டால்ஸ்டாய் பற்றிய அறிமுகங்கள் (1) : கார்க்கி - ஜோதிகுமார் -

- டால்ஸ்டாயும் மாக்சிம் கார்க்கியும் -
1
இருபதாவது முறை, வாசிக்கும் போதே, இச் சிறியவரிகளில் மறைந்து கிடக்கும் எண்ணங்களை ஓரளவில் புரியக் கூடியதாக இருந்தது. இத்தனை இரத்தினச் சுருக்கமாகக் கூறுதல் என்பது கடினம். ‘கடுகைத் துளைத்து’ எனச் சொல்வதுபோல், கிட்டத்தட்ட, இங்கேயும் அதே பண்பலைதான் காணகிட்டுகின்றன. ஆனால், இது முற்றிலும் வேறு ஒரு தளத்தில் இயங்குவதாய் இருக்கின்றது.
இறைவன் பொறுத்த டால்ஸ்டாயின் அபிப்ராயங்கள் விசித்திரமானவை. தொளதொளவென்ற தனது சட்டைப் பைக்குள் கையை நுழைத்து, பின், ஒரு டயரியின் நைந்த பகுதியை எடுத்து, கார்க்கியிடம் தந்துவிட்டு: “இறைவன்… அதுவே எனது… ஆர்வம்…” என்று வரையறுக்கும் இந்த மனிதரின் வார்த்தைகள் எம்மையும் ஒருகணம் நிலைக்குலையச் செய்வதே. என்ன இது? ஆசையா அல்லது மனுகுலத்தின் மேல் கொண்டுள்ள ஒட்டுமொத்த மரியாதையின் பிரதிபலிப்பா?.
ஆயிரம் இலக்கியங்களை நுகர்ந்ததன் அனுபவங்களும், தத்துவச் செல்வங்களைத் தேடித் திரட்டி, கிரகித்தபின், ஆயிரம் மனிதர்கள் நடந்த காலடி சுவடுகளையும் உள்வாங்கி அவிழ்த்து விடப்படும். இவரது வார்த்தைகள் மகாபாரதத்தின் தோற்றுவாயையும், இராமாயணத்தின் ரிஷி மூலத்தையும் உள்ளடக்கவே செய்கின்றன. இக் கருத்து நிலையில் இருந்து உதிப்பதே இவரது கலையாகின்றது.
இவரது கடவுள் எனும் கருத்தும், இங்கேயே பரிணமித்திருக்கலாம்.
இது பாரதியின் கடவுளுடன் ஒப்புநோக்க வேண்டிய தேவையை எழுப்பாமல் இல்லை.





கன்னங்கரியாய் அப்பி நின்ற இருளுடன்,




மொழி என்பது சமூகத்தின் விளைச்சல்களில் ஒன்று. சமூகத்தின் இயக்கத்தோடு இணைந்து மொழியும் இயங்குகின்றது. சமூக வளர்ச்சியோடு இணைந்து மொழியும் வளர்ந்தோங்குகின்றது. சமூகம் மறையும்போது மொழியும் மறைந்துவிடும். மொழியின் பரிணாம வளர்ச்சி என்பது சமூக சமூகப் பரிணாம வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகும். நூலகத்திலேயே மூழ்கியிருந்த கார்ல் மார்க்ஸின் நூலினை வாசித்த போது மொழியை சிந்தனையின் உடனடி வெளிப்பாடு என்று கூறுகின்றார். சிந்தனை தோன்றிய காலத்திலேயே மொழி தோன்றிவிட்டது என்றும் மொழி என்பது சிந்தனையை நடைமுறைப்படுத்துகிறது என்பதையும் நாம் உய்த்து அறிகின்றோம்.
’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று சுவை அணி அணியாகும். தண்டியலங்காரத்தின் சுவை அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
கண்ணைக் கரிக்கும் 

இம்மாதம் சித்திரைப் புத்தாண்டுடன், இலங்கை வரலாற்றில் சில விடயங்கள் கவனத்திற்குள்ளாகின்றன. 2019 ஆம் ஆண்டு இதே ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று, இலங்கையில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் மூன்று நட்சத்திர விடுதிகளிலும் சில தற்கொலைக் குண்டுதாரிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலில் 277 பேர் கொல்லப்பட்டனர். நானூறுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.40 வெளிநாட்டவர்களுடன் 45 பிள்ளைகளும் இந்த பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஆயினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை.

இரா மோகன் அவர்கள் நினைவில் வழங்கப்படுகிற இந்த விருது கனவு என்ற சிற்றிதழ் 39 ஆண்டுகளாக வெளிவருவதை அங்கீகரித்து தரப்படுகிறது. இந்த ஆண்டில் இதே போல் இந்த விருது நால்வர் இதழ் மூலமாக பெறப்பட்டது. கி ராஜநாராயணன் அவர்களின் கரிசல் விருது போன்ற விருதுகள் கனவு இதழுக்குக் கிடைத்திருப்பது அதன் செயல்பாட்டை அங்கீகரிப்பது போல என்று நினைக்கிறேன். அந்த வழியில் மதுரை அமரன் மோகன் அவர்களுடைய துணைவியார் நிர்மலாமோகன் அவர்கள் தொடர்ந்து அமரர் மோகன் பெயரில் விருதுகள் தருவது எழுத்தாளர்களுக்கு கௌரவம் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது
தமிழ் ஈழவிடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் பங்கேற்ற சகோதரி புஷ்பராணி அவர்கள் கடந்த 17 ஆம் திகதி பாரிஸில் மறைந்துவிட்டார். அண்மைக்காலமாக அவர் சற்று சுகவீனமுற்றிருந்தார். எனினும், என்னோடு வாட்ஸ் அப்பில் தொடர்பிலிருந்தார். தொடர்ச்சியாக தொடர்பிலிருப்பவர்கள், திடீரென எம்மை விட்டுப் பிரியும்போது, அந்தத் துயரத்தை கடப்பது மிகவும் சிரமமானது. எனினும் நாம் கடந்துதான் செல்லவேண்டும்.
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடையத் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள காலப்பகுதியில் ( 1972 – 2022 ) தமிழ் ஈழவிடுதலைக்காக முதல் முதலில் களமிறங்கிய பெண்ணைப்பற்றிய இந்தப்பதிவை எழுதுகின்றேன். இலங்கையில் ஏற்கனவே 1915 இல் கண்டி கலவரமும், 1958 இல் தென்னிலங்கையில் மற்றும் ஒரு இனக்கலவரமும் வந்திருந்தாலும், 1965 இல் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழரசும், தமிழ்க்காங்கிரஸும் அரசமைத்து தேன்நிலவு கொண்டாடினர். ஆனால், அந்த ஐக்கிய தேசியக்கட்சி 1970 இல் தோல்வி கண்டபோது, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் சமசமாஜக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து அரசை அமைத்தது. அதற்கு மக்கள் அரசாங்கம் என்று பெயரையும் சூட்டிக்கொண்டது.


தமிழகம் நீர், நிலப்பொருள் வளங்களைக் கொண்டுள்ளது. பொருள் ஆதாரமாக, அடித்தளமாக இருக்குமானால் அது மற்ற நாடுகளை விடச் சிறந்ததாகத் திகழும். இதற்கு, அங்கு நிகழும் வணிகம் முக்கியமான காரணமாக அமைவதே ஆகும். இத்தகைய வியாபாரம் (வணிகம்) இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மண்ணிலும் நடந்துள்ளது. இது குறித்துச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அவற்றுள் பட்டினப்பாலை குறிப்பிடும் வணிகம் குறித்த செய்திகளை இக்கட்டுரை கூறுகிறது.


கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் பலர் போதிய ஆய்வின்றித் தவறான தகவல்களை உ ள்ளடக்கிக் கட்டுரைகளை எழுதி வருவதை அவதானிக்க முடிகின்றது. கனடாவிலிருந்து வெளியான முதலாவது சஞ்சிகை பற்றிப் பலரும் பலவாறு எழுதி வருகின்றார்கள். இவ்விதமான தவறான தகவல்கள் காலப்போக்கில் உண்மையான தகவல்களாகக் கருதப்பட்டு வரலாறு தவறாக எழுதப்பட்டு விடும் அபாயமும் உண்டு.
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









