
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் தமிழகத்தின் வெகுசன இதழ்களில் குறிப்பாக ஆனந்த விகடனில் நன்கு பிரபலமான எழுத்தாளர். வெகுசன இதழ்களில் புனைகதைகள் எழுதும் எழுத்தாளர்கள் அவ்விதழ்களின் வாசகர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து அவர்களைக் கவரும் வகையில் எழுதுவதை விரும்புவார்கள். அ.மு.வின் புனைகதைகளை வாசிக்கும்போது இதனை அவதானிக்கலாம். தனது கற்பனையைத் தொய்வில்லாமல், கதைக்கு மேல் கதையாக நகர்த்திச்செல்வதில் வல்லவர் அவர். ஒரு முக்கியமான விடயமென்னவென்றால்.. ஹெமிங்வேயின் தாத்தா, தந்தை, சகோதரன், சகோதரி மற்றும் பேத்தி இவர்களெல்லோரும் ஹெமிங்வேயைப்போல் தற்கொலை செய்துகொண்டவர்கள்தாம். இன்னுமொரு முக்கியமான விடயமென்னவென்றால் ஹெமிங்வே Hemochromatosis என்னுமொரு பரம்பரை வியாதியினால் பீடிக்கப்பட்டிருந்தார். உடலில் இரும்புச்சத்தின் தேவைக்கு மீறிய அதிகரிப்பால் ஏற்படும் வியாதியிது. ஆனால் மருத்துவர்கள அதற்கான முறையான சிகிச்சைகளையும் ஹெமிங்வேயிற்கு வழங்கியிருக்கவில்லை. அந்நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் ஒருவர் அதற்கான உரிய சரியான சிகிச்சையினை எடுக்காதுபோனால் மிகவும் கடுமையான வலிக்கு, துன்பத்துக்கு ஆளாக நேரிடும். அந்நிலைதான் ஹெமிங்வேயுக்கும் ஏற்பட்டது. அதன் காரணமாகவே ஹெமிங்வே தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டாரென தற்போது நம்பப்படுகின்றது. இந்நோய் பரம்பரை சம்பந்தமானதென்ற விடயம் 1996இல்தான் கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









