'தீர்த்தக்கரை' சஞ்சிகை பற்றிய நினைவுக் குறிப்பு! - எல்.ஜோதிகுமார் -

- இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் எண்பதுகளில் மலையகத்திலிருந்து வெளியான 'தீர்த்தக்கரை' சஞ்சிகைக்கும் முக்கியமானதோர் இடமுண்டு. எல்.சாந்திகுமாரை ஆசிரியராகக் கொண்டு வெளியான காலாண்டு சஞ்சிகையான 'தீர்த்தக்கரை'சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் எஸ்.நோபட், எல்.ஜோதிகுமார் , எம்.தியாகராம் ஆகியோரிருந்தனர். எஸ்.நோபட் (சூசைப்பிள்ளை நோபட்) டொமினிக், ஜீவன், கேசவன், பிரான்ஸிஸ் சேவியர் மற்றும் கோவிந்தன் என்னும் புனைபெயர்களில் தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்டவர். தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்திலும் இணைந்து போராடிப்பின் அதிலிருந்து பிரிந்து 'தீப்பொறி' அமைப்பில் இயங்கியவர். 'புதியதோர் உலகம்' நூலாசிரியர். அண்மையில் ஜோதிகுமார் அவர்களிடம் 'தீர்த்தக்கரை' சஞ்சிகை பற்றியும் எழுதுங்களேன் என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் அனுப்பிய 'தீர்த்தக்கரை' சஞ்சிகை பற்றிய குறிப்பிது. - வ.ந.கி -
அன்பின் கிரி, தீர்த்தக்கரை தொடர்பில் எழுத கூறியிருந்தீர்கள். புனித நீராடுதுறை, பாவம் கலையும் நீர்த்துறை என்று தீர்த்தக்கரைக்கு தமிழ் விளக்கம் கூறப்படுகின்றது. மேலும், புனித நீர் வைக்கப்படும் சிறு தேங்காய்த்துண்டு அகல் என்றும் கூறப்படுகின்றது. கூடவே தீர்த்தக்கரை என்பதனை பண்டைய ஒரு குருவுடன் சம்பந்தப்படுத்தி ஒரு புராண கதையும் உண்டெனவும் கதைக்கப்படுகின்றது. குறித்த குரு ஆறுகளில் வாசம் செய்யும் வரம் பெற்றவர் என்று கூறப்பட்டாலும், ஆறுகளை வணங்கும் மனிதப் பண்பை மேற்படி கதைகள் உள்ளடக்குவதாக உள்ளது என்பதில் அர்த்தம் உண்டு எனுமாப் போல் படுகின்றது. ஆனால் மேற்படி பெயரை வைக்கும் பொழுது இவை அனைத்தையும் தீர்த்தக்கரை தனது கவனத்தில் கொள்ளவில்லை என்பதை கூறுதல் வேண்டும். கடந்த கால திரைப்பட பாடல் ஒன்று கூட ராமேஸ்வரத்துக்கான புனித யாத்திரையை தீர்த்த யாத்திரை என வரையறை செய்து கொள்வதில் திருப்தியடைந்தாற் போல் இருந்தாலும் இத்தகைய ஒரு கருத்தை ஆசிரிய பீடம் ஒரு காலமும் கருதியதில்லை என்றே கூறுதல் வேண்டும்.
மாறாக இப்பெயரை தேர்வு செய்யும் போது, ஆசிரிய குழாத்தின் மனதில் பாரதியை நோக்கிய ஒரு யாத்திரையாக இது இருக்க கூடும் என்ற எண்ணப்பாடு ஒரு சிறிது அல்லது பல மட்டங்களில் இருந்தது என கூறலாம். அதாவது பாரதி எப்படி தொன்மங்களில் இருந்ததெல்லாம் உள்வாங்கி அவற்றில் பலதையும் நிராகரித்து சிலதை உள்வாங்கி தனது நவீன கால சிந்தனைகளுடன் அவற்றை இணைத்து தன் அழுத்தமான காலடிகளை கட்டுவித்தானோ - அதே அடிப்படையில் ஒரு வரலாற்று பார்வையை கட்டுவிக்கும் அவாவை வெளிப்படுத்தும் அல்லது எதிரொலிக்கும் ஒரு அவாவினை உள்ளடக்கிய பெயராகவும் - அதே வேளை பாரதியின் அழகியலை - அவ் அழகியலில் அடங்கக்கூடிய தார்ப்பரியத்தை சிலாகித்ததின் நேரடி விளைவாகவும் இப்பெயரின் தெரிவு அமைந்து போயிற்று எனலாம்.




உள்ளார்ந்த கலை , இலக்கிய ஆற்றல்களை கொண்டிருப்பவர்கள், தமது தாயகம் விட்டு, வேறு எந்தத் தேசங்களுக்கு புலம்பெயர்ந்து செல்ல நேரிட்டாலும், தமது ஆற்றல்களை வெளிப்படுத்தியே வருவார்கள். அதற்கு எமது புகலிட தமிழ் கலை, இலக்கிய உலகில் சிறந்த உதாரணமாகத் திகழ்பவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் எழுத்தாளரும் நாடகக் கலைஞருமான யாழ். பாஸ்கர். இவர் இந்தத் துறைகளில் தடம் பதித்து, வளர்ந்து ஆஸ்திரேலியா நாட்டில் இதழ் ஆசிரியராகவும் மலர்ந்தவர். யாழ்ப்பாணம் கொட்டடியைச்சேர்ந்த இவர், தனது ஆரம்பக்கல்வியை கொட்டடி நமசிவாயா பாடசாலையிலும், நவாந்துறை றோமன் கத்தோலிக்க தமிழ்ப்பாடசாலையிலும் பயின்று, பின்னர் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியில் இணைந்தார்.


இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப் பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக் கொண்டன. இமைகள் மூடிக் கொண்டாலும் காது மடல்கள் விரிந்து நெருங்கி வரும் கனமான பூட்ஸின் அதிர்வுகளை மௌனமாக உள்வாங்கிக் கொண்டன. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதற்கான எதிர்பார்ப்பில், இதயம் ஏனோ வேகமாகப் படபடவென்று அடித்துக் கொண்டது. மிக அருகே அதிர்வுகள் நிசப்தமாகிப் போனதால், பயத்தில் இதயம் இன்னும் வேகமாக அடித்துக் கொள்ள, தூங்குவது போலப் பாசாங்கு செய்ய முனைந்தான்.
நேக்கு பூனையை பிடிக்காது. தப்பு, தப்பு...... பூனைகளைன்னு மாத்தி வாசியுங்கோ. பூனையாம் பூன. அதென்ன..... நம்ம கண்ணுக்குள்ளயே ஏதோ தேடற பார்வை...
அண்மையில் நண்பர் எல்லாளன் தந்திருந்த நூல்களிலொன்று 'சமாதானத்திற்கான ஶ்ரீலங்கா சார்புக் கனேடியர்கள்' அமைப்பு வெளியிட்டிருந்த மலையகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரும், முன்னாட் விடுதலைப் போராளியுமான வரதன் கிருஷ்ணா எழுதிய 'வெந்து தணியாத பூமி' என்னும் சிறு நூல். இந் நூலை வாசித்தபோது ஒன்று புரிந்தது. இது தொட்டிருக்கும் விடயம் தற்போதுள்ள சூழலில் மிகவும் முக்கியமானதொன்று. இது ஆற்றியிருக்கும் பணியும் முக்கியமானது. காலத்தின் தேவை.

திருமணமாகி மதுரை வந்த நாள்முதல் அடிக்கடி இரவு ஒன்பதுமணிக்கு, எங்கள் பெட்ரூமிலிருந்து அம்மாவிடம், வீடியோ காலில்தான் பேசுவேன். அம்மா தனது பெட்ரூமிலயிருந்து பேசுவாங்க. சிலநாட்களில் சமையல்காரப் பையன் எடுத்துப் பேசுவான். தவிர, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அத்தானும் பேசத் தவறுவதில்லை.
2012 ஏப்ரல் 12ம் தேதி வியாழக் கிழமை காலை 10 மணியளவில் வவுனியா பூங்காப் பகுதி தடை முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட முப்பத்தொரு பெண்களில் சங்கவி ஒருத்தியாக இருந்தாள். அவர்களில் நான்கு பேர் குழந்தைகளோடு இருந்தார்கள்.




திரு.கிரிதரன் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி நன்கு அறிமுகமானவர். பின்னர் புலம்பெயர்ந்து கனடா சென்று தமது படைப்பாற்றலை அங்கும் தொடர்ந்து ஈழத்திலும் வெளிப்படுத்தி வந்துள்ளார். அத்துடன் நின்றுவிடவில்லை. தொடர்ந்து தமிழ் நாட்டிலும் தமிழர் தொழில்முறையாகவும் புலம்பெயர்ந்தும் வாழும் உலக நாடுகளிலெல்லாம் அறிமுகமானார். ஆயினும் நான்கு குறுநாவல்கள் அடங்கிய இத்தொகுதியே அன்னாரின் படைப்பாற்றலையும் எழுத்து வன்மையையும் எளிதில் அளவிடக் கூடியதாக அமைந்துள்ளது எனக்கூறலாம்.
- தமிழ்புக்ஸ்.காம் தளத்தில் வெளியான அஞ்சலிக் கட்டுரை. அனுப்பியவர் நண்பர் ஸ்நேகா பாலாஜி -

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









