அஞ்சலி: இசைக்கலைமணி வர்ண இராமேஸ்வரன்! - குரு அரவிந்தன் -
இசைக்கலைஞர் இனிய நண்பர் வர்ண இராமேஸ்வரன் அவர்களின் மறைவு (செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி 2021) எமக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது. எம்முடன் நன்கு பழகிய சில நண்பர்களை, உறவுகளை கொரோனா பேரிடர் காலத்தில் காலன் எம்மிடம் இருந்து திடீரெனப் பிரித்துவிட்டது மட்டுமல்ல, கடந்த சில காலமாக, உறவினர்களின், நண்பர்களின் இறுதிச் சடங்குகளில்கூட பங்குபற்ற முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
மகாஜனக்கல்லூரி பழைய மாணவரான, இசைக் குடும்பத்தில் பிறந்த இவரை எங்கள் பழைய மாணவர் சங்க நிகழ்ச்சிகளில் அடிகடி சந்தித்திருக்கின்றேன். இதைவிடக் கலைவிழாக்களிலும், பல அரகேற்ற நிகழ்ச்சிகளிலும் பலமுறை சந்தித்தித்து உரையாடியிருக்கின்றேன். ஆரம்ப கல்வியை ஞானோதய வித்தியாசாலையிலும், உயர் கல்வியை மகாஜனக் கல்லூரியிலும் கற்றவர். மிகவும் அன்பாகப் பழக்ககூடிய நல்ல நண்பர். கனடாவில் உள்ள வர்ணம் இசைக்கல்லூரி அதிபரான இவர், படித்த கல்லூரிக்குத் தன்னால் இயன்ற அளவு உதவ வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். இவரது தந்தைதான் அளவெட்டியைச் சேர்ந்த கலாபூசணம் வர்ணகுலசிங்கம் அவர்கள். தாயாரின் பெயர் மகேஸ்வரி. இராமேஸ்வரன் பண்ணிசையில் மட்டுமல்ல, மிருதங்கம், ஆர்மோனியம் போன்ற இசைக் கருவிகளை வாசிப்பதிலும் கைதேர்ந்தவர். இவர் யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் இராமநாதன் நுண்கலைப்பிரிவில் இசைபயின்று ‘இசைக்கலைமணி’ என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து விரிவுரையாளராகவும் அங்கு பணியாற்றினார்.
தாயக நினைவுகளை மீட்கும் ‘தாயகக் கனவுடன் சாவினைத்தழுவிய சந்தனப் பேழைகளே, இங்கே கூவிடும் எங்கள் குரல் மொழி கேட்கிறதா?’ போன்ற பல பாடல்களை இவர் பாடியதன் மூலம் தமிழ் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவராக இருந்தார். கனடா நாட்டுக்குப் புலம்பெயர்ந்தபின் இங்கே ஒரு இசைக்கல்லூரியை ஆரம்பித்து, அதன் மூலம் தமிழ் இசைத்துறையில் பல இளம் தலைமுறையினரை உருவாக்கி இருந்தார்.


'தேசபக்திக்கும் இனவாதத்துக்குமிடையிலான எல்லையினை நிர்ணயித்தல்' (Demarcating Patriotism and Racism ) என்னும் கட்டுரையினை 'சிலோன் டுடே' (Cedylon Today) பத்திரிகையில் அமா ஹெச். வன்னியராச்சி ( Ama H. Vanniarachchy) எழுதியிருக்க்கின்றார். நல்லதொரு கட்டுரை. தற்போதுள்ள சூழலில் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை.

பொழுது விடிந்தபோது, மனதுக்குள் இனம்புரியாத பரபரப்பு. நேற்று முழுவதும், வாற்சப் வீடியோ காலில் பார்த்துப்,பேசிப்,பழகிய போதிலும் இன்று நேரிலே சந்திக்கப்போகின்ற அனுபவம், புதிதானதுதானே.
விடிந்திருந்த பொழுதும் விடியாததாக, மாசி மாதத்தின் ஊசிப் பனி குத்துகிற ஒரு அதிகாலைவேளையில் படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வேலைகளில் மும்முரமாயிருந்த செம்பவளம் உணர்ந்துகொண்டிருந்தாள். கிழக்குத் திசைக் களர் நிலத்திலிருந்து சூரியன் பனித் திரையைக் கிழித்து பிரகாசமாய்க் காலித்துக்கொண்டிருந்தும் அந்தளவான ஒரு மனமூட்டம் அவளிலிருந்தது. ஏனென்று அவளால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. முன்னனுபவமற்ற ஒரு மந்த உணர்வு.
- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -

இருபது வயதுப் பெண்ணாக ஒரு ஊடகவியலாளராக பணிபுரிந்து கொண்டிருந்த சமயத்தில் இன்று திரைப்பட இயக்குநராக உள்ள ஒருவரால் தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான அச்சுறுத்தல் குறித்து சக கவிஞர் லீனா மணி மேகலை மீ டூ இயக்கம் தந்த உலகளாவிய ஆதரவுக்கரங் களின் தோழமை அளித்த தெம்பில் பொதுவெளியில் பேசியதற்காக சம்பந்தப்பட்ட நபர் அவர் மீது மானநஷ்ட வழக்கு போட்டிருக்கிறார்.
இம்முறையும் கனடா தேர்தல் முடிவுகள் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்குச் சாதகமாக வந்திருக்கின்றன. இப்படித்தான் வரும் என்று முன்பு எழுதிய கட்டுரையிலும் குறிப்பிட்டது போலவே, நடந்திருக்கின்றது. 170 ஆசனங்கள் இருந்தால்தான் இங்கு தனியாக ஆட்சி அமைக்க முடியும். லிபரல் கட்சிக்கு 156 ஆசனங்களே கிடைத்திருக்கின்றன. ஏனைய எதிர்கட்சிகள் கொள்கையின் அடிப்படையில் ஒன்றுசேர வாய்ப்பில்லை என்பதால், லிபரல் கட்சிதான் இம்முறையும் கனடாவில் சிறுபான்மை ஆட்சி அமைக்க இருக்கின்றது.
முன்னுரை


இ
அஞ்சலிக் குறிப்பு







பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









