எழுத்தாளர் சல்மா ஆஸ்திரேலியாவில்"படைப்பு  இலக்கியமா -? ,   அரசியலா - ? இதில் எனது  இறுதித்தெரிவு எது ?  எனக்கேட்டால்,   படைப்பு  இலக்கியம்தான்  எனச்சொல்வேன். எனது   படைப்புக்கூடாக  சமூகத்தை  பார்க்கும்போது  தோன்றும் நெருக்கடிகளிலிருந்து  என்னைப் பாதுகாத்துக்கொள்ள  அரசியல்  ஒரு கவசமாகியது.   எனினும்,  எனது  சமூகம்சார்ந்த  பணியில் படைப்பு இலக்கியமே   இறுதித்தேர்வாக  அமையும் "  என்று  தமிழகத்திலிருந்து வருகை   தந்திருந்த  எழுத்தாளரும்  சமூகச்செயற்பாட்டாளருமான சல்மா,    கடந்த  ஞாயிறன்று  மெல்பனில்  Mulgrave  Neighborhood House   மண்டபத்தில்   நடைபெற்ற இலக்கியச்சந்திப்பு    நிகழ்ச்சியில்  குறிப்பிட்டார்.  அவுஸ்திரேலியா    குவின்ஸ்லாந்து மாநிலத்தில்  நடைபெற்ற   Byron bay  எழுத்தாளர் விழாவில் பங்குபற்ற  வருதைந்திருந்த  சல்மா, சிட்னியில்   இரண்டு  தமிழ்  அமைப்புகள்  ஒழுங்குசெய்த   சந்திப்பு கலந்துரையாடலில்   பங்கேற்றபின்னர்  மெல்பனில்  நடந்த நிகழ்ச்சியிலும்   உரையாற்றினார்..

அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின் துணைத்தலைவர்   லெ.முருகபூபதி  தலைமையில்   நடைபெற்ற இச்சந்திப்பில்   மெல்பனைச்சேர்ந்த  பல  எழுத்தாளர்களும்  இலக்கிய ஆர்வலர்களும்   கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில்  கலந்துகொண்டவர்கள்   சல்மாவின்  வேண்டுகோளின் பிரகாரம்   தம்மை  முதலில்  அறிமுகப்படுத்திக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து   சல்மா   பற்றிய  சிறிய  அறிமுகத்தை முருகபூபதி   வழங்கினார். சல்மா   இலக்கியப் பிரதியாளராகவும்  சமூகச்செயற்பாட்டாளராகவும் ஒரே    சமயத்தில்  இயங்கிவருபவர்.   நாவல்,  சிறுகதை,  கவிதை, பயண   இலக்கியம்  முதலான  துறைகளில்  எழுதியிருக்கும்  சல்மா தமிழ்நாடு   திருச்சியில்  பொன்னாம்பட்டி  ஊராட்சி மன்றத்தலைவியாகவும்    சமூக  நலத்துறை  வாரியத் தலைவியாகவும் இயங்கியிருப்பவர்.   ஒரு  தடவை   சட்டமன்றத்தேர்தலிலும் போட்டியிட்டவர்.    செனல்  4   தயாரிப்பில்  சல்மாவின்  வாழ்வும் பணியும்    ஆவணப்படமாகியுள்ளது.  பல  உலகப்பட  விழாக்களில் விருதுகளையும்   வென்றுள்ளது.   சல்மாவின்  படைப்புகள்  ஆங்கிலம், மலையாளம்,   மராத்தி,   ஜெர்மன்,   மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. " உலகில்  பல  நாடுகளுக்கு  பயணித்திருந்தபோதிலும் அவுஸ்திரேலியாவுக்கான   இந்தப்பயணம்  முதலாவதாக  அமைந்தது. இங்குள்ள குவின்ஸ்லாந்து மாநிலத்தில் இம்மாதம் நடைபெற்ற  Byron bay எழுத்தாளர் விழாவில் இந்தியப்பெண்கள் பற்றிய ஒரு தொகுப்பு நூலை  அறிமுகப்படுத்தும்  நிகழ்வும்  இருந்தமையால்  இங்கு வருவதற்கு   சந்தர்ப்பம்   கிடைத்தது.    அந்த   நூலின்  பெயர்: WALKING TOWARDS  OUR SELVES.  (Indian women tell their stories).  அத்துடன்   இவ்விழா  தொடர்பான  மூன்று  அமர்வுகளிலும் உரையாற்றச்சந்தர்ப்பம்    கிடைத்தது. "   என்று  தமது  அவுஸ்திரேலியா வருகையின்   நோக்கத்தை  தெரிவித்த  சல்மா, சமூகநெருக்கடிகளுக்கூடாகவே    இலக்கியப்பயணத்தை   தாம் தொடர்ந்ததாகவும்  குறிப்பிட்டார்.

பல  சந்தர்ப்பங்களில்   தனக்கு  தக்க  ஆலோசனைகளை   வழங்கி வழிநடத்திய   சுந்தரராமசாமி  அவர்கள்  மரியாதைக்குரியவர்.   அவர் தமக்கு   மட்டுமல்ல  பலருக்கும்  நெருக்கடியான  காலகட்டங்களில் சிறந்த    வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். முதலில்  தமது  ஊரில்  சுயேச்சையாகவே   தேர்தலில்  தெரிவாகி அரசியல்   பணிகளை   தொடர்ந்ததாகவும்,  அதன்  பின்னரே தி.மு.க.வில்   இணைந்தாகவும்   சல்மா  தெரிவித்தார்.

ஒரு   இஸ்லாமிய  பெண்ணாக  சமூகத்தளைகளில்  இருந்து  தன்னை விடுவித்துக்கொள்வதற்கு   மேற்கொண்ட  போராட்டங்கள்  பற்றி கூறினார்.   ஒன்பதாம்  வகுப்புவரை  படித்துவிட்டு  மேற்கொண்டு என்ன   செய்து  என்று  தெரியாமல்,          தனது  போராட்டங்களை  வெளிப்படுத்துவதற்கு   இலக்கியத்தை   தனது  மீட்சிக்கான  கருவியாக  உபயோகித்த  உபாயத்தையும்  கடைசியில்  அதுவே  தனது வாழ்வாகிப்போய்விட்ட  சம்பவங்கள்  பற்றியும்  விவரித்தார்.   தனது விடாப்பிடியான    பெண்ணிய  கருத்துக்கள்  தனது  திருமணத்தையே எவ்வாறு   பந்தாடி  சென்றது  என்பதையும்  இறுதியில்   அந்த  நிகழ்வு நடந்தாலும்   அதன்  பின்னர்  தான்  சந்தித்த  பிரச்சினைகளையும் எடுத்துக்கூறினார்.    தனது  கணவன்  ஊடாக  தற்செயலாக வசமாகிப்போன    அரசியல்  மார்க்கம்  தன்னை   பிற்காலத்தில் எவ்வாறானதொரு   பாதையில்  அழைத்து  சென்றது   என்பதையும் அந்த பாதையை தனக்கேற்றவாறு எவ்வாறு பயன்படுத்த முடிந்தது என்பது  குறித்தும்  விரிவாக  கூறினார்.   தி.மு.க.  என்பது  ஏன் தனக்கான   தெரிவானது  என்பதையும்  கட்சி  அரசியல்  ஒரு இலக்கியவாதியின்   பாதையில்  எவ்வாறான  இடறல்களை ஏற்படுத்தியது    என்பதையும்  விளக்கி  சொன்னார்.

அவரது   இலக்கிய பணிகளை  விட,   அவர்  மீது  படிந்துள்ள  தி.மு.க. என்ற    விம்பத்தின்  மீதான  பல  விசாரணைகள்தான்  இச்சந்திப்பின்போது   பலரது  கேள்விகளாக  அமைந்தது.   ஆட்சியிலும் அதிகாரத்திலும்   உள்ள  ஒரு  கட்சியின்  ஊடாக  சென்றால்  மாத்திரமே தான்   அனுபவித்த  பெண்ணிய  காயங்களுக்கு  சிறிதளவு  மருந்தாவது தடவ   முடியும்  என்ற  காரணத்தாலும்  தனது  கணவனின் முன்முடிபான  தி.மு.க.  கட்சியும்தான்  தன்னை  கலைஞரை  நோக்கி அழைத்து   சென்றது   என்று  கூறினார்.

சல்மாவின்   இரண்டாம்  ஜாமங்களின்  கதையின்  நீட்சியாக  பிறகு பெண்ணிய   விடுதலை  நோக்கிய  அவரது  அடுத்த  போராட்டம் இப்போது   எந்த  திசை  நோக்கி நகர்ந்திருக்கிறது ?  அரசியலா - இலக்கியமா   என்று  வருகின்றபோது  அவரது  தற்போதைய  தெரிவு எதனை   அண்டியதாக  இருக்கும்  போன்ற   கேள்விகளும்  சந்திப்பில் முன்வைக்கப்பட்டன.

அவரது   பதில்கள்  கூடியளவு  யதார்த்தத்தை   அண்டியதாக காணப்பட்டன.     சல்மாவின்   இயல்பான  பேச்சும்  அவர்  மீதான இலக்கிய - அரசியல்   சர்ச்சைகளுக்கு வெளிப்படையாக உண்மைகளை  கூறும்  தேர்ச்சியும்  அவரை  ஒரு  நடைமுறைக்கு சாத்தியமான  படைப்பாளியாக  இனங்காட்டியது. எழுத்தாளர்கள்   நடேசன்,   ஜே.கே,  தெய்வீகன்,  அறவேந்தன், பாடும்மீன்  சிறிகந்தராசா,   திருச்செந்தூரன்; மற்றும்   இலக்கிய   ஆர்வலர்கள் செல்வபாண்டியன்,   ஹ_சேய்ன்  முராத்  ஆகியோரும்  சல்மாவிடம்  சில   இலக்கியம்,  அரசியல்,  சமூகம்  சார்ந்த கேள்விகளைத்தொடுத்தனர். இரண்டு  மணிநேர  சந்திப்பு  காத்திரமாக  நடத்து  முடிந்தது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்