ஆய்வுக்கட்டுரை!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி -வட்டத்திற்கு உட்பட்ட பகுதியே சித்தேரியாகும். இப்பகுதியானது. அருரில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியாகும். இங்கு வாழும் பழங்குடியின மக்கள் விவசாயத்தை முதன்மைத் தொழிலைக் கொண்டுள்ளனர். உழவுத்தொழில் செய்யும் பொழுது மரத்தினால் செய்யப்பட்ட ‘ஏர்’ கருவியை, காளை மாடுகளில் பூட்டி உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனார். அவ்வகையில், அப்பகுதியின் நில அமைப்பு, வேளாண்மை செயல்பாடுகள், காலத்திற்கேற்ப பயிரிடும் முறைகள், உழவுத்தொழிலில்  பயன்படுத்தும் கருவிகள் ஆகியவற்றை விரிவாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நில அமைப்பு

சித்தேரி மலைவாழ் பழங்குடியினர் இரண்டு வகையான நில அமைப்பைக் கொண்டுள்ளனர்.  அவை,    நிலஅமைப்பு உழவுக்காடு (நீர் பாயக்கூடியது) ,  கொத்துக்காடு  களைக்கொத்து(வானம் பார்த்த பூமி)

உழவுக்காடு

இப்பகுதியில் அதிகமாக நெல், கம்பு, வெங்காயம், கொத்தமல்லி, வரமிளகாய், தற்பொழுது மஞ்சள் போன்ற பணப்பயிர்கள் அதிகமாகப் பயிரிடுகின்றனர்.

கொத்துக்காடு

கொத்துக்காட்டுப் பகுதியில் தினை, கம்பு, சோளம், மெட்டுநெல், சாமை, ராகி(கேழ்வரகு), பீன்ஸ், கெள்ளு, பச்சைப்பயிறு போன்ற மேட்டுப்பயிர்களை வேளாண்மை செய்கின்றனர்.

வேளாண்மையின் செயல்பாடுகள்

சித்தேரி பழங்குடி இனமக்கள் வேளாண்மை, வேட்டையாடுதல் தொடங்கி, உழுதுபயிர் செய்கின்ற இன்றைய நிலை வரை பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ளனர்.  வேளாண்மை பல செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.  “உழவன் கணக்குப் பார்த்தால் ஏர்க் கூலிக்கூட மிஞ்சாது” என்ற பழமொழி உண்டு. உழுது வேளாண்மை செய்கின்ற நிலத்தை உழவுத் தொழிலானது உழுதல், எருவிடுதல், பயிரிடுதல், பயிரிடுதல், பயிர் பாதுகாத்தல், நீர் பாய்ச்சுதல், அறுவடை செய்தல், விதைகளைத் தோ்வு செய்தல், பாதுகாத்தல், கால்நடைகளை வளர்த்தல் போன்ற காரணிகளை முதன்மையாகக் கொண்டுள்ளது.

நிலத்தின் தன்மைக்கேற்ப பயிரிடுதல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  நிலத்தை உழுது எருவிட்டுப் பண்படுத்தியப் பின்பு செய்ய வேண்டிய செயல் “பயிரிடுதல்” ஆகும்.  பயிரிடும் பொது நிலத்தைத் தோ்வு செய்தல் முதல் செயல்பாடு என்றால், பருவம் பார்த்துப் பயிர் செய்தல் அதைவிட முக்கியம்.  மழைப்பெய்யும் காலம், பயிருக்கு ஏற்ப தட்பவெப்பம் நிகழும் காலம் போன்ற பருவகாலம் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு இம்மக்கள் பயிர்த்தொழில் செய்கின்றனர்.

காலத்திற்கேற்ப பயிரிடும் முறைகள்

சித்தேரி மலைப் பழங்குடிகள் பயிர்களைத் தானியவகைப் பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள், பயிறுவகைப் பயிறுகள் என்று வகைப்படுத்துகின்றனர்.  இவ்வகை பயிர்களைப் பற்றிய தரவுகள் ஆய்வின் பொது விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டவைகளாகும். இம்மக்கள் ஆனி மாதத்தில்,  பயிரிடத்தொடங்கி விவசாயத் தொழில் செய்கின்றனர்.  “ஆனி மாதத்தில், பயிரிடத்தொடங்கி உழவுத் தொழில் செய்கின்றனா். ஆனி மாதத்தில் மஞ்சள், மேட்டுநெல், தினை போன்ற பயிர்கள் விளையும். ஆடி மாதத்தில் சாமையும் கேழ்வரகும் பயிரிடுகின்றன. ‘ஆடியில் ஐந்து வாரம் வந்தால் அடிகிணற்றிலும் அருகம்புல் முளைக்கும்’என்ற பழமொழி இன்றளவிலும் வழங்கப்பட்டு வருகிறது. கேழ்வரகும், புரட்டாசியில் பீன்ஸ், கொள்ளும் போன்றவையும், வைகாசியில் கம்பு போன்ற பயிர் வகைகளும் பயிரிடுகின்றன”1 என்று தகவலாளர் கூறுகின்றார்.

உழவுத் தொழிலில் பயன்படுத்தும் கருவிகள்

சித்தேரி மலைப் பழங்குடிகள் தங்களின் மூத்தோர் பயன்படுத்திய மரக்கருவிகளையும், நவீன எந்திரக் கலப்பையும் பாயன்டுத்தி வருகின்றனா். மரத்தாலான உழவுக் கருவிகளைச் செய்வதற்குத் தங்கள் முன்னர் கண்ட முறையையே இப்பழங்குடிகள் கையாண்டு வருகின்றனர்.  இக்கருவிகளைக் கொண்டு நிலத்தை உழவுவதற்கு இரண்டு மாடுகள் தெவைப்படுகின்றன.  உழவுக்குப் பயன்படுத்தும் கருவியை ‘ஏர்’ என்று அழைக்கின்றனர்.  திருவள்ளுவர் ஏர் கருவி மற்றும் எருவிடுதல் பற்றி கூறிப்பிட்டுள்ளார்.

“ஏரின் உழா அர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்” திருக்குறள் – 14

“சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை” திருக்குறள் – 1031

“ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு” திருக்குறள் – 1038)

பல மரக் கருவிகளைக் கொண்டு ஏர் உழுகின்றனர். அவை,

1. கலப்பை

2. நெகித்தடி (நுகத்தடி)

3. மோழி

4. சங்கிலி (இரும்பு)

5. கயிறு (கலப்பைக் கயிறு)

6. மொலையாணிக் குச்சி

7. பூட்டு

8. கொண்டி

9. கடக்குச்சி

10. நெகித்தடி கொக்கி

11. பரம்பு

12. மாடு, எருது

13. உழக்கோள்

14. பரம்பு (சங்கிலி)

மேற்கண்ட கருவிகளை ‘ஏர்’ கலப்பையாகக் கொண்டு உழவுத்தொழில் செய்கின்றனா்.  கலப்பையை இப்பழங்குடிகளே செய்கின்றனா்.

கலப்பை

கலப்பை என்பது ஏர் உழும்போது மண்ணைக் கிளறும் கருவியாகும்.  நிலத்துப்பகுதியை உழுது செல்லும் போது மேல் மண்ணைக் கீழாகவும், கீழ்மண்ணை மேலாகவும் கலக்கிவிடும்  தன்மை கொண்டது கலப்பை எனலாம்.  இக்கருவி மரத்தால் செய்யப்படுகிறது. மரத்தால் செய்யப்பட்ட கலப்பையே நிலத்தில் உழுவதற்கு ஏற்ற வகையில் சிறப்பாக இருப்பதாக இப்பகுதி மக்கள் வடிவமைத்து பயன்படுத்துகின்றனர்.  “கலப்பைக்காக வெட்டப்பட்ட மரத்தை நீருள்ள கிணற்றிலோ (அ) நீர்த்தேங்கியுள்ள இடத்திலோ நன்கு ஊறப்போடுகின்றனர்.  நீண்ட நாட்கள் அதாவது 5,6 மாதங்கள் வரை ஊற வைக்கின்றனர்.  நன்கு ஊறிய கலப்பை உழும்பொழுது உடையாமல் இருக்கம் அதேபோன்று உழுவதற்கு நன்றாகவும் இருக்கும் என்பதற்காகவும் பயன்படுத்துகின்றனர்."2

கலப்பை செய்வதற்கு நன்கு முற்றிய மரங்களையே தோ்வு செய்து நிலத்தில் உழுதுவரும் கலப்பையின் தலைப்பகுதியில் மோழியைப் பொருத்தி மொழையாணியைப் பொருத்துகின்றனர். நீண்ட ஏர்த்தடியுடன் பொருத்தி நெகித்தடியில் இணைக்கின்றனார்.

மோழி

மோழி என்பது கலப்பை உழுவதற்கு ஏற்ற வகையில் உழுபவா் பிடித்துச் செல்லப்பயன்படும் ஒரு கருவியாகும். இது கலப்பையின் அடிப்பகுதியில்(தலைப்பகுதி) பொருத்தப்படுவதாகும்.

கொழு

கலப்பையின் அடிப்பாகத்தில் ‘கொழு’ பொருத்துகின்றனர். இது கலப்பை நிலத்தில் ஆழமாக உழுது வரவும், மண்ணைக் கிளறவும் பயன்படுகிறது. கலப்பையில்  கொழுவைப் கொருத்துவதை நுட்பமாகப் பயன்படுத்துகின்றனர்.

கைப்பிடி

மோழிக்கு மேல்பாகத்தில் சிலர் கைப்பிடி அமைத்துப் பயன்படுத்துகின்றனர்.  சிலர் ‘எல்’ வடிவில் அமைத்து உழுதுகின்றனர்.  இது உழுபவர் கையில் பிடிப்பதற்கு  மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

நுகத்தடி

இது மாடுகளின் கழுத்தில் வைக்கப்படும் ஒர் கருவியாகும். இதன் நீளம் 5 அல்லது 6 அடி அளவு கொண்டதாகவும், உருண்டை வடிவத்திலும் காணப்படுகிறது.  நுகத்தடியின்  நடுவில் ‘கருத்தடியான்’ ஒரு முனையை வைத்து கட்டுவதற்கு ஏதுவாக அடையாளம் வைக்கின்றனர்.  அடையாளம் வைக்கப்பட்ட (அதாவது நடுப்பகுதி) இடத்தில் வைத்தால் தான் இருமாடுகளும் சமமாக இழுத்துச் செல்லும்.  சரியாக கொருத்தவில்லையென்றால் ஒரு மாட்டின் பக்கமாக இழுத்துச் செல்லும்.  பாரமும் அதிகமாகிவிடும்.  நுகத்தடியின் இருபுறங்களிலும் 11/2 சாண் அளவுகளில் இருபுறங்களில் துளைகள் பொருத்தப்பட்டுருக்கும், அத்துளைகளில் கயிற்றை நுழைத்து மாடுகளின் கழுத்தில் கட்டுகின்றனர். அந்தக் கயிறுக்கு கண்ணிக்கயிறு என்று பெயர்.

மொளையாணிக் குச்சி

மோழியையும், கலப்பையையும் இணைப்பதற்கு  பயன்படும் ஒருகோல் மொளையாணிக் குச்சி என்று பெயா்.  இதன் நீளம் கலப்பையைப் பொறுத்து 1, ½ அடி அளவு காணப்படுகிறது. கலப்பையின் அடிப்பகுதியிலும் மோழியின் நடுப்பகுதியிலும் இருக்கும் துளையில் இக்குச்சியைச் போருத்திவிடுகின்றனர்.  பிறகு கயிரைக் கொண்டு மோழியும், கலப்பையும் நன்றாக கட்டுகின்றனர்.  இதனால் கலப்பை இறுக்கமாகிறது. மோழி சாயாமல் இருப்பதற்கும் அந்த நுட்பமான பகுதி பயன்படுகிறது.

கலப்பைக்கயிறு (அ) சங்கிலி

கலப்பை நுகத்தயோடு இணைப்பதற்குக் கலப்பைக் கயிறு (அ) சங்கிலி பயன்படுத்தப்படுகிறது.  தற்பொது சில பழங்குடிகளிடையே இரும்பால் செய்யப்பட்ட சங்கிலியும் பயன்படுத்தி வருகின்றனர்.  “கலப்பையில் இருந்து நுகத்தடி வரையிலும் இக்கருவிகள் பொருத்தப்படுகின்றன.  இது கலப்பையை இழுப்பதற்கும், ஆழமாக உழுவதற்கும், ஆழம் குறைவாக உழுவதற்கும் அக்கயிறு (அ) சங்கிலி தான் உதவி செய்கிறது.  இத்தகைய நுட்பமான வேலைகளை தங்களின் முன்னோர்கள் செய்த முறைப்படி தாங்களும் பின்பற்றி வருவதாகக்”3 கூறுகின்றனர்.

ஏர்கருவி செய்யப் பயன்படும் மரம்

இப்பழங்குடியின மக்கள் ஏா்கருவிகள் செய்வதற்கு எந்தெந்த மரங்கள் தேவை என்பதைத் தெரிந்து வைத்துள்ளனர்.  சரியான மரங்களைத் தோ்வு செய்வதிலும் நுட்பமாக செயல்படுகின்றனர். பொதுவாக கருவேலன், வேம்பு, போன்ற மரங்கள் கலப்பை செய்வதற்கு ஏற்ற மரங்கள் எனக் கூறுகின்றனர்.

நெகித்தடி (அ) நுகத்தடி

இதனைச் செய்வதற்கு கருவேலன், வேம்பு, சாயமரம், கொன்னை மரம் போன்ற மரங்களையும், மூங்கில், சிறுநறுவிழி, பூவரசன், ஆயாமரம், தேக்கு போன்ற மரங்களையும் பயன்படுத்துகின்றனர். மோழியில் பொருத்தப்படும் கைப்பிடிக்கும் கருவேலன் மரத்தையும் தோ்வு செய்கின்றனா்.

முடிவுரை

தமிழர்களின் பண்பாட்டு எச்சங்கள் இன்றும் பழங்குடிகளிடம் மரபு மாறாமல் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது, அறிவியலின்  தொழில்நுட்ப வளர்ச்சியால் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்தவா்கள் இயந்திரக்கருவிகளைக் கொண்டு உழவுத்தொழில் மேற்கொள்கின்றனர். ஆனால், இப்பழங்குடி மக்கள் ஏர்கருவிகளைத் தோர்ந்தெடுக்கும் தொழில் நுட்பங்களைத் தெரிந்தவர்களாகவும், உழவு செய்கின்ற நுட்பங்களை அறிந்தவர்களாகவும், உழவுத் தொடர்பான வட்டாரச் சொற்களைப் பயன்படுத்துபவர்களாகவும் இன்றளவிலும் உள்ளனர் என்பதை இக்கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது.

தகவலாளர்கள்

1. மாரி, விவசாயி, ஊமத்தி

2. காண்டியப்பன், விவசாயி, ஊமத்தி

3. பொரியசாமி, விவசாயி, மாம்பாறை  (ஊர்க்கவுண்டர்)

 

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here