* படத்தைத் தெளிவாகப் பார்க்க இரு தடவைகள் அழுத்தவும்!
தஞ்சாவூர் அனைத்துலக பண்பாட்டு ஆய்வு மையம், தமிழ் நாடு திருநெறிய தமிழ் சைவ சமயப் பாதுகாப்பு பேரவை, இலண்டன் தமிழ் கல்வியகம், பிரான்சு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் மற்றும் யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை ஆகியன இணைந்து நடத்தும் தமிழ் பண்பாட்டு – அனைத்துலக மாநாடு இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 30-06-2025 தேதியும், நுவரெலியாவில் 02-07-2025 தேதியும், கொழும்பில் 06-07-2025 தேதியும் வரையும் இடம்பெறவுள்ளதாக என்று தமிழ்நாடு திருநெறிய தமிழ் சைவ சமய பாதுகாப்பு பேரவையின் தலைவர் க. சசிக்குமார் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இம்மாநாட்டில் தென்னாபிரிக்கா, பிரான்சு, பிரிட்டன், சுவிட்சலாந்து நோர்வே, ஜெர்மனி, கனடா, மொரீசீயஸ், ரீ யூனியன், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து பேராளர்கள், சான்றோர்கள் பெரும் மக்கள் பங்கேற்கவுள்ளனர்.
முதலாவது நிகழ்வு இந்து கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பிரம்மஸ்ரீ ச. பத்மநாதன் தலைமையில் 30 ஆம் தேதி யாழ்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கத்தில் நடைபெறும். இந்நிகழ்வில் இணைத்தலைவராக யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி விக்னேஸ்வரி பவநேசன் அவர்களும், ஒருங்கிணைப்பாளராக தமிழ் நாடு பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர். க. பாஸ்கரன் அவர்களும், கருத்தரங்கு அமர்வுப் பொறுப்பாளர்களாக இந்து நாகரிகத்துறை பேராசிரியர் ச. முகுந்தன், இந்து நாகரிகத்துறை திரு. சு. ரமணராஜா, இலண்டன் தமிழ் கல்வியகம் இயக்குநர் திரு. ச. முருகையா. பாரீஸ் உலக செம்மொழி தமிழ்ச் சங்க நிறுவினர் கணேஸ்வரன் நவரத்தனம், தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் கணேஸ்ராஜா, கிழக்குப் பல்கலைக்கழக கலாநிதி விக்னராஜன் ஆகியோர்களுடன் அலுவலக ஒருங்கிணைப்பாளர்களும் செயற்படவுள்ளனர்.
* படத்தைத் தெளிவாகப் பார்க்க இரு தடவைகள் அழுத்தவும்!
இரண்டாவது நிகழ்வு தமிழ்நாடு திருநெறிய தமிழ் சைவ சமய பாதுகாப்பு பேரவையின் தலைவர் க. சசிக்குமார் தலைமையில் 02 ஆம் தேதி நுவரெலியாவில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளராக தமிழ் நாட்டுப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் க. பாஸ்கரன். ஸ்ரீ சிவம் ஆதிசைவம் சித்தர் பீடத்தின் குரு முதல்வர் யோகி. கோபிநாத்சுவாமி, இந்து கலாசார பேரவையின் தலைவர் திரு. ரெ. பாலகிருஸ்ணன், திரு. நவபிரகாஸ்ராஜன், கணக்காளர் காராளன் பிரதீஸ்குமார், சுற்றுலா பயண ஏற்பாட்டாளர் ஜீ. லோகிலதாசன், நம்சபரி சங்கீத சபா காப்பாளர் திரு. பாக்கியநாதன் லோகநாதன் ஆகியோர்களுடன் கருத்தரங்கு அமர்வுப் பொறுப்பாளர்களாக இலண்டன் தமிழ் கல்வியகம் இயக்குநர் திரு. ச. முருகையா, பாரீஸ் உலக செம்மொழிச் சங்க நிறுவினர் நவரத்தினம் கணேஸ்வரன், தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் கணேஸ்ராஜா, கிழக்குப் பல்கலைக்கழக முனைவர் ஜயந்தினி விக்னராஜன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
* படத்தைத் தெளிவாகப் பார்க்க இரு தடவைகள் அழுத்தவும்!
மூன்றாவது நிகழ்வு தமிழ்நாடு திருநெறிய தமிழ் சைவ சமய பாதுகாப்பு பேரவையின் தலைவர் க. சசிக்குமார் தலைமையில் 06 ஆம் தேதி மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் இடம்பெறவுள்ளது. ஒருங்கிணைப்பாளர்களாக இலங்கை மனவளக்கலை மன்றம் தலைவர் தொழிலதிபர் திரு. ஏ. மதுரைவீரன், மூத்த மருத்துவர் டாக்டர் பூபேந்திரன்நாதன் சுகந்தன். கொழும்பு இரவி ஜுவலரி உரிமையாளர் திரு ரெங்கராஜன் மகேஸ்வரன், கொழும்பு நித்தியகல்யாணி ஜுவல்லர்ஸ் உரிமையாளர் திரு ஜெயராஜ், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் செல்வி காயத்திரி விக்கிரமசிங்க, கொழும்பு ஞானம் டிராவல்ஸ் திரு. என். முத்துக்குமார் ஆகியோர்கள் பங்கேற்கவுள்ளனர். கருத்தரங்கு அமர்வின் ஒருங்கிணைப்பாளர்களாக இலண்டன் தமிழ் கல்வியகம் இயக்குநர் திரு. ச. முருகையா, பாரீஸ் உலக செம்மொழிச் சங்க நிறுவினர் நவரத்தினம் கணேஸ்வரன், தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் கணேஸ்ராஜா, கிழக்குப் பல்கலைக்கழக முனைவர் ஜயந்தினி விக்னராஜன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் என்று அவர்மேலும் தெரிவித்தார்.
:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
10-06-2025