பதிவுகள் முகப்பு

வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
03 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


இசை & குரல்: SUNO AI    ஓவியம்: கூகுள் AI

பாடலைக் கேட்க

நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்

பழம் பெருமை பேசுவதை நிறுத்தார்.
பழைய நூல்களை வாங்கவே மாட்டார்.
சமூகப் பிரிவுகள் வளர்த்தே வாழ்வார்.
சங்கத்  தமிழரென்றே பொங்கி எழுவார்.

நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்

தமிழர் நூல்களை ஏறெடுத்தும் பாரார்.
தமிழர்  படைத்தார் குறுந்தொகை என்பார்.
தமிழர்  சிலம்பு என்பார், மணிமேகலை என்பார். 
தமிழர் இவரோ இவற்றை  வாங்கார்.

நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்

நடிகை பின்னால் மயங்கிக் கிடப்பார்
நடிகர் பின்னால் மயங்கிக் கிடப்பார்.
உணர்ச்சி அரசியலில் மூழ்கிக் கிடப்பார்.
உணர்ச்சி மிகுந்து மோதிக்கொள்வார்.

நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்

தமிழ் எழுத்தாளர் எழுத்தால் வாழ்ந்ததில்லை.
தமிழ்க் கலைஞருக்கோ ஆதரவு  இல்லை.
ஊடகப் புகழ் நாடியே  அலைந்து திரிவார்.
உணர்ச்சியில் மட்டுமே நிலை மறப்பார்.

மேலும் படிக்க ...

அதிகாரத்தின் ஆன்மீகமயமாக்கம் - மேற்கத்திய அரசியல் யதார்த்தவாதத்திற்கு மாற்றாகக் காந்திய அறவியல்! - ஈழக்கவி -

விவரங்கள்
- ஈழக்கவி -
ஆய்வு
03 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

1. ஆய்வுச் சுருக்கம் (Abstract)

மேற்கத்திய அரசியல் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தும் 'அரசியல் யதார்த்தவாதம்' (Political Realism) மற்றும் மகாத்மா காந்தியின் 'தார்மீக அரசியல்' ஆகியவற்றுக்கு இடையிலான முரண்பாடுகளை இக்கட்டுரை ஆராய்கிறது. வன்முறையற்ற எதிர்ப்பு (Satyagraha) மற்றும் அதிகாரப் பரவலாக்கல் (Sarvodaya) மூலம் காந்தி எப்படி ஒரு புதிய அரசியல் பரிமாணத்தை உருவாக்கினார் என்பதை விளக்குகிறது.

  1. அறிமுகம்:

அரசியலின் ஆன்மா - அறமும் அதிகாரமும்

அரசியல் மெய்யியல் (தத்துவ) வரலாற்றில், அரசியலை அறவியலிலிருந்து (Ethics) பிரித்துப் பார்ப்பது ஒரு மரபாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், மகாத்மா காந்தி இந்தப் பிரிவினையை முற்றிலுமாக நிராகரித்தார். அவரைப் பொறுத்தவரை, "அறமற்ற அரசியல் ஒரு சாவுக்கண்ணி (Death-trap)". தனிமனிதனின் ஒழுக்கமே பொதுவாழ்வின் அடித்தளம் என்பதை அவர் ஆணித்தரமாக முன்வைத்தார்.

2.1 தனிமனித ஒழுக்கமும் பொதுவாழ்வும்: ஒரு பிரிக்க முடியாத பிணைப்பு

மேற்கத்திய தாராளமயக் கொள்கைகள் பலவும் "தனிப்பட்ட வாழ்க்கை" (Private Life) மற்றும் "பொது வாழ்க்கை" (Public Life) ஆகியவற்றை வேறாகப் பார்க்கின்றன. ஒரு அரசியல்வாதி தனிப்பட்ட முறையில் எப்படி இருந்தாலும், அவர் திறமையான நிர்வாகியாக இருந்தால் போதும் என்ற கருத்து நிலவுகிறது.

மேலும் படிக்க ...

கனடாவில் ‘தைப்பொங்கல்’ நூல் வெளியீடு! - சுலோச்சனா அருண் -

விவரங்கள்
- சுலோச்சனா அருண் -
நிகழ்வுகள்
03 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சென்ற ஞாயிற்றுக்கிழமை 18-1-2026 அன்று கனடா எத்தோபிகோவில் உள்ள திஸ்டில் நகரமண்டபத்தில் கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் தைப்பொங்கல், மரபுத்திங்கள், மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் இடம் பெற்றன. மங்கள விளக்கேற்றி, தமிழ்தாய் வாழ்த்து, கனடா தேசியப்பண் ஆகியன இசைக்கப்பெற்றன. அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் அமைப்பின் பாடலுக்கு, நடன ஆசிரியர் திருமதி தயாளினி ஜீனராஜின் மாணவிகளின் நடனம் இடம் பெற்றது. இந்தப் பாடலை அகணி சுரேஸ் எழுத, சி. சுதர்சன் இசையமைக்க, மயூரதி தேவதாஸ் பாடியிருந்தார். அடுத்து திருமதி கலைமகள் புஸ்பநாதனின் வரவேற்பு உரை இடம் பெற்றது. நூல் வெளியீட்டு நிகழ்வில் கனடாவில் இருந்து வெளிவரும் இளையதலை முறையினருக்கான, எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களை முதன்மை ஆசிரியராகக் கொண்ட ‘வதனம்’ எட்டாவது இதழும், திருமதி கமலவதனா சுந்தா எழுதிய சிறுவர்களுக்கான ‘தைப்பொங்கல்’ நூலும் வெளியிட்டு வைக்கப்பெற்றன.

மேலும் படிக்க ...

சிறுகதை: நன்றி முத்தம்! - கன்பரா யோகன்-

விவரங்கள்
- கன்பரா யோகன்-
சிறுகதை
02 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காலை ஏழு  மணி. வெயில்  ஆறுமணிக்கே விழத் தொடங்கியிருந்த கோடை காலக் காற்றிலும் குளிர் இருந்தது. தூரத்தே அடர்த்தியான பைன்  மரக் கூம்புகள் கொண்ட மலைகள் மெல்லிய நீல பனிப் புகாரினூடே தெரிந்தன. பளிச்சென்ற வெய்யில் வந்து மலை விளிம்புகள் தெளிவாகத் தெரியும் வரை இந்தப் புகார் இருக்கும்.

நான் நடந்து கொண்டிருந்த தெரு, நில மட்டத்திலிருந்து  ஒரு நாலைந்து மீற்றர் உயரத்திலிருந்தது. பள்ளத்தில் கட்டப்பட்டிருந்ததால் வீடுகளின் கூரை உச்சிகளை ஒரு பறவையைப் போல என்னால் பார்க்க முடிந்தது. பெரும்பாலும் பழைய வீடுகள், அவற்றுள் சில  பலகை வீடுகள். தெரு மட்டத்திலிருந்து வீட்டு முற்றங்களுக்கு இறங்கப் படிகள் இருந்தன.   

அருகிலிருந்த கோப்பிக் கடை ஒரு நிமிட நடை தூரத்திலிருப்பதை கைத்தொலைபேசியின் GPS காட்ட அந்த பத்து நிமிட நடை என்னை பீகா நகரின் சூப்பர் மார்க்கட் உள்ள தெரு வரைக்கும் கொண்டு சென்றது.  தெருவிலிருந்த சிறிய கடைகள் இன்னும் திறக்கவில்லை.

ஏழு மணிக்கே சூப்பர் மார்க்கட் கடைத் தொகுதியின் நுழைவாயில் தானியங்கிக் கதவு திறந்திருந்தாலும் உள்ளே இன்னும் பல கடைகள் பூட்டிக் கிடந்தன.  ஒரேயொரு சுவர்களில்லாத திறந்த காலையுணவுக்கடையில் இரு சீனச் சிறுமிகள்  பிசியாக நின்றனர். அவர்களிடம் கேட்டபோது கோப்பி, தேநீர் விற்பதில்லையென்றனர். வெளியே ஒரு கடை உண்டு என்றாள் அவர்களில் ஒருத்தி.  

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரன் பாடல்: ஏற்றம்மிகு உலகைச் சமைக்கவே சூழலைப் பேணுவோம்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
02 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வ.ந.கிரிதரன் பாடல்: ஏற்றம்மிகு உலகைச் சமைக்கவே சூழலைப் பேணுவோம்!

- இசை & குரல் - SUNO AI  ஓவியம்: கூகுள் AI

பாடலைக் கேட்க

நீலவண்ணக் கோள் ஒர் அற்புதம்!
காலவெளி தந்த பேர் அதிசயம்!

கண்ணுக்குக் தெரியாத உயிர்கள் எத்தனை!
கண்ணுக்குத்  தெரியும் உயிர்கள் எத்தனை!
எண்ணற்ற உயிர்களின் இருப்பிடம் அல்லவா!
கண்ணுங் கருத்துமாகப் பேணுதல்  கடமை அல்லவா!
வெறுமை சூழ் பேரண்டத்தில் உயிர் அல்லவா!
சிறுமைப் படுத்தல் தகுமோ  முறையோ?
சூழலைப் பேணுவோம். தவறுகளைக் களைவோம்.
ஞாலத்தின் நிலையை மாற்றுவோம். நம்  காலக் கடமையல்லவா!

மேலும் படிக்க ...

"அம்பிலி மாமே! ஒப மொக்கத கரண்ணே?" - ராஜு அங்கிள் நினைவுகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
02 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



ராஜு அங்கிளை (அம்மாவின் கடைசிச் சகோதரர்)  நினைத்ததும் என் நினைவில் வரும் முக்கிய விடயங்களிலொன்று அவரது 'ரெகோர்ட் பிளேயர் ஸ்டாண்ட்' .  மரத்தால் ஆன அழகான  'ரெகோர்ட் பிளேயர்' அமைப்பு அது. அவரை இசைப்பிரியர் என்றும் கூறலாம். மேனாட்டுப்பாடகர்களின் ஒலித்தட்டுகள் ( Records) தொடக்கம் சிங்கள  'பைலாப்' பாடல்களின் ஒலித்தட்டுகள் வரை பல பாடல்கள் அடங்கிய ஒலித்தட்டுகள் அவரிடமிருந்தன. ஜிம் ரீவ்ஸ் (Jim Reeves), எல்விஸ் பிரெஸ்லி (Elvis Presley), பீட்டில்ஸ் (Beatles) போன்றோரின்  ஒலித்தட்டுகள் அவரிடமிருந்தன. அவர் எழுபதுகளின் ஆரம்பத்திலேயே கனடா வந்து விட்டதால் , அது வரை எட்டாக் கனியாகவிருந்த அந்த ரெகோர்ட்  பிளேயர் எமக்கும் எட்டும் கனியானது. அதன் பின் அங்குள்ள ஒலித்தட்டுகளை அவ்வப்போது ஒவ்வொன்றாகக் கேட்டு மகிழ்வதுண்டு. அவற்றிலொன்று என்னை மிகவும் கவர்ந்தது. அது ஒரு சிங்களப்பாடல். அதனைப் பாடியவர் யார் என்பது தெரியாது. ஆனால் கேட்ட முதல் தடவையே என்னைக் கவர்ந்துவிட்ட பாடல் அது. அண்மையில்தான் அப்பாடலை யு டியூப்பில் தேடிக் கண்டு பிடித்தேன். அதனைப்பாடியவர் அக்காலகட்டத்தில் புகழ்பெற்ற விளங்கிய சிங்களப்பாடகர் சி.டி.ஃபெர்ணாண்டொ என்று அப்போதுதான் அறிந்துகொண்டேன்.  அந்தப்பாடல்: "அம்பிலி மாமே! ஒப மொக்கத கரண்ணே?"

மேலும் படிக்க ...

கலை, இலக்கிய நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் ஊடகவியலாளரும் , கலைஞருமான கிருபா கந்தையா! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
02 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



ஊடகவியலாளரும், கலைஞரும், புகைப்படப்பிடிப்பாளருமான கிருபா கந்தையா அவர்களின் 'தடயத்தார்'  'யு டியூப் சானல்' சத்தமின்றி முக்கியமானதொரு பணியினை ஆற்றி வருகின்றது. 'டொரோண்டோ'வில் நடைபெறும் கலை, இலக்கிய நிகழ்வுகளைக் காணொளிகளாக்கி இந்தத் 'தடயத்தார்' சானலில் பதிவிட்டு வருகின்றார் கிருபா கந்தையா.  'தடயத்தார்' சானல் கலை, இலக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்வதன் மூலம் ஆவணப்படுத்தி வருகின்றது. இது அவ்வளவொன்றும் இலகுவான செயலல்ல. கடும் உழைப்பினையும் , அர்ப்பணிப்பையும் வேண்டுமொரு செயல்.

மேலும் படிக்க ...

கலாமோகன் தோற்கும் இடங்கள் (2) : கலாமோகன் படைப்புக்கள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்! - வாசன் -

விவரங்கள்
- வாசன் -
இலக்கியம்
01 பிப்ரவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இனி எமது நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் கலாமோகனிற்கான வரவேற்பும் அங்கீகாரமும் எவ்வளவு தூரம் இருக்கின்றது என்று பார்ப்போமானால் ஒரு தெளிவற்ற சித்திரம் ஒன்றே எம்முன் தென்படுகின்றது. கலாமோகன் பல சிறுகதைகளை எழுதியிருக்கின்றார். அவற்றில் சில தமிழின் மிகச்சிறந்த கதைகளகாக் கொண்டாடப்படுகின்றன. அவரது சிறுகதையான 'மூன்று நகரங்களின் கதை' தமிழின் மிகச்சிறந்த 100 கதைகள் என்ற பட்டியலிற்குள் தமிழகத்து இலக்கிய ஆளுமைகள் பலராலும் வகைப்படுத்தப்படுத்தப் பட்டுள்ளது. இந்தப் பட்டியலிற்குள் வெறும் நான்கைந்து ஈழ எழுத்தாளர்கள் மட்டுமே அடங்கியுள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. எனவே இது ஒரு அசாத்தியமான சாதனையாகவே எமக்குப் புலப்படுகின்றது. மேலும் தமிழக விமர்சகர்கள் ஈழ-புகலிட இலக்கிய ஆளுமைகள் என்று பட்டியலிடும்போது இவரது பெயர் இரண்டாவது அல்லது மூன்றாவதாக எஸ்.பொன்னுத்துரை,மு.தளையசிங்கம், மற்றும் சட்டநாதனிற்கு அடுத்ததாக அல்லது அதற்கு முன்னதாக முன்னிறுத்தப்படுகின்றது. இவரது சிறுகதைகள் பலவும் இன்றளவும் பல்வேறு இணைய இதழ்களிலும் தொடர்ச்சியாக மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க ...

தமிழில் நூலாக வெளியான முதலாவது சரித்திர நாவலை எழுதிய பெண் எழுத்தாளர் சிவநயனி முகுந்தன்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
30 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழக எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் 'பாண்டிய  நெடுங்காவியம்' என்னுமொரு சரித்திர நாவலை எழுதியிருக்கின்றார். மூன்று பாகங்களை உள்ளடக்கிய இந்நாவலின் மூன்று பாகங்களும் வானதி பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. முதற் பதிப்பு வெளியான ஆண்டு 2015.  இந்நூலின் பின்னட்டையிலும், உள்ளே விமர்சகர் ஒருவரின் திறனாய்விலும் தமிழில் சரித்திர நாவல் எழுதிய முதலாவது பெண் எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இது உண்மையா?

2012ற்கு முன்பே இவர் சரித்திர நாவல் அல்லது நாவல் எழுதியிருந்தால் அக்கூற்றினை ஏற்றுக்கொள்ளலாம். அப்படி நடந்த மாதிரித்தெரியவில்லை.  உண்மையில் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் சிவநயனி முகுந்தன் தற்போது கனடாவில் வசிக்கின்றார்.  இவர் ஒரு 626 பக்கங்களைக் கொண்ட சரித்திர நாவலொன்றை எழுதியிருக்கின்றார். இவர்  கனடாவில் 'வேல்விழியாள் மறவன்' என்னுமொரு சரித்திர நாவலை எழுதி வெளியிட்டுள்ளார்.  வெளிவந்த ஆண்டு 2012. வெளியிட்ட பதிப்பகம் - 'வித்தக விருட்சம்'. இதன் படி தமிழில் நூலாக வெளியான  சரித்திர  நாவல் எழுதிய பெண் எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் அல்லர். பின் யார்? எழுத்தாளர் சிவநயனி முகுந்தனே.  [அனுஷா வெங்கடேஷ் என்னும் பெண் பெயரிலும் 'காவிரி மைந்தன்' என்னும் சரித்திர நாவலும், வேறு சில நாவல்களும் வெளியாகியுள்ளன. இவற்றை எழுதியவர் ஆண் எழுத்தாளரான ஆர்.வெங்கடேஷ்]

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் அணுவியல்! - முனைவர் க.மங்கையர்க்கரசி -

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி -
ஆய்வு
29 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



* கட்டுரையாசிரியர்: முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -



முன்னுரை

அணுவினைப் பற்றி கூறும் இயல் 'அணுவியல்' ஆகும். இயற்பியலின் ஒரு பிரிவாக விளங்குகிறது. 'அணு' என்ற சொல்லிற்கு 'நுண்மை' என்று பிங்கல நிகண்டு பொருள் கூறுகிறது. இன்றையக் காலத்தில், அறிவியல் உலகில் பல அற்புத வளர்ச்சிகளைப் பெற்று விளங்குவது அணுவியலேயாகும். கம்பராமாயணத்தில் அணு பற்றியச் செய்திகள் குறித்து கூறப்பட்டுள்ளவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

அணுக் கொள்கையின் தந்தை

ஒரு பொருளைப் பிரித்துக் கொண்டேப்போனால், பிரிக்க முடியாது நிற்கும் பொருளே அடிப்படையாகும். அதற்கு 'அணு' என்று பெயரிட்டு மேலைநாட்டில் அணுக்கொள்கையை முதன் முதலாக எடுத்துக்கூறியவர் 'டெமாக்டிரிடஸ்' (Democritus) என்பவர். இவரே மேலைநாட்டு அணுக்கொள்கையின் தந்தையாவார்.

அணு:

அணு ஆற்றல் தொடர்பான அறிவியல் இருபதாம் நூற்றாண்டில்தான் நவீன அறிவியல் வளர்ச்சியாகக் காணப்பட்டது. இது பற்றிய சிந்தனைப் பண்டைத் தமிழரிடத்தில் இருந்தது என இதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன.

அணு என்பது மிகச் சிறிய மூலக்கூறு, கண்ணால் காண இயலாத அணுத்துகள். அணுவைப் பிரிக்க முடியாது என்பது தொடக்கக் கால அறிவியல் கூற்று. அணுவினை உடைக்க இயலும் என்பது அண்மைக் கால கண்டுபிடிப்பாகும். 'சைக்கிளோட்ரோன்' என்னும் கருவியின் உதவியால் அணுவைப் பிளக்க முடியும் என்பதனை 1932-ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த 'லாரென்ஸ்' என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். 1938- ஆம் ஆண்டு ஜெர்மன் விஞ்ஞானிகள் அணுவின் உட்கருவை, நியூட்ரான் உதவியால் பிளந்து, நியூட்ரான்களை வெளிப்படுத்தி, தொடர்வினைக்குத் தக்க நிகழ்ச்சிகளை உண்டு பண்ணினார்கள். இவ்வாறு அணுப்பிளவுடன் ஏற்படும் அணுக்கருத் தொடர் இயக்கத்தை அணுகுண்டுகள் வெடிப்பதற்குப் பயன்படுத்துகின்றனர்.

மேலும் படிக்க ...

எல். ஜோதிகுமாரின் 23ஆம் வயதில் பாரதி : புதிய முளைகளின் முகங்களை வரைதல்! - எம்.எம். ஜெயசீலன் -

விவரங்கள்
- எம்.எம். ஜெயசீலன் -
நூல் அறிமுகம்
29 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழியலாய்வு வளர்ச்சியில் இடதுசாரி முற்போக்கு ஆய்வாளர்களின் பங்களிப்புகள் பெருந்திருப்பத்தை ஏற்படுத்தின. வரலாற்று நோக்கு, சமூகப் பார்வை முதலானவற்றின் பின்னணியில் தர்க்கபூர்வமாக ஆய்வுகளை முன்னெடுத்துள்ள அவர்கள், கலை இலக்கியங்களுக்கும் சமூக இயக்கத்துக்கும் இடையிலான தொடர்புகளையும் கலை இலக்கியங்களில் வர்க்கக் குணாம்சங்கள் அமைந்துள்ளவாற்றையும் கண்டறிந்து விளக்கினர். அக்குழுவினர் கையாண்ட அணுகுமுறையினால் கலை இலக்கியங்களின் உருவ – உள்ளடக்க அமைவில் சமூக வாழ்வு செலுத்திய தாக்கங்கள் கண்டறியப்பட்டதுடன் கலை இலக்கியங்களைக் கொண்டு சமூக வரலாற்றை மீட்டெடுத்தலும் சாத்தியமாயிற்று. 1950களில் தனித்துவமுடைய செல்நெறியாக வளர்ந்துவந்த அவ்விமர்சனமுறைமை, 1980களின் பிற்பகுதி முதல் தன் முதன்மையை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கியது. அத்தேய்வு வெவ்வேறு தளங்களில் இடம்பெற்று வருகின்றபோதிலும், முற்போக்கு விமர்சகர்கள் வளர்த்தெடுத்த செழுமையான ஆய்வுமரபின் தொடர்ச்சியைப் பேணும் முயற்சிகளைச் சிலர் மிகுந்த அக்கறையுடன் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுள் தனித்துச் சுட்டிக்காட்டத்தக்க ஒருவராக எல்.ஜோதிகுமார் விளங்குகிறார்.

மார்க்சிய மூலவர்கள் முன்வைத்த சித்தாந்தங்கள், அவற்றின் பிற்கால வளர்ச்சி மற்றும் திரிபுகள், மார்க்சிய விரோத சக்திகளின் நகர்வுகள், தமிழக மற்றும் இலங்கைச் சூழலில் இடதுசாரி அமைப்புகளின் இயக்கம் முதலானவை குறித்த விரிந்த புலமைகொண்டுள்ள ஜோதிகுமார் படைப்பு, இதழியல், ஆய்வு, பதிப்பு, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் கருத்தியல் வலுவுடன் சமரசமற்று இயங்கி வருகிறார். வரலாற்று நோக்குடனும் சமூகப் பார்வையுடனும் கலை இலக்கியங்களையும் சமகால அரசியல் அசைவுகளையும் நுட்பமாக ஆராய்ந்து வரும் அவர், மேலாதிக்க வர்க்கத்தின் பிற்போக்கு நிலைபாட்டையும் அதனை ஆதரிக்கும் கலை இலக்கியங்கள் விதைக்கும் நச்சுத் தன்மையையும் அம்பலப்படுத்தி வருவதுடன் இடதுசாரி இலக்கியத் தளத்தில்நின்று, அவ்விலக்கிய மரபு பேணவிளையும் இலக்கிய நாகரிகத்தையும் அந்நாகரிகத்தை வெவ்வேறு தளங்களில் வளர்த்தெடுத்தவர்களையும் அதன் தொடர்ச்சியாக இயங்கியவர்களையும் ஆழமாக அறிமுகப்படுத்தும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில் முற்போக்கு இலக்கியக் குழுவினர் வளர்த்தெடுத்த செழுமையான ஆய்வு மரபின் சமகால அடையாளங்களுள் முதன்மையான ஒருவராக அவரை முன்நிறுத்தலாம். அதற்கு ‘23ஆம் வயதில் பாரதி’ என்ற இந்நூலும் சான்றாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க ...

மெல்பேர்ன் நகரத்து நூலகத்தில்... -இந்து.லிங்கேஸ்-

விவரங்கள்
-இந்து.லிங்கேஸ்-
கவிதை
27 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



நேற்று மெல்பேர்ன் நகரத்து 
Victorian state Library இற்குச் 
சென்றிருந்தேன்.
இதுவே என் வீடு. என் வாழ்வு 
இங்கே நிலைத்திருந்தால்.
நித்தம் ஒரு மணி நேரமாவது 
வாசிப்பில் என்னைத் தொலைத்திட 
இத்தாய் 
அவள் மடிதந்து என்னை 
அரவணைத்திருப்பாள். 

யாழ்.நூலகத்திற்கு முன் 
அமர்ந்திருக்கும் சரஸ்வதி... 
நினைவுகள் என் மனசை
 உருக வைத்த தருணமது. 

மேலும் படிக்க ...

" ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்" பாடலைப் பாடிய பாடகி திருமதி கனகாம்பாள் சதாசிவம் மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்!

விவரங்கள்
- வ.ந.கி -
கலை
27 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் பிரபலமாகவிருந்த இசைக்குழுக்கள் பலவற்றில் பாடிப்புகழ் பெற்றவர் பாடகி கனகாம்பாள் சதாசிவம். கண்ண்ன் - நேசம் இசைக்குழுவில் தன் இசைப்பயணத்தை ஆரம்பித்தவர்.  நான் அக்காலகட்டத்தில் என் பால்ய, பதின்மப் பருவத்தில் பல இசைக்குழுக்களின் இசை நிகழ்வுகளை ஆலயத்திருவிழாக்கள், திருமண நிகழ்வுகளில்  நண்பர்களுடன் கேட்டு இரசித்திருக்கின்றேன்.  ஆனால் அப்போதெல்லாம் அங்கு பாடிய பெண் பாடகிகளின் பெயர்கள் நினைவிலில்லை. இவரும் பாடியிருந்திருக்கலாம். பெயர் அறியாமல் இவர் பாடலை இரசித்திருப்பேன். ஆனால் இவரது பெயரை நான் முதன் முதலில் அறிந்து கொண்டது 'கோமாளிகள்' திரைப்படத்தில் இவர்  பாடிய " ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்' என்னும்  பாடல் மூலம்தான்.

மேலும் படிக்க ...

சீவகசிந்தாமணியில் அகப்பொருள் மரபுமாற்றங்கள்! - முனைவா் பா.பொன்னி -

விவரங்கள்
- முனைவா் பா.பொன்னி -
ஆய்வு
27 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- கட்டுரையாசிரியர்: சீவகசிந்தாமணியில் அகப்பொருள் மரபுமாற்றங்கள்!  - முனைவா் பா.பொன்னி,,இணைப்பேராசிாியா் மற்றும் துறைத்தலைவா், இளங்கலைத்தமிழ்த்துறை, தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி( தன்னாட்சி ), சிவகாசி -


இலக்கியங்கள் அவை தோன்றும் காலத்தின் பின்புலத்திற்கு ஏற்ற மாற்றங்களைத் தன்னுள் ஏற்கும் தன்மை உடையவை. ஆகவே இலக்கியங்கள் வரலாறுக்கு அடிப்படையாகவும், வரலாற்றை அறிவதற்கு ஆதாரமாகவும் அமைகின்றன. குறிப்பிட்ட காலச்சூழலில் தோன்றும் இலக்கியங்கள் அவை காலத்திய சூழலுக்கு ஏற்ப அமைகின்றன. இலக்கியங்களில் ஒரு காலத்தில் மரபாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருண்மைகள் பின்னா் வரும் காலத்தில் மாற்றங்களைப் பெறுவதும் கூட   மரபாகவே அமைகின்றன. அவ்வகையில் சீவகசிந்தாமணியில் மாற்றம் பெற்ற அகப்பொருள் மரபுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

மரபு :

முன்னோா்கள் மொழிந்த பொருளினை அவ்வாறே பின்பற்றுவதை மரபு என்று சுட்டுவா். மரபு என்பதற்குக் கழகத் தமிழ் அகராதி “பழமை, முறைமை, வழக்குமுறை, இலக்கணம், இயல்பு”1 ( கழகத் தமிழ் அகராதி, ப.742 ) என்று பல பொருள் தருகிறது. தமிழ் மொழி அகராதியானது“குணம்,பழமை,முறைமை” (தமிழ் மொழி அகராதி, ப. 126 ) எனச் சுட்டுகிறது.

மேலும்,“மரபு என்பது இலக்கணம் மட்டும் அல்ல. மரபு என்பது இலக்கியத்திற்கு மட்டும் அல்ல. மரபு என்பது முந்தைய தலைமுறை சோ்த்து வைத்திருக்கும் அனுபவம், அறிவு, முடிவு ஆகிய அனைத்தும் சோ்ந்தது. குலநீட்சியில் மானுட வா்க்கம் தன் அறிவுத் தோட்டத்தில் அனுபவத்திளைப்பில் உணா்ந்து தெளிந்து உருவாக்கிய முடிவுகள். அவை வருங்காலத்திற்கென்று இலக்கியமாக, சமயமாக, அறநெறியாக, பிற அறிவுத்துறைகளாக முந்தைய தலைமுறை விட்டுச் சென்ற அனுபவத் திரட்டு தான் மரபு. அறிவுத் தோட்டத்தில் கிடைத்த செல்வம் தான் மரபு” ( பாலா, புதுக்கவிதை ஒரு பாா்வை, பக்.22-23 ) என்பா். இவற்றின் வாயிலாக முன்னோா்கள் வகுத்துள்ள வரைமுறைப்படி அமைவதே மரபு எனலாம்.

மேலும் படிக்க ...

நெதர்லாந்தின் நீர் மேலாண்மை! -பவானி சற்குணசெல்வம் -

விவரங்கள்
-பவானி சற்குணசெல்வம் -
சுற்றுச் சூழல்
27 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நெதர்லாந்து, அதன் நிலப்பரப்பின் பெரும்பாலான பகுதி கடல் மட்டத்திற்குக் கீழே அமைந்துள்ளதால், நீர் மேலாண்மை மிகவும் முக்கியமானது. நீர் மேலாண்மையின் முக்கிய பங்குகள்:

1. கால்வாய்கள்

நெதர்லாந்தின் நீர் மேலாண்மையில் கால்வாய்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன; அவை வெள்ளக் கட்டுப்பாடு, நீர் வழிப் போக்குவரத்து, விவசாய நீர்ப்பாசனம் மற்றும் நில மீட்பு (polder systems) ஆகியவற்றிற்குப் பயன்படுகின்றன; காலநிலை மாற்ற சவால்களைச் சமாளிக்க, நீரின் மீது மிதக்கும் பண்ணைகள் போன்ற புதிய

முறைகளுக்கும் கால்வாய்கள் உதவுகின்றன, நாட்டின் புவியியல் அமைப்பில் நீரை திறம்பட நிர்வகிக்கவும், விவசாயம், போக்குவரத்து மற்றும் வாழ்க்கை முறையை ஆதரிக்கவும் இந்த நீர்வழிகள் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன. 

கால்வாய்களின் முக்கியப் பணிகள்:

வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வடிகால்:

கடல் மட்டத்திற்கு கீழே உள்ள பல பகுதிகளைப் பாதுகாக்கவும், உபரி நீரை வெளியேற்றவும் கால்வாய்கள் உதவுகின்றன.

Delta Works » போன்ற பெரிய திட்டங்கள், வெள்ளத்தைத் தடுக்கவும், கடலில் இருந்து நிலத்தைப் பாதுகாக்கவும் கால்வாய்கள் மற்றும் அணைகளைப் பயன்படுத்துகின்றன.

மேலும் படிக்க ...

ஈழக்கவி கவிதைகள்!

விவரங்கள்
- ஈழக்கவி -
கவிதை
27 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

நீலத்தின் இறுதிப் பிரதி


வானத்தின் ஞாபக அடுக்குகளில்
உருகிக் கொண்டிருக்கிறது
ஒரு காகிதப் படை.


திறக்கப்படாத தபால் உறைகளாகின்றன
என் சுவாசங்கள்;
நீலத்தின் அடர்த்தியில்
வாக்குறுதிகளும் கனத்த மௌனங்களும்
பரிமாணங்களை இழந்து சிதறுகின்றன.


காற்று காகிதங்களைச் சுழற்றும்போது
மறைந்துபோன சொற்களின் இடைவெளியில்
யாரோ ஒருவரின் தூக்கத்தைக் கலைக்கிறது
ஒரு வான்-குரல்.


நமது பெயர்கள் அச்சிடப்படவில்லை;
அவை வெறும் சத்தங்களாக—
துருப்பிடித்த பழைய அலைக்கற்றைகளில்
இன்னும் அலைந்து கொண்டிருக்கின்றன.


தோல் மீது விழும் வெளிச்சம்
ஒரு கடிதத்தைத் திறக்கிறதா?
அல்லது, யாரோ எழுதி முடித்த
ஒரு பதிலின் முடிவற்ற தொடர்ச்சியாக
நாம் மாறுகிறோமா?

மேலும் படிக்க ...

தமிழர்களின் திருமண சடங்குளும் அதன் விளக்கங்களும்! - த.சிவபாலு B.Ed.Hons, M.A.in Ed. -

விவரங்கள்
- த.சிவபாலு -
இலக்கியம்
26 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தமிழர் ஆரியச் செல்வாக்குக்கு உட்படமுன்னரே ஊரறிய திருமணச் சடங்குகளை நிறைவேற்றியுள்ளனர். உறவினர்கள், ஊரவர்கள் கூடி மிகச்சிறப்பாக கொண்டாடியுள்ளனர். ஆரம்ப காலத்தில் காதலர் இருவர் கருத்தொருமித்துக் காதல் திருமணம் செய்யும் முறையும் பெற்றோர் மணம்பேசு திருமணம் செய்துவைக்கும் முறையும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. காதலன் காதலியைக் கண்டு மனம்விரும்பி தாய் தந்தையார் உறவினர் யார் என்று தெரியாத நிலையில் காதல் வயப்பட்டு மணம் முடித்துள்ளனர். இருவர் ஓரிடத்தில் ஒருவரை ஒருவர் எதிர் கொள்கின்றனர். தங்கள் மனதைப் பறிகொடுக்கின்றனர். கண்டதும் காதல் சங்ககாலத்திலும் இருந்துள்ளது. உனது தாய் தந்தை யார் என்று அறியேன், உனது ஊர் எதுவென அறியேன் எனது தாய் தந்தையருக்கு அவர்கள் என்ன உறவோ என்றும் அறியேன் ஆனால் உன்மீது காதல் பிறந்துவிட்டதே எங்கள் இருவரது நெஞ்சளும் கலந்துவிட்டனவே பார்வையில் என செம்புலப் பெயல் நீரார் என்னும் புலவர் பாடடிய பாடலைப் பார்த்தால் காதல் மணம் அன்றே நடந்துள்ளதை அறியமுடிகிறது:

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

இப்பாடலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை. ஆயினும் இதில் உள்ள "செம்புலப் பெயனீர்" என்ற உவமையின் சிறப்பின் காரணமாக "செம்புலப் பெயனீரார்" என்ற பெயரில் அழைக்கப்படுகிறார், நம் காலத்தில்  Mr. Bitcoin என்று பிற்கொயின் காசு முறையை கண்டுபிடித்தவரை அழைப்பதைப் போல. குறிஞ்சித் திணை, புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறித்த பாடல்களைக் குறிப்பது.

மேலும் படிக்க ...

நாடக அரங்கக்கலையில் நவீனத்துவத்தை உட்புகுத்திய நாடகர்! - த. நரேஸ் நியூட்டன் -

விவரங்கள்
- த. நரேஸ் நியூட்டன் -
இலக்கியம்
26 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

என்றும் அழியாத நல்ல நாமத்தோடும் புகழோடும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருந்கக் கூடியவர்கள் கலை இலக்கியத்தினூடக தமது ஆற் றல்களை எப்போதும் புதிய பரிணாமங்களுடன் வெளிப்படுத்தி வாழ்வாங்கு வாழ்ந்த மனிதர்களே என்றால் அது மிகையாகாது.

கலை இலக்கித்துறையில் சாதனைகள் புரிந்து மக்களால் போற்றப்பட்டு வந்த சில ஆளுமைகளின் இழப்பு செய்தி அண்மைக்காலத்தில் அடுத்தடுத்து வந்து கலை இலக்கிய ஆர்வலர்களை கலக்கமடையச் செய்திருக்கிறது. அந்த வகையில் வந்த செய்திகளுக்குள் ஒன்றுதான் நாடகர் என அநேகரால் போற்றப்படும் சர்வதேச மட்டத்தில் நாடக அரங்கக் கலையால் தனது பெயரை வலம்வரும்படியாக நாடகக்கலையில் பல சாதனைகளைப் புரிந்த மதிப்புக்குரிய கலைஞர் நாடகர் கலாநிதி குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களின் மறைவுச்செய்தி.

யார் இந்த நாடகர்? இதை நான் சொல்வதால்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை காரணம் ஈழத் தமிழ் மக்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்  இவர். சர்வதேசமட்டத்தில் அநேகமான தமிழ் மக்களின் மனதில் ஆழமாக பதிந்த மனிதர்தான் இவர். மண் சுமந்த மேனியர் என்ற மேடை நாடகத்தின் மூலம் மிகப்பெரிய ஆர்வத்தை நாடகக் கலைஞர்களிடத்தில் உருவாக்கியவர் என்பது மட்டுமல்ல மேடை நாடக கலையிலும் நவீனத்துவம் மிக்க மாற்றத்தை உருவாக்கியவர்.

மேலும் படிக்க ...

கனடியப் பிரதமர் மார்க் கார்னியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க உரை! - ஊர்க்குருவி-

விவரங்கள்
- ஊர்க்குருவி-
அரசியல்
26 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கனடியப் பிரதமர் மார்க் கார்னியின் இந்த உரை வரலாற்றில் நிலைத்து நிற்கபோகும் உரை! தற்போதுள்ள சூழலில் , டொனால்ட் ட்ரம் அமெரிக்க அதிபராக இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இந்த உரை முக்கியத்துவம் மிக்கது.

* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி

இந்தியப் பயணத்தொடர்: நர்மதை நதியின் ஓசை! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
26 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மத்தியப் பிரதேசத்தின் யபல்பூரில் (Jabalpur) நாங்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம். அங்கு இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் நர்மதா நதி ஓடிக்கொண்டிருந்தது. வழிகாட்டி கூறியபடி, இந்த நதி இந்திய உபகண்டத்தின் பழமையான நதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதைக் கேட்டு நான் ஆச்சரியத்துடன் சிந்திக்கத் தொடங்கினேன்.

கங்கை, யமுனா, பிரமபுத்திரா போன்ற இந்தியாவின் பிரசித்தி பெற்ற நதிகள் அனைத்தும் இமயமலையிலிருந்து தோன்றியவை. இமயம் உருவானதே இந்திய உபகண்டம் தெற்கிலிருந்து நகர்ந்து ஆசியப் கண்டத்துடன் மோதியதில் ஏற்பட்ட புவியியல் விளைவாகும். இந்த மோதல் சுமார் 50 மில்லியன் வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. அதன் விளைவாக இமயமலை மற்றும் திபெத்தியப் பீடபூமி உருவாயின. பின்னரே இந்தியாவின் முக்கிய நதிகள் தோன்றின. ஆனால் நர்மதா பாயும் பகுதிகள், இதைவிடச் சுமார் 100 மில்லியன் வருடங்களுக்கு முன்பே நிலமிருந்த பாறைத்தட்டுகளில் அமைந்தவையாகும். அங்கு கிடைக்கும் தொல்லியல் (fossil) எச்சங்களும் பாறைகளும் இதற்குச் சாட்சியாய் உள்ளன என்று வழிகாட்டி விளக்கினார்.

இதனை விளக்குவதற்காக அவர் நர்மதா நதிக்கரையிலுள்ள( Narmada Marble Valley) ஒரு இடத்துக்கு எங்களை அழைத்துச் சென்றார். அங்கு ஒரு புறத்தில் கறுப்பு கற்கள், மற்றொரு புறத்தில் சுண்ணாம்பு படிவ பாறைகள் காணப்பட்டன. சுமார் ஆறு கிலோமீட்டர் நீளத்திற்கு, நர்மதா நதியின் இரு கரைகளிலும் உயரமாக பளிங்குப் பாறைகள் உயர்ந்து தெரிந்தன. வழிகாட்டி, முழுநிலவின் ஒளியில் இக்கற்கள் பளிச்சிடும் எனக் கூறினார். நாங்கள் சென்றது மதிய நேரம். எழுத்தாளரானதால் நிலவை கற்பனையில் பார்த்தேன். நடுப்பகலான போதிலும் வள்ளத்தில் அரைமணி நேரம் பயணித்தபோது பாறைகளின் இயற்கை அமைப்பு கண்கவர் அழகாக இருந்தது.

மேலும் படிக்க ...

கவிஞர் தாமரையின் 'தொலைந்து போனேன்' கவிதையில் பெண் மன வெளிப்பாடுகள்! - முனைவர் மூ.சிந்து -

விவரங்கள்
- முனைவர் மூ.சிந்து -
இலக்கியம்
26 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


* கட்டுரையாசிரியர் - முனைவர் மூ.சிந்து, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோவை  


முன்னுரை

பெண்ணிய எழுத்தாளரான தாமரையின் 'கதவும் கள்ளிப்பாலும்'  எனும் கவிதையின் தொகுப்பில் 'தொலைந்து போனேன்'  கவிதையில் பெண்ணின் மனவெளிப்பாட்டினை வெளிப்படும் நோக்கில் அமையப் பெற்றதாகும்.

‘திருவிழா’ அல்லது ‘உற்சவம்’ என்பது, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட சில தினங்களில் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடுவது. திருவிழா அல்லது ஊர்வலம் அல்லது வலம் என்பதே சரியான தமிழ்ப் பதமாகும். உற்சவம் என்பது பிற மொழிச் சொல்லாகும். திருவிழாவின் போது கிராமங்களில் மக்கள் ஒருமாதத்திற்கு முன்பே தன் இல்லங்களில் திருவிழாவிற்காக தன்னை தயார் செய்யும் நிலையைக் காண முடியும். அப்புாது தம் சுற்றங்களோடு ஒன்றாகத் திரண்டு இன்புற்று இருக்கும் நிலையில் அந்த நிகழ்வு மனதிற்கு இன்பம் தரக்கூடியதாகவும் பசுமையான நினைவுகளாகவும் அமைந்தமையைக் காணமுடிகிறது.

கவிதையின் போக்கு

இல்லத்தில் கடைக்குட்டியான மகள் எல்லோருக்கும் செல்லமாக வளரும் சூழலில் ஒரு திருவிழாவில் காணமல் போக தன் சுற்றம் முழுதும் அவளைத்தேடிப் பிடிக்கையில், அதே பெண் தான் வளர்ந்து திருமணவிழாவில் தன் சுற்றம் அனைவரும் முன் இருக்க தான் அந்த இடத்தில் எல்லோரும் இருக்க தொலைந்து போகும் தருணத்தில் பெண்ணின் மன உணர்வு எத்தகையது என்பதையும், சமூகச் சூழலில் பெண் தன் உணர்வினை தொலைத்து வாழும் நிலைப்பாட்டினையும் ஆசிரியர் படம் பிடித்துக் காட்டிச் செல்கிறார் என்பது கண்கூடத்தக்கது.

தொலைந்து போதல்

பெண் தனக்கான சுயத்தை வெளிப்படுத்துவது என்பது சிக்கலானதாகும். சிறு வயது முதல் இறப்புவரை ஏதோ ஒரு கட்டுக்குள் வாழும் வாழ்க்கையில் அவளது அனைத்து அடையாளங்கள் மறைக்கப்படுகின்றன. பெண் சமூகத்தில் வளர வளர அவர்களுக்கான கட்டுப்பாடுகளும் வளர்ந்து விடுகின்றன. காலப்போக்கில் அவர்களின் அடையாளங்களைத் தன் குடும்பத்திற்காக இழந்து நிற்கின்றனர். ஒரு பெண் தனது திருமண வாழ்க்கையில் எப்படி “தொலைந்து போகிறாள்” என்பதை தன் கவிதையில் பெண்ணின் மன உணர்வாகவே தாமரை எடுத்துரைத்துரைக்கிறார்.

மேலும் படிக்க ...

அலெக்ஸ் பிரிட்டியின் மானுட நேயத்திற்காகத் தலை வணங்குவோம்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
25 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



மின்னியாபொலிஸ் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடிவரவாளர்களுக்கு எதிரான அடக்குமுறை தொடர்கிறது. அவரது தலைமையிலான ICE குண்டர்களின் அட்டகாசம் தொடர்கிறது. எவ்வித மானுட நேயமுமற்று பெண்களை, முதியவர்களைம் குழந்தைகளை அவர்கள் அவமானப்படுத்தும் வகையில் கைது செய்வதும், அவர்கள் மேல் தேவைக்கு அதிகமான அளவில் பலாத்காரம் புரிவதும் தொடர்கிறது. 

மேலும் படிக்க ...

சிறுகதை : சாத்துபவர்கள் சாத்தான்கள்! - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
சிறுகதை
25 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[இக்கதையில் ஆசிரியர் கழுகு, தாமரை என்று குறிப்பிடுவது அக்காலகட்டத்தில் இலங்கையில் இயங்கிய தமிழ் அமைப்புகளில் இரண்டை. - பதிவுகள் -]

''அருள், இந்த​ உக்ரேன் பிரச்சனை...என்ன​, ஒன்றுமே விளங்க​ மாட்டேன் என்கிறதே? '' கட்டடியிலே  சபேஷ்,  கேட்க கூடி இருந்த​ உமா,யோகி, நாகேஷ்...எல்லார் மூஞ்சியிலும் அறியும் ஆர்வம் சுடர் விட்டது. அருளர் பழைய​ தொழில்சங்க​ அமைப்பில் இருந்தவர்.   அவனுடைய​ காலத்தில்  அவர் ஒன்றாய்  ஒரே விடுதலைக்குழுவில் புழங்கியவர் .மற்றவர்களுக்கு தான் புதியவர் . யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்த​ பிறகு   எவரும் தெரிந்தவர் எனக் காட்டிக் கொவள்தில்லை. கழுகால் தடை செய்யப்பட்டு ,  பல  வருசங்கள் ஓடி விட்டன​ . யாரும் எவரையுமே இப்பவெல்லாம் தெரிந்து கொள்ளவும்​ முயல்வதில்லை .  

அன்று , மானிப்பாய்யில் அவரவர் கிராமத்திற்க்குப் போக​ தீர்மானமின்றி தேனீர்கடை ஒன்றில் சைக்கிளைச் சாத்தி விட்டு நின்ற​ போது எதேச்சையாக​ வந்த​ குலம் இவர்களை கண்டு விட்டு இறங்கி வர​ '' அண்ணே இன்னொரு தேனீர் '' என்று அவனை வரவேற்றார்கள் . '' எப்படியடா இருக்கிறீர்கள் ? உயிரோடு உங்களைக் காண்கிறதில் ரொம்ப​ சந்தோசமடா ,எங்கடா இங்கே? ''எனக் கேட்க​ ''எங்கட​ இடத்தை ஒருக்கா ​எட்டிப் பார்த்து விட்டு வருவோமா என​ நினைக்கிற​ போது நீ வருகிறாய்'' என்று உமா கூறினான் . '' டேய் ,கடைசி வரையில்  போகாதீங்கடா , பொறுப்பாளர்களைத் தான் அவங்கள் பிடிக்கிறாங்கள் . ''என்று எச்சரித்தான் . பக்கத்திலே தான் திரிந்த​ நிலம் , உயிர்  கிராமம் இருக்கிறது . 'போக​ முடியவில்லை என்ற​ மனவருத்தம் ' உள்ளே வெகுவாக​ அரித்தது . '' உனக்கொன்றும் பிரச்சனை  இல்லையா குலம் ? ''என்று சபேஷன் கேட்டான் . '' நான்  கல்யாணம் கட்டியவன் . சங்க​  வேலைகளை அப்பையே நிறுத்தி விட்டோம்​ . குழுவைச் சேர்ந்தவனில்லை , தொழில்ச்சங்கம் வேற​ என்பது அவங்களுக்கு தெரியும் . தப்பித்திருக்கிறேன் '' என்றவன் இரண்டொரு மாதங்களிலே முடிந்து போனான் .கிராமத்துத் தோழர்கள் ,'இவர்கள் கொழும்புக்கு  எப்பவோ போய் வெளிநாடும் போய் விட்டார்கள் ' என்றே பதிலளித்து வருகிறார்கள் . சாடைமாடையாய்  தெரிந்திருந்தாலும் மூச்சு விடுவதில்லை .ஒருமுறை பயணித்த​ பஸ் வயலில் இறங்கிய​ போது சபேஷன் முகத்தில் ஏற்பட்ட​ காயத்திற்க்கு இழை பிடித்ததுடன் ,குலத்தின் அபாயக்குரல் நினைவில் வர​​ 'தலைவாறலையும் கொஞ்சம் மாற்றி , உடையையும் ​மாற்றி விட்டிருந்தான் . முன்பெல்லாம் யூனிபோர்ம் போல​ ஒரே சாரத்துடன் திரிந்தவன் . தாடியும் , சாரமுமே   அவன் அடையாளங்கள் .கல்யாணமாகிய பின் முதலில்  செய்தது தாடியை வழித்தது தான் .மாறிய​  முகம் .மீசையை நரைக்கும் வரையில் காத்திருந்து இப்பத்தான் எடுத்திருக்கிறான் . தெரிந்தவர் கூட​ மட்டுக்கட்டுவது சிரமம் தான் .

மேலும் படிக்க ...

மெய்நிகர் நிகழ்வு: இரவி பொன்னுத்துரை ( வைகறை ரவி ) அவர்களின் ஒரு வருட நினைவேந்தல்!

விவரங்கள்
யோகா வளவன்
நிகழ்வுகள்
23 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

நந்தலாலா வழங்கும் எல்.ஜோதிகுமாரின் '23ஆம் வயதில் பாரதி' நூல் வெளியீடு!

விவரங்கள்
- தகவல்: ஜோதிகுமார் -
நிகழ்வுகள்
23 ஜனவரி 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மற்ற கட்டுரைகள் ...

  1. இலக்கிய வானில் நீங்களும் ஒரு தாரகையாய் ----- கலா சிறிரஞ்சனின் நினைவாக ----- - வாசன்-
  2. சிலப்பதிகாரக்காப்பியத்தில் நாடகக் கூறுகள்! - முனைவர் சா. சதீஸ் குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கோயம்புத்தூர் -641105. -
  3. நம்பிக்கை நந்தவனம் 2026! - ம.ஆச்சின் -
  4. ஓவியர் ரமணி அஞ்சலி: ராகமாய் நிறங்கள் பாடும்! - செ.சுதர்சன் -
  5. உன்னைத் தடுக்க முடியாது! - சு. இசை -
  6. பாரிஸ் இலக்கிய மாலை நிகழ்வில் பத்து நூல்கள் வெளியீடு: வி. ரி. இளங்கோவன் - பத்மா இளங்கோவன் நூல்கள்! - இளநிலா -
  7. மொழிபெயர்ப்புக் கவிதை: ஓ! உறக்கமே! - ஆங்கில மூலம்: ஜோன் கீற்ஸ் (John Keats) | தமிழில் : நாங்குநேரி வாசஸ்ரீ்
  8. தமிழ் இலக்கியத்தில் நூல் விமர்சனத்தின் பொறுப்பும் வரையறையும்! - பவானி சற்குணசெல்வம் (நெதர்லாந்து ) -
  9. இளம் பாரதி பற்றி மேலும் சில சிந்தனைகள்! - எல்.ஜோதிகுமார் -
  10. பாதுகாக்கப்பட வேண்டிய மந்திரிமனை! இன்னும் காலம் கடந்து போய்விடவில்லை! பாதுகாப்போம்! வரலாற்றைப் பேணுவோம்! - வ.ந.கிரிதரன் -
  11. முகநூலில் தொடரும் விவாதம் : எழுத்தாளர் மாலனின் இந்தித்திணைப்பு பற்றிய கருத்துகளும், எதிர்வினைகளும்
  12. நினைவுக் குளியல் 2 - வாசிப்பின் நெறிப்படுகை! - தேவகாந்தன் -
  13. பதினெட்டாம் திருப்பூர் குறும்பட விருது வழங்கும் விழா 11/1/26 - தகவல் - சுப்ரபாரதிமணியன் -
  14. சிறுகதை: வெட்டுப்பட்டவை! - சுப்ரபாரதிமணியன் -
பக்கம் 1 / 122
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி