துயர் பகிர்வோம்: கவி வித்தகர் சபா அருள் சுப்ரமணியம். - குரு அரவிந்தன் -
எம்மைவிட்டுப் பிரிந்த நண்பர் சபா அருள் சுப்ரமணியத்தின் பிரிவு (09-10-2021) தமிழ் இலக்கிய உலகத்திற்குப் பேரிழப்பாகும். குறிபாகப் புலம் பெயர்ந்த கனடிய மண்ணில் தமிழ் மொழியைத் தக்கவைப்பதற்குக் கடந்த 30 வருடங்களாக முன்னின்று உழைத்தவர்களில் இவரும் ஒருவர் என்றால் மிகையாகாது. இவரையும் இவரது மனைவி திருமதி. யோகசக்தி அருள் சுப்ரமணியத்தையும் முதன் முதலாக அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் வீட்டில்தான் சந்தித்தேன். மாதகல் மண்ணில் பிறந்த இவர் கனடாவுக்குப் புலம் பெயர்ந்திருந்தார். மாதகல் சென். ஜோசப் மகாவித்தியாலய அதிபராகவும் இவர் பணியாற்றியிருந்தார். இவருக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். சிறுவர் இலக்கியத்தில் எங்கள் இருவருக்கும் அதிக ஈடுபாடு இருந்ததால், தொடர்ந்தும் அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாட முடிந்தது. சமீபகாலமாகச் சுகவீனமடைந்திருந்தாலும், சமூகத் தொண்டை அவர் கைவிடாது தொடர்ந்து கொண்டே இருந்தார்.
கனடா அறிவகத்திற்கு அவர் பொறுப்பாக இருந்தபோது, நான் ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இருந்தேன். அவர்களின் தமிழ் மொழிப் பரீட்சையும், நாங்கள் நடத்தும் தமிழ் மொழிப் பரீட்சையும் அனேகமாக ஒரே வாரஇறுதியில்தான் நடந்து கொண்டிருந்தன. இதனால் பங்கு பெற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் குழப்பநிலையை அடைந்தனர். ஏற்கனவே அவர் எனக்கு அறிமுகமானவராக இருந்ததால், பேசித்தீர்கக் கூடிய விடயம் என்பதால் நான் அவருடன் இது பற்றி உரையாடினேன். எங்கள் பக்கத்து நடைமுறைச் சிக்கல்களை அவருக்கு எடுத்துச் சொன்னேன். அவர் பெருந்தன்மையோடு, சற்றுக் கடினம்தான் ஆனாலும் முயற்சி செய்கிறேன் என்று சொல்லி, தங்களின் பரீட்சைத் திகதியை வேறு ஒரு தினத்திற்கு மாற்றிக் கொண்டார். அவர் பொறுப்பாக இருந்த நிறுவனத்தைவிட, தமிழ் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அவர் காட்டிய அக்கறை என்னை மிகவும் கவர்ந்திருந்தது. இருவருமே சிறுவர் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்ததால், அத்துறை சம்பந்தமாக அடிக்கடி கலந்துரையாட முடிந்தது. தனது சிறுவர் இலக்கிய நூல் வெளியீடுகளுக்கு உரையாற்றப் பல தடவைகள் என்னை அழைத்துக் கௌரவப்படுத்தி இருக்கின்றார். தாய் மொழியாம் தமிழ் மொழி மீது அதீத பற்றுக் கொண்ட இவர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.
‘தமிழ் பூங்கா’ என்ற ஒரு மாணவர் அமைப்பை ஏற்படுத்தி அதன் பொறுப்பாளராக இருந்து செயற்பட்டார். கடைசியாக ‘பட்டறிவு பகிர்வு’ என்ற கவிதை மின்நூலை சென்ற ஆகஸ்ட் 28 ஆம் திகதி ‘சூம்’ மூலம் வெளியிட்டிருந்தார். தனது பிறந்த ஊரின் பெருமை பேசும், ‘மாதகல் மான்மியம்’ என்ற நூலை வெளியிட்டிருந்தார். தமிழ் சிறுவர்களின் மொழி வளர்ச்சிகாகப் பல நூல்களை வெளியிட்டிருக்கின்றார். இவற்றில் பயிற்சி நூல்கள், கட்டுரைகள், இலக்கண வினாவிடை, சிறுவர் கதைகள், சிறுவர் பாடல்கள், ஒலிவட்டுக்கள் போன்றவை முக்கியமாக அடங்கும். எதிர்கால சந்ததியினருக்கு இவை எப்போதும் வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.



நேற்றிரவு தலைவி திரைப்படத்தை அமேசன் பிரைம் வீடியோவில் பார்த்தேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பிரதானமாகக் கொண்ட கதை. இதற்கு முன்னர் எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி ஆகியோருக்கிடையில் நிலவிய உறவினை மையமாகக்கொண்டு இயக்குநர் மணிரத்தினத்தின் 'இருவர்' வெளிவந்திருந்தது. ஆனால் 'தலைவி'திரைப்படத்தின் வெற்றியாக நான் கருதுவது பாத்திரங்களுக்கான நடிகர்களின் தேர்வும் , நடிப்பும்.
பங்குனி பிறந்து வெய்யில் கனத்திருந்தது. இரவுக்கும் பகலுக்கும் வெளிச்சம் தவிர வேற்றுமை அதிகம் இல்லாதிருந்தது. பகலில்போல் இரவிலும் குண்டுகள் விழுந்து வெடித்தன. பகலில்போல் இரவிலும் மனிதர்கள் சிதறி அழிந்தார்கள். தெய்வங்களும் நீங்கிப்போன பூமியாயிருந்தது வன்னி நிலம். பிரார்த்தனைகள் மனிதருக்கு ஆறுதலைத் தந்தன. பலன்களைத்தான் தராதிருந்தன. பதுங்கு குழி இருந்ததில் அதுவரை பாதுகாப்பாக இருந்த அந்த இடம், யுத்தம் புதுக்குடியிருப்பைநோக்கி நெருங்கிக்கொண்டிருக்கையிலும் தகுந்த பாதுபாப்பைத் தருமாவென யோசனையாகிப் போனது முருகமூர்த்திக்கு. அதுவரை இருந்தது சரிதான், ஆனால் இனி என்ற கேள்வி அவன் மனத்தில் விடைத்து நின்றிருந்தது. கடைசியில் மேலே நகர்ந்தே ஆகவேண்டுமென்ற முடிவுக்கு அவன் வந்தான். மாசி 4இல் இலங்கையின் சுதந்திர தினத்தையொட்டி ஓய்ந்திருந்த ராணுவத் தாக்குதல், மறுபடி மாசி 6ஆம் திகதியிலிருந்துதான் உக்கிரமடைந்திருந்ததை அவன் நினைவுகொண்டான்.
வீட்டு வாசலில் அவுக கார் வந்து நின்றது.
இலங்கை மலையகத்தின் டிக்கோயாவைச் சேர்ந்த ஓவியர் வீரப்பன் சதானந்தன் இலங்கையின் முக்கியமான நவீன ஓவியர்களிலொருவர். அண்மையில் இவரைப்பற்றியும், இவரது ஓவியங்கள் பற்றியும் எழுத்தாளர் ஜோதிகுமார் மூலம் அறிந்து கொண்டேன். இவரைப்பற்றியும், இவரது ஓவியங்கள் பற்றியுமான சுருக்கமான குறிப்பிது.
இன்று உலகளாவியரீதியான உள ஆரோக்கிய தினமாகும். உள ஆரோக்கியத்தைப் பேணும் வழிவகைகளை அறியச்செய்தல் இந்த நாளின் ஒரு நோக்கமாகும். அவ்வகையில் அந்தக் கணத்தில் இருப்பதன் மூலமும், நிகழ்காலத்தில் வாழ்வதன் மூலமும் எங்களின் மனநலத்துக்கு எவ்வகையில் நாங்கள் உதவிசெய்யலாம் என்பது பற்றி நான் அறிந்ததை உங்களுடனும் பகிர்ந்துகொள்ளலாமென நினைக்கிறேன்.
அண்மையில் எழுபதுகளில் யாழ் இந்துவில் கல்வி கற்று , உலகமெங்கும் பரந்து வாழும் மாணவர்களில் சிலர் உருவாக்கிய அமைப்பான 'ஓராயம்' அமைப்பின் ஆதரவில். 'பண்பாடும் வீட்டு வடிவமைப்புகளும்' என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட மெய்நிகர் நிகழ்வினைக் கனடாவில் வசிக்கும் கட்டடக்கலைஞர் தர்மகுலராஜா ஒருங்கிணைந்து நடத்தினார். இந்நிகழ்வில் கட்டடக்கலைஞர்களான மயூரநாதன் (யாழ்ப்பாணம்), குணசிங்கம் (ஆஸ்திரேலியா) மற்றும் சிவகுமார் (கனடா) ஆகியோர் கலந்து கொண்டனர்.
‘இந்துசமுத்திரத்தில் ஒரு முத்து’ என்று எப்படிக் கடற்பயணிகள் இலங்கைத்தீவை வர்ணித்தார்களோ அதேபோலத்தான் சுற்றுலாப் பயணிகள் ‘பசுபிக்சமுத்திரத்தின் பரடைஸ்’ என்று இந்தத் தீவுகளை அழைக்கிறார்கள். இந்த ஹவாய் தீவுகள் எரிமலைக் குளம்புகளால் உருவானவை என்பதை நீங்கள் நம்பமறுக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. சுமார் 2000 மைல்கள் சுற்றாடலில் எந்த நிலப்பரப்பும் இல்லாத ஹவாய் தீவுகள், அமெரிக்காவின் 50 வது மாகாணமாக ஆகஸ்ட் மாதம் 1959 ஆண்டு பிரகடனப் படுத்தப்பட்டது. சுமார் 1500 வருடங்களுக்கு முன்பாக போலிநேஷன் (Polynesian) என்று சொல்லப்படுகின்ற குடும்ப அமைப்பு இங்கே முதலில் உருவானது. முக்கியமாக Samoa, Cook Islands, New Zealand, Easter Island, Hawaii, Tonga, Tuvalu, Wallis and Futuna, Fiji போன்ற இடங்களில் இருந்து கடலில் திசைமாறி வந்து, திரும்பிச் செல்ல வழியில்லாமல் குடியேறியவர்களே இங்குள்ள பழங்குடி மக்களாவார். இங்குள்ள தீவுகளில் சுமார் எட்டுத் தீவுகளே ஓரளவு பெரிய தீவுகளாக, மனிதர் வாழக்கூடியதாக இருக்கின்றன.
விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், எமது முன்னைய நிகழ்வில் குறிப்பிட்டிருந்தது போல ஒக்ரோபர் மாதத்தில் விதை குழுமம் நான்கு இணையவழி நிகழ்வுகளை ஒருங்கிணைக்கின்றது. அவற்றின் முதலாவது நிகழ்வாக அரசும் அதிகாரமும் என்னும் தலைப்பில் “அறிதலும் பகிர்தலும் நிகழ்வின் 8வது நிகழ்வு இடம்பெறும்.

புதுமைப்பித்தனின் 'ஆற்றங்கரை பிள்ளையார்' படித்திருக்கிறீர்களா? அவர் ஒரு புதிய எழுத்து வடிவை இக்கதையில் அறிமுகப்படுத்தினார். ஒரு ஆற்றங்கரையில் ஒரு பிள்ளையார் சிலை. அச்சிலையைச் சுற்றி ஊழிக்காலம் முதல் நிகழ்காலம் வரை நடைபெறும் மாற்றங்களை சிறு சம்பவக்குறியீடுகள் மூலம் கோர்த்து கதை புனைந்திருப்பார். இந்து சமயத்தில் பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட வழிபாட்டு முறை மாற்றங்களை நாசுக்காக சொல்வதே அவர் நோக்கம். புதுமைப்பித்தனின் இக் கதையை படிக்கும் போது ஆவணப்படங்களில் இன்று கொட்டிக்கிடக்கும் ' நேரம் தப்பிய படப்பிடிப்பு' (Time-lapse photography) பார்த்த அனுபவம் கிட்டும். 
சென்ற வெள்ளிக்கிழமை 2021-10-01 ஆம் திகதி தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்ட இனிய நந்தவனம் கனடா சிறப்பிதழ் ரொறன்ரோவில் உள்ள பைரவி மியூசிக் அக்கடமி கலையகத்தில் மாலை 7:00 மணியளவில் மிகவும் சிறப்பாக வெளியிடப்பெற்றது. கோவிட் -19 கட்டுப்பாடுகளுக்கமைய இருக்கை வசதிகள் போடப்பட்டிருந்தன. பார்வையாளர்கள் முகக்கவசம் அணிந்திருந்தார்கள். இரண்டு தடுப்பூசியும் பெற்றுக் கொண்டவர்களே அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்வை கனடா உதயன் ஆசிரியரும், இனிய நந்தவனம் ஆலோசனைக்குழு உறுப்பினருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.
- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி. இத்தொடரின் இறுதிப்பகுதியிது. இத்தொடர் பற்றிய உங்கள் கருத்துக்ளை எழுதுங்கள். அவை பதிவுகளில் வெளியாகும். - பதிவுகள்.காம் -


- இத்தகவல் இறுதி நேரத்தில் எமக்குக் கிடைக்கப்பெற்றதால் உரிய நேரத்தில் வெளியாகவில்லை. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம். நண்பர்களே! உங்கள் அறிவித்தல்களைக் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னர் அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
- தமிழ்நாட்டில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மையம் நடத்திய 11 ஆவது பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டு, ‘தற்கால இலக்கியங்களில் காலத்தின் சுவடுகள்’ என்ற பன்னாட்டு ஆய்வு நூல் - 2020 இல் இடம் பெற்ற கட்டுரை. -

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









