை இராஜசிம்மனால் கட்டப்பட்டுள்ளதாகவே அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
பேசாமொழி 7ஆவது இதழ் - இணையத்தில் படிக்க..
படிக்க: http://pesaamoli.com அல்லது http://pesaamoli.com/index_content_7.html
நண்பர்களே மாற்று சினிமாவுக்கான இணைய இதழ் "பேசாமொழியின்" 7ஆவது இதழ் வெளியாகியுள்ளது. வெங்கட் சாமிநாதன், யமுனா ராஜேந்திரன், டிராட்ஸ்கி மருது, ராஜேஷ் (கருந்தேள்), எஸ். ஆனந்த் (கோணங்கள்), எம். ரிஷான் ஷெரிப், சுரேஷ் சுந்தர், தினேஷ், அருண் மோ. விஸ்வாமித்திரன் போன்றோரின் கட்டுரைகள் இந்த இதழில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் கிராமத்து படங்களில் தென் மேற்கு பருவக் காற்று எப்படி வித்தியாசப்படுகிறது என்பதை மிக ஆழமாக வெங்கட் சாமிநாதன் விவரித்துள்ளார். பாலஸ்தீன படமான டீவைன் இன்டர்வென்சன்ஸ் படம் பற்றியும், நடிகர் & இயக்குனர் மணிவண்ணன் பற்றிய அஞ்சலிக் கட்டுரையையும் யமுனா ராஜேந்திரன் எழுதியுள்ளார். அனிமேசன் பற்றிய ஓவியர் மருதுவின் தொடரும், நாவலில் இருந்து உருவாக்கப்பட்ட சினிமாக்கள் தொடர்பான கோணங்கள் ஆனந்தின் கட்டுரையும், இலங்கை இயக்குனர் பிரசன்னா விதானங்கே பற்றிய விச்வாமித்ரனின் கட்டுரையும், ரிஷானின் உலகப் படக் கட்டுரையும் மிக முக்கியமாக இந்த இதழில் நீங்கள் தவறவிட கூடாத கட்டுரைகள். பேசாமொழி, இணைய இதழ். கீழ்க்கண்ட இணைய முகவரியில் நீங்கள் இந்த இதழை இலவசமாகவே படிக்கலாம்.
நண்பர்களே, தமிழ் ஆழியின் முதல் ஆறு இதழ்களுக்கான விமர்சனக் கூட்டமும் அதன் இணைய தள அறிமுகக்கூட்டமும் விரைவில் சென்னையில் நடக்கவுள்ளது. இது போன்ற நிகழ்ச்சிகளை மதுரை, கோவையிலும் நடத்த விருப்பம். நிகழ்ச்சியில் இதழ்களை விமர்சித்து பேச விரும்புவர்கள் தெரிவிக்கவும். உங்களிடம் எல்லா இதழ்களும் கையில் இல்லாத பட்சத்தில் பழைய இதழ்களின் பிடிஎஃப் கோப்புகளையும் அனுப்பிவைக்கிறோம். மதுரை, கோவையில் நிகழ்வு ஏற்பாடுகளைச் செய்ய எங்களது தோழமை சக்திகளின் உதவியும் தேவைப்படுகிறது. தமிழ் ஆழி ஜூலை இதழ் சர்வதேச சிறப்பிதழாக உருவாகி, இன்று அச்சுக்கு செல்கிறது. விரைவில் கடைகளில் கிடைக்கும். என்ன செய்யவேண்டும் என நாங்கள் நினைக்கிறோமோ அதில் ஒரு சிறு பகுதியையே செய்துவருகிறோம். என்றாலும் அனைவரின் கருத்துகளைக் கேட்டு, இதழை co-create செய்வது மிகவும் சிறந்தது. அதன் உள்ளடக்கம், வடிவமைப்பு உள்பட அனைத்தையும் நீங்கள் விமர்சித்து வழிகாட்டவேண்டும் என விரும்புகிறேன்.
சென்னை: ஆகஸ்ட்15 நூல் அறிமுக நிகழ்வு

தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும் யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும் விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு. கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள். பன்னிரெண்டு நாடுகளிலிருந்து எழுதப்பட்ட எழுபத்தைந்துக்கும் அதிகமான பனுவல்கள். இலக்கியச் சந்திப்பின் மரபுவழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான களம்.
*நிலாந்தன் *சோலைக்கிளி *யோ. கர்ணன் *அ.முத்துலிங்கம் *தமிழ்க்கவி *மு. நித்தியானந்தன் *சண்முகம் சிவலிங்கம் *ந.இரவீந்திரன் *ஸர்மிளா ஸெய்யித் *தேவகாந்தன் *பொ.கருணாகரமூர்த்தி *ஏ.பி.எம். இத்ரீஸ் *இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் *கற்சுறா *செல்வம் அருளானந்தம் *லெனின் மதிவானம் *லிவிங் ஸ்மைல் வித்யா *றியாஸ் குரானா *எம் .ரிஷான் ஷெரீப் *ம.நவீன் *ஓட்டமாவடி அறபாத் *ஹரி ராஜலட்சுமி *கருணாகரன் *மா. சண்முகசிவா *கறுப்பி *மோனிகா *தமயந்தி *பூங்குழலி வீரன் *எம்.ஆர்.ஸ்ராலின் * திருக்கோவில் கவியுவன் *இராகவன் *லீனா மணிமேகலை *ராகவன் *தேவ அபிரா *கே.பாலமுருகன் *குமரன்தாஸ் *விஜி *யாழன் ஆதி *லெ. முருகபூபதி *தர்மினி *ஆதவன் தீட்சண்யா *அகமது ஃபைசல் *கலையரசன் *அ. பாண்டியன் *அஜித் சி. ஹேரத் *ச.தில்லை நடேசன் *எஸ்.எம்.எம்.பஷீர் *மகேந்திரன் திருவரங்கன் *மஹாத்மன் *லதா *ஷாஜஹான் *பானுபாரதி *யாழினி *விமல் குழந்தைவேல் *மேகவண்ணன் *அஷ்ரஃப் சிஹாப்தீன் *மெலிஞ்சிமுத்தன் *யோகி *அஸ்வகோஷ் *ந.பெரியசாமி *தேவதாசன் *ராஜன் குறை *ஷோபாசக்தி... மற்றும் பலரின் எழுத்துகளுடன் எண்ணூறுக்கும் அதிகமான பக்கங்கள், 'கருப்புப் பிரதிகள்' வெளியீடு.
பாரதியார் தித்திக்கும் தமிழில் தெவிட்டாத சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொற் புதிது சோதிமிக்க நவகவிதை என்னாளும் அழியாத மகா கவிதைகள் எழுதித் தமிழ்மொழிக்கு ஒரு புதிய பொலிவும் அழகும் சேர்த்தவர். இலக்கணப் பண்டிதர்களிடம் அகப்பட்டுக் கிடந்த தமிழை பாமரர்களும் சுவைக்கும் படி பாடல்கள் எழுதியவர். ஆனால், பாரதியார் கவிஞன் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த கதாசிரியர், கட்டுரையாசியர், மேடைப் பேச்சாளரும் ஆவர். பாரதியார் கம்பர், திருவள்ளுவர், இளங்கோ போன்ற புலவர்களைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை என்று முரசு கொட்டியவர். அவர் கம்பர், திருவள்ளுவர், இளங்கோ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் பின்வருமாறு எழுதினார்: "தமிழ் நாட்டில் இது போன்ற விஷயங்களைக் கவனிப்பார் இல்லை. தமிழ் நாட்டு வீரருக்கும் கவிகளுக்கும் லோகோபகாரிகளுக்கும் இதுவரை எவ்விதமான திருவிழாவையும் காணவில்லை. பூர்வீக மகான்களின் ஞாபகத்தைத் தீவிரமான பக்தியுடன் வளர்க்காத நாட்டில் புதிய மகான்கள் பிறக்க வழியில்லை. தப்பித் தவறி ஓரிருவர் தோன்றினாலும் அவர்களுக்குத் தக்க மதிப்பு இராது. பண்டைக்காலத்து சக்திமான்களை வியப்பதும் அவர்களுடைய தொழிற் பெருமையை உலகறிய முழக்குவதும் கூடியவரை பின்பற்ற முயல்வதுமாகிய பழக்கமே இல்லாத ஜனங்கள் புதிய சாமான்களை என்ன வகையிலே கவனிப்பார்கள்? எதனை விரும்புகிறாமோ அது தோன்றுகிறது. எதை ஆதரிக்கிறோமோ அது வளர்ச்சி பெறுகிறது; பேணாத பண்டம் அழிந்து போகும். பழக்கத்தில் இல்லாத திறமை இழந்துவிடப்படும். அறிவுடையோரையும் லோகோபகாரிகளையும் வீரரையும் கொண்டாடாத தேசத்தில் அறிவும், லோகோபகாரமும், வீரமும் மங்கிப்போகும்."


வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை' நூல் வெளியீடும் இலக்கிய, ஊடக மூத்த பெண் ஆளுமைகள் இருவருக்கான கௌரவிப்பும் எதிர்வரும் 2013 ஜூலை 07 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கொழும்பு முஸ்லிம் நூலகமும், இளம் மாதர் முஸ்லிம் பேரவை (வை. டப்ளியு.எம்.ஏ) ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, வைத்திய கலாநிதி தாஸிம் அகமது அவர்களின் தலைமையில் இடம்பெறவிருக்கிறது.
தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கு 'ஒண்டாரியோ ட்ரில்லியம் ஃபவுண்டேசன்' என்னும் அறக்கட்டளையினால் $8,500 உதவித் தொகையாக இவ்வாண்டு வழங்கப்பட்டுள்ளது. 100 சமகாலத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் 'நிலவற்ற இரவு' ("Moonless Night") என்னும் பெயரில் வெளிவரவுள்ளது. அதற்காகவே, மேற்படி தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பதற்காகவும், வெளியிடுவதற்காகவும் தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழ்க் கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்படும் 100 கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும். வெளிவரும் நூலானது பொதுசன நூலகங்கள், சமுக அமைப்புகளில் மட்டுமல்லாது இணையத்திலும் விற்பனைக்கு விடப்படும். இவ்வாறு ஒண்டாரியோ டிரில்லியம் ஃபவுண்டேசன்' தனது இணையத்தளத்தில் அறிவித்திருக்கிறது. 1999 இலிருந்து இதுவரையில் பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கு $500,000ற்கும் அதிகமான உதவித் தொகையினை மேற்படி 'ஒண்டாரியோ ட்ரில்லியம் ஃபவுண்டேசன்' என்னும் அமைப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உதவித் தொகை பெற்ற அமைப்புகளின் விபரங்களை 'ஒண்டாரியோ ட்ரில்லியம் ஃபவுண்டேசன்' தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. யாரும் சென்று பார்க்கலாம். அதன் இணையத்தள முகவரி: http://www.otf.ca/en/index.asp
இலங்கையின் தமிழ் இலக்கியத் துறை இன்று வரை சமூக நலன் சார்ந்ததாக, மக்கள் வாழ்வோடு இணைந்ததாக இருப்பதற்குக் அடிப்படைக் காரணம் முற்போக்குக் கருத்துகள் பூவோடு மணம் போல, எமது வாழ்வின் அங்கம் ஆகிவிட்டதே காரணம் எனலாம். கே.கணேஸ் முதற்கொண்டு இன்றைய எழுத்தாளர்கள் வரையான பெருந்தொகையான முற்போக்குக் கருத்துக் கொண்ட எழுத்தாளர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை மறந்துவிட முடியாது. இன்று காலம் அவர்களில் பலரை எம் மத்தியில் இல்லாது மறைந்துவிடச் செய்துவிட்டது. இருந்தபோதும் அந்த மூத்த எழுத்தாளர்களில் ஒரு சிலர் எம்மிடையே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முதுமையின் தாக்கம் அவர்களின் உடலை வலுக்குன்றச் செய்துவிட்டபோதும் அவர்களில் சிலர் இன்றும் தங்கள் பங்களிப்பை சமூகத்திற்கு வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். வாழும் காலத்திலேயே அவர்களைக் கெளரவிக்க வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் 'இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்' விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் ஞாயிறு 30.06.2013 மாலை 5 மணிக்கு "மூத்த முற்போக்கு எழுத்தாளர்களுக்கான கெளரவிப்பு" விழா கொழும்பு தமிழ் சங்க சஙகரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் என்ற குறிப்புடன் அழைப்பிதழ் கிட்டியுள்ளது. கூட்டத்திற்கு செல்வி திருச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்குகிறார்.

இனப்படுகொலைகளின் கொடுந்துயரம்: வெலிக்கடை
முதல் முள்ளிவாய்க்கால் வரை.

'பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவன் இலக்கியத்துறையில் முழுநேரமாக ஈடுபட்டு அதிக நூல்களை வெளியிட்டு சாதனை படைத்து வருகிறார். அவரது சகோதரர்கள் யாவரும் கலை இலக்கியம், மருத்துவம், அரசியல் துறைகளில் ஈடுபட்டுழைத்தவர்கள் தான். இளங்கோவன் சிறுகதைத் தொகுதி 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்" என்ற பெயரில் இந்தி மொழியில், அண்மையில் புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டு இளங்கோவன் கௌரவிக்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளிப்பதாகும். அவரது புதிய நூல்களின் அறிமுக நிகழ்வுக்கு பாரிஸ் நகரில் வாழும் கலை இலக்கியப் படைப்பாளிகள், அபிமானிகள் பெருமளவில் திரண்டு வந்து ஆதரவளிப்பது ஆரோக்கியமானதாகவுள்ளது."

- சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் தலைவரும் அகராதி தொகுப்பாளருமான கலைமகள் செய்தியாளர்களுக்கு சீன-தமிழ் அகராதியைக் காண்பித்தபோது எடுத்தபடம். -
மனித உரிமைகளின் மூலம் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு; Parliamentarian Forum on Human Rights For Global Development
07-06-2013 - இலங்கைத் தமிழர் புதுடெல்லி மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுகிறது.
நாள்: ஜுன் 14, 15 – 2013. இம்மாதம் 5 மற்றும் 6ம் திகதிகளில் டெல்லியில் நடைபெறுவதாக இருந்த இலங்கைத் தமிழர் மாநாடுää தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களின் (29-05-2013) வேண்டுகோளுக்;கிணங்க குறித்த மாநாடு இம்மாதம் (ஜுன்) 14 மற்றும் 15ம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. திட்டமிட்டப்படி இந்த மாநாடு குறித்த நாளான ஜுன் 14, 15ஆம் திகதிகளில் டெல்லி அரசியல் அமைப்பு மண்டபத்தில் நடைபெறுகிறது என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வண்ணம்,
சீ. வசீகரன்
இலங்கைத் தமிழர் விவகாரச் செயலாளர் (PFHRGD)
Parliamentarian Forum on Human Rights For Global Development
B-3/73 Basement Floor Safdarjung Enclave, New Delhi - 110029
www.pfhrgd.org இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Telephone: 91 11 2610 2873 Fax: 91 11 2373 1247
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கவிஞர் இந்திரன் கலைத் தூதர் போன்று தமிழகத்திலிருந்து குவாடெலூப் (Guadeloupe) தீவுக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பும் வழியில் உறவுகளைச் சந்திப்பதற்காக மூன்று நாட்கள் பாரிஸ் மாநகரில் தங்கியுள்ளார். நேற்று மாலை (07 - 06 - 2013) பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டத்தின் குறுகிய கால ஏற்பாட்டில் படைப்பாளிகள் - ஊடகவியலாளர்கள் - இலக்கிய அபிமானிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்வு இந்திரனுடன் நடைபெற்றது. பாரிஸ் மாநகரில் ''ஸ்ராலின்கிராட் மெற்றோ" நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ''சமரா கோணர் " உணவகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டத்தின் தலைவர் வி. ரி. இளங்கோவன் - கவிஞர் தா. பாலகணேசன் - திருமதி பாலகணேசன் - கவிஞர் க. வாசுதேவன் - ''தமிழமுதம்" வானொலி இயக்குனர் எஸ். கே. ராஜன் - எஸ். குமாரதாஸ் நேசன் - இ. குலம் - மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு உரையாடினர்.