வ.ந.கிரிதரனின் கட்டடக் கா(கூ)ட்டு முயல்கள் – ஒரு பாா்வை! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
- ஜீவநதி வெளியீடான வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' பற்றி எழுத்தாளர் ரஞ்ஜனி சுப்பிரமணியத்தின் பார்வையிது. - பதிவுகள்.காம்-
அதிர்வுகளையும் திடீர் பாய்ச்சல்களையும் அதிகம் தராத, ஆனால் உணர்வுகளை ஊடுருவும் வார்த்தைகளைக் கொண்டு, புலம் பெயர்ந்த மனிதர்களின் மனப் போராட்டங்களைக் கூறும் செம்மையான படைப்பாக, வ.ந.கிரிதரனின் கட்டடக் கா(கூ)ட்டு முயல்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பினை இனம் காணலாம்.
புலம் பெயர்ந்த முதலாம் தலைமுறையினரின் உள்ளத்து உணர்வுகள் சிக்கலானவை. புதிய தாயகத்தில் காலூன்றித் தலையெடுக்கவும் கலாசார முரண்பாடுகளை எதிர்கொள்ளவும், மொழிவழக்கினை அறிவதற்கும், தனக்கோர் அடையாளத்தை நிலை நிறுத்துவதற்குமான முயற்சிகள் மிகமிகக் கடினமானவை. புலம்பெயராத வாசகர் ஒருவரால் இவற்றை உள்ளபடி உணர்வது சிரமமானது. எனினும் அந்த இலக்கினைப் படைப்பாளி வெற்றிகரமாக எட்டியுள்ளார் என்றே கூறலாம். புலம் பெயர்வாளனாகவும், அவனை உற்று நோக்கும் வேறொரு மனிதனாகவும் எதிர்நின்று தன் புதிய தாயகத்தின் உள்ளக பரிமாணங்களை, இழந்த தாயகத்துடன் எடைபோடும் அணுகுமுறையில் வாசகருக்குப் புதியதோர் வாசலைத் திறந்து விட்டிருக்கிறார் கதாசிரியர்.
சம்பவக் கோர்வைகளால் கதைகளின் போக்கை நிர்ணயிக்காமல், உணர்வுகளின் மிகச்சிறிய இழைகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட இருபத்தேழு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பு, ஜீவநதி பதிப்பகத்தின் 194 ஆவது வெளியீடாகும்.
கனடாவின் டொராண்டோ மாநகரத்தின் பெருவீதிகளில், தனக்குள் தத்துவார்த்த விசாரணைகளையும் விசாரங்களையும் நடாத்திக் கொண்டு, புலம்பெயர்ந்த பல்தேச மனிதர்களைத் தன் பயணப்பாதை எங்கும் காணும், ஈழத்துப் புலம்பெயர்வாளர் ஒருவர் கதைகளின் நாயகனாகப் பாத்திரமேற்க, அவரை அகக்கண்ணால் பின்தொடரும் வாசகர் காணும் காட்சிகள் சிறந்ததோர் தளத்தில் சிந்திக்க வைக்கின்றன. கதைமாந்தர் உதிர்க்கும் தத்துவச் சாரல்களால் மனம் இடையிடையே சிலிர்த்து வியக்கிறது. வந்தேறுதேசத்தின் முதலாம் தலைமுறையினரின், ஆரம்பகால சோகங்களில் இடையிடையே எட்டிப் பார்க்கும் அங்கதம் சிறு புன்னகையுடனான ஆறுதலை தருகிறது.

இத்தொகுப்பில் உள்ள பல கதைகளை (ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை, மான்ஹோல், பொந்துப்பறவைகள், கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள், சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை!, சுமணதாஸ் பாஸ்….) ஏற்கனவே வாசித்துவிட்டேன். இருப்பினும் தொகுப்பாக ஒருங்கு சேர்ந்து பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.
துடுப்பாட்டத்தில் ஓட்டங்களை எண்ணுவது போல, ரஸ்ய – உக்ரைன் யுத்தத்தில் நாட்களை எண்ண வேண்டிய துர்ப்பாக்கிய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது, கனடாவில் அந்தந்த நாட்டு ரசிகர்கள் தங்கள் நாட்டுக் கொடிகளைத் தங்கள் வண்டிகளில் பறக்கவிடுவது சாதாரண நிகழ்வாக இருக்கும். ஆனால் இம்முறை உக்ரைன் கொடிகளைப் பறக்க விட்டபடி செல்லும் பல வண்டிகளை வீதிகளில் காணமுடிகின்றது. இன்றுடன் யுத்தம் ஆரம்பித்து 27 நாட்களாகிவிட்டன. ரஸ்யா தனது ஆயுதப் பலத்தை மேற்கு நாடுகளுக்குக் காட்டுவதற்காக 18 ஆம் திகதி பரிட்சார்த்தமாக உக்ரைனில் மேற்கே உள்ள டெல்யாரின் என்ற கிராமத்தில் இருந்த இராணுவ ஆயுதக் களஞ்சியத்தை ‘கைப்பர்சோனிக் ஏவுகணை’ மூலம் தாக்கி அழித்திருக்கின்றது. இந்த ஏவுகணை ஒலியைவிட 5 மடங்கு வேகம் கொண்டதால், இந்த ஏவுகணையைத் தாக்கி அழிப்பது கடினமானது. அமெரிக்காவிடம் தற்போது இருக்கும் பாதுகாப்பு ராடர்களால் இதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம் என்று ஆய்வாளர் கருதுகின்றனர். இது போன்ற ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கக்கூடிய இரும்புக் கவசங்கள் கொண்ட 3 கப்பல்கள் அமெரிக்காவிடம் இருந்தாலும், இன்னும் அவை வெள்ளோட்டம் விடப்படவில்லை.
-
வ.ந.கிரிதரன் எழுதிய இந்த புனைகதை தொகுதியில் 25 சிறுகதைகளும் 2 குறுநாவல்களும் அடங்கியுள்ளன. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்பது விட்டு வந்த நாட்டின் வேர்களை நோண்டிக் கொண்டிருப்பதல்ல என்பது மட்டுமல்லாமல் வாழும் நாட்டின் கிளைகளுடன் பின்னிப் பிணைத்து இலக்கியம் படைப்பதே எனும் கருத்தை கதாசிரியரின் ஒவ்வொரு கதையும் சொல்லிப் போகிறது.






'அறிஞர் அ.ந.கந்தசாமி' என்று அவரது புலமையின் காரணமாக அழைக்கப்பட்டவர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி. கலாநிதி க.கைலாசபதி அவர்களே தனது 'ஒப்பியல் இலக்கியம்'நூலை இவருக்குச் சமர்ப்பித்திருக்கின்றார். அச்சமர்ப்பணத்தின் பின்வருமாறு கூறியிருப்பார்:

ரஷ்யா-உக்ரைன் போரை ஒரு சமாதான நிலைக்கு கொண்டு வருவதில் பிரான்சின் மெக்ரோன் முதல் அமெரிக்க பைடன் வரை முயற்சி எடுத்ததாய் கூறப்பட்டாலும் அம்முயற்சிகளின் மொத்த பெறுபேறு அல்லது மொத்த உள்நோக்கம் எவ்வகைப்பட்டது - இது போரை மேலும் தூண்டிவிட திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளா அல்லது உண்மை சமாதான விருப்பம் கொண்ட பேச்சு வார்த்தைகளா என்பதெல்லாம் கேள்வி குறிகளாகின்றன. இருந்தும் இப்பின்னணியில் துருக்கியும் இஸ்ரேலும் மேற்கொண்ட முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனலாம். காரணம், மேற்படி இரு நாடுகளின் நிலைமைகளும், இப்போரால் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைக்கு தள்ளப்பட்டு, சற்றே சங்கடத்துக்குள் அமிழ்த்தப்பட்டவைதான் என்பதில் சந்தேகமில்லை.

நீண்ட நெடுநாளாக சங்க இலக்கியங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்து வந்தது. அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் வழியாக எனக்கு ஓர் அரும்பெரும் வாய்ப்பு கிட்டியது. ஆம் பாரதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமெரிக்காவின் ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் நிகழ்த்திய ஞானபாரதி விருதுக்கான நான்கு கட்ட பேச்சுப் போட்டி நடைபெற்றது. அதில் அரையிறுதிச் சுற்றில் சங்க இலக்கியங்களுள் ஒன்றான பட்டினப்பாலையையும் , நெடுநல்வாடையையும் அறியும் வாய்ப்பு கிடைத்தற்கரிய வரமாக கிடைத்தது.தமிழை வாழ்த்துவதற்கும் , வளர்ப்பதற்கும் கடின உழைப்பை உரமாக இட்டு தமிழ்த்தொண்டு ஆற்றி வரும் அமரிக்காவின் ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்திற்கு நிச்சயம் தமிழ் கூறும் நல்லுலகம் சார்பாக கோடி நன்றிகள்.

கையில்லா பலருள்ளார் காலில்லா பலருள்ளார்
என் முன்னைய பதிவொன்றில் க.சச்சிதானந்தன் அவர்களைப்பற்றிக் குறிப்பிடுகையில் எழுத்தாளர் க.சச்சிதானந்தன் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாற்றிய முகநூல் நண்பர் கு.சரவணன் அவர்கள் " சச்சிதானந்தனை தாங்கள் எழுத்தாளர் என்று சுட்டுவது பொருத்தமற்று உள்ளது. பண்டிதர் அல்லது மதுரைபண்டிதர் என்று சுட்டுவதே சிறப்பாக அமைகின்றது" என்று கூறியிருந்தார்.





பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









