துயர் பகிர்வோம்: இனிய நண்பர் கலாநிதி எஸ். சிவநாயகமூர்த்திஎமது இனிய நண்பர் கலாநிதி சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி அவர்கள் சென்ற சனிக்கிழமை 30-1-2021 ஆண்டு எம்மைவிட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி எமக்கு அதிர்ச்சி தருவதாகவே இருக்கின்றது. இலங்கையில் பிரதி கல்விப்பணிப்பாளராகவும், ரொறன்ரோவில் பகுதிநேர ஆசிரியராகவும் கடமையாற்றியிருந்த இவரை முதன் முதலாக 1990 களில் ‘கனடா தமிழ் பெற்றோர் சங்க நிகழ்வு ஒன்றில்தான் சந்தித்தேன். இவர் பெற்றோர் சங்க நிர்வாகக் குழுவில் இடம் பெற்றிருந்தார். திரு சின்னையா சிவநேசன், திரு கே. கனகரட்ணம், திரு. இராமநாதன் ஆகியோர் அக்காலகட்டத்தில் தலைவர்களாக இருந்தார்கள். நான் முதலில் பொருளாளராகவும், பின் செயலாளராகவும் கடமையாற்றினேன். அதிபர் பொ. கனகசபாபதி, பேராசிரியர் இ. பாலசுந்தரம், திரு. சாள்ஸ் தேவசகாயம், திரு. இராமச்சந்திரன் போன்றோர் நிர்வாகசபையில் இருந்தார்கள். அக்காலத்தில் இருந்தே, தன்னார்வத் தொண்டரான நண்பர் சிவநாயகமூர்த்தி இது போன்ற ‘இலங்கை பட்டதாரிகள் சங்கம்’ மற்றும் பல சங்கங்களில் இணைந்து கடைசிவரை தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திலும் இவர் அங்கத்தவராக இணைந்திருந்தார். தற்போது இருக்கும் நிர்வாகக் குழுவில் உப செயலாளராகக் கடமையாற்றினார். இவர் எழுத்தாளர் இணையத்தின் தலைவராக 2015 ஆம் ஆண்டு இருந்த போது, எனது 25 வருடகால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டி விழா எடுத்திருந்தார். ‘கனடா தமிழர் இலக்கியத்தில் குரு அரவிந்தனின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் 286 பக்கங்களைக் கொண்ட நூல் ஒன்றையும் அந்த விழாவில் கனடா எழுத்தாளர் இணையத்தின் சார்பில் வெளியிட்டு வைத்திருந்தார். சர்வதேச இலக்கிய உலகிற்கு இந்த நூல் மூலம் எனது இலக்கியப் பணி பற்றி அறிய வைத்திருந்தார். இந்த இதழில் ‘குரு அரவிந்தன் அவர்களின் 25 ஆண்டுகால எழுத்துப் பணியும், சமூகசேவையும்’ என்ற தலைப்பில் விரிவான ஒரு கட்டுரையும் எழுதியிருந்தார். கனடாவில் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்களில் அனேகமானவர்களுடன் நட்புறவு கொண்டிருந்ததால், அவர்களுடைய வாழ்த்துச் செய்திகளையும் இதில் இடம் பெறச் செய்திருந்தார். தனது காலத்திலேயே சிறுகதைப் பட்டறை ஒன்றை நடத்தும்படி என்னிடம் கேட்டு, சிறப்பாக அதை நடத்தியும் வைத்தார்.

2016 ஆம் ஆண்டு எழுத்தாளர் இணையம் வெளியிட்ட ‘வேரும் விழுதும்’ என்ற மலர் வெளியிடுவதற்கும் இணையாசிரியர்களாக நாங்கள் கடமையாற்றினோம். எழுத்தாளர் இணையத்தின் 25 வது ஆண்டு நினைவு மலர்க் குழுவில் என்னுடன் துணை ஆசிரியராகக் கடமையாற்றி அந்த மலரைச் சிறப்பாக வெளியிட மிகவும் உதவியாகவும் இருந்தார். அச்சகத்திற்கே வந்து நூலில் உள்ள பிழை, திருத்தங்களைக் கவனமாகச் செய்து தந்தார். அதன் பின் எழுத்தாளர் இணையத்தின் 25 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உலகளாவிய சிறுகதைப் போட்டி ஒன்றையும் 2019 ஆண்டு நடத்தி இருந்தோம். போட்டிக்கான நடுவர் குழுவில் ஒருவராக இருந்து இறுதிச் சுற்றில் பரிசுக்கதைகளைத் தெரிவு செய்ய மிகவும் உதவியாக இருந்தார். ‘சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் 16 சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும் தொகுத்து 2020 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தோம். இந்தத் தொகுப்பிலும் பிழை, திருத்தங்களைச் செய்து தந்தார். ஒரு பொறுப்பை ஏற்றுக் கொண்டால் கடமை உணர்வோடு அதைக் கவனமாகச் செய்து முடிப்பதில் வல்லவராக இருந்தார். இவர் பதவி வகிக்கும் போது நிர்வாகசபைக் கூட்டங்கள் எதையுமே தவிர்த்ததில்லை. இவரிடம் வாகன வசதி இல்லாவிட்hலும் குறித்த நேரத்திற்குச் சற்று முன்பாகவே அந்த இடத்தில் நிற்பதற்கு ஏற்றமாதிரித் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டிருந்தார். சமூகத்தில் கொண்ட அக்கறை காரணமாக, தவறான பாதையில் செல்பவர்களை அடையாளம் கண்டு, போலிகளையும், ஏமாற்றுக் கூட்டங்களையும் எப்பொழுதும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் அன்று அடிக்கடி தன் மனதில் பட்டதை எமக்கு எடுத்துச் சொல்வார். அப்படியானவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளையும் இவர் தவிர்த்துக் கொண்டிருந்தார்.

இவர் ‘குரு அரவிந்தனின் புனைவுகள்’ என்ற தலைப்பில் ஒரு சிறப்பான, விரிவான கட்டுரையை ஏற்கனவே எழுதியிருந்தார். தொடர்ந்து சென்ற ஆண்டு வெளிவந்த ‘என்ன சொல்லப் போகிறாய்?’ என்ற எனது நாவலுக்கு அறிமுகயுரையும் சிறப்பாக எழுதித்தந்திருந்தார். சமீபத்தில் ‘குரு அரவிந்தனின் நாவல்கள்’ என்ற தலைப்பில் இலக்கிய நண்பர்கள் யாரையாவது கேட்டு ஒரு கட்டுரை எழுதித் தரும்படி ஜீவநதி ஆசிரியர் கேட்டிருந்தார். நான் இவரிடமே அதையும் கேட்டிருந்தேன். உடனடியாகவே அவர் அந்தப் பழைய கட்டுரையில் சில மாற்றங்களை இந்தத் தலைப்புக் கட்டுரைக்கு ஏற்ற மாதிரிச் செய்து அனுப்பியிருந்தார். நான் அவர் குறிப்பிட்ட சில திருத்தங்களைச் செய்து விட்டு அவருக்கு நன்றி சொல்வதற்காக அழைத்த போதுதான் அவரை மருத்துவமனையில் அவசரப் பிரிவில் அனுமதித்திருப்பதாக மகளிடம் இருந்து அறிய முடிந்தது. வழமைபோல, அவர் திரும்பி வருவார் எனத்தான் நினைத்திருந்தோம். ஆனால் இவ்வளவு விரைவாக அவர் எம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்பதை அறிந்த போதுதான் அதிர்ச்சியாக இருந்தது. சமூக நலன் கருதிக் கனடிய இலக்கியத்திற்கு அணி சேர்க்கும் வகையில் சில நூல்களையும் இவர் வெளியிட்டிருக்கின்றார். எப்பொழுதும் சிரித்த முகத்துடன், யாருடைய மனமும் நோகாது, நட்போடும், உதவி செய்யும் மனதோடும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்ததே இவரிடம் இருந்த தனிச்சிறப்புகளில் ஒன்றாகும்.

இவர் மிகவும் சுறுசுறுப்பாகத் தன்னார்வத் தொண்டராகவும், இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவராகவும் இயங்குவதற்கு இவரது குடும்பத்தினர் கொடுத்த ஆதரவு மிகவும் முக்கியமானதாகும். இவரது துணைவியார் திருமதி தனலட்சுமி அவர்கள் எப்பொழுதும் இவர்கள் வீட்டிற்கு யார் சென்றாலும் மலர்ந்த முகத்தோடு வரவேற்று, உபசரிப்பவராகவே இருந்தார். சென்ற வருடம் ஐனவரி மாதத்தில் தான் இவரது துணைவியாரும் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். அவரது பிரிவுத் துயரால் இவர் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. கோவிட் 19 காரணமாக நேரடியாகச் சந்திக்க முடியாவிட்டாலும், தொலைபேசி மூலம் அடிக்கடி நலன் விசாரித்துக் கொள்வார். பாசம் மிக்க ஒருவரைப் பிரிந்து விட்டோம் என்ற துயர் மனதை வேதனைப் படுத்திக் கொண்டே இருக்கின்றது.
கோவிட்-19 காரணமாகச் சுகாதாரக் கட்டுப்பாடுகளை மதித்து நேரடியாகச் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்த முடியாத நிலை கனடாவில் ஏற்பட்டிருப்பதால், இறுதிக் கிரிகைகள், 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்றும் குடும்பத்தினர் அறிவித்திருக்கிறார்கள்.  

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்’ (குறள்-50)

என்ற வள்ளுவன் வாக்கிற்கேற்ப வாழ்ந்து, தனது 86 வது வயதில் எம்மைவிட்டுப் பிரிந்த திரு. எஸ். சிவநாயகமூர்த்தி அவர்களின் பிரிவுத் துயரில் குடும்பத்தவர்கள், உறவினர், மற்றும்  நண்பர்களுடன் கனடா தமிழ் எழுத்தாளர் இணைய அங்கத்தவர்களான நாங்களும் பங்கு கொண்டு, அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி!

குரு அரவிந்தன்,
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்.
01-02-2021

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here