பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் படைப்பாளி கே ஆர் டேவிட் சிறுகதைகள் – வாசிப்பு அனுபவம்! - தாமரைச்செல்வி -

( அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் நடத்தப்பட்ட போட்டியில் ஐம்பதினாயிரம் ரூபா பரிசுபெற்ற கே. ஆர். டேவிட் சிறுகதைகள் தொடர்பாக இச்சங்கம் நடத்திய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில் சமர்ப்பிக்கப்பட்ட உரை )
இலக்கிய உலகில் தன் எழுத்துக்களால் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்திருப்பவர் கே ஆர் டேவிட். . சிறுகதை, குறுநாவல், நாவல் எனும் தளங்களில் அறுபது வருடங்களுக்கு மேலாக பயணித்து வருபவர். தன்னுடைய எழுத்துக்களுக்காக பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றிருப்பவர். இலங்கையில் வசிக்கும் எழுத்தாளர்களுக்காக அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய போட்டியில் சிறுகதைகளுக்கான விருதை கே ஆர் டேவிட் சிறுகதைகள் எனும் தொகுதி பெற்றிருக்கின்றது. இப்படி ஒரு போட்டியை நடத்திய அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினருக்கு பாராட்டுகளையும் சொல்லிக் கொள்கின்றேன். பரிசு பெற்ற இந்நூலின் ஆசிரியருக்கும் என் வாழ்த்துக்கள்.
இத்தொகுப்புக்கு முன்னுரை எழுதிய இராஜேஸ் கண்ணன், தோழமையுரை வழங்கிய ராதேயன் மற்றும் கருத்துரைகளை வழங்கிய இலக்கிய உலகின் முக்கிய ஆளுமைகள் ஆறுபேர் என எட்டுப் பேர் கே.ஆர். டேவிட் பற்றியும் அவரது கதைகள் பற்றியும் இதில் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு படைப்பாளி இச்சமூகத்தை எப்படிப் பார்க்கிறான்… எப்படி அந்த மக்களின் வாழ்வியலை உள்வாங்குகின்றான்… அதை எந்த விதத்தில் எழுத்தாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறான்… என்பது பற்றி பல பார்வைகள் விமர்சனங்கள் எழுவதுண்டு. அதற்காக ஒரு படைப்பாளி எந்த விதமாக செயல்படுகிறான் என்பதும் கவனிக்கத்தக்க ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த விதத்தால் தனது எழுத்தால் கவனம் பெற்ற ஒருவராகவே எம்மால் கே. ஆர், டேவிட் அவர்களைப் பார்க்க முடிகிறது. இவரது சிறுகதைகள் நமக்கு பல்வேறு அனுபவங்களைத் தருகின்றன. அந்த அனுபவங்கள் எமக்குள் அதிர்வுகளையும் ஏற்படுத்துகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கால நகர்வு இவரது எழுத்துக்களுக்கு வலு சேர்த்துக் கோண்டே வந்திருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. சக மனிதர்களை நோக்கும் இவரது பார்வை கூர்மை மிக்கது. தன்னைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்வை பதிவு செய்வதே எழுத்தாளராகிய தனது கடமை என்ற நோக்கில் தனது பயணத்தை மேற்கொண்டு வந்திருப்பவராகவே இவரைப் பார்க்க முடிகிறது.

'காலச்சுவடு' கண்ணனுக்குச் செவாலியர் விருது கிடைத்துள்ளதாக முகநூல் கூறுகின்றது. வாழ்த்துகள். இன்று பெரும்பாலும் விருதுகள் என்பது தொடர்புகளின் அடிப்படையில் வழங்கப்படும் ஒன்றாக மாறிவிட்டது. அவ்வப்போது விருதுகள் சர்ச்சைகளை உருவாக்கி விடுவதுமுண்டு. காலச்சுவடு கண்ணனுக்குச் செவாலியர் விருது என்றதும் எனக்கு இவ்விருதினைப்பெற்ற நடிகர் திலகம் நினைவுக்கு வந்தார். நடிகர் கமலகாசன் நினைவுக்கு வந்தார். அவர்கள் தமிழ்த்திரையுலகின் சாதனையாளர்கள்.



அன்று மதியம் பழைய புத்தகக் கொட்டகையில் இருந்தேன். மே மாதம் என்பதால் உள்ளே ஒரே வெக்கை. காற்றில்லாத புழுக்கத்தில் மர அலமாரிகளின் நடுவில், பழைய புத்தகங்களின் வாசனையில் என்னோடு சேர்ந்து, உள்ளே வேறு இரு வாடிக்கையாளர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்.
எம் தலைமுறையைப் பொறுத்தவரை 1983 முக்கியமானதோர் ஆண்டு. குறிப்பாக ஜூலையில் நடைபெற்ற தமிழர்களுக்கெதிரான கொடிய இனக் கலவரம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு அழிக்க முடியாத களங்கம். இக்கலவரம் தமிழர்களை உலகின் நானா பக்கங்களுக்கும் அகதிகளாக ஓட வைத்தது. இக்கலவரம் தமிழர்களின் ஆயுதரீதியிலான விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது. இக்கலவரம் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் குடித்தது. இக்கலவரம் தமிழர்களின் உடமைகளைச் சூறையாடியது. பல்வகை வன்முறைகளையும் தமிழர்கள் மேல் ஏவிவிட்டது.
'பெரிய இடத்துப் பெண்' ஆர்.ஆர்.பிக்சர்ஸின் வெற்றிப்படங்களிலொன்று. ஆர்.ஆர்.பிக்சர்ஸ் டி.ஆர்.ராஜகுமாரி தனது சகோதரர் ராமண்ணாவுடன் இணைந்து ஆரம்பித்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். குலேபகாவலி, பாசம் , பறக்கும் பாவை போன்ற திரைப்படங்களைத் தயாரித்த நிறுவனம். இப்படத்தில் எம்ஜிஆருக்கு இரட்டை வேடம். கிராமத்தவனாக வரும் எம்ஜிஆருக்கு மச்சாள்மாருடன் இணைந்து பாடும் சுவையானதொரு பாடல் 'கட்டோடு குழலோடு ஆட' பாடல். எனக்குப் பிடித்த பாடல்களிலொன்று. பாடல் வரிகள், இசை, நடிப்பு, ஒலிப்பதிவு எல்லாமே பிடித்திருக்கும் பாடல்களிலொன்று இப்பாடல். மச்சாள்மார்களாக மணிமாலா, ஜோதிலட்சுமி இருவரும் நடித்திருப்பார்கள். நடிகை ஜோதிலட்சுமியின் நடிப்பில் வெளியான முதற் திரைப்படம் 'பெரிய இடத்துப் பெண்' என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜோதிலட்சுமி, மணிமாலா இருவரும் இப்பாடற் காட்சியில் மிகவும் சிறப்பாக ஆடி, நடித்திருப்பார்கள். இசை மெல்லிசை மன்னர்கள். பாடல் வரிகள் கவிஞர் கண்ணதாசன். பாடியவர்கள்: டி.எம்.எஸ், பி.சுசீலா & எல்.ஆர்.ஈஸ்வரி. 'மாட்டுக்கார வேலன்', 'சகலகலா வல்லவன்' போன்ற பின்னாளில் வெளியான இரட்டை வேடப் படங்கள் பலவற்றுக்கும் தூண்டுகோலாகவிருந்த படம் 'பெரிய இடத்துப் பெண்'.
ஆளுமை வளர்ச்சிக்கு மனோபாவம் எந்தளவிற்கு உதவும் என்பதையும், நல்ல மனோபாவத்தை பெற என்னென்ன வழிகள் உண்டு என்றும் சில வழிகளை உங்களுக்கு சொன்னேன். இந்த இதழில், மனிதன் வெற்றி பெற முக்கியமான ஒரு ஆற்றல் பற்றி உங்களுக்கு எடுத்துரைக்கப் போகிறேன்.
நமது உடலின் செயற்பாடுகள் எல்லாவற்றையும் நரம்பு மண்டலமே கட்டுப்படுத்தி உடலின் சீரான செயற்பாட்டிற்குக் காரணமாக விளங்குகிறது. நரம்பு மண்டலம் பல பிரிவுகளாக பிரிந்து உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறது. தானியங்கி நரம்பு மண்டலம் என்பது நரம்பு மண்டலத்தின் ஒரு முக்கிய பிரிவாகும். இந்த தானியங்கி நரம்பு மண்டலம் 'சிம்பதடிக்' நரம்பு மண்டலம் மற்றும் 'பாரா – சிம்பதடிக்' நரம்பு மண்டலம் என இரண்டு பிரிவாக பிரிந்து செயல்படுகிறது. நமக்கு ஏற்படும் உடல் பிரச்சனைகள் எல்லாமே உடலியல் கோளாறுகளால் ஏற்பட்டவை என்று கூற முடியாது. நமக்கு ஏற்படும் மனப்பிரச்சனைகளும் நம் உடலில் நோய்களை தோற்றுவிக்கலாம். ஏனெனில் நம் உடலின் செயல்பாடுகளுக்கும் நம் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நாம் ஆழ்மனதில் அடக்கி வைத்திருக்கும் நிறைவேறாத ஆசைகளும் எண்ணங்களும், மனத்திற்கு வலியை ஏற்படுத்தும் விஷயங்களும், இன்னபிற மன அழுத்தத்தை உண்டாக்கும் நிகழ்வுகளும் நம் உடல் செயற்பாடுகளின் மீது பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு அறிய வருவதற்கு முற்பட்ட தொடக்க காலத்தில் சில வித்தியாசமான நோயாளிகளை சந்திக்க வேண்டி வந்தது. உதாரணமாக, ஒரு பெண் தனக்கு பூக்களைக் கண்டாலே உடலில் அரிப்பு ஏற்படுவதாக கூறிக் கொண்டு உளவியல் மருத்துவரை சந்தித்தார். அப்பெண் அதற்கு முன்பு வேறு பல தோல் நோய் நிபுனர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர்களால் அப்பெண்ணின் உடலில் பூக்களைக் கண்டால் அரிப்பு ஏற்படுவதற்கான உடலியல் அடிப்படையை கண்டறிய முடியவில்லை. நோய் குணமாகாத இந்த சமயத்தில் தான் அப்பெண் உளவியல் மருத்துவரை அணுகியிருக்கிறார்.
தமிழ் இலக்கிய உலகில் இது எமது ஆ.மாதவனையும் சிங்காரத்தையும் நினைவுபடுத்தவே செய்யும்.
ஈழத்தின் கிழக்கில் தோன்றிய முத்து - தமிழைச் சுமந்தபடி தரணியெங்கும் ஒளிவீசி நின்றது.அந்த முத்தின் வாழ்க்கை இரு நிலைகளில் அமைந்தது. படித்துப் பட்டம் பெற்று - பண்டிதராய், கல்லூரி ஆசிரியராய், அதிபராய், தந்தை தாய் வைத்த மயில்வாகனன் என்னும் பெயரோடு சமூகத்தில் பயணித்த காலம்.மயில் வாகனன் என்னும் பெயரைக் கடந்து -

மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் வாய்ந்த சக்தி ஒன்று இருப்பதாக மக்கள் கருதுகின்றனா். அச்சக்தியே தெய்வத்தின் சக்தி என்று இறை நம்பிக்கை உள்ளவா்னால் நம்பப்படுகின்றது. இயல்பாக நடக்கும் செயல்கள் இனிதாக இருந்தால் அது தெய்வத்தின் அருளால் நடைபெறுவதாக மக்கள் கருதுகின்றனா். மனிதனின் துயா் களையப்படும்பொழுது மனிதமனம் இறைவனை நன்றி உணா்வோடு நினைக்கிறது. தன்னுடைய மகிழ்ச்சிக்குக் காரணமாக விளங்கும் இறைவனை மகிழ்விக்க விரும்புவது மனித இயல்பே. தெய்வத்தின் சினத்தைத் தணிக்கவும், நன்மை தரும் தெய்வத்திற்கு நன்றி செலுத்தவும் விழா எடுக்கப்படுகிறது. இதையே ”ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்று கூறுகின்றனா். கோயில் வழிபாட்டைவிட கூட்டுவழிபாடே நன்மை பயக்கும் என்று மக்கள் நம்புகின்றனா். எனவே, மக்கள் அனைவரும் ஒன்று கூடி வழிபாடு செய்கின்றனா். இதுவே மனித ஒருமைப்பாட்டிற்கு வழிவகுக்கிறது.
ஐனநாயகம் என்பார்கள் இல்லை சர்வாதிகாரம் என்பார்கள். என்ன சக்திதாசன் ஐனநாயகச் சர்வாதிகாரம் என்கிறானே ! இவனுக்குப் புத்தி பேதலித்து விட்டதோ ? என்று நீங்கள் எண்ணத் தலைப்படுவது புரிகிறது. எனக்குத் தெரிந்த வரையில் புத்தி பேதலிக்கவில்லை என்றுதான் எண்ணுகிறேன். என்ன ! தற்போதைய உலக அரசியல் அரங்கில் நடைபெறும் காட்சிகள் அனைத்தையும் ஒருமுறை புரட்டிப் போட்டுச் சிந்திக்க வைக்கிறது. நான் வாழும், என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஐக்கிய இராச்சியத்தில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற அரசியல் அரங்கக் காட்சிகள் ஒருபுறம், நான் பிறந்த மண்ணான சிறீலங்காவில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அரசியல் அல்லகல்லோலங்கள் ஒருபுறம் , உலக அளவிலே உக்கிரைன் நாட்டில்ஈடம்பெற்றுக் கொண்டிருக்கும் போரும் அதன் அவலங்களும் ஒருபுறம் என அனைத்து உலகிலும் அவசரம் அவசரமாக அரசியல் அரங்கங்களில் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இலங்கையிலே தற்போது நடந்தேறியிருக்கும் விடயங்கள் மக்களின் வாழ்வின் அடிப்படை ஆதரங்களையே பாதித்திருக்கின்றன. வசதியுள்ளோரும், வசதியற்றோரும் ஏதேவொரு வகையில் பாதிப்படைந்திருக்கிறார்கள். அம்மக்களில் ஒருவனாக வாழாமல் அம்மக்களைப் பாதிக்கும் விடயங்களைப் பற்றிய கருத்தைப் புலம்பெயர் தேசத்தில் இருந்து தெரிவிப்பது அம்மக்களுக்கு எந்தவிதத்திலும் நியாயமாக இருக்காது என்பது என் கருத்தாகையால் அதைப்பற்றிய அலசலைத் தவிர்த்துக் கொள்கிறேன். சரி இனி ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் சதுரங்கப் பலகையைப் பார்ப்போம். எனது வாழ்வினை நேரடியாகப் பாதிக்கும் எனும் வகையில் இதைப் பற்றிய அலசலுக்குள் கொஞ்சம் புகுந்து கொள்கிறேன்.
நாட்டுப்புறப் பாடல்கள் பழமைக்கும் பழமை வாய்ந்தவை. பின்னைப் புதுமைக்கும் புதுமையாகவும் விளங்குபவை. இப்பாடல்கள் இனியவை, எளியவை, எழுதப்படாதவை. வாயில் பிறந்து செவிகளில் நிறைந்து உள்ளத்தில் பதிவு பெறுபவை. மண்ணின் மணத்தைப் பரப்புபவை:




இனிய நண்பர் நந்தீஸ்வரர் அவர்கள் 27- 6 -2022 ஆண்டு கனடாவில் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். பிறப்பு என்று ஒன்றிருந்தால் இறப்பு என்பதும் நிச்சயமே என்பதற்கிணங்க அவரது பிரிவையிட்டு அவரது குடும்பத்துடன் துயர் பகிர்ந்து கொள்வோம்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









