ஊடக அறிக்கை: இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை இலங்கை அரசு உறுதி செய்திட வேண்டும்

30.11.2019
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை
இலங்கை அரசு உறுதி செய்திட வேண்டும்
ராஜபக்சே அரசின் அதிகார வர்க்க, மக்கள் விரோதப் போக்கின் காரணமாகவே 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியடைந்து புதிய கூட்டணி அரசு ஏற்பட்டது. ஏற்பட்ட புதிய அரசு மக்களுக்கு அளித்த குறிப்பாக, தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இலங்கையின் பொருளாதாரம் நிலைகுலைந்து போனதுடன், இவ்வாட்சியாளர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சேர்ந்து ராஜபக்சே சகோதரர்கள் மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.
நாமலின் அரசியல் முதிர்ச்சியும், கோ.ரா.வின் அரசியல்முதிர்ச்சியின்மையும்.
ஜனாதிபத்தேர்தல் முடிந்த கையோடு மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்சவின் கருத்துகளை உள்ளடக்கிய பதிவொன்றினை இணையத்தில் வாசித்தேன். அதிலவர் கூட்டமைப்பின் பேச்சையும் மீறித் தம் கட்சிக்கு வாக்களித்த தமிழ் மக்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாகவிருந்தது. அரசியல் முதிர்ச்சியுள்ள தலைவர் ஒருவரே இவ்விதம் கூறக்கூடும். சென்ற தடவையை விட இம்முறை தம் கட்சிக்கு வாக்குகள் குறைந்திருப்பினும், அதனை நோக்காது, கிடைத்த வாக்குகளை மையமாக வைத்து ஆரோக்கியமாக அணுகிய நாமலின் ஆளுமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் அடுத்து அநுராதபுரத்தில் பதவியேற்ற கோத்தபாயா ராஜபக்சவோ , பதவியேற்பு வைபவத்தில் தான் சிங்கள பெளத்த வாக்குகள் மூலம் மட்டுமே வெற்றிவாகை சூடியதாகக் கூறியதாக இணையச் செய்திகள் தெரிவித்தன. தமிழ் மக்களும் தம்முடன் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் கூடவே கூறியிருந்தார். கோ.ரா.வின் அரசியல் முதிர்ச்சியின்மைக்கு இக்கூற்றுகள் எடுத்துக்காட்டுகளாகும்.
தமது பதவியேற்பு வைபவத்தில் கோ.ரா செய்த முக்கியமான தவறுகளாக நான் கருதுவது:
1. அநுராதபுரத்திலிருந்து அரசாண்ட தமிழ் மன்னனான எல்லாளனைப்போரில் கொன்ற துட்டகாமினி கட்டிய தூபியான ரூவன் வெலிசாயவில் தனது பதவியேற்பு வைபவத்தை நடத்தியது. இதன் மூலம் அவர் கூற விழைவதுதானென்ன? நவீன துட்டகாமினி தானென்று கூறுகின்றாரா? நவீன எல்லாளனான வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போரில் கொன்று வெற்றிவாகை சூடியதைக் குறிக்குமொரு குறியீடா மகாதூபி ரூவன்வெலிசாய. கோ.ரா.வும் அவர் கீழிருந்த இராணுவத்தளபதிகள் பலரும் யுத்தத்தில் யுத்தக்குற்றங்கள் பலவற்றைப் புரிந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சமயத்தில் தமிழ் மக்களை எள்ளி நகையாடும் நோக்கில் இவ்வைபவத்துக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டதா?
இலங்கை ஜனாதிபதித்தேர்தல் முடிவுகள் பற்றி....

இலங்கையின் பெரும்பான்மையின மக்கள் தமது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சவைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். அதே சமயம் சிறுபான்மையின மக்கள் சஜித் பிரேமசாசாவைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
இன, மத மற்றும் மொழிரீதியாகப் பிளவுண்ட இலங்கையில், ஓரினத்தின் ஜனாதிபதியாக கோத்தபாயா ராஜபக்ச வென்றிருக்கின்றார். சிறுபான்மையின மக்களுட்பட நாற்பத்தொரு வீத மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். அதே சமயம் 52.51 வீத மக்கள் (6,883,620) அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். இனவாதத்தை அள்ளி வீசி, தென்னிலங்கையில் சிங்கள மக்களை இனரீதியாகத் தூண்டி பெரு வெற்றியினைக் கோத்தபாயா பெற்றிருக்கின்றார். இலங்கையின் பெரும்பான்மையின மக்களைப்பொறுத்தவரையில் இலங்கையில் அவர்கள் இனரீதியாக ஒடுக்கப்பட்டு வாழ்பவர்களல்லர். அவர்களில் பலர் சிறுபான்மையினர் அடையும் துன்பங்களை இன்னும் அறிய முடியாதிருப்பது துரதிருஷ்ட்டமானது. தமிழர்களுக்கு அதிக உரிமைகளைப்பெற்றுக் கொடுத்து விடுவார் சஜீத் என்று இனவாதத்தைக் கக்கித் தென்னிலங்கையில் அமோக வெற்றி பெற்றிருக்கின்றார் கோத்தபாயா ராஜபக்ச. இவரது வெற்றி இனவாதத்துக்குக் கிடைத்த வெற்றி. அதே சமயம் 41.7% வீத மக்கள் (5,467,088) இனவாதத்துக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். அதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகள்!

தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகளும், அவற்றுக்கான ஒரே பதிலும்:
1. 2015ற்குப் பின்னர் உருவான ஜனநாயகத்துக்கான வெளி தொடர்ந்தும் விரிவு படுத்தப்பட வேண்டுமா? இல்லை மீண்டும் அதற்கு முன்பு நிலவிய இருண்ட யுகத்துக்குள் செல்ல வேண்டுமா?
2. இறுதி யுத்தத்தில் மானுடப் படுகொலைகளைப்புரிந்த ஒருவர், எதற்கெடுத்தாலும் சிறுபான்மையினரைப் பயமுறுத்திப் பணிய வைக்கும் ஒருவர், இன்றும் இனவாதம் பேசும் இனவெறியர்களுடன் ஒன்றிணைந்து இனவாத அரசியலை முன்னெடுக்கும் ஒருவர் , தனது அதிகாரம் நிலவிய காலகட்டத்தில் வெள்ளைவான் கலாச்சாரத்தால் பல்லினச் சமூகங்கள் மீதும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்ட ஒருவர், நாட்டின் அரசியல் சட்டங்களை மதிக்காத ஒருவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா?
நினைவு கூர்வோம்: த.விமலேஸ்வரன்
யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்புச் செயற்குழுத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய த.விமலேஸ்வரனை நினைவூட்டிய முகநூல் உரையிது. இதனை முகநூலில் முகநூல் நண்பர் Sam Mer பகிர்ந்திருந்தார். இந்த உரையினை யாழ் பல்கலைக்கழக வணிக பீட மாணவனான மட்டக்களப்பைச் சேர்ந்த அ.விஜிதரன் கடத்தப்பட்டபோது அவரது விடுதலைக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று திரண்டு போராடினார்கள். பாத யாத்திரை மேற்கொண்டார்கள். சாகும் வரையிலான உண்ணாவிரதமிருந்தார்கள். யாழ் நகரிலிருந்து வெளியான பத்திரிகைகளிலெல்லாம் விஜிதரனின் கடத்தலும், அவரது விடுதலைக்காக நடத்தப்பட்ட போராட்டங்களும் முக்கிய இடத்தைப்பிடித்தன.
மாணவன் விஜிதரனுக்காக நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் த.விமலேஸ்வரனும் ஒருவர். அப்போராட்டத்தின்போது விமலேஸ்வரன் ஆற்றிய உரையாக இதனை முகநூலில் பதிவு செய்த Sam Mer குறிப்பிட்டிருக்கின்றார். இந்த உரைக்கான ஆதாரத்தையும் குறிப்பிட்டிருந்தால் அது ஆவணச்சிறப்பு மிக்கதாகவிருந்திருக்கும்.
இவ்வுரை விமலேஸ்வரன் என்னும் ஆளுமையினை நன்கு வெளிப்படுத்துகின்றது. இவரை நான் நேரில் அறிந்ததில்லை. ஆனால் பத்திரிகைச் செய்திகள் வாயிலாக, நண்பர்கள் கூற்றுகள் மூலமே அறிந்திருக்கின்றேன். 1963இல் பூநகரியில் பிறந்தவர். ஆரம்பத்தில் காலம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயற்பட்டிருக்கின்றார். தொடர்ந்தும் சமூக, அரசியற் செயற்பாடுகளில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்தி வந்திருக்கின்றார். இவரைப்போன்ற மானுட உரிமைப்போராளிகளை நினைவு கூரவேண்டிய காலகட்டமிது. நினைவு கூர்வோம்.
PHRE condemns the violation of a court order by Gnanasara Thera and urges the IGP and AG to investigate
People for Human Rights and Equality Inc. (PHRE)
Reg. No. A0037233S
E-mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். Web: www.phre.org.au
PHRE condemns the violation of a court order by Gnanasara Thera and urges the IGP and AG to investigate
The People for Human Rights and Equality (PHRE) is dismayed to learn of the actions led by Galagoda Aththe Gnanasara Thera that lead to the final rites of Ven. Kolamba Medhalankarakkhitha Thera being performed adjacent to the tank of the Nayaaru Temple at Chemmalai Mullaitivu. Gnanasara Thera and other monks had carried out the final rites despite a court order by the Mullaitivu Magistrate’s Court prohibiting the cremation of Ven. Kolamba Medhalankarakkhitha Thera’s body within the temple grounds. Moreover, local police officers who were present at the site refused to enforce the court order and instead enabled the cremation to take place. The cremation of a body within temple grounds is deemed sacrilegious according to Hindu customs and the incident has sparked widespread anger and protest.
The above incident is not the first time that Galagoda Aththe Gnanasara Thera has engaged in conduct that amounts to contempt of court. In 2018, he was convicted of contempt of court charges and sentenced to serve a six-year prison term by the Court of Appeal. The contempt of court charges related to his actions that included the threatening of Hon. Magistrate of Homagama and a senior officer of the Attorney General’s Department. Gnanasara Thera received a presidential pardon in February this year and was released from custody. Members of the legal profession and the general public decried the presidential pardon, arguing that such a move undermines the rule of law in Sri Lanka. The recent actions of Gnanasara Thera in Mullaitivu in blatant violation of court order serves to only reinforce his gross unsuitability to receive a pardon.
புத்தர் உகுத்த கண்ணீர்!
முல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி மறைந்த புத்த துறவியின் உடலைத்தகனம் செய்திருப்பது நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கச் சூழலைச் சிதைக்கும் ஒரு நிகழ்வு. எழுபதுகளில், எண்பதுகளில் தமிழ் இளைஞர்கள், தமிழ் மக்கள் இலங்கையின் சட்டங்கள் தம்மைப் பாதுகாக்கவில்லை. பாரபட்சத்துடன் தம்மை அணுகுகின்றன என்று எண்ணினார்கள். இனக்கலவரங்கள், ஆயுதப்படைகளின் அடக்குமுறைகள் அவர்களை ஆயுதமேந்த வைத்தன. விளைவு நீண்ட யுத்தம். இன்று யுத்தம் மெளனிக்கப்பட்டு ஆண்டுகள் பத்தைக் கடந்த நிலையில் தமிழ்ப்பகுதிக்குள் தன் ஆதரவாளர்களுடன் நுழைந்த புத்த மதத்துறவிகள் நீதி மன்ற உத்தரவையும் மதிக்காமல் இறந்த புத்த பிக்குவின் உடலைத்தகனம் செய்திருக்கின்றார்கள். காவல் துறை பார்த்துக்கொண்டிருக்கின்றது.
இதற்கெதிராக நீதிமன்றத்தை நாடி நடந்தவற்றுக்கு நீதி கிடைக்க வேண்டும். சட்டத்தை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவல் துறையினர் உட்பட. இலங்கையின் சட்டமானது அனைவரையும் பாரபட்சமில்லாமல் நடத்துகின்றது என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.
நடந்தவற்றுக்கு நீதி கிடைக்காவிட்டால் இன்றுள்ள இளம் சமுதாயம் மீண்டும் போராடத்தொடங்கும் சூழல் உருவாகும். அடுத்தமுறை இனவெறிபிடித்த புத்தபிக்குகள் இவ்விதம் தமிழ்ப்பகுதிகளில் வெறியாட்டம் ஆடுகையில் அவர்கள் தாக்கப்படும் சூழல் உருவாகலாம். பதிலுக்கு அவர்களுக்கு ஆதரவாகப் படையினர் தமிழர்களைத் தாக்கலாம். தென்னிலங்கையில் இனக்கலவரங்கள் தொடங்கலாம். மீண்டுமொருமுறை இலங்கை போர்ச்சூழலுக்குள் தள்ளப்படலாம். இவ்விதமான சூழலுக்குள் நாடு மீண்டும் தள்ளப்படும் சூழலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற சட்டமீறல்கள் ஏற்படுத்தியுள்ளன. இதனால் நாட்டுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை அனைவரும் உணர வேண்டும். இவ்விதமான அபாயச் சூழல் ஏற்படாமலிருக்க நடந்தவற்றுக்கு இலங்கையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நிரூபிக்கப்பட வேண்டும். சட்டத்தை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இனவாதம் பேசிச் செயற்படும் புத்தமதத்துறவிகள் புத்த மதத்துக்குக் களங்கம் விளைவிக்கின்றார்கள். புத்தரின் கோட்பாடுகளுக்குக் களங்கம் விளைவிக்கின்றார்கள். இவர்களால் நாட்டில் இனங்களுக்கிடையில் ஏற்பட வேண்டிய நல்லிணக்கம் தடைபடுகின்றது. இலங்கையின் அனைத்தின மக்களும் , இன, மத, மொழி பேதமின்றி நடந்த சட்ட மீறலைக் கண்டிக்க வேண்டும். அதற்கு நீதி கிடைக்கப்போராட வேண்டும்.
முற்றுப் பெறாத உரையாடல்கள் – 10 - தொல்.திருமாவளவன் இரு நிகழ்வுகள் : வெளிப்படுத்தப் பட்ட பொய்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும்! தொல்.திருமாவளவனின் இலண்டன் நிகழ்வுகள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்!
தோழர் தொல்.திருமாவளவன் இங்கு இலண்டன் வந்தார். இரண்டரை நாட்கள் தங்கி நின்றார். இரண்டு விழாக்களில் பங்கேற்றார். இப்போது தாயகம் திரும்பி விட்டார். ஆனாலும் அவர் இங்கு வருவதற்கு முன்னரே ஆரம்பமாகிய சர்ச்சைகளும், சலசலப்புக்களும், அவர் மீதான அவதூறுகளும், அவரது இரு நிகழ்வுகளிலும் தொடர்ந்தன. இப்போது அவர் தாயகம் திரும்பி பல நாட்கள் ஆகிவிட்ட பின்பும் இன்னமும் தொடர்கின்றன. தொல்.திருமாவளவன் நாம் எல்லோரும் அறிந்த, நாடறிந்த, உலகறிந்த அரசியல் செயற்பாட்டாளர். விடுதலைச் சிறுத்தைகள் என்னும் அமைப்பினை உருவாக்கி தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் ஆதரவாக தொடர்ந்தும் குரல் எழுப்பி வரும் அவர், இப்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், மிக அண்மையில் முனைவர் பட்டத்தினை பெற்றுக் கொண்டவர். ஆரம்பம் முதலே ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு சக்தியாக விளங்கிய இவர், விடுதலைப்புலிகள் உடனும் அதன் தலைவர் வே.பிரபாகரனுடனும் என்றுமே நல்ல உறவினையும் நட்பினையும் பேணி வந்தவர். ஆயினும் ஈழவிடுதலைப்போரின் இறுதிக்கட்டத்தில் இவரது விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பானது, அன்றைய ஆளும் இந்திரா காங்கிரசுடனும், தி.மு.கழகத்துடனும் வைத்திருந்த உறவானது, ஈழமக்கள் பலராலும் முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு உடந்தையாக இருந்தவர் என்ற துரோக முத்திரையை அவர் மீது சுமத்தியிருந்தது. அத்துடன் இன்று ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் எழுச்சி பெற்ற இந்துத்துவா சக்தியானது இன்று அனைத்து சிறுபான்மை இனங்களையும் குழுக்களையும் ஒடுக்குகின்ற கால கட்டத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவு சக்தியாக விளங்கும் இவரையும் இவரது கட்சியினையும் கருவறுப்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது. அதிகாரங்களுடன் ஒத்தியங்கும் ஊடகங்களும் அவர் மீதான ஊடக மறைப்பினைச் செய்வதுடன் அவருக்கெதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைப்பதிலும் மிகத் தீவிரமாக இயங்கி வருகின்றன.
ராஜபக்சவின் மீள் எழுச்சியும், ஜனநாயகத்துக்கான ஆபத்தும்!
Rajapaksa redux and a democracy in peril ( 'ராஜபக்சாவின் மீள் எழுச்சியும் ,ஜனநாயகத்துக்கான ஆபத்தும்' ) என்னும் தலைப்பில் யாழ் பல்கலைக்கழகச் சமூக, அரசியற் துறை சிரேட்ட விரிவுரையாளரான அகிலன் கதிர்காமர். 'இந்து' ஆங்கிலப்பத்திரிகையில் கட்டுரையொன்று எழுதியுள்ளார். அது பற்றிய பதிவிது; அதற்கான பகிர்வும் கூட.தோழர் கார்த்திகேசன் நினைவாக....
- ஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம். அதனையொட்டிச் 'சக்கரம்.காம்' இணையத்தளத்தில் வெளியான கட்டுரையை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம்.- பதிவுகள். -
தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி, 2010 ஆம் ஆண்டு அவரது 33வது நினைவுதினத்தின் போது தோழர் சண்முகம் சுப்பிரமணியம் அவர்களால் எழுதப்பட்டு, 02.09.2010 இல் தினகரனில் வெளிவந்த கட்டுரை நன்றியுடன் மறுபிரசுரம் செய்யப்படுகின்றது. வடக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வேரூன்ற வைத்தவர்
‘கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்’ என இலங்கையின் வடபுலத்து மக்களாலும், ‘காத்தார்’ என யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர் சமூகத்தாலும் அன்புடனும், அர்த்தத்துடனும் அழைக்கப்பட்டு வந்த முருகுப்பிள்ளை கார்த்திகேசன் (மு.கா) அமரத்துவமடைந்து, இவ்வருடம் செப்ரெம்பர் மாதம் 10ம் திகதியுடன் 33 வருடங்கள் உருண்டோடிவிட்டன.
இந்த 33 வருடங்களில் அவர் பெரிதும் நேசித்து வந்த தமிழ் மக்களின் வாழ்விலும், உலக அரங்கிலும் எவ்வளவோ பிரமாண்டமான மாற்றங்கள் நிகழ்ந்தேறிவிட்டன.
இந்த மாற்றங்கள் நிகழ்ந்த போதெல்லாம், அவை பற்றி, கார்த்திகேசன் உயிருடனிருந்திருந்தால், என்ன கருத்துகளைக் கூறியிருப்பார், அவற்றுக்கு எத்தகைய தீர்வுகளை முன் வைத்திருப்பார், என்னென்ன நகைச்சுவைகளை அவிழ்த்திருப்பார் என, அவருடன் பழகிய பல்வகை மனிதர்களும் நிச்சயமாக ஊகங்களை வெளியிட்டிருப்பர்.
எமது மதிப்புக்குரிய ஆசானும், தோழருமான கார்த்திகேசன் 1919ம் ஆண்டு இப்பூமியில் அவதரித்து, 1977ல் இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவர் இப்பூவுலகில் வாழ்ந்தது மொத்தம் 58 ஆண்டுகள் மட்டுமே. சுமார் அரை நூற்றாண்டுகால இவ்வாழ்க்கையில், அவர் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றிலும், தமிழ் மக்கள் வாழ்விலும் பதித்து விட்டுச் சென்ற சுவடுகள் என்றும் காலத்தால் அழியாதவை.
உலக வரலாற்றில் சொற்ப காலம் வாழ்ந்தாலும், மனித சமுதாயத்துக்காக என்றென்றைக்குமாக தமது வாழ்வை அர்ப்பணித்துவிட்டுச் சென்ற, லெனின், சேகுவேரா, ஜூலியஸ் பூசிக், பகத்சிங், சுப்பிரமணிய பாரதி போன்றோரின் வரிசையில், எமது தேசத்தின் அழியாத சொத்தாக கார்த்திகேசனும் இருக்கிறார் என்பதை நாம் எவ்வித தயக்கமும் இன்றி பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்.
கார்த்திகேசன் தனது கல்லூரிப் படிப்பை மலேசியாவில் முடித்த பின்னர், தாயகம் திரும்பி இலங்கை பல்கலைக்கழக கல்லூரியில் ஒரு மாணவராகச் சேர்ந்து பட்டதாரியானார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலத்திலேயே அவர், ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளாலும், மார்க்சிய கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு, தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக வளர்த்துக் கொண்டார்.
Influence of Translated Works on Our Society
- (Dr Lionel Bopage was the founder leader of the Society for Socialist Culture, better known as “Samajavadee Kala Sangamaya” in Sri Lanka, the cultural front that is affiliated with the JVP (Janatha Vimukthi Peramuna). Lionel became the General Secretary of the JVP later, but in 1984 he officially resigned from the JVP due to the ideological and other differences developed with the leadership. In a collective effort with comrades like Nandana Marasinghe and Ms Sunila Abesekara, he brought “Vimukthi Gee” songs recital into life. Currently he is an activist in diverse social and political activities both in Sri Lanka and Australia.) -
Thank you for the invitation to speak at this important occasion. People are driven by a strong desire to know or learn why things happen in a certain way in a particular culture. Gradually this curiosity expands to looking at how those things happen in other cultures. That curiosity is filled at least partially by the content provided in translated works. With the advent and advancement of capitalism, translated works started filling the gaps in our knowledge base and improving our critical thinking abilities. I believe, the history of translated literature runs back to the times of arrival of Ven Mahinda Thero in Sri Lanka. At later stages, the teaching traditions in Buddhist temples would have been influenced by many inputs from Asian countries and the wisdom travellers and traders brought to the island.
The Buddhist revivalist movement came into being in reacting to the Christian missionary activities in the south. With that came the thoughts of civilizational supremacy of Sinhala people, which were later interpreted in a chauvinistic way. Anagarika Dharmapala declared that the Sinhala language was the best language of the world and the Sinhala civilisation was the noblest. We inclined to consider other languages and nations as inferior. Similarly, Arumuka Navalar, a Shaivite scholar and a polemicist led the Hindu revivalist movement.
Unfortunately, revivalist leaders like them lacked a wider vision for the future. They advocated safeguarding outdated practices such as accommodating the caste system. Most of the Indian leaders, such as Raja Ram Mohan Roy of the Hindu Revivalist Movement and Syed Ahamed Khan of the Muslim Revivalist Movement were quite different. They did not advocate the supremacy of their languages or faiths, but promoted social harmony and goodwill, and reconciliation and solidarity with the other. They advocated discarding outdated practices and rituals of their own faiths in adjusting to the environments of the modern-day.
We could note the lack of effort at the time to translate into Sinhala any renowned foreign literature related to arts, philosophy, science or technology. I will not comment on the Tamil side as I am not so familiar with it. So, no wonder we have such a long period of recent history filled with hatred towards the other, in terms of caste, language, race and religion.
The existence of different languages, religions and cultures in a mutually exclusive and disrespected environment can lead to conflict. Particularly, when political class and the social elite utilise the differences in diverse societies to securing their narrow interests and intricate privileges, no room is left for promoting social harmony and goodwill, reconciliation and solidarity with the other. The current situation in Sri Lanka shows this best. This is not limited to us in Sri Lanka. I hope things will not be in the reverse gear with what is being currently promoted in India.
Literary works including translated work is supposed to move people and societies away from ecstasy to wisdom. Accumulation of various linguistic and cultural translations to one’s own literature supports this process. Such accumulation makes reference to philosophical conceptualisations of other societies. Thus, the literature of a society becomes more nourished, and inevitably, people get accustomed to universal thinking.
மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் - லெனின்
- "மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் படைப்புகள்" என்னும் வலைப்பதிவொன்றினை எழுத்தாளர் A.K..ஈஸ்வரன் நடாத்தி வருகின்றார். "மார்க்சிய அடிப்படைகளை நூல்களாக எழுதுதல்" என்பதைத் தாரகமந்திரமாகக்கொண்டு இயங்கிவரும் தளமிது. அத்தளத்திலிருந்து இக்கட்டுரையினை மீள்பிரசுரம் செய்கின்றோம் மிகவும் பயனுள்ள மீள்பிரசுரம் என்பதால். -
(மார்க்சியத்தின் மூன்று பிரிவுகளான தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் என்பதின் தோற்றத்தையும், அதன் உட்கூறுகளையும் லெனின் மிகச் சுருக்கமாகவும், தெளிவாகவும் விவரித்துள்ளார். மார்க்சியம் எந்தவித குறுங்குழுவாதத்தின் அடிப்படையில் தோன்றியவை கிடையாது, உலக நாகரிக வளர்ச்சியின் தொடர்க்சியே மார்க்சியம். மனித குலத்தின் முன்னணிச் சிந்தைனயாளர்கள் ஏற்கெனவே எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மார்க்சியம் விடைகளிக்கிறது. மார்க்சியத்தை சுயமாக அறிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் இந்த சிறிய கட்டுரையை பலமுறை படிக்க வேண்டும். மார்க்சியத்தின் இந்த மூன்று உட்பிரிவுகளையும் தனித்தனியாக என்ன பேசிகிறது என்பதை மனதில் நிறுத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து மார்க்சிய ஆசிரியர்களின் நூல்களைப் படிக்கும் போது, அது எந்தப் பிரிவின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதை அறிந்து படித்தால் தெளிவுகிடைக்கும்.)
மார்க்சின் போதனை, நாகரிக உலெகங்கிலும் (அதிகாரத் தரப்பினதும், மிதவாதிகளதும் ஆகிய இரு வகையான) முதலாளித்துவ விஞ்ஞானம் அனைத்திடமிருந்தும் அளவற்ற பகைமையும் வெறுப்பையும் கிளப்பிவிடுகிறது. மார்க்சியம் ஒரு வகையான "நச்சுத்தன்மை கொண்ட குறுங்குழுவாதம்" என்று அது கருதுகின்றது. அதனிடமிருந்து வேறு எந்த விதமான போக்கையும் எதிர்பார்க்க முடியாதுதான். ஏனெனில், வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு சமுதாயத்தில் "ஒருசார்பற்ற" சமுதாய விஞ்ஞானம் எதுவும் இருக்க முடியாது. அதிகாரத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானம் அனைத்தும், மிதவாதிகளது விஞ்ஞானம் அனைத்தும் ஏதாவெதாரு விதத்தில் கூலி அடிமை முறையை ஆதரிக்கிறது. மார்க்சியமோ கூலி அடிமை முறையை ஈவிரக்கமின்றி எதிர்த்துப் போர்ப்பிரகடனம் செய்துள்ளது. மூலதனத்துக்குக் கிடைக்கும் லாபத்தைக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தலாமா என்ற பிரச்சினையில் முதலாளிகள் ஒருசார்பற்றவர்களாய் இருப்பார்களென எதிர்பார்ப்பது எப்படி அசட்டுத் தனமாகுமோ, ஏமாளித்தனமாகுமோ, அப்படித்தான் கூலி அடிமை முறைச் சமுதாயத்தில் விஞ்ஞானம் ஒருசார்ப்பற்றதாய் இருக்குமென எதிர்பார்ப்பதும் அசட்டுத்தனமாகும், ஏமாளித்தனமாகும்.
இது மட்டுமல்ல, தத்துவஞானத்தின் வரலாறும் சரி, சமுதாய விஞ்ஞானத்தின் வரலாறும் சரி, மார்க்சியத்தில் "குறுங்குழுவாதம்" போன்றெததுவும் கிடையாது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன. அதாவது, அது ஒரு இறுகிப்போன வறட்டுப் போதனையல்ல, உலக நாகரிக வளர்ச்கியின் ராஜபாட்டையின் வழியே வராமல் அதனின்று விலகி வேறொரு வழியே முளைத்த போதனை அல்ல. மாறாக, மனித குலத்தின் முன்னணிச் சிந்தைனயாளர்கள் ஏற்கெனவே எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மார்க்ஸ் விடைகள் தந்தார் என் பதில் தான் குறிப்பாக அவருடைய மேதாவிலாசம் அடங்கியுள்ளது. தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம், சோஷலிசம் ஆகியவற்றின் தலைசிறந்த பிரதிநிதிகளுடைய போதனைகளின் நேரடியான, உடனடியான தொடர்ச்சியாகத் தான் மார்க்சின் போதனை எழுந்தது.
மார்க்சின் போதைன மெய்யானது, அதனால்தான் அது எல்லாம் வல்ல தன்மை பெற்றிருக்கிறது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த வடிவத்திலும் அமைந்த மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது. ஜெர்மானியத் தத்துவஞானம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோஷலிசம் என்ற வடிவத்தில் 19ம் நூற்றாண்டில் மனித குலம் உருவாக்கித் தந்த தலைசிறந்த படைப்புகளின் உரிமை பெற்ற வாரிசுதான் மார்க்சியம்.
இவை மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களாகும், மூனறு உள்ளடக்கக் கூறுகளாகும். இவற்றைச் சுருக்கமாகக் கவனிப்போம்.
Colombo Telegraph: Six Degrees Of Separation: Sad Saga Of Premawathie & Isaipriya
Six degrees of separation is the theory that every person on this planet can be connected to any other person on the planet through a chain of people, places, events that has no more than five layers or intermediaries. Mathematicians and MIT professors have researched this theory and see some validity.
Premawathie Manamperi was a beautiful 22 year old Sinhala woman from Kataragama. If you don’t believe me about her beauty, let me tell you, she was crowned Avurudhu Kumari in April 1970. She was a pleasant happy girl coming from a modest home living with her parents and ten siblings. If you search the archives, you may come across pictures of her in black and white. Even the grey scale cannot hide her beauty. She was living at the time where there were no cell phones or the internet.
Shobana Dharmarajah, popularly known as Isaipriya was a beautiful 27 year old Tamil girl from Jaffna. Just search for her name and you will see why I call her a beauty. Unlike Premawathie, Isaipriya was fully immersed and grew up in the cell phone/internet era. Isaipriya was a media personality, a journalist and a broadcaster. The LTTE hired her to broadcast news from their network.
I feel connected to Premawathie – because I walked the same streets she walked on. I have been to Katharagama first as a child with my parents and have walked from Tissamaharama to Katharagama on many occasions. I ate bunnis and drank tea at the same tea boutiques where Premawathie ate bunnis and drank tea. Premawathie and I worshipped at the same Katharagama Devaley, the jungle shrine, with mystique rituals and practices. [proof of six degrees of separation]
I feel connected to Isaipriya – because she walked the same streets I walked on when she lived in Jaffna. She enjoyed ice cream at Subhas Café at the Jaffna main bus station where I would swing by for my fix of ice cream made with full cream milk, loaded with calories when I was a student in Jaffna. And to round off my connection to Isaipriya, she attended Vembadi Girls High School in Jaffna, a school my mother and my sister attended. [proof of six degrees of separation]
Now here comes the bombshell – a further proof of six degrees of separation.
I feel Premawathie and Isaipriya were connected. They both met their death in the hands of The Sri Lankan Army! Sri Lankan Army is the common link that connected Premawathie from the South and Isaipriya from the North.
They were both alive when they were picked up by the army, but soon thereafter they were both dead. Though their time line was thirty eight years apart, there is an eerie unity in their death! Unbeknownst to each other, they became sisters in their death and their sisterhood was facilitated by the Sri Lankan Army.
On April 5, 1971 Jathika Vimukthi Peramuna (JVP) launched a surprise attack on several police stations and government installations in the South with a view to overthrowing democratically elected government of Sirimavo Bandaranaike. Around mid April 1971 the army was deployed in the south of Sri Lanka to bring the JVP insurgency under control. There is no evidence that Premawathie was linked to the insurgency forged by the JVP. After several hours of interrogation by the army personnel Premawathie was stripped naked and was made to walk the streets of Katharagama and two army officers, Liutinent Wijesuriya of Gemunu Watch and private Ratnayake sprayed bullets into her with a sterling sub-machine gun. As she was crawling on the ground, still alive, she was picked up and buried alive in a pit in a vacant lot. Minutes later, another soldier from Wijesuriya’s unit came and put a bullet through her head and finished the job. [this gruesome narrative is straight from the court proceedings and evidence presented in court – by witnesses including civilians and soldiers]
There is no doubt that Isaipriya was a LTTE sympathizer and was doing broadcasts for the LTTE. During the final stages of the war still and video images show the soldiers took Isaipriya into custody in the Nandi Kadal area. Subsequent forensic examination showed that Isaipriya was shot in the head execution style and her body desecrated.
'சமாதானம்;, அகிம்சை மற்றும் சமத்துவத்திற்கான பெண்கள்' அமைப்பின் அறிக்கை!
முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறை - மே 2019 எமது கூற்று
இலங்கையில் நீதி, சமத்துவம், அர்த்தமுள்ள சமாதானம் ஆகியவற்றை நிலைநாட்ட செயற்படுபவர்கள் நாங்கள். முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறை எமது தீவின் பல இடங்களிலும் வெடித்துள்ள நிலையில ;இதனை எழுதுகிறோம். 13.05.2019 அன்று பள்ளிவாசல்கள், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான கடைகள் வடமேல் மாகாணத்தின் சிலாபத்தில் வன்முறைக் கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகின. நேற்றும் (14.05.2019) வட மேல் மாகாணத்தில் உள்ள கினியாம, கொட்டம்பிட்டிய போன்ற பல இடங்களில் வன்முறை நிகழந்ததை அறிகின்றோம். இவை இன்னும் தொடர்கின்றன.
தமிழருக்கு எதிரான வன்முறை நிகழ்ந்த பலநுறு உயிர்களைப் பலிகொண்ட 1983 கறுப்பு ஜூலை மாதத்தை எம்மில் பலர் முகம் கொடுத்து வாழ்ந்த அனுபவம் உடையவர்களாக உள்ளோம்;. பல ஆயிரம் உயிர்களைக் காவு கொண்ட உள்நாட்டுப் போhக்.கால கட்டத்திற்கு ஊடாக வாழ்ந்த கசப்பான அனுபவத்தை உடையவர்கள் நாங்கள், 2014 இல் அழுத்கமவிலும் கடந்த வருடம் திகணவிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நிகழ்ந்தபோது நாங்கள் பயத்துடன் இருந்தோம். ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நிகழ்ந்த வன்முறையால் இறந்தவர்களையும், காயம் அடைந்தவர்களையும் சிதைந்த குடும்பங்களையும் பற்றி ஆறாத துயரம் கொண்டவர்களாக உள்ளோம். சகல மனிதாபிமானத்துக்குமான விண்ணப்பமாக இந்த விண்ணப்பத்தை நாங்கள் எழுதுகிறோம்.
சகல இலங்கைப் பிரஜைகளையும் தத்தமது பெறுமதி, நம்பிக்கை சமயம், மனிதாபிமானம் பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள் என வேண்டுகி;றோம். என்ன விலை கொடுத்தாவது வன்முறைக்கு எதிராகச் செயற்படுமாறு சகல இலங்கை பிரஜைகளையும் வற்புறுத்தி வேண்டுகின்றோம். ஒருமித்த அரசியல் தலைமைத்துவத்துடன் வன்முறையை உடனடியாக ஒழித்து, பொறுப்புடமை நியாயம் ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் என எமது பிரதிநிதிகளை வற்புறுத்துகின்றோம். நிறுத்த முடியாத ஒரு யுத்தத்தை நோக்கிய பாதையில் மீண்டும்; அடி எடுத்து வைக்க மாட்டோம் என உறுதிபூணுமாறு சகலரையும் கேட்கி;றோம்
மேலும் மேலும் நிகழும் மரணங்களுக்காகத் துக்கம் அனுஷ்டிப்பதில் அர்த்தமில்லை. இவை நிகழ்ந்தபின் கூறுபவை வெற்றுரைகள் ஆகும். பாவத்திற்கு மன்னிப்பு கேட்கவோ உடந்தையாக இருந்தமைக்கு விளக்கம் அளிக்கவோ எம்மால் முடியாமற் போய்விடும்;. ஒரு தேசம் என்ற வகையில் இவ்வளவு கஸ்டங்களையும் அனுபவித்தும் இன்னுமொரு கறுப்பு ஜூலை நிகழ்வதைத்த தடுக்க முடியாவிட்டால் நாம் எதனைச் சாதித்தோம்? எங்கள் கூட்டுப் பிராத்தனையில் எல்லா மக்களையும் குறிப்பாக இத் தருணத்தில் வலுவற்றவர்களாக உணரும் அனைவரையும் உள்ளடக்குகிறோம். நாங்கள் வன்முறையை எதிர்த்துச் செயற்படுவோம். வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்வோம்!.
கண்டி ஃபோறம் விடுத்துள்ள அறிக்கை" பயங்கரவாதிகளுக்கு மதமும் இல்லை, மனிதமும் இல்லை
- கண்டி ஃபோறம் விடுத்துள்ள அறிக்கை" பயங்கரவாதிகளுக்கு மதமும் இல்லை, மனிதமும் இல்லை -
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் (21.04.2019) கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய நாட்டின் பலபகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்களையும் நட்சத்திர விடுதிகளையும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட, சுமார் 350 அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று 500 பேரை மோசமான காயங்களுக்கு உட்படுத்திய, காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை கண்டி ஃபோறம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
இப்பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் துரதிஷ்டவசமாக இலங்கை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறிய தீவிரவாத மதக்குழுவினர் என அடையாளம் காணப்பட்டதை அறிந்து நாம் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். இஸ்லாத்தில் பயங்கர வாதத்துக்கு இடமில்லை என்பதை நாம் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம். இஸ்லாம் சாந்திக்கும் சமாதானத்துக்குமான ஒரு மார்க்கமாகும். யாரேனும் ஒருவர் ஒரு மனிதரைக் கொன்றால் அது முழு மனிதர்களையும் கொன்றதற்குச் சமமானது என்றும், யாரேனும் ஒருவர் ஒரு. மனித உயிரைக் காப்பாற்றினால் அது முழு மனிதர்களையும் காப்பாற்றியதற்குச் சமமானது என்றும் குர்ஆன் அழுத்தமாகக் கூறுகின்றது (5:32). இதுதான் இஸ்லாம். பயங்கரவாதிகளுக்கு மதமும் இல்லை, மனித சமுதாயத்தில் இடமும் இல்லை. இந்தக் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதக் குழுவினர் இஸ்லாத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்றும், தங்கள் கருத்தியலிலும் செயற்பாடுகளிலும் அவர்கள் இஸ்லாத்துக்கு விரோதமானவர்கள் என்றும் நாம் வெளிப்படையாகக் கூற விரும்புகிறோம். இன்று பத்திரிகைகளில் தெரிவிக்கப்படும் செய்திகளின் அடிப்படையில் இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் என அழைக்கப்படும் ஒரு சர்வதேசப் பயங்கரவாதக் குழுவின் கையாட்களாகச் செயற்பட்டிருக்கலாம் என்று தெரியவருகின்றது. இப்பயங்கரவாதக் குழு மேலைத்தேய ஏகாதிபத்தியவாதிகளால் மத்தியகிழக்கில் மேற்கொள்ளப் பட்ட அழிவுச் செயற்பாடுகளின் ஒரு உபவிளைவாகும். அவர்களுடைய கருத்தியலும் செயற்பாடுகளும் இஸ்லாத்துக்கு எதிரானவைகளேயாகும்.
இப்பயங்கரவாதப் பேரழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எங்களது இதயம் நிறைந்த இரங்கலையும் அநுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எதிரான எந்தக் குற்றச்சாட்டுகளும் இதுவரை இருந்ததில்லை. இந்த நாட்டில் இதுகாலவரை இவ்விரு சமூகங்களுக்கும் இடையே எந்தவித மோதல்களோ முரண்பாடுகளோ இருந்ததில்லை. இந்த நிலையில்தான் முஸ்லிம்களுடன் அடையாளப்படுத்தப்படுகின்ற ஒரு பயங்கரவாதக் குழு அவர்கள் மீது பைத்தியகாரத் தனமாக ஒரு பேரழிவைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. அத்தோடு முழு முஸ்லிம் சமூகத்தையும் ஒரு பேரழிவுச் சூழ்நிலைக்குள்ளும் தள்ளிவிட்டிருக்கிறது. இத்தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தங்கள் அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவிப்பதோடு, அவர்கள் தங்கள் வாழ்வை மீளக் கட்டி எழுப்புவதற்கும் தங்கள் மன வடுவை ஆற்றுவதற்கும் சாத்தியமான எல்லா வழிகளிலும் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டுமென்று முஸ்லிம் சமூகத்தை நாம் வேண்டுகிறோம்.
குற்றவாழிகளுக்கும் அவர்களுக்குப் பின்னால் இருந்தவர்களுக்கும் எதிராக அவசியமான உறுதியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தையும் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளையும் நாம் வேண்டிக்கொள்கிறோம். அதேவேளை, கடந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம்தின் கீழ் நடந்ததாகக் கூறப்படும், நிலைமையை இன்னும் மோசப்படுத்தக்கூடிய, ஆதாரமற்ற சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்படும் காரணமற்ற கைதுகளைத் தவிர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துமாறும் நாம் அரசாங்கத்தை வேண்டிக்கொள்கிறோம்.
இந்த மண்ணிலிருந்து பயங்கரவாதத்தையும் இன மத வெறுப்பையும் இல்லாதொழிப்பதற்கும், பரஸ்பர புரிந்துணர்வையும், இனங்களுக்கும் மதங்களுக்குமிடையே நல்லுறவையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கும், தேசத்தைக் கட்டி எழுப்புவதற்கும், இலங்கைக்கான பிரகாசமான ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு சகல அரசியல் கட்சிகளுக்கும், பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத் தலைமைப் பீடங்களுக்கும், சிவில் சமூக நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் நாம் வேண்டுகோள்விடுக்கிறோம்.
இலங்கையின் துயரம்: குண்டு வெடிப்புகள் ஏற்படுத்திய பேரழிவு!

அண்மைக்காலமாக அமைதியாக விளங்கிய இலங்கையின் தலைநகரான கொழும்பிலும், கொழும்புக்கு அண்மையிலுள்ள நீர்கொழும்பிலும் , மட்டக்களப்பிலும் கிறித்தவ ஆலயங்களில் மற்றும் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹொட்டல்கள் சிலவற்றில் குண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கிறித்தவர்களின் புனித நாளான ஈஸ்ட்டர் ஞாயிறான இன்று நடைபெற்ற குண்டு வெடிப்புகள் மீண்டும் யுத்தச்சூழல் நினைவுகளையெழுப்புகின்றன. குண்டு வெடிப்புகள் கிறித்தவ ஆலயங்களிலும், கொழும்பிலுள்ள ஹொட்டல்களிலும் நடைபெற்றதாக இன்னுமோர் ஊடகம் தெரிவிக்கின்றது.
ஆட்சியைப்பிடிக்க முனைவதற்காகத் தீய சக்திகள் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைப் பாவித்து , நாட்டில் உறுதியற்ற நிலையினை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் பெற முயற்சிகள் செய்யக்கூடுமென்ற நிலையில், மத, இன வெறி பிடித்த அமைப்புகள் தம் சித்தாந்தங்களின் அடிப்படையில் ஆதாயங்கள் பெற இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கக்கூடுமென்ற நிலையில் இக்குண்டு வெடிப்புகள் மூலம் நாட்டில் உறுதியற்ற நிலை தோன்றாத வகையில் இலங்கை அரசு விரைந்து நடவடிக்கைகள் எடுக்குமென எதிர்பார்ப்போம். விரைவில் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான சக்திகளை இனங்கண்டு , நாட்டில் சட்ட ஒழுங்கினை நிலை நாட்டிட விரைவான , உறுதியான நடவடிக்கைகள் அவசியம்.
வெறுப்பும் வேரறுப்பும்
அமெரிக்காவில் 2017ஆம் ஆண்டு, வெறுப்புக் குற்றங்கள் (Hate Crime
s) 17 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக அந்த நாட்டின் மத்திய புலனாய்வுத்துறை கூறியிருப்பது, எம்மைப் பொறுத்தவரை, ஒரு புதினமல்ல! ஆனால், கனடாவில் 2017ஆம் ஆண்டு, வெறுப்புக் குற்றங்கள் 47 சதவீதத்தினால் அதிகரித்திருக்கின்றன என்பது கனடியர்களால் புறக்கணிக்கப்படக்கூடிய ஒரு செய்தியல்ல! கனடாவில் வெறுப்புக் குற்றங்கள் குறித்த முறைப்பாடுகள் பதிவுசெய்யப்படத் தொடங்கிய கடந்த 10 வருடங்களில் இதுவே மிகப் பெரும் அதிகரிப்பு. 29-11-2018 வியாழன்று கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் காணப்படும் இத்தகவல்களைக் கனடியர்கள் கருத்தில் கொள்ளாமல், வெறுமனே கடந்துசெல்ல முடியாது.
கனடா, உலகில் முதன்முதலாகப் பன்முகப் பண்பாட்டுக் கருத்தியலுக்கு வெற்றிகரமாக வித்தூன்றிய பெருமைக்குரிய நாடு; இருக்க இடம்தேடிவரும் உலகநாட்டு ஏதிலிகளை இன்முகம் காட்டி வரவேற்பதற்கெனத் தன் வாசற்கதவை எப்போதும் அகலத் திறந்து வைத்திருக்கும், தயவும் தாராண்மையும் கொண்ட நாடு; வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமையைக் கட்டியெழுப்பி, உச்சப் பலாபலன் பெறுதற்கான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொண்ட நாடு; சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மக்களாட்சிப் பண்புகளை, மையவிழுமியங்களாகக் கொண்ட நாடு; அன்பை விதைத்து, அதனை உரமூட்டி வளர்த்தெடுத்து, அதன் பயனுறு விளைச்சல்களை அறுவடை செய்வதில் வெற்றிகண்ட நாடு. இத்தகைய உன்னதங்களைத் தன்னகத்தே கொண்ட கனடிய மண்ணில், இன்று வெறுப்பும், பகைமையும், வன்மமும் உப்பாக ஊடுபரவ ஆரம்பித்துள்ளமை, இந்த நாட்டு மக்களுக்கு உவப்பான செய்தியல்ல!
‘இனத்துவம், பாலியல் போன்ற பல்வகை வேறுபாடுகள் சார்ந்த வெறுப்புணர்ச்சியினால் அல்லது தப்பபிப்பிராயத்தினால் தூண்டப்பட்டு, பொதுவாக வன்செயலில் வந்து முடியும் ஒரு குற்றச் செயலே வெறுப்புக் குற்றம்’ என வரைவிலக்கணம் ஒன்று கூறுகின்றது. இதன்படி, குறிப்பிட்ட சமூகக் குழுக்களை அல்லது இனங்களை இலக்காகக் கொண்டே, குற்றம் புரிவோர் இவ்வாறான வெறுப்புக் குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரியவருகின்றது.
2016ஆம் ஆண்டு கனடாவில் 1,409 வெறுப்புக் குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அடுத்து வந்த ஆண்டில் (2017), அதன் எண்ணிக்கை 2,073 ஆக அதிகரித்திருக்கின்றது. 2014 முதல், கனடாவில் வெறுப்புக் குற்றங்கள் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளபோதிலும், 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற அதிகரிப்பு, புறக்கணிக்க முடியாதபடி கணிசமானது எனக் கனடியப் புள்ளிவிபரத் திணைக்களப் பேச்சாளரான றெபெக்கா கொங் (Rebecca Kong) கூறுகின்றார். மேலும், ஒன்ராறியோ, கியூபெக் மாகாணங்களில் காவற் துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட வெறுப்புக் குற்றங்களுள், தனியார் சொத்துக்களைத் தாக்கியழித்தல், பொதுச்சுவர் அவதூற்று எழுத்துருவங்கள் (graffities) போன்ற வெறுப்புக் குற்றங்கள் காரணமாகவே 2017ஆம் ஆண்டு இவற்றின் எண்ணிக்கை திடீரென உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
2017ஆம் ஆண்டு முறைப்பாடு செய்யப்பட்ட வெறுப்புக் குற்றங்களில் 43 சதவீதமானவை, இன வெறுப்புணர்ச்சி சார்ந்தவையாகவும், 41 சதவீதமானவை, மத வெறுப்புணர்ச்சி சார்ந்தவையாகவும், 10 சதவீதமானவை, பாலின வேறுபாடு அல்லது பாலினச் செயற்பாடு சார்ந்தவையாகவும் காணப்படுகின்றன. இவ்வகைப்பட்ட குற்றங்களுள் அநேகமானவை, முஸ்லீம்களையும் யூதர்களையும் கறுப்பினத்தவர்களையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டவையாகும். குறிப்பாக, முஸ்லீம்களுக்கு எதிராக 349 வெறுப்புக் குற்றச் சம்பவங்கள் 2017ஆம் ஆண்டு இடம்பெற்றிருப்பதாகவும், இவ்வெண்ணிக்கை முன்னைய ஆண்டுக்கான எண்ணிக்கையைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமானதெனவும் கண்டறியப்பட்டிருக்கின்றது.
2014இல் இடம்பெற்ற கருத்துக் கணிப்பின் பிரகாரம், அக்காலப் பகுதியில் வெறுப்புக் குற்றங்களுக்கு இலக்கானவர்களுள் சுமார் 66 சதவீதத்தினர் தமக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் காவற் துறையினரிடம் முறைப்பாடு செய்யவில்லை. முறைப்பாடு செய்வோர் மீண்டும் பழிவாங்கப்படுவார்கள் என்றும், முறைப்பாடுகளை யாரும் நம்பப்போவதில்லை என்றும், சம்பந்தப்பட்டோர் மனங்களில் அந்நாட்களில் நிலவிவந்த அச்சமும் அவநம்பிக்கையுமே அதற்கான பிரதான காரணங்களாகும். பிற்பட்ட காலங்களில் பாதிக்கப்பட்டோர்க்கு காவற் துறை வழங்கிவந்துள்ள ஊக்குவிப்பு, 2017ஆம் ஆண்டு முறைப்பாடு செய்யப்பட்ட வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு வழி திறந்துள்ளதெனலாம்.
இலங்கை அரசியல் ஆடுகளத்தில் ஜனாதிபதியின் கோமாளிக் கூத்து
ஒழுங்கும், நேரான இலக்குமுள்ள, வஞ்சக உள்ளமற்ற, நேர்மையான தலைவனொருவனைக் காணும் பாக்கியத்தை இலங்கை எனும் தேசம் பெறவேயில்லை. தலைவனாக முகமூடியணிந்தவாறு, நாட்டு மக்களை பலிகடாக்களாக்கி விளையாடும் கோமாளிகளும், சுயநலவாத நரிகளும் ஆட்சிக்கு வந்து தேசத்தைச் சூறையாடுவதையே எப்போதும் செய்து கொண்டிருக்கிறார்கள். தமது கையாலாகாத்தனத்தை மூடி மறைப்பதற்காக அடுத்தவர் மீது பழி சுமத்தும் தலைவர்கள் இலங்கையை மீண்டும் மீண்டும் ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எனும் பொய்காரரை ஜனாதிபதியாக ஆக்கியது இந் நாட்டு மக்களால் நிகழ்த்தப்பட்ட மிகவும் பாரதூரமான, தவறான முடிவாக மாறியிருக்கிறது. தனது அளவிட முடியாத தன்னம்பிக்கையோடு, சில தினங்களுக்கு முன்னர் அவர் பாராளுமன்றத்தின் அதிகப்படியான வாக்குகள் தனக்கேயுள்ளன எனப் பெருமையடித்துக் கொண்டிருந்தார். எனினும், அவரது வாய்ச் சவடால் பொய்யாகி, அவருக்கு எவ்விதத்திலும் ஆதரவற்ற நிஜ உலகும், யதார்த்தமும் தென்படத் தொடங்கிய போது, அதனை மறைப்பதற்காக அவர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் புதியதொரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார். ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி திடீரென மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி, இலங்கையின் ஆட்சியமைப்பைக் கேலிக்குரியதாக்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி இரவு திடீரென பாராளுமன்றத்தைக் கலைத்ததன் மூலம் மீண்டும் இலங்கை அரசியலமைப்பைக் கையிலெடுத்து விளையாட்டுக் காட்டத் தொடங்கியிருக்கிறார். இனி இது மாதக் கணக்கில் நீடிக்கக் கூடும்.
ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதியிலிருந்து நவம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை, தான் புதிதாக அமைக்கப் போகும் ஆட்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் 113 பேரின் ஆதரவு இருப்பதாகவும், தான் ஒருபோதும் பாராளுமன்றத்தைக் கலைக்கப் போவதில்லையெனவும் கூறிக் கொண்டிருந்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. அவ்வாறு திடீரென பாராளுமன்றத்தைக் கலைத்தால் புதிதாக இணைந்துள்ள பாராளுமன்ற அமைச்சர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வழியில்லாமல் போகும். அதனால், தான் அதனைச் செய்யப் போவதில்லை என ஒன்பதாம் திகதி காலைவேளை கூட கூறிவிட்டு அன்றிரவே திடீரென பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டார்.
இவ்வாறா நாட்டின் பிரதான பொறுப்பிலிருக்கும் ஜனாதிபதி சட்டத்தைச் சீர் குலைக்கும் விதத்தில் செயற்பட்டதோடு, மொத்த தேசத்தையும் பொய் கூறி ஏமாற்றியிருக்கிறார். அவரது இவ்வாறான மோசமானதும், இழிவானதுமான செயற்பாடு நாட்டு மக்களுக்கும், இளந் தலைமுறையினருக்கும் எடுத்துக் காட்டுவது என்ன? அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக எந்தப் பொய்யையும் கூறி, எவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளிலும் எவரும் நேர்மையும், வெட்கமுமின்றி ஈடுபடலாம் என்பதைத் தானே?
இன்று, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இலங்கை அரசியலையும், அரசாங்கத்தையும், ஆட்சிப் பொறுப்பையும், அதிகாரத்தையும் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் இந்த விளையாட்டு, இலேசானதல்ல. பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. இந்த விளையாட்டுக்காக நாட்டில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள், பரம்பரை பரம்பரையாக எதிர்காலத்திலும் நஷ்ட ஈட்டினைச் செலுத்திக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கும் பொறுக்கித்தனமான செயற்பாடு இது. அவர் கலாசார மதத் துணியால் தன்னைப் போர்த்திக் கொண்டு, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தவாறு, ஜனநாயக் கோட்பாடுகளோடு மனம் போன போக்கில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு பொறுக்கியாக மிளிர்கிறார்.
எதிர்வினை: முல்லைத்தீவுக்கு மகாவலி வேண்டுமா? சாத்தியமா?
- அண்மையில் 'பதிவுகள்' இணைய இதழில், முகநூலில் வ.ந.கிரிதரன் எழுதிய குறிப்புகள், தமிழ்சின் சிஎன் இணையத்தளத்தில் நக்கீரன் எழுதிய நீண்ட கட்டுரை, முகநூலில் விஜயபாஸ்கரன், எழுத்தாளர் பா.அ.ஜயகரன், எழுத்தாளர் கருணாகரன் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் பற்றி அனுபவம் மிகுந்த மின் பொறியியலாளர் ஜானகி பாலகிருஷ்ணன் அவர்கள் அனுப்பி வைத்த எதிர்வினை இது. உங்கள் கருத்துகளையும் அனுப்பி வையுங்கள். ஆக்கபூர்வமான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. பதிவுகளுக்கு உங்கள் கருத்துகளை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.- பதிவுகள் -
அண்மையில் சிறீ லங்கா பிரதமரும், யு.என்.பீ. கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 200 கோடிகள் பெறுமதியான திட்டமாக மகாவலி ஆற்றினை முல்லைத்தீவு வரை திருப்பப் போவதாகவும், அதனுடன் முல்லைத்தீவின் சில பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தினை அமுல்படுத்தப் போவதாவும் அறிவித்தார் என செய்திகள் வெளிவந்தன. அதனையொட்டி பதிவுகள், கட்டுரைகள், கருத்துகள், எதிர்ப்புகள் என்று பல சம்பவங்கள் நடந்தன.
கடந்த புதன்கிழமை, ஆகஸ்ட் 29, 2018 தினம் நண்பர் Giritharan Navaratnam மகாவலித்திட்டம் திசை திருப்பப்படுமாயின் வடக்கு-கிழக்கிற்கான அது பற்றிய பயன்பாடு பற்றியும், அது தொடர்பான ஏற்கத்தகு குடியேற்றத்திட்டம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது பற்றியும் தனது கருத்துகளடங்கிய பதிவினைப் பகிர்ந்தார். அவை மறுப்பேதும் கூறாமல் ஏற்றுக் கொள்ளக்கூடியவையே.
இதனிடையே நண்பர் Vijaya Baskaran தனது புதன்கிழமை, ஆகஸ்ட் 28, 2018 “ஏமாற்றாதே ஏமாறாதே” என்ற தலைப்பில் உள்ள பதிவில், பல தரவுகளைத் தந்தும் சில கடந்தகால குடியேற்றத் திட்ட விபரங்களையும் தனது கருத்துகளையும் தெரிவித்திருந்தார். அவையும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருந்தன.
அத்துடன் தானறிந்த வரலாறு நிமித்தம் சில குடியேற்றத்திட்டங்களில் பங்கேற்க தமிழர் முன்வரவில்லை என்பதையும் குறிப்பிட்டு, கல்லோயா திட்டத்தில் தமிழர் உதவிகளைப் பெற்று குடியேறவில்லை எனும் பதிவு பற்றிய உண்மை, பொய் தெரியவில்லை என்றும் கிரிதரன்க கூறியிருந்தார்.
அதே பதிவில் Tamilcnn எனும் தளத்தில் பதிவான, “திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் எல்லாவற்றிலும் மிக மோசமானது அதே சமயம் ஆபத்தானது வெலிஓயா ஆகும்” எனும் தலைப்பில் நக்கீரன் என்பவரினால் எழுதப்பட்ட நீண்ட கட்டுரையின் சில முக்கியமான பகுதிகளை இணைத்து ஆரோக்கியமான தர்க்கத்திற்கு தந்திருப்பதாகக் கிரிதரன் கூறியிருந்தார். இது பற்றிய உங்கள் கருத்தகளைப் பகிருங்கள் நண்பர்களே என்று ஒரு பரந்த வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.
'பாலியல் இலஞ்சம்'
- நடிகை ஶ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுகளால் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் ஆளுமைகள் பலர் நிலை கலங்கியுள்ளார்கள். ஆணும், பெண்ணும் புரிந்துணர்வுடன் நட்பு கொள்வதென்பது வேறு. பயன் ஒன்றுக்காகப் பெண்ணொருவரை ஆண் ஒருவர் தன் அதிகார நிலை காரணமாகப் பயன்படுத்துவது என்பது வேறு. அதுதான் நடிகை ஶ்ரீ ரெட்டியின் விடயத்திலும் நடத்துள்ளது. இவர் செய்தது சரியா தவறா என்று பார்ப்பதற்குப் பதிலாக இவரை இவ்விதம் பயன்படுத்திய ஆளுமைகள் செய்தது சரியா தவறா என்று பார்க்க வேண்டியதே மிகவும் முக்கியம். ஏனெனில் இத்துறையில் ஆயிரக்கணக்கில் ஆர்வமுள்ள பெண்கள் நுழைந்துகொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் ஏனைய துறைகளைப்போல் இத்துறையில் நுழைவதற்கு ஶ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுகள் விடயத்தில் இந்தியச் சட்டட்த்துறை போதிய கவனம் எடுக்க வேண்டும். விசாரணைகளை நடத்த வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நண்பர் ராகுல் சந்திரா இது பற்றி நல்லதொரு கட்டுரையினை தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். ஶ்ரீ ரெட்டிக்கு ஏற்பட்ட நிலையினைப் 'பாலியல் இலஞ்சம்' என்று கூறியிருக்கின்றார். ஆம்! சரியான சொல்லாடல் அது. பாலியல் இலஞ்சம் கொடுத்தும் அதற்குரிய பலனை அவர் அடையவில்லை. இலஞ்சம் வாங்குவது தவறானதொரு செயல். பாலியல் இலஞ்சமும் இலஞ்சத்தில் ஒரு வகையே. ஶ்ரீ ரெட்டியின் அனுபவங்கள் அவரது சொந்தக் கதையினை மட்டும் விவரிக்கவில்லை. தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நிலவும் சமூக விரோதச் செயல்களையும் வெளிப்படுத்துகின்றன. இவ்விதமான சமூக விரோதச் செயல்களைப் புரிபவர்கள் யாராகவிருந்தாலும் சட்டத்தின் முன் தப்ப முடியாது என்னும் நிலை ஏற்பட வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் மேலும் பெண்கள் பலர் முன்னுக்கு வந்து தம் அனுபவங்களையும் கூறக்கூடும். திரையுலகினைச் சீராக்க வேண்டிய காலகட்டமிது. பெண்கள் எவ்விதத் தயக்கமுமின்றி நடிப்புத் துறையில் ஈடுபடுவதற்குரிய சூழ்ழலை ஏற்படுத்த வேண்டும். அதற்குச் ஶ்ரீ ரெட்டியின் அனுபவங்கள் வழி வகுக்கட்டும். - பதிவுகள் -
நடிகை ஶ்ரீ ரெட்டியுடைய வீடியோ விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாகவே சமூக ஊடகங்களில் பலவிதமான கருத்துக்களும் பரிமாறப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.ஆரம்பத்திலிருந்தே நான் இந்தவிதமான செய்திகளை hype பண்ணுவதை அசட்டை செய்யவே விரும்பினேன். இப்போது எனக்கு நெருக்கமான பலரும் தமது கருத்துக்களை முன்வைத்த நிலையில், நான் மௌனமாக இருப்பது “சாமி குத்தமாயிடும்” இல்லையா. ஆதலால் இந்த விடயம் தொடர்பாக எனது அபிப்பிராயங்களையம் முன்வைப்பது அவசியமானது என்று கருதி இதனை எழுதுகிறேன். எனக்கென்னவோ இதனை ஒரு பாலியல் இலஞ்சம் தொடர்பான விடயமாக பார்ப்பதே சரியானதாக இருக்கும் என்று படுகிறது. ஏன் என்பதை பார்ப்போம்.
எல்லா ‘அதிகாரபடிநிலை சமுதாயங்களை’ (Hierarchical Societies) போலவே, ஆணாதிக்க சமுதாயத்தில், சமூகத்தின் பொதுவான வளங்கள், வாய்ப்புகள், அதிகாரங்கள் போன்றவை ஆண் - பெண் ஆகிய இரு தரப்பினரிடையே சமமாக பங்கிடப்படுவதில்லை. இவற்றை தமது கரங்களில் குவித்து வைத்துக்கொண்டுள்ள ஆண்கள், இவற்றில் தமக்கு உரிய பங்கை பெற முனையும் பெண்களை தடுக்க முனைகிறார்கள். Gate Keepers போல செயற்படும் இவர்கள், பெண்கள் இவற்றை பெறுவதை தடுக்கிறார்கள். அவற்றை பெண்கள் பெறுவதை தாம் அனுமதிப்பதாயின், அதற்கு தமக்கு பெண்கள் பாலியல் இலஞ்சம் தரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள்.
பாடசாலை மாணவிகள், பல்கலைக்கழக ஆய்வு மாணவிகள், வீட்டு வேலை முதல் கட்டிட வேலை, சுத்தம் செய்தல் போன்ற அனைத்து அடிதட்ட மட்டத்திலும் பணியாற்றும் ஏழை உழைக்கும் பெண்கள், நடிகைகள், படை வீராங்கணைகள், விளையாட்டு வீரர்கள், அலுவலக ஊழியர்கள், அரசியலில் தீவிரமாக ஈடுபடுபவர்கள்… என்று எல்லா வர்க்க, இன, சாதிய பின்னணிகளில் இருந்து வரும் பெண்களும் இந்த விதமான பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். முதலில் இது ஒரு அப்பட்டமான பாலியல் அத்துமீறல் என்பதனை குறித்துக்கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்தவர் ஒருவரின் வாக்குமூலம்
- எழுத்தாளர் பற்றிய குறிப்பு: வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க
கவிதை, சிறுகதை, கட்டுரைகள் ஆகிய துறைகளில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தனது பங்களிப்பை ஆற்றி வரும் திரு. ருவண் எம் ஜயதுங்க, இலங்கை இராணுவத்தின் மன நலப் பிரிவில் மருத்துவராக கடமையாற்றியவர். அத்தோடு இலங்கை சுகாதார அமைச்சின் புத்தளம் மாவட்டத்துக்கான மன நல உத்தியோகத்தராகவும் கடமையாற்றியவர். ஜோன் எப். கென்னடி, வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற தலைவர்கள் குறித்தும், மன நல மருத்துவம், சிறுகதைத் தொகுப்புகள் என சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். -


யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்த நபரொருவர் எனக்களித்த வாக்குமூலத்தை பல வருடங்களுக்குப் பிறகு நான் எழுதுகிறேன். இந்த நிகழ்வு குறித்து நான் தனிப்பட்ட பதிவேதும் எழுதவில்லை. எனினும் 2002 ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்ட எனது 'பிரபாகரன் நிரூபணம் குறித்த மனோவியல் ஆய்வு' எனும் தொகுப்பில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த நபரை, 1994 ஆம் ஆண்டு நான் மாத்தளை வைத்தியசாலையில் கடமையாற்றிய காலத்தில் சந்தித்தேன். அவர் எனது பகுதி நேர நோயாளியாகவிருந்தார். பகுதி நேர நோயாளி என நான் குறிப்பிடுவது ஏனெனில், அவருக்கு ஆரம்பத்திலிருந்து சிகிச்சையளித்த வைத்தியர் நானல்ல. எனினும் அவரது உடல் ரீதியான வியாதிகள் சிலவற்றுக்கு நான் சில வைத்திய அறிவுரைகளைக் கூறியிருந்ததாலும், அவருக்கு சில மருந்துகளை இலவசமாகக் கொடுத்ததாலும் அவர் எனக்கு சினேகமாகியிருந்தார். நான் இங்கு குறிப்பிடப் போவது அந்த நபர் என்னிடம் கூறியதைத்தான். இந்தத் தகவல்கள் உண்மையானவை, பொய்யானவை போன்ற விடயங்களை வாசகர்களின் தீர்மானத்துக்கு விட்டு விடுகிறேன். (ஓய்வுபெற்ற சிரேஷ்ட போலிஸ் பிரதி காவலதிகாரி எட்வட் குணதிலகவால் முன்வைக்கப்பட்ட ‘ஆய்வறிக்கை’யின் பிரகாரம், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தது விடுதலைப்புலிகள் இயக்கத்தினரது செயல்பாடாகும். அதற்கு சிங்களவர்கள்தான் காரணம் எனக் காட்டி சர்வதேச மக்களின் அனுதாபத்தை வென்றெடுப்பதே அவர்களது நோக்கமாகும்.)
இந்த வாக்குமூலத்தை அளித்த நபரது உத்தியோகம் என்னவாகவிருந்தது என்பதை நான் கூற மாட்டேன். காரணம் அது சர்ச்சைக்குரியதாகவும், ஈழ ஆதரவாளர்களால் இந்த விடயமும் கூட அவர்களது பிரசார தந்திரமாகப் பாவிக்கப்படக் கூடும் என்பதனாலுமாகும். எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் நடைபெற்ற போது அவர் வடக்கில்தான் இருந்திருக்கிறார்.
ஒரு இலட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களோடு, ஆசியாவிலிருந்த விசாலமான நூலகங்களிலொன்றான யாழ்ப்பாண நூலகத்துக்கு 1981 ஆம் ஆண்டு, மே மாதம் 31 ஆம் திகதி தீ வைக்கப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் யாழ்ப்பாண அபிவிருத்திக் குழுத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்ததோடு, கொழும்பிலிருந்து சென்றிருந்த காடையர்கள் யாழ்ப்பாணத்தில் கலவரத்தை ஏற்படுத்தியவாறு இருந்தனர். இந்த நிகழ்வானது இனவாதக் கலவரங்களின் திருப்புமுனையாக அமைந்தது.
முற்றுப் பெறாத உரையாடல்கள்
“வானமும் பூமியும் ஒழிந்து போம். என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” (மத்தேயு 24:35)
வார்த்தைகளின் வல்லமைகளை பறை சாற்றும் பரிசுத்த வேதாகமத்தின் வாசகங்கள் அவைகள். மனிதனால் மட்டுமே பேச முடிகின்றது. சிந்திக்க முடிகின்றது. வார்த்தைகளை உருவாக்கி இன்னொரு மனிதனுடன் உரையாட முடிகின்றது. இவ் உரையாடல்களின் மூலம் அவன் தனது எண்ணங்களை, உணர்வுகளை தேவைகளை வெளிப்படுத்திக் கொள்கிறான். இன்று மனிதனது தேவைகள் அதிகரித்துள்ளன. பிரச்சினைகளும் சிக்கல்களும் அதிகரித்துள்ளன. இன்றைய 21ம் நூற்றண்டில் தொழில்நுட்பங்களும் ஊடகங்களும் அசுர வளச்சி பெற்றுள்ள நிலையில் அதற்கான உரையாடல் வெளிகளும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன. எமது புலம்பெயர் வாழ்விலும் நாம் இன்று அதிகம் உரையாட வேண்டிய தேவை எமக்குண்டு. ஒரு வலி மிகுந்த சமூகமாக, 3௦ ஆண்டு கால யுத்தம் ஏற்படுத்திய கொடுந்துயரமான வாழ்வும் அது ஏற்படுத்திய வலிகளும் ரணங்களும் இன்னும் மாற்றம் பெறாத நிலையில், எமது துயரங்கள், தோல்விகள், தவறுகள், குறித்தும் இனி போக வேண்டிய பாதைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தெல்லாம் நாம் அதிகம் பேச வேண்டிய மனிதர்களாக மாற்றப்பட்டுள்ளோம். உரையாடல்கள் மூலம் நாம் எத்தகைய தீர்வுகளையோ முடிவுகளையோ எட்ட முடியாது என்பது உண்மையாயினும் அதனை செயற்பாடுகளுக்கான ஒரு முன்னூட்டமாக அதனை நாம் மாற்ற முடியும் என்பது எமது அசையாத நம்பிக்கை.
இவ்வகையில் இன்று நாம் பேசுகின்றோம், உரையாடுகின்றோம், பல் வேறு விதமான உரையாடல் வெளிகளை உருவாக்கி வருகின்றோம். பிரதிகள் மூலமாக, பாடல்கள் மூலமாக, செய்திகள் மூலமாக, கலந்துரையாடல்கள், நேர்காணல்கள் மூலமாக, கவிதைகளாக, புனைவுகளாக, வேறும் பல்வேறு வழிகளிலும். அத்தகைய உரையாடல்களில் காத்திரமானவைகளை, அது காற்றில் கலந்து கரைந்து இல்லாமல் போகு முன்பே, பாதுகாப்பாக பதிவுகள் செய்வதே இத்தொடரின் நோக்கமாகும்.
கொலை மறைக்கும் அரசியல் – இது பகை மறப்புக் காலம் அல்ல. •தோழர் சேனனுடனான உரையாடல் குறித்து.
கடந்த வார ஐ.பி.சி. தமிழின் அக்னிபார்வை நிகழ்ச்சியில் தோழர் சேனன் அவர்கள் கலந்து கொண்டார். இங்கு புகலிடத்தில் சமூக, அரசியல், கலாச்சார தளத்தில் இயங்குபவர்களில் சேனனை அறியாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. தோழர் சேனன் அவர்கள் ஒரு இடதுசாரி செயற்பாட்டாளர், நான்காம் அகிலத்தத்துவத்தை வரித்துக்கொண்ட பிரித்தானிய சோஷலிஸ்ட் கட்சியின் அங்கத்தவர், ‘நிரந்தரக் கனவு காணும் நிரந்தரப் புரட்சியாளர்கள்’ என்று மற்றவர்களால் விமர்சிக்கப்படும் ட்ரொட்ஸ்கிய வாதிகள் மத்தியில் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு மக்களோடு மக்களாக நின்று உழைப்பவர். Tamil Solidarity அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர். ‘கொலை மறக்கும் அரசியல்’ லண்டன்காரர்’ என்ற நூல்களின் ஆசிரியர். விமர்சகர். ஊடகவியலாளர்.
முள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்

- இக்கட்டுரை குளோபல்தமிழ்நியூஸ்.நெற் இணையத்தளத்தில் வெளியான கட்டுரை. நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள் -
- கட்டுரையாளரான முனைவர் ஜூட் லால் பெர்ணாண்டோ (Dr Jude Lal Fernando) டப்ளின் டிரினிட்டி கல்லூரியைச் சார்ந்த ஐரிஸ் ஸ்கூல் ஆஃப் எக்குமெனிக்ஸில் அமைதி மற்றும் இணக்க மேம்படுத்தல் துறையில் உயராய்வு மேற்கொள்வதோடு அங்கு விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார். இலங்கையின் களனியிலுள்ள துலானா என்னும் மதம் சார்பான உரையாடல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினர். டிரினிட்டி கல்லூரியில் 2010இல் இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயத்தை ஒருங்கிணைத்தவர். -
அறிமுகம்
மக்கள்திரள்மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற்பப் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு ஆகிய அடிப்படைகளில் வகைப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனினும் இந்தக் கோட்பாட்டுரீதியான வகைப்படுத்தல்கள் குறிப்பிட்ட அரசியல், கருத்தியல் களங்களிலேயே பிரயோகிக்கப்படுவதால் அந்தக் களங்கள் விமர் சனத்திற்குள்ளாக்கப்பட்டு இலங்கையில் இடம்பெற்ற வன்கொடுமைகள் பற்றிய உண்மைகளைக் கூறும் முழுமையான எடுத்துரைப்பு ஒன்று எட்டப்பட வேண்டும். இந்த வன்கொடுமைகள் பற்றிய எடுத்துரைப்புகளை நோக்கினால், எவ்வாறு உண்மைகள் நோக்கப்படுகின்றன என்பதையும், நீதி, புனரமைப்பு (justice and recovery) பற்றிய எதிர்பார்ப்புகள் எவ்வாறு அமைகின்றன என்பதையும் சித்தாந்தம்தான் முடிவுசெய்கிறது என்பதை இந்தக் கட்டுரை நிறுவ முற்படுகிறது. இந்தப் பணியைச் சந்தேகக் கண்ணோடு அணுகுவது அரசியல் சிந்தனையில் மிகச் சரியான எடுத்துரைப்பு வெளிப்படவும் நீதிக்கும் புனரமைப்புக்குமான விசாலமான முன்னெடுப்புகளை அடையாளங்காட்டவும் உதவும்.
எண்ணிலடங்காத மரணங்கள்
ஐ. நா. விபரங்களின்படி நான்கு மாதங்களே நீடித்த இறுதிக்கட்டப் போரில், குறைந்தது 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இலங்கை அரசால் நிறுவப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக் குழுவின் (LLRC) முன்னால் சான்று வழங்கிய மன்னார் ஆயர் 1,46,679 தமிழர்கள் பற்றிய எந்தத் தகவல்களும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார். இந்த எண்ணிக்கையை இலங்கை அரசால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வத் தரவுகளிலிருந்து அவர் பெற்றுள்ளார்.
இத்தகைய அதிர்ச்சியூட்டும் வகையிலான பெரும் எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பற்றிய உண்மையை எவ்வாறு சரியாக அரசியல் சிந்தனையில் எடுத்தியம்ப முடியும்? சர்வதேசச் சட்டம் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு, அமைதிக்கெதிரான குற்றம் ஆகியன உள்ளிட்ட சட்ட, கோட்பாட்டு வகைப்பாடுகளை முன்வைக்கிறது. இந்த வகைப்பாடுகளுக்கேற்ப இலங்கையில் இடம்பெற்ற வன்கொடுமைகளை எடுத்துரைத்தால் அது புனரமைப்புக்கும் மீளலுக்கும் எத்தகைய முன்னெடுப்புகள் தேவையென்பதைத் தீர்மானிக்கும்.
Sri Lanka: May Day and Workers’ Rights
May Day was declared a holiday in Sri Lanka in 1956 for the government sector, bank and mercantile sectors. May Day celebrations have never clashed with the interests of or activities conducted during Vesak celebrations. Despite this situation and without consultation, the President has unilaterally decided to postpone May Day on the pretext that there will be a “Vesak Week” this calendar year. A gazette notification issued by Home Affairs Minister yesterday cancelled the May Day holiday which is due on May 1.
The President’s postponement of the May Day celebrations in Sri Lanka to May 7 is allegedly because of a request made by Mahanayaka Theros., This is a crass political ploy of exploiting religious sentiment to inhibit protests of the working people by diverting their attention away from the burning issues of the day. Some of the parties and unions who are supposed to represent workers’ interests have already fallen in line with the government. Others have decided to take their protests to the streets on May 1, despite a municipal ban on marches.
The issue of overlapping of May Day with Vesak Day has arisen many times previously. The façade of religiosity becomes apparent at times when this occurs. In 1967, the UNP regime postponed May Day celebrations to the 2nd of May. As quoted in news reports, the Communist Party (Peking Wing) opposed it and Maithripala Sirisena supported the Communist Party’s decision. Now he himself is displaying his opportunism by postponing May Day celebrations. Several trade unions in Sri Lanka have strongly objected to this decision to postpone May Day, emphasising that it is a right of workers to celebrate international workers’ day on May 1. The JVP has declared that they will go ahead with the May Day Rally but will hold the Colombo rally on May 7. It is holding its May 1st rally in Jaffna, which is interesting. One could question whether this option is utilised not to confront the issue giving prominence to religion over workers’ rights. According to the JVP, bringing large crowds to Colombo on May Day for celebrations would become an obstacle for Vesak celebrations that will be held in Colombo. This is not the first time the JVP seems to have wavered on this issue. In 2008, the JVP took the initiative to change the May Day from May 1 due to Vesak celebrations, by requesting the government to do so.
This year, Vesak Day does not fall on May 1. The clash is due to the declaration of a Vesak week this year. If the Vesak Week is turned into an annual event, it will be interesting to find out what the JVP position would be. One could easily interpret and equate the JVP position to “killing two birds with one stone”. Thus, they avoid having a May Day rally in Colombo on the May Day itself, despite the relevance of the International Working Day to the working people of the south of Sri Lanka, many of whom reside in Colombo.
கனடாத் தமிழ் அமைப்புகள் இழைத்த மாபெரும் தவறும் , கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் மரணமும்!
கனடாவில் தமிழர் அமைப்புகள் பல உள்ளன. ஊர்ச் சங்கங்கள் பல உள்ளன. தென்னிந்தியக் கலைஞர்களை அழைத்துப் பணத்தை வாரியிறைக்கின்றார்கள். ஆனால் தமிழர் நலன்களுக்காக இயங்குவதாகக் கூறும் இச்சங்கங்கள் புற்றீசல்கள் போல் இருந்தும் பயனென்ன? அரசு தரும் நிதி உதவியைப்பெறுவதற்காகவே சங்கங்கள் பல உள்ளன. வேறு சிலவோ இவ்வாறு கிடைக்கும் பெருமளவு பணத்தைப் பல்வேறு வழிகளில் செலவழித்துக் கணக்குக் காட்டுவதில் திறமையாய உள்ளன. ஆனால் இவ்விதமான அமைப்புகள் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளில் முதன்மையானது எது?
இலங்கையில் நிலவிய சமூக, அரசியற் சூழல் காரணமாக ஆயிரக்கணக்க்கில் ஈழத்தமிழர்கள் பல்வேறு வழிகளில் உயிரைப்பணயம் வைத்து , உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாகத் தஞ்சம் கோரிப் புலம் பெயர்ந்தார்கள். நூற்றுக்கணக்கில் பலர் செல்லும் வழிகளில், கடலில், காடுகளிலெனத் தம் உயிரை இழந்தார்கள். சூழலைப்பாவித்த முகவர்கள் சிலரின் சமூக, விரோதச்செயல்களால் பலர் பணத்தையும் இழந்தார்கள். அந்நிய நாடுகளில் கைவிடப்பட்ட நிலையில் வாடி மடிந்தார்கள். பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு பல்விதமான துன்பங்களுக்கு உள்ளானார்கள்.
இவ்விதமாக ஒருவழியாக புகலிட நாடுகளில் வந்திறங்கிய தமிழ் அகதிகள் அடைந்த அடையும் துன்பங்கள் பல? இவற்றில் தலையிட்டு , உதவி செய்ய வேண்டிய முக்கியமான தமிழர் அமைப்புகள் எல்லாம் அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் எவ்வகையான உதவிகளை அவ்விதமான தமிழர்களுக்குச் செய்கின்றன. இங்குள்ள அரசியல்வாதிகளைத் தமிழர்தம் பாரம்பரிய ஆடைகளில் அழைத்து வருகின்றார்கள். அரசியல்வாதிகள் என்னும் பெயரில் அடிக்கடி பத்திரிகைகளில் , நிகழ்வுகளில் தலை காட்டுவதில் தம் நேரத்தைச் செலவிடும் இவர்கள் , இவ்விதமான அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, மேன் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டு , தலை மறைவாக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் விடயத்தில் என்ன செய்தார்கள். அவர்களிடமிருந்து பணத்தைச் சுருட்டுவதில்தான் இவர்கள் பலரின் கவனம் இருந்ததேதவிர , இவ்விதமான தமிழர்களுக்கு உதவுவதற்காக அல்ல என்பது வெட்கப்படத்தக்கதொன்று.
கனடிய அரசு யுத்த நிலை காரணமாகச் சிரியா போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானவர்களை அகதிகளாக அழைக்கின்றது. பிரதமரே விமான நிலையம் சென்று வரவேற்கின்றார். அவ்விதம் ஆயிரக்கணக்கானவர்களை அகதிகளாக எவ்விதமான தனிப்பட்ட ஓவ்வொருவரும் அகதியா என்று நிரூபிக்கப்படாத நிலையில் அழைத்து , அங்கீகரித்து, வரவேற்கும் கனடிய அரசு எதற்காக ஈழத்தமிழர்கள் விடயத்தில் மட்டும் , அங்கு நிலவிய யுத்தச் சூழல்கள் நிலவிய நிலை தெரிந்தும், அங்கு யுத்தத்திற்கு முன்னர் மக்கள் அடைந்த மனித உரிமை மீறல்கள் தெரிந்தும், ஒவ்வொரு அகதிக்கோரிகையாளரும் தம் நிலையினை நிரூபிக்க வேண்டுமென வலியுறுத்த வேண்டும்? இங்குள்ள தமிழர் அமைப்புகள் அப்பொழுதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தன? சிரியா அகதிகளை வரவேற்றது போல் , ஈழத்தமிழ் அகதிகளையும் இரு கரம் நீட்டி, அனைவரையும் அகதிகளாக ஏற்றுக்கொண்டு வரவேற்றிருக்க வேண்டும் என்பதை இவ்வமைப்புகள் செய்திருக்க வேண்டுமல்லவா? இவ்விதமாக அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிக்குடும்பங்கள் , குடும்ப அங்கத்தவர்கள் பிரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டபோது அவர்கள் நிலையைப் பொறுப்பெடுத்து அவர்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டுமல்லவா?



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









