ஆஸ்திரேலியா: மெல்பனில் நடேசனின் மூன்று நூல்களின் விமர்சன அரங்கு
அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை சமூகங்களின் கழகத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளரும் மிருக மருத்துவருமான டொக்டர் நடேசனின் மூன்று நூல்களின் விமர்சன அரங்கு எதிர்வரும் 04 - 05 - 2014 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 5 மணிவரையில் GLENWAVERLEY R S L மண்டபத்தில் (161, COLEMAN PARADE, GLENWAVERLEY - VICTORIA - 3150) ( GLENWAVERLEY ரயில் நிலையத்திற்கு முன்பாகவுள்ள மண்டபம்) நடைபெறும். ஏற்கனவே தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியான வண்ணாத்திக்குளம் நாவலின் சிங்கள மொழிபெயர்ப்பு - சமணலவெவ - தமிழில் வெளியான உனையே மயல் கொண்டு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு Lost in you மற்றும் இந்த ஆண்டு வெளியான புதிய நாவல் அசோகனின் வைத்தியசாலை ஆகிய மூன்று நூல்கள் இந்த விமர்சன அரங்கில் திறனாய்வு செய்யப்படும்.

















பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









