'நாட்டியப் பேரொளி' பத்மினியுடன் கனடாவிலிருந்து இயங்கும் TVI தொலைக்காட்சி நிறுவனத்தினர் நடாத்திய நேர்காணலை இரு பகுதிகளாகத் தனது 'முகநூல்' பக்கத்தில் நணபர் வரன் மகாதேவன் பதிவு செய்துள்ளார்'நாட்டியப் பேரொளி' பத்மினியுடன் கனடாவிலிருந்து இயங்கும் TVI தொலைக்காட்சி நிறுவனத்தினர் நடாத்திய நேர்காணலை இரு பகுதிகளாகத் தனது 'முகநூல்' பக்கத்தில் நணபர் வரன் மகாதேவன் பதிவு செய்துள்ளார்'நாட்டியப் பேரொளி' பத்மினியுடன் கனடாவிலிருந்து இயங்கும் TVI தொலைக்காட்சி நிறுவனத்தினர் நடாத்திய நேர்காணலை இரு பகுதிகளாகத் தனது 'முகநூல்' பக்கத்தில் நணபர் வரன் மகாதேவன் பதிவு செய்துள்ளார். தமிழகம் மட்டுமின்றி அனைத்திந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் நன்கறியப்பட்ட நாட்டியத் தாரகை, நடிகை இவர். ரஷியத் திரைப்படமொன்றில்கூட அம்மொழியினைக் கற்று நடித்திருக்கின்றார். அதன்பொருட்டு ரஷியாவில் கூட அந்நாட்டு அரசு அவரது உருவத்தைத் தாங்கிய முத்திரையொன்று வெளியிட்டுள்ளது. இவ்விதமாக அனைத்து இந்தியாவும் பெருமைப்படத்தக்க நடிகையான இவர் மறைந்தபொழுது அவருக்கு உரிய கெளரவத்தினை அன்றைய தமிழக அரசோ அல்லது இந்திய அரசோ கொடுக்கவில்லை. அதே சமயம் தமிழகத்து நடிகையான ஸ்ரீவித்யா கேரளாவில் மறைந்த பொழுது கேரள அரசு அவருக்கு அரச மரியாதை கொடுத்து இறுதி யாத்திரையைச் சிறப்பித்தது. வரன் மகாதேவன் பத்மினியின் மறைவிற்கு முன், 2004இல் நியூஜேர்சியிலுள்ள பத்மினியின் இல்லத்தில் வைத்து நடாத்திய  இந்நேர்காணலில் பத்மினி பல்வேறு விடயங்களைப் பற்றி மனந்திறந்து பேசுகின்றார். பல்வேறு தகவல்களை அவரது நேர்காணலிலிருந்து அறிய முடிகின்றது. பதிவுகள் வாசகர்களுக்காக மேற்படி நேர்காணலிற்கான You Tube இணையத் தொடுப்புகளைக் கிழே தருகின்றோம்:

நாட்டியப் பேரொளியுடனான நேர்காணல் 1: http://youtu.be/Rh1TaM09hdw
நாட்டியப் பேரொளியுடனான நேர்காணல் 2: http://youtu.be/sbzd0XwWqDA


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R