அகிலன் வேலைக்கு அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மெல்பேர்ண் நகரத்திலுள்ள வைத்தியசாலையில் வைத்தியராகப் பணி புரிகின்றான். வழக்கமாக காலை ஆறுமணிக்கெல்லாம் கிழம்பிவிடுவான்.
“கொரோனா காற்றாலை பரவுமா அப்பா?” உறங்கிக் கொண்டிருந்த அக்சரா, விழித்தெழுந்து திடீரெனக் கேட்டாள்.
அக்சரா ஏழாம்வகுப்புப் படிக்கின்றாள். கொரோனா தொடர்பான `கிறியேற்றிவ்’ படைப்பொன்றை எழுதுமாறு பாடசாலையில் கேட்டிருந்தார்கள். அக்சரா தற்போதைய சூழ்நிலையில் பள்ளிக்குப் போவதில்லை. சூம் கல்வித்திட்டத்தின் (Zoom education) மூலம்--- ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையேயான வீடியோ தொடர்பாடல்--- வீட்டில் இருந்தபடியே கல்வி பயின்று வருகின்றாள். அக்சராவின் கேள்விக்கு விரிவான விளக்கம் குடுக்கப் போனால், வேலைக்குப் பிந்த நேரிடலாம என்பதை உணர்ந்தான் அகிலன்.
“பின்னேரம் வந்து சொல்கின்றேனே!” என்றபடி வாசலை நோக்கிச் சென்றான்.
“நான் கதவை மூடுகின்றேன்” எழுந்து வந்த அப்பா, பின்னாலே நின்று சொன்னார். அப்பாவுக்குப் பின்னால் அம்மா மறைந்து நின்று எட்டிப் பார்த்தார்.
“கவனம்…. அகிலன்…”
அம்மா `கவனம்’ என்று சொன்னது `ஆட்கொல்லி’ கொரோனாவைத் தான். அந்தக் `கவனம்’ அகிலனுக்கு சலிப்பைத் தந்தது.
“அம்மா…. நான் சேவை செய்வதற்காகத்தானே படித்தேன். எல்லாவிதமான முன் எச்சரிக்கைகளோடுதான் நாங்கள் எல்லாரும் வைத்தியசாலையில் வேலை செய்கின்றோம்.”
“ நீதிக்கதைகள் எங்கே போயின. “ திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்கள் கேள்வி. “ நம் பாடத்திட்டத்திலும் வாழ்வியலிலும் உள்ள நீதிக்கதைகள் இன்றைய கால கட்டத்தில் எங்கே போயின . ரோபோக்களின் காலமாகிவிட்டது இன்று. குழந்தைகள் கைபேசிகளுக்குள் அடைக்கலமாகிறார்கள். கல்வி மன அழுத்தங்களைத் தருகிறது. புத்தகங்கள் என்றைக்கும் நண்பனாக இருக்கும். பழங்காலத்தினை நினைக்க, அசை போட , எதிர்காலக்கனவுகளை விதைக்க புத்தகங்களுக்கு முக்கியமான இடம் இருக்கிறது . புத்தகங்கள் மனிதர்களை தங்கள் பக்கம் கொண்டு வரும். மனித நேயத்தை வளர்க்கும் .பொது அறிவை வளர்க்கும் . சமூக மாற்றம் புத்தகங்களால் நிகழும் ..மத நல்லிணக்கத்திற்கு அஸ்திவாரமாய் இருக்கும் இன்றைக்கு வாசிப்பு குறைந்து வருவது வருத்தம் தருகிறது . நீதிக்கதைகள் தந்த மறுமலச்சியை நினைத்து புத்தக வாசிப்பை குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் வளர்ப்பது நமது இன்றைய முக்கியமான கடமை ”
மேற்கண்டவாறு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குண்சேகரன் புத்தக வெளியீட்டு நிக்ழ்ச்சியில் பேசினார். சுப்ரபாரதிமணியனின் சுற்றுச்சூழல் கட்டுரைகள் அடங்கிய “ பச்சைப் பதிகம் ” நூலை வெள்ளியன்று மக்கள் மாமன்ற நூலகத்தில் வெளியிட்டுப்பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். நூலின் முதல் பிரதியை மக்கள் மாமன்றத்தின் அமைப்புத்தலைவர் சி சுப்ரமணீயன் பெற்றுக்கொண்டார் . வழக்கறிஞர் ரவி வரவேற்புரை நிகழ்த்தினார். மாமன்றத்தின் செயல் தலைவர் ராஜா, எழுத்தாளர்கள் ஆனந்த குமார், வின்செண்ட் உட்பட பல எழுத்தாளர்களும் சத்ருகன் உட்பட ,சிவாஜி மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள் சத்ருகன் நன்றி உரை வழங்கினார்.
“ பச்சைப் பதிகம் ” Rs 100 vasagasalai, Chennai Publication
பச்சைப் பதிகம் (சுற்றுச்சூழல் கட்டுரைகள்) - சுப்ரபாரதிமணியன் -
அணிந்துரை : தியடோர் பாஸ்கரன்
தமிழ்நாட்டில் பசுமை இலக்கிய வெளியில் தோன்றிய முன்னெடுப்புகளில் சுப்ரபாரதிமணியன் அவர்களின் படைப்புகள் சிறப்பிடம் பெறுகின்றன. கட்டுரைகள் மூலமும் புனை இலக்கியம் மூலமும் புறவுலகைப் பற்றிய ஒரு விழிப்பை உருவாக்கி வருகின்றார். சுற்றுச்சூழல் பற்றிய கரிசனமும் சமூகநீதி பற்றிய அக்கறையும் பின்னிப் பிணைத்துள்ளன என்பதையும் சுற்றுச்சூழல் சீரழிவால் முதல் அடி வாங்குவது ஏழைமக்கள்தான் என்பதையும் அவரது படைப்புகள் காட்டுகின்றன. இதை திருப்பூரை விடத் துல்லியமாக வேறு எந்த இடத்திலும் பார்க்க முடியாது எனலாம்.contd
இயற்கையுடனும்மற்ற உயிரினங்களுடனும் நமக்கு இருந்த மரபுப்பூர்வமான பிணைப்பு இப்போது துண்டிக்கப்பட்டிருக்கின்றது. இயற்கையினின்று நாம் அந்நியப்பட்டுப் போய்விட்டோம். நம்மைச் சுற்றியுள்ள புறவுலகை, அதிலுள்ள உயிரினங்களை நாம் கண்டுகொள்வதேயில்லை. நம் வீட்டுப் பூந்தொட்டிக்கு வரும் வண்ணத்துப்பூச்சி, மரத்தில் வந்தமரும் கரிச்சான் குருவி, நீலவானம், விண்மீன்கள், மேகக்கூட்டம் எதையுமே நாம் பார்ப்பதில்லை…இன்று பெளர்ணமி என்பதை நாட்காட்டியைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்கிறோம். பெருநகர வாழ்வில் அந்தஸ்து, அதன் அடையாளங்கள், பொருள், புகழ் என்று அலையும் நமக்கு இவை தெரிவதில்லை. இன்று நம்மை வதைக்கும் சூழியல் கொடுமைகளுக்கு இந்த அந்நியப்படுத்துதல் ஒரு முக்கிய காரணம்.
அறுந்து போன இந்தப் பிணைப்பு பற்றிய ஒரு புரிதல் ஏற்பட்டால் சூழலியல் சீர்கேட்டிற்கும், வறுமைக்கும் உள்ள தொடர்பு, நம் வாழ்வின் அன்றாட வளத்திற்கும் பல்லுயிரியத்திற்கும் உள்ள பிணைப்பு ஆகியவற்றை மக்கள் உணர்ந்து செயல்பட முடியும். ஆனால் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் சீரழிவு பற்றிய கரிசனம் உருவாகவில்லை. அதற்கு ஒரு காரணம் தமிழில் இந்தப் பொருள் சார்ந்த நூல்கள் மிகவும் குறைவு. ஆகையால்தான் மக்கள் சார்ந்த இயக்கம் ஒன்றும் இங்கு பெரிதாக உருவாகவில்லை (கூடங்குளம் அணுசக்தி எதிர்ப்பு இயக்கம் ஒரு விதிவிலக்கு) இந்தப் பின்புலத்தில்தான் சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகளை நாம் பார்க்க வேண்டும்.
சீரழிக்கப்பட்டு மறைந்து வரும் ஆறுகளைப் பற்றி எழுதுகின்றார். ஐம்பதாண்டுகளுக்கு முன் ஓடிக்கொண்டிருந்த நொய்யல் நதி இன்று அழிந்து போய்விட்டது. அதே போலத்தான் நஞ்சராயன் ஏரி பற்றி இவர் எழுதியிருப்பதும். தமிழ்நாட்டில் பல நீர்நிலைகளுக்கும் இதே கதிதான். ஏரிக்கு வரும் சிறுசிறு கால்வாய்களை மறித்து வீடுகள் கட்டி விடுவதால் ஏரிகள்வறண்டு போகின்றன; நீரற்றுக் கிடக்கும் இந்த இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து விடுகின்றார்கள். கோயம்பத்தூரில் பரந்திருந்த வாலாங்குளத்தின் இன்றைய நிலையைப் பாருங்கள்.வலசை வரும் மனிதர்களைப் பற்றி சுப்ரபாரதிமணியன் எழுதியிருக்கும் கட்டுரை அண்மையில் நம்நாட்டில் நிகழ்ந்த அவலத்தைப் பற்றிய தீர்க்க தரிசனம் போலுள்ளது.
இந்நூலில் இடம் பெற்றுள்ள காலநிலை மாற்றம், பல்லுயிரியம் போன்றகருதுகோள்களைப் பற்றிய கட்டுரைகள் எளிய நடையில் உள்ளன.சுற்றுச்சுழல் பற்றிய ஒரு பரந்த விழிப்பிற்கு இந்தக் கட்டுரைகள் உதவும் என்பதில் சந்தேகம்இல்லை.
அனுப்பியவர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மகாகவி பாரதியும், வடமொழியும்!
" யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்.
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்!"
இங்குள்ள 'நாமமது தமிழரெனக் கொண்டிங்கு' என்னும் தொடரில் வரும் 'நாமம்' வடசொல்.
சுப்ரபாரதிமணீயனின் இரு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியீடு கோவையில் வெள்ளி அன்று கோவை பீளமேடு கிளஸ்டர் மீடியா கல்லூரியில் நடைபெற்றது. மாலு மற்றும் 1098 என்ற திருப்பூர் வாழ் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் நாவல்கள் Notch, 1098 என்ற பெயர்களில் மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன Notch நாவலை கோவையைச் சார்ந்த பேரா .பாலகிருஷ்ணன் மொழிபெயர்த்துள்ளார்.
1098 நாவலை மதுரையைச் சார்ந்த பேராசிரியர் வின்செண்ட் மொழிபெயர்த்துள்ளார் இவற்றை டெல்லியைச் சார்ந்த Authours press பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
விசாரணை திரைப்படத்தின் மூல கதையாசிரியர் சந்திரகுமார் , பாரதியார் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் செல்வராஜ்,, ஆவணப்பட இயக்குனர் மயன், மொழிபெயர்ப்பாளர் கோவிந்த சாமி உட்பட பலர் நூல்களின் வெளியீட்டில் கலந்து
கொண்டார்கள் . பேரா பாலகிருஷ்ணன் மறைந்த கவிஞர் வேனில் கிருஷ்ணமூர்த்தி மறைவை ஒட்டி அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாலு - Notch நாவல் மொழிபெயர்ப்பு அனுபவத்தை விவரித்தார் . 1098 நாவலின் மையமான பெண்மைய சிந்தனை மையம் பற்றியும் மொழிபெயர்ப்பு சிறப்பு பற்றியும் விவரித்தார் . சுப்ரபாரதிமணியன் இந்த இரு நாவல்களின் படைப்பு அனுபவங்களை விவரித்தார்.
பீளமேடு கிளஸ்டர் மீடியா கல்லூரி நிர்வாகிகள் அரவிந்தன் , திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர் . ஜாப்பர் நன்றியுரை வழங்கினார்.
இலங்கை சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், காந்தீயம், தேடகம் போன்ற அமைப்புகளின் முன்னாள் உறுப்பினராகவிருந்தவர் அமரர் சண்முகலிங்கம் அவர்கள். பெப்ருவரி 22 அவரது நினைவு நாள்.
எப்பொழுது கண்டாலும் சிரித்த முகத்துடன் , வாயூற உரையாடும் இவரது தோற்றம் நினைவுக்கு வருகின்றது. தான் நம்பிய கொள்கைகளுக்காகத் தன் இருப்பில் உறுதியாகத் தடம் பதித்தவர். இவர் காந்திய அமைப்பில் செயற்பட்டுக்கொண்டிருந்தபோது அச்செயற்பாடுகளுக்காக இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையினில் வாடியவர். இவரை நான் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படும்போதெல்லாம் நான் அவரது சிறை அனுபவங்கள் பதிவு செய்யப்பட வேண்டியவை; ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. அவற்றைப் பற்றி எழுதுங்கள். 'பதிவுகள்' இணைய இதழுக்கும் எழுதுங்கள் என்று வலியுறுத்துவதுண்டு. எழுதுவதாக உறுதியளிப்பார்.
படித்தவர்கள் பலர் பிற நாடுகளில் வாழ்ந்து , தம் பொருள் வளம் பெருக்குவதையே நோக்காகக்கொண்டு வாழ்கையில், இவர் தான் கற்றதை, அறிந்ததைத் தன் மண்ணுக்கு வழங்குவதற்காக வந்தார். தன் மண்ணின் அனர்த்தங்களை எதிர்கொண்டு , சமூக, அரசியல் ரீதியிலும் அவற்றைக் களையத் தன் பங்களிப்பினைச் செய்தார். அதற்கு இவருக்கு எம் மண் கொடுத்த பரிசு? தூக்கிப் போற்றிப் பாதுகாத்திருக்க வேண்டிய மண் புழுதியிலே போட்டு மிதித்துச் சீரழித்தது. எம் மண்ணின் வரலாற்றின் அவமானம் இம்மண்ணின் மகளின் மடிவு! முடிவு! தானிழைத்த வரலாற்றுத் தவறினை, இவரை நினைவில் வைப்பதன் மூலம் ஓரளவு தீர்த்துக்கொள்கிறது. எந்தக் கல்வி நிலையத்துக்காக இவர் தன் வாழ்வையே அர்ப்பணித்தாரோ அந்தக் கல்வி நிலையம் இதுவரை இவரை நினைவு கூர்ந்திட என்ன செய்தது? ஒரு சிலை கூட வைத்ததா? நினைவு கூர்ந்ததா? மிகவும் வெட்கக்கேடான விடயமென்னவென்றால் .. இவரிடம் கல்வி கற்றவர்களில் சிலரே இவரின் முடிவுக்கும் காரணமாக இருந்தார்களென்ற தகவல்கள்தாம்.
என் வாழ்க்கையில் ஒரு முறையாவது இவரை நான் சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. அதனை நினைவினில் பாதுகாத்து வைத்திருக்கின்றேன். அப்பொழுது நான் நினைக்கவில்லை அதுவே இவரைச் சந்திக்கும் இறுதிச் சந்தர்ப்பமாக இருக்கப்போகுதென்பதை. இப்பொழுதும் என் நினைவில் அச்சந்தர்ப்பம் நேற்றுத்தான் நடந்ததுபோல் நினைவிலுள்ளது.
எண்பத்திரண்டு என்று நினைக்கின்றேன். நண்பருடன் கைதடியில் இயங்கிக்கொண்டிருந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிக்கு மொறட்டுவைத் தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையுடன் சென்றபோது மாணவர்களுடன் உடலொன்றை அறுத்துக்கூறுபோட்டவாறு பாடம் நடத்திக்கொண்டிருந்த இவரைச் சந்தித்தேன். நுட்பத்தை அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு வழங்க இன்முகத்துடன் வரவேற்ற இவரது தோற்றம் இன்னும் நினைவில் பசுமையாக நிற்கிறது.
தோழர் சண்முகதாசன் நூற்றாண்டு நினைவாக....
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும் சர்வதேச ரீதியாக மதிக்கப்படும் ''மாஓ பாதை” கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிரேஸ்ட ஆலோசகராக விளங்கியவருமான தோழர் என். சண்முகதாசன் பிறந்து நூறாண்டுகளாகின்றன. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோதே பல்கலைக்கழகப் படிப்பைமுடித்து வெளியேறி கட்சியின் முழுநேர ஊழியனாகச் சேர்ந்துகொண்ட தோழர் நா. சண்முகதாசனின் அரசியல் வாழ்வு இலங்கைப் பொதுவுடமை இயக்கத்துடன் சமாந்தரமானது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஸ்ராலின் – ரொட்ஸ்கி தத்துவார்த்தப் பிரச்சினை எழுந்தபோதும் பின்னரும் ஸ்ராலின் கொள்கைகளை வலியுறுத்தி முன்னெடுத்து தோழர் சண் புகழ்பெற்றார். அன்று வலிமைமிக்க தொழிற்சங்கமாக விளங்கிய இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக விளங்கினார். 1953 -ம் ஆண்டு ஆட்சியை ஆட்டங்காணவைத்த 'கர்த்தாலை' வெற்றிகரமாக நடாத்த முக்கிய பங்களித்தவர்.
1960 - களின் முற்பகுதியில் சர்வதேசப் பொதுவுடமை இயக்கம் சோவியத் யூனியன் சார்பாகவும் - சீனா சார்பாகவும் பிளவுபட்டபோது - இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சிக்குள் சீனச்சார்பாக தத்துவார்த்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். சோவியத் யூனியனின் போக்கைத் 'திரிபுவாதம்' எனக் கண்டித்தார்.
குருசேவ் முன்வைத்த ‘'சமாதான சகவாழ்வு” என்ற சித்தாந்தம் மார்க்சிஸக் கோட்பாடுகளை - புரட்சிகரத் தத்துவத்தைத் திரிபுபடுத்திவிட்டதாகக் குற்றஞ்சாட்டி நிராகரித்தார். சீனப் பெருந்தலைவர் மாஓசேதுங் சிந்தனைகளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல்களும் சரியானவை என்ற இவரது வாதங்கள் சர்வதேச ரீதியான கவனத்தைப் பெற்றன. 1964-ம் ஆண்டளவில் கட்சி பிளவுபட்டது. கட்சியின் தொழிற்சங்க - வாலிபர் சங்க - கலை இலக்கியப் பிரிவுகளின் பெரும்பகுதியினர் சீனச்சார்பு அணியினராயினர். வடபகுதியிலும் கட்சியின் பெரும்பான்மையினர் இவர்களையே ஆதரித்தனர்.
'மீண்டுமொரு தலித் இனத்து பதின்ம வயதுப் பெண்ணொருத்தியை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நான்கு பேர் கூட்டாகப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி, முதுகெலும்பை உடைத்து, நாக்கை அறுத்து, கால்களை அடித்து , உடைத்துத் துன்புறுத்தியுள்ளனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப்பெண் இறந்திருக்கின்றார். பொலிசார் அப்பெண்ணின் குடும்பத்தவருக்குக் கூட அறிவிக்காமல் அப்பெண்ணின் உடலை எரித்து இறுதிச்சடங்கை முடித்துள்ளார்கள். '
இந்தியாவில் இதுபோன்ற செய்திகளைத் தொடர்ந்து கேட்டு வருகின்றோம். இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. தடுப்பதற்கு தற்போது அமெரிக்காவில் நடைபெறுவதைப்போல். இளைய சமுதாயம் (அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய) தாமாகவே போராட வேண்டும். Talit Lives Matter, Women Lives Matter போன்ற நோக்கங்களின் அடிப்படையில் போராட வேண்டும். இவ்விதமான குற்றச்செயல்களைச் செய்பவர்களைத் தண்டிப்பதற்கு இந்திய ஊழல் அரசியல் துணையாக இருக்கப்போவதில்லை. போராடினால்தான் அரசியல்வாதிகள் நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி இவ்விடயத்தில் கடுமையாகக் குற்றவாளிகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பார்கள்.
இலங்கையில் நிலவும் அரசியற் சூழல் திருப்தி தருவதாகவில்லை. ஏற்கனவே நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. சத்தியாக்கிரகங்கள், ஹர்த்தால்கள் என்று ஆரம்பித்து , ஆயுதப்போராட்டத்தில் தொடர்ந்து பேரழிவுடன் முள்ளி வாய்க்காலில் முடிவடைந்த யுத்தம்தான் நினைவுக்கு வருகின்றது. இன்று யுத்தம் முடிந்து 11 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அனைவரும் கடந்த காலத்தை மறந்துவிட்டார்களோ என்று நினைக்கத்தோன்றுகின்றது. மீண்டும் அரசியல்வாதிகள் தம் இருப்பைத் தக்க வைப்பதற்காக உணர்ச்சி அரசியலில் இறங்கி விட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது. மீண்டும் நிலை பழைய யுத்தச்சூழலுக்குச் செல்லாமலிருக்க வேண்டுமென்றால் பின்வரும் விடயங்கள் நடைபெற வேண்டும்:
இன்று தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்நிலை ஏன் வந்தது? ஆனால் முரண்பாடுகளுடன் ஒன்றிணைந்து குரல் கொடுப்பது ஆரோக்கியமான நிலை. வரவேற்கப்பட வேண்டியது. திலீபனின் நினைவு தினம் கொண்டாட அனுமதிக்கவில்லையென்னும் காரணத்தை அடிப்படையாக வைத்து உருவான நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ள நிலை. நாட்டின் மக்கள் யாராகவிருந்தாலும், எவ்வினத்தவராகவிருந்தாலும், எம்மதத்தவராகவிருந்தாலும், எம்மொழிபேசுபவராகவிருந்தாலும் அமைதியான வழியில் தம் கருத்துகளை, உணர்வுகளை , ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்தும் உரிமை அவர்களுக்குண்டு.
இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு நிகராக பெண் வாரிசுகளுக்கும் சம உரிமை உண்டு என்கிற திருத்தம் 2005இல் இந்து வாரிசு சட்டத்தில் கொண்டுவரப்பட்டது. 2005க்கு முன்னாலேயே தந்தை இறந்து போன குடும்பங்களுக்கும் இது பொருந்துமா என்கிற கேள்வியோடு போடப்பட்ட வழக்குகளில் கடந்த காலத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஒன்றுக்கொன்று சற்று முரண்பட்டு இருந்தன. தற்போதைய தீர்ப்பில், திருத்தம் 2005-ல் வந்திருந்தாலும் அதற்கு முன்னரே தந்தை இறந்து போன குடும்பங்களிலும் பூர்வீக சொத்தில் பெண் வாரிசுகளும் சமமான பங்குதாரரே என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. பெண்களுக்கு அவர்களுடைய பூர்வீக சொத்தில் சம பங்கு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட நெடுங்காலமாக கோரி வந்துள்ள சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் நாவிதன்வெளிப் பிரதேசசபைத் தவிசாளர் தவராசா கலையரசனுக்கு வழங்கப்பட்டது. இலங்கை அரசு வெளியிட்ட அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் கூட்டமைப்பின் நல்லதொரு முடிவு. தமிழ் உறுப்பினர்களற்ற அம்பாறைக்கு இதன் மூலம் தமிழ் உறுப்பினரொருவர் கிடைத்துள்ளார்.
அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு: http://www.documents.gov.lk/files/egz/2020/8/2188-02_T.pdf
அறிந்து கொள்வோம்: இலங்கைப் பாராளுமன்றத்தில் மொழிபெயர்ப்பு வசதிகள்!
அண்மையில் சசிகலா ரவிராஜ் விடயத்தில் நம்மவர்கள் நடந்து கொண்ட முறையைப் பார்த்தபோது ஒன்று புரிந்தது.இவர்களுக்கு வாக்குகள் எவ்விதம் கையாளப்படுகின்றன என்னும் விடயம் தெரியாது? ஆளுக்காள் கூறும் விடயங்களை அப்படி அப்படியே நம்பி உணர்ச்சிப்பெருக்கெடுத்துத் தாண்டவமாட மட்டும் தெரிகிறது.
இப்பொழுது ஒருவர் முகநூற் பதிவொன்றில் மிகப்புத்திசாலித்தனமான கேள்வியொன்றினைக் கேட்டிருக்கின்றார். அம்பாறையில் தமிழ் மட்டும் தெரிந்த தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டால் பாராளுமன்றத்தில் எந்த மொழியில் பேசுவார்? பெரிய கண்டுபிடிப்பு! பாராளுமன்ற நடைமுறைகளைத் தெரியாதவர்கள் அரசியல் கருத்துகள் உதிர்க்கின்றார்கள். நமது அரசியல் ஆய்வாளர்கள் பலரின் ஆய்வுகளும் இவ்வகையானவைதாம்.
"சத்தியத்தை நாடிச் செல்பவர் தூசிக்கும் தூசியாகப் பணிவு கொள்ள வேண்டும். உலகம் தூசியைக் காலின்கீழ் வைத்து நசுக்குகிறது. ஆனால் சத்தியத்தை நாடுகிறவரே அத்தூசியும் தம்மை நசுக்கும் அளவுக்குத் தம்மைப் பணிவுள்ளவராக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் - அதற்குமுன் அல்ல- ஒளியைக் கணப்பொழுதாவது காணமுடியும். கிறிஸ்தவமும், இஸ்லாமும் கூட இதை நன்கு எடுத்துக்காட்டுகின்றன" என்று மகாத்மா காந்தி தனது சத்திய சோதனையில் கூறியுள்ளார். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனின் சத்தியத்தேடலே சமயங்களாக வளர்ச்சிப் பெற்றன. ஒரு மனிதன் பிறக்கும் இடத்தின் காரணமாக ஒரு சமயத்தைச் சார்ந்தவனாக ஆகிறான். அவனது சத்தியத் தேடல் அச்சமயத்தோடு தொடர்புடைய நம்பிக்கைகள் சடங்குகள் சார்ந்து செயல்படுவதைக் காணலாம். காலப்போக்கில் நம்பிக்கைகள், சடங்குகள் பொருளற்றதாக மாறும் போது பகுத்தறிவு புதிய நம்பிக்கைகளையும், சடங்குகளையும் தருகிறது என்றாலும் இதன் அடிப்படை நோக்கம் சத்திய ஒளியை அடைவதேயாகும். இயற்கை வழிபாடு, உருவ வழிபாடு, சமய வழிபாடு, சமணம், பௌத்தம், சைவம், வைணவம், இஸ்லாமியம், கிறிஸ்துவம் என்று மனிதனின் சத்தியத் தேடலில் கண்டடைந்த வழிமுறைகள் ஏராளம் . இடைக்காலத்தில் ஏற்பட்ட சமயக் காழ்ப்புணர்ச்சி மனிதனைச் சற்று விலங்கு நிலைக்குத் தள்ளியது. சமயப் பற்று சமய வெறியாக உலகம் முழுவதும் அரசியலும் அதிகாரமும் செலுத்தத் தழைப்பட்டது. தற்காலத்தில் ஜனநாயகத்தின் மலர்ச்சியும் நவீன சிந்தனைகளும் தோற்றம் பெற்றப் பிறகும் இடைக்கால சிந்தனை மரபு ஆதிக்கம் செலுத்தி வருவதை எல்லா சமயங்களிலும் காணமுடி கிறது. என்றாலும் ஜனநாயகத்தின் சுதந்திர ஒளியில் சத்தியத்தைத் தேடும் நவீன சிந்தனை மாற்றத்தை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் அயோத்தி ராமர் கோயில் சிந்தனையின் அடிப்படைகளை எண்ணி பார்க்க வேண்டும்.
தேர்தலொன்றின் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் அத்தேர்தலில் பங்கு பற்றும் அரசியல் தலைவர்கள் எவருமே அம்முடிவுகள் பற்றிய கருத்துகளைக் கூறக் கூடாது.
தேர்லொன்றில் வாக்குகள் எண்ணப்படுகையில் வேட்பாளர்களின் வாக்குகள் அடிக்கடி மேலேறுவதும் கீழிறங்குவதுமாகவிருக்கும். இது சாதாரணமானது.
முடிவுகள் வெளியாவதற்கு முன்னர் எவ்விதம் வேட்பாளர்களுக்கு அவர்களின் நிலை தெரிகின்றது? வாக்கு எண்ணப்படும் இடத்தில் வேட்பாளர்களின் முகவர்கள், கண்காணிப்பாளர்கள் என்று பலர் இருப்பார்களே. முகவர்கள் தம் அலைபேசி மூலம் கட்சிகளின் தலைவர்களுக்குத் தகவலை அனுப்பிக்கொண்டிருக்கின்றார்களா? அவ்விதம் நடந்தால் அது எதிர்காலத்தில் தடுக்கப்பட வேண்டும்.
வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தம் சார்பு வேட்பாளர்களுக்கு ஆதரவாக வன்முறையில் ஈடுபட்டால் வேட்பாளர்கள் அவர்களை அமைதிப்படுத்த வேண்டும். முடிவுகள் வெளியாகும்வரை பொறுமை காக்க வேண்டும். முடிவுகளில் நம்பிக்கையில்லாவிட்டால் சட்டத்தின் துணையை நாட வேண்டும். அவ்விதம் செய்யாமல் இவ்விதம் நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட மாணவனாக நான் அறியவந்த விமலதாசன்(1954-1983) சமூக விடுதலையினை, தனிமனித அறத்தைப்பேணிய பெருமகன்.இயேசுவின் விசுவாசம் மிகுந்த ஊழியன்.மெல்லிய உடல்.சாதாரணமாக ஷேர்ட்டை வெளியில் விட்டிருப்பார். தோளில் எப்போதும் தொங்கும் ஜோல்னாப்பை.அதில் பல்வேறுபட்ட பிரசுரங்கள், அறிக்கைகள், 'மனிதன்' இதழ்கள், ஆங்கில சஞ்சிகைகள் இத்தியாதி .
புள்ளிவிபரவியலில் (Statistics) சிறப்புப்பட்டம் பெற்றவர். கணிதம் அவரின் கோட்டை. இளவாலை புனித ஹென்றி அரசர் கல்லூரியில் கணிதம் போதித்த சிவப்பிரகாசம் மாஸ்டர் கரும்பலகையில் கணக்கை எழுதி முடிப்பதற்கிடையில், கணக்கை செய்து முடித்துவிடும் அபார திறமையை பள்ளிக்காலத்திலேயே வெளிப்படுத்திய மாணவன்.இந்தக்கணித ஞானம் அவரது சமூக ஆய்விலும் ஒளிர்ந்ததை அவரது சமூகசெயற்பாடுகள் கோடிகாட்டின. அடிப்படை மனித உரிமைகள் பற்றிய கேள்வியை அறிவுபூர்வமாயும் உணர்வுபூர்வமாயும் தனது 'மனிதன்' பத்திரிகையில் எழுப்பியவர் விமலதாசன்.
சுதந்திரம் என்பதனை அதன் சகல பரிமாணங்களிலும் விஸ்தரித்து விளக்கம் தேடியவர் அவர்.எனவேதான்,'தமிழ் நெஞ்சே! தாழ் திறவாய்!' என்று தலைப்பிட்டு தனது மனிதன் இதழில் அனைவருக்கும் திறக்கப்படாத ஆலயங்கள் என்று மானிப்பாயில் தாழ்த்தப்பட்டோரை உள்ளே அனுமதிக்க மறுத்த 12 ஆலயங்களை அவர் முன்பக்கத்தில் பட்டியலிட்டார். 'சுதந்திரம் எமது பிறப்புரிமை'யானால், தீண்டாமை என்பதற்குப் பொருள் ஏது? வரலாறுதான் ஏது?' என்று தலைப்பிட்டு, அவர் சாதியஒடுக்குமுறையினை அணுகும் விதம் அசலானது.வெற்றுக்கேள்விக்கொத்துகளுடன், தாம் ஆராயப்போகும் சமூகப்பிரச்னையின் சரித்திரமும் தெரியாமல், சமகாலப்பிரச்னையும் புரியாமல் ஆய்வை முடித்து,யாழ்ப்பாணத்தில் அனைத்துத் தரப்பும் உற்று நோக்கிய ஒரு பிரச்னையில் சாதியம் செயற்பட்டிருக்கிறது என்று கேள்வி எழுந்தபோது, ஒரு தயக்கமும் இன்றி, அதனை முற்றாக மறுதலிக்க முயன்றபோது, சமூகஆய்வு என்று பெயர்பண்ணிக்கொண்டு செய்யப்படுகிற ஆராய்ச்சிகள் எப்படி அந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிராகப் பாவிக்கப்படுகின்றன என்பதை அவதானிக்கையில் அறிவுலகின்மீதுள்ள கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தகர்ந்துபோகின்றன.
"கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக". (குறள் 391)
எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாமல் இரண்டாயிரம் ஆண்டுகளாக மாபெறும் ஏமாற்றத்தின் மனித இயலாமையின் மொத்த வடிவமாக விளங்கி வருவது இக்குறள். மனிதனைச் சுயச்சார்போடு சமூக இணைவோடு மனித வளத்தோடு வாழ்விக்க சமூக அமைப்புகள் முயன்ற அனைத்து முயற்சிகளும் நிறைவடையாத ஓவியமாக நிற்பதைக் காணலாம்.
இந்தியாவில் முதல் தேசிய கல்விக் கொள்கை பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் 1968 இல் கொண்டு வரப்பட்டது. பிறகு இரண்டாவது தேசிய கல்விக் கொள்கை பிரதமர் ராஜிவ் காந்தி ஆட்சியில் நீண்ட போராட்டங்களுக்குப் பின் 1986 இல் கொண்டு வரப்பட்டது. பின்னர் நரசிம்மராவ் காலத்தில் 1992 இல் பல திருத்தங்கள் செய்யப்பட்டது. உலக அளவில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த 1990க்கு பிறகு இந்தியாவிலும் அதன் தாக்கம் பிரதிபலித்தது. உலகமயம். தனியார்மயம், தாராளமயம், என்ற கொள்கை உலகத்தின் அமைப்பு முறையில் பல மாறுதல்களை ஏற்படுத்தியது. கல்வி சேவைத் துறையில் இருந்து வணிகத் துறைக்குத் தனது பார்வையைச் செலுத்தத் தொடங்கியது. இதன் பிறகு பெரும் பாய்ச்சலாக இந்தியா முழுவதும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பெரும் மூலதனத்தில் கல்வியை வழங்க முற்பட்டன. பள்ளிக் கல்வியும் கல்லூரிக் கல்வியும் பரவலாக்கப்பட்டது. அரசு தனது கல்விப் பணியின் பங்களிப்பைக் குறைத்துக் கொண்டு தனியாரின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தியது. உயர் கல்வியின் கட்டுப்பாடுகள் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டன. பாடத்திட்டம் தயாரித்தல், தேர்வு நடத்துதல், பட்டம் வழங்குதல், கல்லூரிக்கு அனுமதி வழங்குதல் என்று தனது செயல்பாட்டின் மூலம் பொருளாதாரப் பலத்தைப் பெற்றுக் கொண்டது. இது மாபெரும் ஊழலுக்கு வித்திட்டது. பல்கலைக்கழகங்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக மாற்றம் பெற்றன. 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பொறியியல், கலை அறிவியல், மருத்துவம் ஆகியவை தனியாரின் உள்ளங்கைக்குள் சென்று விட்டன. பெரும் லாபம் ஈட்டும் தொழிலாகக் கல்வி மாற்றப்பட்டது. கல்வியின் செயல்பாடு பரவலாக்கப்பட்டதோடு எளிமையாக்கபட்டது.
23.07.2020
எழுத்தாளர் கோவை ஞானி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இலக்கிய திறனாய்வாளரான கோவை ஞானி ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கிய பண்பாட்டு சூழலில் இடையறாது இயங்கி வந்தவர் அவர். மார்க்சியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இரு கண்களும் பார்வையை இழந்தபோதும், வாசிப்பை அவர் கைவிடாமல் இலக்கியத் தளத்தில் இயங்கி வந்துள்ளார். கருத்து வேறுபாடு கொண்டவர்களோடும், நட்பு பாராட்டி வந்தவர். அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
(கே.பாலகிருஷ்ணன்)
மாநிலச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
--
Communist Party of India (Marxist)
Tamilnadu State Committee
P.R. Ninaivagam
No: 27, Vaidhyaraman Street
T.Nagar, Chennai - 600 017
கடந்த சில நாட்களாக முகநூலில் , இணையத்தில் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த துன்பம் பற்றிய செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தப் பெண்ணின் பெயர் எழில்வேந்தன் கோணேஸ்வரி . முன்னாள் விடுதலைப்புலிப் போராளி. இவரது சகோதரர்களும் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடி மரணித்தவர்கள்., இவரது கணவரும் முன்னாள் புலிகள் இயக்கத்துப் போராளி. அவர் இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்களிலொருவர். புலிகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலத்தில் இவரது சகோதரர் ஒருவர் அழகரட்ணம் என்பவருக்கு ரூபா 28 இலட்சம் பணம் கொடுத்து வாங்கிய காணியில் இவர் வாழ்ந்து வருகின்றார். ஆனால் அக்காணி அக்காலத்தில் முறையாக அரச காணிப்பதிவேட்டில் பதியப்படவில்லை. இவ்விதமான சூழலில் வாழ்ந்துவரும் இவர் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். செஞ்சோலையில் வாழ்ந்து வந்தவர். வாழ்க்கையே போராட்டமாக அமைந்து விட்டது இவருக்கு.
தற்போது இவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை என்ன? இவர் வீடு அழிக்கப்பட்டு , தாக்கப்பட்டு மருத்துவ மனையிலிருக்கின்றார். காரணம்? இவர் குடியிருக்கும் காணி சட்டரீதியாக இவருடையது அல்ல. ஆனால் இக்காணிக்கு இவரது சகோதரர் அன்று ரூபா 28 இலட்சம் கொடுத்ததாக இவர் குறிப்பிட்டிருக்கின்றார். இலங்கைநெற் இணையத்தளச் செய்தின்படி இவருக்கு ஏற்பட்ட நிலைமைக்குக் காரணம்:
இவர் சில வருடங்களுக்கு முன்னர் உதவி கேட்டு சிறீதரன் பா.உறுப்பினரிடம் சென்றிருக்கின்றார். அவர் வேழமாலிகிதன் என்பவரை இவரது இருப்பிடம் சென்று இவரது நிலையை அறிந்து வரச் சொல்லியிருக்கின்றார். அவ்விதம் சென்று இவரது நிலையை அறிந்து கொண்ட வேழமாலிகிதன் தான் சிறீதரனிடம் இவரது நிலையை எடுத்தியம்புவதாகக் கூறியுள்ளார். ஆனால் அன்றிரவே பத்து மணியளவில் இவரை அழைத்து தங்கச்சி உணவுக்கு என்ன செய்தீர்கள்? தான் கொத்துரொட்டி வாங்கி வருவதாகக் கூறுகின்றார். இவரது கூற்றுப்படி (இலங்கைநெற் தளத்தில் வெளியான செய்தியின்படி) இவர் அவ்விதம் வேழமாலிகிதன் இரவில் அழைத்துக் கொத்துரொட்டி கொண்டு வருவதாகக் கூறியதையிட்டுச் சந்தேகம் அடைகின்றார். வேழமாலிகிதன் தவறான எண்ணத்தில்தான் அச்சமயம் அழைத்ததாக இவர் எண்ணுகின்றார். அதன் விளைவாக அயலவரிடம் அது பற்றிக் கூறி பாதுகாப்புக் கேட்கின்றார். இதனால் தன் பெயருக்குக் களங்கமேற்படுத்திய இவரின் மேல் ஆத்திரம் கொண்ட வேழமாலிகிதன் அன்றிலிருந்து இன்றுவரை இவருக்குத் தொல்லைகள் கொடுக்கின்றார். காணியின் முன்னாள் உறுப்பினர் அழகரட்ணத்துடன் தொடர்புகொண்டு இக்காணி இப்போது ஒரு கோடி வரையில் செல்லுமென்று கூறிச் சட்டத்தின் துணையுடன் இவரைக் கலைக்கின்றார். இருந்த வீட்டையும் சிதைத்து விடுகின்றார்.
10 ஜூலை 2020"நீண்ட தர்க்கங்கள், பிணக்குகள் மற்றும் உயர் நீதிமன்ற வழக்குகளின் பின்னர் இலங்கையின் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.. அதே வேளை, எண்ணற்ற பொய்யான வாக்குறுதிகளாலும் தவறான ஊடகப் பிரச்சார மேலீட்டாலும் குழம்பிப்போயுள்ள பலர், தமது அரசியல் எதிர்காலத்தை வேறு யாரேனும் தீர்மானிக்கட்டும் என்று பேசாமல் விட்டுவிடுகின்றனர். இவ்வாறு சோர்ந்துபோய் அக்கறையின்றி இருப்போரிடமிருந்தே இத்தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் உண்மையில் இவர்களால்தான் இச்சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். “
இவ்வாறு வெளிநாடுகளில் வதியும் இலங்கையின் எதிர்கால நலனை பெரிதும் விரும்பும் இலங்கையர்களின் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடபெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தங்கள் பொன்னான வாக்குகளை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதை தெரிவிக்கும் இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஒரு ஜனநாயக ஆட்சி தவறிப் போகும் வேளையில் மக்கள் அமைதியாக தமது வாக்குரிமையைப் பயன்படுத்தி அதை சரிப்படுத்தல் வேண்டும். அதுவே உங்கள் வாக்கின் சக்தி. அச் சக்தியை பெருமையுடனும், புத்திசாதுரியத்துடனும் பயன்படுத்த இதுவே தக்க தருணம். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும் எனத் தற்போதைய இடைக்கால அரசு திண்ணமாகக் கூறியிருப்பதானது, கடந்த ஆட்சியின்போது ‘அதிகாரச் சமநிலையை’ ஏற்படுத்த பெரும் சிரமத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களை இல்லாதொழிக்கும் ஓர் துணிகர முயற்சியேயாகும். இந்நிலையில் அவர்கள் மீண்டும் நாட்டை ஆளத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், 2015 இற்கு முந்திய தசாப்தத்தில் நிலவிய அளவுக்கு மிஞ்சிய பேராசை, ஜனாதிபதி ஆணைகள், ஆணவம் என்பன தொடரும் என்பது எண்ணிப்பார்க்க முடியாததொன்றல்ல. சர்வாதிகார ஆட்சி ஒன்றே இலங்கைக்குப் பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சியும் தரக்கூடியது எனும் திட்டமிட்ட தவறான பரப்புரையானது, ‘தண்டனை விதிவிலக்குக் கலாச்சாரம்’ மற்றும் ‘அடக்குமுறைச் சமூக ஒழுங்கு’ என்பவற்றை நிறுவனமயமாக்கும் நோக்கைக் கொண்டுள்ளது.
அண்மையில் முனைவர் செல்லத்துரை சுதர்சனுக்கு அளித்த நேர்காணலில் முன்னாள் யாழ் மாநகரசபையின் முதல்வராகவிருந்த செல்லன் கந்தையன் அவர்கள் குறிப்பிட்ட ஒருவிடயம் என் கவனத்தை ஈர்த்தது.
அன்று கூட்டணித்தலைவர்களிலொருவரான ஆனந்தசங்கரியின் தலைமையில் நடைபெறவிருந்த நூலகத் திறப்பு விழா தடைபட்டதும் முன்னாள் மேயர் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனால் நூலகத்திறப்பு விழாவில் வைக்கப்படவேண்டிய அவர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு வைக்கப்படவில்லை. ஆனால் அக்கல்வெட்டை அவருக்குப் பின் பதவியேற்ற யாழ் மாநகரசபை நிர்வாகம் மீண்டும் அங்கு வைத்துள்ளது. அவ்விதம் வைக்கப்பட்ட கல்வெட்டைத்தற்போதுள்ள மாநகரசபை நிர்வாகம் நீக்கி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டுகின்றார். இதனை நான் இப்பொழுதுதான் நானறிந்தேன். அப்போது என்னிடமெழுந்த கேள்வி: எதற்காக இதுவரை அங்கிருந்த அவர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை இன்றுள்ள மாநகரசபை நீக்க வேண்டும்? அதற்கான காரணம் என்ன? இன்று ஏன் இத்தனை வருடங்கள் கழிந்து இருந்து வந்த கல்வெட்டை இன்று பதவியிலிருக்கும் மாநகரசபை நீக்க வேண்டும்?
அண்மையில் முனைவர் செல்லத்துரை சுதர்சன் அவர்கள் யாழ் மாநகரசபையின் முன்னாள் மேயரான செல்லன் கந்தையா அவர்களுடன் நடாத்திய நேர்காணலிது. இது பற்றி முகநூலில் காரசாரமாக விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் சூழலில் வெளிவந்திருப்பதால் இதற்கொரு முக்கியத்துவமுண்டு. இந்த நேர்காணல் பல விடயங்களை வெளிக்காட்டியுள்ளது. அவை:
* யாழ் முன்னாள் மேயர் செல்லன் கந்தையன் அவர்களின் அரசியல் குருக்கள் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர்கள். உடுப்பிட்டி எம்.பி. சிவசிதம்பரம் பல வழிகளில் அவருக்கு உதவியுள்ளார். தனது பதவியைப்பாவித்து 3000 ரூபா கடனெடுத்துக் கொடுத்து உதவியுள்ளார். தமிழர் கூட்டணித் தலைவர்கள் பலர் தந்தை செல்வா, அமிர்தலிங்கமுட்படப் பலர் அவரது திருமணத்தில் கலந்துகொண்டிருக்கின்றார்கள். தந்தை செல்வாவின் கையாள் என்று சொல்லக்கூடிய ஒருவர்தான் இவரது அண்ணர் தேவராசன். ஆலாலசுந்தரம், ஆனந்தசங்கரி போன்றவர்கள் எல்லோரும் இவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். தந்தை செல்வாவின் ஈமக்கிரியைகளின்போது அவரது தலைமாட்டிலிருந்து விசிறிக்கொண்டிருந்தவர் இவரே. இவையெல்லாம் எவ்வளவுதூரம் அவர் கூட்டணியின் தீவிர ஆதரவாளராக இருந்திருக்கின்றார் என்பதைப் புலப்படுத்துகின்றன. அதுதான் கூட்டணித்தலைவர்கள் இவரிடம் காட்டிய நெருக்கத்துக்கு மிக முக்கிய காரணமாக எனக்குத்தோன்றுகின்றது.
இன்று அமெரிக்காவெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் போர்க் குரல் இது.
கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரத்தின் ஒரு மளிகைக் கடையில் பொருள் வாங்க வந்த ஓர் இளைஞர், கள்ளநோட்டு கொடுத்ததாக கடைக்கார் போலீசில் புகார் செய்கிறார். உடனே அங்கு சோதனையிட வந்த காவல்துறையினர், கடைக்கு வெளியே காரில் அமர்ந்திருந்த கருப்பு நிற இளைஞரை சந்தேகத்தின் பேரில் கைது செய்கின்றனர். அவர் பெயர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் (வயது 46).
காரில் இருந்த அவரை கீழே இறங்கும்படி கூறி, பின்னாலிருந்து அவரது கைகளைக் கட்டி, பொதுவெளியில் இழுத்துச் சென்ற காவலர்கள், அவரை காரின் டயர் அருகில் சாய்த்துப் படுக்க வைத்தனர். வந்திருந்த நான்கு காவலர்களில் ஒருவர் தனது முழங்காலை அவரது கழுத்துப் பகுதியில் வைத்து அழுத்திப் பிடித்துள்ளார். அப்போது, “தன்னால் மூச்சுவிட முடியவில்லை; எனக்கு தண்ணீர் கொடுங்கள்; என்னை கொன்றுவிடாதீர்கள்” என்றெல்லாம் ஃப்ளாய்ட் பலமுறை கெஞ்சியும் அந்தக் காவலர் அதனைக் கண்டுகொள்ளவில்லை.
மீதமுள்ள மூன்று காவலர்களும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவரது அருகிலேயே நின்றுள்ளனர். சுற்றி நின்று கூச்சல் போட்ட பொதுமக்களில் யாருடைய குரலையும் அந்த போலீகாரர் பொருட்படுத்தவுமில்லை. எவ்வளவோ போராடிப் பார்த்தும் அசையக்கூட முடியாமல், இறுதியில் ஜார்ஜ் பேச்சுமூச்சின்றி சலனமற்றுக் கிடந்தார்.
ஆம்புலன்ஸ் வரும்வரை அவருடைய கழுத்தை அழுத்தியிருந்த காவலர் தனது காலை எடுக்கவேவில்லை. மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
உயிருக்குப் போராடிய ஜார்ஜ், இறக்கும்போது உச்சரித்த கடைசி வார்த்தைதான் “I cannot breathe! - என்னால் மூச்சு விடமுடியவில்லை”.