தொடர்கதை: ஒரு கல் - கரைந்தபோது (7) - ஸ்ரீராம் விக்னேஷ், நெல்லை வீரவநல்லூர் -
அத்தியாயம் 7
பொழுது விடிந்தபோது, மனதுக்குள் இனம்புரியாத பரபரப்பு. நேற்று முழுவதும், வாற்சப் வீடியோ காலில் பார்த்துப்,பேசிப்,பழகிய போதிலும் இன்று நேரிலே சந்திக்கப்போகின்ற அனுபவம், புதிதானதுதானே.
ஏற்கனவே பேசிவைத்தபடி, அம்மாவும் நானும் அக்காளிடம் அதிகாலையிலேயே விவரத்தைக் கூறியபோது, அக்கா உண்மையிலேயே அதிர்ந்துபோனதை அவளின் முகத்திலே கண்டுகொண்டேன்.
ஆனாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல் போலி மகிழ்ச்சியை வைத்துக்கொண்டு, புன்னகைத்தாள்.
அந்தப் புன்னகைக்குள்ளே பொதிந்து கிடக்கும் வேக்காடு, “இதை எப்படியாவது கெடுத்துவிட வேண்டுமே….” என்றே கொதிக்கும் என்பது எனக்குத் தெரியும். அத்துடன் அந்தக் கொதிப்பு எந்தக் கணமும் சீறி வெடிக்கலாம் என்னும் எதிபார்ப்பு எனக்குள் கலக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.
“சந்தோசமான சமாச்சாரந்தான்…. ஆனா, இது எப்பிடி ஏற்பாடாயிச்சு….? நானும் சம்மந்தப் படல்ல….. என் வீட்டுக்காரரும் பஜார் பக்கம் போறதே அத்தி பூத்த மாதிரி…. ஏம்மா உனக்கு கோயிலையும் வீட்டையும் விட்டால் யாரையுமே தெரியாதே…. அப்புறம் எப்பிடி இது சாத்தியப் பட்டிச்சு…..”
இந்த ஏற்பாட்டுக்கான அடிப்படைச் சூத்ரதாரி யார் என்பதைத் தெரிந்து, அவரைச் சுட்டெரித்துவிடவேண்டும் என்று உள்ளுக்குள்ளே அவள் துடிப்பது எனக்குப் புரியாமல் இல்லை.
அம்மா பதில் சொன்னாங்க.
“நீ சொல்றது நெசந்தாம்மா….தக்க சமயத்தில ஒதவிபண்ண யாருமே இல்லைண்ணாலும், தெய்வத்தோட ஒதவியும், உங்கப்பா ஆத்மாவோட ஆசீர்வாதமும் இருக்கிறப்போ, அந்த ரெண்டுமே ஒரு கலியாணத் தரகரை பெரிய கோயில்ல வெச்சே அறிமுகப்படுத்தி, என்னய பேசவெச்சு சாத்தியப் படுத்திச்சுங்க….”
“சரிதாம்மா…. மாப்பிளை என்னவேலை…. அவுங்க குடும்பம் எப்பிடி…..?”
அக்காள் கேட்டதும்,
“ஒரு நிமிசம் இரும்மா…. வந்திடுரேன்……” என்ற அம்மா, குழந்தைபோல துள்ளிக்குதித்து தனது அறைக்கு ஓடியதை, கரவோடு அக்காளும், களிப்போடு நானும் நோக்கினோம்.
திரும்பி வந்தபோது, அம்மாவின் கையில், தினசரிப் பத்திரிகை ஒன்று இருந்தது. விரித்துக் காட்டியபோதுதான் கவனித்தேன். சரியாக இரண்டு வாரங்களூக்கு முன் வெளிவந்த பத்திரிகை அது.
“மணமகள் தேவை” பகுதியில், ஒரு விளம்பரத்தைச் சுட்டிக் காட்டினாங்க அம்மா.
“மதுரையைச் சேர்ந்தவரும், சென்னையில் வங்கி ஒன்றில் தலைமைப் பீடத்தில் மேனேஜராக இருப்பவரும், ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்தவரும், ஐந்து வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளவருமான, முற்போக்குவாத சமூக சீர்திருத்த எண்ணங்கொண்ட , முப்பத்தைந்து வயது மணமகனுக்கு, அழகும் ஓரளவு படிப்பும் உள்ள மணமகள் தேவை.
தாரம் இழந்தவர்கள், விவாக ரத்துப் பெற்றவர்கள், அங்க ஊனமுற்றவர்கள், முப்பது வயதுக்கு மேற்படாதவர்கள் புகைப்படத்துடன் விண்ணப்பிக்கவும்.
வரதட்சணை இல்லை. ஜாதி அவசியமில்லை. விபரங்களுக்கு…….
விலாசம் அரைப் பக்கத்துக்கு நீண்டது. விறைத்துப்போய் நின்றாள் அக்கா.
அமைதியைக் கலைத்தாக அம்மா.
“இந்தப் பத்திரிகையைத்தான் தரகர் ஏங்கிட்டதந்து, பேசினாரு…. தங்கச்சி போட்டோவையும், அவ படிப்பு, வாழ்க்கை சம்பந்தமான விவரத்தையும் நான் குடுத்தேன்…..
மாப்பிள்ளை வீட்டுக்குப் புடிச்சுப் போச்சு….. மதுரையிலயிருந்து காரில வர்ராக…. வந்து புரோக்கரை சந்திப்பாக…. வந்தவங்க எல்லாரையும் புரோக்கர்தான் இங்க கூட்டிக்கிட்டு வருவாக….. காலையில ஒம்பது டூ பத்தரைக்குள்ள வந்திடுவாக…..”
அம்மா பேசப்பேச அக்காளின் முகம் மாறிக்கொண்டிருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. உள்ளூரக் கொதிக்கும் எரிமலை சீறி வெடித்தது.
“இதெல்லாம் எங்களுக்குத் தெரியாம எதுக்காகச் செய்யிறீங்க….. தங்கச்சிக்கு கால் ஒண்ணு இல்லேங்கிறத்துக்காக, ஏற்கனவே தாலி அறுத்தவன்தான் கட்டிக்க வரணுமா….?”
ஒருகணம் துடித்தே போய்விட்டாக அம்மா.
“என்னடீ நீ…. இந்த நேரத்தில இப்பிடியான வார்த்தயை பேசிக்கிட்டு…. ஆண்டவனே…. நல்லது நடக்கப்போற நேரத்தில இப்பிடியொரு அபசகுன வார்த்தய கேட்டுபுட்டேனே….. என்ன ஆகப் போவுதோ…..”
நொந்துகொண்ட அம்மா ஒருகணம் அமைதியானாங்க.
“சரிசரி…. போனதெல்லாம் போகட்டும்….. மாப்பிளை வீட்டுக்காரங்க வந்து….. எல்லாத்தையும் பேசி முடிச்சுப் போறவரைக்குமாவது, நம்ம குடும்பச் சண்டையை தூரத் தள்ளி வெச்சிக்குவோம்….. நீயும், மாப்பிள்ளையும் முன்னால நிண்ணு பொறுப்பா எல்லாத்தையும் முடிச்சிட்டீங்கண்ணா ரொம்ப புண்ணியமா இருக்கும்மா….”
அக்காளை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டாங்க. என்னையும் அறியாமலே என் கண்கள் குளமாயின.
கருணை மழையால் கரைவதற்குக் கருங்கல்லால் முடியுமா? அல்லது கல் நெஞ்சக் காரியிடம் கருணைதான் பிறக்குமா?
இந்த இரண்டு வார்த்தைகளை எப்படித்தான் மாற்றி,மாற்றிப் போட்டாலும் தருகின்ற அர்த்தம் ஒன்றுதானே.
அதற்காக இவளிடமெல்லாம் போய், கையெடுத்துக் கும்பிடும் அம்மாவின் செயல், எனக்கு அதிகப் பட்சம்போல தோன்றியது.
அம்மாவை இத்தகைய நிலைமைக்கு ஆளாக்கிய அக்காள்மீது, கோபம் கோபமாக வந்தது எனக்கு.
பேயாக மாறிப் பேசினாள் அக்கா.
“ஓ…. முன்னால வேற நிண்ணு பொறுப்பா எல்லாத்தையும் முடிக்கணுமா….. முடிச்சுப்புடுறேன்…. எல்லாத்தையுமே முடிச்சுப்புடுறேன்….. இதை மட்டுமில்ல….. இனிக் காலத்திலயும் எவனுமே எங்களைக் கலந்துக்காம இவளைப் பொண்ணுகேட்டு வர்ரதை இத்தோட முடிச்சுப்புடுறேன்…. அவங்க வர்ரப்போ முன்னால போய் வீட்டு வாசல்லயே முடிச்சுப்புடுறேன்…..”
வருபவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, நோகடித்து விரட்டிவிடும் நோக்கோடு, உக்கிர ரூபம் எடுக்கின்றாள் அக்கா என்பதைப் புரிந்துகொண்ட அம்மாவுக்குள், அப்போது வந்ததைக் “கோபம்” என்பதைவிட, “வெறி” என்பதே பொருத்தமாகும்.
ஆமாம் ; அக்காளை நோக்கி வெறியோடு பாய்ந்தாங்க அம்மா. கண்கள் இரண்டும் சிவப்பேற, “கொலை வெறி” என்பார்களே, அதை இப்போதுதான் அம்மாவிடம் பார்த்தேன்.
அம்மாவின் இரண்டு கைகளும், ஏக காலத்தில் அக்காளின் கழுத்தைப் பற்றின.
“ஏட்டி…… எடுபட்ட செருக்கி முண்டை….. உன்னையெல்லாம் பொறந்த வூட்டுக்குள்ளயே கொண்ணிருந்தா நான் எப்பவுமே சந்தோசமா இருந்திருப்பேன்…. ”
மறுகணம் யாருமே எதிர்பார்க்கவில்லை. அம்மாவின் தலை மயிரைப் பற்றிப் பிடித்தாள் அக்காள்.
“கெழட்டுச் செருக்கி…. இந்த வயசிலயே ஒனக்கு இத்தனை “தில்” இருந்தா, ஒன்னய விடச் சின்னவ எனக்கு , எப்பிடி “தில்” இருக்கும்…. பாரு….”
இதற்குமேல் பொறுமையாயிருக்க என்னால் முடியவில்லை. வலது கைப் பக்கமிருந்த கைத்தடியை எடுத்து, தலை கீழாகப் புரட்டி, கால்ப்புறத்து விளிம்புப் பகுதியை கையிலே இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, நன்றாக ஓங்கி, எனது பலம் அனைத்தயும் ஒன்று திரட்டி, அக்காள் முதுகிலே ஒரு “போடு”போட்டேன்.
“ஐயையோ………………”
அலறியபடி எனதுபக்கம் திரும்பினாள் அக்காள்.
அவளின் இரண்டு தொடைகளிலும் படுமாறு நன்கு குறிபார்த்து, அடுத்தடுத்து நாலைந்து “போடுகள்” போட்டேன். நிற்க முடியாமல் கீழே விழுந்தாள்.
அடுத்தகணம், எப்படித்தான் இத்தனை வேகம் வந்ததோ எனத் திகைக்கும் வண்ணம், என் மீது பொங்கிப் பாய்ந்தார் அத்தான்.
அவரது வலதுகரம், என் கழுத்தைப் பற்றியது.
“ஏண்டீ …… சின்னக் கழுதை….. ஆத்தாளும், பொண்ணுமா மாறி,மாறி அடிக்கிற அளவுக்கு என் பொண்டாட்டி ஒங்களுக்கு கிள்ளுக்கீரை ஆகிட்டாளா…. ஒன்னய கொல்லாம விடமாட்டேன்….”
சொல்லியபடி, பக்கத்திலேயிருந்த சமையல் அறைப்பக்கம் இழுத்துச் சென்றார்.
கதவின் உள்ப்புறத்தே சுவரிலே ஆணியடித்து மாட்டப்பட்டிருந்த பிரம்பு அவரது கைக்கு வந்தது. அவர்களது மகன் அவ்வப்போ சேட்டைகள் பண்ணும்போது, அடிப்பதற்காக அக்காள் வாங்கிவைத்தது அது.
அத்தானுக்கு இருந்த கோபத்துக்கு, என்னை அடித்துத் துவைத்து தொங்கப் போட்டுவிடுவார் என்றே நினைத்தேன். அவரோ என் காதருகே வந்து மெதுவாகப் பேசினார்.
“என்னால செய்ய முடியாததை நீ செய்து முடிச்சிட்டே ….. இதை நீ எப்பவோ பண்ணியிருக்கலாம்…. நான் இப்போ இந்தப் பிரம்பால தரையில அடிக்கப் போறேன்…. நீ சத்தமா, உங்க அக்காளுக்கும், அம்மாவுக்கும் கேக்கிறமாதிரிக் கத்தணும்…. அடுத்து முக்கியமான சமாச்சாரம், உங்கக்காளை தூக்கிக்கிட்டுப் போய், ஆஸ்பிட்டல்ல ஒருமாசத்துக்கு இருக்கிறமாதிரி அட்மிட் பண்ணப் போறேன்…. அம்மாகிட்ட சொல்லி, ஒரு மாசத்துக்குள்ள கலியாணத்த நல்லபடியா முடிச்சிடச் சொல்லு….. கலியாணத்துக்கு என்னையெல்லாம் எதிபாக்காத….. வர முடிஞ்சாத்தான் வருவேன்….. எப்பவும் உனக்கு என் ஆசி இருக்கும்…. சரியா……”
வேக வேகமாக சொல்லிவிட்டு, பிரம்பாலே தரையைப் பதம் பார்த்தார். சமையலறை அதிரும்படி அலறினேன் நான்.
விவரம் தெரியாத அம்மாவோ,
“அடிக்காதீங்க மாப்பிளை……..’’ என்று அலறியபடி வந்து, என்னை வெளியே கூட்டி வந்தாங்க.
மறுகணம், மிக வேகமாக வந்த அத்தான், எழுந்து நிற்கமுடியாமல் துடித்துக்கொண்டிருக்கும் அக்காளைத் தூக்கி, எங்கள் காரின் பின் சீட்டிலே கிடத்திவிட்டு, வண்டியை ஸ்ராட் பண்ணப்போனவர்…..
“அடடா …… சாவியை மறந்துபோயி டேபிள்ளையே வெச்சிட்டு வந்திட்டேன்…… ஒரே நிமிசம்….. எடுத்திட்டு வந்திடுறேன்…..”
சொல்லியபடியே வீட்டுக்கு ஓடிவந்தார். வேகமாக வந்த அத்தான், என்னையும், அம்மாவையும், சமையல்காரப் பையனையும் ஒன்றாக வைத்து என்னிடம் சொன்ன சமாச்சாரம் ;
“எந்தக் காரணம் கொண்டும், உங்கக்காவுக்கு நீ அடிச்ச சமாச்சாரம் மாப்பிளை வீட்டுக்காரங்களுக்குத் தெரியக்கூடாது..... உங்கக்காவைப்பத்தி அவங்களுக்கு ஏற்கனவே தெரியும்னாலும், இப்ப நடந்த சம்பவத்த அறிஞ்சா, நியாய - அநியாயத்தப்பத்தி ஆராச்சி பண்ணமாட்டாங்க….. உன்னயபத்தி மனசில ஒரு தப்பான எண்ணத்த வளத்துக்குவாங்க….. அதோட விளைவு எப்பிடியிருக்குமோ சொல்ல முடியாது…..மாடிப்படியில இறங்கும்போது, கால் சிலிப்பாகி விழுந்திட்டாங்கன்னு மட்டுந்தான் சொல்லணும்….. புரியிதா…..”
அதுவரை எங்கோ போயிருந்த அவர்களது மகன், புறப்படும் நேரத்தில் சரியாக வந்து வண்டியில் ஏறிக் கொண்டான்.
அம்மா என்னைத் துரிதப்படுத்தினாக.
“ இந்தப் பீடைகிட்ட பேசாமலே இருந்திருக்கலாம்போல தோணுது எனக்கு….. டைமை பாரு…. எட்டு ஆவுது….. சீக்கிரமா போயி குளிச்சிட்டு, நல்ல சாறியா ஒண்ணைக் கட்டிக்கிட்டு வா.......”
எங்களைவிட , சமையல்காரப் பையன் வெகு துரிதமாகத் துள்ளிக் குதித்துக் குதூகலித்தான்.
அம்மாவின் பார்வை அவன்மீது விழுந்தது.
“நாங்க குளிச்சிட்டு வந்த கையோட சுடச்சுடக் காப்பி ரெடியா இருக்கணும்….. புரிஞ்சிச்சா…….”
அடுத்து, அவன் பேசிய பதிலை யாருமே எதிர்பார்க்கவில்லை.
“இப்போ என்னால ஒண்ணும் பண்ண முடியாதும்மா….. இண்ணைக்கு எங்க குட்டியம்மாவ பொண்ணுபாக்க வர்ராங்க இல்லியா….. அப்போ நான்மட்டும் அழுக்கா நிண்ணா, வர்ரவங்க என்னயபத்தி என்ன நெனைப்பாங்க….. இப்பவே நானும் வாய்க்காலுக்குப் போயி, ஒரு கட்டி சோப்பும் தேயிற அளவுக்கு நல்லா தேச்சுக் குளிச்சிட்டுத்தான் வருவேன் பாருங்க….. காப்பிய நீங்களே போட்டுக்குங்க…..”
எங்கள் பதிலுக்கு எதிர்பாராமல், துடைக்கும் டவல் துண்டை எடுத்துக்கொண்டு கால்வாய் பக்கம் ஓடினான்.
“கிறுக்குப் பயல்….. என்னவோ இவனை மாப்பிளை பாக்க, பொண்ணு வீட்டுக்காரங்க வாறமாதிரி ஓடுறான் பாரு……”
சிரித்தபடி பேசினாங்க அம்மா.
அவன் மனதிலுள்ள மகிழ்ச்சியை நினைத்துப் பார்க்கும்போது, என்னோடு கூடப்பிறந்தவள் துச்சமாகப் பட்டாள்.
“சரீம்மா….. குளிச்சிட்டுக் காப்பி போடுறப்ப அவனுக்கும் சேத்துப் போட்டுடுங்க…..”
மெதுவாக மாடிக்கு நகர்ந்தேன்.
[தொடர்ந்தேன்]

இம்முறையும் கனடா தேர்தல் முடிவுகள் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்குச் சாதகமாக வந்திருக்கின்றன. இப்படித்தான் வரும் என்று முன்பு எழுதிய கட்டுரையிலும் குறிப்பிட்டது போலவே, நடந்திருக்கின்றது. 170 ஆசனங்கள் இருந்தால்தான் இங்கு தனியாக ஆட்சி அமைக்க முடியும். லிபரல் கட்சிக்கு 156 ஆசனங்களே கிடைத்திருக்கின்றன. ஏனைய எதிர்கட்சிகள் கொள்கையின் அடிப்படையில் ஒன்றுசேர வாய்ப்பில்லை என்பதால், லிபரல் கட்சிதான் இம்முறையும் கனடாவில் சிறுபான்மை ஆட்சி அமைக்க இருக்கின்றது.

இது எந்த நாட்டில் நடந்தது என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எங்களுக்குப் புகலிடம் தந்து எங்களை அரவணைத்த கனடா நாட்டில்தான் நடந்திருக்கின்றது. புதைகுழிகள் என்றதும் எங்களுக்கு முதலில் ஞாபகம் வருவது தாயகத்தில் செம்மணிப் புதைகுழிதான். செம்மணியைத் தொடர்ந்து தாயகத்தில் ஏராளமான புதைகுழிகள் வரலாற்றில் பதியப்படாமல் மறைக்கப்பட்டுவிட்டன. யுத்த சூழலில் இன்னும் அனேகமான புதைகுழிகள் அடையாளம் காட்டப்படாமலே இருக்கின்றன. இரண்டு தலைமுறை போனால் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்ற நினைப்பில் எல்லாமே மூடிமறைக்கப் பட்டிருக்கின்றன. காலம்கடந்தாலும், மறைக்கப்பட்ட யுத்தகாலப் புதைகுழிகள் ஒருநாள் தோண்டப்படும் போது பல உண்மைகள் தெரிய வரலாம். ஆனால் இதற்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதற்குக் குற்றம் புரிந்தவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தினம் தினம் எதிர்கொள்ளும் வலியும், வேதனையும் யாருக்கும் சொல்லிப் புரியப்போவதில்லை. சொந்த மண்ணைப் பறிகொடுத்த, எங்களுக்கு ஏற்பட்ட அதே வலியைத்தான் இங்கே உள்ள முதற்குடி மக்களும் எதிர் கொள்கிறார்கள். ஆனால் இங்கு ஜனநாயக கோட்பாடுகள் பின்பற்றப்படுவதால், உண்மையை ஓரளவாவது கண்டறிய முடிகின்றது. 2008 ஆம் ஆண்டு கனடா பிரதமர் இப்படி நடந்தற்காக முதற்குடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டார். தற்போதய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கத்தோலிக்க திருச்சபை இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கனடிய மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் இழப்பு இழப்புத்தானே!
தமிழகச் சட்ட மன்றத்தேர்தலில் திமுக கூட்டணி இதுவரை வெளியான முடிவுகளின்படி 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. இதன் மூலம் தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் தெரிவாகியிருக்கின்றார். இத்தேர்தலின் மூலம் ஸ்டாலினின் நீண்டநாட் கனவு நனவாகியிருக்கின்றது. தேர்தலில் அ.தி.மு.க தோற்றாலும் ,வலிமையான எதிர்கட்சியாக உருவாகியிருக்கின்றது. அதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் தனது தலைமையைத் தப்ப வைத்துள்ளார்.
இன்று (ஏப்ரில் 24) டேவிட் ஐயா (எஸ்.ஏ. டேவிட் ஐயா) அவர்களின் பிறந்ததினம். அவரது பிறந்த தினத்தையொட்டி 'டேவிட் ஐயா வாழ்வும் மரணமும் (1924 - 2015) ' என்னும் தலைப்பில் காணொளியொன்று உருவாகியுள்ளது. 2012இல் உருவான காணொளி. இரு பகுதிகளைக் கொண்டது. சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அசோக் (யோகன் கண்ணமுத்து) அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் உருவான காணொளியை இயக்கியவர் டி. அருள் எழிலன். காணொளிக்காக டேவிட் ஐயாவை நேர்காணல் செய்தவர் எழுத்தாளர் சயந்தன்.
யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்ட நீலகிரி படகர் இன மக்களின் பூர்வகுடித் தன்மைக்குரிய, அவர்களின் பல்வேறு தனிக்கூறுகளுள் நீலகிரியைப் பற்றிய நிலவியல் அறிவும் இன்றியமையான ஒன்றாகும். நீலகிரியில் உள்ள பெரும்பான்மையான இடங்கள் படகர்களால் பெயரிடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அப்பெயர்கள் படகர்களின் தனித்திராவிட மொழியான படகு மொழியின் தொன்மையினை விளக்குவனவாகத் திகழ்கின்றன.

Antonio Gramsci தென் இத்தாலியின் ஸார்டினியாவை சேர்ந்தவர். நெப்போலியனின் பிரெஞ்சு பேரரசு தகர்ந்த பின் சுதந்திரமடைந்த ஸார்டினியா 1861 ல் ஐக்கிய இத்தாலியின் பகுதியாக சேர்க்கப்பட்டது. ஐரோப்பிய பிற்போக்கின் குறியீடாக, மூர்க்கத்தனமான சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் பெயர்போன நிலப்பிரபுத்துவ முறையையும் ஒடுக்குமுறை யந்திரங்களையும் கொண்டிருந்த அரசின் கீழ் இருந்தது. பிரான்ஸ்கோ கிராம்ஷி, ஜியுஸெப்பினா மார்ஸியாஸ் இணையருக்கு நான்காவது குழந்தையாக பிறந்தவரே அந்தோனிய கிராம்ஷி ஆவர்.1897 ல் நடந்த இத்தாலிய நாடாளுமன்ற தேர்தலின் போது பிரான்ஸ்கோ கிராம்ஷி ஊழல் செய்த ஒருவரை எதிர்த்து போட்டியிட்ட இளம் வேட்பாளரை ஆதரித்த காரணத்தால், கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்தார் என்ற பொய்யான வழக்கு தொடரப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏழு குழந்தைகளுடன் அந்தோனிய கிராம்ஷியின் தாயார் மிகவும் மோசமான வறுமையில் இரவுபகல் ஓய்வொழிச்சலின்றி உறக்கமின்றி ஆடைகள் தைத்து விற்று பணம் ஈட்டுகிறார். கிராம்ஷி சிறையில் இருக்கும்போது தாயார் பற்றி கீழ்க்கண்டவாறு நினைவு கூறுகிறார். 
அகிலன் வேலைக்கு அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மெல்பேர்ண் நகரத்திலுள்ள வைத்தியசாலையில் வைத்தியராகப் பணி புரிகின்றான். வழக்கமாக காலை ஆறுமணிக்கெல்லாம் கிழம்பிவிடுவான்.
சுப்ரபாரதிமணீயனின் இரு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியீடு கோவையில் வெள்ளி அன்று கோவை பீளமேடு கிளஸ்டர் மீடியா கல்லூரியில் நடைபெற்றது. மாலு மற்றும் 1098 என்ற திருப்பூர் வாழ் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் நாவல்கள் Notch, 1098 என்ற பெயர்களில் மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன Notch நாவலை கோவையைச் சார்ந்த பேரா .பாலகிருஷ்ணன் மொழிபெயர்த்துள்ளார்.
படித்தவர்கள் பலர் பிற நாடுகளில் வாழ்ந்து , தம் பொருள் வளம் பெருக்குவதையே நோக்காகக்கொண்டு வாழ்கையில், இவர் தான் கற்றதை, அறிந்ததைத் தன் மண்ணுக்கு வழங்குவதற்காக வந்தார். தன் மண்ணின் அனர்த்தங்களை எதிர்கொண்டு , சமூக, அரசியல் ரீதியிலும் அவற்றைக் களையத் தன் பங்களிப்பினைச் செய்தார். அதற்கு இவருக்கு எம் மண் கொடுத்த பரிசு? தூக்கிப் போற்றிப் பாதுகாத்திருக்க வேண்டிய மண் புழுதியிலே போட்டு மிதித்துச் சீரழித்தது. எம் மண்ணின் வரலாற்றின் அவமானம் இம்மண்ணின் மகளின் மடிவு! முடிவு! தானிழைத்த வரலாற்றுத் தவறினை, இவரை நினைவில் வைப்பதன் மூலம் ஓரளவு தீர்த்துக்கொள்கிறது. எந்தக் கல்வி நிலையத்துக்காக இவர் தன் வாழ்வையே அர்ப்பணித்தாரோ அந்தக் கல்வி நிலையம் இதுவரை இவரை நினைவு கூர்ந்திட என்ன செய்தது? ஒரு சிலை கூட வைத்ததா? நினைவு கூர்ந்ததா? மிகவும் வெட்கக்கேடான விடயமென்னவென்றால் .. இவரிடம் கல்வி கற்றவர்களில் சிலரே இவரின் முடிவுக்கும் காரணமாக இருந்தார்களென்ற தகவல்கள்தாம்.
தேனீ இணைய இதழ் ஆசிரியரும் , சமூக ,அரசியல் செயற்பாட்டாளருமான 'ஜெமினி கங்காதரன்' அவர்கள் மறைந்த செய்தியினை முகநூல் நண்பர்கள் மூலம் அறிந்தேன். துயருற்றேன். தனி ஒருவராக, தன் உழைப்பை முழுமையாக வழங்கி இணைய இதழொன்றினை நடத்துவதிலுள்ள சிரமங்களையும், கடும் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பினையும் நான் அறிவேன்.அதனால் அவர் மேல் வேறெந்த விடயத்தையும் விட மிகுந்த மதிப்புண்டு. அண்மையில் பதிவுகள் இணைய இதழில் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் ஜெமினி அவர்கள் பற்றி எழுதியபோதுதான் முதன் முதலில் அவர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்தேன். அக்கட்டுரையினை இங்கும் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும் சர்வதேச ரீதியாக மதிக்கப்படும் ''மாஓ பாதை” கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிரேஸ்ட ஆலோசகராக விளங்கியவருமான தோழர் என். சண்முகதாசன் பிறந்து நூறாண்டுகளாகின்றன. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோதே பல்கலைக்கழகப் படிப்பைமுடித்து வெளியேறி கட்சியின் முழுநேர ஊழியனாகச் சேர்ந்துகொண்ட தோழர் நா. சண்முகதாசனின் அரசியல் வாழ்வு இலங்கைப் பொதுவுடமை இயக்கத்துடன் சமாந்தரமானது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஸ்ராலின் – ரொட்ஸ்கி தத்துவார்த்தப் பிரச்சினை எழுந்தபோதும் பின்னரும் ஸ்ராலின் கொள்கைகளை வலியுறுத்தி முன்னெடுத்து தோழர் சண் புகழ்பெற்றார். அன்று வலிமைமிக்க தொழிற்சங்கமாக விளங்கிய இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக விளங்கினார். 1953 -ம் ஆண்டு ஆட்சியை ஆட்டங்காணவைத்த 'கர்த்தாலை' வெற்றிகரமாக நடாத்த முக்கிய பங்களித்தவர்.
'மீண்டுமொரு தலித் இனத்து பதின்ம வயதுப் பெண்ணொருத்தியை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நான்கு பேர் கூட்டாகப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி, முதுகெலும்பை உடைத்து, நாக்கை அறுத்து, கால்களை அடித்து , உடைத்துத் துன்புறுத்தியுள்ளனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப்பெண் இறந்திருக்கின்றார். பொலிசார் அப்பெண்ணின் குடும்பத்தவருக்குக் கூட அறிவிக்காமல் அப்பெண்ணின் உடலை எரித்து இறுதிச்சடங்கை முடித்துள்ளார்கள். '
இலங்கையில் நிலவும் அரசியற் சூழல் திருப்தி தருவதாகவில்லை. ஏற்கனவே நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. சத்தியாக்கிரகங்கள், ஹர்த்தால்கள் என்று ஆரம்பித்து , ஆயுதப்போராட்டத்தில் தொடர்ந்து பேரழிவுடன் முள்ளி வாய்க்காலில் முடிவடைந்த யுத்தம்தான் நினைவுக்கு வருகின்றது. இன்று யுத்தம் முடிந்து 11 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அனைவரும் கடந்த காலத்தை மறந்துவிட்டார்களோ என்று நினைக்கத்தோன்றுகின்றது. மீண்டும் அரசியல்வாதிகள் தம் இருப்பைத் தக்க வைப்பதற்காக உணர்ச்சி அரசியலில் இறங்கி விட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது. மீண்டும் நிலை பழைய யுத்தச்சூழலுக்குச் செல்லாமலிருக்க வேண்டுமென்றால் பின்வரும் விடயங்கள் நடைபெற வேண்டும்:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் நாவிதன்வெளிப் பிரதேசசபைத் தவிசாளர் தவராசா கலையரசனுக்கு வழங்கப்பட்டது. இலங்கை அரசு வெளியிட்ட அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் கூட்டமைப்பின் நல்லதொரு முடிவு. தமிழ் உறுப்பினர்களற்ற அம்பாறைக்கு இதன் மூலம் தமிழ் உறுப்பினரொருவர் கிடைத்துள்ளார்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









