சிறுகதை: கொங்கிறீட் கலவரத்தில் மண்ணின் குழப்பம்! - டீன் கபூர் -

* ஓவியம் - AI
இந்த மண்ணின் வாசம், காற்றின் சிறகுகள், புல்லின் நுனி போன்றவை எல்லாம் நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருந்தன. ஆனால், காலத்தின் கடுமையான மாற்றங்கள் அதனைத் தாண்டி சென்று விட்டன.
முந்தைய நாட்களில் ஆத்து மேடு, ஆழமான நீர் வட்டைகள், நிழல்வாகை, நிழல் தரும் ஆலமரங்கள் என்று அந்த ஊர் ஒவ்வொரு துளியிலும் இயற்கையின் முத்திரையிட்டிருந்தது. அந்தக் கதைகள், அந்த மரங்களின் கீழ் சுமந்த கனவுகள். அனைத்தும் இப்போது எவருக்கும் தெரியாது. மண், காற்று, மரம், இலை - இதுவே அங்கு ஒரு காலத்தில் இயற்கையில் சொல்லானது. ஆனால், இப்போது கொங்கிறீட் காட்டின் கொடூரமான கட்டிடங்கள், உயரமான மாடிகள், வெறுமையின் அடையாளமாக நிற்கின்றன.
காலத்தின் வழியில் நிலைத்த இயற்கை இப்போது மாற்றத்திற்குள் சிக்கித் திக்குமுக்காடுகிறது. ஒவ்வொரு இரவிலும், அந்த நகரத்தின் மின்னல் விளக்குகளுக்குள் சிக்கி, பழைய கதைமாந்தர்கள், மெல்ல ஒடிந்து, மறைந்து செல்கின்றனர். ஒரு மரத்தின் நிழல் நினைவாகவே உள்ளது. அதன் கீழ் சில மண்மேடுகள் மட்டுமே இருந்து. அவற்றில் புதைந்து கிடப்பது மண்ணின் அழகு.
இந்த நகரில் பிறக்கும் குழந்தைகள் நிலத்தின் மண்ணில் விளையாடாமல், கொங்கிறீட்டின் மைதானத்தில் மட்டும் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அந்த பழைய கதைகளின் சொற்கள் அவர்களிடம் எளிதில் கற்பிக்க முடியாது.
ஆனால், ஒருவர் மட்டும் அந்த நகரத்தின் நடுவே தனது வீட்டுக் கதவைத் திறக்க அங்கு அவன் மண் மணம் அடிக்கிறது. அவன் எழுத்துகளின் மூலம். அந்த மண்ணின் அழகை மீண்டும் எழுந்து வரும் வகையில் எழுதுகின்றான்.
இந்த ஊரின் மானிடக் கூட்டங்களில் மறைந்த இயற்கையின் குரலை காப்பாற்ற, அவனது குரல் - அவனது எழுத்துக்கள் மட்டுமே மீதமிருக்கின்றன. காலம் மாறிவிட்டது. ஆனால் இந்த சிறுகதையின் மூலமாக, அந்த நினைவுகள் மறையாமல் விடும் என நினைக்கிறான்.








ஆஸ்திரியாவின் தலைநகரான வீயன்னா, ஐரோப்பாவின் முக்கியமான மனிதர்கள் பலர் பிறந்து வளர்ந்த நகரமாகும். புதிய சங்கீதம், கட்டிடக்கலை, மருத்துவம் என பல விடயங்கள் உருவாகிய நகரம் என நான் கேள்விப்பட்டிருந்தாலும், நமக்கு யார் முதல் நினைவுக்கு வருவார்கள்? நல்லவற்றை விட கெட்டவைகள் நமது உள்ளங்களில் அதிக காலம் நீடிப்பது உண்மையே! மொர்சாட்,பீத்தோவன், சிக்மண்ட் பிரைட் போன்றவர்கள் வசித்த நகரமான போதிலும், வரலாற்றில் ஈடுபாடான எனக்கு முதல் வருவது ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் நினைவுகளே.




எமக்கு பத்து வயதிருக்கும். மாலைப்பொழுதின் இதமான சுகத்தில் தேகம் திளைக்க கடைச்சுவாமி கோயில் ஒழுங்கைக்குள் நாலுபேர் கூடி ரோட்டில கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம்.அக்காலம் 69 களாக இருக்கலாம். கூடுகின்ற கூட்டத்தை பொறுத்து முதலில ரோட்டிலதான் ஆட்டம் ஆரம்பிக்கும்.அதற்கு விக்கெற் இருக்காது.மாறாக,ஒரு மட்டையை எடுத்து அதற்கு ஏதாவது பொறுப்பு வைத்து எதிராய் ஒரு கல்லை வைத்து அங்கிருந்து போலிங் போட 'பற்ஸ்மான்' போலை மிஸ் பண்ணாமல் தடுப்பதுவே ஆட்டத்தின் விதிமுறை.3 தடவை தவறவிட்டால் அவர் ஆட்டமிழப்பார். தவிர,முண்டு வைத்திருந்த மட்டையில் பந்து பட்டாலும் ஆட்டமிழப்பது உறுதி.அதேநேரம் பந்தை கூடிய தூரத்திற்கு அடிக்கவும் கூடாது. அப்படியே மெதுவாக ஆட்டம் ஆரம்பிக்க, எங்களின் குரல்களை கேட்டதும் பக்கத்து வீடுகளிலிருந்து அடுத்தவர்களும் வந்து இணைவார்கள். இணைபவர்கள் இளசுகள் மட்டுமல்ல, பெரியவர்களும்தான்.


அவுஸ்திரேலியா – மெல்பனில் நீண்டகாலம் மருத்துவராக இயங்கிவரும் சியாமளா நடேசன் அவர்களினால் உருவாக்கப்பட்டுள்ள , புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் அறக்கட்டளையின் வருடாந்தக் கூட்டம் கடந்த ஆண்டு ( 2024 ) இறுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குறிப்பிட்ட அறக்கட்டளையின் இயக்குநர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களுக்கமைய, கடந்த வருடத்திற்கான செயற்பாட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அறிக்கையின் விபரங்கள் பின்வருமாறு:

“வாய்விட்டுச்சிரித்தால் நோய்விட்டுப்போகும்.“ என்பார்கள்.





நோய் – மருந்து. மருந்து - நோய் என்ற இந்த இரண்டும் மனித வாழ்வில் நீங்காத இடத்தை பிடிக்க கூடியதாக உள்ளதை நாம் பார்க்க முடிகிறது. நோய் நீங்குவதற்கு மருந்து உண்பதும் உண்ட மருந்தினால் உண்டாகக்கூடிய பக்க விளைவு குறித்தும் இன்று நாம் அதிகம் கவனம் செலுத்துகிற ஒரு சூழலை பார்க்க முடிகிறது. இத்தகைய பின்புலத்தில் தமிழ் மருத்துவம் குறிப்பாக, பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இருந்த மருத்துவத்தின் செயல்பாடு அச்செயல்பாடு இன்றைய காலகட்டத்தில் உள்ள மக்களுக்கு எந்த வகையில் பொருத்தம் உடையதாக இருக்கிறது? என்பது குறித்த செய்தியை நாம் திருக்குறளின் பின்புலத்தில் பார்க்கிறோம். அவற்றைக் குறித்த ஒரு பார்வையை இந்த கட்டுரை முன்வைக்கிறது.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









