'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் ' இருபத்து நான்காம் வயதில் பாரதி' பற்றி.. (பகுதி 2) - ஆன்ம உணர்ந்திறன்! - வ.ந.கிரிதரன் - -

இருபத்திநான்காம் வயதில் பாரதி:: ஆன்ம உணர்ந்திறன்
இப்பகுதியின் ஆரம்பத்தில் ஜோதிகுமார் 'மனிதனது இதய தாபங்கள் அனைதையும் சரியாக உள்வாங்கி, அவற்றை நல்ல முறையில் எதிரொலிக்கக் கூடியதாக, தன் ஆன்மாவை நுண் உணர்வுமிக்கதாய் மாற்றி அமைத்துக்கொள்ள உண்மைக் கலைஞன் வேண்டப்படுகின்றான். ஆனால், இத்தகைய ஆன்மாவை வடிவமைப்பதென்பதும், அதனைத் தக்கவைத்துக்கொள்வது என்பதும் கடின செய்கையே.' என்று குறிப்பிடுகின்ரார். இது ஒரு கேள்வியை எழுப்புகிறது. அது - ஜோதிகுமார் ஆன்மா என்னும் கருதுகோளை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதுதான். மார்க்சியவாதிகள் ஆன்மா என்னும் கருதுகோளை ஏற்பதில்லை. அவர்கள் பொருள்முதல்வாதிகள். ஆன்மா என்று ஒன்றிருப்பதை ஏற்றுக்கொள்வதில்லை. உண்மையில் ஆன்மா என்று இங்கு ஜோதிகுமார் கருதுவது எதனை?
ஆன்மா என்று ஜோதிகுமார் கருதுவது , பொருள்முதல்வாதிகள் கருதுவது போல் , உடலிலிருந்து தனித்து இயங்குமொன்றினை அல்ல , மாறாகச் சிந்தையைத்தான். அதனைத்தான் இந்நெடுங்கட்டுரையில் மூன்றாம் ப்குதியில் வரும் இவ்வரி புலப்படுத்துகின்றது: "ஓன்று அவனது ஆன்மாவில் (சிந்தையில்) தட்டுப்படக் கூடிய முரண்''
இங்கு பாரதியார் ஆன்மாவுக்கு இன்னுமோர் அர்த்தமாகச் சிந்தை என்று கருதுவதையும் அறிய முடிகின்றது. சிந்தை என்பது மார்க்சியவாதிகளின் கருத்துப்படி பொருள்வயமான மூளையின் செயற்பாடு. மூளையில்லையேல் சிந்தையில்லை என்பது அவர்கள் கருத்து.மாறாகக் கருத்துமுதல்வாதிகளோ ஆன்மா என்பது உடலிலிருந்து வேறானது என்று கருதுவர்.
இப்பகுதியில் பாரதியார் மதம், கடவுள் பற்றிய தேடல்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. கடவுள்கள் பலர் இருப்பதை விவேகானந்தரைப் போல் பாரதியும் நிராகரிக்கின்றான். பாரதியார் மீதான சுவாமி விவேகானந்தரின் தாக்கம் விரிவாக ஆராயப்படுகின்றது. பிரம்மம் என்னும் ஒன்றே அனைத்துக்கும் அடிப்படை . அதே சமயம் இவ்விதமான கடவுள், மதம் பற்றிய தேடல்கள் மானுட சமுதாயத்திலிருந்து விலகி, தனித்து , தவங்களில் ஈடுபடுவதாக இருக்கக் கூடாது. அது அங்கிருந்து இறங்கி வந்து மக்களுடன் கலந்து நிகழ்வதாக இருக்க வேண்டுமென்பது பாரதியின் நிலைப்பாடு. இதனை அவர் எவ்வாறு வந்தடைந்தார்?





கம்பர் இயற்றிய இராமாயணத்தில் கூறப்படும் கதாப்பாத்திரங்களுள் முக்கியமானவர்களுள் ஒருவர் ஜனகர். இவர் மிதிலாபுரியின் மன்னர். சீதையைக் கண்டு எடுத்து வளர்த்தவராவார். மாவீரர். குடிமக்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தார்.பெரு வேள்விகள் செய்தவர். கம்பராமாயணத்தில் ஜனகரின் மாட்சி குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.
பிள்ளைப்பருவத்துக்கும் (childhood) வளர்ந்தோர் என்ற நிலைக்கும் (
]



யப்பானிய உணவும் அவர்கள் பூங்கா போல் கலாச்சாரத்தின் ஒரு கூறாகும் . ஆரம்பத்திலிருந்தே யப்பானிய வீடுகள் சிறியவை. அவர்கள் விருந்தினர்களை வீட்டில் உபசரிப்பதில்லை. உணவகங்களிற்கே அழைப்பார்கள் . மேலும் அவர்கள் உணவகங்கள் சிறியன. ஆனால், ஏராளமானவை . ஒரு செய்தியில் 160,000 உணவகங்கள் டோக்கியோவில் என நான் அறிந்தேன் (In Tokyo alone, there are an estimated 160,000 restaurants—10 times as many as in New York.) இதை விட முக்கியமானது பத்திரிகையாளர்கள் ஒரு உணவகத்தைத் தேடிச் செல்வார்கள் அதேபோல் தீயணைப்பு படையின் ஒரு உணவகத்தை நோக்கிச் செல்வார்கள். ஒவ்வொரு உணவகமும் ஒவ்வொரு உணவுக்கு விசேடமானது அதாவது நமது பிராமணாள் தோசை கடை, ஆப்டீன் பிரியாணி கடை போல். தொடர்ச்சியாகப் போவதால் வாடிக்கையாளர்களும் உணவகத்தினருக்கிடையே ஒரு அறிமுகம் , அன்னியோன்னியம் உருவாகி உள்ளது.
வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் மூன்று கட்டங்களாக பிரிபடலாம். ஒன்று, காந்தியாலும் தாகூராலும் கவரப்பட்ட நிலையில், அவர் இளைஞனாய் இருந்த போது, தோன்றிய மனக்கசிவுகள். மற்றது, நேருவின் ஆசிர்வாதத்துடன், இலங்கை இந்திய காங்கிரசானது ஸ்தாபனமுற்ற நிலையில் வேலுப்பிள்ளை தொழிலாள சாரியுடனும் தொழிற்சங்கத்துடனும் இணைந்த ஒரு காலப்பகுதி. மூன்றாவது, திருமணம் முடிந்து, ஒரு குடும்ப மனிதனாகிவிட்ட ஒரு காலப்பகுதி.




எளிமை, சந்தநயம், அழகியல் சித்தரிப்பு என்ற பின்னணியில் அமைந்த கவிதைகள் கொண்ட தொகுப்பு தொடுவானம். இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் மரபின் தொடர்ச்சி மற்றும் நவின கருத்தியல் என்ற இரு புள்ளிகளை கொண்டமைந்துள்ளதை அறிந்தகொள்ள முடிகின்றது. வசன நடையில் எளிமையான சொற்களைக் கொண்ட கவிதைவரிகளில் உருவத்தில் மரபின் தொடர்ச்சியும் உள்ளடக்கத்தில் நவினத்தின் அதாவது, காலமாற்றதின் தேவை பற்றிய கருத்தியல் முன்னெடுப்புகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை இன்றும் உயிர்புடன் இருக்கின்ற சமூகத்தின் சில புள்ளிகளை அடையாங்காட்டுவனவாக உள்ளன.




கண்டியில் உள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை ஈழத் தமிழ் நாடக இலக்கியத்திற்கு தொடர்ந்து தனது பங்கினை ஆற்றிவருகிறது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்த்துறை பேராசிரியரான சுவாமி விபுலானந்த அடிகள் ஒரு நாடக ஆசிரியரும் ஆவார்.' மதங்க சூளாமணி' என்கிற நாடக இலக்கண நூலை எழுதிய முன்னோடி இவர். மகாகவி பாரதி பற்றிய முதல் ஆய்வினையும் நடத்தியவர் என்பது நாம் அறிந்த செய்தி. பின்னர் வந்த தமிழ்த் துறை தலைவர்களான பேராசிரியர்கள் கணபதிப் பிள்ளை, வித்தியானந்தன், தில்லைநாதன், துரை மனோகரன், தற்போதைய தமிழ்த்துறை தலைவர் பிரசாந்தன் வரை அனைவரும் நாடக ஆசிரியர்கள் . சிங்கள நாடக முன்னெடுப்புகளும் பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்விப் புலத்தால் பெரிதும் அரவணைக்கப்பட்ட ஒன்று . இத்தகைய பாரம்பரிய பின்புலத்துடன் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை ஈழத்தமிழ் நாடக இலக்கியத்தை மையப் பொருளாக்கி ஐந்தாவது தமிழியல் மாநாட்டை கொரோனா பெருந்தொற்றின் போது 2020 ஆம் ஆண்டில் நடத்தியது. இதற்கான கட்டுரைகள் துறைசார்ந்தவர்களிடமிருந்து பெறப்பட்டன.தமிழ்நாட்டு நாடகத்திற்கும் ஈழத் தமிழ் நாடகத்திற்கு இடையேயான பிணைப்பினை நினைவு கூறும் வகையில் தமிழகத்து நாடகச் செயற்பாட்டாளர்களான வெளி ரங்கராஜன், பிரஸன்னா ராமஸ்வாமி, பிரளயன் கி.பார்த்திபராஜா, ஆர். ராஜு ஆகியோர் ஜூம் வாயிலாக அரங்கத் தலைமை உரையை அழைப்பின் பேரில் நிகழ்த்தினர். நாடக ஆர்வலனாக நானும் ஒரு சிற்றுரையை நிகழ்த்தினேன். மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்ட கலாநிதி செல்லத்துரை சுதர்சன் ,திருமதி ஆன் யாழினி சதீஸ்வரன் ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அவை அனைத்தையும் ஹஈழத்தில் தமிழ்நாடக இலக்கியம்’ என்கிற நூலாக தொகுத்துள்ளனர்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









